ராஜா என்பார், மந்திரி என்பார்!
வாழ்வில் மிகவும் யோசித்து கடும் பிரயத்தனப்பட்டு செயலாற்றிய சில விஷயங்கள் சில வெகு நாட்களுக்குப் பிறகு 'ஏன் இப்படி செய்தோம்?' என்று தோன்றச் செய்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாமல் போய்விடும். சிலர் மேல் காரணமில்லாமல் ஒரு பிரியம் தோன்றுவதும் நடக்கும். அத்தகைய ஒன்றுதான் 'சேச்சி' என்று நாங்கள் பெயர் சூட்டிய தங்கம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றியது.
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவ்வப்போது எங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வார். கைவலி, மூட்டு வலி, சளி போன்ற சாதாரண பிரச்சனைகளுக்காக தான் வருவார். பேச்சில் மலையாளம் மணக்கும். ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி, 'அம்மச்சி! அவர் வீட்டில் முன்பு சமையல் வேலை செய்தேன். நல்லா மீன் குழம்பு வைப்பேன்.. ஒரு நாள் மீன் வாங்கித் தாங்க அம்மச்சி! வச்சுத் தரேன்' என்பார். 'சரி!' என்றோ 'அப்படியா? நல்லது!' என்றோ கூறி அனுப்பி விடுவோம். அப்போது அவர் ராணி என்ற பெயரில் ஓ.பி. சீட்டு பதிந்து கொண்டு வருவார்.
திடீரென்று ஒரு முறை வித்தியாசமான அலங்காரத்துடன் வந்தார். ஏற்கனவே நீளமாக இருந்த தலைமுடியில் ஒட்டு முடியும், குஞ்சமும் வைத்துப் பின்னி தலை முழுவதும் பூ வைத்து, கை நிறைய வளையல்கள், பட்டுப்புடவை அணிந்து வந்தார். சாதாரண நாளில் அப்படிப்பட்ட வித்தியாசமான அலங்காரத்துடன் வரவும், 'மருத்துவமனை ஊழியர்கள் சிலர் இவரது கணவர் இறந்து போய் பத்து வருடம் ஆகிறது. நன்றாகத்தான் இருந்தார், திடீரென்று இப்படி ஆகிவிட்டார்' என்று கூறினார்கள். அந்த முறை என்ன உடம்புக்கு என்று கேட்டதற்கு ஒழுங்கான பதில் வரவில்லை. அழுத்திக் கேட்டால் 'எனக்கும் மம்முட்டிக்கும் நாளைக்குச் சென்னையில் கல்யாணம். எல்லாரும் வாங்க' என்றார். பேச்சும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்க உறவினர்களை அழைத்து வரச்சொன்னதற்கு ஏதேதோ புலம்பியவாறு சென்றுவிட்டார். அடுத்து வந்த நாட்களிலும் அதுவே தொடர்ந்தது. அவ்வப்போது வருவதும் மம்முட்டி, சூர்யா இவர்களுடன் எனக்குத் திருமணம் என்று மாற்றி மாற்றிச் சொல்வதும் உண்டு. இவருக்கு மனநலப் பிரச்சனை, எனவே மனநல மருத்துவரின் கவனம் தேவை என்ற நோக்குடன் உறவினர்களைப் பற்றி விசாரிக்க, போலீசார் அவருக்குக் கணவர், குழந்தைகள் இல்லை. தூரத்து உறவினர்கள் தான் இருக்கின்றனர், அவர்களும் சேச்சியைப் பராமரிக்க விரும்பவில்லை என்று கூறினர். இதனிடையே ஒருமுறை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, பரிசோதனையில் இதயப் பிரச்சனை இருப்பது தெரிந்தது
அவ்வப்போது சில தள்ளுவண்டிக் கடைகளில் வேலை செய்வதாகவும், கிடைத்த இடத்தில் தூங்குவதாகவும் சொன்னார்கள். அமைதியாக அவர் வருவதும் போவதுமாக இருந்த வரையில் ஏதும் பிரச்சனை இல்லை. ஒருமுறை கோடை நேரம் அரசியல் கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தலில் சேச்சியை சம்பளத்துக்கு அமர வைத்திருக்கின்றனர். கட்சிக் கரையிட்ட நீளத் துண்டு ஒன்றையும் கொடுத்திருக்கின்றனர். அதன்பின் அந்த துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு 'நான் மந்திரியாக்கும்' என்று கூறி பார்ப்போரை அதிகாரம் செய்வது போல் பேசுவார். திடீரென ஒரு முறை அரசு மருத்துவமனையின் பொறுப்பிலிருந்த ஒரு இடிந்த குடியிருப்பு ஒன்றில் தங்க ஆரம்பித்தார். அரசு கட்டிடங்கள் சேதமுற்றால் உடனடியாக அதை இடித்துவிட முடியாது. வெகுநாட்களாகப் பூட்டியே கிடக்கும். அதில் சட்டிபானை, உடைகள் சகிதம் குடியேறியிருந்தார் சேச்சி.. இரவில் க்வார்ட்டர்ஸுக்கு ஆண்கள் சிலர் வந்து போவதாக அருகில் குடியிருப்போர் புகார் அளித்தனர். அந்தக் குடியிருப்பின் காம்பவுண்ட் கேட்டை மூட, சேச்சியை வேறு இடங்களுக்கு அனுப்ப என்று எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. வாடகை வீடு கூட பார்த்தாயிற்று, அதுவும் சரிப்படவில்லை. காவல்துறைக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தீராத தலைவலியாக மாறிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு நல்ல மழை நாளில் தீவிர மூச்சிரைப்புடன் வந்தார். வேறு யாரும் உடன் இல்லாத நிலையில் மனிதாபிமானம் கருதி அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உடல்நிலை ஒரு வாரத்துக்குள் சீராகி விட, மனநிலை சரியாவதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இடிந்த கட்டிடத்தில் இருந்து அவரது பொருட்கள் மருத்துவமனை வார்டில் குடியேற ஆரம்பித்தன. மூன்று கட்டில்களை ஆக்கிரமித்துக்கொண்டு, மற்றவர்களிடம் 'நான் மந்திரி, சட்டசபைக்குப் போறேன், மம்முட்டியைப் பார்க்கப் போறேன்' போன்ற கதைகளையும் பேசியவாறு இருந்தார். எல்லாருக்கும் இவரைக் கிண்டல் செய்தே பொழுது போனது.
தினமும் உள்நோயாளிகள் மாறி மாறி வருவதும், சேச்சி மட்டுமே நிரந்தர நோயாளியாகவும் இருந்த நிலையில், கிண்டல் செய்யும் ஒவ்வொருவரையும் தினமும் மருத்துவர்களும் செவிலியர்களும் அதட்ட வேண்டியதாயிருந்தது. இதில் ஒரு லாபம் என்னவென்றால் சுத்தத்திற்குப் பெயர் போனவர் சேச்சி. அதனால் வார்டும், கழிப்பறையும் மிகத் தூய்மையாக இருந்தது. அசுத்தமாக்குபவர்களைக் கடுஞ்சொல் பேச ஆரம்பித்தார். அவர்களும் கமுக்கமாக என்ன கேலி செய்தார்களோ.. அமைதியாக இருக்கும் சேச்சியின் சத்தம் அதிகரித்தது. புகார்களும் அதிகரித்தன.. இது போதாதென்று தினமும் சேச்சிக்கு அவருடைய அலைபேசியில் நிறைய அழைப்புகள் வந்தன. எப்படியோ இவரது எண்ணை வைத்திருந்த வம்பர்கள் சிலர், 'மம்முட்டி வந்திருக்கிறார், சீக்கிரம் வாங்க' என்பதும் 'முதலமைச்சர் வந்திருக்கிறார், மந்திரி இப்படி வரவேற்காமல் உள்ளே இருக்கிறீர்களே' என்பதும் இவர் உடனே வேக வேகமாக வெளியே ஓடுவதும் நடந்தது.
உடல்நிலை தேறி விட்டது; மனநல மாத்திரைகள் எதையும் அவர் எடுப்பதற்குத் தயாராக இல்லை. தூக்கம் வருகிறது தலை சுற்றுகிறது என்று கூறித் தள்ளிப் போட்டார். புகார்கள் அதிகரித்து, வெளியேற்றியாக வேண்டிய கட்டாயம். 'உங்களுக்கு குணமாகி விட்டதா? வீட்டுக்குப் போகலாமா?' என்றால் 'நான் குவாட்டர்ஸுக்குத் தான் போவேன்' என்பார். மீண்டும் க்வார்ட்டர்ஸ், மீண்டும் பாலியல் தொல்லை என்றால் இதய நோய், மனநோய் இருக்கும் சேச்சியின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை.
ஏன் இந்த நிலை? சேச்சிக்கு என்ன பிரச்சனை? மனநோய் பல காரணங்களால் வரலாம். தனிப்பட்ட பிரச்சனை, பிறவிக் குறைபாடு, இவற்றுடன் மரபுவழிக் காரணங்களும் முக்கியமானவை. 'இவங்க அப்பா மாதிரியே இவனுக்கும் முன்கோபம் அதிகம்', 'எங்க அம்மாவுக்கு சுகர்.. எனக்கும் இருக்கு' என்பதைப் போலவே மனநோய்களும் மரபுவழி சார்ந்து வரும்.
மூளையில் சுரக்கும் அகச்சுரப்பி வேதிப்பொருட்களான டோபமின், செரடோனின், நார்- எபினஃப்ரின் இவற்றின் சமச்சீரின்மையே பெரும்பாலான மன நோய்களுக்குக் காரணம். பெரும்பான்மையான மனநோய்களில் மாயைகள் (delusions) தோன்றும். காதில் ஏதோ சத்தம் கேட்பதாகவும், யாரோ தம்மிடம் பேசுவதாகவும், தன்னைச் செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். சிலருக்கு அதிகபட்ச சந்தேகம் வரும். தன்னை யாரோ கொல்லப்போவதாக உறுதியாக நம்புவார்கள். தன் இணையின் ஒழுக்கம் குறித்த சந்தேகமும் நிறைய பேருக்கு வரும். அந்த வகையில் சேச்சிக்கு ஏற்பட்டது தன்னைக் குறித்த மிக உயர்வான சிந்தனை. 'நான் ராஜா/ ராணி, நான் மந்திரி.. தனக்கு அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது' என்பதாக.
எந்த மன நோய்க்கும் மருத்துவம் உண்டு. நோயின் அறிகுறிகளை நிறுத்தி வைக்க அற்புதமான மருந்துகளும் உண்டு. கீழ் மத்தியதர வகுப்பினருக்கும் அதற்கும் கீழ் செல்வநிலை உடையவர் ஒரு மனநோயாளியை முழுவதுமாக பராமரிப்பது மிகக் கடினமே. தன் குழந்தையாகவோ, தன் இணையாகவோ இருந்தால் ஒருவர் முழு நேரமும் செலவிட்டு அவரைப் பராமரிக்க முடிகிறது. நெருங்கிய உறவில் ஆள் இல்லாத சூழலில் இத்தகைய கவனிப்பு சாத்தியமில்லை. அதுவும் சமூகம் தரும் அழுத்தங்கள் மோசமானவை.
சேச்சி விஷயத்தில் சமூகம் வகுத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்குள் அவர் அடங்காததால் ஆரம்பப் புள்ளியிலேயே உறவுகளால் விலக்கி வைக்கப்படுகிறார். Bipolar disorder போன்ற வியாதிகள் முதலில் அவ்வப்போது வந்து போகும். இடைப்பட்ட காலத்தில் நோயாளி சாதாரணமுகவே இருப்பார். முதல் தடவையிலேயே சிகிச்சை அளித்தால் நோய் நீண்டு போகும் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
மனநோய் காரணமாக தன்சுத்தம் பேணாதவர்களும் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்படும் வாய்ப்பு அதிகம். மனநல மருத்துவரைச் சென்று பார்ப்பது அடுத்த தடைக்கல். யாருக்காவது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று தயக்கம் பெரிது. பைத்தியம் என்ற முத்திரை விழுவதை விட பேய் பிடித்துவிட்டது என்றோ, 'இவரது கேரக்டர் சரியில்லை வெளியே துரத்திட்டோம்' என்றோ கூறுவது குடும்பத்தவர்க்கு ஏற்புடையதாக இருக்கிறது. மனநல ஆலோசகரை நாடுவதை விட பேய் ஓட்டுபவரையோ, சி.டி. ஸ்கேனுக்கு எழுதித் தந்து ஏதோ மருந்து கொடுப்பவரையோ மக்கள் நாடுகின்றனர். பலரும் எதிர்பார்ப்பது உடனடி தீர்வு. அது இத்தகைய நோய்களில் சாத்தியம் இல்லை. இவை பெரும்பாலும் நிரந்தர நோய்கள். கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
சேச்சியை முதலிலேயே யாராவது மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது. மருத்துவமனையில் வைத்தே சேச்சியைத் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலையில் சட்டம் என்ன சொல்கிறது என்று விசாரித்தோம். சட்டம் 'முதலில் உறவினர்களைக் கண்டுபிடி' என்றது.
இந்த ஆறு மாதங்களில் புதிதாக மாறிருந்த போலீஸார் உறவினர்களை அணுகும் பணியில் மீண்டும் இறங்கினர். பலன் பூஜ்யம் தான்.
உறவினர் ஆதரவு இல்லை என்றாகிவிட்ட சூழலில் சேச்சிக்கு அடுத்து என்ன நிகழ்ந்தது? வரும் இதழில்...
வாழ்வில் மிகவும் யோசித்து கடும் பிரயத்தனப்பட்டு செயலாற்றிய சில விஷயங்கள் சில வெகு நாட்களுக்குப் பிறகு 'ஏன் இப்படி செய்தோம்?' என்று தோன்றச் செய்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாமல் போய்விடும். சிலர் மேல் காரணமில்லாமல் ஒரு பிரியம் தோன்றுவதும் நடக்கும். அத்தகைய ஒன்றுதான் 'சேச்சி' என்று நாங்கள் பெயர் சூட்டிய தங்கம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றியது.
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவ்வப்போது எங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வார். கைவலி, மூட்டு வலி, சளி போன்ற சாதாரண பிரச்சனைகளுக்காக தான் வருவார். பேச்சில் மலையாளம் மணக்கும். ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி, 'அம்மச்சி! அவர் வீட்டில் முன்பு சமையல் வேலை செய்தேன். நல்லா மீன் குழம்பு வைப்பேன்.. ஒரு நாள் மீன் வாங்கித் தாங்க அம்மச்சி! வச்சுத் தரேன்' என்பார். 'சரி!' என்றோ 'அப்படியா? நல்லது!' என்றோ கூறி அனுப்பி விடுவோம். அப்போது அவர் ராணி என்ற பெயரில் ஓ.பி. சீட்டு பதிந்து கொண்டு வருவார்.
திடீரென்று ஒரு முறை வித்தியாசமான அலங்காரத்துடன் வந்தார். ஏற்கனவே நீளமாக இருந்த தலைமுடியில் ஒட்டு முடியும், குஞ்சமும் வைத்துப் பின்னி தலை முழுவதும் பூ வைத்து, கை நிறைய வளையல்கள், பட்டுப்புடவை அணிந்து வந்தார். சாதாரண நாளில் அப்படிப்பட்ட வித்தியாசமான அலங்காரத்துடன் வரவும், 'மருத்துவமனை ஊழியர்கள் சிலர் இவரது கணவர் இறந்து போய் பத்து வருடம் ஆகிறது. நன்றாகத்தான் இருந்தார், திடீரென்று இப்படி ஆகிவிட்டார்' என்று கூறினார்கள். அந்த முறை என்ன உடம்புக்கு என்று கேட்டதற்கு ஒழுங்கான பதில் வரவில்லை. அழுத்திக் கேட்டால் 'எனக்கும் மம்முட்டிக்கும் நாளைக்குச் சென்னையில் கல்யாணம். எல்லாரும் வாங்க' என்றார். பேச்சும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்க உறவினர்களை அழைத்து வரச்சொன்னதற்கு ஏதேதோ புலம்பியவாறு சென்றுவிட்டார். அடுத்து வந்த நாட்களிலும் அதுவே தொடர்ந்தது. அவ்வப்போது வருவதும் மம்முட்டி, சூர்யா இவர்களுடன் எனக்குத் திருமணம் என்று மாற்றி மாற்றிச் சொல்வதும் உண்டு. இவருக்கு மனநலப் பிரச்சனை, எனவே மனநல மருத்துவரின் கவனம் தேவை என்ற நோக்குடன் உறவினர்களைப் பற்றி விசாரிக்க, போலீசார் அவருக்குக் கணவர், குழந்தைகள் இல்லை. தூரத்து உறவினர்கள் தான் இருக்கின்றனர், அவர்களும் சேச்சியைப் பராமரிக்க விரும்பவில்லை என்று கூறினர். இதனிடையே ஒருமுறை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, பரிசோதனையில் இதயப் பிரச்சனை இருப்பது தெரிந்தது
அவ்வப்போது சில தள்ளுவண்டிக் கடைகளில் வேலை செய்வதாகவும், கிடைத்த இடத்தில் தூங்குவதாகவும் சொன்னார்கள். அமைதியாக அவர் வருவதும் போவதுமாக இருந்த வரையில் ஏதும் பிரச்சனை இல்லை. ஒருமுறை கோடை நேரம் அரசியல் கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தலில் சேச்சியை சம்பளத்துக்கு அமர வைத்திருக்கின்றனர். கட்சிக் கரையிட்ட நீளத் துண்டு ஒன்றையும் கொடுத்திருக்கின்றனர். அதன்பின் அந்த துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு 'நான் மந்திரியாக்கும்' என்று கூறி பார்ப்போரை அதிகாரம் செய்வது போல் பேசுவார். திடீரென ஒரு முறை அரசு மருத்துவமனையின் பொறுப்பிலிருந்த ஒரு இடிந்த குடியிருப்பு ஒன்றில் தங்க ஆரம்பித்தார். அரசு கட்டிடங்கள் சேதமுற்றால் உடனடியாக அதை இடித்துவிட முடியாது. வெகுநாட்களாகப் பூட்டியே கிடக்கும். அதில் சட்டிபானை, உடைகள் சகிதம் குடியேறியிருந்தார் சேச்சி.. இரவில் க்வார்ட்டர்ஸுக்கு ஆண்கள் சிலர் வந்து போவதாக அருகில் குடியிருப்போர் புகார் அளித்தனர். அந்தக் குடியிருப்பின் காம்பவுண்ட் கேட்டை மூட, சேச்சியை வேறு இடங்களுக்கு அனுப்ப என்று எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. வாடகை வீடு கூட பார்த்தாயிற்று, அதுவும் சரிப்படவில்லை. காவல்துறைக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தீராத தலைவலியாக மாறிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு நல்ல மழை நாளில் தீவிர மூச்சிரைப்புடன் வந்தார். வேறு யாரும் உடன் இல்லாத நிலையில் மனிதாபிமானம் கருதி அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உடல்நிலை ஒரு வாரத்துக்குள் சீராகி விட, மனநிலை சரியாவதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இடிந்த கட்டிடத்தில் இருந்து அவரது பொருட்கள் மருத்துவமனை வார்டில் குடியேற ஆரம்பித்தன. மூன்று கட்டில்களை ஆக்கிரமித்துக்கொண்டு, மற்றவர்களிடம் 'நான் மந்திரி, சட்டசபைக்குப் போறேன், மம்முட்டியைப் பார்க்கப் போறேன்' போன்ற கதைகளையும் பேசியவாறு இருந்தார். எல்லாருக்கும் இவரைக் கிண்டல் செய்தே பொழுது போனது.
தினமும் உள்நோயாளிகள் மாறி மாறி வருவதும், சேச்சி மட்டுமே நிரந்தர நோயாளியாகவும் இருந்த நிலையில், கிண்டல் செய்யும் ஒவ்வொருவரையும் தினமும் மருத்துவர்களும் செவிலியர்களும் அதட்ட வேண்டியதாயிருந்தது. இதில் ஒரு லாபம் என்னவென்றால் சுத்தத்திற்குப் பெயர் போனவர் சேச்சி. அதனால் வார்டும், கழிப்பறையும் மிகத் தூய்மையாக இருந்தது. அசுத்தமாக்குபவர்களைக் கடுஞ்சொல் பேச ஆரம்பித்தார். அவர்களும் கமுக்கமாக என்ன கேலி செய்தார்களோ.. அமைதியாக இருக்கும் சேச்சியின் சத்தம் அதிகரித்தது. புகார்களும் அதிகரித்தன.. இது போதாதென்று தினமும் சேச்சிக்கு அவருடைய அலைபேசியில் நிறைய அழைப்புகள் வந்தன. எப்படியோ இவரது எண்ணை வைத்திருந்த வம்பர்கள் சிலர், 'மம்முட்டி வந்திருக்கிறார், சீக்கிரம் வாங்க' என்பதும் 'முதலமைச்சர் வந்திருக்கிறார், மந்திரி இப்படி வரவேற்காமல் உள்ளே இருக்கிறீர்களே' என்பதும் இவர் உடனே வேக வேகமாக வெளியே ஓடுவதும் நடந்தது.
உடல்நிலை தேறி விட்டது; மனநல மாத்திரைகள் எதையும் அவர் எடுப்பதற்குத் தயாராக இல்லை. தூக்கம் வருகிறது தலை சுற்றுகிறது என்று கூறித் தள்ளிப் போட்டார். புகார்கள் அதிகரித்து, வெளியேற்றியாக வேண்டிய கட்டாயம். 'உங்களுக்கு குணமாகி விட்டதா? வீட்டுக்குப் போகலாமா?' என்றால் 'நான் குவாட்டர்ஸுக்குத் தான் போவேன்' என்பார். மீண்டும் க்வார்ட்டர்ஸ், மீண்டும் பாலியல் தொல்லை என்றால் இதய நோய், மனநோய் இருக்கும் சேச்சியின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை.
ஏன் இந்த நிலை? சேச்சிக்கு என்ன பிரச்சனை? மனநோய் பல காரணங்களால் வரலாம். தனிப்பட்ட பிரச்சனை, பிறவிக் குறைபாடு, இவற்றுடன் மரபுவழிக் காரணங்களும் முக்கியமானவை. 'இவங்க அப்பா மாதிரியே இவனுக்கும் முன்கோபம் அதிகம்', 'எங்க அம்மாவுக்கு சுகர்.. எனக்கும் இருக்கு' என்பதைப் போலவே மனநோய்களும் மரபுவழி சார்ந்து வரும்.
மூளையில் சுரக்கும் அகச்சுரப்பி வேதிப்பொருட்களான டோபமின், செரடோனின், நார்- எபினஃப்ரின் இவற்றின் சமச்சீரின்மையே பெரும்பாலான மன நோய்களுக்குக் காரணம். பெரும்பான்மையான மனநோய்களில் மாயைகள் (delusions) தோன்றும். காதில் ஏதோ சத்தம் கேட்பதாகவும், யாரோ தம்மிடம் பேசுவதாகவும், தன்னைச் செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். சிலருக்கு அதிகபட்ச சந்தேகம் வரும். தன்னை யாரோ கொல்லப்போவதாக உறுதியாக நம்புவார்கள். தன் இணையின் ஒழுக்கம் குறித்த சந்தேகமும் நிறைய பேருக்கு வரும். அந்த வகையில் சேச்சிக்கு ஏற்பட்டது தன்னைக் குறித்த மிக உயர்வான சிந்தனை. 'நான் ராஜா/ ராணி, நான் மந்திரி.. தனக்கு அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது' என்பதாக.
எந்த மன நோய்க்கும் மருத்துவம் உண்டு. நோயின் அறிகுறிகளை நிறுத்தி வைக்க அற்புதமான மருந்துகளும் உண்டு. கீழ் மத்தியதர வகுப்பினருக்கும் அதற்கும் கீழ் செல்வநிலை உடையவர் ஒரு மனநோயாளியை முழுவதுமாக பராமரிப்பது மிகக் கடினமே. தன் குழந்தையாகவோ, தன் இணையாகவோ இருந்தால் ஒருவர் முழு நேரமும் செலவிட்டு அவரைப் பராமரிக்க முடிகிறது. நெருங்கிய உறவில் ஆள் இல்லாத சூழலில் இத்தகைய கவனிப்பு சாத்தியமில்லை. அதுவும் சமூகம் தரும் அழுத்தங்கள் மோசமானவை.
சேச்சி விஷயத்தில் சமூகம் வகுத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்குள் அவர் அடங்காததால் ஆரம்பப் புள்ளியிலேயே உறவுகளால் விலக்கி வைக்கப்படுகிறார். Bipolar disorder போன்ற வியாதிகள் முதலில் அவ்வப்போது வந்து போகும். இடைப்பட்ட காலத்தில் நோயாளி சாதாரணமுகவே இருப்பார். முதல் தடவையிலேயே சிகிச்சை அளித்தால் நோய் நீண்டு போகும் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
மனநோய் காரணமாக தன்சுத்தம் பேணாதவர்களும் வீட்டில் இருந்து விலக்கி வைக்கப்படும் வாய்ப்பு அதிகம். மனநல மருத்துவரைச் சென்று பார்ப்பது அடுத்த தடைக்கல். யாருக்காவது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று தயக்கம் பெரிது. பைத்தியம் என்ற முத்திரை விழுவதை விட பேய் பிடித்துவிட்டது என்றோ, 'இவரது கேரக்டர் சரியில்லை வெளியே துரத்திட்டோம்' என்றோ கூறுவது குடும்பத்தவர்க்கு ஏற்புடையதாக இருக்கிறது. மனநல ஆலோசகரை நாடுவதை விட பேய் ஓட்டுபவரையோ, சி.டி. ஸ்கேனுக்கு எழுதித் தந்து ஏதோ மருந்து கொடுப்பவரையோ மக்கள் நாடுகின்றனர். பலரும் எதிர்பார்ப்பது உடனடி தீர்வு. அது இத்தகைய நோய்களில் சாத்தியம் இல்லை. இவை பெரும்பாலும் நிரந்தர நோய்கள். கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
சேச்சியை முதலிலேயே யாராவது மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது. மருத்துவமனையில் வைத்தே சேச்சியைத் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலையில் சட்டம் என்ன சொல்கிறது என்று விசாரித்தோம். சட்டம் 'முதலில் உறவினர்களைக் கண்டுபிடி' என்றது.
இந்த ஆறு மாதங்களில் புதிதாக மாறிருந்த போலீஸார் உறவினர்களை அணுகும் பணியில் மீண்டும் இறங்கினர். பலன் பூஜ்யம் தான்.
உறவினர் ஆதரவு இல்லை என்றாகிவிட்ட சூழலில் சேச்சிக்கு அடுத்து என்ன நிகழ்ந்தது? வரும் இதழில்...
Author: SudhaSri
Article Title: ராஜா என்பார், மந்திரி என்பார்!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராஜா என்பார், மந்திரி என்பார்!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.