• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -8

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
22
கடல் தேடும் மீன்கள் -8

இரண்டு வருடங்களுக்குப் பின்.,

திருமணம் நின்றுபோனதில் கரிகாலனுக்கு நன்மைதான். "துஷ்டரைக் கண்டால் தூர விலகு" என்பார்களே ! அது போல அலுவலகத்தில் இருந்த தீய மனிதர்களின் பிடியில் இருந்து வெளியில் வந்து விட்டான்.
இன்னொரு நன்மை ரூபாவும் திருமணம் செய்வதற்கு முன்பே ஓடி விட்டாள் . இல்லை என்றால் விவாகரத்து, கோர்ட்டு, கேசு என்று இன்னும் மன உளைச்சல் அதிகமாகி இருக்கும்.

இந்த இரண்டு வருடங்களில் அந்தத் தாக்கத்தில் இருந்து நம் நாயகன் முழுவதுமாக வெளியில் வந்து விட்டானா என்றால் தெரியவில்லை. கௌதம் மேனனின் படங்களில் வருவது போல முதல் காதல் அத்தனை எளிதில் விட்டு விடுமா?

இந்த சினிமா வசனமெல்லாம் நமக்கு செட்டாகாது. கற்பனை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு வாங், விஷயத்துக்கு போகலாம்.

கொஞ்சம் செய்தித் தாள் படிக்கலாமா? மூளையாவது வளரும். உங்களுக்கு இல்லை மக்களே! எனக்கு🫡


சென்னையில் அழகிகள் கைது. அதில் நம் ரூபாவின் பெயர் இருந்தது. செய்தியைப் பார்த்து சந்தேகப்பட்டு அவசரமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தான் கரிகாலன். செல்லும் வழியெல்லாம் மனதில் பதட்டம். பெயர் இல்லை. புகைப்படத்தில் பாதி மூடியிருந்த முகம். 'இது அவளா இருக்கக் கூடாது கடவுளே !' காவல் நிலையம் நெருங்க நெருங்க உடம்பில் பதட்டம். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளேப் போனான். கை கால் நடுக்கம் இல்லை. ஆனால் அடுத்த அடிகள் வைக்க வேண்டாம். மூளையும் கால்களும் கெஞ்சின. உடல் மொத்தம் வியர்வைக் கொட்டியது. உதடு உலர்ந்து வார்த்தைகள் வரவில்லை. இவன் பதட்டமாக அங்கே இருந்த ஒரு காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான், காவல் ஆய்வாளர், அவளிடம் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு ஆடையை சரிப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான். அவளும் தான் . கீழே கிடந்த அந்த ஷிபான் சேலையை நொடியில் உடுத்தியவள் அடுத்த நிமிடம் எதுவும் நடக்காதது போலவே வெளியில் வந்தாள். 'போலீஸ்காரன் அடியும் தாங்க முடியல. பிடியும் தாங்க முடியல'. மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

நிமிர்ந்துப் பார்த்தவள் கண்ணில் பட்டான் கரிகாலன். பெயருக்கு ஏற்றத் தோற்றம் கொண்டவன் தான்.

"இவர்கிட்ட ஒரு நிமிஷம் தனியா பேசிட்டு வரவா ?"

"போ " இளக்காரமாக பதில் வந்தது.

இரண்டு நிமிடங்களுக்கு முன்பு தன்னை ஆராதித்தவனா? என்ற கேள்வி அவளுக்கு வரவில்லை . இதை போன்ற பலரையும் அவள் பார்த்து விட்டாள் .

அவளுக்கு உதட்டில் லேசாக இரத்தம் வந்தது. கழுத்தில் நகக் கீறல்கள். பார்த்தவனுக்கு மனம் தாங்கவில்லை. கரிகாலன் அவளிடம் எத்தனையோ கெஞ்சினான்.

"என்ன ரூபா இது?" அவனுக்குத் தெரிந்தே கண்கள் கண்ணீரைக் கொட்டியது.

"தெரியல? உன்ன ஏமாத்தினத்துக்கு தண்டனை. என்னோட திமிருக்கு நானே வச்சுக்கிட்டா ஆப்பு " அவள் கண்களும் குளமாகியது. வெளியில் வருவதற்கு என்னிடம் சரக்கு இல்லை என்று எப்போதோ வேலை நிறுத்தம் செய்தக் கண்ணீர். இப்போது இவனைப் பார்த்ததும் வெளியில் வந்து விட்டது.

"எங்க போய் யார்கிட்ட பேசணும்னு சொல்லு. என்ன பணம் கேட்டாலும் கொடுத்துட்டு நான் உன்னை கூட்டிட்டு போறேன். கைல கால்ல விழுந்தாவது கெஞ்சி எப்படியாவது உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். உங்க அம்மா அப்பா கிட்ட நான் பேசுறேன்"

அளவுக்கு மிஞ்சிய வருத்தத்துடன் பேசியவன் கண்களை கூர்ந்து நோக்கினாள் .

"எப்படி! அப்பு படத்துல வர பிரசாந்த் மாதிரி என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிக்கிட்டு போக போறீங்களா ?"

அவன் கண்கள் அவளை பரிதாபமாகப் பார்த்தன.

அத்தனை காதல், அத்தனை அன்பு இதேக் கண்களில் அவள் பார்த்திருக்கிறாள். அவன் கண்களை பார்த்து பேசி நம்பிக்கை துரோகம் செய்தவளால் இப்போது அவனின் பார்வையைக் காண முடியவில்லை. அவன் முகத்தை கண்களை அது பார்க்கும் பார்வையை காண முடியாமல் அவ்வபோது தலையைக் குனிந்துக் கொண்டாள். இதுவும் வெட்கம் தான் இல்ல !

அவளேப் பேச்சைத் தொடர்ந்தாள் .

"அந்த படம் பாத்திருக்கீங்களா? அதுல மகாராணின்னு ஒரு கேரக்டர். ரொம்ப பயங்கரமா இருக்கும். அதே மாதிரி இங்கையும் ஒரு கேரக்ட்ர் உண்டு. இந்த மகாராணி இப்ப வந்துரும் . "

சில நொடி மவுனத்தை அவளேக் கலைத்தாள் .

"நான் கொஞ்சம் கூட நன்றி இல்லாம உங்களுக்கு பண்ண துரோகத்துக்கு கடவுள் எனக்கு கொடுத்த இந்த தண்டனை சரிதான். எவனையோ நம்பி ஏமாந்து வந்தேன் . ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பான். அவனோட உயரம் ஹேர் ஸ்டைல் ,ட்ரெஸ்ஸிங் எல்லாமே மாஸ் தான் . அதைத்தானே எங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு பிடிக்குது . இல்ல! போனேன். அவன நம்பிப் போனேன். என்ன நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான் . அவன் மட்டும் இல்ல. அவன மாதிரி இன்னும் டக்கர் பசங்க வந்தாங்க . எல்லாம் பண்ணாங்க . அப்புறம் என்னை வித்துட்டானாம். மகாராணி தான் சொன்னா ."

அத்தனை நேரம் தெளிவாக பேசியது போல காண்பித்துக் கொண்டவன் தன்னை மீறி அழ ஆரம்பித்தாள் .

"ப்ளீஸ் ரூபா ! நீ எதை பத்தியும் பயப்படாதே . உனக்காக நான் இருக்கேன். யார்கிட்ட பேசணும் . இந்த போலீஸ்காரர் கிட்ட உதவி கேட்கலாமா ?"

அப்பாவியாக பேசும் அவன் கன்னத்தில் தன் கையை வைக்க வேண்டும் போல இருந்தது அவன் முகம் வரை தனது இரு கைகளையும் கொண்டு போனவள் கைகளை பின்னே எடுத்துக் கொண்டான் .
எத்தனை அழகானவர் இவர்?

"அந்த போலீஸ்காரர் கூட தான் இத்தனை நேரம் நான் இருந்தேன் " கண்களில் விரக்தி.

அப்போது அதிர வேண்டுமா ? சீ ! என்று அருவருப்பு பட வேண்டுமா ?
அவன் எதையும் யோசிப்பதற்கு முன்பு அவள் சொன்ன அந்த மகாராணி ஜல் ஜல் என்ற கொலுசு சத்தத்துடன் வந்தாள் . ஆணாக பிறந்து பிறகு பெண்ணாக மாறியவள் என்பது அவளின் நடை,உடையில் தெரிந்தது .

கரிகாலன் இப்படிப்பட்டவர்களை பார்த்து இதுவரை எப்போதும் ஏளனம் செய்தது இல்லை .உண்மையில் கஷ்டப்படும் சிலருக்கு அவனே கூட பல உதவிகள் செய்திருக்கிறான் . ஆனால் இவன் வேறு மாதிரி. ஆணும் இல்லை பெண்ணும் இல்லை ஏன் மனித பிறவியே இல்லை. வெற்றிலை பாக்கு மென்று கொண்டு வந்தவள் வாயிலில் நின்ற கரிகாலனை இளக்காரமாக ஏற இறங்க ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு சென்றான். இவள் வருவதை பார்த்த ரூபா பயந்து வேகமாக உள்ளே ஓடிவிட்டாள். அதுதான் மகாராணியின் சிறப்பு .

மகாராணி தெனாவட்டாக காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு பேசும் தோரணையே அங்கே அவளுக்கு எப்பேர்பட்ட ராஜ மரியாதை என்பதை விளங்க வைத்துவிட்டது . அடுத்த சில தினங்களுக்கு ரூபா தான் தனக்கு வேண்டும் என்று அந்த போலீஸ்காரன் சொல்லிக் கொண்டிருந்தான் .

சற்று நேரம் அங்கேயே காத்திருந்தவன் இறுதியில் அந்த காவல் அதிகாரியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் .

அந்த போலீசோ இவனிடம் ஏடா கூடமாக கேள்விகளை கேட்டான். நாம் யோசிக்கக் கூட தயங்கும் வார்த்தைகள் சர்வ சாதாரணமாக அவன் வாயில் இருந்து வந்தது.

"யார் நீ உன் பொண்டாட்டியா ? "

மற்ற கேள்விகள் இவனுக்கு உடம்பு முழுவதும் கம்பளிப்பூச்சி கூறுவது போல இருந்தது . இவன் அப்போதும் விடாமல் ரூபாவை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியதை மகாராணியும் காவல் அதிகாரிகள் சேர்ந்து சிரித்துக்கொண்டு நக்கல் அடித்தனர். மூலையில் நின்று கொண்டிருந்த ரூபாவுக்கு கரிகாலனின் நிலையை பார்த்து கண்களில் கண்ணீர் கொட்டியது .

இதற்கு மேல் இவர்களிடம் பேசி எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொண்டவன் கிளம்பி விட்டான். கண் எதிரில் ரூபா இருந்தும் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்பது அவனுக்கு பெரிய அடியாக இருந்தது . அப்படியே சில தினங்கள் கடந்து இருக்க அந்த காவல் அதிகாரியிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வந்தது.

மீன் இன்னும் துடிக்கும்................

இந்த பகுதி கொஞ்சம் கனமான பகுதி தான். இருந்தாலும் தப்பான வார்த்தைகள் இல்லாமல் இருக்க முயற்சித்திருக்கேன் . ஏதாவது தப்பா இருந்தால் மன்னிக்கவும்.
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom