• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆகாயம் - 5

kanjeevaram

New member
Joined
Mar 17, 2025
Messages
7
ஆகாயம் - 5

வழக்கம் போல் இரு வாரங்கள் சென்றது, அன்று ஞாயிறு தர்ஷி சென்ற வாரம் வந்து சென்றதால், இவ்வார ஞாயிறு நாதனுக்கு ஜானுவுக்கும் அத்தனை சோபிக்கவில்லை.

காலை உணவுக்கு பிறகு இன்று பேசிவிடுவது என்று முடிவெடுத்த நாதன்

"ஜானு நான் உன்கிட்ட மனசு விட்டு பேசிடலாம் இருக்கேன்- பேசவா"

ஜானு மறுபடியுமா என்று யோசித்தாலும்,

"சரி சொல்லுங்க"

"உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம தர்ஷி எட்டு மாசம் இருக்கும் போது, உனக்கு நாப்பது நாளுல தீடீர்னு பீரியட் ஜாஸ்தியாகி நாம ஹாஸ்பிடல் போனோம், அப்போ டாக்டர் இது கரு கலைஞ்ச மாறி இருக்கு சொல்லி ஸ்கேன் பண்ணி, அப்புறம் சின்ன ப்ரோசிஜர் எல்லாம் பண்ணாங்க" - நாதன்

"ஆமாம், சொல்லுங்க, குழந்தை வேண்டாம்ன்னு தான் இப்படியா, அறிவு இல்லையா உங்களுக்கு" எதை எதையோ எதிர் பார்த்த ஜானு, நாதன் இப்படி சொல்லவும் ஜானுவிற்கு டென்ஷன் கூடியது.

"ஜானு, நான் சொல்ல வரத முழுசா கேளு " - சிறு அழுதத்துடன் நாதன்

"சரி சொல்லுங்க "- என்ன வரப்போகிறதோ என்று ஜானு

"எனக்கு சின்ன வயசா இருக்கும் போது, நான் சொல்லுறது டீன் ஏஜ்ல எல்லாம் இதை பத்தி பெரிய அறிவோ, ஏதும் இல்ல. என்னோட முதல் தடவை "- ஜானுவின் முகம் பார்க்கவும் வேறு பக்கம் பார்க்கவும் இருந்த நாதன், ஜானுவின் அமைதியில்
"எனக்கு முதல் வாட்டி அப்படி நடந்தப்போ, நமக்கு எதோ உடல் கோளாறு தான் நான் நினைச்சேன், ஆனா கொஞ்ச நாளுக்கு அப்புறம் பசங்க பேசுறத வச்சு அது பத்தி தெரிஞ்சுகிட்டேன்"

நாதன் இப்படி எல்லாம் பேசுபவர் இல்லை. இத்தனை வெளிப்படையாக பதினெட்டு வருடத்திற்கு பிறகு பேசும் கணவனை அதிசயித்து பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள் ஜானு.

ஜானுவின் அமைதியில் நாதன் தொடர்ந்தார்

"உனக்கே தெரியும், நாங்க சின்ன வயசா இருக்கும் போது ஒரு சின்ன வீட்டுல தான் இருந்தோம், அந்த சின்ன வீட்டுல ஒரு நாள் நான் நைட் எந்திரிக்கும் போது எங்க அப்பா அம்மா சமையல் ரூம்ல இருந்தாங்க - நான் நான் சொல்லுறது உனக்கு புரியுதா?!!"

ஆம் என்ற ஜானுவின் தலை அசைப்பில் நாதன் தொடர்ந்தார்

" எனக்கு அது அப்போ சரியாவும் தெரியல தப்பாவும் தெரியல பயம் மட்டும் தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் தான் நான் வீட்டுக்கு வெளிய சின்ன விராண்டால படுத்தேன் அங்க இருந்தே வெளிய பாத்ரூம் போலாம், கிட்ட தட்ட காலேஜ் முடிச்சு வேலைக்கு எல்லாம் போன பின்னாடி தான் உள்ள படுத்தது. அதுனால தான் சீக்கிரம் வீடும் கட்டினேன்."

நாதன் ஜானகியின் முகம் பார்த்து தொடர்ந்தார்

"ஒரு வாட்டி அம்மா அப்பாகிட்ட அவனை உள்ள படுக்க சொல்லுங்க சொன்னப்போ- அப்பா இருக்கட்டும் அவன் பையன் தனியா படுக்குறது நல்லது தான், அவனுக்கு நல்லது தான் விடு சொன்னாங்க - அவங்க என்ன அர்த்தத்துல சொன்னாங்க தெரியல ஆனா நான் அப்படி எல்லாம் அதிகமா ஏதும் பண்ணது இல்ல ஜானு, எனக்கு புரிதல் இல்ல, காலேஜ் முடிச்சு வேலைக்கு போயும் கூட அவ்வளோ புரிதல் இல்ல, ஆனா அதை பத்தி தெரியும் ஆனா பயங்கரமான கூச்சம், தனியா இருந்தா கூட ஒரு கூச்சம், உனக்கு நான் சொல்லுறது புரியுதா ஜானு"
- நாதன் இதை கேட்டவுடன்

ஜானுவிற்கு கண்கள் கலங்குவது போல் இருக்க தலையை மேல் கீழ் அசைத்து ஆம் என்றவுடன்

"ஜானு உனக்கு குழந்தை பிறந்த பின்னாடி, அம்மா அப்பா கிட்ட ஒரு ரெண்டு வாட்டி தர்ஷிய தூங்க வச்சோம் ஞாபகம் இருக்கா, அதுனால தான் உனக்கு அப்படி ஆனதும், அதுனால தான் நான் நமக்கு ஒரு குழந்தை போதும் நினைச்சி நான்... நான்... சின்ன
ப்ரோசிஜர் பண்ணிக்கிட்டேன்" - நாதன் இதை சொன்னதும் ஜானுவிற்கு எப்படி எதிர்வினை செய்வது என்று தெரியவில்லை. இத்தனை வருடத்திற்கு பிறகு இது தெரிய வந்ததால் அதிர்ச்சியும் முகம் இறுக்கமாக மேலே சொல்லுங்க என்பது போல் ஒரு பாவத்தில் நாதன் தொடர்ந்தார்.

"அதை பண்ணதுக்கு அப்புறம் உன்கிட்ட சொல்ல ஒரு பயம் கூச்சம், அப்படியே விட்டு விட்டு - அது ஒரு மாறி பழகி போச்சு ஜானு, நான் சொல்லி அம்மா அப்பா இருக்கும் போது இது எல்லாம் தெரிஞ்சு பிரச்சினை ஆகுமோ, அம்மா என்ன நினைப்பாங்க அப்பா பத்தி எல்லாம் யோசிச்சு யோசிச்சு தான் ஜானு, நான் பெரிய முட்டாள் தான்" என்று முடித்த நாதன் இப்படி ஒரு கேள்வியை ஜானுவிடம் எதிர் பார்க்க வில்லை.

"இது எல்லாம் சரிங்க, ஆனா இவ்வளோ வருஷம் கழிச்சு, இப்போ என்ன, உங்க அப்பா அம்மா இல்ல தர்ஷியும் இல்ல நாம மட்டும் இருக்கோம், அப்படி நினைச்சு இப்படி எல்லாம் பண்ணறீங்களா" - ஜானு இதை கேட்டவுடன்

சொல்லலாமா வேண்டாமா என்று இரண்டு மாதமாக மறைத்த விஷத்தை நாதன் சொல்லியே விட்டார்.

"ஜானு உன்னோட அந்த லேப்டாப் ஜர்னல் அப்ளிகேஷன் நான் படிச்சேன் "

இதை கேட்டவுடன் ஜானுவிற்கு அப்படி ஒரு கோபம்.

இரண்டு மதத்திற்கு முன்பு, ஒரு இரவில் நாதன் எதோ வேலைக்காக ஜானுவின் லேப்டாப் கேட்டார். அவரின் கணினி எதோ பிரச்சினை காரணமாய் கடையில் இருந்தது.

ஜானு தன் வீட்டுக்கு பயன்படுத்தும் கணினியை எடுத்து கொடுத்தாள். பின் எப்பவும் போல் ஜானு உறங்க சென்று உறங்கியும் விட்டாள். நாதன் இப்படி எல்லாம் ஜானுவின் கணினி கேட்பது இல்லை. ஜானுவும் கணினியின் அனைத்தும் பத்திரமாக கடவுச்சொல்லுடன் வைத்து இருந்ததால், ஜானுவிற்கு ஏதும் தோன்றவில்லை.

ஒரு அரை மணி அதில் வேலை பார்த்து முடித்த நாதன், கணினியின் திரையில் மயில் படத்துடன் ஒரு ஐகான் இருக்கவும் அதை சொடுக்கினார். அது கடவுச்சொல் கேட்கவும் எதை எதையோ முயற்சித்த நாதனுக்கு அதை ஆராயும் வேகம்.

ஜானு என்றோ ஸ்மைலிக்களை கடவுசொல்லாக பயன்படுத்தாலாம் என்று கூறிய ஞாபகத்தில் மூன்று 🏹💗🏹 வடிவ ஸ்மைலிக்களை கொடுக்கவும் அந்த அப்ப்ளிகேஷன் திறந்து கொண்டது. காஸ்மிக் கோஇன்சிடென்ஸ்(cosmic coincidence) எதிர்பாரா ஒரு பெரிய தற்ச்செயல் நிகழ்வு.

நாதன் அந்த ஜர்னல் திறந்து பார்க்கவும் தேதி வாரியாக கிட்ட தட்ட ஐந்து வருடங்களுக்கு குறிப்புகள் இருந்தது.

( பர்சனல் ஜர்னல் personal journal- போன்ற கடவுச்சொல் போட்டு பயன்படுத்தப்படும் செயலிக்கள் - நம் உபயோக படுத்தும் டைரி போலவே இருக்கும், நமக்கு ஏற்ற போல் படங்கள் கொண்டும் வண்ணம் கொண்டும் அழகு படுத்தி கொள்ளலாம்)

ஜானு எழுதியது எல்லாம் சிறு கதைகள் போலவும் கவிதைகள் போலவும், அத்தனை நேர்த்தியாக அழகு தமிழ் கொண்டு எழுதப்பட்டு இருந்தது. அநேக கவிதைகளில் ராம் ராம் என்று ராமின் பெயர்கள், சிறு கதைகளில் ராம் ஜானு என்றும் இருந்தது.

சில கதைகளில் காதல் சொட்டியது, காதல் ரசம் கொண்டு அழகு மிளிர்ந்தது. விரசம் இல்லாது படிக்க அத்தனை இனித்தது. படிக்க படிக்க நாதனுக்கு கண்களில் கண்ணீர். நாதன் இப்படி பட்ட எழுத்துக்களை கதைகளை கவிதைளை இதுவரை படித்தது இல்லை.

இரண்டு மூன்று கதைகள் படிக்கவும் ராம் - நாதன் - ஜானு என்ற பெயர்கள் வரவே அவை ஜானுவின் தங்ளை பற்றிய கற்பனை என்று புரிந்து கொள்ள முடிந்தது.

நாதனுக்கு இருப்பு கொள்ளவில்லை, நெடு நேரம் அதை படித்த நாதன் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து தனக்கு அனுப்பி கொண்டார்.
தான் செய்த அனைத்தையும் தடையம் இன்றி அழித்தும் விட்டார்.

ஜானு அடுத்த நாள் வழக்கம் போல் கணினி எடுத்து உபயோகிக்க அவளுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஜர்னல் செயலியின் செயல் பாட்டை அவள் ஆராய்ந்து இருந்தால் தெரிந்து இருக்கலாம் ஆனால் காஸ்மிக் கோஇன்சிடென்ஸ்.

ஜானு எதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்த நாதன் அவளின் இறுக்கமான தோற்றம் கண்டு

"ஜானு " என்று கூப்பிட

"நான் சுஜீ வீட்டுக்கு ஒரு வாரம் போய்ட்டு வரேன் தயவு செய்து வேற ஏதும் பேசாதீங்க "
என்று சொல்லி அப்போதே கிளம்பி சென்று விட்டாள்.

ஜானுவின் ஜர்னல் பதிவு

காதல் இவ்வார்த்தையின்
நுட்பத்தை தேடிய என்
பயணத்தில்
காதல்
காமம் சார்ந்ததா?
காலம் சார்ந்ததா?
உணர்வு சார்ந்ததா?
உரிமை சார்ந்ததா?
என்ற கேள்விகளின் முடிவில்
உடலியல் கூறுகளும்
அறிவியல் விதிகளும்
கற்பித்தபடி
மூளையில் சுரக்கும்
ராசாயணம் சார்ந்தது
காதல்
என்ற பதிலை
நான் வரையறுத்து வைத்தாலும்

என் மனதில் ஊற்றாக
பொங்கும்
அன்பை
காதலை
நேசத்தை
உன்னை தவிர நான் யாரிடம் கூற
பிரியம் முழுதும் உனக்கே ராம்
 

Author: kanjeevaram
Article Title: ஆகாயம் - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
அன்புக்கும் ஆசைக்கும் இடையில்
ஏக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கு....

புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமல்
சேர்ந்தும் தள்ளியும்
தொட்டும் தொடாமலும்

பற்றற்ற இல்லறம்
பாவையின் மனதில்
பதிந்த எண்ணங்களின்
பதிப்பாக
பல கதையும் கவிதையும்
படைத்து காத்து கொண்ட
படைப்புகளை படித்து
புரிந்ததா மனைவியின் தவிப்பு....
பெண்ணின் மனதை
புரியாமல்
பாவம்... தள்ளி நிறுத்தி
தவறு செய்தது.....
 
Top Bottom