மறுமலர்ச்சி சாத்தியமே
ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம். வெகு அபூர்வமாக, உலகுக்கே நன்மை தரக்கூடிய ஒரு திருப்புமுனை எண்ணம் கூட தோன்றலாம்.
அப்படி இரண்டு நண்பர்கள் 1935ல் பேசுகையில் போடப்பட்ட விதை இப்போது கண்டங்கள் தாண்டி விரிந்து வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. அதுதான் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' (AA- Alcoholics anonymous) என்ற அமைப்பு. என்ன, அந்த நண்பர்கள் இருவரும் தேனீர் கோப்பையுடன் பேசவில்லை, கையில் மதுக்கோப்பையுடன் பேசியிருக்கலாம். ஏனெனில் இருவருமே மது போதையால் பாதிக்கப்பட்டவர்கள். பில் வில்சன் என்பவர் பாப் ஸ்மித் என்ற இன்னொரு மதுப்பிரியரிடம் தன்னுடைய மதுப் பழக்கம் தீவிரமாகி விட்டது என்றும் அதில் இருந்து மீள்வது எப்படி என்றும் பேசியபோது அவர்களுக்கு ஒரு எண்ணம் உதித்தது. இதுபோல ஒத்த சிந்தனையுடையவர்களை ஒன்றிணைத்து, ஒரு சுய உதவிக்குழு போல நமக்கு நாமே ஏன் உதவி செய்து கொள்ளக்கூடாது? என்பதுதான் அவர்களுக்கு அன்று தோன்றிய விஷயம்.
அதன்பின் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்ற பெயரில் மது போதையை நிறுத்துவதற்காகக் கடைபிடிக்கக் கூடிய விஷயங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டனர். அந்தப் புத்தகத்தில் மதுப் பிரியர்கள் நூறு பேர் தங்கள் சொந்த வாழ்வில் குடியிலிருந்து மீண்ட அனுபவங்களை எழுதியிருந்தனர். இந்தப் புத்தகம் "த பிக் புக்" (The big book) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பதிப்புகளில், பல மொழிகளில் சில கோடி பிரதிகள் அச்சிட்டு விற்பனையான அந்தப் புத்தகமே பின் அதே பெயரில் ஒரு இயக்கத்தைத் துவங்கவும் வழிவகுத்தது.
இயக்கத்தின் அரிச்சுவடிகளாக பன்னிரண்டு கோட்பாடுகள்/ படிநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விதிகளைத் தீவிரமாக செயலாற்ற வேண்டும், இயக்கத்தை மத, அரசியல், சுயலாப நோக்குகளோடு அணுகக்கூடாது என்பவை இந்தக் கோட்பாடுகளில் முக்கியமானவை. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் துவங்கப்பட்ட இது, இப்போது பெரும்பாலான நாடுகளில் பல நகரங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. மது போதைகக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டவர்கள் பிற குடிநோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்கள் மீள உதவுவது இதன் குறிக்கோள்.
'குடியிலிருந்து மீள வேண்டும்' என்ற விருப்பம் ஒன்றே இந்த அமைப்பில் சேரப் போதுமான தகுதி. இயக்கத்தைத் தொடர்பு கொள்ளும் நபருக்கு அவரது பகுதியின் அருகிலேயே உள்ள ஒரு தன்னார்வலரைப் பொறுப்பாக நியமனம் செய்து, தொடர் கலந்துரையாடல்கள், முறையான சிகிச்சை வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. மது போதையால் வேலைவாய்ப்பு இழந்தவர்களின் மறுவாழ்வுக்கும் இந்த இயக்கம் முயல்கிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் அதன் பயனாளிகளும் இன்னார் என்பதை வெளியுலகு அறியாத வகையில் ரகசியம் காப்பது இதன் மிக முக்கிய அம்சமாகும். அதனாலேயே 'அனானிமஸ்' என்ற பெயரில் இயங்குகிறது.
இந்த அமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து கஞ்சா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை அடிமையானவர்களுக்கும் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 1953ம் ஆண்டு AA வின் பன்னிரெண்டு கோட்பாடுகளைப் பின்பற்றி 'நார்காடிக்ஸ் அனானிமஸ்' என்ற அமைப்பு துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு தாய் தயங்கியபடியே என்னிடம் வந்து பேசினார். "என் மகனுக்கு பன்னிரெண்டு வயசு தான் ஆகுது. சேராத பசங்க கூட சேர்ந்துக்கிட்டு ஏதோ ஒயிட்னராமே அதை வாங்கி பயன்படுத்துறதா சொல்றாங்க. அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியலம்மா.. எப்படி அதை சரி பண்றது? ஏதாவது சொல்லுங்களேன்" என்றார் கண்ணீருடன்.
எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெரியவர்களுக்கு கஞ்சா போன்ற பொருட்கள் கிடைப்பது ஓரளவு எளிதாகவே இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு இந்தப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். செலவும் அதிகம். சில சிறுவர்கள் இருமலுக்கு பயன்படுத்தும் சிரப் மருந்தினை தொடர்ந்து வாங்கி அருந்துவார்கள். மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமலே இவற்றை வாங்கி விட முடியும். இருமல் மருந்து கலந்திருக்கும் வேதியல் பொருளுக்கு சர்ச்சை இறக்கமும் தூக்கமும் வரக்கூடிய சக்தி இருப்பதால் அதை தொடர்ச்சியாக வாங்கி ஒரு அரை மயக்க நிலையிலேயே பள்ளிக்கு பல சிறுவர்கள் வருவதாக இப்பொழுதும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒரே கடையில் வாங்காமல் ஒவ்வொரு முறையும் வேறு வேறு கடையில் வாங்கினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற அளவுக்குப் புரிதலும் இருக்கிறது.
அதுபோக, பசையை வாங்கி ஒரு பாலிதீன் உறைக்குள் கொட்டிவிட்டு தலையை அதனுள் விட்டு சுவாசிப்பதும் ஒரு விதமான போதையைத் தரக்கூடியது. தவறாக எழுதினால் அழிக்க உதவும் ஒயிட்னரையும் கூட இப்படி சுவாசித்துக் தான் போதை அனுபவிக்கிறார்கள். அவ்வப்போது ஸ்டேஷனரி கடைகள், பசை காய்ச்சும் இடங்களில் சில சிறுவர்கள் கூடி நிற்பதாகவும் அப்படிப் பார்த்தால் விரட்டி விடுகிறேன், என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் போலீஸ்காரர் ஒருவர் முன்பு கூறியிருந்தார்.
இந்தப் பெண்மணி தன் மகன் குறித்துக் கூறியதும் எனக்கு அவர் கூறியது நினைவுக்கு வந்தது. தேவையான ஆலோசனைகளை வழங்கி சிகிச்சைக்காக உரிய இடத்துக்கு அவனை அனுப்பினோம்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரும்பாலானவர்களிடம் உங்களுக்கு எப்படி இந்த பழக்கம் முதலில் ஆரம்பித்தது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆசைக்காக முயன்று பார்த்தேன் என்றே சொல்வார்கள். சிலர் தீவிரமான கஷ்டத்திலிருந்தேன். அதை மறக்க நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார், அதன்பின் விடமுடியவில்லை என்பார்கள்.
வெகுசிலர், 'ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர வலியை பொறுத்துக் கொள்வதற்காக மருத்துவர் இந்தத் தூக்க மாத்திரைகளை வழங்கினார். அதன்பின் அது இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை. அதனால் இப்போது நானே திருட்டுத்தனமாக வாங்கித் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்' என்பார்கள். இந்த மூன்றாம் வகை நபர்கள் தற்போது பெருகி வருகிறார்கள். நம் நாட்டில் தானாக மாத்திரைகள் வாங்குவதை சட்டங்கள் தடை செய்தாலும் அந்தச் சட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன.
மதுவோ, புகையோ, மாத்திரையோ நமது கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது, அது இல்லாமல் இயங்க முடியவில்லை என்ற ஒரு நிலை வந்தால் கட்டாயம் மருத்துவ உதவியும் ஆலோசனையும் தேவை. நானாகவே முயன்று பார்க்கிறேன், நிறுத்தி விடுவேன் என்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது போல. 99% பேரில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை.
ஒவ்வொரு போதைப் பழக்கமும் ஒரு பெரிய ஆக்டோபஸ் போல் மனிதனை உள்ளிழுத்து போட்டுக்கொள்ளக் கூடிய தன்மை உடையது. உழைப்பாளிகளுக்கு போதையின் பால் இருக்கும் பலவீனத்தை பயன்படுத்தி சில மனிதர்கள் பலன் அடைவதும் நடக்கிறது. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் சில நோயாளிகளிடம் பேசியபோது நான் அறிந்த ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
'ஒரு நாள் எட்டு மணி நேர வேலை. 500 ரூபாய் சம்பளம் தருகிறேன், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை' என்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுப்பது போல, 'உனக்கு தினமும் 400 ரூபாயும் ஒரு குவாட்டரும் சம்பளம்' என்று பேசப்படுகிறதாம். மதுப்பிரியர்களுக்கு ஐநூறு ரூபாய் சம்பளத்தை விட இந்த 'டீலிங்' மிகவும் பிடித்திருப்பதால் அந்தப் பக்கம் போய் விடுகிறார்களாம். கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் எங்கள் பகுதி தொழிலாளர்கள் சிலர், 'ஒரே நாளில் டபுள் டியூட்டி ஒரே நாளில் (பதினைந்து மணி நேர வேலை) பார்த்தேன். 1200 ரூபாய் சம்பளம், அதோட ரெண்டு குவாட்டர் கிடைக்கும்' என்று சொல்வதையும் பார்த்திருக்கிறேன். இப்படி உழைப்பை உறிஞ்சி விட்டு குவாட்டர் கொடுத்து, தங்கள் காரியம் நடந்தால் போதும், தொழிலாளியின் ஆரோக்கியம் முக்கியம் இல்லை, இவன் போனால் இன்னொருவன், என்று பல பெருமுதலாளிகள் செயல்படுவதாகவும் அறிகிறோம். இதனால் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் விரைவில் அந்தத் தொழிலாளியால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும் என்பதையும் மதுவைக் காட்டி வேலை வாங்குவதும் ஒரு கொத்தடிமைத்தனம் என்பதையும் அப்பாவித் தொழிலாளர்கள் உணர வேண்டும்.
இயற்கை, மனித உடலுக்குக் காயங்களை ஆற்றிக் கொள்ளும் தன்மையை அதிகமாகவே தந்திருக்கிறது. அறிந்தோ அறியாமலோ போதையில் விழுவது தப்பில்லை, அதிலேயே மாட்டிக்கொண்டு வாழ்வை அளிக்காமல், அதிலிருந்து மீளும் வழிவகைகளை சிந்தித்து தங்களுக்கு உதவ நீளும் கரங்களைப் பற்றிக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம். வெகு அபூர்வமாக, உலகுக்கே நன்மை தரக்கூடிய ஒரு திருப்புமுனை எண்ணம் கூட தோன்றலாம்.
அப்படி இரண்டு நண்பர்கள் 1935ல் பேசுகையில் போடப்பட்ட விதை இப்போது கண்டங்கள் தாண்டி விரிந்து வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. அதுதான் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' (AA- Alcoholics anonymous) என்ற அமைப்பு. என்ன, அந்த நண்பர்கள் இருவரும் தேனீர் கோப்பையுடன் பேசவில்லை, கையில் மதுக்கோப்பையுடன் பேசியிருக்கலாம். ஏனெனில் இருவருமே மது போதையால் பாதிக்கப்பட்டவர்கள். பில் வில்சன் என்பவர் பாப் ஸ்மித் என்ற இன்னொரு மதுப்பிரியரிடம் தன்னுடைய மதுப் பழக்கம் தீவிரமாகி விட்டது என்றும் அதில் இருந்து மீள்வது எப்படி என்றும் பேசியபோது அவர்களுக்கு ஒரு எண்ணம் உதித்தது. இதுபோல ஒத்த சிந்தனையுடையவர்களை ஒன்றிணைத்து, ஒரு சுய உதவிக்குழு போல நமக்கு நாமே ஏன் உதவி செய்து கொள்ளக்கூடாது? என்பதுதான் அவர்களுக்கு அன்று தோன்றிய விஷயம்.
அதன்பின் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்ற பெயரில் மது போதையை நிறுத்துவதற்காகக் கடைபிடிக்கக் கூடிய விஷயங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டனர். அந்தப் புத்தகத்தில் மதுப் பிரியர்கள் நூறு பேர் தங்கள் சொந்த வாழ்வில் குடியிலிருந்து மீண்ட அனுபவங்களை எழுதியிருந்தனர். இந்தப் புத்தகம் "த பிக் புக்" (The big book) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பதிப்புகளில், பல மொழிகளில் சில கோடி பிரதிகள் அச்சிட்டு விற்பனையான அந்தப் புத்தகமே பின் அதே பெயரில் ஒரு இயக்கத்தைத் துவங்கவும் வழிவகுத்தது.
இயக்கத்தின் அரிச்சுவடிகளாக பன்னிரண்டு கோட்பாடுகள்/ படிநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விதிகளைத் தீவிரமாக செயலாற்ற வேண்டும், இயக்கத்தை மத, அரசியல், சுயலாப நோக்குகளோடு அணுகக்கூடாது என்பவை இந்தக் கோட்பாடுகளில் முக்கியமானவை. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் துவங்கப்பட்ட இது, இப்போது பெரும்பாலான நாடுகளில் பல நகரங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. மது போதைகக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டவர்கள் பிற குடிநோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்கள் மீள உதவுவது இதன் குறிக்கோள்.
'குடியிலிருந்து மீள வேண்டும்' என்ற விருப்பம் ஒன்றே இந்த அமைப்பில் சேரப் போதுமான தகுதி. இயக்கத்தைத் தொடர்பு கொள்ளும் நபருக்கு அவரது பகுதியின் அருகிலேயே உள்ள ஒரு தன்னார்வலரைப் பொறுப்பாக நியமனம் செய்து, தொடர் கலந்துரையாடல்கள், முறையான சிகிச்சை வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. மது போதையால் வேலைவாய்ப்பு இழந்தவர்களின் மறுவாழ்வுக்கும் இந்த இயக்கம் முயல்கிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் அதன் பயனாளிகளும் இன்னார் என்பதை வெளியுலகு அறியாத வகையில் ரகசியம் காப்பது இதன் மிக முக்கிய அம்சமாகும். அதனாலேயே 'அனானிமஸ்' என்ற பெயரில் இயங்குகிறது.
இந்த அமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து கஞ்சா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை அடிமையானவர்களுக்கும் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 1953ம் ஆண்டு AA வின் பன்னிரெண்டு கோட்பாடுகளைப் பின்பற்றி 'நார்காடிக்ஸ் அனானிமஸ்' என்ற அமைப்பு துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு தாய் தயங்கியபடியே என்னிடம் வந்து பேசினார். "என் மகனுக்கு பன்னிரெண்டு வயசு தான் ஆகுது. சேராத பசங்க கூட சேர்ந்துக்கிட்டு ஏதோ ஒயிட்னராமே அதை வாங்கி பயன்படுத்துறதா சொல்றாங்க. அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியலம்மா.. எப்படி அதை சரி பண்றது? ஏதாவது சொல்லுங்களேன்" என்றார் கண்ணீருடன்.
எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெரியவர்களுக்கு கஞ்சா போன்ற பொருட்கள் கிடைப்பது ஓரளவு எளிதாகவே இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு இந்தப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். செலவும் அதிகம். சில சிறுவர்கள் இருமலுக்கு பயன்படுத்தும் சிரப் மருந்தினை தொடர்ந்து வாங்கி அருந்துவார்கள். மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமலே இவற்றை வாங்கி விட முடியும். இருமல் மருந்து கலந்திருக்கும் வேதியல் பொருளுக்கு சர்ச்சை இறக்கமும் தூக்கமும் வரக்கூடிய சக்தி இருப்பதால் அதை தொடர்ச்சியாக வாங்கி ஒரு அரை மயக்க நிலையிலேயே பள்ளிக்கு பல சிறுவர்கள் வருவதாக இப்பொழுதும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒரே கடையில் வாங்காமல் ஒவ்வொரு முறையும் வேறு வேறு கடையில் வாங்கினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற அளவுக்குப் புரிதலும் இருக்கிறது.
அதுபோக, பசையை வாங்கி ஒரு பாலிதீன் உறைக்குள் கொட்டிவிட்டு தலையை அதனுள் விட்டு சுவாசிப்பதும் ஒரு விதமான போதையைத் தரக்கூடியது. தவறாக எழுதினால் அழிக்க உதவும் ஒயிட்னரையும் கூட இப்படி சுவாசித்துக் தான் போதை அனுபவிக்கிறார்கள். அவ்வப்போது ஸ்டேஷனரி கடைகள், பசை காய்ச்சும் இடங்களில் சில சிறுவர்கள் கூடி நிற்பதாகவும் அப்படிப் பார்த்தால் விரட்டி விடுகிறேன், என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் போலீஸ்காரர் ஒருவர் முன்பு கூறியிருந்தார்.
இந்தப் பெண்மணி தன் மகன் குறித்துக் கூறியதும் எனக்கு அவர் கூறியது நினைவுக்கு வந்தது. தேவையான ஆலோசனைகளை வழங்கி சிகிச்சைக்காக உரிய இடத்துக்கு அவனை அனுப்பினோம்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரும்பாலானவர்களிடம் உங்களுக்கு எப்படி இந்த பழக்கம் முதலில் ஆரம்பித்தது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆசைக்காக முயன்று பார்த்தேன் என்றே சொல்வார்கள். சிலர் தீவிரமான கஷ்டத்திலிருந்தேன். அதை மறக்க நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார், அதன்பின் விடமுடியவில்லை என்பார்கள்.
வெகுசிலர், 'ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர வலியை பொறுத்துக் கொள்வதற்காக மருத்துவர் இந்தத் தூக்க மாத்திரைகளை வழங்கினார். அதன்பின் அது இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை. அதனால் இப்போது நானே திருட்டுத்தனமாக வாங்கித் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்' என்பார்கள். இந்த மூன்றாம் வகை நபர்கள் தற்போது பெருகி வருகிறார்கள். நம் நாட்டில் தானாக மாத்திரைகள் வாங்குவதை சட்டங்கள் தடை செய்தாலும் அந்தச் சட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன.
மதுவோ, புகையோ, மாத்திரையோ நமது கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது, அது இல்லாமல் இயங்க முடியவில்லை என்ற ஒரு நிலை வந்தால் கட்டாயம் மருத்துவ உதவியும் ஆலோசனையும் தேவை. நானாகவே முயன்று பார்க்கிறேன், நிறுத்தி விடுவேன் என்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது போல. 99% பேரில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை.
ஒவ்வொரு போதைப் பழக்கமும் ஒரு பெரிய ஆக்டோபஸ் போல் மனிதனை உள்ளிழுத்து போட்டுக்கொள்ளக் கூடிய தன்மை உடையது. உழைப்பாளிகளுக்கு போதையின் பால் இருக்கும் பலவீனத்தை பயன்படுத்தி சில மனிதர்கள் பலன் அடைவதும் நடக்கிறது. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் சில நோயாளிகளிடம் பேசியபோது நான் அறிந்த ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
'ஒரு நாள் எட்டு மணி நேர வேலை. 500 ரூபாய் சம்பளம் தருகிறேன், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை' என்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுப்பது போல, 'உனக்கு தினமும் 400 ரூபாயும் ஒரு குவாட்டரும் சம்பளம்' என்று பேசப்படுகிறதாம். மதுப்பிரியர்களுக்கு ஐநூறு ரூபாய் சம்பளத்தை விட இந்த 'டீலிங்' மிகவும் பிடித்திருப்பதால் அந்தப் பக்கம் போய் விடுகிறார்களாம். கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் எங்கள் பகுதி தொழிலாளர்கள் சிலர், 'ஒரே நாளில் டபுள் டியூட்டி ஒரே நாளில் (பதினைந்து மணி நேர வேலை) பார்த்தேன். 1200 ரூபாய் சம்பளம், அதோட ரெண்டு குவாட்டர் கிடைக்கும்' என்று சொல்வதையும் பார்த்திருக்கிறேன். இப்படி உழைப்பை உறிஞ்சி விட்டு குவாட்டர் கொடுத்து, தங்கள் காரியம் நடந்தால் போதும், தொழிலாளியின் ஆரோக்கியம் முக்கியம் இல்லை, இவன் போனால் இன்னொருவன், என்று பல பெருமுதலாளிகள் செயல்படுவதாகவும் அறிகிறோம். இதனால் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் விரைவில் அந்தத் தொழிலாளியால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும் என்பதையும் மதுவைக் காட்டி வேலை வாங்குவதும் ஒரு கொத்தடிமைத்தனம் என்பதையும் அப்பாவித் தொழிலாளர்கள் உணர வேண்டும்.
இயற்கை, மனித உடலுக்குக் காயங்களை ஆற்றிக் கொள்ளும் தன்மையை அதிகமாகவே தந்திருக்கிறது. அறிந்தோ அறியாமலோ போதையில் விழுவது தப்பில்லை, அதிலேயே மாட்டிக்கொண்டு வாழ்வை அளிக்காமல், அதிலிருந்து மீளும் வழிவகைகளை சிந்தித்து தங்களுக்கு உதவ நீளும் கரங்களைப் பற்றிக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
Author: SudhaSri
Article Title: மறுமலர்ச்சி சாத்தியமே
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மறுமலர்ச்சி சாத்தியமே
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.