• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 7

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
17

அரங்கம் 7

இரண்டு நாட்களுக்கு என்று மகனுடன் தங்கவென்று வந்தவள் , இன்னமும் ஒருநாள் கூடுதலாக தங்கிவிட்டு சென்றாள் மாலதி. ஆஸ்திரேலியாவிலிருந்து மகனுக்கு என்று நிறைய பரிசுப்பொருட்களும், துணிமணிகளும் வாங்கிவந்திருந்தவள் கணவனுக்காக என்றும் சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருந்தாள். மாலதி கிளம்பி சென்றவுடன் அப்பாவும் மகனுமாக அவற்றை எடுத்து வைத்தார்கள்.

கிளம்புவதற்கு முன் மாலதி மீண்டும் தனது மகனிடம் "என்னோட வந்துடறியா கண்ணா.. "என்று கேட்டாள். அதற்க்கு ரங்கனிடமிருந்து பதில் இல்லை. என்னவோ அவன் மனதிற்குள் ஒன்று அப்பா அம்மா தான் என்று மற்ற குடும்பங்களைப்போல ஒன்றாக இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் இத்தனை வருஷங்களாக அம்மாவுடன் இருந்ததை போல அப்பாவுடன் இருக்க வேண்டும் என்று பலமாக யோசிக்க ஆரம்பித்திருந்தது சின்ன உயிர்.

மாலதி ஒன்றும் சொல்லவில்லை. ஒருபக்கம் மகன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற தாய்மை.இன்னொருபக்கம் மகன் தன்னை தூர நிறுத்த முயற்சிக்கிறான் என்ற எண்ணம் அவளது ஈகோ வை அவளையும் அறியாது தட்டி எழுப்பியிருந்தது.சம்மேப காலமாக பழகிய தனிமை ,அது அவளுக்கு பிடித்திருந்தது. சுதந்திரமாக கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் தனது வாழ்க்கையை பிடித்தபடிக்கு நடத்தும் சதோஷத்தை அவள் அனுபவிக்கத் தொடங்கியிருந்தாள். மொத்தத்தில் அவள் விருப்பம் என்ன என்று அவளுக்கே புரியவில்லை.

சென்னை வந்தபிறகு மீண்டும் தனது அலுவலக வேலைகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டவளுக்கு பெற்றவர்கள் தன்னுடன் அதிகம் தங்குவதில்லை என்பதோ மகன் தன்னை அழைத்துப் பேசவில்லை என்பதோ எதுவும் உறுத்தவில்லை.

அவ்வப்பொழுது கணவன் சுந்தரம் மட்டும் ஆவலுடன் இவளுக்கு அழைப்பான்.இவளோ ."என்ன வேலை நேரத்துல பண்ணியிருக்கீங்க சுந்தரம்? நீக்க எப்படி இருக்கீங்க? ரங்கன் எப்படி இருக்கான் ? சரி ,எனக்கு நிறைய வேலை இருக்கு.திரும்ப கூப்பிடறேன் "என்றுவிட்டு அவனது பதிலகுக்குக் கூட காத்திராமல் வைத்துவிடுவாள்.

இரண்டு மூன்று முறை மனைவியை அழைத்து பேசியவனுக்கு முகத்தில் அறை வாங்கிய வலி. சொந்த காசில் சூனியம் வைத்துகொள்வானேன் 'என்று அவளுக்கு அழைத்து பேசுவதை விடுத்தான்.

நாட்கள் என்னவோ சாதாரணமாகத்தான் போய் கொண்டிருந்தது. ஆனால் மருந்துகளின் துணை இல்லாமல் தனியாக சமாளிக்க முடியவில்லை சுந்தரத்தால். மருந்துகளுக்கு தனது மூளையும்,உடலும் அடிமையாவதை சுந்தரம் நிச்சயம் விரும்பவில்லை. வெளியே சொல்ல முடியாத அவஸ்தைகள் அவனை தாக்கியது.

ரங்கன் கூகிள் உதவியுடன் அப்பா எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பற்றி தெரிந்து வைத்திருந்தான். அப்பா தனது மனதாலும் உடலாலும் நிறைய கஷ்டப்படுவதாக அவனுக்கு தோன்றியது.என்ன செய்யவேண்டும் என்றும் அந்த பதிமூன்று வயது குழந்தைக்கு புரியவில்லை. ஆனால் இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று மட்டும் புரிந்தது.அவன் மனதில் அப்பாவுக்கு என்ன என்ற பெரிய கேள்வி.

மருந்துகளின் வீரியத்தால் நாளுக்குநாள் சுந்தரத்தின் உற்பத்தி திறன் (productivity) குறைய ஆரம்பித்தது. நிறைய நேரம் தூங்குவதும்,அலுவலகத்திற்கு தாமதமாக கிளம்புவதும் , காலை உணவை தயாரிக்க தவறுவதும், ஜிம்முக்கு செல்லாமல் சாக்குகள் சொல்வதும் அதிகமாக ஆரம்பித்தது.

தானே தனக்கும் அப்பாவுக்குமாக உணவு தயாரித்து ,அப்பாவுக்கு எழுப்பி காபி வார்த்துக் கொடுத்துவிட்டு கிளம்புவான் ரங்கன். முன்பு போல் அப்பா இப்போது இல்லை என்பது அவனுக்கு பெரிய வலியை மனதில் கொடுத்திருந்தது.

திருவேங்கடமும் கோதையும் இப்போது அதிகமாக கோவில்களை தரிசனம் செய்ய சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நேரம் அவர்கள் இருவரும் பத்ரியில் இருக்க கூடும்.இன்னமும் வருவதற்கு பத்து நாட்கள் ஆகும் . அவர்களிடமும் உதவி கேட்க முடியாது.

இதெல்லாம் போதாது என்று சுந்தரத்திற்கு' ட்ரய் ஐஸ் ' வந்துவிட்டிருந்தது.எடுத்துக்கொள்ளும் மனநல மருந்துகளின் புண்ணியமாக இருக்கக்கூடும்.அதனாலோ என்னவோ வெகுநேரம் சுந்தரத்தால் மடிக்கணியை பார்க்க முடியவில்லை. தனது இந்த பிரச்சனைகள் அவனுக்குள் இன்னமும் தாழ்வு மனப்பான்மையை கூட்டியது.

அப்பாவின் உதவியும் வழிகாட்டுதலும் சமீப காலங்களில் ரங்கனுக்கு அதிகமாக கிடைக்காததாலோ என்னவோ அவனது மதிப்பெண்கள் வெகுவாக தாழ்ந்திருந்தது.

ரங்கனுக்கு எப்படி மீண்டும் விட்டதை பிடிப்பது என்று தெரியவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டான். ஆனாலும்,அப்பாவை விட்டு செல்லவேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

சரியாக வேலைகளை செய்ய முடியாமல் அதிகமாக சுந்தரம் தடுமாறிக்கொண்டிருந்த நேரமது. மகன் தன்னிடம் வந்து மதிப்பெண் பட்டியலை நீட்டவும், அதைப்பார்த்தவனுக்கு கடுமையான அதிர்ச்சி. அநேகமாக எல்லா பாடங்களிலும் நாற்பதுகளில் வாங்கியிருந்தான் ரங்கன்

தன்னிடமும் தவறு உள்ளது என்று யோசித்தான் சுந்தரம், ஏற்கனவே இரண்டு நாட்களாக மருந்துகளை சரியாக சாப்பிடாததின் விளைவாக மனநிலை ஊசலாட்டத்தில் இருந்தவனுக்கு மனம் இன்னுமே சோர்ந்து போனது. அலுவலகத்திலும் பிரச்சனைகள். மனைவியும் அருகில் இல்லை. மகனுக்கு தேவையானவற்றை செய்யமுடியாத மனநிலை. மதிப்பெண் பட்டியலில் கையெழுத்து போட்டவன் மகனை திட்டவோ அடிக்கவோ இல்லை.அடுத்தமுறை நல்ல மதிப்பெண்கள் வாங்கணும் என்று சொல்லவும் இல்லை. அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

அடுத்தவாரம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது. ஒருவாரமாக மருந்துகளை சாப்பிடாததால் சுந்தரம் தனது நிலையில் இல்லை. அப்பாவை பள்ளிக்கு அழைத்துச்செல்லவே ரங்கனுக்கு பயமாக இருந்தது. அம்மாவுக்கு அழைக்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தான். அம்மாவின் அலைபேசி எண் அணைக்க பட்டிருந்தது. தொடர்பு கொள்ள முடியவில்லை. துவண்டது குழந்தை மனம்.ஒரு நேரத்தில் ஒரு மாதிரியாகவும்,மற்றொரு நேரத்தில் வேறு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் தகப்பனை ரங்கனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பாவுக்கு மனநல பிரச்சனை உண்டு என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தான்.

அன்று இரவு அப்பா வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை பொடி செய்து தோசை மிளகாய் பொடியுடன் கலந்து கொடுத்துவிட்டான் ரங்கன். அப்பா மருந்துகள் எடுத்துக்கொண்டால் கொஞ்சம் சரியாகுமா என்ற ஆசை மறுநாள் ஆசிரியர்களை சந்திக்க சென்ற சுந்தரம் சரியாகவே பேசவில்லை. சுந்தரத்தின் பேச்சில் எரிச்சலும்,கோவமும் ஆசிரியர்களை குற்றம் சாட்டும் வார்த்தைகளும் இருக்கவே ,அவர்களுக்கும் கோவம் வந்து விட்டது.

அதைப்புரிந்துகொள்ளும் நிலைமையில் சுந்தரம் இல்லை. பேச்சு தடிக்கவே,,"இந்த அகடாமிக் இயர் முடிஞ்சபிறகு உங்க பையனுக்கு டி சி இஸ்யூ பண்ணறோம்.கூட்டிகிட்டு போங்க "என்றுவிட்டார்கள். பள்ளியின் காரிடாரில் தன்னிலை கெட்டு கத்திகொண்டே வந்தான் சுந்தரம். பள்ளியை பற்றியும் ஆசிரியர்களை பற்றியும் அவன் திட்டிய வார்த்தைகள் இதுவரை ரங்கன் கேட்டதில்லை.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது எனது மனதில் தோன்றுவது இதுதான் ,'எதற்க்காக ரங்கன் பெற்றவர்களை பிரிந்து இருக்கணும்? மனநிலை சரியில்லாத நிலையில் பிள்ளையை தன்னால் வளர்க்க முடியுமா என்று சுந்தரம் ஏன் யோசிக்கவில்லை? மாலதிக்கு பெற்ற பிள்ளையை விட்டு தனது வாழ்க்கை என்று எப்படி இருக்க முடிகிறது? இருவருக்கும் பிள்ளையை வளர்க்க முடியவில்லை என்றால் ஏதாவது ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கலாமே என்றெல்லாம் இது போன்ற விடை தெரியாத கேள்விகளை நான் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன் .

மறுநாள் பள்ளிக்கு செல்லவே ரங்கனுக்கு பிடிக்கவில்லை. சுந்தரம் இன்னமும் எழுந்திருக்கவில்லை .வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்தவற்றை செய்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினான் ரங்கன். அவன் மனதில் ஏனோ இனி தான்தான் அப்பாவை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அழுத்தமாக பதிந்தது.

அடுத்து வந்த நாட்களில் சுந்தரம் தனது வேலையை விட்டிருந்தான். ஏதோ பணத்திற்கு பஞ்சமில்லை.சேர்த்து வைத்திருந்தான். பிள்ளைக்காக என்று மாலதி போன் செய்து பேசுவதில்லையே தவிர மாதம் முப்பதாயிரம் ரூபாய்களை கணவனின் வாங்கிக்கணக்குக்கு தவறாமல் அனுப்பி விடுவாள்.

அப்பா மகன் இருவருக்குமே மோசமான நாட்கள் அவை. பள்ளியில் திடீரென நிறைய கேள்விகள் கேட்டார்கள் ." உன்னோட பேரன்ட்ஸ் ஏன் பிரிஞ்சு இருக்காங்க ? பொதுவா பசங்க அம்மாவோட தானே இருப்பாங்க.நீ எதுக்கு அப்பாவோட இருக்க? உங்கப்பா எப்பவுமே இப்படித்தான் பிஹவ் செய்வாரா? உன்னோட பேரன்ட்ஸ் டிவோர்ஸ் பண்ணிகிட்டாங்களா? பின்ன ..இந்த மாதிரி மெண்டலோட எபப்டி இருக்க முடியும்? நீயும் ஹாப் மைண்டாட் தானே..அதனால உன்னையும் உங்கம்மா வேணாம்னு சொல்லிட்டாங்களா..."

ரங்கனுக்கு பள்ளி நரகம் என்றே தோன்றியது. வீட்டில் அப்பாவிடம் சொல்லி அழவும் பிடிக்கவில்லை.அவரே இப்போதுதான் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்.வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருப்பதை ரங்கன் பார்த்தானே !

மாணவர்கள் ரங்கனையம் அவன் அப்பாவையும் கிண்டலடித்து மட்டமாக பேச ,அவர்களுடன் ரங்கனுக்கு சண்டைகள் வந்தது. எதிர்த்து நிற்பவனை 'அப்படியே அவங்க அப்பா மாதிரியே பைத்தியம் இவனும். வந்து சேருதுங்களே' என்றுவிட்டு ரங்கராஜனை பள்ளியின் அலுவலக அறையில் அமரவைத்தார்கள்.

அங்கே வரும் ஆசிரியர்கள் நக்கலாகவும் ,கோவமுமாக பேசி ரங்கனை அழ வைத்தார்கள். சில சமயம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் ரங்கராஜன் வகுப்பெடுகளை முடிக்கவில்லை என்று அடிக்கவும், தரக்குறைவாக பேசவும் செய்தார்கள். அவன் அப்பா சுந்தரம் அன்று நடந்துகொண்ட முறைக்கு ரங்கனிடம் வன்மம் தீர்த்தார்கள்.

குழந்தை என்றோ, அந்த பள்ளியின் மாணவன் என்றோ ஏனோ அவர்களுக்குத் தோன்றாமல் போனது. சக மாணவர்கள் ரங்கா ராஜனை கிண்டலடிப்பதுடன் அதில் பள்ளி ஆசிரியர்கள் தட்டிகேட்காமல் விட்டது எந்த வகையில் சேர்ப்பது?

இது எதையுமே அப்பாவிடம் சொல்லாமல் விடுத்தான் ரங்கராஜன். முன்பைவிட இன்னமும் அதிகமாக படிப்பில் நேரத்தை செலுத்தினான். மனதை கட்டுப்படுத்தி ,ஒரு தபஸ் போல அதை செய்தான். நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள பழகினான். அப்பாவையும் கவனித்துக்கொண்டு தானும் தன்னை அமைதியாக வைத்துக்கொள்ள முயன்றான்.

'குருவி தலையில் பணங்காய் வைத்தது போல ' என்று சொல்வது உண்டு. ரங்கராஜனின் நிலைமையில் அதை நான் பார்க்கிறேன். சுந்தரத்துக்கு வேலை கிடைத்தது. சுந்தரத்திற்கு தினமும் மருந்து தருவதை தனது வழக்கம் ஆக்கிக் கொண்டான் ரங்கன். கோதையும் திருவேங்கடமும் பிள்ளை பேரனை பார்க்கவென்று பெங்களூரு வந்தார்கள். கோவில்களுக்கு சென்றதில் இருவருக்கும் அலாதி மகிழ்ச்சி.

மாலதியின் பெற்றவர்கள் இப்போது பெங்களூருவில் இரண்டாவது பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் எதேச்சையாக சூப்பர் மார்க்கெட்டில் கோதை பொருட்களை வாங்குமிடத்தில் பில் போடுவதற்காக நின்றுகொண்டிருந்தாள் கோதையின் நாத்தனார்.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிந்தது.கோதையுடன் வந்திருந்த ரங்கராஜனிடம் கூட பேசவில்லை அவனது அம்மம்மா.

அம்மம்மா என்று ரங்கராஜன் அழைத்ததை கூட காதுகளில் வாங்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் அவள். ரங்கராஜனின் சித்தி ரங்கனை பார்த்துவிட்டு நலம் விசாரித்தவள் மாமியுடனும் பேசிக்கொண்டிருந்தாள். கோதை நேரடியாகவே கேட்டுவிட்டாள் ,"எம்பிள்ளை அமெரிக்காவுல லட்ச லட்சமா சம்பாதிச்சப்போ எல்லாரும் நன்னா பழகினேள். இப்போ இதே ஊருல தான அவனும் இருக்கான். ஏதாவது வேணுமா அத்திம்பேர்னு கேக்கக்கூட உங்களால முடியலையே ". என்னவென்று பதில் சொல்லுவார்கள்?

சிரித்து மழுப்பிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

 

Author: Paithani
Article Title: Arangam 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
164
நல்ல கணவன் மனைவி இருவரும் இல்லை
நல்ல பெற்றவர்களாவும்
இருவரும் இல்லை....
என்ன வேண்டும்
என்றே தெரியாத ஒரு வாழ்க்கை
எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியவில்லை இவர்களுக்கு....

இவர்களும் சந்தோஷமாக இல்லை
இவர்கள் பெற்ற பிள்ளையும் சந்தோசமாக இல்லை....

இன்றைய பல குடும்பம்
இப்படி தான்
இருக்கு...

அன்பும் அரவணைப்பும்
விட்டுக் கொடுத்தலும்
இல்லாத உறவு
இப்படி தான் ஆகும்....

என்ன சொல்றது.....
 
Top Bottom