அத்தியாயம் 15
மாலையில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருந்தனர். மதுவின் தயாரிப்பில் பால் கொழுக்கட்டை நான்கைந்து சிறிய கிண்ணங்களில் பரிமாறப்பட்டு இருக்க.. அத்தோடு வாழை, உருளை, அப்பளம், வெங்காயம் என பஜ்ஜி வகைகளும் சூடாய் தட்டில் காத்திருந்தது.
வல்லி சேதுவை வளர்த்த கதையைச் சொல்லி நேரத்தை நகர்த்த, டீ அருந்திய டம்ளர்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் பாவை.
"மிஸ்டர் கிருபா, எங்க நீங்க குடிச்ச டம்ளரைக் காணோம்.?" என்றிட, தந்தையின் அருகே அமர்ந்திருந்தவன், "ஸாரி மிஸ் மது. வொர்க் பண்ணிக்கிட்டு இருந்ததால, லேப்டாப் டேபிள்ல அப்படியே வச்சிட்டேன். வெயிட், வந்து எடுத்துத் தர்றேன்."
"இல்ல, நானே எடுத்துக்கிறேன். நீங்க பேசுங்க!" என அவனது கணினி மேஜைக்குச் சென்றவள் டம்ளரை எடுத்துவிட்டுத் திரும்ப, துப்பட்டாவில் இருந்த பாசி சரம் கோர்த்து, அங்கிருந்த கண்ணாடி கீழே விழுந்தது. உடையவில்லை, எனினும் சிறியதாய் சேதாரம்.
"மது என்ன சத்தம்.?" என்று வல்லி குரல் கொடுக்க, "மிஸ்டர் கிருபாவோட கிளாஸ் கீழ விழுந்திடுச்சு அம்மாச்சி!" எனப் பதில் தந்தாள்.
கேட்ட ஒலி தேநீர் டம்ளருக்கானதாய் இல்லாது மாறுபட்டதாய் செவியில் விழ, எழுந்து சென்று பார்த்தான்.
மதுவின் கரத்தில் மூக்குக் கண்ணாடி. அவன் சரிசெய்து வைத்திருந்த, நிலாவின் உடையது. ஒரு பக்க கண்ணாடி வில்லை மட்டும் வெளியே வந்து அவளின் உள்ளங்கையில் தனித்துக் கிடந்தது, இரண்டு கீறல்களுடன்.
"ஸாரி மிஸ்டர் கிருபா. நான் கவனிக்கல. துப்பட்டால மாட்டி இப்படி ஆகிடுச்சு. பக்கத்துல தான் ஆப்டிகல் இருக்கு. உடனே போய் சரி பண்ணீட்டு வந்திடுறேன்!" என்றவளின் குரலில் மெலிதான பதற்றம் இருந்தது.
ஏற்கனவே தன்னால் தான் அவனின் கரத்தில் காயமானது என எண்ணி இருந்தவளிற்குள், இந்நிகழ்வு மேலும் வலியைக் கொடுத்தது.
என்ன தோன்றியதோ அவளின் வாடிய முகத்தைக் காணச் சகியாமல், "பரவாயில்ல மிஸ் மது. பிரச்சனை இல்ல. நான் சென்னைக்குப் போய் மாத்திக்கிறேன்." என அருகே செல்ல,
"அதுவரைக்கும் என்ன செய்வீங்க, கிளாஸ் இல்லாம.?"
"நான் ஸ்பெக்ஸ் போட்டு இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா?"
பாவையின் கண்களில் குழப்ப ரேகைகள் படிய, இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"இது என்னோடது இல்ல. சோ, நோ பிராப்ளம்." என்றவாறே அதனை வாங்கிக் கொண்டான்.
அவள் கேள்விப் பார்வையுடன், "யாரோடது?"
அவ்வினாவிற்கு பதில் அளிப்பதை தவிர்த்தவன், "கையில எதுவும் காயம் ஆகலயே மிஸ் மது.?"
புரிந்து கொண்டாள் மது, அது அவனிற்கு மிக முக்கியம் என.
"இல்ல, அடிபடல."
"சரி போய், கையை வாஷ் பண்ணுங்க."
"ஸாரி, மிஸ்டர் கிருபா!"
"இட்ஸ் ஓகே!"
"உங்களுக்குச் சம்பந்தம் இல்லாததை ஏன் வச்சிருக்கீங்க?"
"மொத்தமா அப்படிச் சம்பந்தம் இல்லனு சொல்லிட முடியாது! என் ஃப்ரெண்டோடது. நவ் ஸீ இஸ் நோ மோர். அவளோட ஞாபகமா என்கிட்ட இருக்கிறது இது ஒன்னு தான்!"
"ஐம் ரியலி வெரி ஸாரி."
புன்னகைத்தவன், "ரிலாக்ஸ். ஒன்னும் இல்ல, சரியா? போய் வேலையைப் பாருங்க." என்றிட, கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
தனித்து விழுந்த கண்ணாடி வில்லையை கிருபா அதனோடு சேர்க்க முயற்சிக்க, நடந்த நிகழ்வினைப் பார்த்திருந்தனர் பெரியவர்கள் மூவரும்.
சேது மகனிடம் தெரியும் மாற்றத்தை எண்ணி நிம்மதி மூச்சுவிட, சற்று முன்னர் இருந்த உற்சாகம் வடிந்து தளர்ந்த நடையில் செல்லும் பாவையை நோக்கினார் வல்லி.
அதான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டான்ல மதும்மா. அப்புறம் என்ன.? என அவர் சமாதானம் சொல்ல, வீட்டுல வேலை இருக்கு. நான் அப்புறம் வர்றேன் அம்மாச்சி! என்று வலிந்து புன்னகைத்து விட்டுச் சென்றாள்.
கிருபா முழுமையாய் சொல்லாவிடினும், அவன் உரைத்த 'ஃப்ரெண்ட்' யார் என அறிவாள் மது.
அவனிற்கு விபந்து நடந்த பொழுது சுந்தரவல்லிக்குத் துணையாய் சென்னைக்குச் சென்றிருந்த ராதா கிருஷ்ணன் மதுரைக்குத் திரும்பிய பின்னர், நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மகளிடம் பகிர்ந்து இருந்தார்.
நிலாவின் பெயரோ, முகமோ, அவள் கிருபாவிடம் கொண்டிருந்த காதலோ என எதையும் அறிய மாட்டாள் மது. ஆனால் அவனைக் காப்பாற்றுவதற்காக உயிரை விடும் அளவிற்கு, அவர்களுக்கு இடையேயான உறவு இறுக்கமாய் இருந்தது என்பதை மட்டும் உணர்ந்து இருந்தாள்.
"ஸீ இஸ் நோ மோர்!" என்ற சொற்கள் போதுமானதாய் இருந்தது, அக்கண்ணாடிக்கு உரிமையானவள் நிலா என கணிப்பதற்கு.
வருத்தப் பெருமூச்சு ஒன்று அவளிடம் இருந்து வெளிவந்தது. இரவு உணவு தயாரிப்பில் வல்லி மற்றும் சித்ராவிற்கு உதவியாய் இருந்தவள், கிருபாவை மட்டும் பாராது அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
மறுநாளைய விடியல் இதுவரை இல்லாத வாடிக்கையாய், வேறு விதமாய் புலர்ந்தது.
வழக்கமாய் அவனை எழுப்பும், "அம்மாச்சி எழுந்திருச்சிட்டீங்களா?" என்ற மதுவின் அலாரக் குரல் அன்று கேட்கவில்லை. அவளின் கை மணத்தில் தயாராகும் இஞ்சி கலந்து டீயும் வந்து சேரவில்லை.
சித்ராவின் அழைப்பில் கீழ் இறங்கி வந்தவனின் கையில், தேநீரைத் தந்தார் வல்லி.
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் அன்றைய முக்கிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த சேது, "குட் மார்னிங் மை பாய்."
"குட் மார்னிங் டாட். டீ.?"
"நான் குடிச்சிட்டேன்பா."
சின்னதாய்ச் சிரித்தவன், "மாம், இன்னைக்கு டீ நீங்க போட்டீங்களா.?"
"ஏண்டா ஒன்னரை மாசத்துல அம்மாவோட டேஸ்ட்டையே மறந்துட்டியா?"
"நீங்க போட்டீங்களானு கரெக்டா தானே கேட்டேன்? மறந்திருந்தா, எப்படி கேட்டிருப்பேன்! ஸ்மெல்லயே தெரியிது."
"நல்லா சமாளி!"
சிரித்துவிட்டு ஒரு மிடறு அருந்தியவன் தனது மடிக்கணினிக்கு சார்ஜரைப் போட்டுவிட்டு நிமிர, மேஜையில் வெள்ளைக் காகிதம் ஒன்றைத் தாங்கி நின்றது, கண்ணாடியை வைக்கும் டப்பா.
"ஸ்பெக்ஸை சரி பண்ணி வாங்கிட்டு வந்துட்டேன், மிஸ்டர் கிருபா. ஒன்ஸ் அகைன் ஸாரி!" என எழுதப்பட்டு இருந்தது.
வந்த புதிதில் சில முறை இருவரும் எழுதி எண்ணங்களைப் பரிமாறியதால், மதுவின் கையெழுத்தைக் கண்ட மாத்திரையில் அறிந்து கொண்டான்.
அவசரமாய் பெட்டியைத் திறந்து பார்க்க, அதே பழைய கண்ணாடிச் சட்டகத்தில், வில்லைகள் மட்டும் புதியதாய் மாற்றப்பட்டு இருந்தது. இதுவரை நிலாவின் நினைவை மட்டும் சுமந்திருந்த அக்கண்ணாடி, தற்போது மதுவினது மென்மனதின் சாட்சியாய்க் காட்சியளித்தது.
சட்டென்று கண்கள் கலங்கிப் போனது, கிருபாவிற்கு.
'லூசா இந்தப் பொண்ணு. அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருந்தேனே? நைட்டோட நைட்டா சரி பண்ணணும்னு என்ன அவசியம்.?' எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, வெளியே வந்தான்.
"பாட்டி, மது வந்தாங்களா.?" என்று சுந்தரவல்லியிடம் வினவ, "ஆறு மணிப் போல வந்துட்டுப் போனா. ஏன் கண்ணா.?"
"இந்நேரத்துக்கு ரெண்டு மூனு தடவையாவது இங்க எட்டிப் பார்த்திருப்பாங்களே.? இன்னைக்கு என்ன காணோம்.?"
"செண்டர் இருக்கிற கட்டிடத்தோட ஓனரைப் பார்க்கப் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. அங்க போறதுக்காக கிளம்புறானு நினைக்கிறேன்! டிஃபனுக்கு என்ன சாப்பிடுற கண்ணா?" என வினவிட, "எதுனாலும் ஓகே தான் பாட்டி!" என்று விட்டு வந்தான்.
மகனைப் பார்த்திருந்த சேது, "கிருபா இங்க வா."
அருகே வந்தவன், "என்ன டாட்.?"
"உட்காருடா. என்ன அவசரம், நின்னுக்கிட்டே கேட்கிற?"
"மிஸ் மதுவைப் பார்க்கணும் ப்பா."
"எதுக்கு?"
"உடைஞ்ச ஸ்பெக்ஸை சரி பண்ணிக் கொடுத்திருக்காங்க."
"தேங்க்ஸ் சொல்லணுமா?"
"இல்ல, எதுக்கு இதைச் செஞ்சாங்கனு கேட்கணும்."
"நம்மளால ஒரு தவறு நடக்கும் போது, அதைச் சரி பண்ண நினைப்போம் தான? அந்த பொண்ணு கரெக்டா தானே செஞ்சிருக்கா?"
"பட் டாட்!"
"என்னடா?"
"அதுக்கு அவசியமே இல்ல. மது தப்பு செஞ்சதா நான் நினைக்கல. அப்புறம் எதுக்கு அதுக்கான பொறுப்பை ஏத்துக்கணும்?"
சின்னதாய்ச் சிரித்த சேது, "ஸ்பெக்ஸ் யாரோடது?"
"கு.." என வாயைத் திறந்தவன், "பேசக் கூடாதுனு சொல்லி இருக்கீங்களே டாட்?"
"இப்பப் பேசலாம். சொல்லு!"
"குட்டியோடது."
"அவ, உனக்கு யாரு?"
அவன் பதில் சொல்லத் தோன்றாது தந்தையைப் பார்க்க, "நேத்து, நீ மதுக்கிட்ட ஸ்பெக்ஸ் உன் ஃப்ரெண்டோடதுனு சொன்ன, ஞாபகம் இருக்கா.?"
கிருபா திகைப்புடன் நோக்கினான்.
"நிலா வாழ்ந்த வீட்டை வாங்கணும்னு ஆசைப்பட்ட இல்ல? இப்ப வாங்கு. லோன் எல்லாம் வேண்டாம். நானே பணம் தர்றேன்!" என்றுவிட்டு அவர் எழுந்து செல்ல, தடதடக்கும் மனதுடன் கையில் இருந்த கண்ணாடி டப்பாவைப் பார்த்தான்.
சென்னையில் இருந்த மட்டும் 'குட்டியை லவ் பண்ணுறேன்.' எனத் தயங்காது மந்திரம் போல் ஒவ்வொரு முறையும் உரைத்தவனின் இதழ்கள், அந்தக் காதல் உண்மையானது என்றால் அனிச்சையாய், 'என் லவ்வரோடது!' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?
இதைத்தான் சொல்லாமல் சொல்லிச் சென்றிருந்தார் சேது.
அவனின் சிந்தனை, 'அப்ப நீ நிலாவை லவ் பண்ணலயா கிருபா.?' என வினா எழுப்பிட, மனமோ உறுதியான விடையின்றி மௌனம் சாதித்தது.
உண்மையில் அவளின் மீது இருந்தது என்ன உணர்வென்று அவனால் இனம் காண இயலவில்லை. விபரம் தெரியா வயதில் இருந்தே உடன் வளர்ந்தவள் என்பதால், கிருபாவின் வாழ்வில் நிலாவின் பங்கு அதிகம் தான். ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், வாழ்வின் முழுமைக்குமே அது தொடர்ந்திருக்கலாம்.
காதலாக இல்லை என்றாலும் நட்பாய் நிச்சயம் அவளின் கரம் பற்றி அழைத்துச் சென்றிருப்பான்.
'நேசித்து இருக்கிறாள்!' என அறிந்த பின்னர் அவளின் இல்லாமை தந்த வலியால், 'தன்னை காப்பாற்றி இருக்கிறாளே?' என்பதால் உண்டான அதீத நன்றி உணர்வை, காதலாய் உருவகப்படுத்தி விட்டது ஆடவனின் மனம்.
நிலாவைத் தற்போதும் உள்ளும் புறமுமாகத் தான் நேசிக்கிறான். ஆனால் அது தோழி என்ற நிலையில். நட்பிற்கு உட்பட்ட வரையறையில்! என்பதை இந்நொடி தான் உணர்ந்து கொண்டான்.
உண்மையை புரிந்து கொண்டதும், மனதில் இருந்த பாரம் சட்டென்று இறங்கியது போலான தோற்றம். மிக மிக எளிதாய் சுவாசிப்பதைப் போல் தோன்றியது. இதழ்கள் புன்னகைக்க தயங்கவில்லை. தன்னையும் அறியாமல், காரணமே இன்றி சிரித்துக் கொண்டான்.
இந்நொடியில்.. தான், தானாய் இருப்பதாய் உணர்ந்தான்.
உடைந்த கண்ணாடியைச் சரி செய்து தந்ததற்காக மதுவிற்கு நன்றி உரைப்பதற்காக செல்ல, பூட்டிய கதவே அவனை வர வேற்றது.
வல்லி, அவள் வேலையாய் வெளியில் செல்வதைப் பற்றி உரைத்தது நினைவிற்கு வர, மீண்டும் வீட்டிற்கே திரும்பியவனை, "சார், கொரியர்!" என்ற குரல் நிற்க வைத்தது.
"யாருக்கு?"
"மதுபாரதி."
"வெளிய போயிருக்காங்க. கொடுங்க, நான் கொடுத்திடுறேன்!"
"நீங்க யாரு?"
"ரிலேசன் தான்!" என்றவன் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டான்.
உள்ளே இருப்பது வெளியே தெரியும் படியான கண்ணாடி பையில் இட்டு, அனுப்பப்பட்டு இருந்தது அது.
ஓலைச் சுவடிகளில் எழுதுவது போலான தோற்றம் கொண்ட அட்டைப் படத்தைத் தாங்கிய புத்தகம். பெயர், இன்பம். கீழே சிறிய எழுத்தில் நாலடி தொகுதி மூன்று எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நாளிதழ்களில் வாசித்த குறுங்கதைகள் நினைவிற்கு வர, வேகமாய் உள்ளே சென்றான்.
"பாட்டி."
பெயரனின் குரலில் கூடத்திற்கு வந்த வல்லி, "என்ன கண்ணா.?"
"மதுக்கு, புக் கொரியர் வந்திருக்கு!* என்று நீட்டிட, "இந்த புஸ்தகமா? அதுக்குள்ள வந்திடுச்சு. இவ என்கிட்ட சொல்லவே இல்ல.?" என வாங்கிப் பார்த்தவரின் முகம் முழுவதும் பூரிப்பு.
"இதுல என்ன இருக்கு பாட்டி?"
"பேப்பர்ல கதை படிச்ச இல்ல? அதோட கடைசி முப்பது பாட்டுக்கான கதை."
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"மது ஏற்கனவே சொல்லி இருந்தா."
"அவங்க தான் ஆர்டர் போட்டாங்களா.?"
"இல்ல." எனும் பொழுதே, "அத்தை மசாலா பொடி காலியாகிடுச்சு. அவரைக் கடையில இருந்து வாங்கிட்டு வரச் சொல்லவா.? இல்லேனா குழம்புக்கு மட்டும் தேங்காயோட அரைச்சுக்கலாமா?என்றபடி வந்தார் சித்ரா.
"அதெல்லாம் வேணாம். உள்ள இருக்கு பாரு. வா, எடுத்துத் தர்றேன்!" என வல்லி உடன் செல்ல, "பாட்டி, எனக்கு இதை வாசிக்கணுமே.?" என்றான் கிருபா.
"பிரிச்சுப் படி!"
"மது கேட்பாங்களே?"
"நான் சொல்லிக்கிறேன்!" என உரைத்திட, ஒருவித ஆர்வத்துடன் அதனைப் பிரித்தான்.
நாலடியாரில் இன்பத்துப் பாலில் இன்ப துன்பவியல், இன்பவியல் என இரு இயல்கள்.
முதலாவதில் பொதுமகளிர் என்ற பெயர் கொண்ட விலை மாதுக்களைப் பற்றியும், இரண்டாம் இயலில் கற்புடை மகளிர், காம நுதலியல் எனப் பெண்களின் உள்ளார்ந்த உணர்வைப் பற்றியும் பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
நான்கு வரிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறுங்கதை. இன்பம் சொட்டிட, காதல் கதைகள்.
ஒவ்வொன்றாய் வாசிக்கத் தொடங்கினான் கிருபா. நா 391ம் பாடல்.
'கூடி முடித்து காமம் வடிந்த நிலையில், அருகே படுத்திருந்த மனைவியைப் பார்த்துக் கேலியாய் சிரித்தான் கணவன்.
அவள் திரும்பிப் பார்த்து, "எதுக்குச் சிரிக்கிறீங்க?"
"நான் கூட இல்லாம, நீ எப்படி எல்லாம் மாறிப் போறிட்ட? பாரு, ப்ளவுஸ் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு லூசாகிடுச்சு. அவ்வளவு மிஸ் பண்ணியா என்னை? இதைத்தான் பசலைனு சொல்லுறாங்களோ.?"
ஆடவனின் கூற்று உண்மைதான் என்ற போதும் அதை ஏற்கத் துணியாத பெண்ணானவள், "உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? பெட்ல வேலை முடிஞ்சிடுச்சு இல்ல, அப்ப இப்படிப் பேசத்தான் செய்வீங்க. இனி, என் பக்கத்துல வராதீங்க!" என்று பொய்யாய் சினம் கொண்டு, அறையில் சிதறிக் கிடந்த உடைகளை எடுத்து அணியத் தொடங்கினாள்.
"ஏது? பெட்ல வேலை முடிஞ்சிடுச்சா? யார் சொன்னது அப்படி?" எனக் கைப்பற்றி இழுத்தவன்,
"இதயம் திறந்து கேட்கிறேன், என்னதான் தருவாய் பார்க்கிறேன்.
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன், தவித்தேன்.." என்று பாடிய படி வளர்த்த கற்பனைகள் யாவையும் செயல்படுத்த முனைந்திட, அதற்குச் சம்மதிக்காமல் முரண்டு பிடித்தாள் அவள்.
ஊடல் இல்லாது போனால், கூடலில் ஏது அழகு? ஊடல் செய்து அவள் சுவையைத் தூண்டிட, கூடலில் ருசிக்கத் தொடங்கினான் துணைவன்."
கதை முடிய, மனக் கண்ணில் விரிந்த காட்சியும் மறைந்தது.
வாசிக்க வாசிக்க அவை கண்முன்னே நிழலாடியது தான், பெரும் சோகம். இங்குச் சொல்லப்படுவதைக் கடந்து சொல்லாதவைகள் தான் ஆர்வத்தைத் தூண்டி, மனித உணர்வுகளைச் சோதித்துப் பார்க்கும்.
அந்த சோதனையில் காமம் உச்சம் பெற்றது என்றால், அது மிகை இல்லை.
கதையின் இறுதி வரிகள் கிருபாவைச் சோதித்திட, மேலும் வாசிக்காது புத்தகத்தை மூடி வைத்தான்.
இன்னும் ஒன்பது கதைகள் இருந்தன, காம நுதலியலில். அவற்றை துணைவியுடன் இணைந்து படிக்க வேண்டும் என ஏதோ ஒரு ஆவல். அதனால் அப்படியே வாசிப்பை நிறுத்தி வைத்தான்.
மதிய உணவு முடிந்த பின்னர், "என்ன கண்ணா புஸ்தகத்தைப் படிச்சிட்டியா?" என்றார் வல்லி.
"இன்னும் கொஞ்சம் இருக்கு. பாட்டி எனக்கு இந்த புக் வேணுமே.?"
"இது மட்டும் போதுமா? பேப்பர்ல வாசிச்சதும் வேணுமா?"
"மொத்தமா கிடைச்சா நல்லது தான். அவங்க எழுத்தை வாசிக்கும் போது ஒருமாதிரி ரிலாக்ஸா ஃபீல் ஆகுது."
சின்னதாய்ச் சிரித்தவர், "மது வச்சிருப்பா. கேட்டு வாங்கிக்கோ."
"அது அவங்க வாசிக்கிறதுக்கு வச்சிருப்பாங்க பாட்டி. நான் எப்படிக் கேட்க முடியும்? எனக்குத் தனியா வேணும்."
"வீட்டுல நிறைய புக் இருக்கு. நானே பார்த்திருக்கேன். ஆனா, இது இப்பதான் வந்திருக்கு. செக் பண்ண அனுப்பி இருப்பாங்கனு நினைக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தா, பார்த்து சொல்லிட்டோம்னா, அதைச் சரி செஞ்சு அச்சடிச்சிடுவாங்க."
புரியாமல் பார்த்தவன், "அப்ப இது சாம்பிள் புக்கா?"
"ஆமா."
"மது கரெக்ஷன் ஒர்க் பார்த்து கொடுக்குறாங்களா என்ன?"
"சரி தப்பு எழுதுன ஆளுக்குத்தான தெரியும்? அதான் பார்த்துத் தர்றா."
"யூ மீன், இதோட ஆத்தர் மதுவா?"
"ஆத்தர்னா?"
"புக் எழுதுனவங்க!"
"ஆமா, நம்ம மதுதான். மூனு வருசமா எழுதுறா. நான் வளர்த்த பிள்ளையோட எழுத்து. அதான், அவ்வளவு பேப்பரையும் சேர்த்து வச்சிருக்கேன் நான்." என்றிட, கையில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை வேகமாய் புரட்டினான் கிருபா.
என்னுரையாய் மதுபாரதியைப் பற்றி அவன் அறிந்திடாத மற்றொரு பக்கம் இருந்தது அதில்.
பதினேழு வயதில் இரு வரிகளில் கவிதை எழுதத் தொடங்கி, அது பின்னர் மெல்ல வளர்ந்து, சிறுகதையை அடைந்து, சில பரிசுகளையும் அவளிற்குப் பெற்றுத் தந்துள்ளது.
உள்ளூர் செய்தித்தாள் ஒன்றின் உரிமையாளரின் அறிமுகம் கிட்டிட, அவர் தந்த வாய்ப்பு தான் நாலடியார் பாடல்களிற்குக் கதை எழுதுவது.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பர். ஏனோ இரண்டடி கொண்ட திருக்குறளின் அளவிற்கு நாலடியார் பெயர் பெறவில்லை. இதுவும் குறளைப் போலவே அறம், பொருள், இன்பம் என முப்பால்களை உடையது.
நானூறு பாடல்கள் மொத்தம். மூன்று ஆண்டுகளாய் அதனோடு பயணித்து, தற்போது முழுமையாய் முடித்து இருந்தாள் மது. அவற்றை முழுமையாகவும் ஒவ்வொரு பாலிற்குத் தனியாகவும் புத்தகம் பதிப்பிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
"சில விஷயங்களை நம்ம பிடித்தத்துக்காக செய்வோம்ல, அது மாதிரி ஒன்னு!" என்று அவள் உரைத்ததின் பின்னணி யாதென தற்போது புரிந்து கொண்டான்.
அன்றைய நாளில் நடந்த சில உணர்தலும், தெரிய வந்த ரகசியமும் அவனை வேறு ஒருவனாய் மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
நிலாவின் மீதான நேசமே வாழ்வின் முழுமைக்கும் போதும் என எண்ணியிருக்க, அந்த நேசம் காதலில் சேராது என்று புத்தியில் உரைக்கும் படியாய் தெளிவு படுத்தி இருந்தார் சேது.
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் விளையாடி, அம்மாச்சியிடம் செல்ல சண்டைகள் இட்டு, தனக்கு ஏற்பட்ட சிறு காயத்திற்கே குழந்தை போல் கண் கலங்கி, பெருமாள் கோவில் பொங்கலிற்காக சுற்றத்தை மறந்து ஓடிச் செல்லும் மதுவிற்குள், இப்படிப் பண்பட்ட ஒரு முகம் என அவன் எதிர்பார்த்திருக்க வில்லை.
'ராம' என்பதன் முழுமை ராதா கிருஷ்ணனின் மகள் மதுபாரதி என அறிந்து கொண்டான்.
அவளின் எழுத்தில் வாசித்த வரிகள் யாவும் சிந்தனையில் சுழன்று கொண்டே இருக்க, "பாட்டி, உங்கக்கிட்ட ஒன்னு கேட்கவா.?"
"கேளு கண்ணா.?"
"இந்த லவ்னா என்ன? அது எப்படி ஃபீல் ஆகும்?"
அவர் சிரித்து, "என்ன இப்படிக் கேட்கிற?"
"உங்களுக்கு குட்டியைப் பத்தித் தெரியும் தான பாட்டி?"
"சேது சொல்லி இருக்கான்."
"அப்ப, அப்பா என்னை இங்க அனுப்பின காரணமும் உங்களுக்கு தெரியும்."
"ம்ம்."
"நான் அவளை லவ் பண்ணுறதா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது லவ் இல்லனு இப்ப தோணுது. அப்படினா லவ்னா என்ன? நீங்க லவ்வுக்காகத் தான, மேரேஜ் பண்ணிக்காமலேயே இருந்தீங்க.?"
"அதெல்லாம் தெரியாது கண்ணா. எனக்குத் தெரிஞ்ச ஒன்னே ஒன்னு, என் மாமா மேல ஆசை இருந்துச்சு. ரொம்பப் பிடிக்கும் அவங்களை. நல்ல குணம். எப்படி இருந்தாலும் சரி, என் கண்ணுக்கு ரொம்ப அழகாத்தான் தெரிவாங்க. அவங்க சிரிச்சா, மனசு சந்தோஷப்படும். சங்கடப்பட்டா உசுரே போயிடும்.
ஆனா, அவங்களுக்கு என் அக்கா மேல பிரியம். பெரியவங்க பேசி கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா மாமாவோட சந்தோஷத்தைப் பார்த்து, எனக்கும் சந்தோஷம்.
என்ன, அந்த வாழ்க்கை தான் அவங்களுக்குக் கொடுத்து வைக்கல. சேதுவைப் பெத்துட்டு, எங்கக்கா போய் சேர்ந்துட்டா. கைப்பிள்ளைய வச்சுக்கிட்டுத் தனியா என்ன செய்யிவாங்க பாவம்?
அதுனால, நான் அவங்களுக்கு உதவியா கூட வந்து இருந்தேன். வீட்டுல என்னையே அவங்களுக்குக் கட்டி வைக்க பேசுனாங்க. ஆனா மாமா தான் மறுத்துட்டாரு. இதுல ஒரு விஷயம் இருக்கு, நான் அவருமேல ஆசைப்பட்டது அவங்களுக்கு நல்லாவே தெரியும்.
'என் தேவைக்காகவும் சூழ்நிலைக்காகவும் கட்டிக்கிட்டு, உன்னோட எதிர்பார்ப்பில்லாத உண்மையான அன்புக்கு நான் துரோகம் செய்ய விரும்பல'னு சொல்லிட்டாரு. இப்படிப்பட்ட மனுசனை எப்படி மறக்க முடியும்?
உன்னோட அப்பன் நடக்க ஆரம்பிக்கவும், என்னை என்னோட வீட்டுக்கு அனுப்பிட்டாரு. அப்பப்ப போயி பார்த்துட்டு வர ஆரம்பிச்சேன்.
இப்படியே விட்டா, நான் கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன்னு, வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. போன இடத்துல அவரால பிள்ளையை தனியா பார்த்துக்க முடியல. அதுனால, எங்க அம்மா அப்பாக்கிட்ட கொண்டு வந்து விட்டாரு.
அப்புறம் என்ன, நான்தான் சேதுவை வளர்த்தேன். ஓரளவுக்குச் சம்பாதிச்சு சென்னையில் இருக்க பழகிக்கிட்டதும், இனியாவது உன்னோட வாழ்க்கையைப் பாருனு பிள்ளையைக் கூட்டிட்டுப் போயிட்டாரு.
முயற்சி செஞ்சேன், என்னால தான் அவங்க நினைப்புல இருந்து வெளிய வரல முடியல. அம்மா அப்பாவோட கடைசி காலத்துல அவங்களை நல்ல முறையில பார்த்து தூக்கிப் போட்டுட்டு, அப்படியே இருந்துட்டேன்.
சேதுவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகுற வரைக்கும், என்னை அவரு சென்னைக்கு வரவே விடல. ஆனா மணமேடையில அம்மா ஸ்தானத்துல நிக்க வச்சு, பாத பூஜை செய்ய வச்சாரு. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே மாமா இறந்துட்டாங்க. என் மடியில தான் உசுரு போச்சு. இதுக்கு மேல வேற என்ன வேணும்?
சேர்ந்து வாழணும்னு என்ன கட்டாயம்? மனசுல நினைச்சிருந்தா போதாதா.? நான் அவங்களை நினைச்சுக்கிட்டேன். அவங்க மனசுல, என்மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தாங்க.
மாமா கடைசியா ஒரு வார்த்தை சொன்னாங்க.. என் பிள்ளைக்கு மட்டும் இல்ல, தடுமாறினப்ப எல்லாம் துணைக்கு வந்து தாங்கிப் பிடிச்ச நீ, எனக்கும் அம்மா தான்னு. இந்த ஜென்மத்துக்கு, இதைவிட பெரிய பாக்கியம் வேற என்ன கிடைச்சிடப் போகுது? போதும் கண்ணா, இந்த சந்தோஷம்!"
இமைக்க மறந்து மூத்தவரையே பார்த்திருந்தான் கிருபா.
"என்னய்யா.?" எனப் புன்னகைத்திட, அவரின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.
காதல் என்பது, நேசிப்பவரின் மகிழ்வைக் கண்டு நாமும் மகிழ்வதாகும் எந்நிலையிலும், அவரின் நலத்தை மட்டுமே வேண்டுவதாகும். அவன் புரிந்து கொண்டது இதைத்தான்.
மறுநாள் மதியம் சென்னைக்குக் கிளம்புவதாய் முடிவு செய்து, "என்ன கிருபா, வர்றியா எங்களோட?" என்றார் தந்தையானவர்.
மெலிதாய் சிரித்தவன், "ஆறு மாசம்னு சொன்னீங்க டாட், அதுக்குள்ள கூப்பிடுறீங்க?"
"உன்னோட குழப்பத்தைத் தெளிய வைக்க ஆறு மாசம் ஆகும்னு நினைச்சேன். ஆனா ஒன்றரை மாசத்துலயே வேலை முடிஞ்சிடுச்சு."
"நான் இங்கேயே கொஞ்ச நாளைக்கு இருக்கேன் டாட்."
சித்ரா குழப்பத்துடன், "ஏன் கிருபா.?"
"காரணம் தெரியல. பட், இப்ப கிளம்ப வேணாம்னு தோணுது."
அவர் சேதுவைப் பார்க்க, "இருந்துட்டு வரட்டுமே, அதுனால என்ன? இது அவனோட லைஃப்."
"ஆனா.." எனத் தாயுள்ளம் காரணம் இன்றி தவிக்க, "நம்ம பிள்ளைக்கு மதுரையிலயே பொண்ணு பார்க்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்லுற.?" என்று வினவி, அந்த இறுக்கமான சூழலை மாற்றினார் குடும்பத் தலைவர்.
"அவன் விருப்பம் தான். அவனுக்குச் சரினா, எனக்கு எந்த அப்செக்ஷனும் இல்ல."
"என்னடா மகனே.?" என அவர் கிருபாவைப் பார்க்க, "ஓகே டாட். பாருங்க. மேரேஜ் பண்ணிக்கிறேன்."
இருவரும் வியப்புடன், "நிஜமாவாடா சொல்லுற.?"
"எஸ். ஏன் இப்படிக் கேட்கிறீங்க?"
"இல்ல திடீர்னு இப்படிச் சொல்லுறியே? அதான்."
"உங்களை இதுக்கு மேல வருத்தப்பட வைக்க விருப்பம் இல்லப்பா எனக்கு."
"காட் பிளஸ் யூ, மை பாய்! சரி, அப்ப பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாம்." என்று விட்டுச் சேது நகர, மகனின் கன்னத்தை வருடிக் கொடுத்தார் சித்ரா.
வெளியே பேச்சுச் சத்தம். மதுவின் குரலில் செவியில் மோத, வாயிலிற்கு விரைந்தான் கிருபா.
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தாள்.
"மது.?"
அவனின் அழைப்பில் திரும்பியவள், "என்ன மிஸ்டர் கிருபா, ஃபேஷ்ல பல்ப் எரியிது. ஸ்பெக்ஸை சரி பண்ணி கொடுத்ததாலயா? சந்தோஷமா உங்களுக்கு?"
"ம்ம்.." எனத் தலை அசைத்தவன், "பட், சந்தோஷத்துக்கான காரணம் அது இல்ல."
"அப்புறம்.?"
சின்னதாய்ச் சிரித்தவன், "உங்களுக்கு ஒரு கொரியர் வந்துச்சு!" எனப் புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தான்.
"ஹோ.. வந்துடுச்சா.?" என்று கையில் வாங்கியவள் கேள்வியாய் பார்த்திட, "ஸாரி, பிரிச்சுப் படிச்சிட்டேன்."
"அதுனால என்ன? புக் இருக்கிறதே வாசிக்கிறதுக்காகத் தான? அதுதான், நாம அந்த புத்தகத்துக்குக் கொடுக்கிற மரியாதை!"
தலை அசைத்தவன், "எனக்கு ஒரு காபி வேணுமே.?"
அவள் புரியாமல் பார்த்திட, "கங்கிராட்ஸ் எழுத்தாளரே, ரொம்ப பெரிய வேலை செஞ்சிருக்கீங்க!"
"அட நீங்க வேற! இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல!"
"உங்களுக்கு எப்படியோ, எனக்கு பெரிய விஷயம் தான்."
மது புன்னகைக்க, "போன வேலை என்னாச்சு? பில்டிங்கோட ஓனர் என்ன சொன்னாரு?"
"ரெண்டு மாசம் டைம் கொடுத்திருக்காரு. ஒன்னு, பணத்தை ரெடி பண்ணி நீங்களே வாங்கிக்கோங்க. இல்லேனா காலி பண்ணிக் கொடுங்கனு."
"ஹோ.. என்ன செய்யப் போறீங்க?"
"தெரியல. அப்பா, என்னோட ஐடியாக்கு ஒத்துக்க மாட்டிறாரு."
"ம்ம்.." எனச் சில நொடிகள் சிந்தித்தவன், "நான் ஒரு ஐடியா சொல்லவா?"
"என்ன மிஸ்டர் கிருபா?"
"அந்த பில்டிங்கை எங்கப்பாவை வாங்க வச்சிடுவோம், என்ன?"
புரியாமல் பார்த்தவள், "வாட்.?"
"நான் மதுரைப் பொண்ணைக் கட்டுனா, இங்க பிராப்பர்டி வாங்கலாம்னு சொன்னாரு டாட். இப்பதான் ஓகே சொல்லிட்டு வந்தேன்."
அவனை இன்னதென்று புரியாத உணர்வுடன் நோக்கியவள், "என்ன சொல்லுறீங்க.?"
கிருபா சிரித்து, "ப்ராப்ளம் சால்வ் ஆகிடுச்சு, ஓகே. ஹேப்பியா இருங்க."
"ஆனா.." என அவள் குழப்பத்தில் தவிக்க, "தேங்க்ஸ் மது."
"எதுக்கு?"
"இங்க வந்தப்ப, நான் வேறமாதிரி இருந்தேன். ஆனா இப்ப, என்னை நானே தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி ஒரு ஃபீல். அதுல உங்க பங்கு அதிகம். அதுக்குத்தான் இந்த தேங்க்ஸ்."
"எனக்கு ஒன்னும் புரியல போங்க!"
"காலையில இருந்து அலைஞ்சிருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க!" என்றவன் அங்கிருந்து நகர, மதுவும் புத்தகத்துடன் வீட்டிற்குள் சென்றாள்.
ஏழு மாதங்களிற்குப் பின்னர்..
சுந்தரவல்லியின் இல்லத்தில் இருக்கும் மாடி அறை..
படுக்கையில் கவிழ்ந்து தலையை கீழே தொங்க போட்டபடி படுத்திருந்தான் கிருபா. கார்த்திகை மாதத்தின் ஊதல் காற்று சாளரத்தின் வழியே உள்ளே நுழைந்து தேகத்தைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
"ஹேய் எவ்வளவு நேரம்?" என்றிட, "ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்.." என நேரச் சலுகை கேட்டாள் அவனின் துணைவி.
முன்தினம் தான் திருமணம் முடிந்திருந்தது. தலை இரவு அலுப்பின் காரணமாக ஓய்வில் கழிந்திருக்க, மறுநாளைய இரவில் காதல் கதை பேசலாம் என நினைத்தான் ஆடவன்.
ஆனால் சரிபாதியாய் அமைந்தவளோ படுக்கையின் அருகே கீழே அமர்ந்து மடிக்கணினியைத் திறந்து வைத்து, கடமையைச் செய்து கொண்டிருந்தாள்.
பொறுமை இழந்தவன் ஒருமுறை உருண்டு வர, அவனின் இதழ்கள் பாவையின் காதோரம் உரசியது.
"என்ன கிருபா?" என விலகிட, "இதெல்லாம் நல்லாவா இருக்கு. நாளைக்குப் பார்க்கக் கூடாதா வேலையை?"
"நீங்கதான, உன்னோட ரைட்டிங்கை விட்டுடாதனு பிடிவாதமா என்னை எழுத வச்சீங்க. இப்ப என்னவாம்? ஒரு ஃப்ளோவா வரும் போதே, எழுதினா தானே ஆச்சு?"
"அதெல்லாம் நீ எப்ப எழுத உட்கார்ந்தாலும் ஃப்ளோ கரெக்டா வரும். பட், இந்த நைட் திரும்ப கிடைக்காது. பாரு அங்க!" என ஜன்னலின் வழியே முழு நிலவைக் காட்டினான்.
வெண் கதிர்களைப் பரப்பி, இரவிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தாள் வான்தாரகை.
மதுவின் கண்கள் கணவன் காட்டிய நிலவில் ரசனையுடன் நிலைக்க, அவனோ கள்ளூறும் அவளின் கழுத்தில் முத்தம் பதித்து ருசி பார்த்தான்.
"அச்சோ!" எனப் பதறித் திரும்பியவளின் இதழ்களில் அதரங்களைச் சேர்த்தவன், தனது கைகளைக் கீழிறக்கி அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான்.
இருவருக்கும் நிகழ்ந்தது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
பாவையின் விருப்பப்படி பயிற்சி நிலையம் இயங்கி வந்த கட்டிடத்தை தந்தையின் பணத்தில் விலைக்கு வாங்கிய கிருபா, அதன் மீது இருந்த இல்லத்தோடு சேர்த்து அவளின் பொறுப்பிலேயே விட்டுவிட்டான்.
சென்னையில் நிலா வாழ்ந்த வீடு, சித்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக வாங்கிய கடனை, அசலோடு சேர்த்து மாதமாதம் கட்டி வருகிறான்.
"மதுவுக்கும் அவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. பேசாம அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்தை முடிச்சா என்ன?" என்று சுந்தரவல்லி தான், முதலில் இவர்களின் திருமணப் பேச்சைத் தொடங்கினார்.
மாதக் கணக்கில் அது பேச்சு வார்த்தையாகவே நீடித்து, மூன்று மாதங்களிற்கு முன்னர் தான் நிச்சயம் செய்தனர்.
அதன் பின்பான தினங்கள் எல்லாம், இனிமையை சேர்க்கும் பெட்டகமாகின நிச்சயத்த ஜோடிக்கு.
சேதுவும் சித்ராவும் மகனை பார்ப்பதற்காக மதுரைக்கு வந்த பொழுதே, மிஸ் மது 'மது'வாகி இருந்தாள் அவனிற்கு.
அடுத்த சில வாரங்களில் அவளுமே மிஸ்டரைக் கைவிட்டு, 'கிருபா' என அழைக்கத் தொடங்கி விட்டாள். நல்ல புரிதல், இணைதலின் முதல் படி அல்லவா? அப்பொழுதே அவர்கள் அதை அடைந்திருந்தனர்.
அறமும் பொருளும் ஒவ்வொரு நிகழ்விலும் மாறி மாறி அவர்களை வழிநடந்த, தற்போது இன்பத்தில் இணைந்திருந்தனர்.
நாலடியாரை முடித்த பின்னர், கிருபாவின் வற்புறுத்தலின் பெயரில், விருப்
பத்துடனே அகநானூறு பாடல்களுக்கு கதை எழுதத் துவங்கி இருந்தாள் மது.
'இன்பம் ஒரு கோடி!' என அவள் மடிக்கணினியில் தட்டச்சு செய்து முடிந்திருக்க, அதனை செயல் முறையில் சோதனைச் செய்திட பாவையைத் தன்வசமாக்கி இருந்தான் கிருபாகரன்.
முற்றும்
மாலையில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருந்தனர். மதுவின் தயாரிப்பில் பால் கொழுக்கட்டை நான்கைந்து சிறிய கிண்ணங்களில் பரிமாறப்பட்டு இருக்க.. அத்தோடு வாழை, உருளை, அப்பளம், வெங்காயம் என பஜ்ஜி வகைகளும் சூடாய் தட்டில் காத்திருந்தது.
வல்லி சேதுவை வளர்த்த கதையைச் சொல்லி நேரத்தை நகர்த்த, டீ அருந்திய டம்ளர்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் பாவை.
"மிஸ்டர் கிருபா, எங்க நீங்க குடிச்ச டம்ளரைக் காணோம்.?" என்றிட, தந்தையின் அருகே அமர்ந்திருந்தவன், "ஸாரி மிஸ் மது. வொர்க் பண்ணிக்கிட்டு இருந்ததால, லேப்டாப் டேபிள்ல அப்படியே வச்சிட்டேன். வெயிட், வந்து எடுத்துத் தர்றேன்."
"இல்ல, நானே எடுத்துக்கிறேன். நீங்க பேசுங்க!" என அவனது கணினி மேஜைக்குச் சென்றவள் டம்ளரை எடுத்துவிட்டுத் திரும்ப, துப்பட்டாவில் இருந்த பாசி சரம் கோர்த்து, அங்கிருந்த கண்ணாடி கீழே விழுந்தது. உடையவில்லை, எனினும் சிறியதாய் சேதாரம்.
"மது என்ன சத்தம்.?" என்று வல்லி குரல் கொடுக்க, "மிஸ்டர் கிருபாவோட கிளாஸ் கீழ விழுந்திடுச்சு அம்மாச்சி!" எனப் பதில் தந்தாள்.
கேட்ட ஒலி தேநீர் டம்ளருக்கானதாய் இல்லாது மாறுபட்டதாய் செவியில் விழ, எழுந்து சென்று பார்த்தான்.
மதுவின் கரத்தில் மூக்குக் கண்ணாடி. அவன் சரிசெய்து வைத்திருந்த, நிலாவின் உடையது. ஒரு பக்க கண்ணாடி வில்லை மட்டும் வெளியே வந்து அவளின் உள்ளங்கையில் தனித்துக் கிடந்தது, இரண்டு கீறல்களுடன்.
"ஸாரி மிஸ்டர் கிருபா. நான் கவனிக்கல. துப்பட்டால மாட்டி இப்படி ஆகிடுச்சு. பக்கத்துல தான் ஆப்டிகல் இருக்கு. உடனே போய் சரி பண்ணீட்டு வந்திடுறேன்!" என்றவளின் குரலில் மெலிதான பதற்றம் இருந்தது.
ஏற்கனவே தன்னால் தான் அவனின் கரத்தில் காயமானது என எண்ணி இருந்தவளிற்குள், இந்நிகழ்வு மேலும் வலியைக் கொடுத்தது.
என்ன தோன்றியதோ அவளின் வாடிய முகத்தைக் காணச் சகியாமல், "பரவாயில்ல மிஸ் மது. பிரச்சனை இல்ல. நான் சென்னைக்குப் போய் மாத்திக்கிறேன்." என அருகே செல்ல,
"அதுவரைக்கும் என்ன செய்வீங்க, கிளாஸ் இல்லாம.?"
"நான் ஸ்பெக்ஸ் போட்டு இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா?"
பாவையின் கண்களில் குழப்ப ரேகைகள் படிய, இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"இது என்னோடது இல்ல. சோ, நோ பிராப்ளம்." என்றவாறே அதனை வாங்கிக் கொண்டான்.
அவள் கேள்விப் பார்வையுடன், "யாரோடது?"
அவ்வினாவிற்கு பதில் அளிப்பதை தவிர்த்தவன், "கையில எதுவும் காயம் ஆகலயே மிஸ் மது.?"
புரிந்து கொண்டாள் மது, அது அவனிற்கு மிக முக்கியம் என.
"இல்ல, அடிபடல."
"சரி போய், கையை வாஷ் பண்ணுங்க."
"ஸாரி, மிஸ்டர் கிருபா!"
"இட்ஸ் ஓகே!"
"உங்களுக்குச் சம்பந்தம் இல்லாததை ஏன் வச்சிருக்கீங்க?"
"மொத்தமா அப்படிச் சம்பந்தம் இல்லனு சொல்லிட முடியாது! என் ஃப்ரெண்டோடது. நவ் ஸீ இஸ் நோ மோர். அவளோட ஞாபகமா என்கிட்ட இருக்கிறது இது ஒன்னு தான்!"
"ஐம் ரியலி வெரி ஸாரி."
புன்னகைத்தவன், "ரிலாக்ஸ். ஒன்னும் இல்ல, சரியா? போய் வேலையைப் பாருங்க." என்றிட, கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
தனித்து விழுந்த கண்ணாடி வில்லையை கிருபா அதனோடு சேர்க்க முயற்சிக்க, நடந்த நிகழ்வினைப் பார்த்திருந்தனர் பெரியவர்கள் மூவரும்.
சேது மகனிடம் தெரியும் மாற்றத்தை எண்ணி நிம்மதி மூச்சுவிட, சற்று முன்னர் இருந்த உற்சாகம் வடிந்து தளர்ந்த நடையில் செல்லும் பாவையை நோக்கினார் வல்லி.
அதான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டான்ல மதும்மா. அப்புறம் என்ன.? என அவர் சமாதானம் சொல்ல, வீட்டுல வேலை இருக்கு. நான் அப்புறம் வர்றேன் அம்மாச்சி! என்று வலிந்து புன்னகைத்து விட்டுச் சென்றாள்.
கிருபா முழுமையாய் சொல்லாவிடினும், அவன் உரைத்த 'ஃப்ரெண்ட்' யார் என அறிவாள் மது.
அவனிற்கு விபந்து நடந்த பொழுது சுந்தரவல்லிக்குத் துணையாய் சென்னைக்குச் சென்றிருந்த ராதா கிருஷ்ணன் மதுரைக்குத் திரும்பிய பின்னர், நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மகளிடம் பகிர்ந்து இருந்தார்.
நிலாவின் பெயரோ, முகமோ, அவள் கிருபாவிடம் கொண்டிருந்த காதலோ என எதையும் அறிய மாட்டாள் மது. ஆனால் அவனைக் காப்பாற்றுவதற்காக உயிரை விடும் அளவிற்கு, அவர்களுக்கு இடையேயான உறவு இறுக்கமாய் இருந்தது என்பதை மட்டும் உணர்ந்து இருந்தாள்.
"ஸீ இஸ் நோ மோர்!" என்ற சொற்கள் போதுமானதாய் இருந்தது, அக்கண்ணாடிக்கு உரிமையானவள் நிலா என கணிப்பதற்கு.
வருத்தப் பெருமூச்சு ஒன்று அவளிடம் இருந்து வெளிவந்தது. இரவு உணவு தயாரிப்பில் வல்லி மற்றும் சித்ராவிற்கு உதவியாய் இருந்தவள், கிருபாவை மட்டும் பாராது அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
மறுநாளைய விடியல் இதுவரை இல்லாத வாடிக்கையாய், வேறு விதமாய் புலர்ந்தது.
வழக்கமாய் அவனை எழுப்பும், "அம்மாச்சி எழுந்திருச்சிட்டீங்களா?" என்ற மதுவின் அலாரக் குரல் அன்று கேட்கவில்லை. அவளின் கை மணத்தில் தயாராகும் இஞ்சி கலந்து டீயும் வந்து சேரவில்லை.
சித்ராவின் அழைப்பில் கீழ் இறங்கி வந்தவனின் கையில், தேநீரைத் தந்தார் வல்லி.
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் அன்றைய முக்கிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த சேது, "குட் மார்னிங் மை பாய்."
"குட் மார்னிங் டாட். டீ.?"
"நான் குடிச்சிட்டேன்பா."
சின்னதாய்ச் சிரித்தவன், "மாம், இன்னைக்கு டீ நீங்க போட்டீங்களா.?"
"ஏண்டா ஒன்னரை மாசத்துல அம்மாவோட டேஸ்ட்டையே மறந்துட்டியா?"
"நீங்க போட்டீங்களானு கரெக்டா தானே கேட்டேன்? மறந்திருந்தா, எப்படி கேட்டிருப்பேன்! ஸ்மெல்லயே தெரியிது."
"நல்லா சமாளி!"
சிரித்துவிட்டு ஒரு மிடறு அருந்தியவன் தனது மடிக்கணினிக்கு சார்ஜரைப் போட்டுவிட்டு நிமிர, மேஜையில் வெள்ளைக் காகிதம் ஒன்றைத் தாங்கி நின்றது, கண்ணாடியை வைக்கும் டப்பா.
"ஸ்பெக்ஸை சரி பண்ணி வாங்கிட்டு வந்துட்டேன், மிஸ்டர் கிருபா. ஒன்ஸ் அகைன் ஸாரி!" என எழுதப்பட்டு இருந்தது.
வந்த புதிதில் சில முறை இருவரும் எழுதி எண்ணங்களைப் பரிமாறியதால், மதுவின் கையெழுத்தைக் கண்ட மாத்திரையில் அறிந்து கொண்டான்.
அவசரமாய் பெட்டியைத் திறந்து பார்க்க, அதே பழைய கண்ணாடிச் சட்டகத்தில், வில்லைகள் மட்டும் புதியதாய் மாற்றப்பட்டு இருந்தது. இதுவரை நிலாவின் நினைவை மட்டும் சுமந்திருந்த அக்கண்ணாடி, தற்போது மதுவினது மென்மனதின் சாட்சியாய்க் காட்சியளித்தது.
சட்டென்று கண்கள் கலங்கிப் போனது, கிருபாவிற்கு.
'லூசா இந்தப் பொண்ணு. அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருந்தேனே? நைட்டோட நைட்டா சரி பண்ணணும்னு என்ன அவசியம்.?' எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, வெளியே வந்தான்.
"பாட்டி, மது வந்தாங்களா.?" என்று சுந்தரவல்லியிடம் வினவ, "ஆறு மணிப் போல வந்துட்டுப் போனா. ஏன் கண்ணா.?"
"இந்நேரத்துக்கு ரெண்டு மூனு தடவையாவது இங்க எட்டிப் பார்த்திருப்பாங்களே.? இன்னைக்கு என்ன காணோம்.?"
"செண்டர் இருக்கிற கட்டிடத்தோட ஓனரைப் பார்க்கப் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. அங்க போறதுக்காக கிளம்புறானு நினைக்கிறேன்! டிஃபனுக்கு என்ன சாப்பிடுற கண்ணா?" என வினவிட, "எதுனாலும் ஓகே தான் பாட்டி!" என்று விட்டு வந்தான்.
மகனைப் பார்த்திருந்த சேது, "கிருபா இங்க வா."
அருகே வந்தவன், "என்ன டாட்.?"
"உட்காருடா. என்ன அவசரம், நின்னுக்கிட்டே கேட்கிற?"
"மிஸ் மதுவைப் பார்க்கணும் ப்பா."
"எதுக்கு?"
"உடைஞ்ச ஸ்பெக்ஸை சரி பண்ணிக் கொடுத்திருக்காங்க."
"தேங்க்ஸ் சொல்லணுமா?"
"இல்ல, எதுக்கு இதைச் செஞ்சாங்கனு கேட்கணும்."
"நம்மளால ஒரு தவறு நடக்கும் போது, அதைச் சரி பண்ண நினைப்போம் தான? அந்த பொண்ணு கரெக்டா தானே செஞ்சிருக்கா?"
"பட் டாட்!"
"என்னடா?"
"அதுக்கு அவசியமே இல்ல. மது தப்பு செஞ்சதா நான் நினைக்கல. அப்புறம் எதுக்கு அதுக்கான பொறுப்பை ஏத்துக்கணும்?"
சின்னதாய்ச் சிரித்த சேது, "ஸ்பெக்ஸ் யாரோடது?"
"கு.." என வாயைத் திறந்தவன், "பேசக் கூடாதுனு சொல்லி இருக்கீங்களே டாட்?"
"இப்பப் பேசலாம். சொல்லு!"
"குட்டியோடது."
"அவ, உனக்கு யாரு?"
அவன் பதில் சொல்லத் தோன்றாது தந்தையைப் பார்க்க, "நேத்து, நீ மதுக்கிட்ட ஸ்பெக்ஸ் உன் ஃப்ரெண்டோடதுனு சொன்ன, ஞாபகம் இருக்கா.?"
கிருபா திகைப்புடன் நோக்கினான்.
"நிலா வாழ்ந்த வீட்டை வாங்கணும்னு ஆசைப்பட்ட இல்ல? இப்ப வாங்கு. லோன் எல்லாம் வேண்டாம். நானே பணம் தர்றேன்!" என்றுவிட்டு அவர் எழுந்து செல்ல, தடதடக்கும் மனதுடன் கையில் இருந்த கண்ணாடி டப்பாவைப் பார்த்தான்.
சென்னையில் இருந்த மட்டும் 'குட்டியை லவ் பண்ணுறேன்.' எனத் தயங்காது மந்திரம் போல் ஒவ்வொரு முறையும் உரைத்தவனின் இதழ்கள், அந்தக் காதல் உண்மையானது என்றால் அனிச்சையாய், 'என் லவ்வரோடது!' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?
இதைத்தான் சொல்லாமல் சொல்லிச் சென்றிருந்தார் சேது.
அவனின் சிந்தனை, 'அப்ப நீ நிலாவை லவ் பண்ணலயா கிருபா.?' என வினா எழுப்பிட, மனமோ உறுதியான விடையின்றி மௌனம் சாதித்தது.
உண்மையில் அவளின் மீது இருந்தது என்ன உணர்வென்று அவனால் இனம் காண இயலவில்லை. விபரம் தெரியா வயதில் இருந்தே உடன் வளர்ந்தவள் என்பதால், கிருபாவின் வாழ்வில் நிலாவின் பங்கு அதிகம் தான். ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், வாழ்வின் முழுமைக்குமே அது தொடர்ந்திருக்கலாம்.
காதலாக இல்லை என்றாலும் நட்பாய் நிச்சயம் அவளின் கரம் பற்றி அழைத்துச் சென்றிருப்பான்.
'நேசித்து இருக்கிறாள்!' என அறிந்த பின்னர் அவளின் இல்லாமை தந்த வலியால், 'தன்னை காப்பாற்றி இருக்கிறாளே?' என்பதால் உண்டான அதீத நன்றி உணர்வை, காதலாய் உருவகப்படுத்தி விட்டது ஆடவனின் மனம்.
நிலாவைத் தற்போதும் உள்ளும் புறமுமாகத் தான் நேசிக்கிறான். ஆனால் அது தோழி என்ற நிலையில். நட்பிற்கு உட்பட்ட வரையறையில்! என்பதை இந்நொடி தான் உணர்ந்து கொண்டான்.
உண்மையை புரிந்து கொண்டதும், மனதில் இருந்த பாரம் சட்டென்று இறங்கியது போலான தோற்றம். மிக மிக எளிதாய் சுவாசிப்பதைப் போல் தோன்றியது. இதழ்கள் புன்னகைக்க தயங்கவில்லை. தன்னையும் அறியாமல், காரணமே இன்றி சிரித்துக் கொண்டான்.
இந்நொடியில்.. தான், தானாய் இருப்பதாய் உணர்ந்தான்.
உடைந்த கண்ணாடியைச் சரி செய்து தந்ததற்காக மதுவிற்கு நன்றி உரைப்பதற்காக செல்ல, பூட்டிய கதவே அவனை வர வேற்றது.
வல்லி, அவள் வேலையாய் வெளியில் செல்வதைப் பற்றி உரைத்தது நினைவிற்கு வர, மீண்டும் வீட்டிற்கே திரும்பியவனை, "சார், கொரியர்!" என்ற குரல் நிற்க வைத்தது.
"யாருக்கு?"
"மதுபாரதி."
"வெளிய போயிருக்காங்க. கொடுங்க, நான் கொடுத்திடுறேன்!"
"நீங்க யாரு?"
"ரிலேசன் தான்!" என்றவன் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டான்.
உள்ளே இருப்பது வெளியே தெரியும் படியான கண்ணாடி பையில் இட்டு, அனுப்பப்பட்டு இருந்தது அது.
ஓலைச் சுவடிகளில் எழுதுவது போலான தோற்றம் கொண்ட அட்டைப் படத்தைத் தாங்கிய புத்தகம். பெயர், இன்பம். கீழே சிறிய எழுத்தில் நாலடி தொகுதி மூன்று எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நாளிதழ்களில் வாசித்த குறுங்கதைகள் நினைவிற்கு வர, வேகமாய் உள்ளே சென்றான்.
"பாட்டி."
பெயரனின் குரலில் கூடத்திற்கு வந்த வல்லி, "என்ன கண்ணா.?"
"மதுக்கு, புக் கொரியர் வந்திருக்கு!* என்று நீட்டிட, "இந்த புஸ்தகமா? அதுக்குள்ள வந்திடுச்சு. இவ என்கிட்ட சொல்லவே இல்ல.?" என வாங்கிப் பார்த்தவரின் முகம் முழுவதும் பூரிப்பு.
"இதுல என்ன இருக்கு பாட்டி?"
"பேப்பர்ல கதை படிச்ச இல்ல? அதோட கடைசி முப்பது பாட்டுக்கான கதை."
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"மது ஏற்கனவே சொல்லி இருந்தா."
"அவங்க தான் ஆர்டர் போட்டாங்களா.?"
"இல்ல." எனும் பொழுதே, "அத்தை மசாலா பொடி காலியாகிடுச்சு. அவரைக் கடையில இருந்து வாங்கிட்டு வரச் சொல்லவா.? இல்லேனா குழம்புக்கு மட்டும் தேங்காயோட அரைச்சுக்கலாமா?என்றபடி வந்தார் சித்ரா.
"அதெல்லாம் வேணாம். உள்ள இருக்கு பாரு. வா, எடுத்துத் தர்றேன்!" என வல்லி உடன் செல்ல, "பாட்டி, எனக்கு இதை வாசிக்கணுமே.?" என்றான் கிருபா.
"பிரிச்சுப் படி!"
"மது கேட்பாங்களே?"
"நான் சொல்லிக்கிறேன்!" என உரைத்திட, ஒருவித ஆர்வத்துடன் அதனைப் பிரித்தான்.
நாலடியாரில் இன்பத்துப் பாலில் இன்ப துன்பவியல், இன்பவியல் என இரு இயல்கள்.
முதலாவதில் பொதுமகளிர் என்ற பெயர் கொண்ட விலை மாதுக்களைப் பற்றியும், இரண்டாம் இயலில் கற்புடை மகளிர், காம நுதலியல் எனப் பெண்களின் உள்ளார்ந்த உணர்வைப் பற்றியும் பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
நான்கு வரிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறுங்கதை. இன்பம் சொட்டிட, காதல் கதைகள்.
ஒவ்வொன்றாய் வாசிக்கத் தொடங்கினான் கிருபா. நா 391ம் பாடல்.
'கூடி முடித்து காமம் வடிந்த நிலையில், அருகே படுத்திருந்த மனைவியைப் பார்த்துக் கேலியாய் சிரித்தான் கணவன்.
அவள் திரும்பிப் பார்த்து, "எதுக்குச் சிரிக்கிறீங்க?"
"நான் கூட இல்லாம, நீ எப்படி எல்லாம் மாறிப் போறிட்ட? பாரு, ப்ளவுஸ் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு லூசாகிடுச்சு. அவ்வளவு மிஸ் பண்ணியா என்னை? இதைத்தான் பசலைனு சொல்லுறாங்களோ.?"
ஆடவனின் கூற்று உண்மைதான் என்ற போதும் அதை ஏற்கத் துணியாத பெண்ணானவள், "உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? பெட்ல வேலை முடிஞ்சிடுச்சு இல்ல, அப்ப இப்படிப் பேசத்தான் செய்வீங்க. இனி, என் பக்கத்துல வராதீங்க!" என்று பொய்யாய் சினம் கொண்டு, அறையில் சிதறிக் கிடந்த உடைகளை எடுத்து அணியத் தொடங்கினாள்.
"ஏது? பெட்ல வேலை முடிஞ்சிடுச்சா? யார் சொன்னது அப்படி?" எனக் கைப்பற்றி இழுத்தவன்,
"இதயம் திறந்து கேட்கிறேன், என்னதான் தருவாய் பார்க்கிறேன்.
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன், தவித்தேன்.." என்று பாடிய படி வளர்த்த கற்பனைகள் யாவையும் செயல்படுத்த முனைந்திட, அதற்குச் சம்மதிக்காமல் முரண்டு பிடித்தாள் அவள்.
ஊடல் இல்லாது போனால், கூடலில் ஏது அழகு? ஊடல் செய்து அவள் சுவையைத் தூண்டிட, கூடலில் ருசிக்கத் தொடங்கினான் துணைவன்."
கதை முடிய, மனக் கண்ணில் விரிந்த காட்சியும் மறைந்தது.
வாசிக்க வாசிக்க அவை கண்முன்னே நிழலாடியது தான், பெரும் சோகம். இங்குச் சொல்லப்படுவதைக் கடந்து சொல்லாதவைகள் தான் ஆர்வத்தைத் தூண்டி, மனித உணர்வுகளைச் சோதித்துப் பார்க்கும்.
அந்த சோதனையில் காமம் உச்சம் பெற்றது என்றால், அது மிகை இல்லை.
கதையின் இறுதி வரிகள் கிருபாவைச் சோதித்திட, மேலும் வாசிக்காது புத்தகத்தை மூடி வைத்தான்.
இன்னும் ஒன்பது கதைகள் இருந்தன, காம நுதலியலில். அவற்றை துணைவியுடன் இணைந்து படிக்க வேண்டும் என ஏதோ ஒரு ஆவல். அதனால் அப்படியே வாசிப்பை நிறுத்தி வைத்தான்.
மதிய உணவு முடிந்த பின்னர், "என்ன கண்ணா புஸ்தகத்தைப் படிச்சிட்டியா?" என்றார் வல்லி.
"இன்னும் கொஞ்சம் இருக்கு. பாட்டி எனக்கு இந்த புக் வேணுமே.?"
"இது மட்டும் போதுமா? பேப்பர்ல வாசிச்சதும் வேணுமா?"
"மொத்தமா கிடைச்சா நல்லது தான். அவங்க எழுத்தை வாசிக்கும் போது ஒருமாதிரி ரிலாக்ஸா ஃபீல் ஆகுது."
சின்னதாய்ச் சிரித்தவர், "மது வச்சிருப்பா. கேட்டு வாங்கிக்கோ."
"அது அவங்க வாசிக்கிறதுக்கு வச்சிருப்பாங்க பாட்டி. நான் எப்படிக் கேட்க முடியும்? எனக்குத் தனியா வேணும்."
"வீட்டுல நிறைய புக் இருக்கு. நானே பார்த்திருக்கேன். ஆனா, இது இப்பதான் வந்திருக்கு. செக் பண்ண அனுப்பி இருப்பாங்கனு நினைக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தா, பார்த்து சொல்லிட்டோம்னா, அதைச் சரி செஞ்சு அச்சடிச்சிடுவாங்க."
புரியாமல் பார்த்தவன், "அப்ப இது சாம்பிள் புக்கா?"
"ஆமா."
"மது கரெக்ஷன் ஒர்க் பார்த்து கொடுக்குறாங்களா என்ன?"
"சரி தப்பு எழுதுன ஆளுக்குத்தான தெரியும்? அதான் பார்த்துத் தர்றா."
"யூ மீன், இதோட ஆத்தர் மதுவா?"
"ஆத்தர்னா?"
"புக் எழுதுனவங்க!"
"ஆமா, நம்ம மதுதான். மூனு வருசமா எழுதுறா. நான் வளர்த்த பிள்ளையோட எழுத்து. அதான், அவ்வளவு பேப்பரையும் சேர்த்து வச்சிருக்கேன் நான்." என்றிட, கையில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை வேகமாய் புரட்டினான் கிருபா.
என்னுரையாய் மதுபாரதியைப் பற்றி அவன் அறிந்திடாத மற்றொரு பக்கம் இருந்தது அதில்.
பதினேழு வயதில் இரு வரிகளில் கவிதை எழுதத் தொடங்கி, அது பின்னர் மெல்ல வளர்ந்து, சிறுகதையை அடைந்து, சில பரிசுகளையும் அவளிற்குப் பெற்றுத் தந்துள்ளது.
உள்ளூர் செய்தித்தாள் ஒன்றின் உரிமையாளரின் அறிமுகம் கிட்டிட, அவர் தந்த வாய்ப்பு தான் நாலடியார் பாடல்களிற்குக் கதை எழுதுவது.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பர். ஏனோ இரண்டடி கொண்ட திருக்குறளின் அளவிற்கு நாலடியார் பெயர் பெறவில்லை. இதுவும் குறளைப் போலவே அறம், பொருள், இன்பம் என முப்பால்களை உடையது.
நானூறு பாடல்கள் மொத்தம். மூன்று ஆண்டுகளாய் அதனோடு பயணித்து, தற்போது முழுமையாய் முடித்து இருந்தாள் மது. அவற்றை முழுமையாகவும் ஒவ்வொரு பாலிற்குத் தனியாகவும் புத்தகம் பதிப்பிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
"சில விஷயங்களை நம்ம பிடித்தத்துக்காக செய்வோம்ல, அது மாதிரி ஒன்னு!" என்று அவள் உரைத்ததின் பின்னணி யாதென தற்போது புரிந்து கொண்டான்.
அன்றைய நாளில் நடந்த சில உணர்தலும், தெரிய வந்த ரகசியமும் அவனை வேறு ஒருவனாய் மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
நிலாவின் மீதான நேசமே வாழ்வின் முழுமைக்கும் போதும் என எண்ணியிருக்க, அந்த நேசம் காதலில் சேராது என்று புத்தியில் உரைக்கும் படியாய் தெளிவு படுத்தி இருந்தார் சேது.
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் விளையாடி, அம்மாச்சியிடம் செல்ல சண்டைகள் இட்டு, தனக்கு ஏற்பட்ட சிறு காயத்திற்கே குழந்தை போல் கண் கலங்கி, பெருமாள் கோவில் பொங்கலிற்காக சுற்றத்தை மறந்து ஓடிச் செல்லும் மதுவிற்குள், இப்படிப் பண்பட்ட ஒரு முகம் என அவன் எதிர்பார்த்திருக்க வில்லை.
'ராம' என்பதன் முழுமை ராதா கிருஷ்ணனின் மகள் மதுபாரதி என அறிந்து கொண்டான்.
அவளின் எழுத்தில் வாசித்த வரிகள் யாவும் சிந்தனையில் சுழன்று கொண்டே இருக்க, "பாட்டி, உங்கக்கிட்ட ஒன்னு கேட்கவா.?"
"கேளு கண்ணா.?"
"இந்த லவ்னா என்ன? அது எப்படி ஃபீல் ஆகும்?"
அவர் சிரித்து, "என்ன இப்படிக் கேட்கிற?"
"உங்களுக்கு குட்டியைப் பத்தித் தெரியும் தான பாட்டி?"
"சேது சொல்லி இருக்கான்."
"அப்ப, அப்பா என்னை இங்க அனுப்பின காரணமும் உங்களுக்கு தெரியும்."
"ம்ம்."
"நான் அவளை லவ் பண்ணுறதா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது லவ் இல்லனு இப்ப தோணுது. அப்படினா லவ்னா என்ன? நீங்க லவ்வுக்காகத் தான, மேரேஜ் பண்ணிக்காமலேயே இருந்தீங்க.?"
"அதெல்லாம் தெரியாது கண்ணா. எனக்குத் தெரிஞ்ச ஒன்னே ஒன்னு, என் மாமா மேல ஆசை இருந்துச்சு. ரொம்பப் பிடிக்கும் அவங்களை. நல்ல குணம். எப்படி இருந்தாலும் சரி, என் கண்ணுக்கு ரொம்ப அழகாத்தான் தெரிவாங்க. அவங்க சிரிச்சா, மனசு சந்தோஷப்படும். சங்கடப்பட்டா உசுரே போயிடும்.
ஆனா, அவங்களுக்கு என் அக்கா மேல பிரியம். பெரியவங்க பேசி கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா மாமாவோட சந்தோஷத்தைப் பார்த்து, எனக்கும் சந்தோஷம்.
என்ன, அந்த வாழ்க்கை தான் அவங்களுக்குக் கொடுத்து வைக்கல. சேதுவைப் பெத்துட்டு, எங்கக்கா போய் சேர்ந்துட்டா. கைப்பிள்ளைய வச்சுக்கிட்டுத் தனியா என்ன செய்யிவாங்க பாவம்?
அதுனால, நான் அவங்களுக்கு உதவியா கூட வந்து இருந்தேன். வீட்டுல என்னையே அவங்களுக்குக் கட்டி வைக்க பேசுனாங்க. ஆனா மாமா தான் மறுத்துட்டாரு. இதுல ஒரு விஷயம் இருக்கு, நான் அவருமேல ஆசைப்பட்டது அவங்களுக்கு நல்லாவே தெரியும்.
'என் தேவைக்காகவும் சூழ்நிலைக்காகவும் கட்டிக்கிட்டு, உன்னோட எதிர்பார்ப்பில்லாத உண்மையான அன்புக்கு நான் துரோகம் செய்ய விரும்பல'னு சொல்லிட்டாரு. இப்படிப்பட்ட மனுசனை எப்படி மறக்க முடியும்?
உன்னோட அப்பன் நடக்க ஆரம்பிக்கவும், என்னை என்னோட வீட்டுக்கு அனுப்பிட்டாரு. அப்பப்ப போயி பார்த்துட்டு வர ஆரம்பிச்சேன்.
இப்படியே விட்டா, நான் கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன்னு, வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. போன இடத்துல அவரால பிள்ளையை தனியா பார்த்துக்க முடியல. அதுனால, எங்க அம்மா அப்பாக்கிட்ட கொண்டு வந்து விட்டாரு.
அப்புறம் என்ன, நான்தான் சேதுவை வளர்த்தேன். ஓரளவுக்குச் சம்பாதிச்சு சென்னையில் இருக்க பழகிக்கிட்டதும், இனியாவது உன்னோட வாழ்க்கையைப் பாருனு பிள்ளையைக் கூட்டிட்டுப் போயிட்டாரு.
முயற்சி செஞ்சேன், என்னால தான் அவங்க நினைப்புல இருந்து வெளிய வரல முடியல. அம்மா அப்பாவோட கடைசி காலத்துல அவங்களை நல்ல முறையில பார்த்து தூக்கிப் போட்டுட்டு, அப்படியே இருந்துட்டேன்.
சேதுவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகுற வரைக்கும், என்னை அவரு சென்னைக்கு வரவே விடல. ஆனா மணமேடையில அம்மா ஸ்தானத்துல நிக்க வச்சு, பாத பூஜை செய்ய வச்சாரு. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே மாமா இறந்துட்டாங்க. என் மடியில தான் உசுரு போச்சு. இதுக்கு மேல வேற என்ன வேணும்?
சேர்ந்து வாழணும்னு என்ன கட்டாயம்? மனசுல நினைச்சிருந்தா போதாதா.? நான் அவங்களை நினைச்சுக்கிட்டேன். அவங்க மனசுல, என்மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தாங்க.
மாமா கடைசியா ஒரு வார்த்தை சொன்னாங்க.. என் பிள்ளைக்கு மட்டும் இல்ல, தடுமாறினப்ப எல்லாம் துணைக்கு வந்து தாங்கிப் பிடிச்ச நீ, எனக்கும் அம்மா தான்னு. இந்த ஜென்மத்துக்கு, இதைவிட பெரிய பாக்கியம் வேற என்ன கிடைச்சிடப் போகுது? போதும் கண்ணா, இந்த சந்தோஷம்!"
இமைக்க மறந்து மூத்தவரையே பார்த்திருந்தான் கிருபா.
"என்னய்யா.?" எனப் புன்னகைத்திட, அவரின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.
காதல் என்பது, நேசிப்பவரின் மகிழ்வைக் கண்டு நாமும் மகிழ்வதாகும் எந்நிலையிலும், அவரின் நலத்தை மட்டுமே வேண்டுவதாகும். அவன் புரிந்து கொண்டது இதைத்தான்.
மறுநாள் மதியம் சென்னைக்குக் கிளம்புவதாய் முடிவு செய்து, "என்ன கிருபா, வர்றியா எங்களோட?" என்றார் தந்தையானவர்.
மெலிதாய் சிரித்தவன், "ஆறு மாசம்னு சொன்னீங்க டாட், அதுக்குள்ள கூப்பிடுறீங்க?"
"உன்னோட குழப்பத்தைத் தெளிய வைக்க ஆறு மாசம் ஆகும்னு நினைச்சேன். ஆனா ஒன்றரை மாசத்துலயே வேலை முடிஞ்சிடுச்சு."
"நான் இங்கேயே கொஞ்ச நாளைக்கு இருக்கேன் டாட்."
சித்ரா குழப்பத்துடன், "ஏன் கிருபா.?"
"காரணம் தெரியல. பட், இப்ப கிளம்ப வேணாம்னு தோணுது."
அவர் சேதுவைப் பார்க்க, "இருந்துட்டு வரட்டுமே, அதுனால என்ன? இது அவனோட லைஃப்."
"ஆனா.." எனத் தாயுள்ளம் காரணம் இன்றி தவிக்க, "நம்ம பிள்ளைக்கு மதுரையிலயே பொண்ணு பார்க்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்லுற.?" என்று வினவி, அந்த இறுக்கமான சூழலை மாற்றினார் குடும்பத் தலைவர்.
"அவன் விருப்பம் தான். அவனுக்குச் சரினா, எனக்கு எந்த அப்செக்ஷனும் இல்ல."
"என்னடா மகனே.?" என அவர் கிருபாவைப் பார்க்க, "ஓகே டாட். பாருங்க. மேரேஜ் பண்ணிக்கிறேன்."
இருவரும் வியப்புடன், "நிஜமாவாடா சொல்லுற.?"
"எஸ். ஏன் இப்படிக் கேட்கிறீங்க?"
"இல்ல திடீர்னு இப்படிச் சொல்லுறியே? அதான்."
"உங்களை இதுக்கு மேல வருத்தப்பட வைக்க விருப்பம் இல்லப்பா எனக்கு."
"காட் பிளஸ் யூ, மை பாய்! சரி, அப்ப பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாம்." என்று விட்டுச் சேது நகர, மகனின் கன்னத்தை வருடிக் கொடுத்தார் சித்ரா.
வெளியே பேச்சுச் சத்தம். மதுவின் குரலில் செவியில் மோத, வாயிலிற்கு விரைந்தான் கிருபா.
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தாள்.
"மது.?"
அவனின் அழைப்பில் திரும்பியவள், "என்ன மிஸ்டர் கிருபா, ஃபேஷ்ல பல்ப் எரியிது. ஸ்பெக்ஸை சரி பண்ணி கொடுத்ததாலயா? சந்தோஷமா உங்களுக்கு?"
"ம்ம்.." எனத் தலை அசைத்தவன், "பட், சந்தோஷத்துக்கான காரணம் அது இல்ல."
"அப்புறம்.?"
சின்னதாய்ச் சிரித்தவன், "உங்களுக்கு ஒரு கொரியர் வந்துச்சு!" எனப் புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தான்.
"ஹோ.. வந்துடுச்சா.?" என்று கையில் வாங்கியவள் கேள்வியாய் பார்த்திட, "ஸாரி, பிரிச்சுப் படிச்சிட்டேன்."
"அதுனால என்ன? புக் இருக்கிறதே வாசிக்கிறதுக்காகத் தான? அதுதான், நாம அந்த புத்தகத்துக்குக் கொடுக்கிற மரியாதை!"
தலை அசைத்தவன், "எனக்கு ஒரு காபி வேணுமே.?"
அவள் புரியாமல் பார்த்திட, "கங்கிராட்ஸ் எழுத்தாளரே, ரொம்ப பெரிய வேலை செஞ்சிருக்கீங்க!"
"அட நீங்க வேற! இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல!"
"உங்களுக்கு எப்படியோ, எனக்கு பெரிய விஷயம் தான்."
மது புன்னகைக்க, "போன வேலை என்னாச்சு? பில்டிங்கோட ஓனர் என்ன சொன்னாரு?"
"ரெண்டு மாசம் டைம் கொடுத்திருக்காரு. ஒன்னு, பணத்தை ரெடி பண்ணி நீங்களே வாங்கிக்கோங்க. இல்லேனா காலி பண்ணிக் கொடுங்கனு."
"ஹோ.. என்ன செய்யப் போறீங்க?"
"தெரியல. அப்பா, என்னோட ஐடியாக்கு ஒத்துக்க மாட்டிறாரு."
"ம்ம்.." எனச் சில நொடிகள் சிந்தித்தவன், "நான் ஒரு ஐடியா சொல்லவா?"
"என்ன மிஸ்டர் கிருபா?"
"அந்த பில்டிங்கை எங்கப்பாவை வாங்க வச்சிடுவோம், என்ன?"
புரியாமல் பார்த்தவள், "வாட்.?"
"நான் மதுரைப் பொண்ணைக் கட்டுனா, இங்க பிராப்பர்டி வாங்கலாம்னு சொன்னாரு டாட். இப்பதான் ஓகே சொல்லிட்டு வந்தேன்."
அவனை இன்னதென்று புரியாத உணர்வுடன் நோக்கியவள், "என்ன சொல்லுறீங்க.?"
கிருபா சிரித்து, "ப்ராப்ளம் சால்வ் ஆகிடுச்சு, ஓகே. ஹேப்பியா இருங்க."
"ஆனா.." என அவள் குழப்பத்தில் தவிக்க, "தேங்க்ஸ் மது."
"எதுக்கு?"
"இங்க வந்தப்ப, நான் வேறமாதிரி இருந்தேன். ஆனா இப்ப, என்னை நானே தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி ஒரு ஃபீல். அதுல உங்க பங்கு அதிகம். அதுக்குத்தான் இந்த தேங்க்ஸ்."
"எனக்கு ஒன்னும் புரியல போங்க!"
"காலையில இருந்து அலைஞ்சிருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க!" என்றவன் அங்கிருந்து நகர, மதுவும் புத்தகத்துடன் வீட்டிற்குள் சென்றாள்.
ஏழு மாதங்களிற்குப் பின்னர்..
சுந்தரவல்லியின் இல்லத்தில் இருக்கும் மாடி அறை..
படுக்கையில் கவிழ்ந்து தலையை கீழே தொங்க போட்டபடி படுத்திருந்தான் கிருபா. கார்த்திகை மாதத்தின் ஊதல் காற்று சாளரத்தின் வழியே உள்ளே நுழைந்து தேகத்தைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
"ஹேய் எவ்வளவு நேரம்?" என்றிட, "ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்.." என நேரச் சலுகை கேட்டாள் அவனின் துணைவி.
முன்தினம் தான் திருமணம் முடிந்திருந்தது. தலை இரவு அலுப்பின் காரணமாக ஓய்வில் கழிந்திருக்க, மறுநாளைய இரவில் காதல் கதை பேசலாம் என நினைத்தான் ஆடவன்.
ஆனால் சரிபாதியாய் அமைந்தவளோ படுக்கையின் அருகே கீழே அமர்ந்து மடிக்கணினியைத் திறந்து வைத்து, கடமையைச் செய்து கொண்டிருந்தாள்.
பொறுமை இழந்தவன் ஒருமுறை உருண்டு வர, அவனின் இதழ்கள் பாவையின் காதோரம் உரசியது.
"என்ன கிருபா?" என விலகிட, "இதெல்லாம் நல்லாவா இருக்கு. நாளைக்குப் பார்க்கக் கூடாதா வேலையை?"
"நீங்கதான, உன்னோட ரைட்டிங்கை விட்டுடாதனு பிடிவாதமா என்னை எழுத வச்சீங்க. இப்ப என்னவாம்? ஒரு ஃப்ளோவா வரும் போதே, எழுதினா தானே ஆச்சு?"
"அதெல்லாம் நீ எப்ப எழுத உட்கார்ந்தாலும் ஃப்ளோ கரெக்டா வரும். பட், இந்த நைட் திரும்ப கிடைக்காது. பாரு அங்க!" என ஜன்னலின் வழியே முழு நிலவைக் காட்டினான்.
வெண் கதிர்களைப் பரப்பி, இரவிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தாள் வான்தாரகை.
மதுவின் கண்கள் கணவன் காட்டிய நிலவில் ரசனையுடன் நிலைக்க, அவனோ கள்ளூறும் அவளின் கழுத்தில் முத்தம் பதித்து ருசி பார்த்தான்.
"அச்சோ!" எனப் பதறித் திரும்பியவளின் இதழ்களில் அதரங்களைச் சேர்த்தவன், தனது கைகளைக் கீழிறக்கி அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான்.
இருவருக்கும் நிகழ்ந்தது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
பாவையின் விருப்பப்படி பயிற்சி நிலையம் இயங்கி வந்த கட்டிடத்தை தந்தையின் பணத்தில் விலைக்கு வாங்கிய கிருபா, அதன் மீது இருந்த இல்லத்தோடு சேர்த்து அவளின் பொறுப்பிலேயே விட்டுவிட்டான்.
சென்னையில் நிலா வாழ்ந்த வீடு, சித்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக வாங்கிய கடனை, அசலோடு சேர்த்து மாதமாதம் கட்டி வருகிறான்.
"மதுவுக்கும் அவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. பேசாம அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்தை முடிச்சா என்ன?" என்று சுந்தரவல்லி தான், முதலில் இவர்களின் திருமணப் பேச்சைத் தொடங்கினார்.
மாதக் கணக்கில் அது பேச்சு வார்த்தையாகவே நீடித்து, மூன்று மாதங்களிற்கு முன்னர் தான் நிச்சயம் செய்தனர்.
அதன் பின்பான தினங்கள் எல்லாம், இனிமையை சேர்க்கும் பெட்டகமாகின நிச்சயத்த ஜோடிக்கு.
சேதுவும் சித்ராவும் மகனை பார்ப்பதற்காக மதுரைக்கு வந்த பொழுதே, மிஸ் மது 'மது'வாகி இருந்தாள் அவனிற்கு.
அடுத்த சில வாரங்களில் அவளுமே மிஸ்டரைக் கைவிட்டு, 'கிருபா' என அழைக்கத் தொடங்கி விட்டாள். நல்ல புரிதல், இணைதலின் முதல் படி அல்லவா? அப்பொழுதே அவர்கள் அதை அடைந்திருந்தனர்.
அறமும் பொருளும் ஒவ்வொரு நிகழ்விலும் மாறி மாறி அவர்களை வழிநடந்த, தற்போது இன்பத்தில் இணைந்திருந்தனர்.
நாலடியாரை முடித்த பின்னர், கிருபாவின் வற்புறுத்தலின் பெயரில், விருப்
பத்துடனே அகநானூறு பாடல்களுக்கு கதை எழுதத் துவங்கி இருந்தாள் மது.
'இன்பம் ஒரு கோடி!' என அவள் மடிக்கணினியில் தட்டச்சு செய்து முடிந்திருக்க, அதனை செயல் முறையில் சோதனைச் செய்திட பாவையைத் தன்வசமாக்கி இருந்தான் கிருபாகரன்.
முற்றும்
Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் - இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அறம் பொருள் இன்பம் - இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.