Dhakai
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 67
இரவு தாமதமாகத் தான் உறங்கியிருந்தாள் சுந்தரலட்சுமி. ஆழ்ந்த உறக்கநிலை இல்லாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவள் விடியற்காலை தான் ஆழ்ந்து உறங்கியிருந்தாள்.
காலை தாமதமாக விழித்ததும் நேரத்தைப் பார்த்தவள் அவசரமாகப் படுக்கையில் இருந்து எழும் போதே தலைக் கிறுகிறுவெனச் சுற்ற அப்படியே படுக்கையில் அமர்ந்து விட்டாள்.
அலுவலகம் செல்லத் தாமதமாவதை உணர்ந்து அவசரம் அவசரமாகக் குளித்துக் கிளம்பி வந்தவள், "போய்ட்டு வரேன்மா" என்று சமையலறையில் இருந்த அன்னையின் காதில் விழுமாறு சத்தமாய்ச் சொன்னவளாய் மகிழுந்தை நோக்கிச் செல்ல, "சாப்பிட்டு போடி" என்றவராய் வேகமாய் அவளின் பின்னே சென்று மகிழுந்தில் அமர்ந்திருந்த மகளின் கையில் உணவுப்பையைக் கொடுத்தார் செல்வராணி.
"லன்ச் தான்டி பேக் செஞ்சேன். காலைல சாப்பிட்டு போய்டுவனு நினைச்சா இப்படிச் சாப்பிடாம கிளம்பிட்டியே. நான் வேணா பேக் செஞ்சி கொண்டு வரவா?" மகிழுந்தைக் கிளப்பத் தயாராக இருந்த மகளிடம் வினவினார்.
"ஏற்கனவே செம்ம லேட்மா. நேத்து வேற லீவ்வு போட்டுட்டேன்! மேனேஜர் சீக்கிரம் வரச் சொல்லி போன் செஞ்சிட்டாரு. நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு. வரேன்மா" என்றவளாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு சுந்தரலட்சுமி வெளியே செல்ல, தனது இருச்சக்கர வாகனத்தில் உள்ளே வந்தார் அவளின் தந்தை முகுந்தன்.
"என்ன இங்கே நின்னுட்டு இருக்க?" என்று வீட்டு வாயிலில் நின்றிருந்த மனைவியிடம் கேட்டார் முகுந்தன்.
"உங்க பொண்ணு ஒன்னும் சாப்பிடாம ஆபிஸூக்குக் கிளம்பிப் போய்ட்டா! கல்யாணம் ஆன நாள்லருந்து காலைல சாப்பிடுறதே இல்லங்க அவ! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். சரி நம்ம வீட்டுல இருக்கும் போதாவது சாப்பிட்டு போவானு பார்த்தா அதே மாதிரியே இங்கேயும் செய்றா" என்று புலம்பியவராய் வீட்டிற்குள் சென்றார் செல்வராணி.
அலுவலகத்திற்குச் சென்ற சுந்தரலட்சுமிக்கு அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்க, வயிற்றின் பசியைப் பொருட்படுத்தாது இருந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது, தான் வாங்கிய புதிய காரில் நிறையப் பழுது இருப்பதாய் கூறி சண்டையிட வந்திருந்தார் வாடிக்கையாளர் ஒருவர்.
அப்பழுதை சரிசெய்து தந்தால் மட்டுமே அங்கிருந்து கிளம்புவேன் என அடம்பிடித்து அவர் அமர்ந்து விட, இவளின் மேலாளர், அந்தப் பழுதை சரி செய்து அனுப்புமாறு அந்தப் பொறுப்பை இவளிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.
கோபமாய்ப் பேசியவரைச் சமாளித்து, பழுது பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து, அதற்குரிய வல்லுநர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லிக் கூறி என வாடிக்கையாளருக்குத் தேவையானவற்றைக் கவனித்துப் பழுதைச் சரி செய்து அனுப்பும் போது மாலை நான்கு மணி ஆகியிருந்தது.
இடையிடையே அவளது சக ஊழியர்கள் அவளை உண்ணச் சொல்லி உரைத்துக் கொண்டே இருந்தனர்.
வேலையிலிருந்து சற்று இடைவெளி கிடைத்தாலும் மனம் கணவனையே சுற்றி வர, 'நான் தான் அவரையே நினைச்சிட்டு இருக்கேன். அவருக்கு என் நினைப்பு இருந்தா இப்படிப் பேசாம இருப்பாரா?' என்ற எண்ணம் வேறு அவன் மீதான கோபத்தைத் தூண்டி விட, காதலுக்கும் கோபத்துக்கும் இடையில் தள்ளாடியவளாய் உண்ணவும் மனமில்லாது, இந்தப் பித்து நிலையிலிருந்து வெளிவர தன்னை இந்த வேலையில் பிணைத்துக் கொண்டாள்.
அந்த வாடிக்கையாளர் கிளம்பிச் சென்றதும் அயர்வாய் தனது இருக்கையில் அமர்ந்தவளை அவளின் மேலாளர் அழைக்கவும், இருக்கையில் இருந்து எழுந்தவள் மயங்கி விழுந்திருந்தாள்.
தூரமாய் யாரோ பேசும் ஒலி செவியைத் தீண்ட மெல்லமாய்க் கண் விழித்துப் பார்த்துச் சுற்றத்தை உணர முற்பட்டாள் சுந்தரலட்சுமி.
கையில் டிரிப்ஸ் ஏற மருத்துவமனை கட்டிலில் படுத்திருப்பது புரிந்தது அவளுக்கு.
"லோ பிபி வர வயசா இது! உங்களை நம்பி தானே எங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்தோம். கல்யாணம் முடிஞ்ச நாள்லருந்து காலைல சாப்பிடுறதே இல்லை அவ! அது தெரியுமா உங்களுக்கு? நாள் முழுக்க உங்கம்மாக்கிட்ட ஏச்சு பேச்சு வாங்கி அவதிப்பட்டுத் தான் இப்படி வந்து கிடக்கிறா" என்று தாய் குற்றச்சாட்டும் தொனியில் அழுகைக் குரலில் யாரிடமோ பேசுவது இவளது செவிகளைத் தீண்டின.
தலையை லேசாய் திருப்பிப் பார்த்தவள், செந்திலிடம் தாய் கண்ணீருடன் பேசுவதையும், தந்தை செந்திலைக் கோபத்துடன் பார்ப்பதையும், செந்தில் குற்றவுணர்வுடன் நின்றிருப்பதையும் பார்த்து, 'பொறுத்துப் போ! பொறுத்துப் போனு சொல்ற என் அம்மாவா இப்படிப் பேசுறது' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் இருக்க,
"என்னைப் பத்தி என்ன வேணா பேசுங்க அத்தை. அம்மாவைப் பத்திப் பேசாதீங்க" என்று செந்தில் காட்டமாய் உரைத்த நொடி,
"அம்மா" என்று அழைத்திருந்தாள் சுந்தரலட்சுமி.
அப்பொழுது தான் அவள் கண் விழித்ததை உணர்ந்த அனைவரும் பரபரப்புடன் அவளருகில் வந்து நின்றனர்.
"அவரை ஏன்மா திட்டிட்டு இருக்க? சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிட்டது நான் தானே!" அமைதியாக அவள் கூற,
மகளை மேலும் கோபத்துடன் முறைத்தவாறு செல்வராணி நிற்க, முகத்தின் இறுக்கம் மெல்லத் தளர கனிவாய் அவளைப் பார்த்தான் செந்தில்.
"உடம்பு எப்படிமா இருக்கு? இன்னும் மயக்கமா இருக்கா?" என்று வாஞ்சையுடன் அவளின் தலையைக் கோதியவராய்க் கேட்டிருந்தார் முகுந்தன்.
"இப்ப பரவாயில்லப்பா" என்றவள், "என்னம்மா என் மேல கோபமா?" என்று அருகில் நின்ற தாயின் கரங்களைப் பற்றினாள்.
"பின்னே மயக்கம் போட்ட பொண்ணு ஏதோ நல்ல சேதி தான் சொல்லப் போறாளோனு ஆசை ஆசையா ஓடி வந்தா, உடம்பு முடியாம மயங்கியிருக்கனு தெரிஞ்சி கொஞ்சுவாங்களா உன்னை" என்று மகளை முறைத்தார் செல்வராணி.
"யம்மா நான் கூட, செந்தில்கிட்ட நீ எனக்குச் சப்போர்ட் செஞ்சி பேசவும், உனக்கு எதுவும் மண்டைல அடிபட்டுருச்சோனு நினைச்சு பயந்துட்டேன்மா. இப்ப தான் நிம்மதியா இருக்கு" என்று அவள் கேலி செய்யவும், "முடியாம படுத்திருக்கும் போதும் கொழுப்பு பார்த்தீங்களா உங்க பொண்ணுக்கு" அவளின் கையிலேயே கிள்ளினார் செல்வராணி.
செல்வராணி தன்னிடம் தாயைக் குறையாய் பேசியதில் இறுக்கத்துடன் நின்றிருந்தவன், இவர்களின் உரையாடலைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். இதே போன்று சுந்தரி தனது தாயிடமும் உரிமையும் கேலியுமாய்ப் பேசிப் பழகினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவாறு நின்றிருக்க, ஆஆஆ என்று சுந்தரி அலறியதில் நிகழ்வுக்கு வந்தவனாய், "என்னாச்சு? என்னாச்சு சுந்தரி?" எனக் கேட்டான்.
அவளின் கரத்தைப் பற்றியிருந்த செல்வராணி ஏதோ பேசியவாறு அவளது கரத்தை உலுக்கவும் தான் அவ்வாறு அலறியிருந்தாள்.
"கையை அசைச்சாலே வலிக்குது" முகத்தில் வேதனைப்படர அவள் உரைத்த நொடி, "மயங்கி கீழே விழுந்தப்ப எதுவும் அடிப்பட்டிருக்குமோ" என்றவராய் அவளின் கையை ஆராய்ந்தார் முகுந்தன்.
"நான் டாக்டரைக் கூட்டிட்டு வரேன்" என்று சென்றான் செந்தில்.
அது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதால் அடுத்தச் சில மணி நேரங்களில் எலும்புச் சிகிச்சை நிபுணரை வரவழைத்து அவளின் வலது கையில் கட்டுப் போட்டிருந்தனர்.
கீழே விழுந்த போது முன்கையில் லேசாய் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாய் உரைத்து அவ்வாறு கட்டுப் போட்டிருந்தனர். கட்டு போடுவதற்குள் வலியில் துடித்துப் போனாள் சுந்தரலட்சுமி.
இரவு எட்டு மணியளவில் சுந்தரலட்சுமியின் காரை முகுந்தன் ஓட்ட அதில் தாயும் மகளும் பயணித்திருக்க, தான் வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் அவர்களின் பின்னே சென்றிருந்தான் செந்தில்.
வீட்டில் அவளது அறையில் அவளை அமர வைத்து விட்டு செல்வராணி வெளியேறவும், அவளருகில் வந்து அமர்ந்தான் செந்தில்.
இவள் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, "இன்னும் கோபமா தான் இருக்கியா சுந்தரி?" எனக் கேட்டான்.
"குத்தால அருவில குளிச்ச மாதிரி குளுகுளுனு இருக்கேன்" என்று அவள் உதட்டைச் சுழிக்க, வாய்விட்டுச் சிரித்திருந்தான்.
"என் கோபம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? என்கிட்ட பேசாம இருந்துட்டீங்கல! அப்படியே இருக்க வேண்டியது தானே! இப்ப மட்டும் ஏன் வந்தீங்களாம்?" கண்களை விரித்துக் கோபப் பார்வைப் பார்த்தவளாய் அவள் கேட்க,
"ஏன் வந்தேன்னா என் பொண்டாட்டி குழந்தை உண்டாகிட்டாளோனு நினைச்சு ஓடோடி வந்தேன்" என்று அவன் முடிப்பதற்குள்,
தனது இடக்கையால் அவனது தலை கை முதுகு எனக் கிடைத்த இடத்தில் எல்லாம் அடித்தவளாய், "அப்ப என் மேல அக்கறைப்பட்டுப் பார்க்க வரலை. அப்படித் தானே! எனக்கு என்ன ஆனாலும் உங்களுக்குக் கவலையில்ல அப்படித் தானே!" என்று கூறும் போதே அவளின் குரல் தழுதழுத்துப் போக, "ம்ப் சுந்தரி" என்றவனாய் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருத்தான்.
அவனின் தோளில் முகம் புதைத்தவளாய் குலுங்கிக் குலுங்கி அழுதவள், "நான் இல்லாம உங்களால இருக்க முடியுதுல" என்று தேம்பியவாறு நிமிர்ந்து அவனது கண்களுக்குள் ஊடுருவினாள்.
அவன் எவ்வித உணர்வும் காட்டாது அவளையே பார்த்திருக்க, "ஆனா என்னால இருக்க முடியலை. இரண்டு நாள்ல பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. ஐ மிஸ்டு யூ சோ மச். இதை ஒத்துக்கிறதுல உங்களை மாதிரி எனக்கு ஒன்னும் ஈகோ இல்ல" என்று மூக்கை உறிஞ்சினாள்.
தனது இன்மை அவளைப் பாதித்திருப்பதை எண்ணி மகிழ்வுற்றவனாய் மென்னகையுடன், "நானும் உன்னை மிஸ்டு யூ சோ மச்டா" என்றவாறு நெற்றியில் முத்தமிட்டான்.
அவனின் முகத்தைப் பிடித்துத் தள்ளியவளாய், "நான் சொன்ன பிறகு நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்ல" என்று உதட்டைச் சுழித்தாள்.
கதவுத் தட்டும் சத்தம் கேட்கவும், கை வளைவில் இருந்தவளை விட்டு எழுந்தவன் கதவைத் திறந்தான்.
அவளுக்கான இரவுணவை ஸ்பூனுடன் எடுத்து வந்திருந்தார் செல்வராணி.
அந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்டு மாத்திரையும் எடுத்துக் கொடுத்தவன் கிளம்புவதாய் உரைத்தைக் கேட்டு ஏக்கத்துடன் அவள் பார்க்க, "இங்கேயே இருக்கவா?" எனக் கேட்டான்.
"இருக்குறீங்களா ப்ளீஸ்" என்றவள் கெஞ்சும் பார்வையுடன் கேட்டதை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டவன் மீனாவிற்கு அழைத்து இங்கு நடந்ததை உரைத்து தான் இங்கேயே தங்கிக் கொள்வதாய் உரைத்து விட்டான்.
மகனின் கைப்பேசி அழைப்பைத் துண்டித்த மறுநொடி காஞ்சனாவிற்கு அழைத்த மீனா, "நீங்க சொன்னா மாதிரியே செஞ்சிட்டா அண்ணி. என்னை விட்டு என் பையனை பிரிச்சிட்டா! ஒரு நாள் என்னைத் தனியா விட்டு வெளியே தங்க மாட்டான். இன்னிக்கு அவ வீட்டுல தங்குறேன்னு போன் செஞ்சி சொல்றான்" என்று கண்ணீருடன் உரைக்க, அவரின் புலம்பலுக்கு மேலும் தூபம் போட்டுக் கொண்டிருந்தார் காஞ்சனா.
இங்கே வேறெந்த பேச்சும் இல்லாமல் கோழிக் குஞ்சாய் அவனது அரவணைப்பில் மனம் சமன்பட ஆழ்ந்து உறங்கிய சுந்தரலட்சுமியின் அண்மையில் நிம்மதி நெஞ்சில் படர உறங்கியிருந்தான் செந்தில்.
அன்று இருவருக்குள்ளும் பேசித் தீர்க்கப்படாத விடயங்கள் அனைத்தும் மறுநாள் வெடித்துச் சிதறக் காத்திருந்தன.
காலை தாமதமாக விழித்ததும் நேரத்தைப் பார்த்தவள் அவசரமாகப் படுக்கையில் இருந்து எழும் போதே தலைக் கிறுகிறுவெனச் சுற்ற அப்படியே படுக்கையில் அமர்ந்து விட்டாள்.
அலுவலகம் செல்லத் தாமதமாவதை உணர்ந்து அவசரம் அவசரமாகக் குளித்துக் கிளம்பி வந்தவள், "போய்ட்டு வரேன்மா" என்று சமையலறையில் இருந்த அன்னையின் காதில் விழுமாறு சத்தமாய்ச் சொன்னவளாய் மகிழுந்தை நோக்கிச் செல்ல, "சாப்பிட்டு போடி" என்றவராய் வேகமாய் அவளின் பின்னே சென்று மகிழுந்தில் அமர்ந்திருந்த மகளின் கையில் உணவுப்பையைக் கொடுத்தார் செல்வராணி.
"லன்ச் தான்டி பேக் செஞ்சேன். காலைல சாப்பிட்டு போய்டுவனு நினைச்சா இப்படிச் சாப்பிடாம கிளம்பிட்டியே. நான் வேணா பேக் செஞ்சி கொண்டு வரவா?" மகிழுந்தைக் கிளப்பத் தயாராக இருந்த மகளிடம் வினவினார்.
"ஏற்கனவே செம்ம லேட்மா. நேத்து வேற லீவ்வு போட்டுட்டேன்! மேனேஜர் சீக்கிரம் வரச் சொல்லி போன் செஞ்சிட்டாரு. நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு. வரேன்மா" என்றவளாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு சுந்தரலட்சுமி வெளியே செல்ல, தனது இருச்சக்கர வாகனத்தில் உள்ளே வந்தார் அவளின் தந்தை முகுந்தன்.
"என்ன இங்கே நின்னுட்டு இருக்க?" என்று வீட்டு வாயிலில் நின்றிருந்த மனைவியிடம் கேட்டார் முகுந்தன்.
"உங்க பொண்ணு ஒன்னும் சாப்பிடாம ஆபிஸூக்குக் கிளம்பிப் போய்ட்டா! கல்யாணம் ஆன நாள்லருந்து காலைல சாப்பிடுறதே இல்லங்க அவ! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். சரி நம்ம வீட்டுல இருக்கும் போதாவது சாப்பிட்டு போவானு பார்த்தா அதே மாதிரியே இங்கேயும் செய்றா" என்று புலம்பியவராய் வீட்டிற்குள் சென்றார் செல்வராணி.
அலுவலகத்திற்குச் சென்ற சுந்தரலட்சுமிக்கு அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்க, வயிற்றின் பசியைப் பொருட்படுத்தாது இருந்தாள்.
மதிய உணவு இடைவேளையின் போது, தான் வாங்கிய புதிய காரில் நிறையப் பழுது இருப்பதாய் கூறி சண்டையிட வந்திருந்தார் வாடிக்கையாளர் ஒருவர்.
அப்பழுதை சரிசெய்து தந்தால் மட்டுமே அங்கிருந்து கிளம்புவேன் என அடம்பிடித்து அவர் அமர்ந்து விட, இவளின் மேலாளர், அந்தப் பழுதை சரி செய்து அனுப்புமாறு அந்தப் பொறுப்பை இவளிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.
கோபமாய்ப் பேசியவரைச் சமாளித்து, பழுது பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து, அதற்குரிய வல்லுநர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லிக் கூறி என வாடிக்கையாளருக்குத் தேவையானவற்றைக் கவனித்துப் பழுதைச் சரி செய்து அனுப்பும் போது மாலை நான்கு மணி ஆகியிருந்தது.
இடையிடையே அவளது சக ஊழியர்கள் அவளை உண்ணச் சொல்லி உரைத்துக் கொண்டே இருந்தனர்.
வேலையிலிருந்து சற்று இடைவெளி கிடைத்தாலும் மனம் கணவனையே சுற்றி வர, 'நான் தான் அவரையே நினைச்சிட்டு இருக்கேன். அவருக்கு என் நினைப்பு இருந்தா இப்படிப் பேசாம இருப்பாரா?' என்ற எண்ணம் வேறு அவன் மீதான கோபத்தைத் தூண்டி விட, காதலுக்கும் கோபத்துக்கும் இடையில் தள்ளாடியவளாய் உண்ணவும் மனமில்லாது, இந்தப் பித்து நிலையிலிருந்து வெளிவர தன்னை இந்த வேலையில் பிணைத்துக் கொண்டாள்.
அந்த வாடிக்கையாளர் கிளம்பிச் சென்றதும் அயர்வாய் தனது இருக்கையில் அமர்ந்தவளை அவளின் மேலாளர் அழைக்கவும், இருக்கையில் இருந்து எழுந்தவள் மயங்கி விழுந்திருந்தாள்.
தூரமாய் யாரோ பேசும் ஒலி செவியைத் தீண்ட மெல்லமாய்க் கண் விழித்துப் பார்த்துச் சுற்றத்தை உணர முற்பட்டாள் சுந்தரலட்சுமி.
கையில் டிரிப்ஸ் ஏற மருத்துவமனை கட்டிலில் படுத்திருப்பது புரிந்தது அவளுக்கு.
"லோ பிபி வர வயசா இது! உங்களை நம்பி தானே எங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்தோம். கல்யாணம் முடிஞ்ச நாள்லருந்து காலைல சாப்பிடுறதே இல்லை அவ! அது தெரியுமா உங்களுக்கு? நாள் முழுக்க உங்கம்மாக்கிட்ட ஏச்சு பேச்சு வாங்கி அவதிப்பட்டுத் தான் இப்படி வந்து கிடக்கிறா" என்று தாய் குற்றச்சாட்டும் தொனியில் அழுகைக் குரலில் யாரிடமோ பேசுவது இவளது செவிகளைத் தீண்டின.
தலையை லேசாய் திருப்பிப் பார்த்தவள், செந்திலிடம் தாய் கண்ணீருடன் பேசுவதையும், தந்தை செந்திலைக் கோபத்துடன் பார்ப்பதையும், செந்தில் குற்றவுணர்வுடன் நின்றிருப்பதையும் பார்த்து, 'பொறுத்துப் போ! பொறுத்துப் போனு சொல்ற என் அம்மாவா இப்படிப் பேசுறது' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் இருக்க,
"என்னைப் பத்தி என்ன வேணா பேசுங்க அத்தை. அம்மாவைப் பத்திப் பேசாதீங்க" என்று செந்தில் காட்டமாய் உரைத்த நொடி,
"அம்மா" என்று அழைத்திருந்தாள் சுந்தரலட்சுமி.
அப்பொழுது தான் அவள் கண் விழித்ததை உணர்ந்த அனைவரும் பரபரப்புடன் அவளருகில் வந்து நின்றனர்.
"அவரை ஏன்மா திட்டிட்டு இருக்க? சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிட்டது நான் தானே!" அமைதியாக அவள் கூற,
மகளை மேலும் கோபத்துடன் முறைத்தவாறு செல்வராணி நிற்க, முகத்தின் இறுக்கம் மெல்லத் தளர கனிவாய் அவளைப் பார்த்தான் செந்தில்.
"உடம்பு எப்படிமா இருக்கு? இன்னும் மயக்கமா இருக்கா?" என்று வாஞ்சையுடன் அவளின் தலையைக் கோதியவராய்க் கேட்டிருந்தார் முகுந்தன்.
"இப்ப பரவாயில்லப்பா" என்றவள், "என்னம்மா என் மேல கோபமா?" என்று அருகில் நின்ற தாயின் கரங்களைப் பற்றினாள்.
"பின்னே மயக்கம் போட்ட பொண்ணு ஏதோ நல்ல சேதி தான் சொல்லப் போறாளோனு ஆசை ஆசையா ஓடி வந்தா, உடம்பு முடியாம மயங்கியிருக்கனு தெரிஞ்சி கொஞ்சுவாங்களா உன்னை" என்று மகளை முறைத்தார் செல்வராணி.
"யம்மா நான் கூட, செந்தில்கிட்ட நீ எனக்குச் சப்போர்ட் செஞ்சி பேசவும், உனக்கு எதுவும் மண்டைல அடிபட்டுருச்சோனு நினைச்சு பயந்துட்டேன்மா. இப்ப தான் நிம்மதியா இருக்கு" என்று அவள் கேலி செய்யவும், "முடியாம படுத்திருக்கும் போதும் கொழுப்பு பார்த்தீங்களா உங்க பொண்ணுக்கு" அவளின் கையிலேயே கிள்ளினார் செல்வராணி.
செல்வராணி தன்னிடம் தாயைக் குறையாய் பேசியதில் இறுக்கத்துடன் நின்றிருந்தவன், இவர்களின் உரையாடலைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். இதே போன்று சுந்தரி தனது தாயிடமும் உரிமையும் கேலியுமாய்ப் பேசிப் பழகினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவாறு நின்றிருக்க, ஆஆஆ என்று சுந்தரி அலறியதில் நிகழ்வுக்கு வந்தவனாய், "என்னாச்சு? என்னாச்சு சுந்தரி?" எனக் கேட்டான்.
அவளின் கரத்தைப் பற்றியிருந்த செல்வராணி ஏதோ பேசியவாறு அவளது கரத்தை உலுக்கவும் தான் அவ்வாறு அலறியிருந்தாள்.
"கையை அசைச்சாலே வலிக்குது" முகத்தில் வேதனைப்படர அவள் உரைத்த நொடி, "மயங்கி கீழே விழுந்தப்ப எதுவும் அடிப்பட்டிருக்குமோ" என்றவராய் அவளின் கையை ஆராய்ந்தார் முகுந்தன்.
"நான் டாக்டரைக் கூட்டிட்டு வரேன்" என்று சென்றான் செந்தில்.
அது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதால் அடுத்தச் சில மணி நேரங்களில் எலும்புச் சிகிச்சை நிபுணரை வரவழைத்து அவளின் வலது கையில் கட்டுப் போட்டிருந்தனர்.
கீழே விழுந்த போது முன்கையில் லேசாய் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாய் உரைத்து அவ்வாறு கட்டுப் போட்டிருந்தனர். கட்டு போடுவதற்குள் வலியில் துடித்துப் போனாள் சுந்தரலட்சுமி.
இரவு எட்டு மணியளவில் சுந்தரலட்சுமியின் காரை முகுந்தன் ஓட்ட அதில் தாயும் மகளும் பயணித்திருக்க, தான் வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் அவர்களின் பின்னே சென்றிருந்தான் செந்தில்.
வீட்டில் அவளது அறையில் அவளை அமர வைத்து விட்டு செல்வராணி வெளியேறவும், அவளருகில் வந்து அமர்ந்தான் செந்தில்.
இவள் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, "இன்னும் கோபமா தான் இருக்கியா சுந்தரி?" எனக் கேட்டான்.
"குத்தால அருவில குளிச்ச மாதிரி குளுகுளுனு இருக்கேன்" என்று அவள் உதட்டைச் சுழிக்க, வாய்விட்டுச் சிரித்திருந்தான்.
"என் கோபம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? என்கிட்ட பேசாம இருந்துட்டீங்கல! அப்படியே இருக்க வேண்டியது தானே! இப்ப மட்டும் ஏன் வந்தீங்களாம்?" கண்களை விரித்துக் கோபப் பார்வைப் பார்த்தவளாய் அவள் கேட்க,
"ஏன் வந்தேன்னா என் பொண்டாட்டி குழந்தை உண்டாகிட்டாளோனு நினைச்சு ஓடோடி வந்தேன்" என்று அவன் முடிப்பதற்குள்,
தனது இடக்கையால் அவனது தலை கை முதுகு எனக் கிடைத்த இடத்தில் எல்லாம் அடித்தவளாய், "அப்ப என் மேல அக்கறைப்பட்டுப் பார்க்க வரலை. அப்படித் தானே! எனக்கு என்ன ஆனாலும் உங்களுக்குக் கவலையில்ல அப்படித் தானே!" என்று கூறும் போதே அவளின் குரல் தழுதழுத்துப் போக, "ம்ப் சுந்தரி" என்றவனாய் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருத்தான்.
அவனின் தோளில் முகம் புதைத்தவளாய் குலுங்கிக் குலுங்கி அழுதவள், "நான் இல்லாம உங்களால இருக்க முடியுதுல" என்று தேம்பியவாறு நிமிர்ந்து அவனது கண்களுக்குள் ஊடுருவினாள்.
அவன் எவ்வித உணர்வும் காட்டாது அவளையே பார்த்திருக்க, "ஆனா என்னால இருக்க முடியலை. இரண்டு நாள்ல பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. ஐ மிஸ்டு யூ சோ மச். இதை ஒத்துக்கிறதுல உங்களை மாதிரி எனக்கு ஒன்னும் ஈகோ இல்ல" என்று மூக்கை உறிஞ்சினாள்.
தனது இன்மை அவளைப் பாதித்திருப்பதை எண்ணி மகிழ்வுற்றவனாய் மென்னகையுடன், "நானும் உன்னை மிஸ்டு யூ சோ மச்டா" என்றவாறு நெற்றியில் முத்தமிட்டான்.
அவனின் முகத்தைப் பிடித்துத் தள்ளியவளாய், "நான் சொன்ன பிறகு நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்ல" என்று உதட்டைச் சுழித்தாள்.
கதவுத் தட்டும் சத்தம் கேட்கவும், கை வளைவில் இருந்தவளை விட்டு எழுந்தவன் கதவைத் திறந்தான்.
அவளுக்கான இரவுணவை ஸ்பூனுடன் எடுத்து வந்திருந்தார் செல்வராணி.
அந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்டு மாத்திரையும் எடுத்துக் கொடுத்தவன் கிளம்புவதாய் உரைத்தைக் கேட்டு ஏக்கத்துடன் அவள் பார்க்க, "இங்கேயே இருக்கவா?" எனக் கேட்டான்.
"இருக்குறீங்களா ப்ளீஸ்" என்றவள் கெஞ்சும் பார்வையுடன் கேட்டதை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டவன் மீனாவிற்கு அழைத்து இங்கு நடந்ததை உரைத்து தான் இங்கேயே தங்கிக் கொள்வதாய் உரைத்து விட்டான்.
மகனின் கைப்பேசி அழைப்பைத் துண்டித்த மறுநொடி காஞ்சனாவிற்கு அழைத்த மீனா, "நீங்க சொன்னா மாதிரியே செஞ்சிட்டா அண்ணி. என்னை விட்டு என் பையனை பிரிச்சிட்டா! ஒரு நாள் என்னைத் தனியா விட்டு வெளியே தங்க மாட்டான். இன்னிக்கு அவ வீட்டுல தங்குறேன்னு போன் செஞ்சி சொல்றான்" என்று கண்ணீருடன் உரைக்க, அவரின் புலம்பலுக்கு மேலும் தூபம் போட்டுக் கொண்டிருந்தார் காஞ்சனா.
இங்கே வேறெந்த பேச்சும் இல்லாமல் கோழிக் குஞ்சாய் அவனது அரவணைப்பில் மனம் சமன்பட ஆழ்ந்து உறங்கிய சுந்தரலட்சுமியின் அண்மையில் நிம்மதி நெஞ்சில் படர உறங்கியிருந்தான் செந்தில்.
அன்று இருவருக்குள்ளும் பேசித் தீர்க்கப்படாத விடயங்கள் அனைத்தும் மறுநாள் வெடித்துச் சிதறக் காத்திருந்தன.
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உனதன்பின் கதகதப்பில் 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.