- Joined
- Jun 17, 2024
- Messages
- 17
Mr. மாமியார் 9
‘If friendship is understanding, relationships are commitment’
நட்பு என்பது புரிதல் எனில், உறவு என்பது அர்ப்பணிப்பு.
நட்புக்கே கற்பு உண்டெனில், காதலுக்கு அல்லது கல்யாணத்திற்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை அல்லவா?
இருவரது உறவு/ காதல் / திருமணம் சீராகத் தொடர வேண்டுமெனில் முதல் தேவை பரஸ்பர நம்பிக்கையும் உண்மையாக இருத்தலும். இதன் அடிப்படை தன் இணைக்கு அர்ப்பணிப்போடு இருப்பது.
கணவனும் மனைவியும் பரஸ்பர விஸ்வாசத்துடன் இருப்பது அடர்ந்த நம்பிக்கையைத் தரும். அந்த நம்பிக்கையே இணைந்து பயணிக்கும் உந்துதலைத் தரும். நெருங்கி வாழ்தலே (proximity) அன்பை, காதலை வளர்க்கும். அந்த அன்புதான் எதிர்காலக் கனவுகளை நோக்கிய நம்பிக்கை ஒளி.
தற்சார்பும் தனிமனித சுதந்திரமும் பேசுபவர்களை, மோகமும் போகமுமே ஆண், பெண் உறவு என கை கழுவும் கயவர்களை விட்டுவிடுவோம்.
சிரித்து, அழுது, நட்பாகி, காதலாகி, சினந்து, சீராட்டி, கோடையில் மழையை, குளிரில் கணப்பை தரவும் பெறவும் விரும்பும் சராசரியான ஆண்கள்தான் இங்கு அதிகம்.
ரோஜாப்பூவில் ஜரிகைத்தாள் சுற்றிய விலை உயர்ந்த பரிசுகளில், நகர்வலத்தில், நள்ளிரவு பிரியாணியில், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் சுயமிகளில், யாருடைய வரிகளையோ தங்கள் காதலுக்கான ஸ்டேட்டஸாக வைப்பதில் இல்லை காதல்.
தனக்கான பானத்தை, உணவை பிறர் அறியாமல் பகிர்தலில், குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன்பே சிறிதேனும் எடுத்து வைத்தலில், உயரம் குறைவான மனைவி பேருந்து படியில் பத்திரமாக ஏறி விட்டாளா என்ற கவனத்தில், இணைந்த வேகத்தில் நடப்பதில்… சுருங்கச் சொல்லின் விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது காதல்.
எந்த வகை திருமணமாக இருந்தாலும் ஆதாரமான ஈர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஒன்றுதான்.
திருமணமாகி ஏழு மாதங்களான லலிதா ‘குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் எனக்கு உன் மீது நம்பிக்கை வரவில்லை’ என தன் சகோதரனிடம் கூறியதைக் கண்டு அதிர்ந்த பவித்ராவை சமாதானம் செய்த வாமனமூர்த்தி ‘இது பெற்றோர் காது வரை செல்லவேண்டாம்’ என வெவ்வேறு விதத்தில் வலியுறுத்தினான்.
நல்லவேளை, ஸ்ரீராம் மாப்பிள்ளையாக மட்டும் இராமல், வாமனனின் நெருங்கிய நண்பனாகவும் போனான்.
ஸ்ரீராம் தன் ஆறாவது வயதில் அவனது.அம்மாவை அவனது இரண்டாவது பிரசவத்தில் இழந்தான். அடுத்த வருடமே சித்தி வந்தாள். கொடுமை, நிந்தனை, வஞ்சனை என்றில்லாமல், நல்ல மாதிரியாகத்தான் இருந்தாள், இருக்கிறாள். ஆனாலும், ஏனோ, எதுவோ ஒட்டவில்லை.
ஓரளவு விவரம் புரிந்த அந்த ஆறரை வயதில் , ஸ்ரீராம் ஆவலோடு எதிர்பார்த்த தம்பி அல்லது தங்கை மட்டுமின்றி அம்மாவே மீண்டு வராது போனதையும், தன் தாயின் சிதைக்கு நெருப்பு வைத்ததையும் , தொடர்ந்து நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களையும் தனது தேவைகளையும் பூர்த்தி செய்யவென மறுமணம் செய்துகொண்ட தந்தையையும் அந்தப் பிஞ்சு மனதால் அத்தனை சுலபமாக ஏற்கவோ, எதிர்க்கவோ முடியவில்லை.
ஸ்ரீராம், படிப்பு, ஹாஸ்டல், வேலை, ஆன்சைட், நட்பு வட்டம் என மெதுவே விலகி, தனக்கென எல்லை வகுத்துக் கொண்டான்.
வாமனன்,ஸ்ரீராம் இருவரது குடும்பங்களும் அப்போது அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர்.
அவனது பெற்றோர் பிரசவத்திற்கென மருத்துவமனை சென்றபோது பள்ளியில் இருந்தவன், மாலையில் அவன் தாய் இறந்த செய்தி வந்தபோது வாமனனின் வீட்டில்தான் இருந்தான்.
நடப்பது எதுவும் புரியாது விழித்த ஸ்ரீராமின் கையைப் பிடித்துக்கொண்டு
நகராது அவன் அருகிலேயே நின்றாள், அவனை விட நான்கு மாதங்களே சிறியவளான பவித்ரா. அன்று பிடித்த கைதான்.
உணர்வுகளை, சிந்தனையை வார்த்தையில் வர்ணிக்க இயலாத வயதில் தாயின் கதகதப்பைத் தொலைத்து, தன் துக்கத்தில் மூழ்கி இருந்த தந்தையிடமும் அதிகம் நெருங்க முடியாது, பிறகு அவரது இரண்டாம் திருமணத்தில், புதிய உறவுகளின் நடமாட்டத்தில் தனிமையில் தவித்தவனுக்கு ஆறுதல் பவித்ரா , வாமனனின் நட்பும், அவர்களது பெற்றோரின் புரிதலான அரவணைப்பும்தான்.
குறிப்பாக, வளர, வளர கோபம், வருத்தம், மூட் அவுட், வாமனனுடன் சண்டை, சித்திக்கு குழந்தை பிறந்து,. புதுக்குழந்தைக்கு கிடைத்த முக்கியத்துவம், யாரும் தடுக்கவில்லை எனினும், தனக்கு விருப்பமானவற்றை வீட்டில் கேட்கத் தயங்குவது என ஸ்ரீராமின் ஒவ்வொரு இயக்கமும் பவித்ராவிற்கு அத்துபடி.
வருடங்கள் உருள, பதின் பருவத்தில் நண்பர்கள் மூவரும் சேர்ந்தே இருக்க, பாட்டி ஜானகி சீதளாவிடம் மெதுவே ஆட்சேபிக்கத் தொடங்கினார். மூவரது நட்பின் ஆழம் புரிந்த
சீதளாவுக்குமே வயதுக்கு வந்த மகளை நினைத்து சிறிது சஞ்சலம்தான்.
பவித்ரா மருத்துவம், வாமனன் பி.காம், சிஏ, ஸ்ரீராம் பொறியியல் என ஆளுக்கொரு படிப்பை தேர்ந்தெடுத்தனர்.
ஸ்ரீராம் கோவை கல்லூரியில் ஹாஸ்டலில் சேர, ஜானகி பாட்டியிடமிருந்து இருபத்தோரு தேங்காயை லஞ்சமாகப் பெற்றார்
தெருக்கோடி பிள்ளையார்.
ஆனால், அடுத்து கிடைத்த விடுமுறையில் சென்னை வந்த ஸ்ரீராம் தன்னைக் கண்டதுமே பொங்கிப் பொங்கி அழுத பவித்ராவை தன்னோடு மெலிதாக அணைத்துக் கொண்டதைப் பார்த்துவிட்ட பாட்டி ஊரைக் கூட்ட, சீதளாவும் சத்தம் போட, சட்டென விலகிய ஸ்ரீராம், சங்கடத்தில் விழித்தான்.
பவித்ரா “... ஏம்மா கத்தற, என் ஸ்ரீதானேம்மா?” என்றாள் அலட்டிக்கொள்ளாது.
“பவி….”
இன்றும் அதே இயல்பும் அன்பும் அக்கறையுமாய், தன் சின்னச் சின்ன ஆசைகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்யும் பவித்ராவையும், அவளாவது அவனது காதலி, மனைவி… தன்னிடம் அவளுக்கு சற்றும் குறையாத அன்பும் நட்பும் கொண்ட வாமனமூர்த்தி?
ஸ்ரீராம் தன் நண்பனை நன்கறிவான். பேச்சில்
எத்தனை நக்கல் உண்டோ, செய்யும் வேலையில் அத்தனை நறுவிசும் உண்டு. யோசிக்காமல் எதையும் பேச மாட்டான். அதே நேரம், தனக்கு நெருக்கமானவர்களிடம் கரிசனமும் கோபமும் அதிகமாகவே வெளிக்காட்டுபவன்.
ஏழாம் வகுப்பிலேயே ‘பவி கிட்ட ஸ்கூல்ல வெச்சு அதிகம் பேசாத ஸ்ரீ’ என எச்சரித்த வாமனன், எத்தனை தன்மானம் பார்ப்பான் எனத் தெரியுமே !
சிறுவயது முதலே, பவித்ராவின் காதலும் கரிசனமும், சீராட்டும் வாய்க்கப் பெற்ற ஸ்ரீராமிற்கு லலிதாவின் பேச்சை ஜீரணிப்பது கடினமாக இருந்தது. வாமனனைப் பார்க்கவே சங்கடப்பட்டவன், லலிதாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ ‘இன்னைக்கு நைட்டும் இட்லிதான்’ என்று சொன்ன முகபாவத்துடன் வெகு இயல்பாய் இருந்தாள்.
‘சிறுமையை, அலட்சியத்தை, பொறுப்பற்ற தன்மையை அறவே வெறுக்கும் வாமனமூர்த்தி இதை எப்படிக் கையாளப் போகிறான் என ஸ்ரீராம் கவலையானான்.
பவித்ராவின் பதட்டத்தைக் காட்டி வாமனனை அடக்கிய ஸ்ரீராமுக்கு அது தற்காலிகமான அமைதி என்பது நன்கு புரிந்தது.
மறுநாள் வளைகாப்பு என்ற நிலையில் நிறைமாத கர்ப்பிணியை டென்ஷன் படுத்த விரும்பாததோடு, எம்பிபிஸ் இன்டர்ன்ஷிப் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்ட பவித்ராவும் ஸ்ரீராமும் இந்தக் குழந்தையை அத்தனை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பவர்களின் மகிழ்ச்சியை தன் ஆத்திரத்தால் கெடுக்கப் பார்த்ததற்கு வாமனன் பலமுறை மன்னிப்பு கேட்டான்.
“ஸாரி பவி, ஸாரிடா மச்சான்” என்றவனையும் லலிதாவையும் மாற்றி மாற்றி பார்த்த தங்கையின் தலையில் தட்டியவன் “அவ ஏதோ இன்ஸ்டா ரீல்ஸையும் வாட்ஸ் ஆப் மெஸேஜையும் பார்த்து புரியாம பேசறா பவி, யூ டோன்ட் ஒர்ரி” என தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டான்.
லலிதா மட்டும் இயல்பானதொரு நேரத்தில் இதைச் சொல்லி இருந்தால், வாமனமூர்த்தி என்ன செய்திருப்பானோ தெரியாது.
தங்கள் இணையின் குறை நிறைகளை இட்டு நிரவி, பட்டுத் துணியால் போர்த்தி, சேர்ந்து தொழில் தொடங்கி நடத்தும் வெற்றிகரமான பெற்றோரைப் பார்த்து வளர்ந்தவன், தன் வாழ்விலும் அதைத்தான் விரும்பினான்.
வாமனன் லலிதாவைப் பெண் பார்த்து, சம்மதித்து வந்த மறுநாள், அவளது தந்தை ரங்கராஜன் தன்னை தனியே வந்து சந்தித்ததை எண்ணிக்கொண்டான்.
“மாப்பிள்ளை(!), லலிதா எம்பொண்ணுதான். ரொம்ப புத்திசாலி, அட்ஜஸ்ட் பண்ணிப்பா, சொன்ன பேச்சு கேட்பா. ஆனாலும் சில விஷயங்கள்ல படிச்ச, முற்போக்கான பொண்ணா, அவகிட்ட ஒரு சில பிடிவாதம் உண்டு. அதுல சிலது அவசியம், பலது நடைமுறைக்கு ஒத்து வராதது. அதை அந்தத்த சமயம் வரும்போது தானே புரிஞ்சுப்பா”
சிறு புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த வாமனமூர்த்திக்கு லலிதாவுடனான வாழ்க்கை ரசனையாக, ரகளையாக இருக்கும் எனத் தோன்றியது.
மருமகனாக வரப்போகிறவனிடம், தன் மகளின் எதிர்காலம் கருதி, அவளது குறைநிறைகளோடு அவளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் அதை மீறி எச்சரிக்கையாய் உண்மை பேசிய அந்தத் தகப்பனின் மேல் மரியாதை வந்தது.
லலிதாவின் முரணான சுபாவமும் எதிர்பார்ப்பும் அவளது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸும், முந்தைய நாள் பெண் பார்க்கச் சென்றபோது அவளது நடவடிக்கையும் வாமனனுக்கு அவள் மீது ஒரு பிடித்தத்தையும் சுவாரஸ்யத்தையும் தந்திருக்க விரும்பியே மணந்து கொண்டான்.
திருமணத்திற்கு முன்பிருத்தே அவளது சுபாவம் புரிய, எதானாலும், லலிதாவைத் தூண்டியும் சீண்டியுமே
பலவற்றை செய்ய வைத்தான்.
கல்யாணத்திற்கு முன்
தனி வீட்டிற்குச் செல்ல மறுத்தவனை, லலிதாவின் அசட்டையும் சீதளாவின் கச்சிதமும் மோதியதில், அம்மாவின் அதிருப்தியான பார்வைகளும் முணுமுணுப்புகளும், இவர்களுக்கு நடுவே குளிர்காயும் பாட்டியும் சம்மதிக்க வைத்தன.
சீதளா படிக்கும் நாள்களில் இருந்தே பவித்ராவுடன் இணைந்து வாமனனுக்கும் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கி இருக்க, லலிதா கேட்காவிட்டாலுமே வேலையை பகிர்ந்திருப்பான்.
மனைவியிடம் சில சந்தர்ப்பங்களில் தயக்கமாகவும் விருப்பமின்மையாகவும் தோன்றியவை எல்லாம், வாமனனுக்கு இப்போது தன் மீதான நம்பிக்கை இன்மையாகத் தோன்றியது.
மாலையில் மேலும் சில உறவினர்கள் வர, விருந்தோம்பலிலும் சாமான்களை சேகரித்து சரி பார்ப்பதிலும் நேரம் சென்றது.
இரவில் பெட்ரூமில் மட்டுமே கட்டில் இருந்ததால், ஆண்கள் இருவரும் டீவியை ஆன் செய்துவிட்டு, பேசியபடி ஹாலில் படுத்துக் கொண்டனர்.
அதிகாலையில் பவித்ராவையும் ஸ்ரீராமையும் தயாராகவென சீதளா வந்து அழைத்துச் சென்றுவிட, வாமனனும் நிமிடங்களில் தயாராகி சென்றுவிட்டான்.
வாமனன் விழாவிற்கு வந்தவர்களிடம் பேச, உபசரிக்க, என பிஸியாக இருக்க, லலிதா தன் பெற்றோருடன் ஐக்கியமாகி இருந்தாள்.
பெரியவர்கள் அனைவரும் பவித்ராவிற்கு வேப்பிலைக் காப்பை போட்டதும் சீதளா, ஸ்ரீராமின் பெற்றோர், ஸ்ரீராம் என வரிசையாக தங்க வளையல்களைப் பரிசாகத் தர, கண்ணாடி வளையல்களை இட்டனர் முஸ்ரீராமுடன் உட்கார வைத்து ஜோடியாக ஆரத்தி எடுக்கும் முன் , இருவருக்கும் பிரேஸ்லெட்டோடு வாமனனும் வரிசையில் நின்றான்.
ஸ்ரீராம் “எனக்கெதுக்குடா வாம்ஸ்?”
வாமனமூர்த்தி “உனக்கும்தானேடா மாப்ள குழந்தை பிறக்கப் போகுது”
என்றதில் எல்லோரும் கலகலத்துச் சிரிக்க, லக்ஷ்மி மகளிடம் விசாரணையில் இறங்கினாள்.
“ஏன் லலிதா, ரெண்டு பிரஸ்லெட்டும் சேர்த்து அஞ்சு பவுனாவது இருக்கும் போல. உன் நாத்தனாரோட கடா பிரேஸ்லெட் இருக்கறது வைரமாடீ?”
“நீ வேறம்மா, அவர் பிரேஸ்லெட் வாங்கினதே எனக்கு இப்பதான் தெரியும்” என்ற மகளைப் பார்த்த லக்ஷ்மியின் பார்வையில் தெரித்த அனல்!
“வாங்கினதும் உனக்கு தெரியல, போடவும் உன்னை அழைக்கலை… இதை கூடத் தெரிஞ்சுக்காம நீ என்ன பண்ற, இந்த அழகுல தனிக்குடித்தனம் வேற”
‘இதை எப்ப வாங்கினான்?” என்ற யோசனையில் ஆழ்ந்தவளை “லலிதா, ஜோடியா வந்து நாத்தனாருக்கு வளையல் போடும்மா. என்ன இருந்தாலும் பவியை விட மூணு நிமிஷம் மூத்தவன் இல்லையா?” என்றார் பாட்டி.
கூட்டம் குறைந்து, நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே மீதமிருக்க, எல்லோரும் ஜோடியாக உணவருந்த அமர, தாய், தந்தைக்கு நடுவே அமரச் சென்ற லலிதாவை, சீதளாவின் தங்கை “என்ன லலிதா, எம்புள்ளையை தனியா விட்டு இங்க என்ன செய்யற, போய் வாமனன் கிட்ட உட்காரு” என கிளப்பி விட்டாள்.
காலையில் இருந்து வந்தவர்களில் ஒருவர் விடாது “விசேஷம் உண்டா, சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க, அடுத்த வளைகாப்பு லலிதாவோடதுதான்” என்றே பேச, வாமனனுக்கு முகம் மாறாது காப்பதை விட, மனைவி நேற்று போல் எவரிடமேனும் உளறி விடப் போகிறாளே, என்ற பதட்டம்தான் அதிகம்.
ஆனால்…
********************
லலிதாவும் அதே பதட்டத்தில்தான் இருந்தாள். பிறரது கேள்விகளால் அன்றி, கணவன் தன்னைத் திரும்பியும் பார்க்காததில் வந்த திடீர் பதட்டம் அது.
வாமனன் முந்தைய நாள் மாலை நான்கு மணிக்கே வேலை இருக்கிறதென வெளியில் சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் தேநீர் போடப் போனவளிடம்
“நாங்க அம்மா வீட்ல போயே டீ குடிச்சுக்கறோம் லலிதா” என்ற பவித்ரா கணவனுடன் சென்று விட்டாள்.
லேப் டாப்பை திறந்து கொண்டவளுக்கு வீடே கொண்டாட்ட மனநிலையில் இருக்க, ஆஃபீஸ் வேலை ஓடவில்லை. அம்மா, அப்பாவிற்கு ஃபோன், ஃபேஸ்புக், இன்ஸ்டா… என ஒரு சுற்று வர, எல்லாமே சலிப்பைத் தந்தது. பொழுதை நெட்டித் தள்ளினாள்.
டீ போட்டு எடுத்து வந்து அமர்ந்தவள் நேரத்தைப் பார்க்க மணி ஏழேகால். சீதளா வாமனன் வந்தாச்சா என இரண்டு முறை கேட்டுவிட்டாள்.
‘இவர் ஏன் இன்னும் வரலை? திடீர் திடீர்னு காணாம போக வேண்டியது. அப்டி என்ன வேலையோ, எங்கதான் போவாரோ?’
மனம் கணவனைத் தேட, திடீரென, வாமனன் தன்னிடம் எதுவும் பேசாமல், எங்கே எதற்கு போகிறான் என எதுவும் சொல்லாமல், அவ்வளவு ஏன், தன்னிடம் சொல்லாமலே வெளியில் சென்றது உரைத்தது.
யோசிக்க, யோசிக்க மதியம் பவித்ராவின் இயல்பான வாழ்த்து போன்ற ஒரு பேச்சுக்கு தன் பதில் அதிகப்படி என்பதும், தனக்கும் கணவனுக்குமான அந்தரங்கம் என்பதைத் தாண்டி, தங்களுக்குள்ளே கூட பேசாத ஒரு விஷயத்தை , தான் பொதுவெளியில் பேசியது தவறு என்பதும் புரிந்தது.
அப்போதும் வாமனமூர்த்தியின் கோப முகம் பிரதிபலித்த அதிர்ச்சியும் அவமானமும் இப்போது நினைவில் எழதர, அவசரப்பட்டு பேசியதற்கு வருந்தியவள், தான் பேசிய விஷயம் தவறென்று நினைக்கவில்லை.
நேரம் செல்லச் செல்ல தனிமையை வெகுவாக உணர்ந்தாள். தனியே சென்றால், வாமனன் எங்கே எனக் கேட்பார்கள் என்பதால் காத்திருந்தாள். அவனுக்கு அழைத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது
எட்டரை மணிக்கு மேலாகியும் வாமனன் வராததில் மாமியார் வீட்டிற்குச் சென்றாள். அங்கே உணவுப் பந்தி நடக்க, உறவினர்களுடன் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனைப் முறைத்தவளை, திரும்பியே பாராதவன் தன்னைத் தவிர்ப்பது புரிந்தது.
அவன் மட்டுமின்றி, மாமியார், மாமனார், பாட்டி நாள் முழுவதும் தன்னோடு இருந்த பவித்ரா, என எல்லாருமே தன்னை ஒதுக்கியதாகத் தோன்றியது.
சீதளாவின் தங்கை நக்கலாக “என்ன லலிதா, எதிர் வீட்ல இருந்துகிட்டு சாவகாசமா வர?” என்றதே இதமாகத் தோன்ற,
“க்ளையன்ட் கால் இருந்தது அத்தை” என, ஐடி துறையின் ISO சான்றிதழ் பெற்ற பொய்யைச் சொன்னாள்.
சீதளா “வா லலிதா, சாப்பிடலாம்” என நிலமையை சமாளிக்க, உண்டு முடித்ததுமே பவித்ராவிற்கு ஓய்வு வேண்டுமென லலிதாவுடன் அனுப்பி வைத்துவிட்டனர்.
பவித்ரா, ஸ்ரீராமுக்கு அறையைக் கொடுத்துவிட்டு தாங்கள் இருவரும் ஹாலில் உறங்குவோம், அப்போது பேசலாம் என்ற லலிதாவின் எணணத்தில் இரண்டு குண்டு தலையணையாக பார்த்து விட்டெறிந்தான் வாமனமூர்த்தி.
காலையில் எழுந்து தீபாவளிக்கு வாமனன் வாங்கித் தந்து உடுத்தாது வைத்திருந்த ஹெலிட்ரோப் நிற (heliotrope) (பஞ்சு மிட்டாய்க்கு மிக அருகில்) ஜார்ஜெட் புடவையில் தயாரானவளைத் திரும்பியும் பார்க்காது சென்றவனைத் தொடரும் முன் கதவை சார்த்திக்கொண்டு போயே போய் விட்டான்.
எங்கே, பக்கத்தில் போனால் வாமனன் தன்னை தவிர்ப்பது எல்லாருக்கும், குறிப்பாக தன் பெற்றோருக்குத் தெரிந்து விடுமோ என்று கவலைப்பட்ட லலிதா, அம்மாவிடம் தஞ்சமடைய, வாமனனே தேவலாம் என்ற அளவுக்கு நச்சரித்தாள் லக்ஷ்மி.
விழாவில் ஒன்றும் செய்யாமலே ஓய்ந்து போன லலிதா, வாய்ப்பு கிடைத்ததும், விட்டால் போதுமென தன் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
அன்று மாலையே தன் வீட்டிற்கு சென்ற பவித்ராவை பிரசவத்திற்கென கையோடு அழைத்து வந்துவிட்டனர்.
இடையில் உடைமாற்றவென வந்த வாமனமூர்த்தி இரவு பத்தரை மணிக்குதான் வீடு திரும்பினான்.
இரவும் ‘உன் பேச்சு கா’ வாகவே கழிய, புதிய பிரச்சனைகளுடன் விடிந்தது புத்தம் புது காலை.
அநேக நாட்கள் காஃபியுடன் காலை வணக்கம் சொல்லும் வாமனன், பவித்ராவும் இங்கே வந்திருப்பதில், உரிமையாக தன் வீட்டிற்கு சென்றவன், அப்படியே வெளியில் சென்று விட்டான்.
அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருக்க, லலிதா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்ணாள். கடைசி நிமிடத்தில் மீட்டிங் கேன்ஸல் என மெஸேஜ் வந்தது. நல்லதாயிற்று என லாகின் செய்து வேலையில் ஆழ்ந்தாள்.
மதியம் மூன்று மணி போல் அழைத்த ரங்கராஜன் “நியூஸ் பாரு லலிதா, ஸ்வேதாவோட ஹஸ்பண்ட் ராகவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்”
“வாட்?”
குறுகிய காலத்தில் (5 வருடங்கள்) மிகப்பெரிய லாபம் ஈட்டிய ஸ்டார்ட் அப் கம்பெனியின் இரண்டு பார்ட்னர்களையும் (அதில் ஒருவன் ராகவ்) பண மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்திருந்தனர்.
ஸ்ரீசைலம், சீதளா, பவித்ரா, ஸ்ரீராம் என எல்லோரும் லலிதாவை விசாரிக்க, வட்டம் வட்டமாக, வாட்டம் வாட்டமாக பேசினர்.
இரவு பதினொன்றரைக்கு மேல் வந்த வாமனமூர்த்தியிடம், இருவருக்கும் இடையே இருந்த விலகலையெல்லாம் மறந்தவளாக அருகே சென்று “நியூஸ் தெரியுமா, ராகவ் அண்ணாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். ஸ்வேதா ஃபோனையே எடுக்கலை”
வாமனன் “தெரியும், ரிப்போர்ட் பண்ணினதே நான்தான்” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
‘If friendship is understanding, relationships are commitment’
நட்பு என்பது புரிதல் எனில், உறவு என்பது அர்ப்பணிப்பு.
நட்புக்கே கற்பு உண்டெனில், காதலுக்கு அல்லது கல்யாணத்திற்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை அல்லவா?
இருவரது உறவு/ காதல் / திருமணம் சீராகத் தொடர வேண்டுமெனில் முதல் தேவை பரஸ்பர நம்பிக்கையும் உண்மையாக இருத்தலும். இதன் அடிப்படை தன் இணைக்கு அர்ப்பணிப்போடு இருப்பது.
கணவனும் மனைவியும் பரஸ்பர விஸ்வாசத்துடன் இருப்பது அடர்ந்த நம்பிக்கையைத் தரும். அந்த நம்பிக்கையே இணைந்து பயணிக்கும் உந்துதலைத் தரும். நெருங்கி வாழ்தலே (proximity) அன்பை, காதலை வளர்க்கும். அந்த அன்புதான் எதிர்காலக் கனவுகளை நோக்கிய நம்பிக்கை ஒளி.
தற்சார்பும் தனிமனித சுதந்திரமும் பேசுபவர்களை, மோகமும் போகமுமே ஆண், பெண் உறவு என கை கழுவும் கயவர்களை விட்டுவிடுவோம்.
சிரித்து, அழுது, நட்பாகி, காதலாகி, சினந்து, சீராட்டி, கோடையில் மழையை, குளிரில் கணப்பை தரவும் பெறவும் விரும்பும் சராசரியான ஆண்கள்தான் இங்கு அதிகம்.
ரோஜாப்பூவில் ஜரிகைத்தாள் சுற்றிய விலை உயர்ந்த பரிசுகளில், நகர்வலத்தில், நள்ளிரவு பிரியாணியில், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் சுயமிகளில், யாருடைய வரிகளையோ தங்கள் காதலுக்கான ஸ்டேட்டஸாக வைப்பதில் இல்லை காதல்.
தனக்கான பானத்தை, உணவை பிறர் அறியாமல் பகிர்தலில், குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன்பே சிறிதேனும் எடுத்து வைத்தலில், உயரம் குறைவான மனைவி பேருந்து படியில் பத்திரமாக ஏறி விட்டாளா என்ற கவனத்தில், இணைந்த வேகத்தில் நடப்பதில்… சுருங்கச் சொல்லின் விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது காதல்.
எந்த வகை திருமணமாக இருந்தாலும் ஆதாரமான ஈர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஒன்றுதான்.
திருமணமாகி ஏழு மாதங்களான லலிதா ‘குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் எனக்கு உன் மீது நம்பிக்கை வரவில்லை’ என தன் சகோதரனிடம் கூறியதைக் கண்டு அதிர்ந்த பவித்ராவை சமாதானம் செய்த வாமனமூர்த்தி ‘இது பெற்றோர் காது வரை செல்லவேண்டாம்’ என வெவ்வேறு விதத்தில் வலியுறுத்தினான்.
நல்லவேளை, ஸ்ரீராம் மாப்பிள்ளையாக மட்டும் இராமல், வாமனனின் நெருங்கிய நண்பனாகவும் போனான்.
ஸ்ரீராம் தன் ஆறாவது வயதில் அவனது.அம்மாவை அவனது இரண்டாவது பிரசவத்தில் இழந்தான். அடுத்த வருடமே சித்தி வந்தாள். கொடுமை, நிந்தனை, வஞ்சனை என்றில்லாமல், நல்ல மாதிரியாகத்தான் இருந்தாள், இருக்கிறாள். ஆனாலும், ஏனோ, எதுவோ ஒட்டவில்லை.
ஓரளவு விவரம் புரிந்த அந்த ஆறரை வயதில் , ஸ்ரீராம் ஆவலோடு எதிர்பார்த்த தம்பி அல்லது தங்கை மட்டுமின்றி அம்மாவே மீண்டு வராது போனதையும், தன் தாயின் சிதைக்கு நெருப்பு வைத்ததையும் , தொடர்ந்து நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களையும் தனது தேவைகளையும் பூர்த்தி செய்யவென மறுமணம் செய்துகொண்ட தந்தையையும் அந்தப் பிஞ்சு மனதால் அத்தனை சுலபமாக ஏற்கவோ, எதிர்க்கவோ முடியவில்லை.
ஸ்ரீராம், படிப்பு, ஹாஸ்டல், வேலை, ஆன்சைட், நட்பு வட்டம் என மெதுவே விலகி, தனக்கென எல்லை வகுத்துக் கொண்டான்.
வாமனன்,ஸ்ரீராம் இருவரது குடும்பங்களும் அப்போது அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர்.
அவனது பெற்றோர் பிரசவத்திற்கென மருத்துவமனை சென்றபோது பள்ளியில் இருந்தவன், மாலையில் அவன் தாய் இறந்த செய்தி வந்தபோது வாமனனின் வீட்டில்தான் இருந்தான்.
நடப்பது எதுவும் புரியாது விழித்த ஸ்ரீராமின் கையைப் பிடித்துக்கொண்டு
நகராது அவன் அருகிலேயே நின்றாள், அவனை விட நான்கு மாதங்களே சிறியவளான பவித்ரா. அன்று பிடித்த கைதான்.
உணர்வுகளை, சிந்தனையை வார்த்தையில் வர்ணிக்க இயலாத வயதில் தாயின் கதகதப்பைத் தொலைத்து, தன் துக்கத்தில் மூழ்கி இருந்த தந்தையிடமும் அதிகம் நெருங்க முடியாது, பிறகு அவரது இரண்டாம் திருமணத்தில், புதிய உறவுகளின் நடமாட்டத்தில் தனிமையில் தவித்தவனுக்கு ஆறுதல் பவித்ரா , வாமனனின் நட்பும், அவர்களது பெற்றோரின் புரிதலான அரவணைப்பும்தான்.
குறிப்பாக, வளர, வளர கோபம், வருத்தம், மூட் அவுட், வாமனனுடன் சண்டை, சித்திக்கு குழந்தை பிறந்து,. புதுக்குழந்தைக்கு கிடைத்த முக்கியத்துவம், யாரும் தடுக்கவில்லை எனினும், தனக்கு விருப்பமானவற்றை வீட்டில் கேட்கத் தயங்குவது என ஸ்ரீராமின் ஒவ்வொரு இயக்கமும் பவித்ராவிற்கு அத்துபடி.
வருடங்கள் உருள, பதின் பருவத்தில் நண்பர்கள் மூவரும் சேர்ந்தே இருக்க, பாட்டி ஜானகி சீதளாவிடம் மெதுவே ஆட்சேபிக்கத் தொடங்கினார். மூவரது நட்பின் ஆழம் புரிந்த
சீதளாவுக்குமே வயதுக்கு வந்த மகளை நினைத்து சிறிது சஞ்சலம்தான்.
பவித்ரா மருத்துவம், வாமனன் பி.காம், சிஏ, ஸ்ரீராம் பொறியியல் என ஆளுக்கொரு படிப்பை தேர்ந்தெடுத்தனர்.
ஸ்ரீராம் கோவை கல்லூரியில் ஹாஸ்டலில் சேர, ஜானகி பாட்டியிடமிருந்து இருபத்தோரு தேங்காயை லஞ்சமாகப் பெற்றார்
தெருக்கோடி பிள்ளையார்.
ஆனால், அடுத்து கிடைத்த விடுமுறையில் சென்னை வந்த ஸ்ரீராம் தன்னைக் கண்டதுமே பொங்கிப் பொங்கி அழுத பவித்ராவை தன்னோடு மெலிதாக அணைத்துக் கொண்டதைப் பார்த்துவிட்ட பாட்டி ஊரைக் கூட்ட, சீதளாவும் சத்தம் போட, சட்டென விலகிய ஸ்ரீராம், சங்கடத்தில் விழித்தான்.
பவித்ரா “... ஏம்மா கத்தற, என் ஸ்ரீதானேம்மா?” என்றாள் அலட்டிக்கொள்ளாது.
“பவி….”
இன்றும் அதே இயல்பும் அன்பும் அக்கறையுமாய், தன் சின்னச் சின்ன ஆசைகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்யும் பவித்ராவையும், அவளாவது அவனது காதலி, மனைவி… தன்னிடம் அவளுக்கு சற்றும் குறையாத அன்பும் நட்பும் கொண்ட வாமனமூர்த்தி?
ஸ்ரீராம் தன் நண்பனை நன்கறிவான். பேச்சில்
எத்தனை நக்கல் உண்டோ, செய்யும் வேலையில் அத்தனை நறுவிசும் உண்டு. யோசிக்காமல் எதையும் பேச மாட்டான். அதே நேரம், தனக்கு நெருக்கமானவர்களிடம் கரிசனமும் கோபமும் அதிகமாகவே வெளிக்காட்டுபவன்.
ஏழாம் வகுப்பிலேயே ‘பவி கிட்ட ஸ்கூல்ல வெச்சு அதிகம் பேசாத ஸ்ரீ’ என எச்சரித்த வாமனன், எத்தனை தன்மானம் பார்ப்பான் எனத் தெரியுமே !
சிறுவயது முதலே, பவித்ராவின் காதலும் கரிசனமும், சீராட்டும் வாய்க்கப் பெற்ற ஸ்ரீராமிற்கு லலிதாவின் பேச்சை ஜீரணிப்பது கடினமாக இருந்தது. வாமனனைப் பார்க்கவே சங்கடப்பட்டவன், லலிதாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ ‘இன்னைக்கு நைட்டும் இட்லிதான்’ என்று சொன்ன முகபாவத்துடன் வெகு இயல்பாய் இருந்தாள்.
‘சிறுமையை, அலட்சியத்தை, பொறுப்பற்ற தன்மையை அறவே வெறுக்கும் வாமனமூர்த்தி இதை எப்படிக் கையாளப் போகிறான் என ஸ்ரீராம் கவலையானான்.
பவித்ராவின் பதட்டத்தைக் காட்டி வாமனனை அடக்கிய ஸ்ரீராமுக்கு அது தற்காலிகமான அமைதி என்பது நன்கு புரிந்தது.
மறுநாள் வளைகாப்பு என்ற நிலையில் நிறைமாத கர்ப்பிணியை டென்ஷன் படுத்த விரும்பாததோடு, எம்பிபிஸ் இன்டர்ன்ஷிப் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்ட பவித்ராவும் ஸ்ரீராமும் இந்தக் குழந்தையை அத்தனை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பவர்களின் மகிழ்ச்சியை தன் ஆத்திரத்தால் கெடுக்கப் பார்த்ததற்கு வாமனன் பலமுறை மன்னிப்பு கேட்டான்.
“ஸாரி பவி, ஸாரிடா மச்சான்” என்றவனையும் லலிதாவையும் மாற்றி மாற்றி பார்த்த தங்கையின் தலையில் தட்டியவன் “அவ ஏதோ இன்ஸ்டா ரீல்ஸையும் வாட்ஸ் ஆப் மெஸேஜையும் பார்த்து புரியாம பேசறா பவி, யூ டோன்ட் ஒர்ரி” என தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டான்.
லலிதா மட்டும் இயல்பானதொரு நேரத்தில் இதைச் சொல்லி இருந்தால், வாமனமூர்த்தி என்ன செய்திருப்பானோ தெரியாது.
தங்கள் இணையின் குறை நிறைகளை இட்டு நிரவி, பட்டுத் துணியால் போர்த்தி, சேர்ந்து தொழில் தொடங்கி நடத்தும் வெற்றிகரமான பெற்றோரைப் பார்த்து வளர்ந்தவன், தன் வாழ்விலும் அதைத்தான் விரும்பினான்.
வாமனன் லலிதாவைப் பெண் பார்த்து, சம்மதித்து வந்த மறுநாள், அவளது தந்தை ரங்கராஜன் தன்னை தனியே வந்து சந்தித்ததை எண்ணிக்கொண்டான்.
“மாப்பிள்ளை(!), லலிதா எம்பொண்ணுதான். ரொம்ப புத்திசாலி, அட்ஜஸ்ட் பண்ணிப்பா, சொன்ன பேச்சு கேட்பா. ஆனாலும் சில விஷயங்கள்ல படிச்ச, முற்போக்கான பொண்ணா, அவகிட்ட ஒரு சில பிடிவாதம் உண்டு. அதுல சிலது அவசியம், பலது நடைமுறைக்கு ஒத்து வராதது. அதை அந்தத்த சமயம் வரும்போது தானே புரிஞ்சுப்பா”
சிறு புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த வாமனமூர்த்திக்கு லலிதாவுடனான வாழ்க்கை ரசனையாக, ரகளையாக இருக்கும் எனத் தோன்றியது.
மருமகனாக வரப்போகிறவனிடம், தன் மகளின் எதிர்காலம் கருதி, அவளது குறைநிறைகளோடு அவளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் அதை மீறி எச்சரிக்கையாய் உண்மை பேசிய அந்தத் தகப்பனின் மேல் மரியாதை வந்தது.
லலிதாவின் முரணான சுபாவமும் எதிர்பார்ப்பும் அவளது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸும், முந்தைய நாள் பெண் பார்க்கச் சென்றபோது அவளது நடவடிக்கையும் வாமனனுக்கு அவள் மீது ஒரு பிடித்தத்தையும் சுவாரஸ்யத்தையும் தந்திருக்க விரும்பியே மணந்து கொண்டான்.
திருமணத்திற்கு முன்பிருத்தே அவளது சுபாவம் புரிய, எதானாலும், லலிதாவைத் தூண்டியும் சீண்டியுமே
பலவற்றை செய்ய வைத்தான்.
கல்யாணத்திற்கு முன்
தனி வீட்டிற்குச் செல்ல மறுத்தவனை, லலிதாவின் அசட்டையும் சீதளாவின் கச்சிதமும் மோதியதில், அம்மாவின் அதிருப்தியான பார்வைகளும் முணுமுணுப்புகளும், இவர்களுக்கு நடுவே குளிர்காயும் பாட்டியும் சம்மதிக்க வைத்தன.
சீதளா படிக்கும் நாள்களில் இருந்தே பவித்ராவுடன் இணைந்து வாமனனுக்கும் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கி இருக்க, லலிதா கேட்காவிட்டாலுமே வேலையை பகிர்ந்திருப்பான்.
மனைவியிடம் சில சந்தர்ப்பங்களில் தயக்கமாகவும் விருப்பமின்மையாகவும் தோன்றியவை எல்லாம், வாமனனுக்கு இப்போது தன் மீதான நம்பிக்கை இன்மையாகத் தோன்றியது.
மாலையில் மேலும் சில உறவினர்கள் வர, விருந்தோம்பலிலும் சாமான்களை சேகரித்து சரி பார்ப்பதிலும் நேரம் சென்றது.
இரவில் பெட்ரூமில் மட்டுமே கட்டில் இருந்ததால், ஆண்கள் இருவரும் டீவியை ஆன் செய்துவிட்டு, பேசியபடி ஹாலில் படுத்துக் கொண்டனர்.
அதிகாலையில் பவித்ராவையும் ஸ்ரீராமையும் தயாராகவென சீதளா வந்து அழைத்துச் சென்றுவிட, வாமனனும் நிமிடங்களில் தயாராகி சென்றுவிட்டான்.
வாமனன் விழாவிற்கு வந்தவர்களிடம் பேச, உபசரிக்க, என பிஸியாக இருக்க, லலிதா தன் பெற்றோருடன் ஐக்கியமாகி இருந்தாள்.
பெரியவர்கள் அனைவரும் பவித்ராவிற்கு வேப்பிலைக் காப்பை போட்டதும் சீதளா, ஸ்ரீராமின் பெற்றோர், ஸ்ரீராம் என வரிசையாக தங்க வளையல்களைப் பரிசாகத் தர, கண்ணாடி வளையல்களை இட்டனர் முஸ்ரீராமுடன் உட்கார வைத்து ஜோடியாக ஆரத்தி எடுக்கும் முன் , இருவருக்கும் பிரேஸ்லெட்டோடு வாமனனும் வரிசையில் நின்றான்.
ஸ்ரீராம் “எனக்கெதுக்குடா வாம்ஸ்?”
வாமனமூர்த்தி “உனக்கும்தானேடா மாப்ள குழந்தை பிறக்கப் போகுது”
என்றதில் எல்லோரும் கலகலத்துச் சிரிக்க, லக்ஷ்மி மகளிடம் விசாரணையில் இறங்கினாள்.
“ஏன் லலிதா, ரெண்டு பிரஸ்லெட்டும் சேர்த்து அஞ்சு பவுனாவது இருக்கும் போல. உன் நாத்தனாரோட கடா பிரேஸ்லெட் இருக்கறது வைரமாடீ?”
“நீ வேறம்மா, அவர் பிரேஸ்லெட் வாங்கினதே எனக்கு இப்பதான் தெரியும்” என்ற மகளைப் பார்த்த லக்ஷ்மியின் பார்வையில் தெரித்த அனல்!
“வாங்கினதும் உனக்கு தெரியல, போடவும் உன்னை அழைக்கலை… இதை கூடத் தெரிஞ்சுக்காம நீ என்ன பண்ற, இந்த அழகுல தனிக்குடித்தனம் வேற”
‘இதை எப்ப வாங்கினான்?” என்ற யோசனையில் ஆழ்ந்தவளை “லலிதா, ஜோடியா வந்து நாத்தனாருக்கு வளையல் போடும்மா. என்ன இருந்தாலும் பவியை விட மூணு நிமிஷம் மூத்தவன் இல்லையா?” என்றார் பாட்டி.
கூட்டம் குறைந்து, நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே மீதமிருக்க, எல்லோரும் ஜோடியாக உணவருந்த அமர, தாய், தந்தைக்கு நடுவே அமரச் சென்ற லலிதாவை, சீதளாவின் தங்கை “என்ன லலிதா, எம்புள்ளையை தனியா விட்டு இங்க என்ன செய்யற, போய் வாமனன் கிட்ட உட்காரு” என கிளப்பி விட்டாள்.
காலையில் இருந்து வந்தவர்களில் ஒருவர் விடாது “விசேஷம் உண்டா, சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க, அடுத்த வளைகாப்பு லலிதாவோடதுதான்” என்றே பேச, வாமனனுக்கு முகம் மாறாது காப்பதை விட, மனைவி நேற்று போல் எவரிடமேனும் உளறி விடப் போகிறாளே, என்ற பதட்டம்தான் அதிகம்.
ஆனால்…
********************
லலிதாவும் அதே பதட்டத்தில்தான் இருந்தாள். பிறரது கேள்விகளால் அன்றி, கணவன் தன்னைத் திரும்பியும் பார்க்காததில் வந்த திடீர் பதட்டம் அது.
வாமனன் முந்தைய நாள் மாலை நான்கு மணிக்கே வேலை இருக்கிறதென வெளியில் சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் தேநீர் போடப் போனவளிடம்
“நாங்க அம்மா வீட்ல போயே டீ குடிச்சுக்கறோம் லலிதா” என்ற பவித்ரா கணவனுடன் சென்று விட்டாள்.
லேப் டாப்பை திறந்து கொண்டவளுக்கு வீடே கொண்டாட்ட மனநிலையில் இருக்க, ஆஃபீஸ் வேலை ஓடவில்லை. அம்மா, அப்பாவிற்கு ஃபோன், ஃபேஸ்புக், இன்ஸ்டா… என ஒரு சுற்று வர, எல்லாமே சலிப்பைத் தந்தது. பொழுதை நெட்டித் தள்ளினாள்.
டீ போட்டு எடுத்து வந்து அமர்ந்தவள் நேரத்தைப் பார்க்க மணி ஏழேகால். சீதளா வாமனன் வந்தாச்சா என இரண்டு முறை கேட்டுவிட்டாள்.
‘இவர் ஏன் இன்னும் வரலை? திடீர் திடீர்னு காணாம போக வேண்டியது. அப்டி என்ன வேலையோ, எங்கதான் போவாரோ?’
மனம் கணவனைத் தேட, திடீரென, வாமனன் தன்னிடம் எதுவும் பேசாமல், எங்கே எதற்கு போகிறான் என எதுவும் சொல்லாமல், அவ்வளவு ஏன், தன்னிடம் சொல்லாமலே வெளியில் சென்றது உரைத்தது.
யோசிக்க, யோசிக்க மதியம் பவித்ராவின் இயல்பான வாழ்த்து போன்ற ஒரு பேச்சுக்கு தன் பதில் அதிகப்படி என்பதும், தனக்கும் கணவனுக்குமான அந்தரங்கம் என்பதைத் தாண்டி, தங்களுக்குள்ளே கூட பேசாத ஒரு விஷயத்தை , தான் பொதுவெளியில் பேசியது தவறு என்பதும் புரிந்தது.
அப்போதும் வாமனமூர்த்தியின் கோப முகம் பிரதிபலித்த அதிர்ச்சியும் அவமானமும் இப்போது நினைவில் எழதர, அவசரப்பட்டு பேசியதற்கு வருந்தியவள், தான் பேசிய விஷயம் தவறென்று நினைக்கவில்லை.
நேரம் செல்லச் செல்ல தனிமையை வெகுவாக உணர்ந்தாள். தனியே சென்றால், வாமனன் எங்கே எனக் கேட்பார்கள் என்பதால் காத்திருந்தாள். அவனுக்கு அழைத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது
எட்டரை மணிக்கு மேலாகியும் வாமனன் வராததில் மாமியார் வீட்டிற்குச் சென்றாள். அங்கே உணவுப் பந்தி நடக்க, உறவினர்களுடன் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனைப் முறைத்தவளை, திரும்பியே பாராதவன் தன்னைத் தவிர்ப்பது புரிந்தது.
அவன் மட்டுமின்றி, மாமியார், மாமனார், பாட்டி நாள் முழுவதும் தன்னோடு இருந்த பவித்ரா, என எல்லாருமே தன்னை ஒதுக்கியதாகத் தோன்றியது.
சீதளாவின் தங்கை நக்கலாக “என்ன லலிதா, எதிர் வீட்ல இருந்துகிட்டு சாவகாசமா வர?” என்றதே இதமாகத் தோன்ற,
“க்ளையன்ட் கால் இருந்தது அத்தை” என, ஐடி துறையின் ISO சான்றிதழ் பெற்ற பொய்யைச் சொன்னாள்.
சீதளா “வா லலிதா, சாப்பிடலாம்” என நிலமையை சமாளிக்க, உண்டு முடித்ததுமே பவித்ராவிற்கு ஓய்வு வேண்டுமென லலிதாவுடன் அனுப்பி வைத்துவிட்டனர்.
பவித்ரா, ஸ்ரீராமுக்கு அறையைக் கொடுத்துவிட்டு தாங்கள் இருவரும் ஹாலில் உறங்குவோம், அப்போது பேசலாம் என்ற லலிதாவின் எணணத்தில் இரண்டு குண்டு தலையணையாக பார்த்து விட்டெறிந்தான் வாமனமூர்த்தி.
காலையில் எழுந்து தீபாவளிக்கு வாமனன் வாங்கித் தந்து உடுத்தாது வைத்திருந்த ஹெலிட்ரோப் நிற (heliotrope) (பஞ்சு மிட்டாய்க்கு மிக அருகில்) ஜார்ஜெட் புடவையில் தயாரானவளைத் திரும்பியும் பார்க்காது சென்றவனைத் தொடரும் முன் கதவை சார்த்திக்கொண்டு போயே போய் விட்டான்.
எங்கே, பக்கத்தில் போனால் வாமனன் தன்னை தவிர்ப்பது எல்லாருக்கும், குறிப்பாக தன் பெற்றோருக்குத் தெரிந்து விடுமோ என்று கவலைப்பட்ட லலிதா, அம்மாவிடம் தஞ்சமடைய, வாமனனே தேவலாம் என்ற அளவுக்கு நச்சரித்தாள் லக்ஷ்மி.
விழாவில் ஒன்றும் செய்யாமலே ஓய்ந்து போன லலிதா, வாய்ப்பு கிடைத்ததும், விட்டால் போதுமென தன் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
அன்று மாலையே தன் வீட்டிற்கு சென்ற பவித்ராவை பிரசவத்திற்கென கையோடு அழைத்து வந்துவிட்டனர்.
இடையில் உடைமாற்றவென வந்த வாமனமூர்த்தி இரவு பத்தரை மணிக்குதான் வீடு திரும்பினான்.
இரவும் ‘உன் பேச்சு கா’ வாகவே கழிய, புதிய பிரச்சனைகளுடன் விடிந்தது புத்தம் புது காலை.
அநேக நாட்கள் காஃபியுடன் காலை வணக்கம் சொல்லும் வாமனன், பவித்ராவும் இங்கே வந்திருப்பதில், உரிமையாக தன் வீட்டிற்கு சென்றவன், அப்படியே வெளியில் சென்று விட்டான்.
அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருக்க, லலிதா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்ணாள். கடைசி நிமிடத்தில் மீட்டிங் கேன்ஸல் என மெஸேஜ் வந்தது. நல்லதாயிற்று என லாகின் செய்து வேலையில் ஆழ்ந்தாள்.
மதியம் மூன்று மணி போல் அழைத்த ரங்கராஜன் “நியூஸ் பாரு லலிதா, ஸ்வேதாவோட ஹஸ்பண்ட் ராகவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்”
“வாட்?”
குறுகிய காலத்தில் (5 வருடங்கள்) மிகப்பெரிய லாபம் ஈட்டிய ஸ்டார்ட் அப் கம்பெனியின் இரண்டு பார்ட்னர்களையும் (அதில் ஒருவன் ராகவ்) பண மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்திருந்தனர்.
ஸ்ரீசைலம், சீதளா, பவித்ரா, ஸ்ரீராம் என எல்லோரும் லலிதாவை விசாரிக்க, வட்டம் வட்டமாக, வாட்டம் வாட்டமாக பேசினர்.
இரவு பதினொன்றரைக்கு மேல் வந்த வாமனமூர்த்தியிடம், இருவருக்கும் இடையே இருந்த விலகலையெல்லாம் மறந்தவளாக அருகே சென்று “நியூஸ் தெரியுமா, ராகவ் அண்ணாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். ஸ்வேதா ஃபோனையே எடுக்கலை”
வாமனன் “தெரியும், ரிப்போர்ட் பண்ணினதே நான்தான்” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Mr. மாமியார் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.