• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இப்படிக்கு, காதல்- 5

Adhithya

New member
Joined
May 23, 2025
Messages
6


ன் நம் நாட்டின் சில பெரும்பாலான சமூகங்களின் கல்யாணங்களில் எல்லா சுமைகளும் பெண்ணை பெற்றவர்கள் மீது இறக்கி வைக்கப் படுகின்றன?

பெண்களை பெற்றவர்களை விட ஆண்களை பெற்றவர்கள் ஏன் கர்வம் கொள்கிறார்கள்?

மாதா மாதம் பீரியட்ஸ், கல்யாணம், கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு தன்னை பொருத்திக் கொள்தல், குழந்தைப் பேறு, போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன், இதுல நாம பெத்து குழந்தைய கஷ்டப்பட்டு வளர்த்தா சில லேடீஸ் ஈஸியா வந்து நொட்டை சொல்லிவிட்டு செல்வார்களாம், அதையும் நாம் பொறுத்துக்கொண்டு போகணும்.

அதைவிட இந்த காலத்து பெண்களுக்கு "கேரியர்" ( career) என்று ஒன்று இல்லையென்றால் அதற்கும் ஏளனமாக பார்க்கப்படுகிறார்கள். "என்ன படிச்சு என்ன, வீட்ல தான இருக்க!!" ....ஸ்ஸ்ஸபா..

இதுல இன்னொரு குடும்பத்தில் போய் நம்மை பொருத்த படும் பாடு இருக்கே...?!?! .

'கூட்டுக் குடும்பமாக தான் நாம இருக்கணும்' னு சொல்ற பாதி மாமனார் மாமியார்க்கு மருமகளுக்கு மட்டுமே கடமைகள் இல்லை தங்களுக்கும் உண்டு என்பதை உணர்வதே இல்லை. அந்த பழியும் இருக்கவே இருக்கா மருமக அவ மேல போட்ற வேண்டியது தான்.

"என் புள்ளய எங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டா"
என்ன ஒரு அதி அற்புதமான டயலாக்?!!


*****


மறு வீடு சென்றுவிட்டு மகிழ்ச்சியாக சூர்யா அர்ஜுனுடன் ட்ரெயினில் மாமியார் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். ஃபோன் கூவி அழைத்தது.

அம்மா ஜானகி கால் செய்து அழுதுகொண்டே பேசின விபரம் கவலை, கோபம், எரிச்சல், தவிப்பு என பல ரஸங்களை சூர்யாவின் மனதிலும், முகத்திலும் தோற்றுவித்தது. அர்ஜுன் என்னவென்று பார்க்க ஃபோனை அவனிடம் கொடுத்தாள்.

ராகவன் தான் பேசினார். அர்ஜுனின் அம்மாவும் அப்பாவும் பேசியதாகவும், சூர்யாவிற்கு இவர்கள் போட்ட இருபத்தைந்து பவுன் நகைகளும் இமிட்டேஷன் போல் இருப்பதாகவும் கூறி தாங்கள் ஏமாந்து போய்விட்டது போல் உணர்வதாகவும் கூறினார்களாம்.

அம்மா அழுதுகொண்டே "என்ன இப்படி பேசறேள்? எல்லா நகையும் தஙக நகைகள்தான். இமிட்டேஷன் நகைகள் போட்டு ஏமாத்த எங்களுக்கு என்ன அவசியம்? "

அதற்கு மாமியார் " நாலு வளையல்லையும் பிளாஸ்டிக் போட்ருக்கே?"

"அது வளையல் நெளிஞ்சுடாம இருக்க கடையிலே போட்டுக் குடுத்தது."

மாமியார் அதிகப்படியாக பேச வந்தததாகவும் மாமனார் வாங்கி ஃபோனை அணைத்து விட்டதாகவும் அப்பா அர்ஜுனிடம் கூறினார்.

அதற்கு அர்ஜுன் ஆறுதல் சொல்ல வேண்டாம். தனக்கும் தன் அப்பா பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் அல்லது அவர் கேட்டது தப்பில்லை என்பது போல் ஒன்று சொன்னான்.

"இது பத்தி என்கிட்ட எதுவும் பேசாதீங்க மாமா. அப்பா கிட்டயே பேசிக்கங்க."

அது சூர்யாவிற்கு தலையில் இடி, மின்னல் வேகத்தில் இறங்கியது

****
 

Author: Adhithya
Article Title: இப்படிக்கு, காதல்- 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top