• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின் கவி_விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
#அறம்_பொருள்_இன்பம்
# பனாரஸ்
# திருமதி அப்சரஸ்பீனா லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்
#கதைத்தறி போட்டிக் கதை

துள்ளலான நடையில்
தான் காதலை
தெரியப்படுத்த
துடிக்கும் வேளையில்
துயரமான சம்பவம்....
துக்கத்தில் தொடங்குகிறது.....

தோழியா என் காதலியா
தெளிவாக சொல்லாமல்
தொலைந்த சோகம் என்னவோ....

தெரியாத பந்தம்
தீராத சோகம்
தாங்காத பாரம்
தவிக்கும் நேரம்...

துன்பம் தந்த இடத்தில்
துயரத்தோடு இருந்தால்
தீருமோ கவலை
தள்ளி சென்றால்
தெளிந்திடுமோ மனம்....

தாய் தந்தையின்
தவிப்பில்
தன்னை மீட்டெடுக்க
தந்தை சொல் ஏற்று
தனித்து ஒரு பயணம்
தன் பாட்டியை நோக்கி ....

மனமாற்றத்திற்கு
மதுரை வந்தவனுக்கு
மது என்ற மாதுவால்
மாற்றம் நிகழ்ந்தததா???
மனதில் இருந்த பாரம்
மறைந்து போனதா???

சிறுவயதிலிருந்தே
செல்ல சண்டை போட்டு
சூழ்நிலையால்
சற்றென்று மாறும் மனதில்
சில்லென்று காதல் பிறக்க
சொல்லும் முன்னே சிதைந்து போன நிலா....


வலி நிறைந்த
வாழ்வில்
வழி இருக்கு
வாழ என்று சொல்லி
வந்த வஞ்சி இவள் மது...

காதலிக்காமல்
காதலைச் சொல்லாமல்
காதலியை இழந்து
காதல் வலி கொண்டு கண்ணீர் வடிக்கும்
காளை இவன் கிருபா



காதல் அழகான சொல்
காதலித்து கல்யாணம் செய்தாலும் சரி கல்யாணத்திற்கு பிறகு காதலித்தாலும் சரி
காதல் என்றும் அழகு...

காதல் என்பது அறம்
காதல் என்பது நம்பிக்கை
காதல் என்பது தவம்....

காதலை நம்பி கைப்பிடித்த கணவனுடன் கல்யாணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டாலும் இஷ்டமாக வாழ்வதே காதல்
வாழ்வின் அறம்
ராதாகிருஷ்ணனின் காதல் காவியம்....

காதல் என்ற ஒன்று கனவிலோ நினைவிலோ
கானல் நீராகி
கைநழுவிச் சென்றாலும்
காதலுடன்
காதலை நினைத்து வாழ்வதும்
காதலே
சுந்தரவல்லி காதல் தாய்மை....

கல்யாணத்திற்குப் பிறகு கை பிடித்த மனைவியின் ஆசைகளை நிறைவேற்றி சுயமாய் நிற்க வைத்து அழகு பார்க்கும் கணவனின் காதல் வரம்
சேது ❤️சித்ரா


காதலின் நம்பிக்கையில் கணவனின் அறத்துடன் பொருளீட்டி இன்பமாய் வாழ்வதே வாழ்வியல்....

மிஸ்டர் கிருபா
மிஸ் மது
மனதில் நிறைந்து விட்டார்கள்....

அறத்துடன் ஈட்டும்
அனைத்து பொருளும்
அழகிய இன்பத்தை
அள்ளி தரும்.....

அன்பு செய்யும் மனதில்
அள்ளி தரும் இன்பம்
அறத்தை சார்ந்தது .....

நாலடியார் கூறும்
நான்கு வரி
நல்லொழுக்கம் சொல்லும்
நன்னெறி கதையாக
நல்ல கருத்தை கூறும்
நிதர்சன கதை....


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻💐🤩
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி_விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom