• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Subha Balaji

Active member
Joined
Jun 30, 2024
Messages
124
சுயம்பு-19

"நான் உனக்கு யாருமே இல்லையா கா.." என்ற அபிமன்யுவின் குரலை கேட்டு சந்தோஷமாக அங்கு வந்த டாக்டர் மல்ஹோத்ரா "கொஞ்சம் நீங்க வெளில இருந்தா நான் இவரை செக் பண்ண வசதியா இருக்கும்.." என சொல்ல...

அதை கேட்டு ஸ்வேதாவும், கவுதமும் அங்கிருந்து நகர்ந்து வெளியே நிற்க..பத்து நிமிடங்கள் அவனை பரிசோதித்த மல்ஹோத்ரா அவர்களை மறுபடியும் உள்ளே கூப்பிட..

வந்தவர்களிடம் "ஹி இஸ் பர்பெக்ட்லி நார்மல் நவ்..வில் ஷிப்ட் ஹிம் ட்டூ நார்மல் ரூம் டூமாரோ.."என சொல்லி..அவர்களுக்கு அபிமன்யுவிடம் பேச சில நிமிடங்கள் அனுமதி தந்து நகர்ந்தார்.

அவர் நகர்ந்ததும் அவர் கூடவே வெளியே வந்த கவுதம் அவரிடம் "டாக்டர்... உத்ரா இங்க இருக்கானு சொன்னீங்களே..எப்ப வருவாங்க.." என கேட்டான்..

அவர் "எஸ்..அவங்களுக்கு இன்னிக்கு ஆஃப்..நாளைக்கு மார்னிங் செவன் ஓ க்ளாக் ட்யூட்டிக்கு வந்திடுவாங்க.." என்றவர்..

நீங்க தப்பா நெனக்கலேனா.. சொல்லலாம்னு உத்ராவுக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்ஷிப்னு எனக்கு சொல்ல முடியுமா.."



"அன்னிக்கு டாக்டர் அபிமன்யுவை முதல்ல பார்த்தும் அதிர்ந்த உத்ரா அப்பறம் அவரை பத்தின இன்போ எதுவும் தெரியலனு பேசிட்டு இருக்கும் போதே..யோசிக்காம சட்டுனு எல்லா தகவல்களையும் சொன்னாங்க..அப்ப அவங்க தன்னை மறந்து போய் இருந்ததால அவங்களுக்கு என் கிட்ட சொன்னது கூட மறந்திருச்சு.."

"நேத்திக்கு டாக்டர் அபிமன்யு பக்கத்துல எதுவும் பேசாமல் அவரை பாத்துட்டே இருந்தாங்க..அதான் கேக்கறேன்.."என தான் கேட்க வந்ததை கேட்டு முடித்தார்.

அவர் கேட்டது எல்லாவற்றையும் கவனமாக கேட்ட கவுதம் மெல்லிய குரலில் "உத்ரா என்னோட சிஸ்டர்.. ஸ்வேதா, அபிமன்யு ரெண்டு பேரும் எங்க கஸின்ஸ்.."என சொன்னதும்..

"அபிமன்யு கஸின் மட்டும் தானா..இல்ல..அவங்களுக்கும் உத்ராவுக்கும்.."என இழுக்க..

அதில் கேள்வியாக பார்த்தவனிடம் "ரெண்டு நாளா உத்ரா அலையறதை பாக்க முடியல..ரொம்ப வேதனையா இருக்கவே அவுட் ஆஃப் க்யுரியாசிட்டில தான் கேக்கறேன்..மத்தபடி நோ காஸிப்.."என சொல்லி சிரிக்க..

அவரின் கைகளை பிடித்த கவுதம்.."நீங்க யாரு..எவ்ளோ நல்லவர்னு இங்க வந்த கொஞ்ச நேரத்துல எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு..நீங்க காஸிப் பண்ண வாய்ப்பில்லனு தெரியும்.." என்றவன்

மெல்ல தங்களது குடும்ப விவரங்கள், உத்ராவை பற்றிய விவரங்கள், ஸ்வேதா மற்றும் அபிமன்யுவிடம் அவளுக்கு இருக்கும் அளவில்லாத பாசம்..என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

அபிமன்யுவின் அருகில் வந்த ஸ்வேதாவை பார்த்தவன் முகத்தை திருப்பி கொள்ள...பக்கத்தில் உட்கார்ந்து அவனை சமாதானம் செய்த ஸ்வேதாவை பார்த்து "உங்க எல்லாருக்குமே...அவ தான் வேணும்ல்ல...அவளுக்காக தான் எல்லாமே..."என வேதனையோடு சொல்ல..

அதில் அதிர்ந்த ஸ்வேதா "இல்ல...மனு...அப்டி இல்ல..... அவ சின்ன வயசுலேந்து எவ்ளோ கஷ்டப்பட்டானு உனக்கே தெரியும்ல்ல..."

"நம்மளால ஆன ஒரே விஷயம் அவளோட கவலையை மறக்க வெச்சு சந்தோஷமா இருக்க வெக்கறது தான்னு நம்ம அப்பா முடிவு பண்ணி அவளை பத்திரமா பாத்துக்கிட்டார் தானே..."

"நாமளும் அவருக்கு ஹெல்ப் பண்ணோம்..ஆனா..அவ இரக்கமில்லாம நம்மை விட்டுட்டு வந்து..குடும்பத்துல எல்லார்க்கும் தீராத வேதனையை தருவானு நாம கண்டோமா.." என ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கும் போதே..

மறுபடியும் உள்ளே வந்த மல்ஹோத்ரா "டாக்டர் கவுதம்..உங்களுக்கு தெரியாதது இல்ல...அவர் இப்ப தான் கண் முழிச்சிருக்கார்..ஒரு ப்ராக்சர், லிகமண்ட் டேர், கொஞ்சம் அங்கங்க ஸ்க்ராச்சஸ் இருக்கறதால பாடி பெயின்னால ரொம்ப டயர்டா இருக்கும்...இப்ப அவருக்கு ட்ரிப்ஸ் தான் போகும்...அதனால அலோ ஹிம் ட்டூ ஸ்லீப் ஃபார் எ வைல்.."

"ஏற்கனவே லேட் நைட் ஆகிருச்சு...நீங்களும் லாங் ட்ராவல் பண்ணி வந்திருப்பீங்க...டயர்டா இருக்கும்...எப்டியும் இன்னும் ட்டூ வீக்ஸ் அவர் ஹாஸ்பிடல்ல தான் இருக்கணும்..அதனால அவர் கிட்ட என்ன பேசணுமோ..அதை ப்ரஷர் போடாம..பொறுமையா பேசுங்க ப்ளீஸ்.....நாளைக்கு நார்மல் ரூம்க்கு மாத்தின பின்னால ஈவினிங் ஃபோர் ஓ க்ளாக் வந்து பாருங்க.."என்றதும்..



அவரிடம் இருந்து விடை பெற்று கிளம்பியவர்கள் ஏற்கனவே ஹாஸ்பிடல் பக்கத்தில் ஐந்து நிமிட நடையில் இருந்த ஒரு ஹோட்டலின் தங்களுக்கும், ட்ரைவருக்கும் தனி தனியாக ரூம் புக் செய்திருக்க..

ஹோட்டலுக்கு போய் செக் இன் செய்து கவுதம் ஸ்வேதா, வந்த அலுப்பு தீர குளித்து, உணவை ரூம்க்கு வரவழித்து சாப்பிட்டு, தாங்கள் பத்திரமாக ஊருக்கு வந்து சேர்ந்தது நண்பருக்கு போன் செய்து தெரிவித்து, ஊருக்கும் போன் செய்து எல்லா விவரத்தையும் சொல்லி விட்டு குழந்தைகளின் நலனை விசாரித்து விட்டு படுத்தது தான் தெரியும்... அடுத்த சில நிமிடங்களில் தூங்கி போனார்கள்.

மறுநாள் காலை அழகாக விடிய.. காலையில் எழுந்து குளித்து தயாராகி, ட்ரைவரையும் அழைத்து அவரோடு சாப்பிட்டதும், ட்ரைவரை வர வேண்டாம் ரூமிலேயே ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு மாலை வரை நேரத்தை கஷ்டப்பட்டு கடத்தியவர்கள் மணி நாலு ஆனதும் ஹாஸ்பிடல்க்கு கிளம்பினார்கள்.

அங்கு போனதும் ரிசப்ஷனை அணுகி அபிமன்யுவின் பேரை சொல்லி விவரம் கேட்க..அவனை நார்மல் ரூம்க்கு மாற்றி விட்டதாகவும், பார்க்க வேண்டும் என்றால் பர்ஸ்ட் ஃப்ளோர் ரூம் நம்பர் 104க்கு போக சொல்ல..அவர்களுக்கு அங்கிருந்து நகர்ந்தார்கள்.

அவனுடைய ரூம்க்கு போனதும் உள்ளே பார்க்க..அபிமன்யு கண் விழித்து படுத்து கொண்டிருந்தான். இவர்களை பார்த்து வரவேற்பாக தலையசைக்க..உள்ளே போய் அவனருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டனர்.

ஸ்வேதா "எப்டி மனு..திடீர்னு சம்பந்தமே இல்லாம..இங்க வந்த.."என கேட்க..

இந்த கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் "உத்ரா இங்க இருக்கானு கேள்விபட்டு தான் இங்க வந்தேன்.."என்றான்

"நீ இருந்தது டெல்லில..உனக்கு யார் சொன்னா.."என கேட்க

அபிமன்யு "வினித்ரா அக்கா...அத்தானோட பேட்ச் மேட்.."

"அவங்களுக்கு எப்டி உத்ரா இங்க இருக்கறது தெரியும்" என சந்தேகமாக ஸ்வேதா கேட்க..

"அவங்க தான் உத்ரா கிட்ட இங்க இருக்கிற வேகன்ஸி பத்தி சொல்லி அப்ளை பண்ண சொல்லி இருக்காங்க.."என்றதும்..

"அவங்க சொன்னாங்களா..அவங்க தான் அவளை இங்க அனுப்பிச்சாங்கனா.."என யோசிக்க..

"நான் ரெண்டு மாசத்துக்கு முன்னால வினித்ரா அக்காவை பாத்தேன்..அவங்க ஃபேமிலியோட டெல்லிக்கு வந்திருந்தாங்க..நான் சாப்பிட ரெஸ்டாரன்ட்க்கு போகும் போது பக்கத்து டேபிள்ல அவங்க இருந்தாங்க.."

"ரொம்ப சர்ப்ரைஸ் ஆகி..நாங்க ரெண்டு பேரும் பாத்து பேச...அவங்க ஃபேமிலி என்னை இன்ட்ரோ குடுத்தவங்க..உன்னை பத்தி, அத்தானை பத்தி எல்லாம் கேட்டுட்டு இருந்தாங்க.."

"காலேஜ் டேஸ் மெமரிஸ் பேசிட்டே இருக்கும் போது ஒரு தடவை அவங்களுக்கும் உத்ராவுக்கும் வந்து சண்டையை சொன்னவங்க..திடீர்னு ஏதோ நியாபகம் வந்த மாதிரி தான் மூணு வருஷத்து முன்னால உத்ரா கிட்ட ஜென்ட்ரலா வாட்ஸ்அப்ல பிங்க் பண்ணி பேசிட்டு இருக்கும் போது..இந்த ஹாஸ்பிடல் பத்தி பேசி இருக்காங்க...அவங்க ஆர்த்தோவா இங்க தான் ஒர்க் பண்ணி இருக்காங்க.."

"அதுக்கு பிறகு அவங்க ஹஸ்பண்ட்க்கு ட்ரான்ஸ்பர் வரவே..அவங்க இங்கே இருந்து கிளம்ப போறதாகவும்..நம்ம சர்க்கிள்ல யாராவது நல்ல ஆர்த்தோ டாக்டர் இருந்த அவங்க கிட்ட இங்க வேகன்ஸி இருக்கற மெசேஜ் பாஸ் பண்ண சொல்லி இருக்காங்க.."

மொதல்ல யாராவது தெரிஞ்சா சொல்றேன்னு சொன்ன உத்ரா..ஒரு மாசத்துல திடீர்னு அவங்களுக்கு போன் பண்ணி அந்த வேகன்ஸி இன்னும் இருக்கானு கேட்டு இருக்கா...வேகன்ஸி இருக்குனு வினித்ரா அக்கா சொன்னதும் அவங்க மூலமாவே அப்ளை பண்ணி தங்கறத்துக்கு வீடும் ஏற்பாடு பண்ண சொல்லி இங்க கிளம்பி வந்துட்டா.." என சொல்லி முடித்தான். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top