• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -3

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
22
கடல் தேடும் மீன்கள் -3

மாறன் அருணா பேசிக் கொண்டிருக்க அடுத்த சற்று நேரத்திலேயே தீபக் வந்து விட்டான்.

அவனும் தீபக்கும் வெளியில் கிளம்பியதும், கை கட்டி அழுத்தமாகப் பார்த்தாள் இனியா.

"என்னடி என்ன? "

"என்ன? எவன் எவனையோ கூட்டிட்டு வந்து என் மனச மாத்தலான்னு பாக்கறியா? "

"ஏண்டி ! நல்ல பையன். பாக்கவும் நல்லா இருக்கான். பொறுப்பானவன். நல்லா படிச்சுருக்கான். வீட்டுல பொண்ண வச்சுருக்கற எந்த அம்மாவுக்கும் இந்த மாதிரி பையனை பார்த்தா மனசு அடிச்சுக்கத் தான் செய்யும். இதுல என்னடி தப்பு?"
"அப்ப என்ன சொல்ல வர்ற? மாமா சரியில்லன்னா? என்ன இப்ப? அவரு இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணல. பண்ணிக்கத் தெரியல. அவரும்தான் சி ஏ படிக்கறாரு. என்ன கொஞ்சம் கஷ்டப்படறாரு. அதுனால என்ன? சீக்கிரமே முடிச்சுட்டு பெரிய கம்பனிக்கு வேலைக்குப் போய்டுவாரு. அவரு கூட வாழப் போறவ நான். உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு அந்த மாறனை மாப்பிளையாக்கி அழகு பாக்க ஆசை இருந்தா இதோ பெத்து போட்டிருக்கியே இன்னொன்னு அதுக்கு கட்டி வை. நல்ல மாடு தலை ஆட்டற மாதிரி "

"அயோ ! இவகிட்ட வாய குடுக்க முடியலை சாமி" மனம் கண்ணீர் சிந்தினாலும் மகளை தப்புவிக்க என்ன வழி என்றே யோசித்தது.

இனியாவுக்கும் என்ன தோன்றியதோ , நல்லவனிடம் சென்று ஒழுங்காக மாறச் சொன்னாள் .


"இப்ப இதுதாண்டி ஸ்டைலு என் செல்லக்குட்டி. அவன் இவள் கன்னம் கிள்ளி சொன்னபோது ஏற்றுக் கொண்டுவிட்டாளே !"

புஷ்பா படம் வருவதற்கு முன்பே தான் அவன் சொன்னான். ஒரு வேளை புஷ்பாவும் பார்த்திருந்தால் கழுத்தில் எலுமிச்சை மாலையுடன் புடவைக் கட்டிக் கொண்டு நின்றாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அவன் என்ன செய்தாலும் அவனுக்கு அன்னையும் வருங்காலப் பொண்டாட்டியும் முழு ஆதரவு தரும்போது வேறு என்ன கவலை?

இப்போதெல்லாம் அருணாவுக்கு முழுக்க முழுக்க இனியாவைப் பற்றிய யோசனைதான். தீபாதான் ,

"ஏம்மா அக்காவை நல்ல டாக்டர்கிட்ட கொட்டிட்டுப் போனா என்ன?"

"என் பொண்ணு ஒன்னும் பைத்தியம் இல்ல தீபா "

"அப்படிங்கரியா? அவ பைத்தியமா இல்லையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ பைத்தியமாகிகிட்டு வர்ற . மனச்சாட்சியை தொட்டு சொல்லு. எந்நேரமும் அவளை பத்தி தான் யோசிக்கற? இது என்ன ? இதுக்கு என்ன அர்த்தம்?"

காலையில் காய் நறுக்கும்போது விரலில் கிழித்திருந்தாள். நேற்று குக்கரில் சுட்டுக் கொண்டு முழங்கையில் பெரிய தீக் காயம்.

"கிச்சன்ல நிக்கறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். அதுக்கும் இதுக்கும் என்ன முடிச்சு போடற?"

"இல்லம்மா! எங்க அம்மாவுக்கு இது எல்லாம் சகஜம், சாதாரணம் இல்ல. இருபது வருஷமா உன்ன பாக்கறேன். வர வர உன்னோட நடவடிக்கை என்னன்னு உனக்கே தெரியலை. அவ மாமா மேல பைத்தியமாதான் இருக்கா. உனக்கு அது புரியுதா இல்லையா?"


"தீபா நீ என்னை குழப்பாத. நான் கொஞ்சம் யோசிக்கணும்."

"சரி மா! நீ நல்லா யோசி. இன்னிக்கு இந்த காயம் ஆற ஆரம்பிச்சிருக்கு. ஆறலைன்னா மருத்துவம் பார்த்து தானே ஆகணும். அதே மாதிரி ஏதோ ஒரு டாக்டர் இல்ல கௌன்சிலர் கிட்ட போகறதும் . இதுல ஒன்னும் தப்பில்லை. நான் வேணுன்னா அண்ணா கிட்ட பேசறேன். எனக்கும் எங்க அக்கா நல்லா வாழனுன்னு ஆசை இருக்கும்மா."

அடுத்த சில நாட்களுக்கு இனியாவை பற்றி யோசிப்பதைத் தாண்டி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார் அருணா . அருணாவுக்கு ஏன் இந்த யோசனை வர வேண்டும். இது சரியா?

இந்த இடத்தில நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்போது அருணாவுக்கு இருக்கும் இந்த பயத்திற்கு பல காரணங்கள் இருந்தன. தேவேந்திரன் முதலில் வந்து பெண் பார்த்த போதே இருவருக்கும் பிடித்து விட்டது. அருணா நல்ல நிறம். உன்னால் முடியும் தம்பி சீதா போல தோற்றம். எந்த ஆணுக்குத் தான் பிடிக்காது? பார்த்த மாத்திரத்திலே தன்னையும் அறியாமல், "இதழில் கதை எழுதும் நேரமிது" தேவேந்திரன் மனம் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டது. பெண் பார்க்க பார்வதியும் வந்திருந்தாள் .

இவர்களின் வசதியா? அல்லது அருணாவின் அழகா எது என்று தெரியவில்லை பார்வதிக்கு அருணாவைப் பார்த்து அத்தனை பொறாமை இவள் தனக்கு அண்ணியாக வந்து விடக் கூடாது என்று அத்தனை பாடுப்பட்டாள் . அப்படி என்றால் உடன் பிறந்தவன் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இல்லையோ? அல்லது உடன் பிறந்தவனாகவே இருந்தாலும் நன்றாக வாழ்ந்து விடக் கூடாது என்ற எண்ணமா ?


எப்படியோ அருணா தான் தேவேந்திரன் பொண்டாட்டி என்று இறைவன் நினைத்த பிறகு வேறு யாரால் என்ன செய்ய முடியும் ? திருமணத்திற்குப் பிறகு பார்வதி இவளை பாடாவதியாகி கொடுமை செய்தது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம்தான்.

திருமணத்திற்கு பிறகு அடுத்த இரண்டாவது மாதத்திலேயே நல்ல செய்தி சொல்லி விட்டார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க பார்வதிக்கு அப்படி ஒரு வயிற்றெரிச்சல். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அன்று மாலையில் விளக்கேற்றும் வேளையில் அப்படி ஒரு கதறல். அப்படி ஒரு அட்டகாசம். அவளுக்கு பொறாமை தாங்க முடியவில்லை..

தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

"உன் கூட பிறந்தவ எனக்கு இன்னும் ஒழுங்கா ஒரு மாப்பிளையை பாக்க துப்பில்லை. அதுக்குள்ள உனக்கு கல்யாணம். வெக்கமில்லாம அவ கூட படுத்துட்டு குழந்தை குட்டின்னு வந்து நிக்கறியே. உனக்கு வெக்கமா இல்லை? என்று ஆங்காராமாகி கத்த ஆரம்பித்தது தான் இப்படி ஒரு கதறலில் வந்து நிற்கிறது.


மாமனார் மாமியார் கூட எத்தனையோ சொல்லிப் பார்த்தார்கள். அவள் யாருக்கும் அடங்குவதாக இல்லை. அவளை யாராலும் அடக்கவும் முடியவில்லை. பிள்ளை உண்டான சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாமல் கேவிக்கேவி அழும் மனைவியை சமாதானப்படுத்த முடியாமல் தேவேந்திரன் தான் திண்டாடிப் போனார் .

' பார்வதி சொல்வதும் சரிதானே. அண்ணனாக பொறுப்பாக அவளுக்கு வரன் பார்க்காமல் தான் தன்னுடைய வாழ்க்கை என்று பார்த்தது தவறு தான்.'

தேவேந்திரன் மண்டைக்கு உரைத்து விட்டது. அடடே ஆச்சர்ய குறி !!!

அது முதல், கண்ணும் கருத்துமாக தங்கையைப் பார்த்துக் கொண்டு மனைவியை பார்ப்பதை தவிர்த்தார். மனக் குமுறலில் இருந்த அருணாவுக்கு கணவனின் ஆறுதல் தேவைப்பட்டது போது அவர் அருகில் இல்லாமல் தவித்துப் போனார். அதுவும் திருமணம் ஆன புதிதில்.

யாருக்கும் என்னால் எந்த தொந்தரவும் வேண்டாம். முதல் பிள்ளை உருவான வேகத்திலேயே தானாகவே அழிந்துப் போனது. அழிந்தது அது மட்டுமல்ல. அருணாவின் காதலும்தான். உருவான வேகத்திலேயே அழிந்துப் போனது. அப்படி என்றால் விவாகரத்து வாங்கி இருக்கலாமே? யாரும் அப்படிப்பட்ட கேள்விகள் கேட்க வேண்டாம். இப்போதைய காலம் அல்ல அது.
காவல் நிலையம் , நீதிமன்றம் என்று சொன்னாலே அசிங்கம் என்று நினைப்பவர்கள் இருந்த காலம். அருணா விவாகரத்து அது இது என்று முடிவெடுத்தால் அவர் தங்கைக்கு மாப்பிளை பார்க்க முடியாது, பெற்றவர்களே ஆனாலும் அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். கணவனின் குணம் தெரிந்து விட்டது.
என்ன இருந்தாலும் அவருக்கு அவர் உடன் பிறந்தவள் தான் முதல். பிறகுதான் பெற்றவர்கள் கூட. மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை என்று வாழப் பழகிக் கொண்டார்.

பார்வதியால் அவர் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்த போதும் பிறந்த வீட்டிற்கு எந்த ஒரு கலங்கமும் வந்து விடக்கூடாது என்று பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் முதலில் எல்லாம் தான் பிறந்த வீட்டிற்காக அமைதியாக இருந்தவர் பின்னாலே தான் பெற்ற குழந்தைகளுக்காக அமைதியாக இருக்க ஆரம்பித்தார் . இந்த அருணா என்பவர் யாரோ அல்ல! நம்மைப் போன்ற பல பெண்களின் அவரும் ஒரு பெண்.
எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாலும் வாயை மூடி மூடி வாழ்ந்து கொண்டிருக்கும் எழுபதுகளில் பிறந்து வாழ்ந்தவர் .


அவருக்கு ஒரே எண்ணம் தான் தன்னுடைய குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் அதற்காகத்தான் அத்தனையும் அவர் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார் . அதுவே மகளும் தந்தையுடன் சேர்ந்து கொண்டு அத்தைக்கு வக்காலத்து வாங்கும் பொழுது மனம் வேதனைப்படும் இவள் எப்பொழுது என்னை புரிந்து கொள்ள போகிறாள் ?

நெருப்பு சொன்னால் புரிந்து கொண்டு விடுவாளா?

இனியா நல்லவனுக்கு தான் என்ற பேச்சு வந்தது எப்பவோ 20 வருஷத்துக்கு அப்புறம் நடக்க போறது இப்ப என்ன பேச்சு மனதிற்குள் ஆத்திரம் வந்தாலும் அமைதியாக அடக்கிக்கொண்டு பொறுத்துக் கொண்டு இருந்தது பெரிய தவறு என்பது புரிய ஆரம்பித்தது .கணவருக்கும் அவர் வீட்டினருக்கும் பயந்துகொண்டு வாயை மூடிக் இருந்தது மட்டும்தான் என்று மகள் இப்படி வந்து நிற்பதற்கு காரணம்., என்ன அழுது என்ன? இப்போது அவளை மாற்ற வேண்டும். சாத்தியமா தெரியவில்லை. ஆனால் நம் முயற்சியை விட்டுவிடக் கூடாது . தீபா சொன்னதை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தார் அருணா .

ஒரு வேளை பார்வதிக்கே கூட மன நல பாதிப்பு இருந்திருக்குமோ? தக்க சமயத்தில் மருத்துவம் பார்த்திருந்தால் இந்த அளவுக்கு பார்வதி மாறி இருந்திருக்க மாட்டாளோ?

இத்தனை வருடங்கள் கழித்து இதை எல்லாம் யோசித்து என்ன பயன்?

நல்லவனுக்கு மகளை கட்டிக் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் அருணாவுக்கு இல்லை. ஆனால் அவன் குணமும் அவன் அன்னையின் குணமும் அருணாவுக்கு மிக நன்றாக தெரியும் எனும் பொழுது எப்படி மகளை அந்த பாழும் கிணற்றில் விழுவதற்கு சம்மதிக்க முடியும் ? மகனாக தீபக்குக்கு அன்னையின் நிலைமை புரிந்த போது , ஒரு பெண்ணாக தீபாவுக்கு அன்னையின் நிலைமை புரிந்த போது , இனியாவுக்கு ஒரு சக மனுசியாக கூட அன்னை தெரியவில்லை என்பதுதான் உண்மை.
பார்வதி வந்து ஒன்றுக்கு பத்தாக அண்ணனை ஏற்றி விட்டுச் செல்வதும் அதனால் அன்னை தந்தையிடம் பல அடிகளை வாங்குவதும் இனியாவுக்கு நன்றாகவேத் தெரியும். அன்னை தந்தையிடம் அடி வாங்கும் பொழுது மற்ற இரு குழந்தைகளும் அன்னையைப் பாதுகாக்க இவள் மட்டும் எனக்கு என்ன என்பது போல் சென்று விடுவாள் . கன்னத்தில் அடிப்பதும் மூக்கில் வாயில் இருந்து ரத்தம் வருவதும் சகஜம்.
தீபக் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தந்தையின் கையைப் பிடித்து தடுத்தான் . அதற்குப் பிறகு வந்த நாட்களில் தான் தேவேந்திரன் மனைவியை அடிப்பதை குறைத்துக் கொண்டார் .

பார்வதி திருமணத்துக்கு முன்பும் சரி பின்னும் சரி எப்போதுமே அவளின் தலையீடு அந்த வீட்டில் இருந்து கொண்டே தான் இருக்கும் . நேரில் பார்த்தாலும் சரி இல்லை என்றாலும் போன் வந்த காலத்தில் அது இன்னும் அதிகமாயிற்று . தேவேந்திரன் அப்படி ஒன்றும் பெரிய வேலையில் எல்லாம் இல்லை . அருகில் இருந்த இரும்பு தொழிற்சாலையில் பட்டறை வேலை செய்தவர் தான் . அதில் வரும் சம்பாத்தியத்தை கொண்டு சாமர்த்தியமாக மிச்சம் பிடித்து ஐந்தரைப் பெட்டியில் ஐந்து ரூபாய் ஐந்து ரூபாயாக சேர்த்து சேர்த்து தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் .
மூவருமே சாதாரண பள்ளியில் படித்தவர்கள் தான் . ஒரே விஷயம் மூவருக்குமே படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. அபார மூளையும் இருந்தது அன்னையைப் போலவே . அதனால் அவர்களுக்கு நிறைய இடத்தில் இருந்து உதவித்தொகை கிடைத்தது. அதைக் கொண்டே மேற்கொண்டு மேற்கொண்டு அடுத்த வருடம் அடுத்த வருடம் என்று பள்ளிக்கு எந்த செலவும் பிறந்த வீட்டிலிருந்து இல்லாமலே அவர்களின் படிப்பை அவர்களை பார்த்துக் கொண்டார்கள் . அதுவும் தீபா தீபக் மட்டுமே . இனியாவுக்கு இவர்கள் தான் பள்ளி செலவை பார்த்துக் கொள்ள வேண்டும் .

"என் மருமக எங்கேயும் யார்கிட்டயும் போயி கையை நீட்டி நிக்கணும்னு அவசியம் கிடையாது உங்களால படிக்க வைக்க முடியாதுன்னா சொல்லுங்க அண்ணி என் மருமகள நானே எங்க வீட்டுல வச்சு படிக்க வச்சுக்கிறேன்."

இனியா அத்தையுடன் இருக்கப் போகிறாளோ?




தொடரும்.........
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom