• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -16

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
22
கடல் தேடும் மீன்கள் -16
மறு நாள் காலையில் அவள் கண் விழித்த போது இன்பா அவள் அருகில் இல்லை. மாறாக அவள் கிளிக்கி சிரிக்கும் சத்தம் கேட்டது. கரிகாலன் தான் அவளை கையில் வைத்துக் கொண்டு கிளிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தான்.
இது நாள் வரை இன்பா இது போல காலை வேளைகளில் கிளிக்கி சிரித்ததில்லை. ஒரு வேளை அதற்கு ஏற்ற சூழல் இல்லையோ.
பல் விளக்கி முகம் அலம்பிக் கொண்டு வந்தவள் அமைதியாக சத்தப்படுத்தாமல் மகளின் சிரிப்பொலியை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த நிமிடம் அவளே அறியாமல் அவள் புன்னகை சிந்துவாள் என்bறு யாராவது நேற்று சொல்லி இருந்தால் கூட அவள் நம்பியிருக்க மாட்டாள். இந்த நிமிடம் அவளுக்கு மகளும் அவளை மகிழ்விக்கும் அவன் தான் கண்ணில் தெரிந்தார்கள். நல்லவன் இது போல இல்லையே? நான் எங்கே ஏமாந்து விட்டேன்? எத்தனை முறை சிந்தனை செய்தாலும் விடை தெரியவில்லை. ஒரே ஒரு விஷயம் தனக்கு மட்டும் தான் புரியவில்லை. அவர் மீது வைத்த அதீத காதலா? மற்றவர் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
வைத்த என்று சொல்லும்போது அது முடிந்த விஷயமா? இப்போது? உடலில் மகளுக்காக உயிரைப் பற்றி கொண்டு வாழும் ஜீவன்.
தன்னை மீறிய அவள் சிந்தனை மகளிடம் வந்தது.
கிளிகள் ஏதோ பேச இன்பா இன்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்பா என்னும் குட்டிக் கிளியை அவன் ஒரு கையில் வைத்துக் கொண்டிருக்க வேறு சில கிளிகள் அவன் தோளிலும் கையில் வந்து அமர்ந்துக் கொண்டன.
ஏதோ ஒரு நாள் நம் நல்லியும் இல்லை இல்லை நம் இனியாவும் அவன் தோள் சாய்ந்து நிற்கட்டும்.
"எளுந்திருச்சுடியா ஆத்தா ! என்ன குடிக்கற? டீ கலக்கவா? காப்பியா ?"
"சாரி ! ரொம்ப நேரம் தூங்கிட்டேன்" கூச்சமாக இருந்தது அவளுக்கு வணக்கம்
"அதுக்கு என்னம்மா ? மனசு சஞ்சலமா இல்லாம இருந்தா தூக்கம் வரும். எல்லா கவலையும் மறந்துட்டு நிம்மதியா தூங்கினா சந்தோஷம்தானே "
"என்ன பிரச்சனை? என்று தூண்டி துருவி வம்பு கேட்கவில்லை.
"அதெல்லாம் இல்ல. உங்க பையன் தேன் கலந்து பால் தந்தார் அதுனாலதான் நல்ல தூங்கிட்டேன் போல "
"ஆமா ! சொன்னான். இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"
"நீங்க எது கொடுத்தாலும் சரிதான்"
"கரி உனக்கு என்னப்பா? டீ கலக்கவா?"
"சரி! மேடம் பாப்பாக்கு என்ன குடுக்கணும்? சொன்னீங்கன்னா கடைலேர்ந்து எடுத்துக்கிட்டு வருவேன்."
"இல்ல நானே வச்சுருக்கேன்." சொன்னவள் குழந்தைகளுக்கான பானம் கொடுத்தாள்.
"இதெல்லாம் எதுக்கு மேடம் கொடுக்கறீங்க. வெறும் பால் இல்லை சத்து மாவு வீட்டுலையே தயார் பண்ணி கொடுங்க. இதெல்லாம் எக்கச்சக்க சுகர் "
சொன்னவன் கவனம் என்னவோ பாப்பாவின் மீது தான் இருந்தது .
டீயை குடிச்சுட்டு ரெண்டு பேரும் குளிச்சுட்டு டிபன் சாப்பிட்டு அப்புறம் நல்ல நேரம் பார்த்து அங்க போங்க."
"சரிங்கம்மா "
சொன்னவள் அப்படியே கண்ணை சுழல விட்டாள். அங்கே பெரியதாக கரிகாலனின் பெரிய புகைப் படம் மாட்டியிருந்தது. பார்த்தவள் விழி விரித்தாள். அவனும் இவள் கல்லூரிதான். இவளுக்கு இரண்டு வருடங்கள் சீனியர். அது அவன் தங்கப் பதக்கம் வாங்கும் புகைப்படம்.
"உங்க பையன் கோல்ட் மெடலிஸ்ட்டா?"
"ஆமாம்மா ! ரொம்ப நல்ல படிப்பான். ஆனா என்ன ஆங்கிலம் பேச வராது. அதனால் காலேசுல, வேலையில போன எல்லா எடத்துலேயும் அவனை கிண்டல் பண்ணி வேலைய கூட விட்டுட்டான் "
"ஓ ! நாங்க படிச்சதும் சாதாரண ஸ்கூல் தான். ஆனா எங்க அம்மா நல்லா படிச்சவங்க. அதனால எங்களுக்கும் ஏதேதோ பழைய பேப்பர் கடையில் இருந்து நிறைய புக்ஸ் வாங்கிக் குடுத்து படிக்க வைப்பாங்க. எங்களுக்கும் பெரிய வசதி எல்லாம் இல்லை."
ஏதோ தொலைபேசியில் கரிகாலன் இருந்தான். அவன் இவள் சொல்வதை கவனித்திருந்தால் அப்போதே இவள் தீபக்கின் தங்கை என்று கண்டுபிடித்திருப்பான்.
(அப்புறம் வேற என்ன? கதை உடனே முடிச்சு விட்டிருக்கலாம்.)
"அப்புறம் ஒரு விஷயம் சொல்லலாமா ?"
"சொல்லுமா "
"நீங்க அவரை கரின்னு கூப்பிட வேண்டாமே! தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பையன் தான். இருந்தாலும் கேக்கும்போது ஒரு மாதிரி சங்கடா இருந்துச்சு."

தன் மகனுக்காக யோசிக்கும் ஒரு பெண். விழி விரிய இனியாவை பார்த்து விட்டு அமைதியாக நகர்ந்துக் கொண்டார்.
'தப்பா எடுத்துகிட்டாரோ? என்னதான் இருந்தாலும் நாம சொல்லி இருக்க வேணாம் ' அவளுக்கே சங்கடமாக இருந்தது .
பெரியவர் குழந்தையை குளிப்பாட்ட தூக்கிக் கொண்டு போனார்.
"இல்லம்மா! பரவால்ல நான் குளிக்க வைக்கிறேன்."
"அதெல்லாம் இருக்கட்டும். நான் பாத்துக்கறேன். "
'அவரின் குரல் சற்று காட்டமாக இருந்ததோ?'
இன்னொரு குளியல் அறையில் இவள் குளித்து விட்டு சென்றுப் பார்த்த போது பாட்டியும் பேத்தியும் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தனர்.
அவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான் ஒரு இடுக்கியப் பார்வையுடன்.
"உக்காருங்க! தன்னுடைய போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான் . ஒரு சாதாரண மளிகைக் கடைக்காரன் போல இல்லாமல் ஒரு மிடுக்குத் தெரிந்தது அவன் பேச்சில்.
:உங்களுக்கும் உங்க வீட்டுக் காரருக்கும் என்ன பிரச்சனை? நீங்க அங்க போகப் போறீங்கனா இல்லையா?"
நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டான் கரிகாலன்.
இல்லை இப்போதைக்கு நான். அங்கப் போகப் போறது இல்ல. அது சரி எனக்கும் அவருக்கும் பிரச்சனைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"உங்களுக்கு என்னை நினைவில்லையா ?"
"இல்லை! "தலையாட்டியவளிடம் தாங்கள் இருவரும் இதற்கு முன்பு சந்தித்திருக்கிறோம் என்பதை சொன்னான். அப்போது தான் அவளுக்கும் அவனை பார்த்த நினைவுகள் வந்தன. இருந்த பிரச்சனையில் அவள் இவன் முகத்தை எல்லாம் அப்போது சரியாக கண்டு.
இப்ப அவங்க?
மேற்கொண்டு நடந்த விஷயங்களையும் சுருக்கமாக சொல்லி விட்டான். மறைக்க எதுவும் இல்லை. இவளிடம் மறைக்கவும் தோன்றவில்லை.
"வினய் சார் தான் எனக்கு எல்லாமே. அவரு மட்டும் எனககு தன்னம்பிக்கையும் தைரியமும் சொல்லவில்லை என்றால் நான் இந்த அளவு மண் உறுதியோடு இருந்திருக்க மாட்டேன். நீங்க இப்ப அவரு வீட்டுலதான் தங்கப் போறீங்க" என்று ஆரம்பித்து மேற்கொண்டு அவள் செய்ய வேண்டியது செய்யக் கூடாது எல்லாம் ஒரு மூன்றாம் நபராக தனக்குத் தெரிந்த யோசித்த விஷயங்களை சொன்னான்.
அவன் சொல்வது எல்லாம் சரிதான். டிபன் சாப்பிட்டுக் கொண்டே அவன் சொன்ன விஷயங்களை யோசித்தாள். இருந்தாலும் சட்டப் பூர்வமாக நிறைய சந்தேகங்கள் இருந்தன. ஏற்கனவே நல்லவனை காது செய்த போது ஒரு பெண் காவலதிகாரி இவளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். அவருடைய எண்ணும் அவளிடம் இருந்தது.
அவரிடம் கால் செய்து பேசியபோது தெளிவு வந்தது. ஒரு வக்கீல் எண்ணும் கொடுத்தார். அவரும் கரிகாலனும் சொன்ன பல விஷயங்கள் ஒரே மாதிரி தான் இருந்தது.
"நீங்க இன்னும் அவனை விரும்பறீங்களா?"
"இல்ல! நிச்சசயமா இல்ல. எப்ப அவரு ஒரு பொண்ணோட மூஞ்சில ஆசிட் அடிக்கற அளவுக்கு மோசமாகிட்டாரோ அப்பவே நான் வச்சிருந்த காதல் செத்துப்போச்சு. அப்படியும் நான் எதுக்காக அவரு கூட இத்தனை நாள் இருக்கேன்னு கேக்கறீங்களா? ஏதாவது ஒரு விதத்துல அவரை திருத்திட முடியுமான்னு நினச்சு தான் வாழ்ந்து பார்த்தேன். ப்ச்! என்னால அவ்ளோ ஈஸியா என்னோட தப்பை தோல்வியை ஒத்துக்க முடியல. "
"அவர் மேல ரொம்ப ஆசை வச்சு ஏமாந்து விட்டீர்களே?"
இது அவன்தான்.
ஆமா! சொந்த அத்தை மகன். சின்ன வயசிலேயே விரும்பியவர். அதுனால தான் அவர் என்ன தப்பு செய்தாலும் அதை அப்படியே ஏற்று கொண்டு வாழ ...."
அவளின் கண்ணில் தோல்விக்கான கண்ணீர் துளிர்த்தது.
"சரி ! அதெல்லாம் இருக்கட்டும். அவரு கூட தானே பிரச்சனை. நீங்க என் உங்க அம்மா வீட்டுக்குப் போகல?"
அவர்களை எதிர்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்பது வரை சொன்னவளுக்கு தன்னுடைய அசிங்கமான செயல் பற்றி சொல்ல வாயில் வார்ததை வரவில்லை.
"யாருகிட்ட பேசணுமோ சொல்லுங்க. நான் பேசறேன். நீங்க எதைப் பத்தியும் கவலை படாதீங்க. என்னதான் இருந்தாலும் உங்களுக்கு பிறநத வீடுதான் பாதுகாப்பு. அதுதான் உங்களுக்கு உரிமை உள்ள இடம்.
"இல்லங்க! ப்ளீஸ் வேண்டாம். அவங்களே இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டுகிட்டு வராங்க. அவங்களை நான் போய் மறுபடியும் பார்த்து, ப்ச் மறுபடியும் அவரால அவங்களுக்கு பிரச்சனை வந்து எங்க அத்தயட கொடுமை இனி எங்க அம்மாவுக்கு வேணாம்.
"நீங்க சொல்லறது எல்லாம் சரிதான்.: பாபாப்பாவை த்தி நினச்சு பார்த்தீங்களா?"
"அங்க இருந்த போதும் நாந்தேன் இவளை பார்த்துக்கிட்டேன். அவ வயித்துல இருந்த போது கூட எனக்குன்னு யாரும் துணைக்கு இல்ல. இப்பதான் நீங்க இருக்கீங்களே ? நீங்க உங்க அம்மா குழலி ... "பேசமுடியாமல் குனிந்தபோது அவள் கண்ணிலிருந்து நீர் கொட்டியது.
"கண்ணை துடை ஆத்தா ! பொண்ணுங்க கண்ணுலேர்ந்து கண்ணீர் பூமி மேல விழ கூடாது. "
டவல் சுற்றி பொம்மை போல இனியாவைத் தூக்கி கொண்டு வந்தார்.
குழந்தையை வாங்க இவள் கை நீட்ட இன்பாவோ கரிகாலனிடம் தாவி கொண்டாள்.
"உனக்கு இந்த அங்கிள் பார்த்தா ஓவறாத் தாண்டி ஆடற "
செல்லமாக கோபித்துக் கொண்டாள் இனியா.
"அதுக்கு என்ன தாயி. பிள்ளை மனுஷங்களுக்கு ஏங்குது போல " முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
"இருக்குமோ" இவளுக்குள் சிந்தனை ஓடஆர்மபித்தது.
டிபன் சாப்பிட்டு முடித்தவர்கள் குழலி வீட்டுக்கு கிளம்பினார்கள்.
"தம்பி அவங்களுக்கு வீட்டை காண்பிச்சுடுப்பா . சாபி அதோ கிடக்கு "
"நீங்களும் வங்களேன் "
"முத முதல்ல அந்த வீட்டுக்கு போற நான் எதுக்கு. அப்பறம் வாரன். நீங்க முதல்ல போய் விளக்கேத்துங்க."
"இந்த வாழா வெட்டிக்கு நீங்க வர கூடாதா?"
கேட்ட கரிகாலனுக்கு உர்ரென்று கோபம் வந்து விட்டது.
"இது என்ன பேச்சு?"
"அவனுக்கு இந்த விதவை வாழாவெட்டி இந்த பேச்செல்லாம் புடிக்காது. நீ எதுவும் தப்பா எடுத்துக்காத ஆத்தா "
அதற்கு மேல் அங்கு நிற்காமல் இன் பாவைத் தூக்கிக் கொண்டு அவன் நடையை கட்டினான்.
குழலி வீட்டை திறந்து விட்டவன் விளக்கு மின் விசிறி போட்டு விட்டு சாவியை வைத்து விட்டு இன்பாவிடம் பை சொல்லி விட்டு கிளம்பினான்.
"சாரி ! இங்க யாரும் வாழாம வெட்டியா எல்லாம் இல்ல. போதுமா?"
"நல்லவனும் தான் இவளிடம் கோபம் காட்டினான். அடித்திருக்கிறார். ஆனால் இவன் சட்டென முகம் தூக்கி வைத்துக் கொள்ளவும் இவளால் அதை என் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆமா !
இந்த இவள் வாழ்வில் இந்த நல்லவனா? அந்த நல்லவனா?
தொடரும்..........
 

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
காதல் தவறில்லை
காலம் தான் தவறு...
காத்திருந்தால்
தாயின் அறிவுரை
கேட்டிருந்தால்
கல்வியும்
காலமும் புரிய வைத்திருக்கும்....
கடந்து விட்டது காலம்
கை மீறி சென்றுவிட்டது....
 
Top Bottom