Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -4
"நாத்தனார் வீட்டுக்கு அனுப்புவதா? "
அதனாலயே இனியாவுக்கு பல இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்த போதும் இவர்களே முழு செலவுகளையும் எடுத்துக்கொண்டு படிக்க வைத்தார்கள் . அதனால் தானோ என்னவோ தீபக், தீபா போல பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவுகள் எதுவும் இல்லாமல் நல்லவனை திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இவள் கவனம் முழுக்க இருந்தது .
இவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நல்லவன் கல்லூரிக்கு அடி எடுத்து வைத்திருந்தான் . அப்போதே அவனுக்கு எனக்கு ஆள் இருக்கு என்று பீற்றிக்கொள்வதற்காக இவளை பைக்கில் பின்னாடி வைத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான். இதைக் கண்டுக் கொண்ட அண்ணன் தீபக் தன்னுடைய தோழனின் அண்ணன் படிக்கும் ஒரு டியூஷன் சென்டரில் இவளை சேர்த்து விட்டான் அது மிகவும் கண்டிப்பான இடம் என்பதால் நல்ல மதிப்பெண் எடுத்து இனியா 10, 12 என்று பள்ளி வாழ்க்கையை கடந்து விட்டாள் . கல்லூரி வந்த போதும் குழலி அவளுக்கு தோழியாக கிடைத்ததால் அங்கும் ஓரளவு நன்றாகவேப் படித்தாள் . நல்லவனின் தலையீடு அதிகமாகவே இருந்தது. இருப்பினும் போதும் இனியா படிப்பில் கோட்டை விடவில்லை. நல்லவன் அவள் பெண்கள் கல்லூரியில் தான் சேர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த போதும் தீபக் அவளுக்கு ஆண்கள் பெண்கள் படிக்கும் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.
வீட்டுக்கு ஆண் பிள்ளையாக அவன் பேசுவதை யாரும் மறுத்து பேசியதில்லை தேவேந்திரன் உட்பட. அதற்குக் காரணம் அவன் ஒரு விஷயத்தை ஒரு விதமாக யோசிக்காமல் பலவிதங்களிலும் யோசிப்பான் அதேதான் தீபாவும் . எந்த விஷயத்தைப் பற்றியும் அவர்கள் இருவருக்குமே விவரமும் தெரியும் விவாதிக்கவும் தெரியும்.
அதனால் அத்தனை எளிதில் தீபக்கின் பேச்சை ஒதுக்கி விட முடியாது . தீபக் எடுத்த சரியான முடிவுகள் தான் இனியாவை முக்கியமான விஷயங்களில் காப்பாற்றி இருக்கிறது . அதுவே அவன் முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கும் பொழுது அவள் எடுக்க போகும் முடிவு எப்படி இருக்கும் நிச்சயம் தவறாகத்தான் இருக்கும் ?
மகளைப் பற்றி நிதானமாக யோசித்த அருணா ஒரு முடிவுக்கு வந்தார் . கையில் இருக்கும் காயம் ஆறவில்லை என்றால் மருத்துவரிடம் போகலாம்., அதேதான் மகளின் மனதிற்கும் தங்களால் சரிப்படுத்த முடியாத காயத்திற்கு வேறு எங்காவது சேர்த்து காயத்தை ஆறப் படுத்தினால் என்ன?
கணவனுக்கு தெரியாமல் தான் இந்த விஷயத்தை செய்ய வேண்டும். தீபக் தீபா இருவரும் பார்த்துக் கொள்வார்கள் . என்ன ஆனாலும் சரி கணவனுக்கோ அல்லது பார்வதிக்கோ தெரிந்து விடக் கூடாது. நல்லவனுக்கும் தான் . அவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் முதலில் அவர் தீபாவுடன் சேர்ந்து ஒரு கவுன்சிலரிடம் சென்றார்கள். அவர் தீபாவின் கல்லூரியில் பணி செய்பவர் . அவரிடம் பேசிய போது "பிரச்சனை அவளுக்கு என்று கூறாமல் உங்களுக்கு என்று கூறி அழைத்து வாருங்கள்" என்று கூறியதன் பேரில் அருணாவும் மகளிடம் பேசினார் .
"இங்க பாரு இனியா! நீ நல்லவன கட்டிக்க கூடாது.எனக்கு அது சுத்தமா பிடிக்கல உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காது ."
"நீ யாரு? வந்து என் வாழ்க்கை பத்தி முடிவெடுக்க? நான் இப்ப மேஜர். என்னால எது வேணாலும் செய்ய முடியும். என்ன நினைக்கிற? இந்த நாட்டுக்கே யாரு தலைவனா வரணும்னு முடிவு எடுக்குற முடிவு என்னிடம் இருக்கு. அப்புறம் எனக்கு புருஷனா வரணும்னு நீ சொல்றவனதான் கட்டிக்கனுமா? என்ன பேச்சு இது ? உனக்கு நல்லவன் மாமாவ பிடிக்காதுன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? இங்க பாரு உனக்கும் உன் நாத்தனாருக்கும் இருக்கிற பிரச்சனைய என் மேல திணிக்கப் பார்க்காதே . அத்தைக்கு முன்னாடி உன்னோட நிலைமை என்னன்னு தெரியுமில்ல? வாய மூடிக்கிட்டு இருக்கணும் .
சிப் ! வாயை மூடுவதுப் போல கைக் காட்டினாள்.
மகளின் இந்த திமிர் பேச்சு புதிதல்ல . நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறாள். மற்ற விஷயங்களில் அவள் வேறு மாதிரி பேசினாலும் அத்தை விஷயம் என்று வரும்போது அவளின் பேச்சும் நடவடிக்கையும் கணவனைப் போலவே திமிராக தான் இருக்கும் . "விட்டு தொலை சனியனே!" கை கழுவி விடவும் முடியவில்லை பெற்ற வயிறு பற்றி எரிகிறது . கண்ணீர் கொட்டுகிறது .மனதில் இருந்து ரத்தம் வருகிறது .
என்ன செய்ய ?
"ஆமா! நீ சொல்றது எல்லாமே கரெக்டு தான். உங்க அத்தை வந்தா என்னுடைய நிலைமை என்னங்கிறது நீ சொல்லி தான் எனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. நீ பொறக்குறதுக்கு முன்னாடில இருந்து உங்க அத்தையை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன் . அதுக்குத் தான் நீயும் அங்க அவகிட்ட போய் கஷ்டப் படக் கூடாதுன்னு தவிக்கறேன். "
"இப்ப நீ என்னதான் சொல்ல வர?" வழக்கம் போலவே கைகட்டி அமர்த்தலாக அன்னையைப் பார்த்து மிரட்டினாள் இனியா .
"நீ சொல்றது கரெக்ட் தான் எல்லாத்தையுமே நான் ஒத்துக்குறேன் இந்த நாட்டுக்கு யாரு தலைவனா வரணும் அப்படின்னு முடிவு எடுக்குற உரிமை உங்களுக்கெல்லாம் வந்துருச்சு. அதே மாதிரி உன்னுடைய வாழ்க்கையிலும் முடிவை எடுக்கிற உரிமை உனக்கு வந்துருச்சு. நான் இல்லைன்னு சொல்லல. ஆனா என்னால இந்த முடிவை ஏத்துக்க முடியல. நான் மென்டலா ரொம்ப கஷ்டப்படுறேன். அதனால தீபாவோட கல்லூரியில் வேலை பார்க்கிற ஒரு கவுன்சிலர் கிட்ட போனேன் . அதுக்கு அவரு நீங்க சொல்றது மட்டும் வெச்சிக்கிட்டு என்னால எதுவும் பேச முடியாது, உங்க மகளையும் அழைச்சுக்கிட்டு வாங்க .அவங்க கிட்டயும் நான் பேசி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கணும். அதுக்கு அப்புறமா தான் உங்களுக்கு என்ன மருந்து கொடுக்கணும் என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கணும் என்கிறது முடிவெடுக்க முடியும் அப்படின்னு சொல்லி இருக்காரு . அதனால நீயும் என் கூட வரணும் ."
"ட்ரீட்மெண்ட் எனக்கா உனக்கா ?" கிடுக்கிப் பிடி போட்டாள் இனியா. அறிவாளிதான்!
அன்னையின் கண்களை ஊடுருவினாள் இனியா .
"எனக்குத்தான் " அருணாவும் எந்த தயக்கமும் என்று இனியாவின் கண்களை ஊடுருவினார்
"சரி! எப்ப போகணும் ?
அன்னையின் சொல்படியே அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு அன்னையின் உடன் சென்றவளுக்கு புரிந்து போனது இது தனக்கான கவுன்சிலிங் என்பது . கவுன்சிலரிடம் எதையும் வெளிப்படையாக காட்ட முடியாதவள் அமைதியாக வீட்டுக்கு வந்து பேயாட்டம் ஆடினாள். தேவேந்திரனுக்கும் விஷயம் தெரிந்தது. பெரிய பிரளயம் வெடித்தது .
"எங்க அம்மா மேல கைய வைச்சா என்ன நடக்கும்னு தெரியாது" தீபக் தான் அன்னையை தந்தையிடமிருந்து காப்பாற்றினான். அன்று மட்டுமல்ல அடுத்த வந்த சில நாட்கள் அருணாவின் அழுகை நிற்கவே இல்லை,
"எத்தனை வருடம் குடும்பம் நடத்திய கணவனும் புரிந்து கொள்ளவில்லை பெற்ற மகளும் தன்னை கேவலப்படுத்துகிறாள் . அப்படி என்ன நான் இவங்களுக்கு இளக்காரமா ஆயிட்டேன்" தேம்பி தேம்பி அழுதாள் .பிள்ளைகள் எத்தனையோ சமாதானம் செய்தும் அருணாவுக்கு மனம் சமாதானம் அடையவில்லை . தன்னால் தானே இத்தனை பிரச்சனை தீபாவுக்கு குற்ற உணர்வு தான்.
இரு தினங்கள் ஆகியும் அன்னையின் அழுகை ஓயவே இல்லை . தீபக்கும் வேலையில் சேர்ந்து விட்டான் .
" அம்மா! இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு நான் உன்னை தனியா கூட்டிட்டு போயிட்டமா ?"
"இல்லடா! அப்பாவ அந்த மாதிரி தனியா விட்டுட்டு போகிறது தப்பு "
அப்போதும் கணவனுக்காக யோசித்தார் அருணா. அன்றைய இரவே மகனை அழைத்து நெஞ்சு வலிக்குது என்று சொன்னார். அவசரமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவருக்கு முதல் முறை ஹார்ட் அட்டாக் வந்திருந்தது . உடனே மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்கள் . அனைவருமே அருணாவை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இனியா தன்னை பார்த்துக் கொண்டாள். அதாவது அவள் யாருக்கும் தெரியாமல் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நல்லவனுடன் சென்று பதிவுத் திருமணம் செய்துக் கொண்டு விட்டாள் . வேலைக்கு சென்றிருக்கிறாள் என்று மற்றவர்கள் நினைத்திருக்க அவள் தன்னுடைய காரியத்தை முடித்துக் கொண்டு விட்டாள் .
" மாமா! வீட்ல எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க . அதே மாதிரி உங்களை மறக்கணும்னு சொல்லி என்ன அம்மா கவுன்சிலர் கிட்டயும் கூட்டிக்கிட்டு போனாங்க . என்ன அவ்வளவு ஈஸியா யாரும் மனசு மாற்ற முடியாது . இப்பவே நாம ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும் . "
"சரி இருக்கட்டும். உங்க அம்மா வீட்டுக்கு வரட்டும். மாமாகிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"
"இல்ல மாமா.எங்க அம்மா வீட்டுக்குவந்துட்டா நிச்சயம் ஒதுக்கவே மாட்டங்க. உனக்கு அவங்களை பத்தி சரியா தெரியல. ஏற்கனவே உன்ன மறக்க சொல்லி கௌன்சிலர் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அண்ணனோட பிரண்டை மாப்பிள்ளையாக்கப் பாக்கறாங்க. எங்க என்ன வேற யாருக்காவது கட்டி வச்சுருவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு மாமா. இந்த உடம்ப உன்னத் தவிர வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன். இப்பவே உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?அதை மட்டும் சொல்லு. "
"நீ சொல்லறது எல்லாம் சரிதான். ஆனா மாமா?.."
"நாம ரெண்டு பேரும் போய் கால்ல விழுந்தா அப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க. இருக்கவே இருக்காங்க அத்த. அப்புறம் என்ன?"
அதன்படி அவர்கள் எடுத்த முடிவு தான் இந்த திருமணம் . "அம்மாவ ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கிற நேரம் தான் நமக்கு சரியான சந்தர்ப்பம். யாரும் நமக்கு பிரச்சனை பண்ண மாட்டாங்க" இனியாவின் நல்ல யோசனை தான் .
தேவேந்திரனால் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
"எப்படி பார்வதி உன்னால இதுக்கு சம்மதம் சொல்ல முடிந்தது ?"
மனம் சுக்குநூறாக உடைந்துப் போனத. இதுவே வேறு ஏதாவது சமயமாக இருந்திருந்தால் மகளை ஏற்றுக் கொண்டிருப்பார. அதுவே மனைவிக்கு இப்படி இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி கொண்ட சுயநலவாதிகளாவே மகளும் தங்கையும் அவருக்குத் தெரிந்தார்கள். இப்பயாவது உண்மை புரிந்தது நல்லவனையும் சேர்த்து தான் . நல்லவன் நல்லவன் என்று அவனை தூக்கி தூக்கிக் கொண்டாடியதும் அவனுக்குத் தேவையானது அனைத்தும் செய்ததும் அவருக்கு மாறி மாறி நினைவுக்கு வந்தன .
"என்னத்த செஞ்சி என்ன எல்லா நன்றி கெட்ட ஜென்மங்களாத் தான் இருக்கு.' யாருக்கும் தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுதார். வீட்டில் யாரும் யாரிடமும் பேசவில்லை .
வீட்டுக்கு வந்த அருணா தான் இனியா எங்கப்பா என்று கேட்டபோது யாரும் எதுவும் பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். அவரேப் புரிந்து கொண்டு விட்டார் .
"அம்மா அது .."
" ஓ! ஓடிப் போயிட்டாளா ?"
அன்னையின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை . அவருக்கு இந்த முடிவு ஏற்கனவே தெரிந்து இருக்கும் . இது நடக்கக்கூடாது என்று தானே அவர் எல்லா விதங்களிலும் கஷ்டப்பட்டார் . கண் எதிரில் நடக்கும் பல விஷயங்கள் நம்மால் தடுக்க முடியாது . மனம் விட்டுப் போனது .
இறைவனிடம் ஆயிரம் கேள்விகள் எல்லாம் இல்லை ஒரே கேள்விதான்.
"ஏன் இப்படி பண்ண ?"
டிவியில் யாரோ ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார் .
மகாபாரதம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . ஏதோ பட்டிமன்றம் போல இருந்தது . அருணாவுக்கு பட்டிமன்றம் என்றால் மிகவும் பிடிக்கும் . அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதில் மகாபாரதத்தில் வரும் ஒரு கதை பற்றி கூறிக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி . அபிமன்யு எப்பேர்ப்பட்ட வீரனின் மகன்! அவனை சுற்றி நின்றுக் கொன்றது அவனுடைய சொந்தங்கள்தான் . பீஷ்மரும் கிருபாச்சாரியாரும் துரோணரும் அத்தனை பேரும் நின்று அவனை சுற்றி வளைத்து கொன்றார்கள் . தாத்தா! தாத்தா! என்று அவன் மரியாதையோடு விழுந்து வணங்கியவர்கள் தீர்க்காயிசாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தான் சுற்றி வளைத்து அந்த சிறுவனைக் கொன்றது . ஆனானப்பட்ட கிருஷ்ணர் பாண்டவர்களை காப்பாற்றிய போதும் அந்த சிறுவனையோ அல்லது உப பாண்டவர்களையோ காப்பாற்றவில்லை . அதேபோலத்தான் என் மகளும் என்ன முட்டி மோதி அழுதாலும் விதி பிரகாரம் தான் அனைத்தும் நடக்கும் . தன்னை மீறிய விரக்தி தான் அருணாவுக்கு.
தேவேந்திரன் தான் வந்து அவளிடம் பேசினார் . எப்போதுமே மனைவியிடம் பெரும்பாலும் கலந்து ஆலோசிக்காத ஆணாதிக்கம் கொண்டவர்தான் தேவேந்திரன். அவர் எதிரில் அருணா உக்காரக் கூட முடியாது.
இப்போது அவர் மனைவியிடத்தில் பேசினார் என்று சொல்வதை விடவும் அமைதியாக சற்று நேரம் மனைவியின் கையைப் பிடித்து அமர்ந்திருந்தார் . அதுவே அவரின் உணர்ச்சிகளை மனைவிக்கு உணர்த்திவிட்டது . என்னதான் மனைவியை அடித்தாலும் திட்டினாலும் அவளுக்கு உடம்புக்கு வரும்போது ஆண்கள் பயந்து போகிறார்கள் .கணவன் இல்லாமல் வாழ்க்கையை அப்படியே வாழ பெண்கள் கற்று கொள்கிறார்கள் . அதுவே ஆண்கள் மனைவி என்ற பந்தம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். உடலாலும் மனதாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனைவி என்பவள் உடன் இருக்க வேண்டும் .
இப்போது மனைவியின் அருமை அவருக்கு புரிந்து விட்டதா என்று கேட்டால் இல்லை தான் ஆனால் அவருக்கு எப்போதும் மனைவி அருகில் உடன் இருக்க வேண்டும் அது எந்த மாதிரியான மனநிலை என்பது ஆண்களுக்கு தான் தெரியும் .
அருணாவின் பெற்றோரும் தங்கையும் வந்து பார்த்தார்கள். அவர்கள் சொன்னது சரிதான் .
"இங்க பாரு அருணா போனவ போய்ட்டா . அதுக்காக நீ இந்த பிள்ளைங்கள பாக்காம இருக்கக் கூடாது . எப்படியும் இன்னிக்கு இல்லனாலும் நாளைக்கு அவ நல்லவனுக்கு தான்னு ஏற்கனவே உங்க வீட்டுல முடிவு பண்ணது தானே அப்புறம் என்ன ? ஒருவேளை அவளைக் கல்யாணம் பண்ணுற நேரம் அவன் உண்மையிலேயே நல்லவனா கூட மாறலாம் இல்லையா? அந்த சாமர்த்தியம் இனியாவுக்கு இருக்கு. அதனால நீ உன் பொண்ண பத்தி இனிமே ரொம்ப யோசிக்காதே . தீபாவை எப்படி நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கிறது என்று யோசி . இனிமே உன் கூட இருக்கிற இந்த ரெண்டு பசங்கள பத்தி மட்டும் யோசி ."
அவர்கள் சொல்வதும் சரிதானே ! ரொம்பவும் யோசித்தாள் ஒரு முடிவு எடுத்தாள்.
இனி இந்த மீன் மற்ற குஞ்சுகளுக்காக கடலைத் தேடும்......
"நாத்தனார் வீட்டுக்கு அனுப்புவதா? "
அதனாலயே இனியாவுக்கு பல இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்த போதும் இவர்களே முழு செலவுகளையும் எடுத்துக்கொண்டு படிக்க வைத்தார்கள் . அதனால் தானோ என்னவோ தீபக், தீபா போல பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவுகள் எதுவும் இல்லாமல் நல்லவனை திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இவள் கவனம் முழுக்க இருந்தது .
இவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நல்லவன் கல்லூரிக்கு அடி எடுத்து வைத்திருந்தான் . அப்போதே அவனுக்கு எனக்கு ஆள் இருக்கு என்று பீற்றிக்கொள்வதற்காக இவளை பைக்கில் பின்னாடி வைத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான். இதைக் கண்டுக் கொண்ட அண்ணன் தீபக் தன்னுடைய தோழனின் அண்ணன் படிக்கும் ஒரு டியூஷன் சென்டரில் இவளை சேர்த்து விட்டான் அது மிகவும் கண்டிப்பான இடம் என்பதால் நல்ல மதிப்பெண் எடுத்து இனியா 10, 12 என்று பள்ளி வாழ்க்கையை கடந்து விட்டாள் . கல்லூரி வந்த போதும் குழலி அவளுக்கு தோழியாக கிடைத்ததால் அங்கும் ஓரளவு நன்றாகவேப் படித்தாள் . நல்லவனின் தலையீடு அதிகமாகவே இருந்தது. இருப்பினும் போதும் இனியா படிப்பில் கோட்டை விடவில்லை. நல்லவன் அவள் பெண்கள் கல்லூரியில் தான் சேர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த போதும் தீபக் அவளுக்கு ஆண்கள் பெண்கள் படிக்கும் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.
வீட்டுக்கு ஆண் பிள்ளையாக அவன் பேசுவதை யாரும் மறுத்து பேசியதில்லை தேவேந்திரன் உட்பட. அதற்குக் காரணம் அவன் ஒரு விஷயத்தை ஒரு விதமாக யோசிக்காமல் பலவிதங்களிலும் யோசிப்பான் அதேதான் தீபாவும் . எந்த விஷயத்தைப் பற்றியும் அவர்கள் இருவருக்குமே விவரமும் தெரியும் விவாதிக்கவும் தெரியும்.
அதனால் அத்தனை எளிதில் தீபக்கின் பேச்சை ஒதுக்கி விட முடியாது . தீபக் எடுத்த சரியான முடிவுகள் தான் இனியாவை முக்கியமான விஷயங்களில் காப்பாற்றி இருக்கிறது . அதுவே அவன் முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கும் பொழுது அவள் எடுக்க போகும் முடிவு எப்படி இருக்கும் நிச்சயம் தவறாகத்தான் இருக்கும் ?
மகளைப் பற்றி நிதானமாக யோசித்த அருணா ஒரு முடிவுக்கு வந்தார் . கையில் இருக்கும் காயம் ஆறவில்லை என்றால் மருத்துவரிடம் போகலாம்., அதேதான் மகளின் மனதிற்கும் தங்களால் சரிப்படுத்த முடியாத காயத்திற்கு வேறு எங்காவது சேர்த்து காயத்தை ஆறப் படுத்தினால் என்ன?
கணவனுக்கு தெரியாமல் தான் இந்த விஷயத்தை செய்ய வேண்டும். தீபக் தீபா இருவரும் பார்த்துக் கொள்வார்கள் . என்ன ஆனாலும் சரி கணவனுக்கோ அல்லது பார்வதிக்கோ தெரிந்து விடக் கூடாது. நல்லவனுக்கும் தான் . அவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் முதலில் அவர் தீபாவுடன் சேர்ந்து ஒரு கவுன்சிலரிடம் சென்றார்கள். அவர் தீபாவின் கல்லூரியில் பணி செய்பவர் . அவரிடம் பேசிய போது "பிரச்சனை அவளுக்கு என்று கூறாமல் உங்களுக்கு என்று கூறி அழைத்து வாருங்கள்" என்று கூறியதன் பேரில் அருணாவும் மகளிடம் பேசினார் .
"இங்க பாரு இனியா! நீ நல்லவன கட்டிக்க கூடாது.எனக்கு அது சுத்தமா பிடிக்கல உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காது ."
"நீ யாரு? வந்து என் வாழ்க்கை பத்தி முடிவெடுக்க? நான் இப்ப மேஜர். என்னால எது வேணாலும் செய்ய முடியும். என்ன நினைக்கிற? இந்த நாட்டுக்கே யாரு தலைவனா வரணும்னு முடிவு எடுக்குற முடிவு என்னிடம் இருக்கு. அப்புறம் எனக்கு புருஷனா வரணும்னு நீ சொல்றவனதான் கட்டிக்கனுமா? என்ன பேச்சு இது ? உனக்கு நல்லவன் மாமாவ பிடிக்காதுன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? இங்க பாரு உனக்கும் உன் நாத்தனாருக்கும் இருக்கிற பிரச்சனைய என் மேல திணிக்கப் பார்க்காதே . அத்தைக்கு முன்னாடி உன்னோட நிலைமை என்னன்னு தெரியுமில்ல? வாய மூடிக்கிட்டு இருக்கணும் .
சிப் ! வாயை மூடுவதுப் போல கைக் காட்டினாள்.
மகளின் இந்த திமிர் பேச்சு புதிதல்ல . நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறாள். மற்ற விஷயங்களில் அவள் வேறு மாதிரி பேசினாலும் அத்தை விஷயம் என்று வரும்போது அவளின் பேச்சும் நடவடிக்கையும் கணவனைப் போலவே திமிராக தான் இருக்கும் . "விட்டு தொலை சனியனே!" கை கழுவி விடவும் முடியவில்லை பெற்ற வயிறு பற்றி எரிகிறது . கண்ணீர் கொட்டுகிறது .மனதில் இருந்து ரத்தம் வருகிறது .
என்ன செய்ய ?
"ஆமா! நீ சொல்றது எல்லாமே கரெக்டு தான். உங்க அத்தை வந்தா என்னுடைய நிலைமை என்னங்கிறது நீ சொல்லி தான் எனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. நீ பொறக்குறதுக்கு முன்னாடில இருந்து உங்க அத்தையை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன் . அதுக்குத் தான் நீயும் அங்க அவகிட்ட போய் கஷ்டப் படக் கூடாதுன்னு தவிக்கறேன். "
"இப்ப நீ என்னதான் சொல்ல வர?" வழக்கம் போலவே கைகட்டி அமர்த்தலாக அன்னையைப் பார்த்து மிரட்டினாள் இனியா .
"நீ சொல்றது கரெக்ட் தான் எல்லாத்தையுமே நான் ஒத்துக்குறேன் இந்த நாட்டுக்கு யாரு தலைவனா வரணும் அப்படின்னு முடிவு எடுக்குற உரிமை உங்களுக்கெல்லாம் வந்துருச்சு. அதே மாதிரி உன்னுடைய வாழ்க்கையிலும் முடிவை எடுக்கிற உரிமை உனக்கு வந்துருச்சு. நான் இல்லைன்னு சொல்லல. ஆனா என்னால இந்த முடிவை ஏத்துக்க முடியல. நான் மென்டலா ரொம்ப கஷ்டப்படுறேன். அதனால தீபாவோட கல்லூரியில் வேலை பார்க்கிற ஒரு கவுன்சிலர் கிட்ட போனேன் . அதுக்கு அவரு நீங்க சொல்றது மட்டும் வெச்சிக்கிட்டு என்னால எதுவும் பேச முடியாது, உங்க மகளையும் அழைச்சுக்கிட்டு வாங்க .அவங்க கிட்டயும் நான் பேசி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கணும். அதுக்கு அப்புறமா தான் உங்களுக்கு என்ன மருந்து கொடுக்கணும் என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கணும் என்கிறது முடிவெடுக்க முடியும் அப்படின்னு சொல்லி இருக்காரு . அதனால நீயும் என் கூட வரணும் ."
"ட்ரீட்மெண்ட் எனக்கா உனக்கா ?" கிடுக்கிப் பிடி போட்டாள் இனியா. அறிவாளிதான்!
அன்னையின் கண்களை ஊடுருவினாள் இனியா .
"எனக்குத்தான் " அருணாவும் எந்த தயக்கமும் என்று இனியாவின் கண்களை ஊடுருவினார்
"சரி! எப்ப போகணும் ?
அன்னையின் சொல்படியே அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு அன்னையின் உடன் சென்றவளுக்கு புரிந்து போனது இது தனக்கான கவுன்சிலிங் என்பது . கவுன்சிலரிடம் எதையும் வெளிப்படையாக காட்ட முடியாதவள் அமைதியாக வீட்டுக்கு வந்து பேயாட்டம் ஆடினாள். தேவேந்திரனுக்கும் விஷயம் தெரிந்தது. பெரிய பிரளயம் வெடித்தது .
"எங்க அம்மா மேல கைய வைச்சா என்ன நடக்கும்னு தெரியாது" தீபக் தான் அன்னையை தந்தையிடமிருந்து காப்பாற்றினான். அன்று மட்டுமல்ல அடுத்த வந்த சில நாட்கள் அருணாவின் அழுகை நிற்கவே இல்லை,
"எத்தனை வருடம் குடும்பம் நடத்திய கணவனும் புரிந்து கொள்ளவில்லை பெற்ற மகளும் தன்னை கேவலப்படுத்துகிறாள் . அப்படி என்ன நான் இவங்களுக்கு இளக்காரமா ஆயிட்டேன்" தேம்பி தேம்பி அழுதாள் .பிள்ளைகள் எத்தனையோ சமாதானம் செய்தும் அருணாவுக்கு மனம் சமாதானம் அடையவில்லை . தன்னால் தானே இத்தனை பிரச்சனை தீபாவுக்கு குற்ற உணர்வு தான்.
இரு தினங்கள் ஆகியும் அன்னையின் அழுகை ஓயவே இல்லை . தீபக்கும் வேலையில் சேர்ந்து விட்டான் .
" அம்மா! இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு நான் உன்னை தனியா கூட்டிட்டு போயிட்டமா ?"
"இல்லடா! அப்பாவ அந்த மாதிரி தனியா விட்டுட்டு போகிறது தப்பு "
அப்போதும் கணவனுக்காக யோசித்தார் அருணா. அன்றைய இரவே மகனை அழைத்து நெஞ்சு வலிக்குது என்று சொன்னார். அவசரமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவருக்கு முதல் முறை ஹார்ட் அட்டாக் வந்திருந்தது . உடனே மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்கள் . அனைவருமே அருணாவை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இனியா தன்னை பார்த்துக் கொண்டாள். அதாவது அவள் யாருக்கும் தெரியாமல் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நல்லவனுடன் சென்று பதிவுத் திருமணம் செய்துக் கொண்டு விட்டாள் . வேலைக்கு சென்றிருக்கிறாள் என்று மற்றவர்கள் நினைத்திருக்க அவள் தன்னுடைய காரியத்தை முடித்துக் கொண்டு விட்டாள் .
" மாமா! வீட்ல எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க . அதே மாதிரி உங்களை மறக்கணும்னு சொல்லி என்ன அம்மா கவுன்சிலர் கிட்டயும் கூட்டிக்கிட்டு போனாங்க . என்ன அவ்வளவு ஈஸியா யாரும் மனசு மாற்ற முடியாது . இப்பவே நாம ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும் . "
"சரி இருக்கட்டும். உங்க அம்மா வீட்டுக்கு வரட்டும். மாமாகிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"
"இல்ல மாமா.எங்க அம்மா வீட்டுக்குவந்துட்டா நிச்சயம் ஒதுக்கவே மாட்டங்க. உனக்கு அவங்களை பத்தி சரியா தெரியல. ஏற்கனவே உன்ன மறக்க சொல்லி கௌன்சிலர் கிட்ட கூட்டிட்டு போனாங்க. அண்ணனோட பிரண்டை மாப்பிள்ளையாக்கப் பாக்கறாங்க. எங்க என்ன வேற யாருக்காவது கட்டி வச்சுருவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு மாமா. இந்த உடம்ப உன்னத் தவிர வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன். இப்பவே உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?அதை மட்டும் சொல்லு. "
"நீ சொல்லறது எல்லாம் சரிதான். ஆனா மாமா?.."
"நாம ரெண்டு பேரும் போய் கால்ல விழுந்தா அப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க. இருக்கவே இருக்காங்க அத்த. அப்புறம் என்ன?"
அதன்படி அவர்கள் எடுத்த முடிவு தான் இந்த திருமணம் . "அம்மாவ ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கிற நேரம் தான் நமக்கு சரியான சந்தர்ப்பம். யாரும் நமக்கு பிரச்சனை பண்ண மாட்டாங்க" இனியாவின் நல்ல யோசனை தான் .
தேவேந்திரனால் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
"எப்படி பார்வதி உன்னால இதுக்கு சம்மதம் சொல்ல முடிந்தது ?"
மனம் சுக்குநூறாக உடைந்துப் போனத. இதுவே வேறு ஏதாவது சமயமாக இருந்திருந்தால் மகளை ஏற்றுக் கொண்டிருப்பார. அதுவே மனைவிக்கு இப்படி இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி கொண்ட சுயநலவாதிகளாவே மகளும் தங்கையும் அவருக்குத் தெரிந்தார்கள். இப்பயாவது உண்மை புரிந்தது நல்லவனையும் சேர்த்து தான் . நல்லவன் நல்லவன் என்று அவனை தூக்கி தூக்கிக் கொண்டாடியதும் அவனுக்குத் தேவையானது அனைத்தும் செய்ததும் அவருக்கு மாறி மாறி நினைவுக்கு வந்தன .
"என்னத்த செஞ்சி என்ன எல்லா நன்றி கெட்ட ஜென்மங்களாத் தான் இருக்கு.' யாருக்கும் தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுதார். வீட்டில் யாரும் யாரிடமும் பேசவில்லை .
வீட்டுக்கு வந்த அருணா தான் இனியா எங்கப்பா என்று கேட்டபோது யாரும் எதுவும் பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். அவரேப் புரிந்து கொண்டு விட்டார் .
"அம்மா அது .."
" ஓ! ஓடிப் போயிட்டாளா ?"
அன்னையின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை . அவருக்கு இந்த முடிவு ஏற்கனவே தெரிந்து இருக்கும் . இது நடக்கக்கூடாது என்று தானே அவர் எல்லா விதங்களிலும் கஷ்டப்பட்டார் . கண் எதிரில் நடக்கும் பல விஷயங்கள் நம்மால் தடுக்க முடியாது . மனம் விட்டுப் போனது .
இறைவனிடம் ஆயிரம் கேள்விகள் எல்லாம் இல்லை ஒரே கேள்விதான்.
"ஏன் இப்படி பண்ண ?"
டிவியில் யாரோ ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார் .
மகாபாரதம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . ஏதோ பட்டிமன்றம் போல இருந்தது . அருணாவுக்கு பட்டிமன்றம் என்றால் மிகவும் பிடிக்கும் . அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதில் மகாபாரதத்தில் வரும் ஒரு கதை பற்றி கூறிக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி . அபிமன்யு எப்பேர்ப்பட்ட வீரனின் மகன்! அவனை சுற்றி நின்றுக் கொன்றது அவனுடைய சொந்தங்கள்தான் . பீஷ்மரும் கிருபாச்சாரியாரும் துரோணரும் அத்தனை பேரும் நின்று அவனை சுற்றி வளைத்து கொன்றார்கள் . தாத்தா! தாத்தா! என்று அவன் மரியாதையோடு விழுந்து வணங்கியவர்கள் தீர்க்காயிசாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தான் சுற்றி வளைத்து அந்த சிறுவனைக் கொன்றது . ஆனானப்பட்ட கிருஷ்ணர் பாண்டவர்களை காப்பாற்றிய போதும் அந்த சிறுவனையோ அல்லது உப பாண்டவர்களையோ காப்பாற்றவில்லை . அதேபோலத்தான் என் மகளும் என்ன முட்டி மோதி அழுதாலும் விதி பிரகாரம் தான் அனைத்தும் நடக்கும் . தன்னை மீறிய விரக்தி தான் அருணாவுக்கு.
தேவேந்திரன் தான் வந்து அவளிடம் பேசினார் . எப்போதுமே மனைவியிடம் பெரும்பாலும் கலந்து ஆலோசிக்காத ஆணாதிக்கம் கொண்டவர்தான் தேவேந்திரன். அவர் எதிரில் அருணா உக்காரக் கூட முடியாது.
இப்போது அவர் மனைவியிடத்தில் பேசினார் என்று சொல்வதை விடவும் அமைதியாக சற்று நேரம் மனைவியின் கையைப் பிடித்து அமர்ந்திருந்தார் . அதுவே அவரின் உணர்ச்சிகளை மனைவிக்கு உணர்த்திவிட்டது . என்னதான் மனைவியை அடித்தாலும் திட்டினாலும் அவளுக்கு உடம்புக்கு வரும்போது ஆண்கள் பயந்து போகிறார்கள் .கணவன் இல்லாமல் வாழ்க்கையை அப்படியே வாழ பெண்கள் கற்று கொள்கிறார்கள் . அதுவே ஆண்கள் மனைவி என்ற பந்தம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். உடலாலும் மனதாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனைவி என்பவள் உடன் இருக்க வேண்டும் .
இப்போது மனைவியின் அருமை அவருக்கு புரிந்து விட்டதா என்று கேட்டால் இல்லை தான் ஆனால் அவருக்கு எப்போதும் மனைவி அருகில் உடன் இருக்க வேண்டும் அது எந்த மாதிரியான மனநிலை என்பது ஆண்களுக்கு தான் தெரியும் .
அருணாவின் பெற்றோரும் தங்கையும் வந்து பார்த்தார்கள். அவர்கள் சொன்னது சரிதான் .
"இங்க பாரு அருணா போனவ போய்ட்டா . அதுக்காக நீ இந்த பிள்ளைங்கள பாக்காம இருக்கக் கூடாது . எப்படியும் இன்னிக்கு இல்லனாலும் நாளைக்கு அவ நல்லவனுக்கு தான்னு ஏற்கனவே உங்க வீட்டுல முடிவு பண்ணது தானே அப்புறம் என்ன ? ஒருவேளை அவளைக் கல்யாணம் பண்ணுற நேரம் அவன் உண்மையிலேயே நல்லவனா கூட மாறலாம் இல்லையா? அந்த சாமர்த்தியம் இனியாவுக்கு இருக்கு. அதனால நீ உன் பொண்ண பத்தி இனிமே ரொம்ப யோசிக்காதே . தீபாவை எப்படி நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கிறது என்று யோசி . இனிமே உன் கூட இருக்கிற இந்த ரெண்டு பசங்கள பத்தி மட்டும் யோசி ."
அவர்கள் சொல்வதும் சரிதானே ! ரொம்பவும் யோசித்தாள் ஒரு முடிவு எடுத்தாள்.
இனி இந்த மீன் மற்ற குஞ்சுகளுக்காக கடலைத் தேடும்......
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.