Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -13
இனியாவிப் பார்க்க வந்தது வேறு யாரும் இல்லை. குழலிதான். இந்த நிலையில் தோழியை பார்க்கவும் அவளுக்கு மனம் தாங்கவில்லை. தன் அத்தையிடம் சொல்லுவிட்டு இனியாவுடனேயே இருந்துக் கொண்டாள்.
"நீ எப்படி டி இங்க?"
குழலி ஓடி வந்து தோழியை கட்டிக் கொண்டாள் . இருவருக்குமே கண்கள் குளம் கட்டியது .
"நாத்தனார்க்கு டெலிவரிக்கு வந்துருக்கோம். அத்தைக்கு இங்க கேன்டீன் சாப்பாடு ஒத்துக்காது. அதுதான் சாப்பாடு கொடுக்க வந்தேன். அப்ப நர்ஸுங்க பேசிகிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு. அதுதான் யாரு என்ன ஏதாவது உதவி வேணுன்னா செஞ்சுட்டுப் போகலான்னு வந்தேன். கடைசிலப் பார்த்தா நீ இப்படி கிடக்கற . நல்லவன் எங்கடி? உங்க அத்த? அவங்க இன்னும் வரலையா?"
"என்ன எதுவும் கேக்காதடி. நீங்க எல்லாரும் என்ன சொன்னீங்களோ அது தான் என்னோட வாழ்க்கைல நடக்குது. நீங்க யோசிச்சதை விட மாமா இன்னும் மோசமாகிட்டு வராரு. அவரை எப்படி மாத்தப் போறேன்னு தெரியல." பட்டும் படாமலும் விஷயங்களைச் சொன்னாள் . பலதை சொன்னாள். சிலது முழுங்கி விட்டாள் ;. அதிலும் அந்த ரூபா விஷயம்? எப்படி தான் உயிருக்குயிராய் காதலித்து கைப்பிடித்தவன் இன்னொரு பெண் மீது அசிட் அடிக்க உதவியிருக்கிறார் என்று எப்படிச் சொல்ல முடியும்? நுனி நாக்கு வரை வந்த விஷயத்தை கடினமாய் முழுங்கி விட்டாள்.
இவள் சொன்னது வரை எல்லாவற்றையும் கேட்ட தோழி பெருமூச்சு விட்டாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்? தனது மாமியாரோடு சேர்ந்தே இனியாவை நல்ல படியாக பார்த்துக் கொண்டாள் .
"உனக்கு கல்யாணம்?"
"ஆயிடுச்சு. நம்ம வினய் சார் தான் இப்ப என் கணவர். அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம் .
"பார்ரா ! உனக்கு கூட வெக்கப்படத் தெரியுமா? எப்படியோ நினைச்சதை சாதிச்சுட்டடி "
இனியா சொன்னதும் சரிதான். அவளையும் அறியாமல் முகச் சிவப்போடு தான் குழலி விஷயத்தைச் சொன்னாள் ..
"எப்படிடி உங்க கல்யாணம் நடந்தது? முதல்ல யாரு லவ் சொன்னீங்க? நீயா?" விழி விரித்து ஆசையாகக் கேட்டாள் இனியா
"நான் இல்ல. அவங்க அம்மா தான் முதல்ல லவ் சொன்னாங்க"
"என்னடி கலாய்கிரியா ?"
"இல்லடி! உண்மையாவே அவங்க அம்மா அப்பா தான் என்னை ரொம்ப பிடிச்சுருக்குன்னு வந்து பொண்ணு கேட்டாங்க. வேற வேற ஜாதி தான் இருந்தாலும் மனுஷங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு எங்க வீட்டுலையும் ஒத்துக்கிட்டாங்க .
"உங்க பாட்டியை எப்படி சமாளிச்சீங்க ?"அவங்க வீட்டுலேர்ந்து கேட்டதும் முதல்ல சரி சொன்னதே எங்க பாட்டி தானே?"
"என்னடி சொல்லற? என்ன குழப்பாத. உருப்படியா விஷயத்தை சொல்லு ."
"வினயின் குடும்பம் திருவள்ளுர் அருகே உறவினர் திருமணத்தை முடித்து விட்டு சனி ஞாயிறு என்பதால் அருகில் இருந்த கோவில்களுக்குச் சென்று விட்டு திருவாலங்காட்டுக்கும் வந்திருந்தார்கள். அங்கே எதேச்சையாக குழலியைப் பார்க்கவும் அவள் வேண்டுகோளின்படி இரவில் அவர்கள் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும் சப்பாத்தி செய்து இரவு படுக்க ஏற்பாடுகள் செய்து என்று குழலியின் குடும்பத்தில் இருந்த அனைவருமே வந்தவர்களை நன்றாகவே உபச்சாரம் செய்தார்கள்
இரவில் தன் அன்னை அடுத்து அவள் அன்னை அதற்கு அடுத்து குழலி என்று படுத்திருந்தார்கள் ஹாலில் தான் பாய் விரித்து வரிசையாகப் படுத்துக் கொண்டார்கள். உள் அறையில் வினையின் தங்கை கட்டிலில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு இப்போது மூன்று மாதம். அருகில் குழலி பாட்டி. பாட்டி ஏதேதோ கதைகள் சொல்லவும் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாகவே உறங்கி இருந்தாள் சின்னவள். மறு நாளும் அவள் பாட்டியையே சுற்றி சுற்றி வந்தாள். ஆண்கள் ஒன்று சேர பெண்களும் சேர்ந்துக் கொண்டார்கள். மறு நாள் விடிவதற்கு முன்பே எழுந்து குழலியும் அவள் தங்கையும் கோவிலில் கோலம் போடச் சென்று விட்டார்கள். பெண்கள் குளித்து பிறகு ஆண்கள் குளித்தனர். இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதிய உணவுக்குப் பின் அவர்கள் கிளம்புவதாக ஏற்பாடு.
"என்னங்க இது? ஏதோ பிள்ளை கூப்புடான்னு ராத்திரி வந்தோம். ஏற்கனவே எங்களால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு. இன்னும் இன்னும் நாங்க உங்களை தொண்டஹ்ர்வு பண்ணறது சரியில்லங்க. நாங்க வெளில எங்கையாவது டிபன் சாப்பிட்டு வீட்டுக்கு போனா ஒரு சாதம் வைச்சா முடிஞ்சது" ஒரு வித தயக்கத்துடனே வினயின் அன்னைக்கு கூறினார்.
"வூட்டுக்குப்போய் சாதம் வைக்கலாம். இந்த மாதிரி வீட்டுல விளைந்த காய் கிடைக்குமா? உங்க ஊரு காய் வேற மாதிரி இருக்கும். இங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகணும். பாட்டியின் உரிமையும் அன்பும் அவர்களுக்கு பிடித்து விட்டது. மறு பேச்சு பேசாமல் பெரியவர் சொன்ன படி நடந்தனர்.
குழலி காலையிலேயே குளித்து விட்டு தலைக்கு துண்டை சுற்றிக் கொண்டு பளிச்சென முகத்தில் இருந்த சில நீர் துளிகளை துடைத்துக் கொண்டே வந்தவளை பார்த்த வினய் அசந்து விட்டான். இது வரை கல்லூரியில் பார்த்தவர்கள் தான். இருப்பினும் அவள் மாணவி என்ற அளவோடு தான் பார்த்திருந்தான். இப்போது இது என்ன? வேறு என்ன நிச்சயம் கள்ளப் பார்வை தான். அவள் எங்கிருந்தாலும் அவன் கண்கள் அவளையே நோட்டமிட ஆரம்பித்தது. இல்லையில்லை நன்றாகவே சைட் அடித்தான். இவன் கண்கள் அவளை சுற்றி வர அன்னை தங்கை கண்களோ இவனையேச் சுற்றி வந்தது.
"அம்மா ! அம்மா !" அழைத்துக் கொண்டே கையில் ஒரு சிறு பிள்ளையுடன் வந்தாள் குழலி.
"என்ன குழலி ?"
சமையல் அறைக்குள் வந்தவள் வினையின் அன்னையும் உடன் இருக்கவும் சற்றுத் தயங்கினாள்.
குழலியின் அன்னை "என்னடி இது துர்க்கா பிள்ளையை தூக்கிட்டு வந்துருக்க? அவ எங்க?" என்றார் .
"அம்மா அவங்களுக்கு காச்சலா இருக்காம். பிள்ளைக்கு பாலு கொடுக்காம கட்டிடுச்சாம். அதான் பிள்ளைக்கு ஏதாவது இட்லி தர முடியுமான்னு கேட்டுச்சு. அப்டியே உன்னை இல்ல ஆயாவை கூப்பிட்டுச்சு "
"யாருன்னு எனக்கு காட்டு. நான் நர்ஸு தான். நான் போய் பாக்கறேன்.
துர்காவுக்கு தேவையானது செய்துவிட்டு, அப்படியே இது போல நேரங்களில் என்ன செய்ய வேனும் என்பதையும் சொல்லிக் கொடுத்துவிட்டு கொள்ளை புறத்தில் வந்த போது கண்ட காட்சி சற்று வியப்பாகத் தான் இருந்தது.
குழலி வினய் குளிக்க தண்ணீரை இழுத்து கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ இது போல கிணற்றுத் தண்ணீர் குளித்து பழக்கம் இல்லாமல் பக்கெட்டில் இருந்த நீரை தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை வாருங்கால மருமகளோடு சேர்ந்து கிண்டல் செய்தார் அவனின் அன்னை.
"என்ன வேண்டும்" சாப்பாடு கேட்டு கேட்டுப் பரிமாறியவளை வினயின் கண்கள் உள்ளிழுத்துக் கொண்டன.
கிளம்பும் நேரம் மனதை குழலியிடம் கொடுத்துவிட்டு வெறும் உடலாக ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவனுக்கு அவன் மனதிற்கு பதிலாக தன்னுடைய மனதை கொடுத்தனுப்பினாள் குழலி.
நல்ல படியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு மனம் முழுவதும் குழலி மற்றும் அவள் வீட்டு உறுப்பினர்கள், பின் புறம் இருந்த தோட்டம், சற்று தூரத்தில் இருந்த வயல்வெளி, சிவன் கோயில் என்று அனைவரின் உள்ளமும் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்தது. அதிலும் குழலியின் ஆயா பைகள் நிரப்பி காய்கறி கொடுத்திருந்தார்.
இவர்களின் மனமே இப்படி என்றால் வினய் குழலி பற்றி கேட்க வேண்டுமா?
டிப் டாப்பாக கல்லூரிக்கு வருபவனையே சைட் அடித்தவள், கட் பனியன் லுங்கியில் பார்த்தால்?
அவர்கள் சென்ற அன்று இரவில் தூக்கம் வராமல் அவள் பட்ட பாடு. அவன் படுத்திருந்த இடத்தில வந்து படுத்துக் கொண்டு அவனையே மனதில் நிரப்பி ! கஷ்டம் தான். கல்லூரி முடிந்து வரும்போதோ இனி அவனைப் பார்க்க போவதில்லை என்றது தெரியும்தான் . இருப்பினும் ஏதோ அந்த அளவு பாதிப்பு இல்லை. கல்லூரி நாட்கள். பார்க்க ஆள் நன்றாக இருந்தார். பலர் சைட் அடிக்க அதில் தானும் ஒருத்தி என்று தான் மனதை மாற்றி கொண்டாள் .
அதுவே அவன் இவர்கள் வீட்டில் வந்து உரிமையாக தங்கியபோது ஏதோ கணவன் தன்னை அன்னை வீட்டில் விட்டு விட்டுச் செல்வது போலத் தான் அவளுக்கு இருந்தது.
அதிலும் அவன் போனில் அழைத்துப் பேசும்போது? அப்பப்பா அது என்ன குரலில் அத்தனை குழைவு?
இருவருக்குமே பேச எத்தனையோ விஷயங்கள் இருந்தும் பேச முடியவில்லை. ஒரு நிலையில் இருவராலும் இதற்கு மேல் முடியாது என்று தெரிந்து விட்டது. இன்னிக்கு அவர் கிட்ட ஓப்பனா பேசிடனும். அவள் அவனிடம் தீர்மானமாகப் பேச வேண்டும் என்று நினைக்க அவன் அன்னை தான் இவள் அன்னையிடம் இன்பார்மலாக பேசினார்.
"உங்க கிட்ட சொல்லறதுக்கு என்ன? குழலிய விட்டு வரவே எங்களுக்கு மனசில்லை. அவளை எங்க வீட்டுக்கே மருமகளா அனுப்பிடறீங்களா?"
"எங்க இது ? இப்படி திடிர்னு?" குழலியின் அன்னைக்கு என்ன சொல்ல வேண்டும் எப்படி பேசவேணும் எதுவும் புரியவில்லை.
"உங்களை உரிமையோடு சம்மந்தின்னு கூப்பிடனும். வீட்டுல பேசுங்க. சரின்னா சொல்லுங்க நாம் முறைப்படி பேசலாம். இல்லைன்னாலும் பரவாயில்ல. கடவுள் எங்க எழுதி வச்சுருக்காரோ அங்க தான். இருந்தாலும் உங்க பொண்ண என் பையன் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பான். யோசிச்சு கலந்து பேசி முடிவு சொல்லுங்க."
இங்கே குழலி வினயிடம் வெளிப்படையாகவே தன் விருப்பதைக் கூறி விட்டாள்.
அவனோ நமுட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"என்னால இதுக்கு மேல முடியாது. நீங்க வீட்டுல பேசுங்க. என்ன பிடிக்கலன்னா சொல்லிடுங்க நாம் இதோட நிறுத்திக்கலாம். இப்படி போன்ல பேசறது சரியில்ல "
" நீ சொல்லறதும் சரிதான் குழலி நாம இப்படி போன்ல பேசறது சரியில்ல. நாம நிறுத்திக்கலாம்"
அவன் சொன்னதன் அர்த்தம் புரியாதவள் அவனை மறக்க நினைத்து ? நினைத்து நினைத்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள் .
"அப்பாவோட பிரண்டு வீட்டுலேர்ந்து உன்ன பொண்ணு பாக்க வராங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்பதான் அவங்க வரும்போது மூஞ்சி நல்லா இருக்கும்"
படுத்தவளுக்கு அவன்தானே கண் முன் வந்தான்.
'ஆயா வேற வீட்டுல இருக்கு. அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்லவும் முடியாது. இவங்க பார்த்துட்டு போகட்டும். அப்பா கிட்ட சொல்லிட வேண்டியது தான். என்ன இருந்தாலும் மனச ஒருத்தருக்கும் உடம்ப வேற ஒருத்தருக்கும் என்னால தர முடியாது. ஆனா அவரு தான் என்னை பிடிக்கலேன்னு சொல்லிட்டாரே . இதுக்கு மேல நான் என்ன பண்ண? " அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது அவனை காணும் வரை.
"நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும் "
இருவருக்கும் தனிமை கொடுக்கப் பட்டது. அறைக்குள் வந்ததுமே அவன் நெஞ்சில் குத்தி அவனை நன்றாக திட்டியவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அத்தனை கோபமும் ஓடிப் போய் பதிலாக குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள் .
அவனோ எதற்கும் அசராதவனாக அவள் முகம் துடைத்து முகமெங்கும் முத்தமிட்டான்.
" நீங்க பிடிக்கலன்னு சொலிட்டேங்கன்னு நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா? மனச உங்ககிட்ட குடுத்துட்டு எப்படி இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்க முடியும்? நீங்க ஏன் அன்னிக்கு என்ன பிடிக்கல. இதோட நிறுத்திக்கலான்னு சொன்னீங்க "
அவள் கண்களில் தான் எத்தனை தவிப்பு?
"ஏய் ! நான் எங்க அப்படி சொன்னேன். ஆமா இனிமே நாம போன்ல பேசறது சரியில்லைன்னு தானே சொன்னேன் "
"நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்குவே மாட்டேன்."
"லூசு! நாம் ரெண்டு பேரும் அன்னிக்கு ராத்திரி பேசறதுக்கு முன்னாடியே நம்ம அம்மாக்கள் பேசிமுடிவு பண்ணிட்டாங்க. உங்க வீட்டுல தான் உன்கிட்ட யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு ட்ராக் போகுது. அக்காவுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுன்னு சொல்லிட்டாளாம். எங்க அம்மா சொல்லவும் அதையே நானும் அப்டியே மைண்டேன் பண்ணேன். இது என் மேல எந்த தப்பும் இல்ல."
தோள் குலுக்கி சொல்லிக் கொண்டிருந்தவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சரி! நான் கிளம்பட்டுமா?"
"ம் ! சரி !"
"குழலி !"
"ம் !"
"சீக்கிரமா என்னோட பொண்டாட்டியா எனக்கு பக்கத்துல வந்து படுத்துகோடி. என்னால் இதுக்கு மேல முடியாது. இன்னும் இந்த கன்னிப் பைனைய காக்க வைக்காத ப்ளீஸ் "
"இதை எல்லாம் உங்க அப்பாகிட்ட சொல்லி சீக்கிரமா தேதி வைக்க சொல்லுங்க"
அவன் கொடுத்த பல முத்தங்களுக்கு ஈடாக சில முத்தங்களை அவளிடமிருந்து வாங்கி கொண்டு சென்றவன் வருங்கால மனைவியின் கட்டளைப் படியே அடுத்த மாதமே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து தன்னுடைய கட்டிலில் அவளை மனைவியாகப் படுக்க வைத்துக் கொண்டான்.
"சூப்பர் குழலி. உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி "
அடுத்து என்ன பேசுவது இவருக்குமே தெரியவில்லை. சிறிது மௌனம்.
தோழமை தொடரும்...........
இனியாவிப் பார்க்க வந்தது வேறு யாரும் இல்லை. குழலிதான். இந்த நிலையில் தோழியை பார்க்கவும் அவளுக்கு மனம் தாங்கவில்லை. தன் அத்தையிடம் சொல்லுவிட்டு இனியாவுடனேயே இருந்துக் கொண்டாள்.
"நீ எப்படி டி இங்க?"
குழலி ஓடி வந்து தோழியை கட்டிக் கொண்டாள் . இருவருக்குமே கண்கள் குளம் கட்டியது .
"நாத்தனார்க்கு டெலிவரிக்கு வந்துருக்கோம். அத்தைக்கு இங்க கேன்டீன் சாப்பாடு ஒத்துக்காது. அதுதான் சாப்பாடு கொடுக்க வந்தேன். அப்ப நர்ஸுங்க பேசிகிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு. அதுதான் யாரு என்ன ஏதாவது உதவி வேணுன்னா செஞ்சுட்டுப் போகலான்னு வந்தேன். கடைசிலப் பார்த்தா நீ இப்படி கிடக்கற . நல்லவன் எங்கடி? உங்க அத்த? அவங்க இன்னும் வரலையா?"
"என்ன எதுவும் கேக்காதடி. நீங்க எல்லாரும் என்ன சொன்னீங்களோ அது தான் என்னோட வாழ்க்கைல நடக்குது. நீங்க யோசிச்சதை விட மாமா இன்னும் மோசமாகிட்டு வராரு. அவரை எப்படி மாத்தப் போறேன்னு தெரியல." பட்டும் படாமலும் விஷயங்களைச் சொன்னாள் . பலதை சொன்னாள். சிலது முழுங்கி விட்டாள் ;. அதிலும் அந்த ரூபா விஷயம்? எப்படி தான் உயிருக்குயிராய் காதலித்து கைப்பிடித்தவன் இன்னொரு பெண் மீது அசிட் அடிக்க உதவியிருக்கிறார் என்று எப்படிச் சொல்ல முடியும்? நுனி நாக்கு வரை வந்த விஷயத்தை கடினமாய் முழுங்கி விட்டாள்.
இவள் சொன்னது வரை எல்லாவற்றையும் கேட்ட தோழி பெருமூச்சு விட்டாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்? தனது மாமியாரோடு சேர்ந்தே இனியாவை நல்ல படியாக பார்த்துக் கொண்டாள் .
"உனக்கு கல்யாணம்?"
"ஆயிடுச்சு. நம்ம வினய் சார் தான் இப்ப என் கணவர். அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம் .
"பார்ரா ! உனக்கு கூட வெக்கப்படத் தெரியுமா? எப்படியோ நினைச்சதை சாதிச்சுட்டடி "
இனியா சொன்னதும் சரிதான். அவளையும் அறியாமல் முகச் சிவப்போடு தான் குழலி விஷயத்தைச் சொன்னாள் ..
"எப்படிடி உங்க கல்யாணம் நடந்தது? முதல்ல யாரு லவ் சொன்னீங்க? நீயா?" விழி விரித்து ஆசையாகக் கேட்டாள் இனியா
"நான் இல்ல. அவங்க அம்மா தான் முதல்ல லவ் சொன்னாங்க"
"என்னடி கலாய்கிரியா ?"
"இல்லடி! உண்மையாவே அவங்க அம்மா அப்பா தான் என்னை ரொம்ப பிடிச்சுருக்குன்னு வந்து பொண்ணு கேட்டாங்க. வேற வேற ஜாதி தான் இருந்தாலும் மனுஷங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு எங்க வீட்டுலையும் ஒத்துக்கிட்டாங்க .
"உங்க பாட்டியை எப்படி சமாளிச்சீங்க ?"அவங்க வீட்டுலேர்ந்து கேட்டதும் முதல்ல சரி சொன்னதே எங்க பாட்டி தானே?"
"என்னடி சொல்லற? என்ன குழப்பாத. உருப்படியா விஷயத்தை சொல்லு ."
"வினயின் குடும்பம் திருவள்ளுர் அருகே உறவினர் திருமணத்தை முடித்து விட்டு சனி ஞாயிறு என்பதால் அருகில் இருந்த கோவில்களுக்குச் சென்று விட்டு திருவாலங்காட்டுக்கும் வந்திருந்தார்கள். அங்கே எதேச்சையாக குழலியைப் பார்க்கவும் அவள் வேண்டுகோளின்படி இரவில் அவர்கள் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும் சப்பாத்தி செய்து இரவு படுக்க ஏற்பாடுகள் செய்து என்று குழலியின் குடும்பத்தில் இருந்த அனைவருமே வந்தவர்களை நன்றாகவே உபச்சாரம் செய்தார்கள்
இரவில் தன் அன்னை அடுத்து அவள் அன்னை அதற்கு அடுத்து குழலி என்று படுத்திருந்தார்கள் ஹாலில் தான் பாய் விரித்து வரிசையாகப் படுத்துக் கொண்டார்கள். உள் அறையில் வினையின் தங்கை கட்டிலில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு இப்போது மூன்று மாதம். அருகில் குழலி பாட்டி. பாட்டி ஏதேதோ கதைகள் சொல்லவும் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாகவே உறங்கி இருந்தாள் சின்னவள். மறு நாளும் அவள் பாட்டியையே சுற்றி சுற்றி வந்தாள். ஆண்கள் ஒன்று சேர பெண்களும் சேர்ந்துக் கொண்டார்கள். மறு நாள் விடிவதற்கு முன்பே எழுந்து குழலியும் அவள் தங்கையும் கோவிலில் கோலம் போடச் சென்று விட்டார்கள். பெண்கள் குளித்து பிறகு ஆண்கள் குளித்தனர். இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதிய உணவுக்குப் பின் அவர்கள் கிளம்புவதாக ஏற்பாடு.
"என்னங்க இது? ஏதோ பிள்ளை கூப்புடான்னு ராத்திரி வந்தோம். ஏற்கனவே எங்களால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு. இன்னும் இன்னும் நாங்க உங்களை தொண்டஹ்ர்வு பண்ணறது சரியில்லங்க. நாங்க வெளில எங்கையாவது டிபன் சாப்பிட்டு வீட்டுக்கு போனா ஒரு சாதம் வைச்சா முடிஞ்சது" ஒரு வித தயக்கத்துடனே வினயின் அன்னைக்கு கூறினார்.
"வூட்டுக்குப்போய் சாதம் வைக்கலாம். இந்த மாதிரி வீட்டுல விளைந்த காய் கிடைக்குமா? உங்க ஊரு காய் வேற மாதிரி இருக்கும். இங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகணும். பாட்டியின் உரிமையும் அன்பும் அவர்களுக்கு பிடித்து விட்டது. மறு பேச்சு பேசாமல் பெரியவர் சொன்ன படி நடந்தனர்.
குழலி காலையிலேயே குளித்து விட்டு தலைக்கு துண்டை சுற்றிக் கொண்டு பளிச்சென முகத்தில் இருந்த சில நீர் துளிகளை துடைத்துக் கொண்டே வந்தவளை பார்த்த வினய் அசந்து விட்டான். இது வரை கல்லூரியில் பார்த்தவர்கள் தான். இருப்பினும் அவள் மாணவி என்ற அளவோடு தான் பார்த்திருந்தான். இப்போது இது என்ன? வேறு என்ன நிச்சயம் கள்ளப் பார்வை தான். அவள் எங்கிருந்தாலும் அவன் கண்கள் அவளையே நோட்டமிட ஆரம்பித்தது. இல்லையில்லை நன்றாகவே சைட் அடித்தான். இவன் கண்கள் அவளை சுற்றி வர அன்னை தங்கை கண்களோ இவனையேச் சுற்றி வந்தது.
"அம்மா ! அம்மா !" அழைத்துக் கொண்டே கையில் ஒரு சிறு பிள்ளையுடன் வந்தாள் குழலி.
"என்ன குழலி ?"
சமையல் அறைக்குள் வந்தவள் வினையின் அன்னையும் உடன் இருக்கவும் சற்றுத் தயங்கினாள்.
குழலியின் அன்னை "என்னடி இது துர்க்கா பிள்ளையை தூக்கிட்டு வந்துருக்க? அவ எங்க?" என்றார் .
"அம்மா அவங்களுக்கு காச்சலா இருக்காம். பிள்ளைக்கு பாலு கொடுக்காம கட்டிடுச்சாம். அதான் பிள்ளைக்கு ஏதாவது இட்லி தர முடியுமான்னு கேட்டுச்சு. அப்டியே உன்னை இல்ல ஆயாவை கூப்பிட்டுச்சு "
"யாருன்னு எனக்கு காட்டு. நான் நர்ஸு தான். நான் போய் பாக்கறேன்.
துர்காவுக்கு தேவையானது செய்துவிட்டு, அப்படியே இது போல நேரங்களில் என்ன செய்ய வேனும் என்பதையும் சொல்லிக் கொடுத்துவிட்டு கொள்ளை புறத்தில் வந்த போது கண்ட காட்சி சற்று வியப்பாகத் தான் இருந்தது.
குழலி வினய் குளிக்க தண்ணீரை இழுத்து கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ இது போல கிணற்றுத் தண்ணீர் குளித்து பழக்கம் இல்லாமல் பக்கெட்டில் இருந்த நீரை தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை வாருங்கால மருமகளோடு சேர்ந்து கிண்டல் செய்தார் அவனின் அன்னை.
"என்ன வேண்டும்" சாப்பாடு கேட்டு கேட்டுப் பரிமாறியவளை வினயின் கண்கள் உள்ளிழுத்துக் கொண்டன.
கிளம்பும் நேரம் மனதை குழலியிடம் கொடுத்துவிட்டு வெறும் உடலாக ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவனுக்கு அவன் மனதிற்கு பதிலாக தன்னுடைய மனதை கொடுத்தனுப்பினாள் குழலி.
நல்ல படியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு மனம் முழுவதும் குழலி மற்றும் அவள் வீட்டு உறுப்பினர்கள், பின் புறம் இருந்த தோட்டம், சற்று தூரத்தில் இருந்த வயல்வெளி, சிவன் கோயில் என்று அனைவரின் உள்ளமும் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்தது. அதிலும் குழலியின் ஆயா பைகள் நிரப்பி காய்கறி கொடுத்திருந்தார்.
இவர்களின் மனமே இப்படி என்றால் வினய் குழலி பற்றி கேட்க வேண்டுமா?
டிப் டாப்பாக கல்லூரிக்கு வருபவனையே சைட் அடித்தவள், கட் பனியன் லுங்கியில் பார்த்தால்?
அவர்கள் சென்ற அன்று இரவில் தூக்கம் வராமல் அவள் பட்ட பாடு. அவன் படுத்திருந்த இடத்தில வந்து படுத்துக் கொண்டு அவனையே மனதில் நிரப்பி ! கஷ்டம் தான். கல்லூரி முடிந்து வரும்போதோ இனி அவனைப் பார்க்க போவதில்லை என்றது தெரியும்தான் . இருப்பினும் ஏதோ அந்த அளவு பாதிப்பு இல்லை. கல்லூரி நாட்கள். பார்க்க ஆள் நன்றாக இருந்தார். பலர் சைட் அடிக்க அதில் தானும் ஒருத்தி என்று தான் மனதை மாற்றி கொண்டாள் .
அதுவே அவன் இவர்கள் வீட்டில் வந்து உரிமையாக தங்கியபோது ஏதோ கணவன் தன்னை அன்னை வீட்டில் விட்டு விட்டுச் செல்வது போலத் தான் அவளுக்கு இருந்தது.
அதிலும் அவன் போனில் அழைத்துப் பேசும்போது? அப்பப்பா அது என்ன குரலில் அத்தனை குழைவு?
இருவருக்குமே பேச எத்தனையோ விஷயங்கள் இருந்தும் பேச முடியவில்லை. ஒரு நிலையில் இருவராலும் இதற்கு மேல் முடியாது என்று தெரிந்து விட்டது. இன்னிக்கு அவர் கிட்ட ஓப்பனா பேசிடனும். அவள் அவனிடம் தீர்மானமாகப் பேச வேண்டும் என்று நினைக்க அவன் அன்னை தான் இவள் அன்னையிடம் இன்பார்மலாக பேசினார்.
"உங்க கிட்ட சொல்லறதுக்கு என்ன? குழலிய விட்டு வரவே எங்களுக்கு மனசில்லை. அவளை எங்க வீட்டுக்கே மருமகளா அனுப்பிடறீங்களா?"
"எங்க இது ? இப்படி திடிர்னு?" குழலியின் அன்னைக்கு என்ன சொல்ல வேண்டும் எப்படி பேசவேணும் எதுவும் புரியவில்லை.
"உங்களை உரிமையோடு சம்மந்தின்னு கூப்பிடனும். வீட்டுல பேசுங்க. சரின்னா சொல்லுங்க நாம் முறைப்படி பேசலாம். இல்லைன்னாலும் பரவாயில்ல. கடவுள் எங்க எழுதி வச்சுருக்காரோ அங்க தான். இருந்தாலும் உங்க பொண்ண என் பையன் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பான். யோசிச்சு கலந்து பேசி முடிவு சொல்லுங்க."
இங்கே குழலி வினயிடம் வெளிப்படையாகவே தன் விருப்பதைக் கூறி விட்டாள்.
அவனோ நமுட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"என்னால இதுக்கு மேல முடியாது. நீங்க வீட்டுல பேசுங்க. என்ன பிடிக்கலன்னா சொல்லிடுங்க நாம் இதோட நிறுத்திக்கலாம். இப்படி போன்ல பேசறது சரியில்ல "
" நீ சொல்லறதும் சரிதான் குழலி நாம இப்படி போன்ல பேசறது சரியில்ல. நாம நிறுத்திக்கலாம்"
அவன் சொன்னதன் அர்த்தம் புரியாதவள் அவனை மறக்க நினைத்து ? நினைத்து நினைத்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள் .
"அப்பாவோட பிரண்டு வீட்டுலேர்ந்து உன்ன பொண்ணு பாக்க வராங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்பதான் அவங்க வரும்போது மூஞ்சி நல்லா இருக்கும்"
படுத்தவளுக்கு அவன்தானே கண் முன் வந்தான்.
'ஆயா வேற வீட்டுல இருக்கு. அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்லவும் முடியாது. இவங்க பார்த்துட்டு போகட்டும். அப்பா கிட்ட சொல்லிட வேண்டியது தான். என்ன இருந்தாலும் மனச ஒருத்தருக்கும் உடம்ப வேற ஒருத்தருக்கும் என்னால தர முடியாது. ஆனா அவரு தான் என்னை பிடிக்கலேன்னு சொல்லிட்டாரே . இதுக்கு மேல நான் என்ன பண்ண? " அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது அவனை காணும் வரை.
"நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும் "
இருவருக்கும் தனிமை கொடுக்கப் பட்டது. அறைக்குள் வந்ததுமே அவன் நெஞ்சில் குத்தி அவனை நன்றாக திட்டியவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அத்தனை கோபமும் ஓடிப் போய் பதிலாக குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள் .
அவனோ எதற்கும் அசராதவனாக அவள் முகம் துடைத்து முகமெங்கும் முத்தமிட்டான்.
" நீங்க பிடிக்கலன்னு சொலிட்டேங்கன்னு நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா? மனச உங்ககிட்ட குடுத்துட்டு எப்படி இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்க முடியும்? நீங்க ஏன் அன்னிக்கு என்ன பிடிக்கல. இதோட நிறுத்திக்கலான்னு சொன்னீங்க "
அவள் கண்களில் தான் எத்தனை தவிப்பு?
"ஏய் ! நான் எங்க அப்படி சொன்னேன். ஆமா இனிமே நாம போன்ல பேசறது சரியில்லைன்னு தானே சொன்னேன் "
"நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்குவே மாட்டேன்."
"லூசு! நாம் ரெண்டு பேரும் அன்னிக்கு ராத்திரி பேசறதுக்கு முன்னாடியே நம்ம அம்மாக்கள் பேசிமுடிவு பண்ணிட்டாங்க. உங்க வீட்டுல தான் உன்கிட்ட யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு ட்ராக் போகுது. அக்காவுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுன்னு சொல்லிட்டாளாம். எங்க அம்மா சொல்லவும் அதையே நானும் அப்டியே மைண்டேன் பண்ணேன். இது என் மேல எந்த தப்பும் இல்ல."
தோள் குலுக்கி சொல்லிக் கொண்டிருந்தவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சரி! நான் கிளம்பட்டுமா?"
"ம் ! சரி !"
"குழலி !"
"ம் !"
"சீக்கிரமா என்னோட பொண்டாட்டியா எனக்கு பக்கத்துல வந்து படுத்துகோடி. என்னால் இதுக்கு மேல முடியாது. இன்னும் இந்த கன்னிப் பைனைய காக்க வைக்காத ப்ளீஸ் "
"இதை எல்லாம் உங்க அப்பாகிட்ட சொல்லி சீக்கிரமா தேதி வைக்க சொல்லுங்க"
அவன் கொடுத்த பல முத்தங்களுக்கு ஈடாக சில முத்தங்களை அவளிடமிருந்து வாங்கி கொண்டு சென்றவன் வருங்கால மனைவியின் கட்டளைப் படியே அடுத்த மாதமே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து தன்னுடைய கட்டிலில் அவளை மனைவியாகப் படுக்க வைத்துக் கொண்டான்.
"சூப்பர் குழலி. உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி "
அடுத்து என்ன பேசுவது இவருக்குமே தெரியவில்லை. சிறிது மௌனம்.
தோழமை தொடரும்...........
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.