அத்தியாயம் 4
மாத்திரைகளை விழுங்கிவிட்டு அறைக்குள் சென்ற மகனை வலியுடன் பார்த்திருந்தனர் சித்ராவும் சேதுவும்.
ஏழு மாதங்கள் ஆகிவிட்டது நிலா இவ்வுலகை விட்டுச் சென்று. கிருபாகரன் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.
அவளின் இறப்பு வரை தோல்வியின் வலி, இழப்பின் ரணம் என வேதனையின் சாயல் எதையுமே அறியாதவன். ஆனால் அவை இரண்டையும் ஒன்றாய் பரிசளித்துச் சென்றிருந்தாள் நிலா.
விபத்தின் பொழுது வாகனத்தில் இருந்து வெளியே விழுந்ததால் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவும் உடல் காயங்களும் முழுமையாய் குணமடைய மூன்றரை மாதங்கள் ஆனது. அதன் பின்னரும் சில தினங்கள் கழித்தே, மகனை வீட்டை விட்டு வெளியேற அனுமதித்தார் சித்ரா.
தேகம் சரியாகி விட்டபோதும், மனதின் இயக்கம் அந்நாளிலேயே நின்று போனது.
'தன்னைக் காப்பாற்றி விட்டு உயிரைத் துறந்தாளே தோழி!' என்ற வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து வந்தவனிற்குத் தெரிய வந்த விசயம், குற்ற உணர்விற்கு ஆளாக்கி விட்டது.
அறையின் கதவை மூடியவன் தனது அலமாரிக்குள் இருந்த பெட்டியை எடுத்தான். அவனின் பிறந்த தினத்தன்று காதலைத் தெரிவிப்பதற்காக, அவள் வைத்துச் சென்ற பரிசுப் பொருள் அது.
"இது கப்பிள் டீசர்ட் கிரு. ஒன்னு என்கிட்ட இருக்கு. இதை உனக்காக தந்திருக்கேன். எப்படி சொல்லுறதுனு தெரியல. என்னால டேரெக்டா சொல்லவும் முடியல. உனக்குப் புரியுதா.? ஓகேனா, போட்டுக்கோ. இல்லனா, ஒரு ஃப்ரெண்டோட கிஃப்டா நினைச்சுக்கோ. நீ போடணும்னு அவசியம் இல்ல. ஸாரி கிரு, பட் ஐ லவ் யூ!" என ஒரு கடிதத்துடன் அந்த உடையை வைத்திருந்தாள்.
முதன் முதலில் அதை வாசித்த பொழுதும், ஆடையைப் பார்த்த போதும் எப்படி உணர்ந்தான் என அவனிற்கே தெரியவில்லை. கண்ணீர்த் துளிகள் மட்டுமே வெளி வந்தன. உடனே உடுத்திக் கொண்டான். அன்று மட்டும் அல்ல, நாள் தவறாது சில நிமிடங்களாவது அதனை அணிவதை வாடிக்கையாய் மாற்றினான்.
இன்றும், சட்டையைக் கழட்டிவிட்டு அதை உடுத்தினான். 'அவளும் உடன் இணைந்து அணிந்து ஒன்றாய் புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்.?' என அனிச்சையாய்த் தோன்றியது.
கற்பனை செய்துதான் பார்க்க இயலும். நேரில் அதைச் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புதான் கிட்டாதே.? நிலாவின் காதலை அறிந்த அந்நொடியில் இருந்தே, அவளை நேசிக்கத் துவங்கி விட்டான். அதற்கு முன்னர் ஆடவனின் மனதில் பாவையின் நிலை யாதென அவனே சிந்தித்து இருக்கவில்லை.
_ _ _ _ _
வெளிப்பக்கம் கேட்ட பேச்சுக் குரல்களில் இமைகளைப் பிரித்தார் சுந்தரவல்லி. புரிந்து போயிற்று, அன்று தண்ணீர் வரும் தினம் என.
அங்கு, நான்கு நாட்களிற்கு ஒருமுறை மட்டுமே குழாயில் குடிநீர் வரும். அவரவர் வசதிக்குத் தக்கபடி இயந்திரத்தின் மூலமாகவோ அல்லது கையால் அடித்தோ நீரைப் பிடித்து வைத்துக் கொள்வர்.
அவர் ஒரு ஆள்தான். அதனால் பெரிதாய் நீரின் தேவை இருக்காது. அருந்துவதற்கும் சமைப்பதற்கும் மட்டுமே! அதையும் கூட தெரு குழாயிற்குச் சென்று குடத்தில் பிடிக்க அவசியம் இல்லை. மது அதனைச் செய்து விடுவாள்.
கழுத்தைத் திருப்பிச் சுவர் கடிகாரத்தைப் பார்க்க, மணி ஐந்தரை எனக் காட்டியது. முகத்தைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வர, வாயிலில் வண்ணப் பொடிகளால் பார்வை நிறைத்து காட்சியளித்தது மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது போலான கோலம்.
அன்றைய தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரரிற்குத் திருக்கல்யாணம். மதுரை மாநகருக்கே கொண்டாட்டம் தான். தங்களது குடும்பத்தில் திருமணம் நடைபெறுவது போல், ஒவ்வொருவரின் இல்லமும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும்.
தூங்கா நகரில் திருமணம் முடிந்த பெண்களில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கும் அதே நேரத்தில் தங்களின் தாலியையும் புதுக் கயிற்றில் மாற்றிக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.
அவ்வூரில் பிறந்து வேறு ஊருக்குத் திருமணம் ஆகிச் செல்லும் பெண்களுமே, இதனைக் கடைபிடிப்பர். அது மண்ணின் மணம் போலும். எங்கு சென்றாலும் அதன் வாசமும் உணர்வுகளும் மாற்றம் பெறுவது இல்லை. உயிரோடு ஒட்டிக் கொண்டு செல்லும்.
மீனாட்சிக்கு, காலை எட்டரையில் இருந்து ஒன்பது மணிக்கு உள்ளாக தாலிகட்டும் நிகழ்வு நடைபெறுவதால், அதற்குள்ளாக பணிகளை முடித்துவிடும் வேகத்தில் பெண்கள் அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்.
நேரில் திருமண நிகழ்வைக் காண்பவர்கள் தனி. அவர்கள் யாவரும் இருள் பிரியும் முன்னரே, மதுரோதய வளநாட்டு ஆலவாய் நாயனார் கோவிலிற்குச் சென்று விடுவர்.
கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் திருமண அரங்கம் தம்பதிகளால் நிறைந்திருக்கும். துணைவரால் உடன் வர இயலாது என்ற தவிர்க்க முடியாத சூழலில் தான் பெண்கள் மட்டுமாய் செல்வர்.
பொதுவாய், திருமணம் மற்றும் தாலிப் பெருக்கிக் கோர்க்கும் நாளில் மட்டுமே கணவரின் கைகளால் கழுத்தில் தாலியை வாங்கிக் கொள்ளும் அனுபவம் கிட்டும் பெண்களிற்கு. அதன் பின்னர் கயிறு மாற்றும் ஒவ்வொரு முறையும், அது கிடைக்கும் எனச் சொல்வதற்கு இல்லை. அவரவரின் சூழல் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும்.
இதை விடாமல் கடைபிடிப்பவர்களும் உண்டு. அதேநேரம் வாழ்வின் நடைமுறைகளில் அதுவும் ஒன்று என துணைவரை எதிர்பாராது தானாய் செய்து கொள்ளும் பெண்களும் உண்டு.
திருக்கல்யாணத்திற்குச் செல்பவர்கள், முதல் ரகம். ஒவ்வொரு வருடமும் கணவனின் கரத்தால் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்பவர்கள். கோவிலிற்குச் செல்லாது வீட்டில் இருக்கும் தம்பதியரிலும், அது போலான வழக்கம் கொண்டவர்கள் இருக்கின்றனர். எனினும் முதல் ரகத்தினரைப் போல் தீவிரமானவர்கள் இல்லை.
ஆனால் இந்த இரு ரகத்தினரிடமும் சேராதவர் சுந்தரவல்லி. பெயர் என்னவோ மீனாட்சிக்கு உரியது தான். இருந்தும் கிளியைத் தாங்கிய அவருக்கு ஆண்டுதோறும் கிட்டும் அந்த மகிழ்ச்சி நிறைந்த கொண்டாட்ட அனுபவம், சுந்தரவல்லியின் வாழ்வில் நிகழவே இல்லை.
நேசித்தவரை கணவரின் உறவில் அடைய வழி இல்லாது உள்ளத்தில் மட்டுமே சுமந்து, தனது வாழ்வைக் கழித்து வந்து விட்டார், அந்த எழுபது வயதைக் கடந்த முதிய கன்னி.
திருமணம் செய்யாது, தம்பதியருக்கு இடையேயான உறவு மற்றும் உணர்வுப் பகிர்தல் இல்லாது, பிரசவ வலி காணாது, தாய்மையின் நிலையை எட்டியவர்.
அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களிற்கு வல்லியம்மாவாய், வல்லி பாட்டியாய், வல்லி அம்மாச்சியாய், வல்லி அம்மாயியாய் அறிமுகமானவர் தான்.
முகம் அறியாத பலரும், அவரின் பெயரை அறிவர். அதற்கு இந்த தனியான வாழ்வும் ஒரு காரணம் எனலாம். எனினும் மூத்தவரின் குணம் மட்டுமே, அவருக்கான அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்துள்ளது இதுநாள் வரை.
"என்ன அம்மாச்சி, முழிச்சிட்டீங்களா?" என்றபடி இடைக்குக் கீழே நனைந்த உடையோடு வந்தாள் மது. இருபத்து நான்கு வயது யுவதி.
"தண்ணி பிடிக்கிறேன்ற பேர்ல துணியை நனைச்சிட்டியா.? எப்பவும் இதே வேலை தான் உனக்கு!" என உரைத்திட, "இது என்ன கொடுமையா இருக்கு? துணி நனையாம எப்படித் தண்ணி பிடிக்கிறதாம்.?" என்றாள் அவள்.
"ஏன் முடியாதா? நான் சொல்லித் தரவா.?"
"எப்பா எப்பா! வேணாம் வேணாம். எனக்கு இன்ஸ்டிடியூட்டுக்குப் போக நேரமாகிடுச்சு. அங்க போயிட்டு வந்து, தண்ணி குடத்தைத் தூக்கி அடுப்படியில வைக்கிறேன் அம்மாச்சி. நீங்க எதுவும் செய்யாதீங்க, சரியா?" என உரைத்தவாறே மார்பிற்குக் குறுக்காய்ப் போட்டு இடையைச் சுற்றி கட்டியிருந்த துப்பட்டாவை அவிழ்த்து, தோளில் போட்டுக் கொண்டு நடந்தாள்.
"ஏய் மது, செருப்பு போடாம போற?" என மூத்தவர் வினவிட, "தெருவெல்லாம் தண்ணி அம்மாச்சி. வழுக்கி விட்டுடும். பக்கத்துல தான?" என்று பதில் கொடுத்தபடியே நில்லாமல் சென்றாள்.
"துணியையும் மாத்தல. ஈரத்துல இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? வளர்ந்துட்டானு தான் பேரு. ஆனா அவ நல்லதுக்குனு ஏதாவது சொன்னா சுத்தமா கேட்கிறதே இல்ல!" எனத் தனக்குத்தானே பேசியவாறே அவர் உள்ளே செல்ல, மது தெருமுனையைத் தாண்டி இருந்தாள்.
'பாரதி தட்டச்சு பயிற்சி நிலையம்' என நீல பின்னணியில் வெள்ளை எழுத்துகளைத் தாங்கி நின்றது, அந்தப் பழைய கட்டிடம்.
வீடுதான் அது. வாடகைக்குப் பிடித்து பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார் ராதா கிருஷ்ணன்.
மேல் மாடியில் வீடு, இடதுபக்கம் மாலை நேரத்தில் மட்டுமே இயங்கும் சிறிய மருத்துவமனை, வலதுபுறம் எண்ணெய் கடை, எதிர்ப்பக்கம் பல்பொருள் மற்றும் பிளாஸ்டிக் அங்காடி என பரபரப்பான கரிமேடு கடைவீதிக்குள் இயங்கி வருகிறது பயிற்சி நிலையம்.
அதற்குத்தான் தற்போது வந்திருந்தாள் மது. காலை ஆறரை மணிக்கே தட்டச்சு செய்யும் ஒலி ஆரம்பித்துவிடும். இரவு பதினோரு மணி வரை நில்லாது கேட்கும். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகையைப் பொறுத்து சத்தத்தின் அளவீடில் ஏற்ற இறக்கமாய் மாறுபாடு இருக்கும்.
உள்ளே இருந்த மரப் பலகைகளை அங்கும் இங்குமாய் நகர்த்தி சுத்தம் செய்து, வெளி வாயிலிலும் நீர் தெளித்துக் கோலமிட்டு முடிக்க, சற்றுத் தள்ளியிருந்த பெருமாள் கோவிலில் கோவிந்தா முழக்கத்தோடு காலை நேர வழிபாடு துவங்கியது.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா.!" என ஆலயத்தில் இருந்து கசிந்த திருப்பல்லாண்டுடன் இணைந்து பாடியவாறே மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றாள்.
இது அவளின் தினசரி வாடிக்கை. பல வருடங்களாய் கேட்டுப் பழகியதால், நா தானாக பிரபந்தத்தைப் பாட ஆரம்பித்துவிடும்.
கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆகையால் வழியில் அதன் வாயிலிலேயே நின்று இரண்டு நொடிகள் கண்களை மூடி இறைவனை வணங்கிக் கொண்டாள்.
"சாமி." எனக் குரல் கொடுத்திட, அவளிற்காக எடுத்து வைத்திருந்த ஒரு தொன்னை சர்க்கரைப் பொங்கலையும் நான்கைந்து துளசி இலைகளையும் கொடுத்துச் சென்றார், கோவிலில் உலகளந்த பெருமாளிற்கு பூஜை செய்பவர்.
இதற்காகத்தான் ஈர உடையுடன் வருவதைப் பழக்கமாய் வைத்திருந்தாள். பணியை முடித்து பயிற்சி நிலையத்தில் இருந்து கிளம்பும் முன், முகம் மற்றும் கை கால்களை மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து கொள்வாள்.
வீட்டை அடையும் பொழுது பாதி தொன்னை காலியாகி, பொங்கல் அவளின் வயிற்றிற்கு இடம் பெயர்ந்து இருந்தது.
சுந்தரவல்லியின் இல்லத்தில் மூன்று நிறை குடங்களை வைத்துவிட்டு, தேநீரைக் கொதிக்க வைத்து இரண்டு டம்ளர்களில் ஊற்ற, சரியாய் தயாராகி வந்தார் ராதா கிருஷ்ணன்.
"மது, இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிட்டு வந்துட்டியா.?" என்றா கேட்டபடியே அவர் தேநீரை அருந்த, "ம்ம், ஆச்சுப்பா."
"இன்னைக்கு எதுவும் வேலை இருக்குதாமா உனக்கு.?"
"ஏன்ப்பா?"
"சேதுபதி ஸ்கூல்ல, வருச வருசம் திருக்கல்யாணத்துக்கும் தேரோட்டத்துக்கும் அன்னதானம் போடுவாங்க இல்ல.? உதவிக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க. நீ இருந்தா, நான் அங்க போயிட்டு வரலாம்னு பார்க்கிறேன்."
"நான் பார்த்துக்கிறேன். நீங்க எப்ப போகணும் ப்பா.?"
"ஏழு ஏழரைக்குப் போனா சரியா இருக்கும்!"
"சரி, நான் ஏழரைக்கு ஷார்ப்பா கிளாஸுக்கு வந்துடுறேன்." என்றதும் தலை அசைத்துவிட்டுக் கிளம்பினார்.
காலணிகளை அணிந்தவர் சற்றே நிதானித்து, "இன்னைக்கு எதுவும் சமைக்க வேணாம் மது. அங்க இருந்து உனக்குக் கொடுத்து விடுறேன்!"
"ஆள் இல்லனு தான உதவிக்குப் போறீங்க? இதுல, எனக்காகனு ஒரு ஆளை அனுப்புவீங்களா? நல்ல ஆளுப்பா நீங்க! எனக்குத் தேவையானதை நான் செஞ்சுக்கிறேன். அங்க வேலையைப் பாருங்க. என்ன சரியா?" என்றவள் காலியான தேநீர் டம்ளர்களுடன் சமையல் அறைக்குச் செல்ல, மகளின் பதிலில் புன்னகையுடன் வீட்டின் வெளிக்கதவை மூடிவிட்டு வீதியில் இறங்கி நடந்தார் ராதா கிருஷ்ணன்.
மாத்திரைகளை விழுங்கிவிட்டு அறைக்குள் சென்ற மகனை வலியுடன் பார்த்திருந்தனர் சித்ராவும் சேதுவும்.
ஏழு மாதங்கள் ஆகிவிட்டது நிலா இவ்வுலகை விட்டுச் சென்று. கிருபாகரன் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.
அவளின் இறப்பு வரை தோல்வியின் வலி, இழப்பின் ரணம் என வேதனையின் சாயல் எதையுமே அறியாதவன். ஆனால் அவை இரண்டையும் ஒன்றாய் பரிசளித்துச் சென்றிருந்தாள் நிலா.
விபத்தின் பொழுது வாகனத்தில் இருந்து வெளியே விழுந்ததால் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவும் உடல் காயங்களும் முழுமையாய் குணமடைய மூன்றரை மாதங்கள் ஆனது. அதன் பின்னரும் சில தினங்கள் கழித்தே, மகனை வீட்டை விட்டு வெளியேற அனுமதித்தார் சித்ரா.
தேகம் சரியாகி விட்டபோதும், மனதின் இயக்கம் அந்நாளிலேயே நின்று போனது.
'தன்னைக் காப்பாற்றி விட்டு உயிரைத் துறந்தாளே தோழி!' என்ற வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து வந்தவனிற்குத் தெரிய வந்த விசயம், குற்ற உணர்விற்கு ஆளாக்கி விட்டது.
அறையின் கதவை மூடியவன் தனது அலமாரிக்குள் இருந்த பெட்டியை எடுத்தான். அவனின் பிறந்த தினத்தன்று காதலைத் தெரிவிப்பதற்காக, அவள் வைத்துச் சென்ற பரிசுப் பொருள் அது.
"இது கப்பிள் டீசர்ட் கிரு. ஒன்னு என்கிட்ட இருக்கு. இதை உனக்காக தந்திருக்கேன். எப்படி சொல்லுறதுனு தெரியல. என்னால டேரெக்டா சொல்லவும் முடியல. உனக்குப் புரியுதா.? ஓகேனா, போட்டுக்கோ. இல்லனா, ஒரு ஃப்ரெண்டோட கிஃப்டா நினைச்சுக்கோ. நீ போடணும்னு அவசியம் இல்ல. ஸாரி கிரு, பட் ஐ லவ் யூ!" என ஒரு கடிதத்துடன் அந்த உடையை வைத்திருந்தாள்.
முதன் முதலில் அதை வாசித்த பொழுதும், ஆடையைப் பார்த்த போதும் எப்படி உணர்ந்தான் என அவனிற்கே தெரியவில்லை. கண்ணீர்த் துளிகள் மட்டுமே வெளி வந்தன. உடனே உடுத்திக் கொண்டான். அன்று மட்டும் அல்ல, நாள் தவறாது சில நிமிடங்களாவது அதனை அணிவதை வாடிக்கையாய் மாற்றினான்.
இன்றும், சட்டையைக் கழட்டிவிட்டு அதை உடுத்தினான். 'அவளும் உடன் இணைந்து அணிந்து ஒன்றாய் புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்.?' என அனிச்சையாய்த் தோன்றியது.
கற்பனை செய்துதான் பார்க்க இயலும். நேரில் அதைச் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புதான் கிட்டாதே.? நிலாவின் காதலை அறிந்த அந்நொடியில் இருந்தே, அவளை நேசிக்கத் துவங்கி விட்டான். அதற்கு முன்னர் ஆடவனின் மனதில் பாவையின் நிலை யாதென அவனே சிந்தித்து இருக்கவில்லை.
_ _ _ _ _
வெளிப்பக்கம் கேட்ட பேச்சுக் குரல்களில் இமைகளைப் பிரித்தார் சுந்தரவல்லி. புரிந்து போயிற்று, அன்று தண்ணீர் வரும் தினம் என.
அங்கு, நான்கு நாட்களிற்கு ஒருமுறை மட்டுமே குழாயில் குடிநீர் வரும். அவரவர் வசதிக்குத் தக்கபடி இயந்திரத்தின் மூலமாகவோ அல்லது கையால் அடித்தோ நீரைப் பிடித்து வைத்துக் கொள்வர்.
அவர் ஒரு ஆள்தான். அதனால் பெரிதாய் நீரின் தேவை இருக்காது. அருந்துவதற்கும் சமைப்பதற்கும் மட்டுமே! அதையும் கூட தெரு குழாயிற்குச் சென்று குடத்தில் பிடிக்க அவசியம் இல்லை. மது அதனைச் செய்து விடுவாள்.
கழுத்தைத் திருப்பிச் சுவர் கடிகாரத்தைப் பார்க்க, மணி ஐந்தரை எனக் காட்டியது. முகத்தைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வர, வாயிலில் வண்ணப் பொடிகளால் பார்வை நிறைத்து காட்சியளித்தது மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வது போலான கோலம்.
அன்றைய தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரரிற்குத் திருக்கல்யாணம். மதுரை மாநகருக்கே கொண்டாட்டம் தான். தங்களது குடும்பத்தில் திருமணம் நடைபெறுவது போல், ஒவ்வொருவரின் இல்லமும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும்.
தூங்கா நகரில் திருமணம் முடிந்த பெண்களில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கும் அதே நேரத்தில் தங்களின் தாலியையும் புதுக் கயிற்றில் மாற்றிக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்.
அவ்வூரில் பிறந்து வேறு ஊருக்குத் திருமணம் ஆகிச் செல்லும் பெண்களுமே, இதனைக் கடைபிடிப்பர். அது மண்ணின் மணம் போலும். எங்கு சென்றாலும் அதன் வாசமும் உணர்வுகளும் மாற்றம் பெறுவது இல்லை. உயிரோடு ஒட்டிக் கொண்டு செல்லும்.
மீனாட்சிக்கு, காலை எட்டரையில் இருந்து ஒன்பது மணிக்கு உள்ளாக தாலிகட்டும் நிகழ்வு நடைபெறுவதால், அதற்குள்ளாக பணிகளை முடித்துவிடும் வேகத்தில் பெண்கள் அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்.
நேரில் திருமண நிகழ்வைக் காண்பவர்கள் தனி. அவர்கள் யாவரும் இருள் பிரியும் முன்னரே, மதுரோதய வளநாட்டு ஆலவாய் நாயனார் கோவிலிற்குச் சென்று விடுவர்.
கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் திருமண அரங்கம் தம்பதிகளால் நிறைந்திருக்கும். துணைவரால் உடன் வர இயலாது என்ற தவிர்க்க முடியாத சூழலில் தான் பெண்கள் மட்டுமாய் செல்வர்.
பொதுவாய், திருமணம் மற்றும் தாலிப் பெருக்கிக் கோர்க்கும் நாளில் மட்டுமே கணவரின் கைகளால் கழுத்தில் தாலியை வாங்கிக் கொள்ளும் அனுபவம் கிட்டும் பெண்களிற்கு. அதன் பின்னர் கயிறு மாற்றும் ஒவ்வொரு முறையும், அது கிடைக்கும் எனச் சொல்வதற்கு இல்லை. அவரவரின் சூழல் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும்.
இதை விடாமல் கடைபிடிப்பவர்களும் உண்டு. அதேநேரம் வாழ்வின் நடைமுறைகளில் அதுவும் ஒன்று என துணைவரை எதிர்பாராது தானாய் செய்து கொள்ளும் பெண்களும் உண்டு.
திருக்கல்யாணத்திற்குச் செல்பவர்கள், முதல் ரகம். ஒவ்வொரு வருடமும் கணவனின் கரத்தால் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்பவர்கள். கோவிலிற்குச் செல்லாது வீட்டில் இருக்கும் தம்பதியரிலும், அது போலான வழக்கம் கொண்டவர்கள் இருக்கின்றனர். எனினும் முதல் ரகத்தினரைப் போல் தீவிரமானவர்கள் இல்லை.
ஆனால் இந்த இரு ரகத்தினரிடமும் சேராதவர் சுந்தரவல்லி. பெயர் என்னவோ மீனாட்சிக்கு உரியது தான். இருந்தும் கிளியைத் தாங்கிய அவருக்கு ஆண்டுதோறும் கிட்டும் அந்த மகிழ்ச்சி நிறைந்த கொண்டாட்ட அனுபவம், சுந்தரவல்லியின் வாழ்வில் நிகழவே இல்லை.
நேசித்தவரை கணவரின் உறவில் அடைய வழி இல்லாது உள்ளத்தில் மட்டுமே சுமந்து, தனது வாழ்வைக் கழித்து வந்து விட்டார், அந்த எழுபது வயதைக் கடந்த முதிய கன்னி.
திருமணம் செய்யாது, தம்பதியருக்கு இடையேயான உறவு மற்றும் உணர்வுப் பகிர்தல் இல்லாது, பிரசவ வலி காணாது, தாய்மையின் நிலையை எட்டியவர்.
அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களிற்கு வல்லியம்மாவாய், வல்லி பாட்டியாய், வல்லி அம்மாச்சியாய், வல்லி அம்மாயியாய் அறிமுகமானவர் தான்.
முகம் அறியாத பலரும், அவரின் பெயரை அறிவர். அதற்கு இந்த தனியான வாழ்வும் ஒரு காரணம் எனலாம். எனினும் மூத்தவரின் குணம் மட்டுமே, அவருக்கான அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்துள்ளது இதுநாள் வரை.
"என்ன அம்மாச்சி, முழிச்சிட்டீங்களா?" என்றபடி இடைக்குக் கீழே நனைந்த உடையோடு வந்தாள் மது. இருபத்து நான்கு வயது யுவதி.
"தண்ணி பிடிக்கிறேன்ற பேர்ல துணியை நனைச்சிட்டியா.? எப்பவும் இதே வேலை தான் உனக்கு!" என உரைத்திட, "இது என்ன கொடுமையா இருக்கு? துணி நனையாம எப்படித் தண்ணி பிடிக்கிறதாம்.?" என்றாள் அவள்.
"ஏன் முடியாதா? நான் சொல்லித் தரவா.?"
"எப்பா எப்பா! வேணாம் வேணாம். எனக்கு இன்ஸ்டிடியூட்டுக்குப் போக நேரமாகிடுச்சு. அங்க போயிட்டு வந்து, தண்ணி குடத்தைத் தூக்கி அடுப்படியில வைக்கிறேன் அம்மாச்சி. நீங்க எதுவும் செய்யாதீங்க, சரியா?" என உரைத்தவாறே மார்பிற்குக் குறுக்காய்ப் போட்டு இடையைச் சுற்றி கட்டியிருந்த துப்பட்டாவை அவிழ்த்து, தோளில் போட்டுக் கொண்டு நடந்தாள்.
"ஏய் மது, செருப்பு போடாம போற?" என மூத்தவர் வினவிட, "தெருவெல்லாம் தண்ணி அம்மாச்சி. வழுக்கி விட்டுடும். பக்கத்துல தான?" என்று பதில் கொடுத்தபடியே நில்லாமல் சென்றாள்.
"துணியையும் மாத்தல. ஈரத்துல இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? வளர்ந்துட்டானு தான் பேரு. ஆனா அவ நல்லதுக்குனு ஏதாவது சொன்னா சுத்தமா கேட்கிறதே இல்ல!" எனத் தனக்குத்தானே பேசியவாறே அவர் உள்ளே செல்ல, மது தெருமுனையைத் தாண்டி இருந்தாள்.
'பாரதி தட்டச்சு பயிற்சி நிலையம்' என நீல பின்னணியில் வெள்ளை எழுத்துகளைத் தாங்கி நின்றது, அந்தப் பழைய கட்டிடம்.
வீடுதான் அது. வாடகைக்குப் பிடித்து பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார் ராதா கிருஷ்ணன்.
மேல் மாடியில் வீடு, இடதுபக்கம் மாலை நேரத்தில் மட்டுமே இயங்கும் சிறிய மருத்துவமனை, வலதுபுறம் எண்ணெய் கடை, எதிர்ப்பக்கம் பல்பொருள் மற்றும் பிளாஸ்டிக் அங்காடி என பரபரப்பான கரிமேடு கடைவீதிக்குள் இயங்கி வருகிறது பயிற்சி நிலையம்.
அதற்குத்தான் தற்போது வந்திருந்தாள் மது. காலை ஆறரை மணிக்கே தட்டச்சு செய்யும் ஒலி ஆரம்பித்துவிடும். இரவு பதினோரு மணி வரை நில்லாது கேட்கும். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகையைப் பொறுத்து சத்தத்தின் அளவீடில் ஏற்ற இறக்கமாய் மாறுபாடு இருக்கும்.
உள்ளே இருந்த மரப் பலகைகளை அங்கும் இங்குமாய் நகர்த்தி சுத்தம் செய்து, வெளி வாயிலிலும் நீர் தெளித்துக் கோலமிட்டு முடிக்க, சற்றுத் தள்ளியிருந்த பெருமாள் கோவிலில் கோவிந்தா முழக்கத்தோடு காலை நேர வழிபாடு துவங்கியது.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா.!" என ஆலயத்தில் இருந்து கசிந்த திருப்பல்லாண்டுடன் இணைந்து பாடியவாறே மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றாள்.
இது அவளின் தினசரி வாடிக்கை. பல வருடங்களாய் கேட்டுப் பழகியதால், நா தானாக பிரபந்தத்தைப் பாட ஆரம்பித்துவிடும்.
கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆகையால் வழியில் அதன் வாயிலிலேயே நின்று இரண்டு நொடிகள் கண்களை மூடி இறைவனை வணங்கிக் கொண்டாள்.
"சாமி." எனக் குரல் கொடுத்திட, அவளிற்காக எடுத்து வைத்திருந்த ஒரு தொன்னை சர்க்கரைப் பொங்கலையும் நான்கைந்து துளசி இலைகளையும் கொடுத்துச் சென்றார், கோவிலில் உலகளந்த பெருமாளிற்கு பூஜை செய்பவர்.
இதற்காகத்தான் ஈர உடையுடன் வருவதைப் பழக்கமாய் வைத்திருந்தாள். பணியை முடித்து பயிற்சி நிலையத்தில் இருந்து கிளம்பும் முன், முகம் மற்றும் கை கால்களை மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து கொள்வாள்.
வீட்டை அடையும் பொழுது பாதி தொன்னை காலியாகி, பொங்கல் அவளின் வயிற்றிற்கு இடம் பெயர்ந்து இருந்தது.
சுந்தரவல்லியின் இல்லத்தில் மூன்று நிறை குடங்களை வைத்துவிட்டு, தேநீரைக் கொதிக்க வைத்து இரண்டு டம்ளர்களில் ஊற்ற, சரியாய் தயாராகி வந்தார் ராதா கிருஷ்ணன்.
"மது, இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிட்டு வந்துட்டியா.?" என்றா கேட்டபடியே அவர் தேநீரை அருந்த, "ம்ம், ஆச்சுப்பா."
"இன்னைக்கு எதுவும் வேலை இருக்குதாமா உனக்கு.?"
"ஏன்ப்பா?"
"சேதுபதி ஸ்கூல்ல, வருச வருசம் திருக்கல்யாணத்துக்கும் தேரோட்டத்துக்கும் அன்னதானம் போடுவாங்க இல்ல.? உதவிக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க. நீ இருந்தா, நான் அங்க போயிட்டு வரலாம்னு பார்க்கிறேன்."
"நான் பார்த்துக்கிறேன். நீங்க எப்ப போகணும் ப்பா.?"
"ஏழு ஏழரைக்குப் போனா சரியா இருக்கும்!"
"சரி, நான் ஏழரைக்கு ஷார்ப்பா கிளாஸுக்கு வந்துடுறேன்." என்றதும் தலை அசைத்துவிட்டுக் கிளம்பினார்.
காலணிகளை அணிந்தவர் சற்றே நிதானித்து, "இன்னைக்கு எதுவும் சமைக்க வேணாம் மது. அங்க இருந்து உனக்குக் கொடுத்து விடுறேன்!"
"ஆள் இல்லனு தான உதவிக்குப் போறீங்க? இதுல, எனக்காகனு ஒரு ஆளை அனுப்புவீங்களா? நல்ல ஆளுப்பா நீங்க! எனக்குத் தேவையானதை நான் செஞ்சுக்கிறேன். அங்க வேலையைப் பாருங்க. என்ன சரியா?" என்றவள் காலியான தேநீர் டம்ளர்களுடன் சமையல் அறைக்குச் செல்ல, மகளின் பதிலில் புன்னகையுடன் வீட்டின் வெளிக்கதவை மூடிவிட்டு வீதியில் இறங்கி நடந்தார் ராதா கிருஷ்ணன்.
Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அறம் பொருள் இன்பம் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.