Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
என்று ஆரம்பித்து திருப்புகழில் வரும் பாடலைச் சொல்லி நம் கரி முகனை வணங்கி விட்டு அவசரமாக கல்லூரிக்கு கிளம்பினாள் நம் நாயகி. நாமும் அந்த கரி மூக்கினை வாங்கி விட்டு அவளுடனே நம் பயணத்தைக் தொடங்கலாம். வாருங்கள்.
அவளுக்கு காலை 6 மணிக்கே வந்து விடும் கல்லூரிப் பேருந்து. தந்தையுடன் ஓரிடத்தில் வந்து நிற்க அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வந்து விட்டது பேருந்து. பெரும்பாலும் அவள் அன்னை அவள் கிளம்புவதற்கு முன்பே உணவுத் தயார் செய்துக் கொடுத்து விடுவார். இவன் கல்லூரி கேண்டினில் பார்த்துக் கொள்ள வேண்டும் அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் அல்ல இருப்பினும் வெளியில் சாப்பிட சாப்பிட உடம்புக்குக் கெடுதி என்று அவள் அன்னை சிரமம் பார்க்காமல் விடியலிலேயே எழுந்து மகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்துவிடுவார். காலை ஐந்து மணிக்கு குக்கர் விசில் சத்தம் கேட்கும் பல வீடுகளில் அவர்களின் வீடும் ஒன்று.
அதுவும் விதவிதமாக, அவர் குழந்தைகளுக்கு செய்வதற்கு என்றுமே கஷ்டம் என்று நினைத்ததில்லை . அது பெற்றவர்களுக்கே உரித்தான இயல்புதானே! அதை பிள்ளைகள் ஏற்பார்களா? நான் ஒரு விஷயம் கைப் பேசியில் பார்த்தேன். உண்மையா இல்லையா தெரியாது. சொன்னவர் ஒரு பிரபல கல்லுரியில் தமிழ் பேராசிரியர். அதாவது எந்த பிள்ளைகள் ஓடி வந்து பெற்றவர்களின் கையில் இருந்து கணமான பைகளை வாங்கி கொள்கிறார்களோ அவர்கள் எப்போதுமே பெற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்களாம். சொன்னவரின் உடல் மொழி, பேச்சு, தைரியம், வார்த்தைகள் எனக்கு வராது. நீங்கள் உங்களுக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்ளுங்கள். விஷயம் இதுதான்.
இனியா எப்படி? பார்க்கலாம். நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். கழுவி கழுவி ஊற்றலாம் அல்லது பரிதாபப் படலாம். உங்கள் விருப்பம்.
தந்தையுடன் நின்றிருந்தவள் தோற்றம் பற்றி வர்ணனை செய்து விடலாம். இயல்புக்கு அதிகமான உயரம். அழகான உருவம். செங்கல் நிற குர்தியும் அடர் நீல பேண்டும் கன கச்சிதமாக இருந்தது. கழுத்தில் இதோ நான் இருக்கிறேன் சொன்னது அவள் உருவம் பதித்த அடையாள அட்டை. நானும் இருக்கிறேன். சொன்னது அவள் மாமா அவள் வயதுக்கு வந்த போதுப் போட்ட தங்க சங்கிலி. வைரத்தை விட இப்ப எங்களுக்கு தான் மவுசு ஜாஸ்தி சொன்னது எக்ஸெல்லே காது தொங்கட்டான். ஐ அம் மியா சொன்னது கையில் இருந்த பிரேஸ்லெட் . மியா யாரு? அதாங்க தனிஷ்க் வெள்ளி நகைகள்.
அவள் வண்டியில் ஏறியதும் அவள் தோழி,
"ஹை இனியா! குட் மார்னிங் டி . இருவருமே கணினி அறிவியல் படிப்பவர்கள்தான்.
"நேத்து சார் நெட்ஒர்க்ஸ் நடத்தினாரு இல்ல . ஏதாவது புரிஞ்சுதா?"
"நீ சப்ஜெக்ட் பார்த்திருப்ப. எதுவும் புரிஞ்சுருக்காது. "
"அப்ப நீ எதைப் பார்த்த?"
"அவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கற ஆளை விட்டுட்டு யாராவது பாடத்தை பார்ப்பங்களா?"
"அது சரிதான். நம்ம பிரேமா கிட்ட கேக்கலாமா?"
"நானாவது பரவாயில்லை. அவ இன்னும் மோசம். கனவுல கூட அவர் நினைப்பு தானாம். வந்து என்னன்ன பண்ணறோ ? நமுட்டு சிரிப்பு சிரித்தாள் நாயகியின் தோழி.
"சீ ! உனக்கு இப்படிப் பேச கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா?"
"போதும் அடங்குடி. எக்ஸ்ட்ரா கிளாஸ் இருக்குன்னு பொய் சொல்லிட்டு நீங்க மாமனோட கொஞ்சும் போது உனக்கு வெக்கமா இல்லையா?"
"சரி !சரி! தப்பு தான். உன்னை சொன்னது தப்புதான். போதுமா? "
"போதும்! போதும்! அலுத்துக் கொண்டாள் வண்டார்குழலி.
அவர்களின் பூர்வீகம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவாலங்காடு. முதலில் எல்லாம் அவள் தந்தை அங்கிருந்து தான் எழிலகத்திற்கு வேலைக்கு வருவார். பிறகு குழந்தைகளின் படிப்பு அது இது என்று பிடிக்காமல் சென்னைக்கு வந்து குடியேறியவர்கள். அப்போது கூட வாரம் ஒரு முறை அங்கு சென்று விடுவார்கள்.
அந்த சிவ நாதமும் கோயில் மணி சத்தமும் எங்கும் இல்லாத அமைதியும் அனுபவித்தால் தான் அருமைத் தெரியும். மக்களும் அப்படித் தான். டீவி சீரியல்கள் ஆக்கிரமிக்க விடாமல் வீட்டையும் மனதையும் பார்த்துக் கொண்டார்கள்.
"ஏன் ஆயா டீவி சீரியல் பாக்க மாட்டீங்களோ? "
"ஏன் ? உனக்கென போச்சு?"
"என் ஆயா உன்ன விட அளகளகா பொன்ணுணங்க வரதுன்னுதானே பாக்க மாட்டேங்கற ?" வண்டார் குழலி தான் முதியவரிடம் அவ்வபோது வம்பிழுப்பாள்.
"ஆமா டீ போக்கத்தவளே ! அதுல இன்னத்த காட்டுவாங்க ? நல்ல நாளானா எழவு காட்சி போட்டு ஒப்பாரி வைப்பான். இல்ல., ஏதாவது ஒரு பேய் படத்தப் போடுவான். இன்னாத்துக்கு அதை போய் பார்த்துகிட்டு? சொல்லிக் கொண்டே வெயிலில் காய வைத்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். குழலியும் தட்டி வைத்திருந்த விரட்டிகளை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தாள்.
குழலிப் பற்றிய வர்ணனை இன்னும் கொடுக்கவில்லை பாருங்கள். அவளும் நல்ல உயரம். நம்ம ஊரு நிறம். இறைவன் சந்தோஷ மூடில் செய்த அழகி. சூப்பர் பிகர்.
குழலியின் பாட்டிக்கு என்ன வயதிருக்கும்? என்ன ஒரு என்பது தொண்ணூறு இருக்கலாமா? இல்லை . அவருக்கு வயது ஐம்பத்து ஏழு . பார்த்தால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நாப்பது, நாப்பது அஞ்சு இருக்கலாம். அடித்து சத்தியம் செய்வார்கள். சிறு வயதில் திருமணம். பதினெட்டில் வாக்குரிமையும் இரண்டு குழந்தைகளுக்கு அன்னை என்ற பந்தமும் சேர்ந்தே வந்து விட்டது. கால் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். எத்தனை பெரிய வீடு? ஒரு துளி கூட தூசி கண்டு விட முடியாது. பாட்டி மாப் போட்டு துடைத்ததாக எந்த வரலாறும் இல்லை. துணிதான். இப்போதும் குனிந்து துணியால் பிழிந்து பிழிந்து தான் வீட்டை துடைப்பார்.
மகன் எத்தனையோ சொல்லியும் கேட்காமல் இங்கே தனியாக வாசம் செய்கிறார்.
"அட போடா! உங்க வீட்டுல ரெண்டு அடி எடுத்து வச்சா வீடே முடிஞ்சுருது. அக்கம் பக்கத்துல ஒரு வா தண்ணி குடிக்க முடியல. எல்லாம் கதவை பூட்டிக்கிட்டு, எல்லாரும் கையில அந்த கொல்லிக் கட்டைய வச்சுக்கிட்டு"
"அம்மா அது கொள்ளி கட்டை இல்லம்மா . செல் போன்"
"எல்லாமே ஒரு அளவுக்குத்தான். எப்பப் பாரு அதுலேய உக்காந்துகிட்டு. பக்கத்துல யாரு இருக்கா ஏத்தாப்புல என்ன வண்டி வருதுன்னு கூட தெரியாம? அங்க பாரு நாம் தான் பேசிகிட்டு இருக்கோம் . அது என்ன பண்ணிக்கிட்டு இருக்கு பாரு"
"ஆயா! நாங்களும் பேசிகிட்டு தான் இருக்கோம். போனுல" இனியாவுடன் சாட்டிங்கில் இருந்தவள் சொன்னாள் .
"ஆமா நல்லா பேசுன ?"
இப்படித் தான் பாட்டியும் அவர் மகன் பெற்ற பிள்ளைகளும் வாய்க்கு வாய் பதில் பேசிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். அவருக்கு மகள் இல்லை. மூன்று மகன்கள் தான். அதனால் தானோ என்னவோ மருமகள் மீதும் மகன் பெற்ற பெண் பிள்ளைகள் மீதும் அளவுக்கு அதிகமாகவே பாசம் காட்டினார்.
"வா வா! என் ராசாத்தி . இப்படி இளைச்சு போய்ட்டியே"மருமகளுக்கான கொஞ்சல் வாராவாரம் கிடைத்து விடும். அன்னை வீட்டில் கூட அவருக்கு இத்தகைய அன்பும் வரவேற்பும் கிடைக்காது. அத்தனை சலுகையும் மாமியாரிடம் தான் கிடைக்கும். அதை அவர் நன்றாகவே அனுபவித்தார். அதனாலேயே கணவன் ஊரில் இல்லாதபோது தனியாகவே குழந்தைகளுடன் வந்து விடுவார்.
குழலி கதை போதும். இன்னும் பேசிக் கொண்டிருந்தால் ஆத்தருக்கு ஆதரவு இருக்காது. வாங்க பேரூந்துக்குள்ள போகலாம். இல்லன்னா அதுங்க என்ன பேசுதுங்கன்னுத தெரியாது.
"அது சரி குழலி! இப்ப அவரு சொல்லிக் குடுத்தது புரியலையே என்ன பன்ணறது?"
லன்ச் டைமில் போய் கேட்டுற வேண்டியது தான். ப்ரொபெஸர் வினயிடம் இவள் சந்தேகம் தீர்த்துக் கொண்டிருக்க குழலி சின்சியராக கவனித்துக் கொண்டிருந்தாள் அவனை. என்ன ஒன்னு! இருவருமே கொஞ்சம் அப்படி இருந்தாலும் ஒழுங்காக படித்து விடுவார்கள். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். எந்த வகுப்பும் தவற விட்டதில்லை. வினய் பார்ப்பது ஜொள்ளு வழிவது அரட்டை கிண்டல் கேலி இதெல்லாம் ஹார்மோன்கள் "நாங்கள் சரியாக வேலை செய்கிறோம்" என்று அட்டண்டன்ஸ் போடுவதற்குத் தான். நீங்கள் என்ன வேணுன்னாலும் ஆட்டம் போடுங்க. "நான்தான் உங்களை கண்ட்ரோல் செய்வேன் " சொல்லும் மூளை, சமத்தாக அவர்களை படிக்க செய்துவிடும்.
குழலி பற்றி சொல்லி விட்டேன். அவள் தோழி? அவள் மாமா யார்?
மாலையில் பேருந்தில் இருந்து இறங்கி வரும் மாமன் மகளை பிக் அப் செய்வதற்காகவே வேலைக்குச் செல்லாமல் இருக்கும் நல்லவன். கேரக்டர் இல்லங்க. பேரு. அதுதான் நம் இனியா காதலிக்கும் அருமை பெருமை மாமன். நல்லவனுக்காகவே இவளுக்கு நல் இனியாள் என்று பெயர் வைத்தார்கள்.
"நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்தது ஏன் நான் பிறக்கும்போதே என்னை உந்தன் கையில் ஏந்தத் தானா? அஜித் ஷாலினிக்கு பொருந்துமோ இல்லையோ நல்லவன் பள்ளிக்கு நன்றாகவேப் பொருந்தும்.
அது மட்டுமா?
“மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது முறை உன்னை ரசித்தேன்” (சித்ரா குரலில் ஷாலினியாக தண்ணி நினைத்துக் கொள்வாள்)
அவன் மீசையை முறுக்கி கொஞ்சுவாள். அது அத்தனையும் அவன் ரசிப்பான். கொஞ்சுவான் மயங்குவான். அவளை தந்து சின்ன சின்ன குறும்புகளில் மயக்கி விடுவான். அருகருகே அமர்ந்து கொள்வார்கள். முத்தம் கொடுப்பார்கள். வேறு விதமான வர்ணனைகள் இருக்கும். நிறைய அந்த மாதிரி ஜோக்ஸ் இருக்கும். ஒருவரை ஒருவர் மயக்கும் வார்த்தைகள், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் இருக்கும். பி.காம் படித்தவன் சி ஏ படிப்பதாகச் சொல்லிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். தந்தையாலும் அடக்க முடிவதில்லை. மாமனாலும் அடக்க முடிவதில்லை.
"சீக்கிரமா ஒரு கால் கட்டுப் போட்டா அவனுக்கும் பொறுப்பு வந்துடும் " அவன் அன்னை பார்வதியின் வேத வாக்கு. இனியாவும் நல்லவனை காதலித்துக் கொண்டே கல்லூரி படிப்பும் முடித்து விட்டு வேலைக்கும் போக ஆரம்பித்து விட்டாள் .
இனியாவின் அன்னைக்கு இவர்கள் இருவரும் விரும்புவதில் துளியும் இஷ்டமில்லை. இனியா பிறந்த போதே ஆரம்பித்த பேச்சு இது. அப்போதிலிருந்து இனியாவின் அன்னை அருணா எதிரியாகி விட்டாள் பார்வதிக்கு. அதற்கு முன்பு? அப்போதும் நாத்தனார் என்ற அதிகாரத்தில் வலம் வந்து அருணாவை ஆட்டி வைத்தவள் தான் பார்வதி. அருணாவுக்கு பார்வதிப் பற்றி நன்றாகவேத் தெரியும். அவளின் ஆணவமும் பணத்தாசையும் துடுக்கென்ற வார்த்தைகளும், இரட்டை அர்த்தப் பேச்சுக்களும்அளவில்லாதது. "அண்ணன் சீர் செய்" என்று பிய்த்துப் பிடுங்குவாள். தனக்கென்று இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் கணவன் தேவேந்திரனும் அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
பொங்கலுக்கு கூட முதல் சீர் அவளுக்கு வைத்து விட்டு பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் தான் இவர்கள் வீட்டுக்கு வரும்.
செல்லும்போதெல்லாம் இனியாவை அழைத்துச் செல்வார். இனியாவின் தங்கை தீபாவுக்கு பார்வதியைக் கண்டாலேப் பிடிக்காது.
"அய்ய! அத்தை வீடு சுத்தமாவே இருக்காது. நான் வரல " ஒதுங்கி விடுவாள். இனியாதான் ஓடி ஓடி வந்து நிற்பாள். நினைவு தெரிந்த நாள் முதலே அந்த வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்தாள் இனியா.
"நல்லி ! வாடி ! நாம குச்சி ஐஸ் சாப்பிடலாம் "
மாமனிடம் கையில் இருந்து காஸைப் பிடுங்கி கொண்டு இனியாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுவான் நல்லவன் .
"இந்த உனக்கு ரோஸ் கலர். எனக்கு ஆரஞ்சு "
"மாமா எனக்கு வாயெல்லாம் ரோஸ் ஆகிடுச்சா?" நாக்கை நீட்டிக் காட்டுவாள்.
"என்ன மாமா இதுசட்டை எல்லாம் இப்படி கொட்டி வச்சுருக்கியே. குடு நான் துவைச்சு தரேன். "பத்து வயது சிறுமிக்கு அந்த அளவு பாசம் சற்று அதிகம் தான்.
"ஏண்டி! அப்ப எல்லாம் நாக்கு சிவந்துருச்சா சிவந்துருச்சான்னு கேப்ப ? இப்ப சிவக்க வைக்கறேன்னு சொன்ன விட மாட்டேங்குற? ஆணின் ஒற்றை விறல் அவள் கன்னம் வருடியது.
'ம்! ஆசை தோசை. நாக்கு என்ன நாக்கு? உடம்பு முழுக்க நீதான் சிவக்க வைக்கணும். கல்யாணதுக்கு அப்புறம்."
"மாமன்கிட்ட விளையாடாத. அப்புறம் தாங்க மாட்ட."
அதையும் தான் பாக்கலாமே "
அவள் ஆசைப் பட்டபடியே சிவக்க வைத்துவிடலாம் உடல் முழுக்க. கல்யாணத்துக்கு அப்புறம்தாம்ப்பா. எந்த இரட்டை அர்த்தமும் இல்லை. என்னை நம்புங்கள்.
சிறு வயது முதல் அவன் தொடுவான். அடித்துக் கொள்வார்கள். அருகருகே அமர்வார்கள் எந்த வித்தியாசமும் தெரிந்ததில்லை. ஏதோ ஒரு வயது வரும் வரை. அவள் உதட்டில் ஒட்டி இருக்கும் சாக்லேட்டை எப்போதிலிருந்து அவன் வாய்க்கு மாறத் தொடங்கியது ? இருவருக்குமேத் தெரிந்ததில்லை. மனதில் அவன்தான் இருந்தான். அது உடலிலும் மாற்றங்களைத் தரத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் ரசித்தனர்.
"ஏன் நல்லி அதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டியே நாம கல்யாணம் செய்துக்கலாமா?"
"நீ இன்னும் வேலைக்கு போகலியே மாமா ?" கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. வேறு மாதிரி பதில் சொன்னாள் .
"ஓ ! அதுக்கு என்ன? அத்தை வந்து வீட்ல பேசுவாங்களாம். மாமன் வந்து என்னை தூக்கிட்டுப் போவாங்களாம் ."
"அது சரி ! அதுக்கு எங்க மாமா ஒத்துக்க வேணாமா?"
"அது எல்லாம் பார்த்துக்கலாம் மாமா. அத்த வந்து பேசுற விதத்துல பேசினா எல்லாம் ஒத்துக்குவாங்க. தங்கச்சி புள்ளைக்கு இல்லாம வேற யாரை மகளுக்கு கட்டி வைப்பாராம்?"
"சரி டி ! ஆத்தா கிட்ட பேசறேன் "
வீட்டில் அன்னையிடம் வந்து விஷயத்தை ச் சொன்னாள். இவளுக்குத் தோன்றாத கேள்வி பெற்றவளுக்குத் தோன்றாமல் இருக்குமா ? முதல் கேள்வியே பையன் என்ன படிச்சுருக்கான்? என்ன வேலை பாக்குறான்? இது தானே?
வேலைக்குப் போகாமல் பொறுப்பில்லாமல் சுற்றும் நல்லவனுக்கு என் மகளா? அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த பித்தளை குடம் இடுப்பிலிருந்து நழுவி விழுந்தது. பூதம் வெளிவரப் போகிறது என்றுத் தெரிந்ததுதான். இத்தனை விரைவாக?
"என்ன இவ்ளோ அசால்ட்டா கீழ போடற? இந்த நசுங்கிப் போன குடத்தை சரி பண்ணி உன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு சீர் வை. எனக்கு இன்னும் கணமா வேற புதுசா வாங்கி வை. எங்க அத்தை வரும்போது சமையல் தடபுடலா இருக்கணும் . புரிஞ்சுதா?"
அவளின் பேச்சும் பாவனையும் அப்படியே அத்தை போலவே இருந்தது. இவள் எனக்குப் பிறந்தவள் தானா? அருணாவுக்கு பல வருடங்களாக இதே சந்தேகம் தான்.
தீபா பிறந்ததுக்கு கூட பார்வதிக்கு பிடிக்கவில்லை என்றுக் கூறலாம். தனக்கு ஒரே ஒரு மகன் இருக்க வீட்டுக்கு வந்தவளுக்கு மூன்றா ? அதிலும் இப்போதைக்கு அடுத்து பிறந்ததும் பெண். அண்ணன் இனி எங்கிருந்து தன்னை கவனிக்கப் போகிறான்? அவளின் மனதின் வக்கிரம் அவள் சொல்லிலும் வெளிப்படும்.
" எங்க அண்ணே இத்தனை நாளு அள்ளிக் குடுத்த எடத்துல இனிமே கிள்ளித்தான் கொடுக்கணும். ஏற்கனவே , அன்னிக்கு எனக்கு செய்யறதுக்கு அழுகை தான். இனி? ரெண்டு பொட்டைப் புள்ள. கேக்கவா வேணும்? இனியா பத்தி கவலை இல்லை. என்னோட மருமக. பாவம் தீபாவுக்கு தான் அசல்ல பாக்கணும்"
"என்ன அண்ணி! புள்ளையே இப்பதான் பொறந்திருக்கு. இப்ப என்ன அதைப் பத்தி?
"எத்தனை சொன்னாலும் அடங்குபவளா பார்வதி. இனியாதான் என் மருமக திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருப்பாள். தேவேந்திரனுக்கும் ஒரு விதத்தில் அது மகிழ்ச்சி தான். தீபக் நினைவு தெரிந்து பேசும் வரை.
மீன் கடலைத் தேடும் ...
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
என்று ஆரம்பித்து திருப்புகழில் வரும் பாடலைச் சொல்லி நம் கரி முகனை வணங்கி விட்டு அவசரமாக கல்லூரிக்கு கிளம்பினாள் நம் நாயகி. நாமும் அந்த கரி மூக்கினை வாங்கி விட்டு அவளுடனே நம் பயணத்தைக் தொடங்கலாம். வாருங்கள்.
அவளுக்கு காலை 6 மணிக்கே வந்து விடும் கல்லூரிப் பேருந்து. தந்தையுடன் ஓரிடத்தில் வந்து நிற்க அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வந்து விட்டது பேருந்து. பெரும்பாலும் அவள் அன்னை அவள் கிளம்புவதற்கு முன்பே உணவுத் தயார் செய்துக் கொடுத்து விடுவார். இவன் கல்லூரி கேண்டினில் பார்த்துக் கொள்ள வேண்டும் அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் அல்ல இருப்பினும் வெளியில் சாப்பிட சாப்பிட உடம்புக்குக் கெடுதி என்று அவள் அன்னை சிரமம் பார்க்காமல் விடியலிலேயே எழுந்து மகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்துவிடுவார். காலை ஐந்து மணிக்கு குக்கர் விசில் சத்தம் கேட்கும் பல வீடுகளில் அவர்களின் வீடும் ஒன்று.
அதுவும் விதவிதமாக, அவர் குழந்தைகளுக்கு செய்வதற்கு என்றுமே கஷ்டம் என்று நினைத்ததில்லை . அது பெற்றவர்களுக்கே உரித்தான இயல்புதானே! அதை பிள்ளைகள் ஏற்பார்களா? நான் ஒரு விஷயம் கைப் பேசியில் பார்த்தேன். உண்மையா இல்லையா தெரியாது. சொன்னவர் ஒரு பிரபல கல்லுரியில் தமிழ் பேராசிரியர். அதாவது எந்த பிள்ளைகள் ஓடி வந்து பெற்றவர்களின் கையில் இருந்து கணமான பைகளை வாங்கி கொள்கிறார்களோ அவர்கள் எப்போதுமே பெற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்களாம். சொன்னவரின் உடல் மொழி, பேச்சு, தைரியம், வார்த்தைகள் எனக்கு வராது. நீங்கள் உங்களுக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்ளுங்கள். விஷயம் இதுதான்.
இனியா எப்படி? பார்க்கலாம். நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். கழுவி கழுவி ஊற்றலாம் அல்லது பரிதாபப் படலாம். உங்கள் விருப்பம்.
தந்தையுடன் நின்றிருந்தவள் தோற்றம் பற்றி வர்ணனை செய்து விடலாம். இயல்புக்கு அதிகமான உயரம். அழகான உருவம். செங்கல் நிற குர்தியும் அடர் நீல பேண்டும் கன கச்சிதமாக இருந்தது. கழுத்தில் இதோ நான் இருக்கிறேன் சொன்னது அவள் உருவம் பதித்த அடையாள அட்டை. நானும் இருக்கிறேன். சொன்னது அவள் மாமா அவள் வயதுக்கு வந்த போதுப் போட்ட தங்க சங்கிலி. வைரத்தை விட இப்ப எங்களுக்கு தான் மவுசு ஜாஸ்தி சொன்னது எக்ஸெல்லே காது தொங்கட்டான். ஐ அம் மியா சொன்னது கையில் இருந்த பிரேஸ்லெட் . மியா யாரு? அதாங்க தனிஷ்க் வெள்ளி நகைகள்.
அவள் வண்டியில் ஏறியதும் அவள் தோழி,
"ஹை இனியா! குட் மார்னிங் டி . இருவருமே கணினி அறிவியல் படிப்பவர்கள்தான்.
"நேத்து சார் நெட்ஒர்க்ஸ் நடத்தினாரு இல்ல . ஏதாவது புரிஞ்சுதா?"
"நீ சப்ஜெக்ட் பார்த்திருப்ப. எதுவும் புரிஞ்சுருக்காது. "
"அப்ப நீ எதைப் பார்த்த?"
"அவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கற ஆளை விட்டுட்டு யாராவது பாடத்தை பார்ப்பங்களா?"
"அது சரிதான். நம்ம பிரேமா கிட்ட கேக்கலாமா?"
"நானாவது பரவாயில்லை. அவ இன்னும் மோசம். கனவுல கூட அவர் நினைப்பு தானாம். வந்து என்னன்ன பண்ணறோ ? நமுட்டு சிரிப்பு சிரித்தாள் நாயகியின் தோழி.
"சீ ! உனக்கு இப்படிப் பேச கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா?"
"போதும் அடங்குடி. எக்ஸ்ட்ரா கிளாஸ் இருக்குன்னு பொய் சொல்லிட்டு நீங்க மாமனோட கொஞ்சும் போது உனக்கு வெக்கமா இல்லையா?"
"சரி !சரி! தப்பு தான். உன்னை சொன்னது தப்புதான். போதுமா? "
"போதும்! போதும்! அலுத்துக் கொண்டாள் வண்டார்குழலி.
அவர்களின் பூர்வீகம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவாலங்காடு. முதலில் எல்லாம் அவள் தந்தை அங்கிருந்து தான் எழிலகத்திற்கு வேலைக்கு வருவார். பிறகு குழந்தைகளின் படிப்பு அது இது என்று பிடிக்காமல் சென்னைக்கு வந்து குடியேறியவர்கள். அப்போது கூட வாரம் ஒரு முறை அங்கு சென்று விடுவார்கள்.
அந்த சிவ நாதமும் கோயில் மணி சத்தமும் எங்கும் இல்லாத அமைதியும் அனுபவித்தால் தான் அருமைத் தெரியும். மக்களும் அப்படித் தான். டீவி சீரியல்கள் ஆக்கிரமிக்க விடாமல் வீட்டையும் மனதையும் பார்த்துக் கொண்டார்கள்.
"ஏன் ஆயா டீவி சீரியல் பாக்க மாட்டீங்களோ? "
"ஏன் ? உனக்கென போச்சு?"
"என் ஆயா உன்ன விட அளகளகா பொன்ணுணங்க வரதுன்னுதானே பாக்க மாட்டேங்கற ?" வண்டார் குழலி தான் முதியவரிடம் அவ்வபோது வம்பிழுப்பாள்.
"ஆமா டீ போக்கத்தவளே ! அதுல இன்னத்த காட்டுவாங்க ? நல்ல நாளானா எழவு காட்சி போட்டு ஒப்பாரி வைப்பான். இல்ல., ஏதாவது ஒரு பேய் படத்தப் போடுவான். இன்னாத்துக்கு அதை போய் பார்த்துகிட்டு? சொல்லிக் கொண்டே வெயிலில் காய வைத்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். குழலியும் தட்டி வைத்திருந்த விரட்டிகளை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தாள்.
குழலிப் பற்றிய வர்ணனை இன்னும் கொடுக்கவில்லை பாருங்கள். அவளும் நல்ல உயரம். நம்ம ஊரு நிறம். இறைவன் சந்தோஷ மூடில் செய்த அழகி. சூப்பர் பிகர்.
குழலியின் பாட்டிக்கு என்ன வயதிருக்கும்? என்ன ஒரு என்பது தொண்ணூறு இருக்கலாமா? இல்லை . அவருக்கு வயது ஐம்பத்து ஏழு . பார்த்தால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நாப்பது, நாப்பது அஞ்சு இருக்கலாம். அடித்து சத்தியம் செய்வார்கள். சிறு வயதில் திருமணம். பதினெட்டில் வாக்குரிமையும் இரண்டு குழந்தைகளுக்கு அன்னை என்ற பந்தமும் சேர்ந்தே வந்து விட்டது. கால் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். எத்தனை பெரிய வீடு? ஒரு துளி கூட தூசி கண்டு விட முடியாது. பாட்டி மாப் போட்டு துடைத்ததாக எந்த வரலாறும் இல்லை. துணிதான். இப்போதும் குனிந்து துணியால் பிழிந்து பிழிந்து தான் வீட்டை துடைப்பார்.
மகன் எத்தனையோ சொல்லியும் கேட்காமல் இங்கே தனியாக வாசம் செய்கிறார்.
"அட போடா! உங்க வீட்டுல ரெண்டு அடி எடுத்து வச்சா வீடே முடிஞ்சுருது. அக்கம் பக்கத்துல ஒரு வா தண்ணி குடிக்க முடியல. எல்லாம் கதவை பூட்டிக்கிட்டு, எல்லாரும் கையில அந்த கொல்லிக் கட்டைய வச்சுக்கிட்டு"
"அம்மா அது கொள்ளி கட்டை இல்லம்மா . செல் போன்"
"எல்லாமே ஒரு அளவுக்குத்தான். எப்பப் பாரு அதுலேய உக்காந்துகிட்டு. பக்கத்துல யாரு இருக்கா ஏத்தாப்புல என்ன வண்டி வருதுன்னு கூட தெரியாம? அங்க பாரு நாம் தான் பேசிகிட்டு இருக்கோம் . அது என்ன பண்ணிக்கிட்டு இருக்கு பாரு"
"ஆயா! நாங்களும் பேசிகிட்டு தான் இருக்கோம். போனுல" இனியாவுடன் சாட்டிங்கில் இருந்தவள் சொன்னாள் .
"ஆமா நல்லா பேசுன ?"
இப்படித் தான் பாட்டியும் அவர் மகன் பெற்ற பிள்ளைகளும் வாய்க்கு வாய் பதில் பேசிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். அவருக்கு மகள் இல்லை. மூன்று மகன்கள் தான். அதனால் தானோ என்னவோ மருமகள் மீதும் மகன் பெற்ற பெண் பிள்ளைகள் மீதும் அளவுக்கு அதிகமாகவே பாசம் காட்டினார்.
"வா வா! என் ராசாத்தி . இப்படி இளைச்சு போய்ட்டியே"மருமகளுக்கான கொஞ்சல் வாராவாரம் கிடைத்து விடும். அன்னை வீட்டில் கூட அவருக்கு இத்தகைய அன்பும் வரவேற்பும் கிடைக்காது. அத்தனை சலுகையும் மாமியாரிடம் தான் கிடைக்கும். அதை அவர் நன்றாகவே அனுபவித்தார். அதனாலேயே கணவன் ஊரில் இல்லாதபோது தனியாகவே குழந்தைகளுடன் வந்து விடுவார்.
குழலி கதை போதும். இன்னும் பேசிக் கொண்டிருந்தால் ஆத்தருக்கு ஆதரவு இருக்காது. வாங்க பேரூந்துக்குள்ள போகலாம். இல்லன்னா அதுங்க என்ன பேசுதுங்கன்னுத தெரியாது.
"அது சரி குழலி! இப்ப அவரு சொல்லிக் குடுத்தது புரியலையே என்ன பன்ணறது?"
லன்ச் டைமில் போய் கேட்டுற வேண்டியது தான். ப்ரொபெஸர் வினயிடம் இவள் சந்தேகம் தீர்த்துக் கொண்டிருக்க குழலி சின்சியராக கவனித்துக் கொண்டிருந்தாள் அவனை. என்ன ஒன்னு! இருவருமே கொஞ்சம் அப்படி இருந்தாலும் ஒழுங்காக படித்து விடுவார்கள். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். எந்த வகுப்பும் தவற விட்டதில்லை. வினய் பார்ப்பது ஜொள்ளு வழிவது அரட்டை கிண்டல் கேலி இதெல்லாம் ஹார்மோன்கள் "நாங்கள் சரியாக வேலை செய்கிறோம்" என்று அட்டண்டன்ஸ் போடுவதற்குத் தான். நீங்கள் என்ன வேணுன்னாலும் ஆட்டம் போடுங்க. "நான்தான் உங்களை கண்ட்ரோல் செய்வேன் " சொல்லும் மூளை, சமத்தாக அவர்களை படிக்க செய்துவிடும்.
குழலி பற்றி சொல்லி விட்டேன். அவள் தோழி? அவள் மாமா யார்?
மாலையில் பேருந்தில் இருந்து இறங்கி வரும் மாமன் மகளை பிக் அப் செய்வதற்காகவே வேலைக்குச் செல்லாமல் இருக்கும் நல்லவன். கேரக்டர் இல்லங்க. பேரு. அதுதான் நம் இனியா காதலிக்கும் அருமை பெருமை மாமன். நல்லவனுக்காகவே இவளுக்கு நல் இனியாள் என்று பெயர் வைத்தார்கள்.
"நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்தது ஏன் நான் பிறக்கும்போதே என்னை உந்தன் கையில் ஏந்தத் தானா? அஜித் ஷாலினிக்கு பொருந்துமோ இல்லையோ நல்லவன் பள்ளிக்கு நன்றாகவேப் பொருந்தும்.
அது மட்டுமா?
“மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது முறை உன்னை ரசித்தேன்” (சித்ரா குரலில் ஷாலினியாக தண்ணி நினைத்துக் கொள்வாள்)
அவன் மீசையை முறுக்கி கொஞ்சுவாள். அது அத்தனையும் அவன் ரசிப்பான். கொஞ்சுவான் மயங்குவான். அவளை தந்து சின்ன சின்ன குறும்புகளில் மயக்கி விடுவான். அருகருகே அமர்ந்து கொள்வார்கள். முத்தம் கொடுப்பார்கள். வேறு விதமான வர்ணனைகள் இருக்கும். நிறைய அந்த மாதிரி ஜோக்ஸ் இருக்கும். ஒருவரை ஒருவர் மயக்கும் வார்த்தைகள், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் இருக்கும். பி.காம் படித்தவன் சி ஏ படிப்பதாகச் சொல்லிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். தந்தையாலும் அடக்க முடிவதில்லை. மாமனாலும் அடக்க முடிவதில்லை.
"சீக்கிரமா ஒரு கால் கட்டுப் போட்டா அவனுக்கும் பொறுப்பு வந்துடும் " அவன் அன்னை பார்வதியின் வேத வாக்கு. இனியாவும் நல்லவனை காதலித்துக் கொண்டே கல்லூரி படிப்பும் முடித்து விட்டு வேலைக்கும் போக ஆரம்பித்து விட்டாள் .
இனியாவின் அன்னைக்கு இவர்கள் இருவரும் விரும்புவதில் துளியும் இஷ்டமில்லை. இனியா பிறந்த போதே ஆரம்பித்த பேச்சு இது. அப்போதிலிருந்து இனியாவின் அன்னை அருணா எதிரியாகி விட்டாள் பார்வதிக்கு. அதற்கு முன்பு? அப்போதும் நாத்தனார் என்ற அதிகாரத்தில் வலம் வந்து அருணாவை ஆட்டி வைத்தவள் தான் பார்வதி. அருணாவுக்கு பார்வதிப் பற்றி நன்றாகவேத் தெரியும். அவளின் ஆணவமும் பணத்தாசையும் துடுக்கென்ற வார்த்தைகளும், இரட்டை அர்த்தப் பேச்சுக்களும்அளவில்லாதது. "அண்ணன் சீர் செய்" என்று பிய்த்துப் பிடுங்குவாள். தனக்கென்று இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் கணவன் தேவேந்திரனும் அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
பொங்கலுக்கு கூட முதல் சீர் அவளுக்கு வைத்து விட்டு பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் தான் இவர்கள் வீட்டுக்கு வரும்.
செல்லும்போதெல்லாம் இனியாவை அழைத்துச் செல்வார். இனியாவின் தங்கை தீபாவுக்கு பார்வதியைக் கண்டாலேப் பிடிக்காது.
"அய்ய! அத்தை வீடு சுத்தமாவே இருக்காது. நான் வரல " ஒதுங்கி விடுவாள். இனியாதான் ஓடி ஓடி வந்து நிற்பாள். நினைவு தெரிந்த நாள் முதலே அந்த வீட்டில் வேலை செய்ய ஆரம்பித்தாள் இனியா.
"நல்லி ! வாடி ! நாம குச்சி ஐஸ் சாப்பிடலாம் "
மாமனிடம் கையில் இருந்து காஸைப் பிடுங்கி கொண்டு இனியாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுவான் நல்லவன் .
"இந்த உனக்கு ரோஸ் கலர். எனக்கு ஆரஞ்சு "
"மாமா எனக்கு வாயெல்லாம் ரோஸ் ஆகிடுச்சா?" நாக்கை நீட்டிக் காட்டுவாள்.
"என்ன மாமா இதுசட்டை எல்லாம் இப்படி கொட்டி வச்சுருக்கியே. குடு நான் துவைச்சு தரேன். "பத்து வயது சிறுமிக்கு அந்த அளவு பாசம் சற்று அதிகம் தான்.
"ஏண்டி! அப்ப எல்லாம் நாக்கு சிவந்துருச்சா சிவந்துருச்சான்னு கேப்ப ? இப்ப சிவக்க வைக்கறேன்னு சொன்ன விட மாட்டேங்குற? ஆணின் ஒற்றை விறல் அவள் கன்னம் வருடியது.
'ம்! ஆசை தோசை. நாக்கு என்ன நாக்கு? உடம்பு முழுக்க நீதான் சிவக்க வைக்கணும். கல்யாணதுக்கு அப்புறம்."
"மாமன்கிட்ட விளையாடாத. அப்புறம் தாங்க மாட்ட."
அதையும் தான் பாக்கலாமே "
அவள் ஆசைப் பட்டபடியே சிவக்க வைத்துவிடலாம் உடல் முழுக்க. கல்யாணத்துக்கு அப்புறம்தாம்ப்பா. எந்த இரட்டை அர்த்தமும் இல்லை. என்னை நம்புங்கள்.
சிறு வயது முதல் அவன் தொடுவான். அடித்துக் கொள்வார்கள். அருகருகே அமர்வார்கள் எந்த வித்தியாசமும் தெரிந்ததில்லை. ஏதோ ஒரு வயது வரும் வரை. அவள் உதட்டில் ஒட்டி இருக்கும் சாக்லேட்டை எப்போதிலிருந்து அவன் வாய்க்கு மாறத் தொடங்கியது ? இருவருக்குமேத் தெரிந்ததில்லை. மனதில் அவன்தான் இருந்தான். அது உடலிலும் மாற்றங்களைத் தரத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் ரசித்தனர்.
"ஏன் நல்லி அதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டியே நாம கல்யாணம் செய்துக்கலாமா?"
"நீ இன்னும் வேலைக்கு போகலியே மாமா ?" கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. வேறு மாதிரி பதில் சொன்னாள் .
"ஓ ! அதுக்கு என்ன? அத்தை வந்து வீட்ல பேசுவாங்களாம். மாமன் வந்து என்னை தூக்கிட்டுப் போவாங்களாம் ."
"அது சரி ! அதுக்கு எங்க மாமா ஒத்துக்க வேணாமா?"
"அது எல்லாம் பார்த்துக்கலாம் மாமா. அத்த வந்து பேசுற விதத்துல பேசினா எல்லாம் ஒத்துக்குவாங்க. தங்கச்சி புள்ளைக்கு இல்லாம வேற யாரை மகளுக்கு கட்டி வைப்பாராம்?"
"சரி டி ! ஆத்தா கிட்ட பேசறேன் "
வீட்டில் அன்னையிடம் வந்து விஷயத்தை ச் சொன்னாள். இவளுக்குத் தோன்றாத கேள்வி பெற்றவளுக்குத் தோன்றாமல் இருக்குமா ? முதல் கேள்வியே பையன் என்ன படிச்சுருக்கான்? என்ன வேலை பாக்குறான்? இது தானே?
வேலைக்குப் போகாமல் பொறுப்பில்லாமல் சுற்றும் நல்லவனுக்கு என் மகளா? அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த பித்தளை குடம் இடுப்பிலிருந்து நழுவி விழுந்தது. பூதம் வெளிவரப் போகிறது என்றுத் தெரிந்ததுதான். இத்தனை விரைவாக?
"என்ன இவ்ளோ அசால்ட்டா கீழ போடற? இந்த நசுங்கிப் போன குடத்தை சரி பண்ணி உன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு சீர் வை. எனக்கு இன்னும் கணமா வேற புதுசா வாங்கி வை. எங்க அத்தை வரும்போது சமையல் தடபுடலா இருக்கணும் . புரிஞ்சுதா?"
அவளின் பேச்சும் பாவனையும் அப்படியே அத்தை போலவே இருந்தது. இவள் எனக்குப் பிறந்தவள் தானா? அருணாவுக்கு பல வருடங்களாக இதே சந்தேகம் தான்.
தீபா பிறந்ததுக்கு கூட பார்வதிக்கு பிடிக்கவில்லை என்றுக் கூறலாம். தனக்கு ஒரே ஒரு மகன் இருக்க வீட்டுக்கு வந்தவளுக்கு மூன்றா ? அதிலும் இப்போதைக்கு அடுத்து பிறந்ததும் பெண். அண்ணன் இனி எங்கிருந்து தன்னை கவனிக்கப் போகிறான்? அவளின் மனதின் வக்கிரம் அவள் சொல்லிலும் வெளிப்படும்.
" எங்க அண்ணே இத்தனை நாளு அள்ளிக் குடுத்த எடத்துல இனிமே கிள்ளித்தான் கொடுக்கணும். ஏற்கனவே , அன்னிக்கு எனக்கு செய்யறதுக்கு அழுகை தான். இனி? ரெண்டு பொட்டைப் புள்ள. கேக்கவா வேணும்? இனியா பத்தி கவலை இல்லை. என்னோட மருமக. பாவம் தீபாவுக்கு தான் அசல்ல பாக்கணும்"
"என்ன அண்ணி! புள்ளையே இப்பதான் பொறந்திருக்கு. இப்ப என்ன அதைப் பத்தி?
"எத்தனை சொன்னாலும் அடங்குபவளா பார்வதி. இனியாதான் என் மருமக திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருப்பாள். தேவேந்திரனுக்கும் ஒரு விதத்தில் அது மகிழ்ச்சி தான். தீபக் நினைவு தெரிந்து பேசும் வரை.
மீன் கடலைத் தேடும் ...
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.