• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 10

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
காண்பது எல்லாம் உனது உருவம் 10

மறுநாள் ஆஃபீஸ்க்கு வந்த விக்ரமனை பார்த்த வாசு "வா டா..அண்ணி எப்படி இருக்காங்க.."

"இப்ப சரியாகி கடையில் போய் உக்கார ஆரம்பிச்சிட்டாங்க.."

"உன் விவகாரம் எப்படி இருக்கு டா.."

"அதே கிணத்தில் போட்ட கல் தான் டா..சரி..என் கதையை விடு..வேலையை பார்க்கலாம் டா.."

அதை கேட்ட வாசுவுக்கு தான் எதாவது நடவடிக்கை எடுத்து இவர்களை சுமூகமாக்கி வாழ வைக்க வேண்டும் என தீர்மானம் வந்ததது.

"எனக்கு மதியம் கொஞ்சம் பர்சனலா வேலை இருக்கு..நான் போயிட்டு வந்திடறேன்.."

இத்தனை வருட பழக்கத்தில் அவன் அது போல இதுவரை எங்கேயும் போகாததால் யோசிக்காமல் விக்ரமனும் "சரி டா..போயிட்டு வா.." என்றான்.

சரியாக ஒரு மணிக்கு ரத்னாவின் ஆஃபீஸ்க்கு போய் சேர்ந்த வாசு அவளை அழைத்து உடனே அவளை பார்க்க வேண்டும் அரை நாள் லீவ் எடுத்து கொண்டு வர சொன்னான்.

வேகமாக வெளியே வந்த ரத்னா "என்னாச்சு அண்ணா..ஏதாவது முக்கியமான விஷயமா.."

"ஆமா மா..வா சொல்றேன்.." என தன் வீட்டுக்கு அழைத்து போனான்.

உள்ளே போய் உட்கார்ந்ததும் அவன் மனைவி ப்ரியா தண்ணீர் கொண்டு தந்தாள். மெல்ல அவளிடம் கண் ஜாடை காட்டி விட்டு வாசு சாப்பிட நகர்ந்தான்.

சாப்பிட்ட பின் ப்ரியா ரத்னாவிடம்
"உங்க அண்ணா உன் கிட்ட ஏதோ பேசணுமாம்..என்னனு கேளு.."

"சொல்லுங்க அண்ணா"

"இன்னும் எத்தனை நாள் தான் நீங்க ரெண்டு பேரும் கிழக்கும் மேற்குமா இருக்க போறீங்க மா.."

"என்ன சொல்றீங்க..எனக்கு புரியல அண்ணா.."

"எத்தனை வருஷம் தான் நீங்க பேசாமயே இருந்து காலத்தை ஓட்ட போறீங்க மா.."

"எல்லாம் உங்க ப்ரெண்ட் தான் காரணம் அண்ணா..என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணது அவர் இதுவரையில் பேசாம இருக்கறது அவர்..இதுல நான் என்ன பண்ணேன்..."

"அவன் உன்னை பிடிக்காது..
பிடிக்கலைனு எப்ப சொன்னான்.."

"அதான் கல்யாணத்துலயே பாத்தேனே..கல்லை முழுங்கின மாதிரி இருந்தாரே.."

"ஏன் நீ கூட தான் கல்யாணம் பிடிக்காத மாறி இருந்தே.."

"அண்ணா..உங்களுக்கு எங்க கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா..ஏதோ ஒரு சொந்தக்காரவங்க கல்யாணத்துல என்னை பத்தியும் என் வேலை பத்தியும் கேள்விப்பட்ட அத்தை உடனே தட்டு எடுத்துட்டு வந்து என் விருப்பத்தை கூட தெரிஞ்சுக்காம நிச்சயம் செஞ்சுட்டாங்க..அடுத்த ஒரே வாரத்துல கல்யாணமும் வெச்சிட்டாங்க.."

"எங்கம்மா அவங்க அண்ணியே நேர்ல வந்ததும் தலை காலே புரியல..உடனே தலையாட்டியாச்சு..
மாப்பிள்ளையை நேர்ல பாக்கணும், அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமானு கேக்கணும்னு நான் பல தடவைகள் சொன்னதை காதுலயே வெச்சுக்கல.."

"அவரோட போன் நம்பர் கூட குடுக்கல..அந்த கோவத்துல தான் நான் கல்யாணத்துல ஈடுபாடாவே இல்லை..அவர்க்கு என்ன வந்தது.."

"நீ உன் பக்கமே பாக்கறீயே..
விக்ரமன் பக்கத்தை பத்தியும் தெரிஞ்சுக்கோ..என்ன நடந்தது தெரியுமா.."

"அவன் அப்ப தான் ஜலந்தர் யூனிவர்சிட்டில அக்ரி லெக்சரரா சேர்ந்தான்..உங்க மாமியார் தனக்கு உடம்பு சீரியஸா இருக்குனு சொல்லி நாடகமாடி அவனை வரவழிச்சாங்க.."

"பயந்து போய் வந்தவனை உங்கத்தை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடிச்சாங்க..அவன் இப்ப கல்யாணம் வேணாம்..எனக்கு கொஞ்சம் டைம் குடுனு போராடினான்.."

"உங்கத்தை கல்யாணம் ஏற்பாடு பண்ணியாச்சு..இனி நின்னா எனக்கு தான் அவமானம்னு சொல்லி தூக்க மாத்திரை சாப்பிட்டு பயமுறுத்தவே அவன் பயங்கர வெறுப்போட தான் கல்யாணம் பண்ணான்.

"இது எல்லாம் எனக்கு தெரியாதே..அண்ணா..அவர் சொல்லி இருக்கலாம்ல்ல.."

"எப்படி சொல்வான்..நீ முகத்தை தூக்கி வெச்சிட்டு கல்யாணம் பண்ண பக்கத்துல உக்காந்திருந்தா பேச தோணுமா.."

"அவரும் அப்படி தானே உக்காந்திருந்தாரு..என்னை பிடிக்காம தானே கல்யாணம் பண்ணாரு..கல்யாணம் வேணாம்னு தானே சொன்னாரு.."

"அம்மா பரதேவதையே..இப்ப கல்யாணம் வேணாம்னு தான் சொன்னான்னு சொன்னேன்..
உன்னை பிடிக்கலைனு சொன்னான்னு சொன்னேனா?"

"ஐயோ..குழப்பறீங்களே அண்ணா அப்பறம் எதுக்கு உங்க ப்ரெண்ட் இத்தனை நாளா பேசாமயே இருக்காராம்.."

"அதை நீ அவன் கிட்ட தான் கேட்கணும் மா..விடாதே....அவன் கிட்ட ஈகோ பாக்காதே..பயலை அடிச்சு கூட கேளு..உனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு.."

"ஏற்கனவே ரெண்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு..எதுவா இருந்தாலும் இன்னும் காலத்தை கடத்தாம சீக்கிரமே பேசி குடும்பமா வாழ ஆரம்பிங்க.."

"ரத்னா நீ எங்களை உங்க கல்யாணத்துக்கு முன்னால எங்கயாவது பாத்திருக்கியா...
நல்லா யோசி.."

"இல்லயே அண்ணா..
நியாபத்துலேயே இல்லையே.."

"சில வருஷத்துக்கு முன்னால நாங்க காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பொண்ணு சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்து எதிர்ல மாடு முட்ட வந்ததும் பயந்து போய் எங்க வண்டி மேலே விழுந்திடுச்சு தெரியுமா.."

"அந்த பொண்ணை நாங்க தான் டாக்டர் கிட்ட கூப்பிட்டு போனோம்...
திரும்ப அவ வீட்டுக்கு கூப்பிட்டு போகும் போது கீழே விழுந்தது தெரிஞ்சா அப்பா திட்டுவாங்கனு பயந்து அழுதுக்கிட்டே வந்தா.."

"அப்ப என் ப்ரெண்ட் அவன் வந்தா திட்ட மாட்டாங்கனு சொன்னான்..
அதே மாறி அவ வீட்டுல அவளை திட்டவே இல்லை தெரியுமா.."

"அண்ணா..அது நீங்களா..உங்க கூட ஒருத்தர் இருந்தாரே..உங்களோட எங்க வீட்டுக்கு வந்து புது மாப்பிள்ளை மாறி உக்காந்திருந்தாரே..எங்கம்மா அவரை விழுந்து விழுந்து கவனிச்சாங்களே..இப்ப நியாபகத்துல வருது..அவர் எங்க இருக்காரு அண்ணா.."

"பாத்தியா..பாசமா தூக்கி விட்ட இந்த அண்ணன் நியாபகத்துல வரலை..ஆனா அவன் கூட வந்தவனை மறக்கவே இல்லை..எல்லாம் என் நேரம்.."

"தப்பா நினைக்காதீங்க அண்ணா..நீங்க அமைதியா இருந்தீங்க..உங்க ப்ரெண்ட் தான் அவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணாரே..அதான்..இப்ப எங்க இருக்காராம்.."

"சரி தான் போ..அண்ணனை தான் தெரியல..நீ வாழ்க்கை குடுத்து கூடவே இருக்கீயே..அவனை கூடவா தெரியல.."

"அவரா..இவரு..நம்பவே முடியல அண்ணா..அதுக்கு பிறகு நிறைய தடவைகள் கோவில்ல பாத்திருக்கேனே..இப்ப தான் தெரியுது.."

"அந்த லூசுப்பயலுக்கு அவன் அத்தை பொண்ணை பாக்கணும் ஆசை..அதுக்காக அவ போற இடத்துக்கு எல்லாம் போவான்..."

"ம்க்கூம் நல்லா பாத்தாரு..
விளையாடாதீங்க..நல்லா பொய் சொல்றீங்க அண்ணா..."

"நான் ஏன் பொய் சொல்லணும் சொல்லு..உங்க வீட்டுல அவன் பொக்கிஷம் எல்லாம் வெச்சிருக்கற பெட்டி இருக்கு தெரியுமா.."

"ஆமா அண்ணா..மேலே பரண்ல இருக்கும்..அதுல ஏதோ அவர் படிப்பு சம்பந்தப்பட்ட புஸ்தகம் எல்லாம் இருக்கு..கலைஞ்சா திட்டுவாரு..அதை எடுக்க கூடாதுனு துர்கா அக்கா சொல்லி இருக்காங்களே..."

"ஆமா..ஆமா..அதே தான்...அதுல தான் உங்க வாழ்க்கையோட ரகசியமே இருக்கு..யாராவது எடுத்து பார்த்தா விவகாரமாகிடும் அவன் அப்படி சொல்லி இருப்பான்.."

"நீ எடுத்து பாரு ரத்னா..எல்லாம் புரியும்...அவன் நாளைக்கு திருச்சி போறான்ல்ல வர்ற ரெண்டு நாளாகும்..பொக்கிஷத்தை பாரு..பார்த்துட்டு அப்பறம் அவனை பத்தி பேசு."

"சரி அண்ணா..நிச்சயம் பாக்கறேன்.."

"வந்தது தான் வந்தே..சாயந்திரம் வரைக்கும் இங்க இருந்துட்டு போ மா..நான் ஆஃபீஸ்க்கு கிளம்பறேன் மா.."

வாசு கிளம்பியதும் அவள் அருகில் வந்து உட்கார்ந்த ப்ரியா "விக்ரமனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..ரத்னா..இன்னும் சொல்லணும்னா அவன் உன்னை விரும்பினான்.."

"என்ன அண்ணி அடுத்தது நீங்களா..நல்லா பிரச்சாரம் பண்றீங்க.."

"விக்ரமன் அவனை பத்தி பேசவே பேசாதப்ப யாராவது அவன் சார்புல பேசணும்ல்ல..அது நாங்களா இருந்துட்டு போறோம்.."

"நீ தான் பொண்ணுனு அவனுக்கு தெரியாது..அவன் உன்னை விரும்பினதால வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு அவன் அம்மா கிட்ட அவ்ளோ சண்டை போட்டான்.."

"உனக்கு தாலி கட்டற வரைக்கும் நீ தான் அவன் பொண்டாட்டினு தெரியாது..உனக்கு எப்படி மாப்பிள்ளை கூட பேச விடாம இருந்ததோ..அதே தான் அவனுக்கும்.."

"அவன் பேசி எங்க கல்யாணம் நின்னுடுமோங்கற பயத்துல அவனோட அம்மா அவன் கிட்ட உன்னை பத்தின தகவல் எதுவுமே சொல்லல.."

"தாலி கட்டும் போது உன்னை பார்த்ததும் அவ்ளோ சந்தோஷமா தான் தாலி கட்டினான்..ஆனா உன் முகத்தை பார்த்ததும் தான் அவனை பிடிக்காம கல்யாணம் செஞ்சுக்கறியோனு நினைச்சு அவனும் தன் முகத்தை மாத்திக்கிட்டான்.."

"போங்க அண்ணி..இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு..ஒரே அடியா அவர் புகழ் பாடறிங்க.."

"புகழ் பாடல..அதுக்கான அவசியமும் எங்களுக்கு இல்லை..வாசுவை விட விக்ரமன் எனக்கு க்ளோஸ் ப்ரெண்ட்னு உனக்கே தெரியும்.."

"உன்னை விரும்ப ஆரம்பிச்ச உடனே மொதல்ல என் கிட்ட தான் வந்து சொன்னான்..நான் சொல்றதை நீ நம்ப வேணாம்..உங்க கல்யாண ஆல்பம் பாரு..உனக்கு புரியும்.."

"அவன் பொக்கிஷத்தை எடுத்து பாரு...புரியாத எல்லாமே உனக்கு தெரிஞ்சிடும்.."

"சரிங்க அண்ணி..நீங்க இத்தனை தடவை சொல்றதால நான் நாளைக்கு பாக்கறேன்.."

"பாத்துட்ட பிறகு என்ன மனநிலைல இருக்கேனு எனக்கு சொல்லு..சரி வா..கொஞ்சம் நேரம் தூங்கலாம்.."

"நிச்சயம் சொல்றேன்..எனக்கு மதியம் தூங்கி பழக்கமே இல்லை..நீங்க தூங்குங்க..
முக்கியமான ரிஜிஸ்ட்ரேஷன் ஒண்ணு இருக்கு..நான் ஆஃபீஸ்க்கு போய் ஆகணும் அண்ணி..
கெளம்பறேன்.."

"இரு..நானே உன்னை கொண்டு விடறேன்.."

சில நிமிடங்களில் கிளம்பிய ப்ரியா ரத்னாவை அழைத்து கொண்டு போய் ஆஃபீஸ் வாசலில் விட்டவள் "பேசினது எல்லாம் நியாபகத்துல இருக்கட்டும்.." என சொல்லி விட்டு தன் வீட்டுக்கு திரும்பினாள். (தொடரும்)
 

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பேசாமல் இருக்கும் போது
பேச ஒரு ஆள் வேண்டுமே...
சிறப்பாக பேசிவிட்டார்கள்...
சுயமாக யோசித்து
சுபமாக தொடங்கட்டும்
 
Top Bottom