• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நெஞ்சம் -13

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
40

நெஞ்சம் -13

ராக்கம்மா கையை தட்டு”
இரவில் கேம்ப் பயர் எனும் நெருப்பு மூட்டி, பாடலை ஒலிக்க விட்டு, அதனோடே சேர்ந்து பாடி, ஆட்டம் ஆடி இரு குடும்பங்களில் உள்ள இளசுகளும், சந்துருவை நடுவில் நிறுத்தி , “ மாமா ஆடுங்க” என ஏற்றி விட,
“ அடப் போங்கடா” என்றான்.

“ மாம்ஸ், நீங்க தான் யூத், மத்தது எல்லாம் கிழ போல்ட்” என மாலதி மகன் சொல்ல, “ ஆமாம் மாமா” மற்றதுகள் கோரஸ் பாடி, ஆட அழைத்தனர்.

சந்துரு, மேலிருண்டு சட்டை பட்டனைக் கழட்டு விட்டு, கீழே முடியிட்டு தளபதி நாயகனாக, தன் தலைவனை நகலெடுத்து போஸ் கொடுக்க,
“ ஹோய், சந்திரா, சூர்யாவா மாறின அவதாரத்தை பாருங்க” என ரதி மகள் சவுண்டு கொடுத்து,

“ பெரியம்மா, அம்மாச்சிக்கு கை ஒடிஞ்சிருக்கு. அதனால நீங்க தான் பாட்டி ரோல்” என சந்திராவைப் பார்த்துச் சொல்ல,

“ அடியே நான் உனக்குக் கிழவி மாதிரி தெரியிறேனா” எனச் சேலையை இடுப்பில் சொருக, “ பர்ஃவெக்ட்” என்றனர்.

“ அப்போ சுந்தரி யாரு” எனவும்,

பிள்ளைகள் யமுனாவை கை காட்டின. “ என்னைய ஏண்டா இழுத்து விடுறீங்க. என் புருஷன் முறைக்கிறார்” அவள் கேட்க,

“ சும்மா வாங்க. ஆக்டிங் தானே” என்றவர்கள், “ சரயு அக்கா, நீ ஸ்டார்ட் பண்ணு” எனவும்,

“ அடப் போங்கடா. இப்ப தான் கால் வலி குறைஞ்சு இருக்கு” எனவும்,

முதல் ஸ்டெப்புக்கு ரதியை ஆடச் சொன்னார்கள்.

“ ஒன்னு டூ,த்ரி” எனப் பாடலை ஒலிக்க விட…

ராக்கம்மா கையை தட்டு” என சந்துருவோடு சேர்ந்து மற்றவரும் ஆட, சரியாகக் குனித்த புருவமும் வரும் போது, சாரு, இரண்டு ப்ளாஸ்கில் பனங்கற்கண்டு பால் மற்றும் சுக்குமல்லி காபியோடு செல்போனில் ஒளி அடித்துக் கொண்டே வர,

“ ஹேய்” எனக் கத்தி அவளையும் ஆட்டத்தில் இழுத்தனர். ரஜினீஷ் மாடியிலிருந்து, மகிழ்ச்சியாகப் பாடி, ஆடும் குடும்பத்தை ஏக்கமாகப் பார்க்க, சரயுவின் பார்வையும் அவனைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.

அடுத்தடுத்து சந்துருவை இளசுகள் ஆட அழைக்க , “போதும் டா” என மூச்சு வாங்க அமர்ந்தான்.

ரிஷார்ட் பணியாள் காகித டம்ளர்களையும் இன்னும் இரண்டு ப்ளாஸ்குகளையும் கொண்டு வர, முதல் கப்பில் சுக்கு மல்லி காபியைச் சூடாக ஊற்றி, சாரு சந்துருவிடம் கொடுத்தாள்.

கையில் வாங்கியவன் , “ அது என்ன” மற்றொன்றைக் காட்டி கேட்க

“ பனங்கற்கண்டு பால் பிள்ளைகளுக்கு. நீ சுக்கு மல்லி குடி” என அவள் மிரட்ட,

“எனக்குப் பாலையே குட்டு” என சந்துரு பிடிவாதம் பிடிக்க,

“ பனியில் உட்கார்ந்திருக்க, மூச்சு வாங்குது. பால் நெஞ்சை அடைக்கும். இதைக் குடி.” என கட்டாயப்படுத்தி அவன் கையில் திணித்து விட்டு,

“ அண்ணா உங்களுக்கு” தயாளனைக் கேட்க, “ மல்லி காபியே குடுமா” என வாங்கிக் கொண்டார்.

மற்ற பெண்கள், இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே பிள்ளைகளுக்குப் பாலை ஊற்றிக் கொடுத்தனர். ராஜாத்திக்கு இந்த குளிரும் பொறுக்கவில்லை, அதனால் அறைக்குச் சென்று விட்டார்.

முன்னதாக காலையில், சாருமதி, யமுனாவிடம் மட்டுமே, ரஜினீஷ் பற்றிய முழு விவரத்தைச் சொன்னாள். மற்ற இரு தங்கைகளிடமும் , ரஜினீஷ், சரயுவைச் சென்னையில் பார்த்து அவளைப் பிடித்திருப்பதாகவும், மணமுடிக்க விரும்புவதாகவும் சொல்லி, தனக்காக விட்டுக் கொடுக்கும் படி கீதாவிடம் கேட்டாள்.

“ நரேனும் , இப்போ வர்ற மாதிரி இல்லை. சரயுவை ரஜினிக்கு செஞ்சா, உனக்கும் ஒரு ஆதரவா இருக்கும்னா, கேட்கலாம் சேச்சி. எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை. நல்லதோ கெட்டதோ, ராம் சார் தான் நம்ம குடும்பத்தைப் பொருளாதார ரீதியா தூக்கி விட்டார். அந்த நன்றிக் கடன் இருக்குல்ல” என்றாள். வேணிக்கும் அதே மனநிலை. ரஜினீஷின் நட்பு அவர்களுக்குப் பல வகையில் உதவியாக இருக்கும் என நினைத்தனர்.

சாருவுக்குத் தனது வேலை சுலபமானதில் நிம்மதி. இனி ராஜாத்தி மாமி குடும்பத்தோடு பேச வேண்டும். காலையில் ஆயில் மசாஜுக்கு சென்று வந்த போதே , சாரு உணர்ச்சி பிழம்பாக இருந்தாள். தாத்தா அனுவித்த நகையை ரஜினீஷிடமே கொடுத்தவள், டைரியையும் பிறகு வாங்கிக் கொள்வதாகக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

தயாளன், சந்துரு இருவருக்கும் ஆயில் மசாஜ் மற்றும் ஓடை குளியல், ஸ்ட்ரெஸ்ஸை எல்லாம் நீக்கி புத்துணர்ச்சியைத் தந்திருந்தது. மதியம் வந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தவர்கள், மதியம் நிம்மதியாகத் தூங்கி எழுந்தனர்.

எல்லோரும் வெளியே சென்றிருந்த போது, சந்திரா, ராஜாத்தியிடம், “ சந்துருவுக்கு பொண்ணு பார்க்க சொன்னியே, சாருவை கேட்கலாமாம்மா? நீ என்ன நினைக்கிற?” என்றாள்.

“ நானும் அதைத் தான் பேசனும்னு நினைச்சேன். சந்துரு பார்வை அவளை விட்டு அகலலை. எவ்வளவு மலர்ச்சியா பேசுறான். அவளும், அவன் மேல அவ்வளவு அக்கறையா இருக்கா. சாருவையே செஞ்சு வைக்கலாம். ஆனால் எப்படிக் கேட்கிறது. அவ என்ன நினைப்பாளோ. நல்லா வசதியா, கெத்தா இருக்கா. நம்ம வீட்டுக்கு வரச் சம்மதிப்பாளா” எனக் கேட்க

“ யமுனாவும், நானும் இந்த ட்ரிப் ப்ளான் பண்ணக் காரணமே, சந்துரு, சாருவைச் சேர்த்து வைக்கனும்கிறதுக்காக தான் அம்மா. நான் சந்துருகிட்ட பேசுறேன். யமுனா அவ அக்காட்ட பேசட்டும். பார்ப்போம்” என்றாள்.

“சாரு சம்மதிப்பாளா” அவர் மீண்டும் வினவ,

“ சந்துருவுக்காகச் சாரு எதுனாலும் செய்வா. இந்த விசயத்தில் பானு மூக்க நுழைக்காமல் பார்த்துக்கோ. அவ தான தையா, தக்கானு குதிப்பா” எனவும்

“ அது வேறையா. மாப்பிள்ளை சும்மாவே எதாவது பேசுவாரு” ராஜாத்தி அடுத்த கவலைக்குத் தாவி இருந்தார்.

சந்திரா, சந்துருவோடு பேச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க, யமுனா, சாருவிடம் பேசி விட்டு வந்து, ரஜினீஷ் , சரயு திருமணத்தைப் பற்றிப் பேசினாள்.

“ இது பெரிய டிவிஸ்டா இருக்கு, அப்போ கீதா மகன்” எனச் சந்திரா கேட்க,

“ சாரு சேச்சி, என் மகன்னா விட்டுக் கொடுக்க மாட்டியான்னு கேட்கவுமே, மத்த இரண்டு பேரும் ப்ளாட்டு. சரின்னு சொல்லிட்டாங்க”

“ அது தான் அந்த பையன் , கரிசனையா கூட்டிட்டு போயிருக்கானா? குணம், பழக்க வழக்கமெல்லாம் எப்படி?” என விசாரித்தா“சாரு சம்மதிப்பாளா” அவர் மீண்டும் வினவ,

“ சந்துருவுக்காக சாரு எதுனாலும் செய்வா. இந்த விசயத்தில பானு மூக்க நுழைக்காமல் பார்த்துக்கோ. அவ தான தையா, தக்கானு குதிப்பா” எனவும்

“ அது வேறையா. மாப்பிள்ளை சும்மாவே எதாவது பேசுவாரு” ராஜாத்தி அடுத்த கவலைக்கு தாவி இருந்தார்.

சந்திரா, சந்துருவோடு பேச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க, யமுனா, சாருவிடம் பேசி விட்டு வந்து, ரஜினீஷ் , சரயு திருமணத்தை பற்றி பேசினாள்.

“ இது பெரிய டிவிஸ்டா இருக்கு, அப்போ கீதா மகன்” என சந்திரா கேட்க,

“ சாருசேச்சி, என் மகன்னா விட்டு கொடுக்க மாட்டியான்னு கேட்கவுமே, மத்த ரெண்டு பேரும் ப்ளாட்டு. சரின்னு சொல்லிட்டாங்க” எனவும்,

“ அது தான் அந்த பையன் , கரிசனையா கூட்டிட்டு போயிருக்கானா? குணம், பழக்க வழக்கமெல்லாம் எப்படி?” என விசாரித்தாள்

“கொஞ்சம் கரடு, முரடான ஆளு தான். சேச்சி கூடவே சமீபமா தான் கொஞ்சி திரியிறான். காரியமா ஆடுறானோன்னு சந்தேகம். ஆனா ஒழுக்கமான பையன். மது, மாது பழக்கம்லாம் இல்லை. இந்த மலையில காபி தோட்டம் , வீடு, இந்த ரிசார்ட், மதுரையில காபி ஓர்க்ஸ் , சென்னையில நிறைய கம்பெனில இன்வெஸ்ட்மெண்ட், வீடுன்னு மானாவாரியா, நிறைய பக்கத்திலிருந்து வந்த சொத்துக்கு இவன் தான் வாரிசு” என்றாள்.

“ நாம நினைச்சதை விடப் பெரிய கையா இருக்கே. பாரதியவே இப்படி நம்பி கொடுத்துத் தான் ஏமாந்தோம்” சந்திரா சொல்ல, யமுனா, ‘ க்கும். கம்பேரிசன்லையே யோசிக்குதுங்க. அவர் மருமகன்னு சொன்னா சுத்தம்’ மனதில் யோசித்தவள்,

“ சாருசேச்சிய நம்பி கொடுக்கலாம், இரண்டு ஜோடிக்கும் முடிச்சு போட்டு, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குங்கன்ன விடலாம்” எனவும்,

“ இது கூட நல்ல ஐடியா தான். அந்த பையனுக்கும் சரயு மேல இஷ்டம் இருக்கு. பிடிமானத்துக்குச் சாரு இருந்தா செய்யலாம்” என்றாள் சந்திரா.

“ இதெல்லாம் நம்ம ப்ளான். சந்துரு சேட்டாகிட்ட கேட்டிங்களா” யமுனா கேட்க,

“ இன்னும் இல்லை. சாருவை அவன் சந்திச்ச பிறகு கேட்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள மாமனும் மச்சானும் ஊர்வலம் கிளம்பிடுச்சுங்க” சந்திரா நொடிக்க,

“ பானு சேச்சி ஹஸ்பண்ட் இப்படி பழக மாட்டாரோ”

“ அவரு சொல்றதை தான் எல்லாரும் கேட்கனும்னு நினைப்பாரு. அதனால கழட்டி விட்டுடுவோம். அக்கா மட்டும் அவர் பின்னாடியே திரியும்” என்றாள்.

“ சந்துரு-சாரு சங்கமத்துக்கு வேற யாரெல்லாம் ஆதரவு , எதிர்ப்பு” யமுனா கேட்க,

“ நாங்க இரண்டு பேர், ரதி- வசந்த் முழு ஆதரவு. மாலதி அன்னைக்கே தேவையில்லாத வேலைனு கிளம்பி போனா. பானு ஒத்துக்கிட்டாலும், எங்க அயித்தான் மாட்டேம்பாரு. எங்கம்மா, இரண்டு பக்கமும் ஜால்ரா போடும். இதில துணிஞ்சு முடிவெடுக்க வேண்டியது சந்துரு தான். முடிவெடுப்பானான்னு தெரியல” என்றாள்.

“ஆதரவு கோஷ்டிகள், சேச்சி, சேட்டாவை வச்சு ரகசிய கூட்டம் போடுவோம். அங்க வச்சு சம்மதம் கேட்போம்” யமுனா சொல்ல,

“ ஓகே டன்” என்றாள் சந்திரா.

இது பொழுது இப்போது வாய்த்திருந்தது. ட்ரக்கிங் செய்த பிள்ளைகள் அலுப்பில் தூங்கச் செல்ல, மாலதி, கீதா வேணி குடும்பமும் அவரவர் அறைக்குக் கிளம்பினர்.

சரயுவை ரதியே கிளப்பி விட, “சாரு அத்தை, உங்க ரூம்ல ஒரு மேகசின் பார்த்தேன். எடுத்துக்கவா” என்றாள்.

“ எடுத்துக்கோ. என் ரூம்ல நான் மட்டும் தான். தூக்கம் வரலைனா அங்கேயே புக் படி. அம்மாச்சி தூங்கி இருப்பாங்கல்ல” எனவும்,

“ ஆமாம், தாங்கஸ்” எனச் சாருவின் அறையை நோக்கிச் சென்றாள்.

அவள் வருவதைப் பார்த்த ரஜினீஷ், மாமாவின் டைரியை எடுத்துக் கொண்டு கீழே வர,

“ சாரு அத்தை ரூம்” அவள் வினவ,

“ வா” என அழைத்துச் சென்று டைரியை கொடுத்தான்.

“ ரொம்ப ட்ராஜிடியா இருக்கா” அவள் கேட்க,

“ கடைசி பத்து பக்கம் தான். அதுக்கு முன்னாடி அத்தையை வர்ணிச்சு, தன் காதலை எழுதியிருக்கார். “ என்றவன்,

“ சாரும்மா, எனக்காக உன் மாமாட்ட உன்னை பொண்ணு கேக்குறேன்னு சொல்லி இருக்காங்க. உன் வீட்டில் சம்மதிச்சா, உனக்கு ஓகே தானே” எனக் கேட்டான்.

“ உங்க மாமா பொண்ணா இல்லைனா, என்னைத் தேடி வந்திருப்பிங்களா” அவள் வினவ,

“ நிச்சயம் தேடி வந்திருக்க மாட்டேன். ஏன்னா எந்த பொண்ணையும் தேடிப் போய் எனக்குப் பழக்கம் இல்லை. அதே சமயம், யாரோவா உன்னைப் பார்த்திருந்தாலும், உன் முகச் சாயல், பாடி லாங்குவேஜ், உன் பின்னாடி வரவழைச்சு இருக்கும். உனக்குத் தான் உன் அப்பாவை தெரியாது. எனக்கு என் மாமாவைத் தெரியும். என் ஐஞ்சாவது வயசு வரை என்னைத் தூக்கி திரிஞ்சவர். இந்த மலையில, இந்த இடத்தில எங்க கால் படாத இடமே கிடையாது. எமோசனலான ஆளு, இயற்கையை ரசிகன், சினிமா மோகத்தில் எங்களை விட்டுப் போனார். மீதியை அந்த டைரி பேசும்.” என்றவன்,

“ என் மேல அன்பு வச்சவங்களோட மொத்த உருவம் நீ.என்கிட்ட வந்துருடி . பொக்கிஷமா உன்னை வச்சு பார்த்துக்குவேன்.” எனக் கைநீட்ட, அதைப் பற்றியவள்,

“ உண்மை தெரிஞ்சா, என் குடும்பம் உங்களை ஏத்துப்பாங்களான்னு தெரியாது. உண்மையை மறைச்சு, பொய்யா உங்களைக் கல்யாணம் பண்றதுலையும் எனக்கு விருப்பமில்லை. அவுங்க மனசார சம்மதிச்சு உரிமையா நம்ம கல்யாணம் நடக்கனும். என் அம்மாவுக்காகத் துடிக்கிற அம்மாச்சி மனசு சமாதானம் ஆகனும். அதுவரை வரை நான் காத்துட்டு இருப்பேன். “ என்றாள் அழுகையோடு.
“என் வாழ்க்கைத் துணை நீ மட்டும் தான். இன்னொரு சந்துரு, சாருவை உருவாகாமல் இருக்கிறது, உங்க வீட்டு ஆளுக கைல தான் இருக்கு” என்று விட்டு அகன்றான். சரயு மனம் தகித்தது. தன் அப்பாவை பற்றி அறிய, டைரியை வாசிக்க ஆரம்பித்தாள்.

பாரதி!
என் பா க்களுக்கு நீயே ரதி. ” என வகை வகையாய் வர்ணித்து இருந்தான்.

அங்கு கேம்ப் ஃபயரில்..
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி…” அடுத்த பாட்டு ஓடிக் கொண்டிருக்க, சந்துருவின் பார்வை அவளிடம் தான் இருந்தது. இன்னொரு கட்டையை போட்டு, நெருப்பை தூண்டி விட்டுக் கொண்டிருந்தாள். சந்திரா, ரதி, யமுனா ஜோடிகள் மட்டுமே, சந்துரு, சாருவோடு அமர்ந்திருந்தனர்.

“ உங்க இரண்டு பேருகிட்டையும் கொஞ்சம் பேசனும்” என்றார் தயாளன்.
சாரு, “நானுமே ஒரு விஷயம் பேசணும் அண்ணா” எனவும்,

“சொல்லுங்கமா” என்றார்.

“ நான் சுத்தி வளைக்க விரும்பலை. சரயுவுக்கு சம்பந்தம் பேசத் தான், நீங்க இங்க வர்றதா யமுனா சொன்னா. இப்பவும் அதே விஷயம் தான், மாப்பிள்ளை, கீதா மகனுக்குப் பதிலா, என் மகன் ரஜினீஷுக்கு கேட்கிறேன். சரயுவை, ரஜ்ஜுவுக்கு கொடுங்களேன்” சாரு கேட்க, ஆண்கள் மூவருக்கும் அதிர்ச்சி, யமுனா மூலம், சந்திரா, ரதிக்குத் தெரிந்து இருந்தது.

சந்துரு, “யாருக்குக் கேட்ட” என அர்த்தமாக வினவ,

“ உங்க காதில் விழுந்தது சரி தான்.என் மகன், என் வளர்ப்பு மகன், ராம் சாரோட தம்பி பையன், ரஜினீஷுக்கு, உன் தங்கை பாரதி மகளைக் கேட்கிறேன்.அவன் கேரக்டரை பத்தி எங்க வேணும்னாலும் விசாரிச்சுக்குங்க. இந்த கம்பெனில எல்லாம் அவன் பார்ட்னர்” என ரஜினீஷின் ப்ரொபைல் அடங்கிய ஃபைலை நீட்ட, வசந்த் வாங்கி பார்த்தான்.

“என் கம்பெனியில ஷேர் வச்சிருக்கார். ப்ரொபைல் வெயிட்டா தான் இருக்கு” வசந்த் சொல்ல,

“இவ்வளவு வசதியானவங்க, எங்க கிட்ட ஏன் சம்பந்தம் வச்சுக்கணும். நாங்க எங்க ரேஞ்சுக்கு தான் மாப்பிள்ளை தேடுறோம்” என்றான் சந்துரு.

“அவன் கிட்டப் பணம் இருக்கலாம், எவ்வளவு விலை குடுத்துனாலும் வாங்க முடியாத சொந்தம் உங்க கிட்டத் தான் இருக்கு.” எனவும்,

“புரியலை”என்றான் சந்துரு.

:கொஞ்சம் முன்னாடி நீங்க கவனிச்சீங்களா என்னனு தெரியலை.மேல நின்னு, குடும்பமா ஆடி பாடுறதை ஏக்கமா பார்த்துட்டு இருந்தான். இப்படி ஒரு குடும்பத்து பொண்ணு தான், குடும்பம் தான், தனக்கு வேணும்னு நினைக்கிறான்” என வாதாட,

“நாங்க சூடு பட்ட பூனைகள், பணக்காரனை நம்ப மாட்டோம்” மீண்டும் சந்துருவே சொல்ல, அவனை முறைத்தாள்.

தயாளன் குறுக்கே புகுந்து, “நல்ல வரன், நல்ல சம்பந்தம், அத்தைகிட்டயும் கலந்துக்கிட்டு சொல்றோம் “ எனவும்,

“நன்றி அண்ணா” என்றாள்.

“நான் பேசணும்னு சொன்னேனே” என்றவர்,

“உங்களை மாதிரியே நானும் சுத்தி வளைக்காமல் கேட்குறேன். நீங்க இரண்டு பேரும், கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” எனவும்,

அதுவரை இலகுவாக இருந்த சந்துரு, “அத்தான், இது தேவை இல்லாத பேச்சு” என்றான்.

“ஏன் தேவை இல்லை, அரைக்கிழவன் ஆகிட்ட, சாருமதியை மனசுல வச்சுக்கிட்டு தான், நீ கல்யாணமே பண்ணிகலனு எங்களுக்குத் தெரியும். நீ சாருவைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்ட, அவுங்களும் இப்போ சிங்கள். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாம்ல. வயசான பிறகுதான், மனசு அதிகமா துணையை தேடும்” என அவர் அறிவுறுத்த, மற்றவர்களும் அவர்கள் சேர வேண்டும் என வெவ்வேறு வார்த்தைகளில் வலியுறுத்தினர். இருவரும் அமைதியாகவே இருக்க, “ஏதாவது பதில் சொல்லுங்க” என்றனர்.

“இது சரியா வராது அத்தான். மறுபடியும் அதே போல ஒரு வாழ்க்கை, கடமையைச் சாரு மேல நான் திணிக்க விரும்பலை” என்றவன்,

“அதுக்கும் மேல, அவ என்னை நம்பவும் மாட்டா” எனச் சேர்த்துச் சொல்ல, சாரு , விழுக்கென நிமிர்ந்து, “நான் எப்ப உன்னை நம்பாமல் போனேன்” அர்ஜுனன் வில் அம்பு போல் அவள் வினாத் தொடுத்தாள்

“ இருபது வருஷம் முன்னாடி, என்னை நம்பாமல் தானே, அந்த ப்ரபசரை கல்யாணம் பண்ண” எனவும், சாரு கண்ணில் நீர் வழிய பார்த்திருந்தாள்

“சந்துரு, என்ன பேசுற” சந்திராவே கேட்டாள் .

“ உனக்குத் தெரியாது சந்து, நான் கையால் ஆகாதவன்னு தான், வசதியான கிழவனை பிடிச்சா” எனவும்,

“அண்ணா” என ரதியும், “ஏண்டா மாப்பிள்ளை இப்படி பேசுற” என்ற தயாளன், “அவன் கூறு கெட்டு பேசுறான், நீ தப்பா எடுத்துக்காம்மா” அவர் சாருவைச் சமாதான படுத்தினார்.

“அவன் தெளிவா தான் அண்ணா பேசுறான்.” என்றவள், சந்துரு முன் சென்று, “ஆமாம், நான் காசுக்காகத் தான் வயசானவரைக் கல்யாணம் பண்ணேன். அந்த சூழ்நிலைக்கு, என் குடும்பத்தை காப்பாத்த அது தான் சரின்னு பட்டுச்சு” என்றாள்.

“நான் கையால் ஆகாதவன்னு தானே என்கிட்ட உதவி கேட்கலை” அவன் குற்றம் சுமத்த,

“உன்னை எப்படி டா கேட்பேன். உனக்கும் எனக்கும் என்ன உறவு. பதினாலு வயசுல, நெஞ்சை அள்ளி கொடுத்துட்டு போன, அதுக்கப்புறம் எப்பவாவது காதலை வெளிப்படையா சொல்லி இருக்கியா. எந்த உரிமையில் வந்து கேட்பேன்”

“கேட்காமலே எப்படி முடிவெடுத்த” அதிலேயே நின்றான்.

அவள் தான் இறங்கி வர வேண்டியது இருந்தது, “நான் வந்து உன்னை கேட்டுருந்தா, நீ என் கூட வந்திருப்ப. அப்புறம், உன்னையும் என்னையும் நம்பி இருந்த பொம்பளை புள்ளைங்க கதி” எனக் கேட்க, மற்ற பெண்கள் மூவருக்கும் அழுகை வந்தது.

“எங்களுக்காகத் தான், நீங்க பிரிஞ்சீங்கன்னா, இப்போ நாங்க கேட்கிறோம், எங்களுக்காக ஒன்னுசேருங்க. “ என சந்திராவும் ரதியும் சொல்ல,

“ரஜினீஷ், சரயுவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, நீங்க ரெண்டுபேரு, ராஜாதி மாமி எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கலாம்ல” என யமுனாவும் கேட்க,

“முதல்ல, அவுங்க இரண்டு பேர் கல்யாணமும் நடக்கட்டும். ரஜினீஷ் என் பொறுப்புன்னு ராம் சாருக்கு வாக்கு கொடுத்திருக்கேன்” என்று மட்டும் சாரு சொல்ல, “அவருக்கு கொடுத்த வாக்கு மட்டும் தான் முக்கியம்” என சந்துரு முறைத்துக் கொண்டு கிளம்பிச் செல்ல, நேரமாச்சு படுப்போம் எனச் சங்கத்தைக் கலைத்தனர்.

கலங்கிய குட்டையாய் கிடந்தது நெஞ்சம்.

 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
கலங்கிய குட்டையில்
காலம் வந்தால்
கண்பார்க்க தெளிவாக
காட்டும்....
👏🏻👏🏻👏🏻💐💐🤩❤️
பாட்டும் கச்சேரியும்
பழைய நினைவுகளும்
புன்னகையும் தொடர
பேச்சு வார்த்தையில்
பாதியில் முடிந்தது....
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
அன்புக்கு ஏங்கி
அமைதியாக நின்றாலும்
அழுத்தமாக கேட்க
அத்தை மகளை
அடைவானோ?????🤩🤩🤩
 

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
40
கலங்கிய குட்டையில்
காலம் வந்தால்
கண்பார்க்க தெளிவாக
காட்டும்....
👏🏻👏🏻👏🏻💐💐🤩❤️
பாட்டும் கச்சேரியும்
பழைய நினைவுகளும்
புன்னகையும் தொடர
பேச்சு வார்த்தையில்
பாதியில் முடிந்தது....
kep vittu thaane adikanum
 
Top Bottom