Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள்- 9
அன்னைக்கு உடல் நலமில்லை என்று ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்த இனியா அலுவலகத்திற்கு சென்றாள் புது திருமாங்கல்யக் கயிற்றுடன் . அலுவலகத்தில் மற்றவர்களுக்கு அது ஒரு பேசும் பொருளாக தான் இருந்தது . பொதுவாகவே மற்றவர்களுடன் கலகலப்பாக பேசும் ரகம் இனியா இல்லை என்பதாலோ என்னவோ யாரும் அவளிடம் பெரியதாக எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளுக்கு கல்லூரி நாள் முதல் இப்போது வரை இருக்கும் ஒரேத் தோழி குழலி தான்.
அதுவே எப்போது அவள் தனக்கு கையெழுத்து போட வர முடியுமா என்று கேட்டாளோ அப்போதே குழலி பேச்சை நிறுத்திக் கொண்டாள் .
"சீ! அம்மாவுக்கு இப்படி உடம்பு சரி இல்ல. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணி இருக்காங்க அந்த நேரத்துல போய் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு வந்து கையெழுத்து போடுன்னு கேட்கிற. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? உங்க அம்மா உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க? எனக்கு தெரியும். உனக்கு ஏண்டி தெரியல? எத்தன வருஷமா அவங்க எத்தனை கஷ்டப்பட்டு உங்க மூணு பசங்களையும் ஆளாக்கினாங்க. இன்னிக்கு இப்படி வந்து நிக்கறியே. அவங்க கண்ணுலேர்ந்து ஒரே ஒரு சொட்டு கண்ணீர் வந்தாக் கூட உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காது.
முதலில் பொறிந்தவள், பிறகு தன்னை அடக்கிக் கொண்டு கெஞ்சிப் பார்த்தாள்.
" இப்ப இது வேணாம். ப்ளீஸ்! கொஞ்சம் பொறுமையா இரு. அவங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்கு அப்புறம் நீங்க என்ன வேணுன்னாலும் முடிவு பண்ணுங்க. இப்ப இது தப்பு" எத்தனையோ கெஞ்சினாள்.
"என்ன குழலி உன்கிட்ட உதவி கேட்டதுக்கு சாபம் குடுக்கறியா? நீ மட்டும் இல்ல அந்தக் கடவுளே வந்து நின்றாலும் எங்களோட கலயாணத்தை தடுக்க முடியாது. சொன்ன படியே எங்க மாமா எனக்கு தாலி காட்டுவார். முடிஞ்சா காலைல வந்து சேரு. நல்ல ஹோட்டல்ல வடை பாயசத்தோட சோறு போடறேன். "
"நீ எல்லாம் ஒரு ஜென்மமாடி. உங்க அம்மாவுக்காக நான் பேசிக்கிட்டிருக்கேன். உங்கம்மா வலிக்க வலிக்க உன்னை பெத்து, சோறு போட்டு வளத்ததுக்கு ஒரு நாய்க்கு சோறு போட்டு வளர்த்திருந்தா கூட அது கொஞ்சமாவது நன்றியோடு இருந்திருக்கும். பாசமும் இல்ல. நன்றியும் இல்ல. நீயெல்லாம் ஒரு மனுஷியா? உன் கூட இத்தனை வருஷமா சிரிச்சு பேசி பழகி இருக்கேன்னு நினைக்கும்போது என்ன நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. நீ எல்லாம் ஒரு ஜென்மம்? தூ !"
காரி துப்பியவள் அப்படியே போனை வைத்து விட்டாள் .
புது மஞ்சள் கயிற்றுடன் முகமெங்கும் மஞ்சள் பூசி அதிலே சிறு வெட்கம் கலந்து முக சிகப்புடன் வந்த தோழியை பார்க்கபி பார்க்க குழலிக்கு வயிறு எரிந்தது . இருக்கும் கோபத்தில் எங்கே அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ என்று பயந்து கொண்டு குழலி இனியாவை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள் . அலுவலகத்தில் பேசி தன்னுடைய இடத்தையும் மாற்றிக்கொண்டு சென்று விட்டாள் வேறுதளத்திற்கு .
இனியா பெற்ற அன்னையை பார்க்க கூட முடியாத நிலையில் இருந்த போது குழலி உரிமையாக அருணாவை சென்று பார்த்தாள் . குழலிக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை . ஆனால் அருணா தான் மனம் கேட்காமல் குழலியிடம் அவ்வப்போது இனியா எப்படி இருக்கிறாள் என்று கேட்டுக் கொள்வாள் .
"ஏம்மா ! உங்களை விட்டுட்டு போன போதும் நீங்க அவளை நினைத்து கஷ்டப்படுறீங்களே "
"என்னமா பண்றது? எத்தனை பிள்ளைகளை பெற்றாலும் பெத்தவளுக்கு அத்தனையும் குழந்தைகள் தானே மா ?"
"ஆனா ஆன்ட்டி ! எப்ப இந்த மாதிரி செல்பிஷா நடந்துக்கிட்டாளோ , அதுக்கு மேல என்னால அவ மூஞ்சிய பார்த்து பேசக்கூட முடியாது. என்ன தப்பா நினைக்காதீங்க . உண்மையச் சொல்லணுன்னா இப்பலாம் அவளை பார்க்கிறது கூட இல்லை நான் என்னுடைய இடத்தை வேற இடத்துக்கு மாத்திகிட்டேன் ."
பார்ப்பதில்லை என்பதை விடவும் அவளுக்கு பார்க்க விருப்பமில்லை என்பதை அவள் தயங்கித் தயங்கி சொன்ன விதத்திலேயே அருணாவுக்குப் புரிந்து விட்டது. மற்றவர்கள் விட்டு விடலாம். தன்னால் முடியுமா?
"சரிமா ! அது உன் விருப்பம். ஆனா அப்பப்ப அவள பத்தி விசாரிச்சுகோமா .ஏன்னா அவ புகுந்த வீடு அப்படி .
"சரி ஆன்ட்டி!" மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள் குழலி.
==================================================================================
இனியா மாலையில் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்வாள் . எந்த வேலையும் இல்லாமல் இருந்த நல்லவன், முன் போல இப்போது எல்லாம் அவளை அழைத்து வரக்கூட வருவதில்லை . முன்பெல்லாம் அவளையேச் சுற்றிச் சுற்றி வந்தவன் இப்போது வேலை முடிந்து விட்டதால் கவலை இல்லையோ ? "எங்க போய்ட போறா கழுதை" என்ற இளக்காரம் தான் காரணமோ .
ஆனால் அவள் வீட்டுக்குள் நுழையும்போது அப்படியே தன்னை மாற்றிக் கொள்வான் .
"கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன்" என்று கொஞ்சி குழைவான் .
பதிலுக்கு அவளும் "எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே" என்று அவனை கொஞ்சுவாள் .
"நல்லி மாமனுக்கு ஒரு டீ போட்டு குடுடீ . எப்ப நீ வர போறன்னு காத்திருந்தேன் . "
இடுப்பைக் கட்டிக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்துக் கொள்வார்கள்.
"டீ தானே ! நீங்க போட்டுக் வேண்டியது தானே?
கேட்கத் தெரியவில்லை.
"என்ன என் தங்கத்துக்கு அவ்ளோ டயர்டா? அவளும் கன்னத்தில் உள்ளங்கை வைத்துக் கொஞ்சுவாள் .
உள்ளே நுழைந்தால் நுழைந்ததுதான் . காலையில் இவள் அத்தனை வேலைகளையும் செய்து வைத்து விட்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு தான் கிளம்புவாள். இருப்பினும் மாலையில் இவள் வந்து பார்க்கும் பொழுது அத்தனை கலவரமாக இருக்கும் . பார்வதி எப்போதும் அப்படித்தான் கட்டு செட்டாக வேலை பண்ண தெரியாது. பணமாக இருந்தாலும் அப்படித்தான் பாத்திரமாக இருந்தாலும் அப்படித்தான் எல்லாம் வாரி இறைத்து உபயோகப்படுத்துவாள் . உணவுப் பொருட்களும் கொட்டி இருந்தாலும் துடைக்கும் வழக்கம் இருந்ததில்லை . அதனாலேயே தீபா,
" ஐயைய! அத்தை வீட்டுக்கு நான் வரல என்று ஒதுங்கிக் கொள்வாள் . சிறு வயது முதல் பழக்கப்பட்டிருந்த வளுக்கு இப்போது அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை அதுவும் முதலில் சில வாரங்களுக்கு தான் . அலுவலகத்தில் அவளுக்கு புதிதாக கொடுக்கப்பட்டிருந்த வேலையினால் மிகவும் சொர்ந்து போய் வர ஆரம்பித்தாள் . வேலை பளு அதிகமாக ஆரம்பித்தது . சம்பளம் மட்டும் அதிகம் வேண்டும் வேலை மட்டும் அதே வேண்டும் என்றால் நடக்கும் காரியமா ? அடுத்த சில நாட்களில் அவளுக்கு வீட்டுக்கு வரும்போது எரிச்சல் வர தொடங்கியது . அன்னை வீடு விடவும் மாமியார் வீடு இன்னும் அதிக தொலைவு என்பதுவும் ஒரு முக்கிய காரணம்.
பேருந்தில், எங்கிருந்தோ நசுங்கி பிழிந்து இறங்கி நடந்து வர வேண்டும் .
" மாமா எனக்கு கொஞ்சம் பஸ் ஸ்டாப்பில் வந்து கூட்டிட்டு போறீங்களா ?:
"அச்சோ சாரி மல்லி! நான் பிரண்டோட இங்க வெளியில் வந்து இருக்கேன் மா. நீயே போயிடுமா "
தினமும் இதேதான் .
முதலில் ஏற்றுக் கொண்டவளுக்கு இப்போதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
'அப்படி என்ன வெட்டி முறைக்கிற அப்படியே கொண்டு வந்து குடும்பத்துக்கு லட்சம் லட்சமா கொட்டற மாதிரி. வேலை வெட்டி எதுக்கும் போகறது இல்ல அப்புறம் என்ன பிரண்டோட அங்க இருக்கேன் எங்க இருக்கேன் ?" மனதில் நினைத்ததை நேரே வந்து கணவனிடமும் கேட்டால் அப்போதிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை . ஆசை 60 நாள் மோகம் 30 நாள் முடிந்து விட்டதா . இல்லையே ! பிறகு எப்படி ? பண பிரச்சினை என்று வந்துவிட்டால் எந்த கணக்கும் இல்லை . ஒரு மாதம் தான் . பிறகு வந்த நாட்களில் அவளுக்கே தெரியாமல் அவளது கைப்பை காலியாக ஆரம்பித்தது . ஒரு நிலையில் தனக்கு பேருந்துக்கு வேண்டும் என்று அவசரத்திற்கு வைத்திருந்த ஒற்றை நூறு ரூபாய் அவளை பார்த்து சிரித்தது .
தேதி 20 . இன்னும் பத்து நாட்கள் ஓட்ட வேண்டும் . எப்போதுமே அருணாவுக்கு முதல் செலவு சேமிப்பு தான் . இவளுக்கு அந்த பழக்கம் எப்போதுமே கிடையாது . பணம் வேண்டும் என்று கேட்டதற்கு வார்த்தைகள் தாறுமாறாக வந்தன. மாமியார் இனியா என்கிட்ட வந்து கேட்கிற? எனக்கே நீ தான் தரணும் என்ற நிலையில் இவளுக்கு ஐயோ என்று வந்தது இதுதான் முதல் முறை .
தன்னுடைய பணம் எல்லாம் எங்கே போயிற்று யோசித்துப் பார்த்தால் கொடுமை. செலவு என்று பார்த்தால் கூட அப்படி என்றெல்லாம் பெரியதாக ஆகிவிடவில்லை அதுவே கணவன் அன்று எனக்கு 50 கொடு 100 கொடு 200 கொடு என்று கேட்டு கேட்டு வாங்கியதால் தான் என்று அவள் கையில் பணம் இல்லாமல் நிற்கிறாள் . திருமணமான இரண்டே மாதங்களில் அலுவலகத்தில் கடன் வாங்க ஆரம்பித்து இருந்தாள் . ஒற்றை ரூபாய் கேட்பதற்கு கூனிக்குறுகி விட்டாள்.
வீட்டில் அது பெரிய பிரச்சினையாக மாறிய நின்றது. வேலைக்கு போறேன்னு சொல்லி காமிக்கிரியா ?
"நான் சொல்லி காமிக்கலங்க நீங்களும் வேலைக்கு போகணும்னு சொல்லறேன்."
" ஏன் நான் வேலைக்கு போகாத வெட்டி பையன்னு தெரிஞ்சு தானே வீட்டை விட்டு ஓடி வந்த ?"
அவனின் அந்த வார்த்தை அவளுக்கு சுளிர் என்று இருந்தது . இதுதானே ஆரம்பம் இன்னும் இருக்கிறது நிறைய இருக்கிறது எல்லாவற்றையும் இனியா பார்க்க வேண்டும் இனியா மட்டும் அல்ல இனியாவை போல குடும்பத்தை விட்டு விட்டு யாரோ ஒருவரை நம்பி செல்லும் பல பெண்களின் நிலை இதுதான் . ஏதோ ஒரு சிலர் நன்றாக வாழலாம் அனைவரும் அப்படி அல்ல புரிந்து கொள்வாள் இனியா.
=≈==================================
இதோ அரசாங்க பிணக்கிடங்கில் நின்று கொண்டிருக்கிறான் கரிகாலன். ரூபாவின் உடலை வாங்க . அன்று கரிகாலனை சந்தித்ததற்கு பிறகு ரூபாவிடம் பல மாறுதல் இதற்குப் பிறகும் தான் எதற்காக உயிருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் இன்னொரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என்று ஏஜென்ட் மூலம் ஒவ்வொரு இடமாக அவளை அழைத்துச் செல்லும் போது எதிரில் வந்த லாரியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான் . அன்று கரிகாலன் அந்த காவல் அதிகாரியை சென்று பார்த்ததினால் இவனிடம் ரூபாவின் பிணம் ஒப்படைக்கப்பட்டது . ரூபாவின் பெற்றோருக்கு அழைத்த போது அவர்கள் வெளிநாட்டில் இருந்தார்கள் . மகள் அசிங்கப்படுத்திவிட்டு சென்றதற்கு பிறகு எந்த சொந்தங்களையும் பார்க்க திராணி இல்லாதவர்கள் வேறு எங்கோ சென்று ஓடி ஒளிந்து கொண்டார்கள் . கரிகாலன் தான் ரூபாவுக்கு கொள்ளி வைத்தான் . செயற்கை முறையில் அழகாக்க பட்டிருந்த முகம் கோரமாகி இருந்தது . அன்று ஆசைப்பட்ட முகத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை முதன்முதலாக கையில் ஏந்தியவன் கைகளில் இப்போது பானையில் சாம்பலாக இருந்தாள் ரூபா . அவள் பெண்ணாக இருந்தபோதும் சரி அல்லது சாம்பலாக இருந்த போதும் அவனின் நேசம் மட்டும் மாறவில்லை . அவள் மோசமாக நடந்துக் கொண்ட போதும் என் மனமும் உடலும் உன் ஒருத்திக்குத் தான் என்று வாழ்ந்தவன் , அவளின் சாம்பலை சென்று கடற்கரையில் கரைத்து விட்டு வந்தான். தந்தையின் சாம்பலை கரைத்த போது கூட அவன் மனம் இத்தனை வேதனை படவில்லை. ரூபா. கண்ணுல தெரிந்து அவளை காப்பற்ற முடியாத பாவியாகி விட்டேனே என்று குற்ற உணர்வு அவனை வாழவும் விடவில்லை. சில நாட்கள் கழித்து ஏதோ தோன்ற அப்பு படத்தைப் பாத்தான்.
ரூபா சொன்னது புரிந்தது. இவர்கள் எத்தனை மோசமானவர்கள். ஏதோ ஒரு முறையில் அவளை நான் மீட்டுக் கொண்டு வந்தாலும் எப்போதுமே அவர்கள் அவள் வாழ விடமாட்டார்கள் . தெரிந்து தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். மனம் சமாதானமாகவில்லை. தந்தை இறந்த பிறகும் தனக்காக உயிரை வைத்துக் கொண்டிருக்கும் தாய்க்காக தான் வாழ வேண்டும். தன்னை சமாதானம் செய்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருக்கிறான். அவன் வாழ்வை மாற்ற நிச்சயம் ஒரு தேவதை தேவை. இனியாவா? அல்லது வேறு யாராவதா?
தொடரும்....
அன்னைக்கு உடல் நலமில்லை என்று ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்த இனியா அலுவலகத்திற்கு சென்றாள் புது திருமாங்கல்யக் கயிற்றுடன் . அலுவலகத்தில் மற்றவர்களுக்கு அது ஒரு பேசும் பொருளாக தான் இருந்தது . பொதுவாகவே மற்றவர்களுடன் கலகலப்பாக பேசும் ரகம் இனியா இல்லை என்பதாலோ என்னவோ யாரும் அவளிடம் பெரியதாக எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளுக்கு கல்லூரி நாள் முதல் இப்போது வரை இருக்கும் ஒரேத் தோழி குழலி தான்.
அதுவே எப்போது அவள் தனக்கு கையெழுத்து போட வர முடியுமா என்று கேட்டாளோ அப்போதே குழலி பேச்சை நிறுத்திக் கொண்டாள் .
"சீ! அம்மாவுக்கு இப்படி உடம்பு சரி இல்ல. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணி இருக்காங்க அந்த நேரத்துல போய் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு வந்து கையெழுத்து போடுன்னு கேட்கிற. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? உங்க அம்மா உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க? எனக்கு தெரியும். உனக்கு ஏண்டி தெரியல? எத்தன வருஷமா அவங்க எத்தனை கஷ்டப்பட்டு உங்க மூணு பசங்களையும் ஆளாக்கினாங்க. இன்னிக்கு இப்படி வந்து நிக்கறியே. அவங்க கண்ணுலேர்ந்து ஒரே ஒரு சொட்டு கண்ணீர் வந்தாக் கூட உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காது.
முதலில் பொறிந்தவள், பிறகு தன்னை அடக்கிக் கொண்டு கெஞ்சிப் பார்த்தாள்.
" இப்ப இது வேணாம். ப்ளீஸ்! கொஞ்சம் பொறுமையா இரு. அவங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்கு அப்புறம் நீங்க என்ன வேணுன்னாலும் முடிவு பண்ணுங்க. இப்ப இது தப்பு" எத்தனையோ கெஞ்சினாள்.
"என்ன குழலி உன்கிட்ட உதவி கேட்டதுக்கு சாபம் குடுக்கறியா? நீ மட்டும் இல்ல அந்தக் கடவுளே வந்து நின்றாலும் எங்களோட கலயாணத்தை தடுக்க முடியாது. சொன்ன படியே எங்க மாமா எனக்கு தாலி காட்டுவார். முடிஞ்சா காலைல வந்து சேரு. நல்ல ஹோட்டல்ல வடை பாயசத்தோட சோறு போடறேன். "
"நீ எல்லாம் ஒரு ஜென்மமாடி. உங்க அம்மாவுக்காக நான் பேசிக்கிட்டிருக்கேன். உங்கம்மா வலிக்க வலிக்க உன்னை பெத்து, சோறு போட்டு வளத்ததுக்கு ஒரு நாய்க்கு சோறு போட்டு வளர்த்திருந்தா கூட அது கொஞ்சமாவது நன்றியோடு இருந்திருக்கும். பாசமும் இல்ல. நன்றியும் இல்ல. நீயெல்லாம் ஒரு மனுஷியா? உன் கூட இத்தனை வருஷமா சிரிச்சு பேசி பழகி இருக்கேன்னு நினைக்கும்போது என்ன நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. நீ எல்லாம் ஒரு ஜென்மம்? தூ !"
காரி துப்பியவள் அப்படியே போனை வைத்து விட்டாள் .
புது மஞ்சள் கயிற்றுடன் முகமெங்கும் மஞ்சள் பூசி அதிலே சிறு வெட்கம் கலந்து முக சிகப்புடன் வந்த தோழியை பார்க்கபி பார்க்க குழலிக்கு வயிறு எரிந்தது . இருக்கும் கோபத்தில் எங்கே அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ என்று பயந்து கொண்டு குழலி இனியாவை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள் . அலுவலகத்தில் பேசி தன்னுடைய இடத்தையும் மாற்றிக்கொண்டு சென்று விட்டாள் வேறுதளத்திற்கு .
இனியா பெற்ற அன்னையை பார்க்க கூட முடியாத நிலையில் இருந்த போது குழலி உரிமையாக அருணாவை சென்று பார்த்தாள் . குழலிக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை . ஆனால் அருணா தான் மனம் கேட்காமல் குழலியிடம் அவ்வப்போது இனியா எப்படி இருக்கிறாள் என்று கேட்டுக் கொள்வாள் .
"ஏம்மா ! உங்களை விட்டுட்டு போன போதும் நீங்க அவளை நினைத்து கஷ்டப்படுறீங்களே "
"என்னமா பண்றது? எத்தனை பிள்ளைகளை பெற்றாலும் பெத்தவளுக்கு அத்தனையும் குழந்தைகள் தானே மா ?"
"ஆனா ஆன்ட்டி ! எப்ப இந்த மாதிரி செல்பிஷா நடந்துக்கிட்டாளோ , அதுக்கு மேல என்னால அவ மூஞ்சிய பார்த்து பேசக்கூட முடியாது. என்ன தப்பா நினைக்காதீங்க . உண்மையச் சொல்லணுன்னா இப்பலாம் அவளை பார்க்கிறது கூட இல்லை நான் என்னுடைய இடத்தை வேற இடத்துக்கு மாத்திகிட்டேன் ."
பார்ப்பதில்லை என்பதை விடவும் அவளுக்கு பார்க்க விருப்பமில்லை என்பதை அவள் தயங்கித் தயங்கி சொன்ன விதத்திலேயே அருணாவுக்குப் புரிந்து விட்டது. மற்றவர்கள் விட்டு விடலாம். தன்னால் முடியுமா?
"சரிமா ! அது உன் விருப்பம். ஆனா அப்பப்ப அவள பத்தி விசாரிச்சுகோமா .ஏன்னா அவ புகுந்த வீடு அப்படி .
"சரி ஆன்ட்டி!" மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள் குழலி.
==================================================================================
இனியா மாலையில் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்வாள் . எந்த வேலையும் இல்லாமல் இருந்த நல்லவன், முன் போல இப்போது எல்லாம் அவளை அழைத்து வரக்கூட வருவதில்லை . முன்பெல்லாம் அவளையேச் சுற்றிச் சுற்றி வந்தவன் இப்போது வேலை முடிந்து விட்டதால் கவலை இல்லையோ ? "எங்க போய்ட போறா கழுதை" என்ற இளக்காரம் தான் காரணமோ .
ஆனால் அவள் வீட்டுக்குள் நுழையும்போது அப்படியே தன்னை மாற்றிக் கொள்வான் .
"கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலை பார்த்திருந்தேன்" என்று கொஞ்சி குழைவான் .
பதிலுக்கு அவளும் "எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே" என்று அவனை கொஞ்சுவாள் .
"நல்லி மாமனுக்கு ஒரு டீ போட்டு குடுடீ . எப்ப நீ வர போறன்னு காத்திருந்தேன் . "
இடுப்பைக் கட்டிக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்துக் கொள்வார்கள்.
"டீ தானே ! நீங்க போட்டுக் வேண்டியது தானே?
கேட்கத் தெரியவில்லை.
"என்ன என் தங்கத்துக்கு அவ்ளோ டயர்டா? அவளும் கன்னத்தில் உள்ளங்கை வைத்துக் கொஞ்சுவாள் .
உள்ளே நுழைந்தால் நுழைந்ததுதான் . காலையில் இவள் அத்தனை வேலைகளையும் செய்து வைத்து விட்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு தான் கிளம்புவாள். இருப்பினும் மாலையில் இவள் வந்து பார்க்கும் பொழுது அத்தனை கலவரமாக இருக்கும் . பார்வதி எப்போதும் அப்படித்தான் கட்டு செட்டாக வேலை பண்ண தெரியாது. பணமாக இருந்தாலும் அப்படித்தான் பாத்திரமாக இருந்தாலும் அப்படித்தான் எல்லாம் வாரி இறைத்து உபயோகப்படுத்துவாள் . உணவுப் பொருட்களும் கொட்டி இருந்தாலும் துடைக்கும் வழக்கம் இருந்ததில்லை . அதனாலேயே தீபா,
" ஐயைய! அத்தை வீட்டுக்கு நான் வரல என்று ஒதுங்கிக் கொள்வாள் . சிறு வயது முதல் பழக்கப்பட்டிருந்த வளுக்கு இப்போது அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை அதுவும் முதலில் சில வாரங்களுக்கு தான் . அலுவலகத்தில் அவளுக்கு புதிதாக கொடுக்கப்பட்டிருந்த வேலையினால் மிகவும் சொர்ந்து போய் வர ஆரம்பித்தாள் . வேலை பளு அதிகமாக ஆரம்பித்தது . சம்பளம் மட்டும் அதிகம் வேண்டும் வேலை மட்டும் அதே வேண்டும் என்றால் நடக்கும் காரியமா ? அடுத்த சில நாட்களில் அவளுக்கு வீட்டுக்கு வரும்போது எரிச்சல் வர தொடங்கியது . அன்னை வீடு விடவும் மாமியார் வீடு இன்னும் அதிக தொலைவு என்பதுவும் ஒரு முக்கிய காரணம்.
பேருந்தில், எங்கிருந்தோ நசுங்கி பிழிந்து இறங்கி நடந்து வர வேண்டும் .
" மாமா எனக்கு கொஞ்சம் பஸ் ஸ்டாப்பில் வந்து கூட்டிட்டு போறீங்களா ?:
"அச்சோ சாரி மல்லி! நான் பிரண்டோட இங்க வெளியில் வந்து இருக்கேன் மா. நீயே போயிடுமா "
தினமும் இதேதான் .
முதலில் ஏற்றுக் கொண்டவளுக்கு இப்போதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
'அப்படி என்ன வெட்டி முறைக்கிற அப்படியே கொண்டு வந்து குடும்பத்துக்கு லட்சம் லட்சமா கொட்டற மாதிரி. வேலை வெட்டி எதுக்கும் போகறது இல்ல அப்புறம் என்ன பிரண்டோட அங்க இருக்கேன் எங்க இருக்கேன் ?" மனதில் நினைத்ததை நேரே வந்து கணவனிடமும் கேட்டால் அப்போதிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை . ஆசை 60 நாள் மோகம் 30 நாள் முடிந்து விட்டதா . இல்லையே ! பிறகு எப்படி ? பண பிரச்சினை என்று வந்துவிட்டால் எந்த கணக்கும் இல்லை . ஒரு மாதம் தான் . பிறகு வந்த நாட்களில் அவளுக்கே தெரியாமல் அவளது கைப்பை காலியாக ஆரம்பித்தது . ஒரு நிலையில் தனக்கு பேருந்துக்கு வேண்டும் என்று அவசரத்திற்கு வைத்திருந்த ஒற்றை நூறு ரூபாய் அவளை பார்த்து சிரித்தது .
தேதி 20 . இன்னும் பத்து நாட்கள் ஓட்ட வேண்டும் . எப்போதுமே அருணாவுக்கு முதல் செலவு சேமிப்பு தான் . இவளுக்கு அந்த பழக்கம் எப்போதுமே கிடையாது . பணம் வேண்டும் என்று கேட்டதற்கு வார்த்தைகள் தாறுமாறாக வந்தன. மாமியார் இனியா என்கிட்ட வந்து கேட்கிற? எனக்கே நீ தான் தரணும் என்ற நிலையில் இவளுக்கு ஐயோ என்று வந்தது இதுதான் முதல் முறை .
தன்னுடைய பணம் எல்லாம் எங்கே போயிற்று யோசித்துப் பார்த்தால் கொடுமை. செலவு என்று பார்த்தால் கூட அப்படி என்றெல்லாம் பெரியதாக ஆகிவிடவில்லை அதுவே கணவன் அன்று எனக்கு 50 கொடு 100 கொடு 200 கொடு என்று கேட்டு கேட்டு வாங்கியதால் தான் என்று அவள் கையில் பணம் இல்லாமல் நிற்கிறாள் . திருமணமான இரண்டே மாதங்களில் அலுவலகத்தில் கடன் வாங்க ஆரம்பித்து இருந்தாள் . ஒற்றை ரூபாய் கேட்பதற்கு கூனிக்குறுகி விட்டாள்.
வீட்டில் அது பெரிய பிரச்சினையாக மாறிய நின்றது. வேலைக்கு போறேன்னு சொல்லி காமிக்கிரியா ?
"நான் சொல்லி காமிக்கலங்க நீங்களும் வேலைக்கு போகணும்னு சொல்லறேன்."
" ஏன் நான் வேலைக்கு போகாத வெட்டி பையன்னு தெரிஞ்சு தானே வீட்டை விட்டு ஓடி வந்த ?"
அவனின் அந்த வார்த்தை அவளுக்கு சுளிர் என்று இருந்தது . இதுதானே ஆரம்பம் இன்னும் இருக்கிறது நிறைய இருக்கிறது எல்லாவற்றையும் இனியா பார்க்க வேண்டும் இனியா மட்டும் அல்ல இனியாவை போல குடும்பத்தை விட்டு விட்டு யாரோ ஒருவரை நம்பி செல்லும் பல பெண்களின் நிலை இதுதான் . ஏதோ ஒரு சிலர் நன்றாக வாழலாம் அனைவரும் அப்படி அல்ல புரிந்து கொள்வாள் இனியா.
=≈==================================
இதோ அரசாங்க பிணக்கிடங்கில் நின்று கொண்டிருக்கிறான் கரிகாலன். ரூபாவின் உடலை வாங்க . அன்று கரிகாலனை சந்தித்ததற்கு பிறகு ரூபாவிடம் பல மாறுதல் இதற்குப் பிறகும் தான் எதற்காக உயிருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் இன்னொரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என்று ஏஜென்ட் மூலம் ஒவ்வொரு இடமாக அவளை அழைத்துச் செல்லும் போது எதிரில் வந்த லாரியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான் . அன்று கரிகாலன் அந்த காவல் அதிகாரியை சென்று பார்த்ததினால் இவனிடம் ரூபாவின் பிணம் ஒப்படைக்கப்பட்டது . ரூபாவின் பெற்றோருக்கு அழைத்த போது அவர்கள் வெளிநாட்டில் இருந்தார்கள் . மகள் அசிங்கப்படுத்திவிட்டு சென்றதற்கு பிறகு எந்த சொந்தங்களையும் பார்க்க திராணி இல்லாதவர்கள் வேறு எங்கோ சென்று ஓடி ஒளிந்து கொண்டார்கள் . கரிகாலன் தான் ரூபாவுக்கு கொள்ளி வைத்தான் . செயற்கை முறையில் அழகாக்க பட்டிருந்த முகம் கோரமாகி இருந்தது . அன்று ஆசைப்பட்ட முகத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை முதன்முதலாக கையில் ஏந்தியவன் கைகளில் இப்போது பானையில் சாம்பலாக இருந்தாள் ரூபா . அவள் பெண்ணாக இருந்தபோதும் சரி அல்லது சாம்பலாக இருந்த போதும் அவனின் நேசம் மட்டும் மாறவில்லை . அவள் மோசமாக நடந்துக் கொண்ட போதும் என் மனமும் உடலும் உன் ஒருத்திக்குத் தான் என்று வாழ்ந்தவன் , அவளின் சாம்பலை சென்று கடற்கரையில் கரைத்து விட்டு வந்தான். தந்தையின் சாம்பலை கரைத்த போது கூட அவன் மனம் இத்தனை வேதனை படவில்லை. ரூபா. கண்ணுல தெரிந்து அவளை காப்பற்ற முடியாத பாவியாகி விட்டேனே என்று குற்ற உணர்வு அவனை வாழவும் விடவில்லை. சில நாட்கள் கழித்து ஏதோ தோன்ற அப்பு படத்தைப் பாத்தான்.
ரூபா சொன்னது புரிந்தது. இவர்கள் எத்தனை மோசமானவர்கள். ஏதோ ஒரு முறையில் அவளை நான் மீட்டுக் கொண்டு வந்தாலும் எப்போதுமே அவர்கள் அவள் வாழ விடமாட்டார்கள் . தெரிந்து தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். மனம் சமாதானமாகவில்லை. தந்தை இறந்த பிறகும் தனக்காக உயிரை வைத்துக் கொண்டிருக்கும் தாய்க்காக தான் வாழ வேண்டும். தன்னை சமாதானம் செய்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருக்கிறான். அவன் வாழ்வை மாற்ற நிச்சயம் ஒரு தேவதை தேவை. இனியாவா? அல்லது வேறு யாராவதா?
தொடரும்....
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள்-9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள்-9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.