ஆறு மாதங்களுக்கு முன்பு.....
"இன்னிக்கு ஒரு நாள் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கப்படாதா..?? ", ஜானகி.
"எத்தன தடவ சொல்றது? நைட் டைம் ல தோசை னு சொல்லக்கூட சொல்லாத.. எனக்கு வேற ஏதாச்சும் பண்ணித்தா" , ராகவன்.
"ரெண்டு தோசை சாப்ட்டா உங்க சுகர் ஒண்ணும் வானத்துக்கு ஏறிடாது. மைசூர் பா, லட்டு னு நீங்க இனிப்ப நிறுத்தினாலே போறும்", ஜானகி.
"போதும்டி.... வாயக் கொற.. அடி வாங்கிடாத...",ராகவன்.
அப்படியே பேசி... பேசி... பேசி.... பேசி... பேசி....தோசைக்கு ஆரம்பித்த பேச்சு சண்டையாக ப்ரோமோஷன் வாங்கியது.
ரூமில் படித்துக் கொண்டிருந்த சூர்யாஸ்ரீயும், அவள் தங்கை சுஷ்மிதாவும், கடைக்குட்டி சுனைனாவும் அம்மா, அப்பாவின் சத்தம் கேட்டு ஹாலை எட்டிப் பார்த்தனர். வழக்கமான ஒண்ணும் இல்லாத மேட்டர் சண்டை தான்னு புரிந்த பின்பு சுஷ்மிதாவும், சுனைனாவும் ரூமிற்குள் வந்தனர்.
சண்டையை தீர்த்து வைப்போம் என்று சூர்யா போய் இரு தரப்பிலும் வாதங்களை கேட்டு "ஏம்ப்பா ஒரு நாள் தோசை சாப்ட்டா என்ன?? நா தா தோசை கேட்டேன் எனக்கு புடிக்கும்னு " என்று அப்பாவிடம் அம்மாக்காக பேசினாள்.
மகளும் மனைவிக்கு சப்போர்ட் செய்ததால் எரிச்சலுடன் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றார். சூர்யா அம்மாவிடம் திரும்பி " நீ அப்பாக்காக வேற ஏதாச்சும் பண்ணினா என்னம்மா?," என்று கேட்டாள்.
"வேலைக்கும் போய்ட்டு வந்து ஆத்துலயும் நான் எவ்ளோ வேல பாக்குறதுடீ " என்று கத்தினார் ஜானகி. தெரியும் தான் சூர்யாவிற்கு , அம்மா தன்னால் முடிந்த அளவுக்கும் அதிகமாக வீட்டில் வேலை செய்கிறாள் என்று தெரியும். ஹாஸ்டலில் இருந்து சனி, ஞாயிறு லீவுக்கு வந்திருந்த சூர்யா தான் தோசை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து செய்ய சொன்னாள். இப்போது கில்ட்டியாக உணர்ந்தாள்.
அப்பா அம்மா இருவரும் நார்மல் ஆனதும் தாங்கள் பார்த்து விட்டு வந்த பையனைப் பற்றி 'ஆஹா, ஓஹோ ' வென புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தனர் சூர்யாவிடம்.
ராகவன் & ஜானகி இன்ட்ரோ:
ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சர்ஸ்.
'செம பேர் பொருத்தம், கண்டிப்பா ரொம்ப அந்யோன்யமான கப்புள் போலயே' னு நீங்க நெனச்சா... வெரி சாரி கைஸ்!!
பேர் மட்டுமே இருவருக்கும் பொருத்தம்.!!!
நம்ம ஜானகி தெற்குன்னு சொன்னா கண்டிப்பா ராகவன் அதுக்கு நேர் எதிரா வடக்குன்னு தான் சொல்வார். இன்னும் இவங்க சண்டையே முடியல.!! இதுல சூர்யாக்கு கல்யாணம் பண்ணிடனும்னு அவசரம். அதுக்காக.... பெத்தவா கடமை இருக்கிறதல்லவா.?!
அவங்க நல்ல ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இல்லைன்னு இல்லை. ஒரு மாதிரி ஜாடிக்கேத்த மூடி தான்.ரொம்ப நல்ல பேரண்ட்ஸ். பிள்ளைகளுக்காக ஒண்ணா வாழ்றோம்னு சொல்லி வாழும் பாவப்பட்ட ஜீவன்கள் .நல்ல பேரண்ட்ஸ், நல்ல கணவன் மனைவி இது ரெண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம்னு பாவம் அந்த 70ஸ் கப்புள்க்கு தெரியல.
ஒரு குழந்தை மனரீதியா ஹெல்த்தியா , தன்னம்பிக்கையோட இருக்கணும்னா நல்ல பெற்றோரா மட்டும் இருந்தால் போதாது. அவங்க அவங்களுக்குள்ள அன்பா , மரியாதையோட நல்ல கணவன் மனைவியா இருக்கணும். அவர்களை பார்த்து வளரும் குழந்தைகளும் உலகத்தை அம்மா அப்பா எப்படி பார்க்கிறார்களோ, எப்படி தங்களை சுற்றி இருப்பவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அதையே தான் செய்வார்கள்.
சூர்யாஸ்ரீ, ராகவன் ஜானகியின் முதல் பெண்.வயது இருபத்தி இரண்டு. மாநிறம். கவிதாயினி. தீவிர வடிவேலு காமெடி விசிறி.
"""ஊமைக்கோட்டான், பேசவே மாட்டா, ரொம்ப ஷை டைப், அமைதியின் சிகரம், பொறுப்பு, பொறுமை, பரு (pimple) மூஞ்சி & அமுக்குணி (சுஷ்மி வெச்ச பேர்), அறிவாளி, பட் அப்பாக்கு மட்டும் கொஞ்சம் தத்தி, ஒண்ணும் தெரியாது, பயந்தாங்கொள்ளி, வெவரம் போறாது, மழை பெய்யறது என் பேத்திக்காக தான் (நல்லார் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை) அவ்ளோ நல்ல பொண்ணு,
அழு மூஞ்சி....ஃப்ப்பா....... """""
'இப்டிலாம் சுத்தி இருக்கவா சொல்லி என்னையும் என்னய பத்தி அப்படியே நெனக்க வெச்சுட்டா...இதெல்லாம் இல்லங்க.. நா ஒரு இன்ட்ரோவர்ட். புக்ஸ் படிக்க, டீவி பார்க்க புடிக்கும். அமைதியா சத்தம் இல்லாம இருக்க புடிக்கும். எழுத முயற்சிக்கும் கவிதாயினி.அவ்ளோ தான்....எம்.ஏ ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு. '
'இப்பத்தில இருந்து வரன் பார்க்க ஆரம்பிச்சா தான் காலா காலத்துல நல்லதா அமையும் ' ஜானகியின் தாட் ஃப்ராஸஸ். ராகவனுக்கு மகளை வேலைக்கு அனுப்ப ஆசை.
என்னதான் கணவன் மனைவிக்குள் சதா சர்வ காலமும் லடாயாக இருந்தாலும் அப்பா என்றுமே அம்மாவை 'வீட்டிலே இரு' என்று எந்த அடக்குமுறையையும் செய்ததில்லை. சமையல் கட்டில் நானும் உதவுகிறேன் பேர்வழி என்று அதகளம் செய்வார். ப்ளஸ் டூ முடித்து இருபது வயதில் கல்யாணம் அம்மாக்கு. அப்பாக்கு கல்யாணத்தப்போ வயது முப்பது. அப்பறமா டீச்சர் ட்ரெய்னிங், யுஜி- பிஜி படிச்சது அப்பா அண்ட் அம்மாதாத்தா ஹெல்ப்ல தான்.
இருபத்தைந்து வயதிற்குள் நானும், சுஷ்மிதாவும் வந்தாச்சு. நான் ப்ளஸ் ஒன் படிக்கறப்போ வந்த ஸ்வீட் & அதிர்ச்சியான ஸர்ப்ரைஸ் தான் கடைக்குட்டி சுனைனா. இரண்டு பெண்கள் இருக்கும் எல்லா வீடுகளிலும் ஆண் குழந்தைக்கான ஏக்கம் கண்டிப்பா இருக்கும். அதே தான் இங்கேயும்.!!
என் பெற்றோரின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக இருந்தது ராதாகிருஷ்ணனின்
பயோ டேட்டா.பெற்றோருக்கு முதல் பிள்ளை, அவனுக்கு இரண்டு தம்பிகள். கரெக்டா ஐந்து வயது வித்தியாசம் எனக்கும் அவருக்கும்.
முக்கிய அம்சமாக அம்மாவின் முக்கிய எதிர்பார்ப்பான
'கால் காசானாலும் கவர்மென்டு காசு, அரைக் காசானாலும் அரசாங்க காசு' எனும் புது மொழி உரைக்கும் அரசு உத்தியோகஸ்தன்(ர்).
ஜாதகமும் பத்துக்கு எட்டு பொருத்தம் என்று அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
என்னிடம் போட்டோ காண்பித்தார்கள். மனதில் தெளிவில்லாமல் போனில் தெரிந்த அந்த தெரிந்த அந்த கொழுக்.. மொழுக்.. புஜுக்..புஜுக் .. முகத்தைப் பார்த்தேன்.
******
இன்று....
'பீட்ரூட் கூட்டை ஊரே மணக்கும் முறையில் செய்வது எப்படி ?' யூடியூப் வீடியோவை பார்த்துவிட்டு அந்த சமையல் கட்டு முழுக்க மணம் வந்த படி கூட்டை செய்து முடித்து லன்ச் பாக்ஸில் அடைத்து எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள் சூர்யா.
ஆமாம், பக்கத்து வீடு தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு பின்னால் தேவைப்படும் என்று இரண்டு பிளாட் இடங்களை மூர்த்தி வாங்கி ஒன்றில் மட்டும் அப்போதைய ஃபேஷன் படி ஒரு 2 bhk வை கட்டினார்.
இன்னொரு இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டிய புதிய வீட்டில் சூர்யாவின் கல்யாண சீர் சாமான்கள் பரணில். அம்மா அப்பா அர்ஜுனை பார்க்க வரும் போதே மூர்த்தி "கல்யாணமானா இந்த ஆத்துல திங்க்ஸ் லா வெச்சுக்கலாம், புழங்கிக்கலாம். சமையல் பழைய ஆத்துல தான்" , என்று சொன்னதாக அம்மா சொன்னாள்.
என்னதான் அர்ஜுனனுக்கு அப்புறம் இரண்டு பையன்கள் இருந்தாலும் மகளின் ப்ரைவஸிக்கு குந்தகம் வராது என்று நினைத்தனர் நம்ம ராகவ் அண்ட் ஜானு.
மதிய சாப்பாட்டை கணவனிடம் கொடுத்து விட்டு சோஃபாவில் அமர்ந்தாள் சூர்யா. என்றுமில்லாத களைப்பாக இன்று களைத்திருந்தாள்.
"என்னடா ஆச்சு?" அர்ஜுன் .
"ஒண்ணுமில்லப்பா டயர்ட்டா இருக்கு. நீங்க லன்ச் சாப்ட்டு எப்படி இருந்ததுன்னு கால் பண்ணுங்கோ" சூர்யா.
"ஓகே டா"
"ப்பா ஒரு டவுட் " ( ''''என்னய பேர் சொல்லி எதுவும் கூப்டுடாத டா''' என்பது கல்யாணத்திற்கு முன்பே அர்ஜுனின் அன்பான ஆணை. அதனால் 'வாங்கோப்பா- போங்கோப்பா''''')
"ம்ம்ம்..."
"ஏன் அம்மாவும் அப்பாவும் (அர்ஜுனின் பெற்றோர் ) கோவமா இருக்கா?? நா லேட்டா எழுந்து போனதாலயா? "
"ம்ம்ம்...தெரியல டா"
"?????"
"நா ஒண்ணு சொல்லட்டா??... நீ கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்க ட்ரை பண்ணிப் பாரேன். கஷ்டம்தான் இல்லன்னு சொல்லல. டெய்லி 5.30 க்கு நா உன்ன எழுப்பறேன். நீ எழுந்து என்னைய பாத்துட்டு திரும்ப தூங்கிட்ற".
" என்னால முடியலப்பா.. எழுந்துக்க கூடாதுன்னு இல்ல. ரொம்ப டயர்ட்டா இருக்கு. நைட்ல சரியா தூங்கல. என்னனு தெரியல. "
"எனக்கு தெரியும் ஏன்னு. ஹா...ஹா..."
"உங்களால தான் எல்லாமே. சிரிக்காதீங்கோ !! உங்களுக்கு எப்டி நார்மலா இருக்கு நைட்ல தூங்காம?!"
"அதெல்லாம் அப்டி தான்....ஹாஹா...ஹா..."
"பல்ல பல்ல காட்டாதே மேன்!!!! இனிமே கிட்டயே வராதீங்கோ. நா இனிமே பத்து மணிக்கு டாண்னு தூங்கறேன். காலம்பற 5.30 எழுந்துக்கறேன். என் மாமியார் கிட்ட பெஸ்ட் மாட்டுப்பொண்ணுன்னு பேர் எடுக்கறேன்."
" அதே தான் நீ எங்க அம்மா வ ஐஸ் போட்டு வெச்சுக்கோ. அவாளுக்கும் மாட்டுப்பொண் கிட்ட சில எதிர்பார்ப்புகள் இருக்குமில்லையா."
அர்ஜுன் இதை சொல்லிவிட்டு 'பை' சொல்லி ட்ரெய்னை பிடிக்க கிளம்பினான்.
சூர்யாவிற்கு தன் கணவன் கடைசியாக சொல்லிச் சென்ற "எதிர்பார்ப்புகள்" மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.
'துவச்சாச்சு மேடம்' என வாஷிங் மெஷின் பாடியது. எடுத்து வாசல் கொடியில் வெயிலில் நனைய போட்டாள்.
மனதில் சில பல கேள்விகள்...
' எதிர்பார்ப்புகள் எல்லாருக்கும் தான் இருக்கு. கல்யாணம் ஆன மறு நாளே தலைல துண்டு கட்டிண்டு, துளசி மாடத்த சுத்தி, காபி போட்டு ஆத்துல இருக்கறவா எல்லாருக்கும் குடுத்து எழுப்புற இன்ஸ்டன்ட் மாட்டுப்பொண்ண காட்டற சினிமா வ எல்லாம் தடை பண்ணனும். இதுல கல்யாணம் முடிஞ்ச ஒடனே
""குட் நியூஸ்"" வேணும். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணுக்கு ஒடம்புல, மனசுல, வாழற எடத்துல எவ்ளோ மாற்றங்கள் & அழைக்கழிப்புகள் னு யாருக்கும் தெரியாதா, இல்ல புரியாதா.?!?!. இந்த மாமியார்ஸ் எல்லாருமே ஒரு காலத்துல மாட்டுப்பொண்ணா இருந்தவா தானே. ஒய் திஸ் அன்ரியலிஸ்டிக் எதிர்பார்ப்புகள் ??(unrealistic expectations).
( சூர்யா ஒரு ஆங்கில இலக்கிய மாணவிங்கறதுனால அப்பப்போ மனசுல ஸ்போக்கன் இங்லீஷ் பண்ணுவா).
நைட்ல பாக்குற ட்யூட்டிக்கு!! எங்க இருந்து அஞ்சு மணிக்கு எழுந்து வாசல்ல கைவண்ணத்த (கோலம்) காட்றது.திருட்டு பயம் அதிகம் இருக்கற இந்த கட்டக்கடைசி ப்ளாட்ல எப்படி முடியும்?? ம்ம்ம் என்னவோ போடா முருகா ..!!! மனசு அமைதியாவே இல்ல கொஞ்ச நாளா. '
"சூர்யா.....???" என்றழைத்துக்கோண்டே மூர்த்தி புது வீட்டிற்குள் கொல்லை வாசல் படி வழியாக வந்தார்.
"சொல்லுங்கோ அப்பா"
"அர்ஜுன் கிளம்பியாச்சா ?"
"ஆமாம்ப்பா "
"சரி.... துணிய காயப்பொட்டுட்டு போய் சாப்டு. மாமி கூப்புடறா"
"சரிப்பா.."
பழையாத்துக்கு சென்றால் அங்கே ராஜி, "சூர்யா, நீ சாப்ட்டுடு " என்றார் சிரித்தபடி.
'என்ன சிரிக்கறா.??! ஏன் கோவமா இருந்தா? இப்ப கோபம் போயிடுத்தா ? இல்ல தூங்குதா?? ஒண்ணும் புரியலை ' என்றது சூர்யாவின் மைண்ட் வாய்ஸ். அடுத்து கோபம் வருமா??? எப்போ, எப்டி வரும். இந்த ஆத்துல யாரையும், என் ஆத்துக்காரரையும் சேர்த்து, யூகிக்க முடியலயே.' மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சூர்யா.
"இன்னிக்கு ஒரு நாள் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கப்படாதா..?? ", ஜானகி.
"எத்தன தடவ சொல்றது? நைட் டைம் ல தோசை னு சொல்லக்கூட சொல்லாத.. எனக்கு வேற ஏதாச்சும் பண்ணித்தா" , ராகவன்.
"ரெண்டு தோசை சாப்ட்டா உங்க சுகர் ஒண்ணும் வானத்துக்கு ஏறிடாது. மைசூர் பா, லட்டு னு நீங்க இனிப்ப நிறுத்தினாலே போறும்", ஜானகி.
"போதும்டி.... வாயக் கொற.. அடி வாங்கிடாத...",ராகவன்.
அப்படியே பேசி... பேசி... பேசி.... பேசி... பேசி....தோசைக்கு ஆரம்பித்த பேச்சு சண்டையாக ப்ரோமோஷன் வாங்கியது.
ரூமில் படித்துக் கொண்டிருந்த சூர்யாஸ்ரீயும், அவள் தங்கை சுஷ்மிதாவும், கடைக்குட்டி சுனைனாவும் அம்மா, அப்பாவின் சத்தம் கேட்டு ஹாலை எட்டிப் பார்த்தனர். வழக்கமான ஒண்ணும் இல்லாத மேட்டர் சண்டை தான்னு புரிந்த பின்பு சுஷ்மிதாவும், சுனைனாவும் ரூமிற்குள் வந்தனர்.
சண்டையை தீர்த்து வைப்போம் என்று சூர்யா போய் இரு தரப்பிலும் வாதங்களை கேட்டு "ஏம்ப்பா ஒரு நாள் தோசை சாப்ட்டா என்ன?? நா தா தோசை கேட்டேன் எனக்கு புடிக்கும்னு " என்று அப்பாவிடம் அம்மாக்காக பேசினாள்.
மகளும் மனைவிக்கு சப்போர்ட் செய்ததால் எரிச்சலுடன் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றார். சூர்யா அம்மாவிடம் திரும்பி " நீ அப்பாக்காக வேற ஏதாச்சும் பண்ணினா என்னம்மா?," என்று கேட்டாள்.
"வேலைக்கும் போய்ட்டு வந்து ஆத்துலயும் நான் எவ்ளோ வேல பாக்குறதுடீ " என்று கத்தினார் ஜானகி. தெரியும் தான் சூர்யாவிற்கு , அம்மா தன்னால் முடிந்த அளவுக்கும் அதிகமாக வீட்டில் வேலை செய்கிறாள் என்று தெரியும். ஹாஸ்டலில் இருந்து சனி, ஞாயிறு லீவுக்கு வந்திருந்த சூர்யா தான் தோசை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து செய்ய சொன்னாள். இப்போது கில்ட்டியாக உணர்ந்தாள்.
அப்பா அம்மா இருவரும் நார்மல் ஆனதும் தாங்கள் பார்த்து விட்டு வந்த பையனைப் பற்றி 'ஆஹா, ஓஹோ ' வென புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தனர் சூர்யாவிடம்.
ராகவன் & ஜானகி இன்ட்ரோ:
ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சர்ஸ்.
'செம பேர் பொருத்தம், கண்டிப்பா ரொம்ப அந்யோன்யமான கப்புள் போலயே' னு நீங்க நெனச்சா... வெரி சாரி கைஸ்!!
பேர் மட்டுமே இருவருக்கும் பொருத்தம்.!!!
நம்ம ஜானகி தெற்குன்னு சொன்னா கண்டிப்பா ராகவன் அதுக்கு நேர் எதிரா வடக்குன்னு தான் சொல்வார். இன்னும் இவங்க சண்டையே முடியல.!! இதுல சூர்யாக்கு கல்யாணம் பண்ணிடனும்னு அவசரம். அதுக்காக.... பெத்தவா கடமை இருக்கிறதல்லவா.?!
அவங்க நல்ல ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இல்லைன்னு இல்லை. ஒரு மாதிரி ஜாடிக்கேத்த மூடி தான்.ரொம்ப நல்ல பேரண்ட்ஸ். பிள்ளைகளுக்காக ஒண்ணா வாழ்றோம்னு சொல்லி வாழும் பாவப்பட்ட ஜீவன்கள் .நல்ல பேரண்ட்ஸ், நல்ல கணவன் மனைவி இது ரெண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம்னு பாவம் அந்த 70ஸ் கப்புள்க்கு தெரியல.
ஒரு குழந்தை மனரீதியா ஹெல்த்தியா , தன்னம்பிக்கையோட இருக்கணும்னா நல்ல பெற்றோரா மட்டும் இருந்தால் போதாது. அவங்க அவங்களுக்குள்ள அன்பா , மரியாதையோட நல்ல கணவன் மனைவியா இருக்கணும். அவர்களை பார்த்து வளரும் குழந்தைகளும் உலகத்தை அம்மா அப்பா எப்படி பார்க்கிறார்களோ, எப்படி தங்களை சுற்றி இருப்பவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அதையே தான் செய்வார்கள்.
சூர்யாஸ்ரீ, ராகவன் ஜானகியின் முதல் பெண்.வயது இருபத்தி இரண்டு. மாநிறம். கவிதாயினி. தீவிர வடிவேலு காமெடி விசிறி.
"""ஊமைக்கோட்டான், பேசவே மாட்டா, ரொம்ப ஷை டைப், அமைதியின் சிகரம், பொறுப்பு, பொறுமை, பரு (pimple) மூஞ்சி & அமுக்குணி (சுஷ்மி வெச்ச பேர்), அறிவாளி, பட் அப்பாக்கு மட்டும் கொஞ்சம் தத்தி, ஒண்ணும் தெரியாது, பயந்தாங்கொள்ளி, வெவரம் போறாது, மழை பெய்யறது என் பேத்திக்காக தான் (நல்லார் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை) அவ்ளோ நல்ல பொண்ணு,
அழு மூஞ்சி....ஃப்ப்பா....... """""
'இப்டிலாம் சுத்தி இருக்கவா சொல்லி என்னையும் என்னய பத்தி அப்படியே நெனக்க வெச்சுட்டா...இதெல்லாம் இல்லங்க.. நா ஒரு இன்ட்ரோவர்ட். புக்ஸ் படிக்க, டீவி பார்க்க புடிக்கும். அமைதியா சத்தம் இல்லாம இருக்க புடிக்கும். எழுத முயற்சிக்கும் கவிதாயினி.அவ்ளோ தான்....எம்.ஏ ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு. '
'இப்பத்தில இருந்து வரன் பார்க்க ஆரம்பிச்சா தான் காலா காலத்துல நல்லதா அமையும் ' ஜானகியின் தாட் ஃப்ராஸஸ். ராகவனுக்கு மகளை வேலைக்கு அனுப்ப ஆசை.
என்னதான் கணவன் மனைவிக்குள் சதா சர்வ காலமும் லடாயாக இருந்தாலும் அப்பா என்றுமே அம்மாவை 'வீட்டிலே இரு' என்று எந்த அடக்குமுறையையும் செய்ததில்லை. சமையல் கட்டில் நானும் உதவுகிறேன் பேர்வழி என்று அதகளம் செய்வார். ப்ளஸ் டூ முடித்து இருபது வயதில் கல்யாணம் அம்மாக்கு. அப்பாக்கு கல்யாணத்தப்போ வயது முப்பது. அப்பறமா டீச்சர் ட்ரெய்னிங், யுஜி- பிஜி படிச்சது அப்பா அண்ட் அம்மாதாத்தா ஹெல்ப்ல தான்.
இருபத்தைந்து வயதிற்குள் நானும், சுஷ்மிதாவும் வந்தாச்சு. நான் ப்ளஸ் ஒன் படிக்கறப்போ வந்த ஸ்வீட் & அதிர்ச்சியான ஸர்ப்ரைஸ் தான் கடைக்குட்டி சுனைனா. இரண்டு பெண்கள் இருக்கும் எல்லா வீடுகளிலும் ஆண் குழந்தைக்கான ஏக்கம் கண்டிப்பா இருக்கும். அதே தான் இங்கேயும்.!!
என் பெற்றோரின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக இருந்தது ராதாகிருஷ்ணனின்
பயோ டேட்டா.பெற்றோருக்கு முதல் பிள்ளை, அவனுக்கு இரண்டு தம்பிகள். கரெக்டா ஐந்து வயது வித்தியாசம் எனக்கும் அவருக்கும்.
முக்கிய அம்சமாக அம்மாவின் முக்கிய எதிர்பார்ப்பான
'கால் காசானாலும் கவர்மென்டு காசு, அரைக் காசானாலும் அரசாங்க காசு' எனும் புது மொழி உரைக்கும் அரசு உத்தியோகஸ்தன்(ர்).
ஜாதகமும் பத்துக்கு எட்டு பொருத்தம் என்று அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
என்னிடம் போட்டோ காண்பித்தார்கள். மனதில் தெளிவில்லாமல் போனில் தெரிந்த அந்த தெரிந்த அந்த கொழுக்.. மொழுக்.. புஜுக்..புஜுக் .. முகத்தைப் பார்த்தேன்.
******
இன்று....
'பீட்ரூட் கூட்டை ஊரே மணக்கும் முறையில் செய்வது எப்படி ?' யூடியூப் வீடியோவை பார்த்துவிட்டு அந்த சமையல் கட்டு முழுக்க மணம் வந்த படி கூட்டை செய்து முடித்து லன்ச் பாக்ஸில் அடைத்து எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள் சூர்யா.
ஆமாம், பக்கத்து வீடு தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு பின்னால் தேவைப்படும் என்று இரண்டு பிளாட் இடங்களை மூர்த்தி வாங்கி ஒன்றில் மட்டும் அப்போதைய ஃபேஷன் படி ஒரு 2 bhk வை கட்டினார்.
இன்னொரு இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டிய புதிய வீட்டில் சூர்யாவின் கல்யாண சீர் சாமான்கள் பரணில். அம்மா அப்பா அர்ஜுனை பார்க்க வரும் போதே மூர்த்தி "கல்யாணமானா இந்த ஆத்துல திங்க்ஸ் லா வெச்சுக்கலாம், புழங்கிக்கலாம். சமையல் பழைய ஆத்துல தான்" , என்று சொன்னதாக அம்மா சொன்னாள்.
என்னதான் அர்ஜுனனுக்கு அப்புறம் இரண்டு பையன்கள் இருந்தாலும் மகளின் ப்ரைவஸிக்கு குந்தகம் வராது என்று நினைத்தனர் நம்ம ராகவ் அண்ட் ஜானு.
மதிய சாப்பாட்டை கணவனிடம் கொடுத்து விட்டு சோஃபாவில் அமர்ந்தாள் சூர்யா. என்றுமில்லாத களைப்பாக இன்று களைத்திருந்தாள்.
"என்னடா ஆச்சு?" அர்ஜுன் .
"ஒண்ணுமில்லப்பா டயர்ட்டா இருக்கு. நீங்க லன்ச் சாப்ட்டு எப்படி இருந்ததுன்னு கால் பண்ணுங்கோ" சூர்யா.
"ஓகே டா"
"ப்பா ஒரு டவுட் " ( ''''என்னய பேர் சொல்லி எதுவும் கூப்டுடாத டா''' என்பது கல்யாணத்திற்கு முன்பே அர்ஜுனின் அன்பான ஆணை. அதனால் 'வாங்கோப்பா- போங்கோப்பா''''')
"ம்ம்ம்..."
"ஏன் அம்மாவும் அப்பாவும் (அர்ஜுனின் பெற்றோர் ) கோவமா இருக்கா?? நா லேட்டா எழுந்து போனதாலயா? "
"ம்ம்ம்...தெரியல டா"
"?????"
"நா ஒண்ணு சொல்லட்டா??... நீ கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்க ட்ரை பண்ணிப் பாரேன். கஷ்டம்தான் இல்லன்னு சொல்லல. டெய்லி 5.30 க்கு நா உன்ன எழுப்பறேன். நீ எழுந்து என்னைய பாத்துட்டு திரும்ப தூங்கிட்ற".
" என்னால முடியலப்பா.. எழுந்துக்க கூடாதுன்னு இல்ல. ரொம்ப டயர்ட்டா இருக்கு. நைட்ல சரியா தூங்கல. என்னனு தெரியல. "
"எனக்கு தெரியும் ஏன்னு. ஹா...ஹா..."
"உங்களால தான் எல்லாமே. சிரிக்காதீங்கோ !! உங்களுக்கு எப்டி நார்மலா இருக்கு நைட்ல தூங்காம?!"
"அதெல்லாம் அப்டி தான்....ஹாஹா...ஹா..."
"பல்ல பல்ல காட்டாதே மேன்!!!! இனிமே கிட்டயே வராதீங்கோ. நா இனிமே பத்து மணிக்கு டாண்னு தூங்கறேன். காலம்பற 5.30 எழுந்துக்கறேன். என் மாமியார் கிட்ட பெஸ்ட் மாட்டுப்பொண்ணுன்னு பேர் எடுக்கறேன்."
" அதே தான் நீ எங்க அம்மா வ ஐஸ் போட்டு வெச்சுக்கோ. அவாளுக்கும் மாட்டுப்பொண் கிட்ட சில எதிர்பார்ப்புகள் இருக்குமில்லையா."
அர்ஜுன் இதை சொல்லிவிட்டு 'பை' சொல்லி ட்ரெய்னை பிடிக்க கிளம்பினான்.
சூர்யாவிற்கு தன் கணவன் கடைசியாக சொல்லிச் சென்ற "எதிர்பார்ப்புகள்" மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.
'துவச்சாச்சு மேடம்' என வாஷிங் மெஷின் பாடியது. எடுத்து வாசல் கொடியில் வெயிலில் நனைய போட்டாள்.
மனதில் சில பல கேள்விகள்...
' எதிர்பார்ப்புகள் எல்லாருக்கும் தான் இருக்கு. கல்யாணம் ஆன மறு நாளே தலைல துண்டு கட்டிண்டு, துளசி மாடத்த சுத்தி, காபி போட்டு ஆத்துல இருக்கறவா எல்லாருக்கும் குடுத்து எழுப்புற இன்ஸ்டன்ட் மாட்டுப்பொண்ண காட்டற சினிமா வ எல்லாம் தடை பண்ணனும். இதுல கல்யாணம் முடிஞ்ச ஒடனே
""குட் நியூஸ்"" வேணும். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணுக்கு ஒடம்புல, மனசுல, வாழற எடத்துல எவ்ளோ மாற்றங்கள் & அழைக்கழிப்புகள் னு யாருக்கும் தெரியாதா, இல்ல புரியாதா.?!?!. இந்த மாமியார்ஸ் எல்லாருமே ஒரு காலத்துல மாட்டுப்பொண்ணா இருந்தவா தானே. ஒய் திஸ் அன்ரியலிஸ்டிக் எதிர்பார்ப்புகள் ??(unrealistic expectations).
( சூர்யா ஒரு ஆங்கில இலக்கிய மாணவிங்கறதுனால அப்பப்போ மனசுல ஸ்போக்கன் இங்லீஷ் பண்ணுவா).
நைட்ல பாக்குற ட்யூட்டிக்கு!! எங்க இருந்து அஞ்சு மணிக்கு எழுந்து வாசல்ல கைவண்ணத்த (கோலம்) காட்றது.திருட்டு பயம் அதிகம் இருக்கற இந்த கட்டக்கடைசி ப்ளாட்ல எப்படி முடியும்?? ம்ம்ம் என்னவோ போடா முருகா ..!!! மனசு அமைதியாவே இல்ல கொஞ்ச நாளா. '
"சூர்யா.....???" என்றழைத்துக்கோண்டே மூர்த்தி புது வீட்டிற்குள் கொல்லை வாசல் படி வழியாக வந்தார்.
"சொல்லுங்கோ அப்பா"
"அர்ஜுன் கிளம்பியாச்சா ?"
"ஆமாம்ப்பா "
"சரி.... துணிய காயப்பொட்டுட்டு போய் சாப்டு. மாமி கூப்புடறா"
"சரிப்பா.."
பழையாத்துக்கு சென்றால் அங்கே ராஜி, "சூர்யா, நீ சாப்ட்டுடு " என்றார் சிரித்தபடி.
'என்ன சிரிக்கறா.??! ஏன் கோவமா இருந்தா? இப்ப கோபம் போயிடுத்தா ? இல்ல தூங்குதா?? ஒண்ணும் புரியலை ' என்றது சூர்யாவின் மைண்ட் வாய்ஸ். அடுத்து கோபம் வருமா??? எப்போ, எப்டி வரும். இந்த ஆத்துல யாரையும், என் ஆத்துக்காரரையும் சேர்த்து, யூகிக்க முடியலயே.' மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சூர்யா.
Last edited: