கோழிக் குட்டி! யானை முட்டை!!
கோழியை முட்டையிடாமல் நேராக கோழிக்குஞ்சைப் பெற்றெடுக்கச் செய்ய முடியுமா? யானை ஒன்றை முட்டை போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்து குஞ்சு பொரிக்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா.. அதேபோல்தான் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கஷ்டப்படுத்தி படிக்க வைக்க நினைக்கும் விஷயமும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு செய்தி நினைவிருக்கலாம். ஹிந்தி மொழியைச் சரியாக எழுதப் படிக்கத் தெரியாததால் ஆசிரியை தொடர்ந்து கண்டிக்க, சிறுவன் ஒருவன் அந்த ஆசிரியையைக் கத்தியால் குத்தி விட்டான் என்பதே அந்தச் செய்தி. அப்போது அவனை நெருக்கடி நிலைக்கு ஆளாக்கிய கல்வி நிர்வாகத்தின் மீதும் அப்படி அவனை வளர்த்த பெற்றோர் மீதும் வரிசையான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன.
அந்தச் சிறுவனை அதன்பின் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின் தான் தெரிந்தது, அவனுக்குக் குறிப்பிட்ட மொழியைக் கற்பதில் குறைபாடு (Dyslexia) இருக்கிறது என்பது.
கற்றல் குறைபாடு என்பது பல வகைகளில் ஏற்படக்கூடும். பெரும்பாலானவை பிறப்பிலேயே நிகழ்வது. மரபணுக் கோளாறுகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இன்னொரு வகை, வளர்ச்சியின் போது மூளை சந்திக்கும் சில விபத்துகளால் நிகழ்வது(developmental). சில குழந்தைகளுக்கு பார்வைக்கான மூளையின் சிறப்பு பகுதியில் (visual cortex) ஏதோ கோளாறு இருப்பதால் காணும் காட்சிகளை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த குழந்தைகளால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாது.
இதேபோல் கேட்டலுக்கான மூளையின் பகுதியில் (auditory cortex) ஏற்படும் ஒருங்கிணைப்புக் கோளாறால், காதில் கேட்கும் விஷயங்களைப் பதிவு செய்து கொள்வதும் அதற்கேற்ப செயல்படுவதும் சில குழந்தைகளுக்குக் கடினம்.
உங்கள் அன்றாட வாழ்வில் பார்த்திருப்பீர்கள், சிலருக்கு வலது எது இடது எது என்பதில் அடிக்கடி குழப்பம் நேரிடும். வண்டியில் தானாகச் செல்லும் போது வழக்கத்தின்படி சென்று விடுவார், ஆனால் வாகனத்தை வேறு ஒருவர் செலுத்த, அருகில் அமர்ந்திருப்பவரிடம் ரைட்டா, லெஃப்ட்டா என்று கேட்டால் சட்டென்று சொல்ல வராது. அதைப்போன்ற ஒரு விஷயம் தான் இதுவும்.
சில வகைக் குறைபாடுகளில் பேனா பிடித்து எழுதுவது சிரமமாக இருக்கும் (dysgraphia). ஆனால் பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல் ஆகிய மற்ற அனைத்தும் சிறப்பாக வரும். எனக்கு கணக்கு வரவே வராது என்பவரா நீங்கள்? அவன் கணக்கில் புலி என்று இன்னொருவரை கூறுகிறீர்களா? அவனுக்கு இயல்பிலேயே மூளையில் கணிதத்திற்கான பகுதிகள் தனித்தன்மையுடன் வளர்ந்திருக்கலாம்.
சில தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பத்தும் பத்தும் எவ்வளவு என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் ஆளுமை, பேச்சு போன்ற விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். கணிதத்தில் திறமையான ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு தங்கள் தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பார்கள். அவரது குறைபாடு நெருங்கிய இருப்பவர்களுக்கு கூட தெரியாது. இதேபோல கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளையும் கூரிய திட்டமிடல் மூலம் அணுகலாம்.
படிப்பதில், பழகுவதில் வித்தியாசமாக காணப்படும் குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா குழந்தைகள் என்பதை எப்படி சந்தேகிப்பது?
*அந்த குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கியது? அம்மா அப்பா சாப்பாடு வேணும் போன்றவற்றை எப்பொழுது தானாகக் கேட்டது?
*ஒன்றுபோல் ஒலிக்கக் கூடிய இரு வேறு வார்த்தைகளை குழந்தை அடையாளம் கண்டுகொள்கிறதா?
*புதிய வார்த்தைகளை விரைவில் கற்றுக் கொண்டதா?
*கரும்பலகை அல்லது புத்தகத்தில் இருக்கும் எழுத்துக்களை பார்த்து அதேபோல் தன்னுடைய குறிப்பேட்டில் எழுத முடிகிறதா? நாம் சொல்வதை எழுத முடிகிறதா?
*பிடித்த கதை அல்லது காணொலி இவற்றை மறுபடியும் அந்தக் குழந்தையால் நினைவுக்குக் கொண்டுவந்து சொல்ல முடிகிறதா?
*இடது கை அல்லது வலது கை பழக்கம் இரண்டில் ஒன்று உறுதியாக உருவாகி விட்டதா? (Handedness)
*முறையான விளையாட்டுக்கள்- இந்த வட்டத்துக்குள் ஓடவேண்டும், இரண்டு கோடுகளுக்கு நடுவில் நடக்க வேண்டும் போன்றவற்றை செய்ய முடிகிறதா?
இதுபோன்ற சிறிய விஷயங்களைக் கவனிப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு மேற்கொண்டு பரிசோதனைகள் எதுவும் தேவையா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் ஒன்றிற்கு ஒரு சிறுவனை ஒரு ஆசிரியை அழைத்துவந்தார். அந்தச் சிறுவன் அதற்கு முன்பாக இரண்டு மூன்று தனியார் பள்ளிகளில் படித்ததாகவும், சரியாகப் படிக்காததால் அடிக்கடி அடி வாங்கியதாகவும் பெற்றோர் கூறியிருக்க, இந்த அரசுப் பள்ளி ஆசிரியை தான், "அடிச்சு பிரயோஜனம் இல்லை.. அவனுக்கு ஏதோ குறைபாடு இருக்கு" என்று கூறி முகாமுக்கு பெற்றோருடன் வரச்சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார். அவனுக்கு சில அடிப்படை சோதனைகள் செய்த போது கற்றல் குறைபாடு இருப்பது தெரிந்தது.
இப்படிப்பட்ட குழந்தைகளை அணுகுவது உண்மையில் முள் மேல் நடப்பது போலத்தான். அவர்களுக்கான பரிசோதனைகளைச் செய்வதற்கு கூட நல்ல மனநிலை, நல்ல சூழல், முன்தயாரிப்புகள் இவை முக்கியம். அதைவிட குழந்தையின் குறைபாட்டை புரிந்துகொள்ளும் பெற்றோரும் அதற்கான மாற்று வழி முறைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் சுற்றத்தாரும் நிச்சயம் வேண்டும். எல்லா குழந்தைகளையும் போல அவனால் முதல் மதிப்பெண் வாங்குவதோ சாதாரணக் குழந்தைகளுக்கானதாக வரையறுக்கப்பட்டுள்ள டிகிரியை வாங்குவதோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கணிதத்தில் கற்றல் குறைபாடு உடைய சில குழந்தைகள் மொழிகளை நன்றாகப் படிக்க முடியும். அதேபோல் எழுத்து, பேச்சு இவற்றில் அதிகக் குறைபாடு உள்ள குழந்தைகளை கைவினைப் பொருட்கள் செய்தல், கலைகள், உடலுழைப்பு போன்றவற்றில் முறையாகப் பயிற்சியளித்தால் வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் மையங்களும் ஆசிரியர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர். அதைத் தேடித் கண்டுபிடிக்க முனைப்பு தேவை.
பெரும்பாலான நேரங்களில் சாதாரணப் பள்ளியிலேயே இந்தக் குழந்தைகள் பள்ளியிறுதி வகுப்பு வரை படிக்க வேண்டியதாக உள்ளது. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தால் ஸ்க்ரைப் (உதவியாளர்) மூலமாகப் பத்தாம் பரிட்சை எழுதவும் விதிகள் அனுமதிக்கின்றன.
'நூறுடன் ஐந்தைக் கூட்டினால் எவ்வளவு வரும்?' என்று ஒரு இளைஞனிடம் கேட்டோம் அவன் 'கற்றல் குறைபாடு உடையவன்' என்று மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தான். ஸ்கிரைப் வைத்து பத்தாம் வகுப்பு பாஸாகி அதன் பின் எப்படியோ அரசுப் பொதுத்தேர்வும் எழுதித் தேர்வாகியிருந்தான். வேலைக்கான அனுமதி கடிதத்துடன் உடல்தகுதி பரிசோதனைக்கு அவன் வந்தபோதுதான் அவனிடம் ஒரு காகிதத்தில் நூறையும் ஐந்தையும் கூட்டினால் என்ன வரும் என்று எழுதச் சொன்னோம். 1005 என்று எழுதினான். இவ்வளவுக்கும் அவன் வந்திருந்தது இளநிலை உதவியாளர் பணிக்கு. அந்தப் பணிக்கு இவன் தகுதியானவன் இல்லை எங்களால் சான்றிதழ் வழங்க முடியாது என்று மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெற்றோர் கேட்கவில்லை. கஷ்டப்பட்ட பையன், முடியாத பையன், எப்படியாவது சர்டிபிகேட் போட்டுக் கொடுங்கள் என்று பிடிவாதம் பிடித்தனர். அதன்பின் அவனை மாவட்ட அளவில் செயல்படும் மருத்துவக் குழுவுக்கு மேல்பரிசோதனை செய்யவேண்டும், வேறு சில டெஸ்டுகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம்.
மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு என்பது மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த இளைஞன் இளநிலை உதவியாளராக எப்படிப் பணி புரிவான்? அன்றாடம் அதில் அவன் என்னென்ன இடையூறுகளை சந்திக்க நேரிடும்? எவ்வளவு அவமானங்கள் வந்து போகும்? வேலை என்று ஆரம்பித்து அதில் குளறுபடிகள், வேலைநீக்கம் போன்றவை ஏற்பட்டால் அவனது நிலை என்ன? அதை விட ஒரு அலுவலக உதவியாளராகவோ ஒரு பண்டகத்தின் பொறுப்பாளராகவோ அவன் பணியை மாற்றியமைக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் எங்களுக்கு.
குறுக்கு வழியிலேயே சிந்தித்துப் பழகிய நம் சமூகத்தால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த குறைபாடு இருக்கிறது சிறப்புப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆரம்ப நிலையிலேயே கூறினாலும் கூட, சில பெற்றோர் இவ்வளவு ரூபாய் தருகிறேன் என் குழந்தையை எப்படியும் பாசாக வைத்துவிடுங்கள், அவன் ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். பொறுமையாக எடுத்துக் கூறியும் கேட்காத அவர்களிடம் இந்தக் கட்டுரையின் முதல் வரியைத் தான் கூறுவோம். ஒரு கோழியை குட்டி போட வைத்துக் கூட்டி வாருங்கள், ஒரு யானையை அடைகாக்க வைத்து யானைக் குட்டியை முட்டையிலிருந்து பொரிக்க வையுங்கள், உங்
கள் குழந்தையும் டிகிரி வாங்கி விடலாம் என்று.
கோழியை முட்டையிடாமல் நேராக கோழிக்குஞ்சைப் பெற்றெடுக்கச் செய்ய முடியுமா? யானை ஒன்றை முட்டை போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்து குஞ்சு பொரிக்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா.. அதேபோல்தான் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கஷ்டப்படுத்தி படிக்க வைக்க நினைக்கும் விஷயமும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு செய்தி நினைவிருக்கலாம். ஹிந்தி மொழியைச் சரியாக எழுதப் படிக்கத் தெரியாததால் ஆசிரியை தொடர்ந்து கண்டிக்க, சிறுவன் ஒருவன் அந்த ஆசிரியையைக் கத்தியால் குத்தி விட்டான் என்பதே அந்தச் செய்தி. அப்போது அவனை நெருக்கடி நிலைக்கு ஆளாக்கிய கல்வி நிர்வாகத்தின் மீதும் அப்படி அவனை வளர்த்த பெற்றோர் மீதும் வரிசையான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன.
அந்தச் சிறுவனை அதன்பின் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின் தான் தெரிந்தது, அவனுக்குக் குறிப்பிட்ட மொழியைக் கற்பதில் குறைபாடு (Dyslexia) இருக்கிறது என்பது.
கற்றல் குறைபாடு என்பது பல வகைகளில் ஏற்படக்கூடும். பெரும்பாலானவை பிறப்பிலேயே நிகழ்வது. மரபணுக் கோளாறுகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இன்னொரு வகை, வளர்ச்சியின் போது மூளை சந்திக்கும் சில விபத்துகளால் நிகழ்வது(developmental). சில குழந்தைகளுக்கு பார்வைக்கான மூளையின் சிறப்பு பகுதியில் (visual cortex) ஏதோ கோளாறு இருப்பதால் காணும் காட்சிகளை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த குழந்தைகளால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாது.
இதேபோல் கேட்டலுக்கான மூளையின் பகுதியில் (auditory cortex) ஏற்படும் ஒருங்கிணைப்புக் கோளாறால், காதில் கேட்கும் விஷயங்களைப் பதிவு செய்து கொள்வதும் அதற்கேற்ப செயல்படுவதும் சில குழந்தைகளுக்குக் கடினம்.
உங்கள் அன்றாட வாழ்வில் பார்த்திருப்பீர்கள், சிலருக்கு வலது எது இடது எது என்பதில் அடிக்கடி குழப்பம் நேரிடும். வண்டியில் தானாகச் செல்லும் போது வழக்கத்தின்படி சென்று விடுவார், ஆனால் வாகனத்தை வேறு ஒருவர் செலுத்த, அருகில் அமர்ந்திருப்பவரிடம் ரைட்டா, லெஃப்ட்டா என்று கேட்டால் சட்டென்று சொல்ல வராது. அதைப்போன்ற ஒரு விஷயம் தான் இதுவும்.
சில வகைக் குறைபாடுகளில் பேனா பிடித்து எழுதுவது சிரமமாக இருக்கும் (dysgraphia). ஆனால் பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல் ஆகிய மற்ற அனைத்தும் சிறப்பாக வரும். எனக்கு கணக்கு வரவே வராது என்பவரா நீங்கள்? அவன் கணக்கில் புலி என்று இன்னொருவரை கூறுகிறீர்களா? அவனுக்கு இயல்பிலேயே மூளையில் கணிதத்திற்கான பகுதிகள் தனித்தன்மையுடன் வளர்ந்திருக்கலாம்.
சில தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பத்தும் பத்தும் எவ்வளவு என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் ஆளுமை, பேச்சு போன்ற விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். கணிதத்தில் திறமையான ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு தங்கள் தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பார்கள். அவரது குறைபாடு நெருங்கிய இருப்பவர்களுக்கு கூட தெரியாது. இதேபோல கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளையும் கூரிய திட்டமிடல் மூலம் அணுகலாம்.
படிப்பதில், பழகுவதில் வித்தியாசமாக காணப்படும் குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா குழந்தைகள் என்பதை எப்படி சந்தேகிப்பது?
*அந்த குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கியது? அம்மா அப்பா சாப்பாடு வேணும் போன்றவற்றை எப்பொழுது தானாகக் கேட்டது?
*ஒன்றுபோல் ஒலிக்கக் கூடிய இரு வேறு வார்த்தைகளை குழந்தை அடையாளம் கண்டுகொள்கிறதா?
*புதிய வார்த்தைகளை விரைவில் கற்றுக் கொண்டதா?
*கரும்பலகை அல்லது புத்தகத்தில் இருக்கும் எழுத்துக்களை பார்த்து அதேபோல் தன்னுடைய குறிப்பேட்டில் எழுத முடிகிறதா? நாம் சொல்வதை எழுத முடிகிறதா?
*பிடித்த கதை அல்லது காணொலி இவற்றை மறுபடியும் அந்தக் குழந்தையால் நினைவுக்குக் கொண்டுவந்து சொல்ல முடிகிறதா?
*இடது கை அல்லது வலது கை பழக்கம் இரண்டில் ஒன்று உறுதியாக உருவாகி விட்டதா? (Handedness)
*முறையான விளையாட்டுக்கள்- இந்த வட்டத்துக்குள் ஓடவேண்டும், இரண்டு கோடுகளுக்கு நடுவில் நடக்க வேண்டும் போன்றவற்றை செய்ய முடிகிறதா?
இதுபோன்ற சிறிய விஷயங்களைக் கவனிப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு மேற்கொண்டு பரிசோதனைகள் எதுவும் தேவையா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் ஒன்றிற்கு ஒரு சிறுவனை ஒரு ஆசிரியை அழைத்துவந்தார். அந்தச் சிறுவன் அதற்கு முன்பாக இரண்டு மூன்று தனியார் பள்ளிகளில் படித்ததாகவும், சரியாகப் படிக்காததால் அடிக்கடி அடி வாங்கியதாகவும் பெற்றோர் கூறியிருக்க, இந்த அரசுப் பள்ளி ஆசிரியை தான், "அடிச்சு பிரயோஜனம் இல்லை.. அவனுக்கு ஏதோ குறைபாடு இருக்கு" என்று கூறி முகாமுக்கு பெற்றோருடன் வரச்சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார். அவனுக்கு சில அடிப்படை சோதனைகள் செய்த போது கற்றல் குறைபாடு இருப்பது தெரிந்தது.
இப்படிப்பட்ட குழந்தைகளை அணுகுவது உண்மையில் முள் மேல் நடப்பது போலத்தான். அவர்களுக்கான பரிசோதனைகளைச் செய்வதற்கு கூட நல்ல மனநிலை, நல்ல சூழல், முன்தயாரிப்புகள் இவை முக்கியம். அதைவிட குழந்தையின் குறைபாட்டை புரிந்துகொள்ளும் பெற்றோரும் அதற்கான மாற்று வழி முறைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் சுற்றத்தாரும் நிச்சயம் வேண்டும். எல்லா குழந்தைகளையும் போல அவனால் முதல் மதிப்பெண் வாங்குவதோ சாதாரணக் குழந்தைகளுக்கானதாக வரையறுக்கப்பட்டுள்ள டிகிரியை வாங்குவதோ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கணிதத்தில் கற்றல் குறைபாடு உடைய சில குழந்தைகள் மொழிகளை நன்றாகப் படிக்க முடியும். அதேபோல் எழுத்து, பேச்சு இவற்றில் அதிகக் குறைபாடு உள்ள குழந்தைகளை கைவினைப் பொருட்கள் செய்தல், கலைகள், உடலுழைப்பு போன்றவற்றில் முறையாகப் பயிற்சியளித்தால் வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் மையங்களும் ஆசிரியர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர். அதைத் தேடித் கண்டுபிடிக்க முனைப்பு தேவை.
பெரும்பாலான நேரங்களில் சாதாரணப் பள்ளியிலேயே இந்தக் குழந்தைகள் பள்ளியிறுதி வகுப்பு வரை படிக்க வேண்டியதாக உள்ளது. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தால் ஸ்க்ரைப் (உதவியாளர்) மூலமாகப் பத்தாம் பரிட்சை எழுதவும் விதிகள் அனுமதிக்கின்றன.
'நூறுடன் ஐந்தைக் கூட்டினால் எவ்வளவு வரும்?' என்று ஒரு இளைஞனிடம் கேட்டோம் அவன் 'கற்றல் குறைபாடு உடையவன்' என்று மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தான். ஸ்கிரைப் வைத்து பத்தாம் வகுப்பு பாஸாகி அதன் பின் எப்படியோ அரசுப் பொதுத்தேர்வும் எழுதித் தேர்வாகியிருந்தான். வேலைக்கான அனுமதி கடிதத்துடன் உடல்தகுதி பரிசோதனைக்கு அவன் வந்தபோதுதான் அவனிடம் ஒரு காகிதத்தில் நூறையும் ஐந்தையும் கூட்டினால் என்ன வரும் என்று எழுதச் சொன்னோம். 1005 என்று எழுதினான். இவ்வளவுக்கும் அவன் வந்திருந்தது இளநிலை உதவியாளர் பணிக்கு. அந்தப் பணிக்கு இவன் தகுதியானவன் இல்லை எங்களால் சான்றிதழ் வழங்க முடியாது என்று மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெற்றோர் கேட்கவில்லை. கஷ்டப்பட்ட பையன், முடியாத பையன், எப்படியாவது சர்டிபிகேட் போட்டுக் கொடுங்கள் என்று பிடிவாதம் பிடித்தனர். அதன்பின் அவனை மாவட்ட அளவில் செயல்படும் மருத்துவக் குழுவுக்கு மேல்பரிசோதனை செய்யவேண்டும், வேறு சில டெஸ்டுகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம்.
மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு என்பது மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த இளைஞன் இளநிலை உதவியாளராக எப்படிப் பணி புரிவான்? அன்றாடம் அதில் அவன் என்னென்ன இடையூறுகளை சந்திக்க நேரிடும்? எவ்வளவு அவமானங்கள் வந்து போகும்? வேலை என்று ஆரம்பித்து அதில் குளறுபடிகள், வேலைநீக்கம் போன்றவை ஏற்பட்டால் அவனது நிலை என்ன? அதை விட ஒரு அலுவலக உதவியாளராகவோ ஒரு பண்டகத்தின் பொறுப்பாளராகவோ அவன் பணியை மாற்றியமைக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் எங்களுக்கு.
குறுக்கு வழியிலேயே சிந்தித்துப் பழகிய நம் சமூகத்தால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த குறைபாடு இருக்கிறது சிறப்புப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆரம்ப நிலையிலேயே கூறினாலும் கூட, சில பெற்றோர் இவ்வளவு ரூபாய் தருகிறேன் என் குழந்தையை எப்படியும் பாசாக வைத்துவிடுங்கள், அவன் ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். பொறுமையாக எடுத்துக் கூறியும் கேட்காத அவர்களிடம் இந்தக் கட்டுரையின் முதல் வரியைத் தான் கூறுவோம். ஒரு கோழியை குட்டி போட வைத்துக் கூட்டி வாருங்கள், ஒரு யானையை அடைகாக்க வைத்து யானைக் குட்டியை முட்டையிலிருந்து பொரிக்க வையுங்கள், உங்
கள் குழந்தையும் டிகிரி வாங்கி விடலாம் என்று.
Author: SudhaSri
Article Title: டிஸ்லெக்சியா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: டிஸ்லெக்சியா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.