Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -15
"என்னம்மா இது குழந்தையை இப்படி அடிக்கற ? அதட்டியது வேறு யாரும் இல்லை. நம் கரிகாலன்தான்.
நீங்களே பாருங்க .கொஞ்சம் கூட நிலைமையை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா . கஷ்டப்பட்டு வாங்கிக் குடுத்த பிஸ்கட்டை தூக்கி எறிஞ்சுட்டா. இந்த நேரத்துல இவ கேக்கறது எல்லாம் என்ன வாங்கித் தர முடியுமா?"
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் .
ஏதோ பெரிய பிரச்சனை தான், அவனுக்குத் தெரிந்தது. நிச்சயம் அவள் கணவனால் தான் பிரச்சனை இருக்க முடியும். அவனையும் அறியாமல் நல்லவன் மீது கோபம் வந்தது. அறிந்தே கோபம் வரவும் தான் காரணம் இருக்கிறதே.
"சரி! அதெல்லாம் இருக்கட்டும். வீடு எங்க சொல்லுங்க. நான் கொண்டு போய் விடறேன் " சொன்ன அவனிடம் விலாசம் கொடுத்தாள் .
"இது நம்ம குழலி மேடம் வீடு தானே?" விவரம் கேட்டான். கணவனுடன் சன்டை என்று சொல்ல வாய் வரவில்லை. கொஞ்ச நாள் இங்கு தங்குவதாக மட்டும் சொன்னாள் .
ஆனால் குழலி அவனுக்கு ஏற்கனவே விவரம் சொல்லி விட்டாள். அந்த விவரம் இவளுக்குத் தெரியாது.
"அண்ணா! என்னோட பிரண்டு இங்க வந்து தங்கப் போறாங்க. அவங்க வீட்டுக்காரரோட கொஞ்சம் டெம்ஸ் சரியா இல்ல. அவளுக்கு என்ன வேணுமோ கொஞ்சம் பார்த்துக்கோங்க.குழந்தைக்கும் ஆட்டிசம் பிரச்சனை இருக்கு. அந்த குழந்தைக்காக வேலைக்கு போகறதையும் நிப்பாட்டிட்டா. அந்த குழந்தையோட சேர்ந்து தெரபி சென்டருக்குப் போவா. அவளுக்கு எது வேணுன்னாலும் கொஞ்சம் பார்த்து செய்ங்க ஆன்டி. பைசா குடுக்கலைன்னா அவகிட்ட எதுவும் கேக்க வேணாம். எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க. நான் கட்டிடறேன் "
"அதுக்கு என்ன தாயி? என் பொண்ணாட்டம் பார்த்துக்கறேன். எதுக்கும் நீ கவலை படாத" அன்னையும் மகனும் தெளிவாகச் சொல்லி இருந்தார்கள். கரிகாலனும் அவன் அம்மாவும் அங்கே அருகில் இருந்தவர்களுக்கு ஒரு கடைக்காரர்கள் என்பதையும் தாண்டி உறவு முறைப் போலத் தான் பழகி வந்தார்கள்.
"அண்ணே! பன்னு பொட்டலம் குடு அப்புறம் காசு தரேன் " வேணுங்கற நேரத்தில் கேட்கலாம்.
"அக்கா ! சந்தைக்கு போறேன். வூட்ட கொஞ்சம் பார்த்துக்க.அவங்க வருவாங்க. சாவி கொடுத்துடுங்க "
"ஆத்தா பிள்ளைக்கு உடம்புக்கு சொகமா இல்ல. என்னன்னு கொஞ்சம் வந்து பாரேன்"
"ஏம்பா மீனாட்சி புள்ளை உடம்புக்கு சுகமில்லை. ஆஸ்பத்திரிக்கு போறேன். ஒரு வண்டி புடிச்சு அனுப்புப்பா "
யார் எந்த நேரம் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் மறக்காமல் செய்பவர்கள் தான் இவர்கள் அதனாலேயே தான் குழலி தன் தோழி வரும் விஷயத்தை நம்பி இவர்களிடம் சொல்லி இருந்தாள் .
காரில் ஏதேதோ மளிகை பொருட்கள் இருந்தன. இடம் சரிப்படுத்தி இவர்கள் அமர இடம் கொடுத்தான். குழந்தை சிணுங்கி கொண்டே இருந்தாள் . கார் வேகமெடுக்க முகத்தில் சில் காற்று படவும் அழுகையும் நின்றது.
"குழலி மேடம் வீடு பூட்டி கிடக்கு. இந்த ராவுக்கு அங்க போக வேணாம். நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. ஏதாவது சாப்பிட்டு ராத்திரி நம்ம வீட்டுல தங்கிட்டு காலைல அங்க போலாம்."
அவன் மனைவி என்ன நினைப்பாளோ என்று அவளுக்கு கூச்சமாக இருந்து. அதற்கு மேலும் இந்த இரவில் எப்படி யாரோ ஒரு ஆடவனை நம்பி அவர்கள் வீட்டுக்குச் செல்வது என்றும் பயமாக இருந்தது.
இது எதுவும் அறியாதவன் அவளை வீட்டில் விட்டு விட்டு அன்னையிடம் சொல்லி விட்டு கடைக்குச் சென்று விட்டான் அவன். இருப்பினும் மனம் முழுவதும் அவள் தான் இருந்தாள் .
அடடே! நம்ம குட்டி பாபா இங்க வந்துட்டாங்களா இன்பாவை வாரி எடுத்துக் கொண்டார் கரிகாலனின் தாய்.. இரவில் வந்தவர்களுக்கு உணவளித்து மகனுக்காக காத்திருந்தார்.
"குழந்தைக்கு நான் கொடுக்கறேன். நீ சாப்பிடு ஆத்தா "
பெரியவரின் கரிசனம் அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
" யாருக்குத் தான் பிரச்சனை இல்ல. புருஷன் சரியில்லாம எங்கக்கா கூடத் தான் வீட்டோட வந்துருச்சி. இதோ இப்ப மகனோட அமெரிக்காவுல ஜாம் ஜாம்னு இருக்கா . எங்க வூட்டுக்காரரு யாரோ ஒரு புள்ளைய காப்பாத்த போய் அவங்க உசுரு போச்சு. நானும் உன்னைய மாதிரி சாப்பிடாம அழுதுகிட்டே இருந்திருந்தா என் பிள்ளை என்ன ஆகும். இந்த புள்ளை முகத்தை பாரு ஆத்தா."
சமாதானம் செய்து செய்து எப்படியோ அவளை சாப்பிட வைத்தாள்.
இன்பாவும் அமைதியாக உண்டுவிட்டு உறங்கி விட்டாள் .
"வீடு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க."
ஹாலில் ஏதேதோ சாமான்கள் எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மாளிகைப் பொருட்களாக இருக்கலாம்.
இவர்களை உள் அறையில் படுக்க வைத்தவள் மகனுக்காக காத்திருந்தாள்.
நல்லவனுக்காக தான் கொண்ட காதலுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவள் மீது நல்லவனின் தோழர்களும் உரிமையாக கை வைக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருக்கும் கணவன் மனைவி உறவு இல்லை என்பதுக் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து தப்பித்து குடும்பம் நடத்தி வந்தாள. வேலைக்கு சென்றதால் பெரியதாக துன்பம் இல்லை. வீட்டில் இருந்த ஞாயிறு மட்டும் தான் பக்கு பக்குன்னு இருக்கும். மற்ற நாட்களில் குழந்தையை, அருகில் இருந்த குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் இடத்தில் தான் விட்டு விட்டுச் செல்வாள். கணவனின் முக்கியமான தோழர்கள் ஏதோ பிரச்சனையில் சிறைக்குச் சென்று விட்டார்கள். இரண்டு வருடமாம். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள் அவர்கள் வெளியில் வரும்வரை.
இரவில் கரிகாலன் கடையை மூடி விட்டு வர நேரமாகிவிட்டது. உள் அறையில் இன்பா வும் இனியாவும் படுத்துக் கொண்டார்கள். ஒற்றைக் கட்டில் தான்.
கடற்கரைக் காற்று குளுமையாக இருந்தது. மனம் தான் புழுங்கி கொண்டிருந்தது .
இங்கே யார் என்னவென்றுக் கூட தெரியாதவர்கள் வீட்டில் தான் இப்போது தனக்கு அடைக்கலம். தன்னுடைய வாழ்வை நினைத்தவளுக்கு அழுகை தான் வந்தது. தூக்கம் எப்படி வரும்?
தன்னுடைய காதல், அந்த ஒற்றைக் கட்டிலில் அவனுடன் கூடிக் களித்தது, நல்லி நல்லி என்று அவளை சுற்றி சுற்றி வந்தது என்று மாறி மாறி அவளின் எண்ண அலைகள் அலகழித்தன.
"ஏன் மாமா இப்படி மாறிட்ட. அத்த அவருகிட்ட கொஞ்சம் கேளுங்களேன். அத்தை ப்ளீஸ் அத்தை ப்ளீஸ் அத்தை " மனம் கெஞ்சிக் கூப்பாடு போட்டது. எத்தனை நேரம் தான் கேவி கேவி அழ முடியும்?
அழுதவளை நெஞ்சில் தாங்கி கொண்டார் பெரியவர்.
"எதையும் நினைக்காத". முதுகைத் தடவினார். இதற்கு மேலும் அவரை சங்கடப் படுத்த விரும்பாதவள் தன்னை தானே கட்டுப் படுத்திக் கொண்டாள் .
தான் இன்னும் சில வருடங்கள் அவனுடன் இருந்து அவனை திருத்த முயற்சி செய்திருக்கலாமோ? காதல் கூடாத இடத்தில் காமம் உதவியிருக்குமோ ? நான் எங்கே தப்பு செய்தேன் ? அவள் செய்தது சரியா தவறா? யோசித்தவளுக்கு பைத்தியம் பிடிக்காதது தான் குறை. அப்படியே ஏதோ ஒரு மாதிரி அரை குறை தூக்கம். அதில் தான்
ஒருவன் வந்து இவளிடம் தப்பாக நடந்துக் கொண்டான். அதே சமயம் இன்னும் இருவர் குழந்தையை என்ன செய்தார்கள் என்றுத் தெரியவில்லை. வீல் வீல் என்று இன்பா அழத் தொடங்கினாள்.
நல்லவன் வந்தான் அவன் அன்னையோடு. அதனால் அவர்கள் மூவரும் நல்லவர்கள் போல வெளியில் சென்று விட்டார்கள். இது கனவல்ல. நடந்தது தான் அவள் நினைவுக்கு வந்தது.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் குரல் வெளியில் காட்டாமல் இருந்தவள் இப்போதெல்லாம் ரொம்ப கத்த ஆரம்பித்தாள். குழந்தை பிறப்புக்குப் பிறகு வரும் மன அழுத்தம் ,கணவன் உடன் இல்லாதது, காதல் திருமணம் கை விட்டது, அன்னையாக ஏற்றுக் கொண்ட பார்வதியின் உண்மை உருவம் தெரிந்துப் போனது, அலுவலகத்தில் இருக்கும் பிரஷர், பேருந்தில் இருக்கும் கூட்ட நெரிசல், சரியான உணவு இல்லாதது, குழந்தையும் முகம் பார்த்துப் பேசாமல் இருந்ததால் தெரபி ஆரம்பிக்க வேண்டும் என்றுக் கூறியது, வேலை விட வேண்டிய சூழல் இன்னும் அவளால் எத்தனை தான் தாங்க முடியும்? அவளையும் மீறி கத்த ஆரம்பித்தாள். முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் .
அவனுடைய நல்லியாக இருந்திருந்தால் அவன் விட்டுருப்பானா?
"சே! ப! பைத்தியம்" மனைவிக்கும் மகளுக்கும் அவன் கொடுத்த இலவச பட்டம் பைத்தியம் தான்.
"இனிமே உன்னோட ப்ரன்ட்ஸ் இங்க வரக் கூடாது. அவங்க இனி இங்க வந்தா நானும் என் பெண்ணும் இங்க இருக்க மாட்டோம். அவனுங்க வந்து தேவையில்லாம என் மேலையும் என் பொண்ணு மேலையும் கைய வைக்கறாங்க. நீ சரிப்பட்டு வர மாட்ட. நானே போய் போலீசுல புகார் கொடுக்கறேன். "
பிள்ளையை தூக்கிக் கொண்டு நடையைக் கட்டியவளை, பளீரென கன்னத்தில் அறைந்து தலையை சுவற்றில் மோதினான். குனிய வைத்து முதுகில் குத்த ஆரம்பித்தவனை பார்வதி தான் தடுத்து காப்பாற்றினாள்.
"டேய்! டேய்! பிள்ளை பெத்தவடா அவ. இனிமே உன் அடியெல்லாம் தாங்க மாட்டா. போய் சேர்ந்துட்டா நீதான் கொலை கேசுல உள்ள போகணும்."
தர தர வென இழுத்து வீட்டை விட்டு வெளியில் தள்ளி கதைவடைத்து விட்டான். பார்வதி அவளுக்காக அவனிடம் பேசுவது கேட்டது.
"டேய்! அவ இல்லாம முடியாதுடா. அவ தாண்டா வீட்டை பாத்து சோறாக்கரா. நீ அவளை அடிச்சுக்கோ புடிச்சுகோ ஆனா வீட்டை விட்டு மட்டும் வெளில அனுப்பாதடா" .
கதறிக் கொண்டிருந்த இன்பாவையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
"ச! இந்த சனியன் வேற !" திட்டிக் கொண்டே கதவைத் திறந்தவன் வெளியில் சென்று விட்டான். இவளோ கிடைத்த இடைவெளியில் அவசரமாக கையில் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாள். எங்கே செல்வது ? குழலி நினைவு தான் வந்தது. அப்போது தான் அவள்வீட்டு விலாசம் கொடுத்து இங்கே வரச் சொன்னது.
தூக்கமா மயக்கமா என்று தெரியாதவளுக்கு கண் முன்னே நடந்த நிகழ்வுகள் படமாக ஓடிட அம்மா என்று வலியில் துடித்துக் கொண்டு எழுந்தாள்.
அருகே கரிகாலன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
கையில் டீ பாக்ட் மருந்து இருந்தது. பஞ்சும்.
"இல்ல! இரத்தம் வருது நீங்க ரொம்ப ஆழ்ந்து தூங்கிகிட்டு இருந்தீங்க. அதான். இந்தாங்க." சொல்லி விட்டு இன்பா கன்னம் தடவி அவன் கையில் முத்தமிட்டுக் கொண்டான்.
"தேங்க்ஸ் !" சொல்லிவிட்டு பஞ்சினால் ரத்தத்தை ஒற்றி சுத்தப் படுத்திவிட்டு மருந்தைப் போட்டுக் கொண்டாள்.
"இந்தாங்க" கையில் லேசான சூட்டோடு பால் கொண்டு வந்தான்.
"இதைக் குடிங்க. நல்லா தூக்கம் வரும்."
"இல்ல வேணாம்."
"ஏங்க? ஏதாவது கலந்திருப்பேனோன்னு சந்தேகமா. ஆமா கலந்திருக்கேன். கொஞ்சமா தேன் கலந்திருக்கேன். நல்லா தூக்கம் வரும். மத்தபடி குடிச்சுட்டு கொடுத்தீங்கன்னா நான் கழுவி வச்சுட்டு தூங்கப் போவேன். காலைல சரக்கு எடுக்க மார்க்கெட் போகணும். "
உன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள எல்லாம் எனக்கு நேரமில்லை என்று தெளிவாக்கினான்.
அவன் குடுத்த பாலை குடித்து முடித்து அவளே கழுவி வைத்தாள்.
அந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் அவள் முகத்தில் அவன் என்ன பார்த்தானோ தெரியவில்லை.
"எந்தப் பிரச்சனையா இருந்தாலும் தைரியத்தை விட்டுடாதீங்க. உங்களுக்குன்னு பாப்பா இருக்கா . எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். "
அவள் முகத்தில் அவனுடைய பெரிய வலதுகை இருந்தது.
"தம்பி படுப்பா ! அவங்களும் களைப்பா இருப்பாங்க " சொல்லி விட்டு அவன் அன்னை மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார்.
அவனுடைய இரு கைகளையும் விரித்து அதில் முகம் புதைத்து அழ வேண்டும் என்ற எண்ணத்தை அவளும் ஒதுக்கி விட்டாள்.
இருவரும் இப்போது தான் இரண்டாவது முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அத்தனை பேச்சு வழக்கும் இல்லை. இருந்தும் இது எப்படி?
தன்னுடைய மனப் போக்கு என்ன இருவருமே புரியாமல் புரண்டு படுத்து உறங்கி விட்டனர்.
காலையில் அவள் கண் விழித்தபோது ....
தொடரும்...........
"என்னம்மா இது குழந்தையை இப்படி அடிக்கற ? அதட்டியது வேறு யாரும் இல்லை. நம் கரிகாலன்தான்.
நீங்களே பாருங்க .கொஞ்சம் கூட நிலைமையை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா . கஷ்டப்பட்டு வாங்கிக் குடுத்த பிஸ்கட்டை தூக்கி எறிஞ்சுட்டா. இந்த நேரத்துல இவ கேக்கறது எல்லாம் என்ன வாங்கித் தர முடியுமா?"
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் .
ஏதோ பெரிய பிரச்சனை தான், அவனுக்குத் தெரிந்தது. நிச்சயம் அவள் கணவனால் தான் பிரச்சனை இருக்க முடியும். அவனையும் அறியாமல் நல்லவன் மீது கோபம் வந்தது. அறிந்தே கோபம் வரவும் தான் காரணம் இருக்கிறதே.
"சரி! அதெல்லாம் இருக்கட்டும். வீடு எங்க சொல்லுங்க. நான் கொண்டு போய் விடறேன் " சொன்ன அவனிடம் விலாசம் கொடுத்தாள் .
"இது நம்ம குழலி மேடம் வீடு தானே?" விவரம் கேட்டான். கணவனுடன் சன்டை என்று சொல்ல வாய் வரவில்லை. கொஞ்ச நாள் இங்கு தங்குவதாக மட்டும் சொன்னாள் .
ஆனால் குழலி அவனுக்கு ஏற்கனவே விவரம் சொல்லி விட்டாள். அந்த விவரம் இவளுக்குத் தெரியாது.
"அண்ணா! என்னோட பிரண்டு இங்க வந்து தங்கப் போறாங்க. அவங்க வீட்டுக்காரரோட கொஞ்சம் டெம்ஸ் சரியா இல்ல. அவளுக்கு என்ன வேணுமோ கொஞ்சம் பார்த்துக்கோங்க.குழந்தைக்கும் ஆட்டிசம் பிரச்சனை இருக்கு. அந்த குழந்தைக்காக வேலைக்கு போகறதையும் நிப்பாட்டிட்டா. அந்த குழந்தையோட சேர்ந்து தெரபி சென்டருக்குப் போவா. அவளுக்கு எது வேணுன்னாலும் கொஞ்சம் பார்த்து செய்ங்க ஆன்டி. பைசா குடுக்கலைன்னா அவகிட்ட எதுவும் கேக்க வேணாம். எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க. நான் கட்டிடறேன் "
"அதுக்கு என்ன தாயி? என் பொண்ணாட்டம் பார்த்துக்கறேன். எதுக்கும் நீ கவலை படாத" அன்னையும் மகனும் தெளிவாகச் சொல்லி இருந்தார்கள். கரிகாலனும் அவன் அம்மாவும் அங்கே அருகில் இருந்தவர்களுக்கு ஒரு கடைக்காரர்கள் என்பதையும் தாண்டி உறவு முறைப் போலத் தான் பழகி வந்தார்கள்.
"அண்ணே! பன்னு பொட்டலம் குடு அப்புறம் காசு தரேன் " வேணுங்கற நேரத்தில் கேட்கலாம்.
"அக்கா ! சந்தைக்கு போறேன். வூட்ட கொஞ்சம் பார்த்துக்க.அவங்க வருவாங்க. சாவி கொடுத்துடுங்க "
"ஆத்தா பிள்ளைக்கு உடம்புக்கு சொகமா இல்ல. என்னன்னு கொஞ்சம் வந்து பாரேன்"
"ஏம்பா மீனாட்சி புள்ளை உடம்புக்கு சுகமில்லை. ஆஸ்பத்திரிக்கு போறேன். ஒரு வண்டி புடிச்சு அனுப்புப்பா "
யார் எந்த நேரம் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் மறக்காமல் செய்பவர்கள் தான் இவர்கள் அதனாலேயே தான் குழலி தன் தோழி வரும் விஷயத்தை நம்பி இவர்களிடம் சொல்லி இருந்தாள் .
காரில் ஏதேதோ மளிகை பொருட்கள் இருந்தன. இடம் சரிப்படுத்தி இவர்கள் அமர இடம் கொடுத்தான். குழந்தை சிணுங்கி கொண்டே இருந்தாள் . கார் வேகமெடுக்க முகத்தில் சில் காற்று படவும் அழுகையும் நின்றது.
"குழலி மேடம் வீடு பூட்டி கிடக்கு. இந்த ராவுக்கு அங்க போக வேணாம். நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. ஏதாவது சாப்பிட்டு ராத்திரி நம்ம வீட்டுல தங்கிட்டு காலைல அங்க போலாம்."
அவன் மனைவி என்ன நினைப்பாளோ என்று அவளுக்கு கூச்சமாக இருந்து. அதற்கு மேலும் இந்த இரவில் எப்படி யாரோ ஒரு ஆடவனை நம்பி அவர்கள் வீட்டுக்குச் செல்வது என்றும் பயமாக இருந்தது.
இது எதுவும் அறியாதவன் அவளை வீட்டில் விட்டு விட்டு அன்னையிடம் சொல்லி விட்டு கடைக்குச் சென்று விட்டான் அவன். இருப்பினும் மனம் முழுவதும் அவள் தான் இருந்தாள் .
அடடே! நம்ம குட்டி பாபா இங்க வந்துட்டாங்களா இன்பாவை வாரி எடுத்துக் கொண்டார் கரிகாலனின் தாய்.. இரவில் வந்தவர்களுக்கு உணவளித்து மகனுக்காக காத்திருந்தார்.
"குழந்தைக்கு நான் கொடுக்கறேன். நீ சாப்பிடு ஆத்தா "
பெரியவரின் கரிசனம் அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
" யாருக்குத் தான் பிரச்சனை இல்ல. புருஷன் சரியில்லாம எங்கக்கா கூடத் தான் வீட்டோட வந்துருச்சி. இதோ இப்ப மகனோட அமெரிக்காவுல ஜாம் ஜாம்னு இருக்கா . எங்க வூட்டுக்காரரு யாரோ ஒரு புள்ளைய காப்பாத்த போய் அவங்க உசுரு போச்சு. நானும் உன்னைய மாதிரி சாப்பிடாம அழுதுகிட்டே இருந்திருந்தா என் பிள்ளை என்ன ஆகும். இந்த புள்ளை முகத்தை பாரு ஆத்தா."
சமாதானம் செய்து செய்து எப்படியோ அவளை சாப்பிட வைத்தாள்.
இன்பாவும் அமைதியாக உண்டுவிட்டு உறங்கி விட்டாள் .
"வீடு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க."
ஹாலில் ஏதேதோ சாமான்கள் எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மாளிகைப் பொருட்களாக இருக்கலாம்.
இவர்களை உள் அறையில் படுக்க வைத்தவள் மகனுக்காக காத்திருந்தாள்.
நல்லவனுக்காக தான் கொண்ட காதலுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவள் மீது நல்லவனின் தோழர்களும் உரிமையாக கை வைக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருக்கும் கணவன் மனைவி உறவு இல்லை என்பதுக் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து தப்பித்து குடும்பம் நடத்தி வந்தாள. வேலைக்கு சென்றதால் பெரியதாக துன்பம் இல்லை. வீட்டில் இருந்த ஞாயிறு மட்டும் தான் பக்கு பக்குன்னு இருக்கும். மற்ற நாட்களில் குழந்தையை, அருகில் இருந்த குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் இடத்தில் தான் விட்டு விட்டுச் செல்வாள். கணவனின் முக்கியமான தோழர்கள் ஏதோ பிரச்சனையில் சிறைக்குச் சென்று விட்டார்கள். இரண்டு வருடமாம். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள் அவர்கள் வெளியில் வரும்வரை.
இரவில் கரிகாலன் கடையை மூடி விட்டு வர நேரமாகிவிட்டது. உள் அறையில் இன்பா வும் இனியாவும் படுத்துக் கொண்டார்கள். ஒற்றைக் கட்டில் தான்.
கடற்கரைக் காற்று குளுமையாக இருந்தது. மனம் தான் புழுங்கி கொண்டிருந்தது .
இங்கே யார் என்னவென்றுக் கூட தெரியாதவர்கள் வீட்டில் தான் இப்போது தனக்கு அடைக்கலம். தன்னுடைய வாழ்வை நினைத்தவளுக்கு அழுகை தான் வந்தது. தூக்கம் எப்படி வரும்?
தன்னுடைய காதல், அந்த ஒற்றைக் கட்டிலில் அவனுடன் கூடிக் களித்தது, நல்லி நல்லி என்று அவளை சுற்றி சுற்றி வந்தது என்று மாறி மாறி அவளின் எண்ண அலைகள் அலகழித்தன.
"ஏன் மாமா இப்படி மாறிட்ட. அத்த அவருகிட்ட கொஞ்சம் கேளுங்களேன். அத்தை ப்ளீஸ் அத்தை ப்ளீஸ் அத்தை " மனம் கெஞ்சிக் கூப்பாடு போட்டது. எத்தனை நேரம் தான் கேவி கேவி அழ முடியும்?
அழுதவளை நெஞ்சில் தாங்கி கொண்டார் பெரியவர்.
"எதையும் நினைக்காத". முதுகைத் தடவினார். இதற்கு மேலும் அவரை சங்கடப் படுத்த விரும்பாதவள் தன்னை தானே கட்டுப் படுத்திக் கொண்டாள் .
தான் இன்னும் சில வருடங்கள் அவனுடன் இருந்து அவனை திருத்த முயற்சி செய்திருக்கலாமோ? காதல் கூடாத இடத்தில் காமம் உதவியிருக்குமோ ? நான் எங்கே தப்பு செய்தேன் ? அவள் செய்தது சரியா தவறா? யோசித்தவளுக்கு பைத்தியம் பிடிக்காதது தான் குறை. அப்படியே ஏதோ ஒரு மாதிரி அரை குறை தூக்கம். அதில் தான்
ஒருவன் வந்து இவளிடம் தப்பாக நடந்துக் கொண்டான். அதே சமயம் இன்னும் இருவர் குழந்தையை என்ன செய்தார்கள் என்றுத் தெரியவில்லை. வீல் வீல் என்று இன்பா அழத் தொடங்கினாள்.
நல்லவன் வந்தான் அவன் அன்னையோடு. அதனால் அவர்கள் மூவரும் நல்லவர்கள் போல வெளியில் சென்று விட்டார்கள். இது கனவல்ல. நடந்தது தான் அவள் நினைவுக்கு வந்தது.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் குரல் வெளியில் காட்டாமல் இருந்தவள் இப்போதெல்லாம் ரொம்ப கத்த ஆரம்பித்தாள். குழந்தை பிறப்புக்குப் பிறகு வரும் மன அழுத்தம் ,கணவன் உடன் இல்லாதது, காதல் திருமணம் கை விட்டது, அன்னையாக ஏற்றுக் கொண்ட பார்வதியின் உண்மை உருவம் தெரிந்துப் போனது, அலுவலகத்தில் இருக்கும் பிரஷர், பேருந்தில் இருக்கும் கூட்ட நெரிசல், சரியான உணவு இல்லாதது, குழந்தையும் முகம் பார்த்துப் பேசாமல் இருந்ததால் தெரபி ஆரம்பிக்க வேண்டும் என்றுக் கூறியது, வேலை விட வேண்டிய சூழல் இன்னும் அவளால் எத்தனை தான் தாங்க முடியும்? அவளையும் மீறி கத்த ஆரம்பித்தாள். முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் .
அவனுடைய நல்லியாக இருந்திருந்தால் அவன் விட்டுருப்பானா?
"சே! ப! பைத்தியம்" மனைவிக்கும் மகளுக்கும் அவன் கொடுத்த இலவச பட்டம் பைத்தியம் தான்.
"இனிமே உன்னோட ப்ரன்ட்ஸ் இங்க வரக் கூடாது. அவங்க இனி இங்க வந்தா நானும் என் பெண்ணும் இங்க இருக்க மாட்டோம். அவனுங்க வந்து தேவையில்லாம என் மேலையும் என் பொண்ணு மேலையும் கைய வைக்கறாங்க. நீ சரிப்பட்டு வர மாட்ட. நானே போய் போலீசுல புகார் கொடுக்கறேன். "
பிள்ளையை தூக்கிக் கொண்டு நடையைக் கட்டியவளை, பளீரென கன்னத்தில் அறைந்து தலையை சுவற்றில் மோதினான். குனிய வைத்து முதுகில் குத்த ஆரம்பித்தவனை பார்வதி தான் தடுத்து காப்பாற்றினாள்.
"டேய்! டேய்! பிள்ளை பெத்தவடா அவ. இனிமே உன் அடியெல்லாம் தாங்க மாட்டா. போய் சேர்ந்துட்டா நீதான் கொலை கேசுல உள்ள போகணும்."
தர தர வென இழுத்து வீட்டை விட்டு வெளியில் தள்ளி கதைவடைத்து விட்டான். பார்வதி அவளுக்காக அவனிடம் பேசுவது கேட்டது.
"டேய்! அவ இல்லாம முடியாதுடா. அவ தாண்டா வீட்டை பாத்து சோறாக்கரா. நீ அவளை அடிச்சுக்கோ புடிச்சுகோ ஆனா வீட்டை விட்டு மட்டும் வெளில அனுப்பாதடா" .
கதறிக் கொண்டிருந்த இன்பாவையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
"ச! இந்த சனியன் வேற !" திட்டிக் கொண்டே கதவைத் திறந்தவன் வெளியில் சென்று விட்டான். இவளோ கிடைத்த இடைவெளியில் அவசரமாக கையில் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாள். எங்கே செல்வது ? குழலி நினைவு தான் வந்தது. அப்போது தான் அவள்வீட்டு விலாசம் கொடுத்து இங்கே வரச் சொன்னது.
தூக்கமா மயக்கமா என்று தெரியாதவளுக்கு கண் முன்னே நடந்த நிகழ்வுகள் படமாக ஓடிட அம்மா என்று வலியில் துடித்துக் கொண்டு எழுந்தாள்.
அருகே கரிகாலன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
கையில் டீ பாக்ட் மருந்து இருந்தது. பஞ்சும்.
"இல்ல! இரத்தம் வருது நீங்க ரொம்ப ஆழ்ந்து தூங்கிகிட்டு இருந்தீங்க. அதான். இந்தாங்க." சொல்லி விட்டு இன்பா கன்னம் தடவி அவன் கையில் முத்தமிட்டுக் கொண்டான்.
"தேங்க்ஸ் !" சொல்லிவிட்டு பஞ்சினால் ரத்தத்தை ஒற்றி சுத்தப் படுத்திவிட்டு மருந்தைப் போட்டுக் கொண்டாள்.
"இந்தாங்க" கையில் லேசான சூட்டோடு பால் கொண்டு வந்தான்.
"இதைக் குடிங்க. நல்லா தூக்கம் வரும்."
"இல்ல வேணாம்."
"ஏங்க? ஏதாவது கலந்திருப்பேனோன்னு சந்தேகமா. ஆமா கலந்திருக்கேன். கொஞ்சமா தேன் கலந்திருக்கேன். நல்லா தூக்கம் வரும். மத்தபடி குடிச்சுட்டு கொடுத்தீங்கன்னா நான் கழுவி வச்சுட்டு தூங்கப் போவேன். காலைல சரக்கு எடுக்க மார்க்கெட் போகணும். "
உன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள எல்லாம் எனக்கு நேரமில்லை என்று தெளிவாக்கினான்.
அவன் குடுத்த பாலை குடித்து முடித்து அவளே கழுவி வைத்தாள்.
அந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் அவள் முகத்தில் அவன் என்ன பார்த்தானோ தெரியவில்லை.
"எந்தப் பிரச்சனையா இருந்தாலும் தைரியத்தை விட்டுடாதீங்க. உங்களுக்குன்னு பாப்பா இருக்கா . எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். "
அவள் முகத்தில் அவனுடைய பெரிய வலதுகை இருந்தது.
"தம்பி படுப்பா ! அவங்களும் களைப்பா இருப்பாங்க " சொல்லி விட்டு அவன் அன்னை மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார்.
அவனுடைய இரு கைகளையும் விரித்து அதில் முகம் புதைத்து அழ வேண்டும் என்ற எண்ணத்தை அவளும் ஒதுக்கி விட்டாள்.
இருவரும் இப்போது தான் இரண்டாவது முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அத்தனை பேச்சு வழக்கும் இல்லை. இருந்தும் இது எப்படி?
தன்னுடைய மனப் போக்கு என்ன இருவருமே புரியாமல் புரண்டு படுத்து உறங்கி விட்டனர்.
காலையில் அவள் கண் விழித்தபோது ....
தொடரும்...........
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.