நாம் காணும் உலகங்கள்
நீங்கள் பார்க்கும் அதே உலகத்தைத் தான் உங்கள் அருகிலுள்ளவரும் பார்க்கிறாரா? 'ஆம்' என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சிலருக்கு அப்படி இல்லை என்பதே உண்மை. பன்னிரெண்டு ஆண்களில் ஒருவருக்கும் இருநூறு பெண்களில் ஒருவருக்கும் நிறங்களைப் பிரித்தறிவதில் குறைபாடு இருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.
அணுக்களின் இருப்பை உலகுக்கு உணர்த்திய (atomic theory) ஜான் டால்டன் இவ்வாறு கூறுகிறார்:
"மற்றவர்கள் சிவப்பு வெளிச்சம் என்று கூறும் ஒன்று, எனக்கு வெள்ளை ஒளியில் உள்ள ஒரு நிழலாக, ஒரு குறைபாடாகத் தெரிகிறது. மற்றவர்கள் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்று விதவிதமாகக் கூறுவது எனக்கு மஞ்சள் நிறமாகவே தோன்றுகிறது" என்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின் அவர் தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சில பரிசோதனைகளைச் செய்து பார்த்த போதுதான் தன் உடன்பிறந்த தம்பிக்கு மட்டும் தன்னைப்போலவே வண்ணங்களை உணர்வது கடினமாக இருக்கிறது என்று கண்டறிந்தார். கண்ணின் உள்ளே சுரக்கும் நீர் நிறங்களைப் பிரிப்பதில் ஏதோ தவறு நிகழலாம் என்பது அவருடைய அனுமானம். இறப்புக்குப் பின் அவருடைய கண்களை ஆராய்ச்சிக்காக பதப்படுத்தப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தனவாம்.
ஆனால் பின்னாட்களில் இந்த நிறக்குருடு பெரும்பாலும் பரம்பரையாக வருவது என்பது நிரூபிக்கப்பட்டது. நம் கண்களில் மூன்று வகையான வண்ணங்களை உணரும் கோன் செல்கள் (cone cells) இருக்கின்றன. சிவப்பு, பச்சை, ஊதா- மஞ்சள் ஆகிய அந்த மூன்று வகை கோன்களும் சரியான விகிதத்தில் இருப்பவரை Trichromats என்கிறோம்.. இதில் ஏதாவது ஒன்று இல்லாத நிலையை Bichromats என்கிறோம். அதேபோல இரண்டு வகை கோன்கள் குறைபாடு இருந்தால் Monochromats என்றும் நிறம் உணர்த்தும் கோன்கள் அறவே இல்லாதவரை Achromats என்றும் சொல்கிறோம். இவர்களுக்கு உலகம் முழுவதும் கருப்பு வெள்ளையாகத் தெரியும்.
இந்த நிறக்குருடுக்கான ஜீன்கள் எக்ஸ்- குரோமோசோம் மூலம் கடத்தப்படுவதால் ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் மட்டுமே இருக்கும் ஆண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் அவர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு நேரடியாக ஏற்படாமல் அடுத்த தலைமுறைக்கு குறைபாடுடைய ஜீன்களைக் கடத்துபவர்களாகப் பெண்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.
முதன்முதலாக நிறக்குருடு பற்றி ஜான் டால்டன் நிறுவியதும் 'டால்டனிஸம்' (Daltonism) என்ற ஒரு பெயரும் இதற்கு உண்டு. இந்த ஒரு வார்த்தையை வைத்து பின்னப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான அகதா கிறிஸ்டியின் உலகப் புகழ்பெற்ற சிறுகதை ஒன்று உண்டு. 'ஹர்லெக்வின் டீ செட்' என்ற அந்தக் கதையின் மிஸ்டர். சாட்டத்வைட் என்ற ஒரு முதியவர் தன் நீண்ட நாள் நண்பர் அவரது பெரிய இல்லத்தில் சந்திக்கச் செல்கிறார். நண்பரின் வீட்டில் அவரது மகளின் கணவர் தன் இரண்டாம் மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் வசித்து வருகிறார். முதியவரின் மகளான லில்லி, ஒரு மகனைப் பெற்ற கையோடு இறந்து விட கைக்குழந்தையுடன் இருக்கும் இன்னொரு விதவைப் பெண்ணை லில்லியின் கணவர் மறுமணம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வளர்க்கிறார் பெரில் என்ற இரண்டாம் மனைவி. ரோனால்ட் என்ற லில்லியின் மகனும் டிமொத்தி என்ற பெரிலின் மகனும் கிட்டத்தட்ட ஒரே நிறம், ஒரே கூந்தல் நிறத்தைக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் 22 வயது ஆகியிருக்கிறது.
சாட்டத்வைட் விருந்தினராகச் செல்லும் இடங்களில் அவ்வப்போது ஏதேனும் குற்றச்செயல்கள் நிகழவிருப்பதும் அதைத் தன் உள்ளுணர்வு மூலம் அவர் தடுப்பதும் அதிசயமான ஒரு நிகழ்வு. அத்தகைய நிகழ்வுகளின் முன் அவருடைய இன்னொரு நண்பரான துப்பறிவாளர் திரு.க்வின் இவரை எதேச்சையாக சந்திப்பதும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் குறிப்பாகக் கொடுப்பதும் மற்றொரு அதிசயம்.
குறிப்பிட்ட நாளில் சாட்டத்வைட் நண்பர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும் வழியில் ஒரு காபி ஷாப்பில் தாமதிக்கிறார். அங்கு திரு.க்வின் எதிர்பாராதவிதமாக அவரை வந்து சந்தித்து 'டால்டனிஸம்' என்ற ஒற்றை வார்த்தையை கூறிச் செல்கிறார்.
அப்படி என்றால் என்ன? ஏதோ கேள்விப்பட்ட பெயராயிற்றே இது என்ற யோசனையுடன் நண்பர் வீட்டுக்குச் செல்லும் சாட்டத்வைட்டை சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நண்பர் வரவேற்கிறார். அவருடைய கால்களில் ஒன்றில் சிவப்பு நிறச் செருப்பும், ஒன்றில் பச்சை நிறச் செருப்பும் அணிந்திருப்பதைப் பார்த்து, "இன்னும் மாறலையா நீ?" என்று நண்பரிடம் சிரிப்புடன் கேட்கிறார் சாட்டத்வைட்.
"என்ன செய்ய? எனக்கு ரெண்டும் ஒண்ணாத் தானே தெரியுது?" என்கிறார் நண்பர் புன்னகையுடன். அதன் பின் தொடர்ந்த தேனீர் விருந்தில் நண்பரின் பேரன்களுடன் நெகிழ்ச்சியான அறிமுகம் நடக்கிறது. தனது பிரியத்துக்குரிய லில்லியைப் பற்றி சாட்டத்வைட் நினைவு கூர்கிறார். அந்த விருந்தில் பெரில் மிகவும் பரபரப்பாக இருக்கிறாள். அப்போது அவளது கைபட்டு தவறுதலாக டிமோத்தி டீ அருந்திக் கொண்டிருந்த சிவப்பு நிறப் பீங்கான் கோப்பை உடைகிறது. அதற்குப் பதிலாக ஒரு நீலநிற கோப்பையை கொண்டு வந்து வைக்கிறாள் பெரில். அதை எடுத்து டிமோத்தி அருந்தப் போக, விருந்துக்கு வந்திருந்த அவர்களது ஒன்றுவிட்ட சகோதரி டிமோத்தியிடம், "மறுபடியும் மாத்தி எடுத்துட்டியா? சிவப்பு கப் தானே உன்னோடது? ப்ளூ கப்பை எடுத்திருக்க?" என்கிறாள். "எனக்கு ரெண்டுமே ஒண்ணாத் தான் தெரியுது" என்கிறான் டிமோத்தி. 'டால்டனிஸம்' என்று திரு.க்வின் கூறியது ஏன் என்று சட்டென்று புலப்படுகிறது சாட்டத்வைட்டிற்கு. 'டால்டனிஸம்' என்பது நிறக்குருடை அல்லவா குறிக்கிறது?
"நிறுத்து! குடிக்காதே! அதில் விஷம் கலந்திருக்கிறது" என்று டிமோத்தியைத் தடுத்து அந்தக் கோப்பையை வாங்குகிறார். இதைக் கேட்டவுடன் பதட்டமடையும் பெரில் சட்டென்று வெளியேறி மறைந்து விடுகிறாள். வீட்டினர் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, சாத்தர்வைட் விளக்குகிறார்.
தாத்தாவுக்கு இருக்கும் நிறக்குருடு லில்லியின் மரபணுக்கள் வழியாக அவளது மகனுக்கு வருவதுதான் அறிவியல் ரீதியாக சாத்தியம். எனவே டிமோத்தி தான் லில்லியடைய உண்மையான மகன். இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் போது பெரில் எளிதாக அடையாளங்களை மாற்றி மற்றவர்களுக்குக் கூறியிருக்கிறாள். சிறுவயது முதலே இந்தத் திட்டம் அவளுக்கு இருந்திருக்கிறது. கணவர் ராணுவத்தில் இருந்ததால் இதை செயல்படுத்துவது அவளுக்கு எளிதாகிவிட்டது. எப்படியாவது லில்லியின் மகனைக் கொன்றுவிட்டால், தான்பெற்ற மகனுக்கு தாத்தாவின் பேரன் என்ற போர்வையில் சொத்துக்கள் கிடைக்கும் என்று திட்டமிட்டு முதலிலேயே குழந்தைகளை மாற்றியிருக்கிறாள் என்கிறார் அவர். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சகோதரர்கள் போல வளர்ந்த ரோலண்டும் டிமோத்தியும் தங்கள் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்துகின்றனர். லில்லியின் ஆன்மா அரூபமாக நின்று தனக்கு நன்றி கூறுவதாக சாட்டத்வைட் உணர்கிறார்.
ஒரு அறிவியல் உண்மையைத் தெரிந்து வைத்திருந்ததால் குற்றத்தைத் தடுத்த கதை இது.
நிஜ வாழ்க்கையில் நிறங்கள் தெரியாவிட்டால் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே... என்கிறீர்களா? உண்மையில் நிறங்கள் தெரியாதவருக்கு அதைத்தவிர பார்வையில் வேறு எந்தவிதக் குறைவும் இருக்காது. ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒரு முறை நான் வேறு ஒரு இளைஞருக்கு நிறக்குருடு தொடர்பான பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். "எனக்கு இவர் சொல்ற எதுவுமே தெரியலையே டாக்டர்?" என்று அவர் கேட்க, அப்போது தான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய ஜாக்கெட்டின் நிறம் சேலைக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தது. "எப்பவுமே இப்படி மேட்சிங் எடுக்கிறதுல பிரச்சனை வருமா?" என்று நான் கேட்டதற்கு, "ஆமா! நான் எப்ப பிளவுஸ் துணி எடுத்தாலும், எல்லாரும் என்ன? இப்படி எடுத்திருக்கன்னு கேப்பாங்க" என்றார். அது தவிர அவருக்கு வேறு எந்தக் குறைபாடும் இல்லை. தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே அதற்கு எதேச்சையாகத் தான் தெரிய வந்திருக்கிறது.
ஆனால் சில வேலைகளுக்கு நிறக்குருடு பிரச்சனை உள்ளவர்கள் தகுதியானவர்கள் அல்ல. காவல்துறை, ராணுவம், ஓட்டுநர், விமானி போன்ற பணிகள் தான் அவை. சிவப்பு, பச்சை நிறக்குருடால் சிக்னலில் உள்ள வண்ணங்களில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஒரு பெரிய கலவரம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். விஷமிகளைக் கண்டுபிடித்து துப்பாக்கியில் சுடுவதற்கு வாக்கி டாக்கி மூலம் உத்தரவு வருகிறது. 'பச்சை சட்டைக்காரனைச் சுடு!' என்று உத்தரவு வர, நிறங்களை சரியாக பிரித்தறிய முடியாத ஒருவர் காவலராக இருந்தால் என்ன நடக்கும்? பச்சை சட்டைக்கு பதில் நீலச் சட்டைக்காரனைச் சுட்டு விடுவார். ஒரு உயிர் அனாவசியமாகப் போய்விடும்.
சமீபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வந்தார். வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் வருடாந்திர கண் பரிசோதனையில் அவருக்கு நிறக்குருடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைபாடு அவருக்கு பிறவியிலேயே இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு தான் அதிகம். வேலைக்குச் சேரும் போது சரியாகப் பார்க்கப்படாமலோ அல்லது 'சரிக்கட்டப்பட்டோ' போயிருக்கலாம். இதுவரை சிக்னல் உள்ள பகுதிகளில் அவர் அதிகம் வண்டி ஓட்டியதில்லை. கிராமப்புறங்களில் தான் பஸ் ஓட்டியிருக்கிறார். அதனால் பிரச்சினை எதுவும் இதுவரை வரவில்லை. கண்டுபிடித்த பின் அதே வேலையைத் தொடர்வது நல்லதல்ல. எனவே அவருக்கு அலுவலகப் பணிகள் வழங்குவதற்கான ஏற்பாடு நடக்கிறது. நம்மில் ஒருவருக்கும் நிறக்குருடு இருக்கலாம். இதுபோன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன் முறையாகப் பரிசோதனை செய்தால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாமே!
நீங்கள் பார்க்கும் அதே உலகத்தைத் தான் உங்கள் அருகிலுள்ளவரும் பார்க்கிறாரா? 'ஆம்' என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சிலருக்கு அப்படி இல்லை என்பதே உண்மை. பன்னிரெண்டு ஆண்களில் ஒருவருக்கும் இருநூறு பெண்களில் ஒருவருக்கும் நிறங்களைப் பிரித்தறிவதில் குறைபாடு இருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.
அணுக்களின் இருப்பை உலகுக்கு உணர்த்திய (atomic theory) ஜான் டால்டன் இவ்வாறு கூறுகிறார்:
"மற்றவர்கள் சிவப்பு வெளிச்சம் என்று கூறும் ஒன்று, எனக்கு வெள்ளை ஒளியில் உள்ள ஒரு நிழலாக, ஒரு குறைபாடாகத் தெரிகிறது. மற்றவர்கள் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்று விதவிதமாகக் கூறுவது எனக்கு மஞ்சள் நிறமாகவே தோன்றுகிறது" என்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின் அவர் தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சில பரிசோதனைகளைச் செய்து பார்த்த போதுதான் தன் உடன்பிறந்த தம்பிக்கு மட்டும் தன்னைப்போலவே வண்ணங்களை உணர்வது கடினமாக இருக்கிறது என்று கண்டறிந்தார். கண்ணின் உள்ளே சுரக்கும் நீர் நிறங்களைப் பிரிப்பதில் ஏதோ தவறு நிகழலாம் என்பது அவருடைய அனுமானம். இறப்புக்குப் பின் அவருடைய கண்களை ஆராய்ச்சிக்காக பதப்படுத்தப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தனவாம்.
ஆனால் பின்னாட்களில் இந்த நிறக்குருடு பெரும்பாலும் பரம்பரையாக வருவது என்பது நிரூபிக்கப்பட்டது. நம் கண்களில் மூன்று வகையான வண்ணங்களை உணரும் கோன் செல்கள் (cone cells) இருக்கின்றன. சிவப்பு, பச்சை, ஊதா- மஞ்சள் ஆகிய அந்த மூன்று வகை கோன்களும் சரியான விகிதத்தில் இருப்பவரை Trichromats என்கிறோம்.. இதில் ஏதாவது ஒன்று இல்லாத நிலையை Bichromats என்கிறோம். அதேபோல இரண்டு வகை கோன்கள் குறைபாடு இருந்தால் Monochromats என்றும் நிறம் உணர்த்தும் கோன்கள் அறவே இல்லாதவரை Achromats என்றும் சொல்கிறோம். இவர்களுக்கு உலகம் முழுவதும் கருப்பு வெள்ளையாகத் தெரியும்.
இந்த நிறக்குருடுக்கான ஜீன்கள் எக்ஸ்- குரோமோசோம் மூலம் கடத்தப்படுவதால் ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் மட்டுமே இருக்கும் ஆண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் அவர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு நேரடியாக ஏற்படாமல் அடுத்த தலைமுறைக்கு குறைபாடுடைய ஜீன்களைக் கடத்துபவர்களாகப் பெண்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.
முதன்முதலாக நிறக்குருடு பற்றி ஜான் டால்டன் நிறுவியதும் 'டால்டனிஸம்' (Daltonism) என்ற ஒரு பெயரும் இதற்கு உண்டு. இந்த ஒரு வார்த்தையை வைத்து பின்னப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான அகதா கிறிஸ்டியின் உலகப் புகழ்பெற்ற சிறுகதை ஒன்று உண்டு. 'ஹர்லெக்வின் டீ செட்' என்ற அந்தக் கதையின் மிஸ்டர். சாட்டத்வைட் என்ற ஒரு முதியவர் தன் நீண்ட நாள் நண்பர் அவரது பெரிய இல்லத்தில் சந்திக்கச் செல்கிறார். நண்பரின் வீட்டில் அவரது மகளின் கணவர் தன் இரண்டாம் மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் வசித்து வருகிறார். முதியவரின் மகளான லில்லி, ஒரு மகனைப் பெற்ற கையோடு இறந்து விட கைக்குழந்தையுடன் இருக்கும் இன்னொரு விதவைப் பெண்ணை லில்லியின் கணவர் மறுமணம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வளர்க்கிறார் பெரில் என்ற இரண்டாம் மனைவி. ரோனால்ட் என்ற லில்லியின் மகனும் டிமொத்தி என்ற பெரிலின் மகனும் கிட்டத்தட்ட ஒரே நிறம், ஒரே கூந்தல் நிறத்தைக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் 22 வயது ஆகியிருக்கிறது.
சாட்டத்வைட் விருந்தினராகச் செல்லும் இடங்களில் அவ்வப்போது ஏதேனும் குற்றச்செயல்கள் நிகழவிருப்பதும் அதைத் தன் உள்ளுணர்வு மூலம் அவர் தடுப்பதும் அதிசயமான ஒரு நிகழ்வு. அத்தகைய நிகழ்வுகளின் முன் அவருடைய இன்னொரு நண்பரான துப்பறிவாளர் திரு.க்வின் இவரை எதேச்சையாக சந்திப்பதும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் குறிப்பாகக் கொடுப்பதும் மற்றொரு அதிசயம்.
குறிப்பிட்ட நாளில் சாட்டத்வைட் நண்பர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும் வழியில் ஒரு காபி ஷாப்பில் தாமதிக்கிறார். அங்கு திரு.க்வின் எதிர்பாராதவிதமாக அவரை வந்து சந்தித்து 'டால்டனிஸம்' என்ற ஒற்றை வார்த்தையை கூறிச் செல்கிறார்.
அப்படி என்றால் என்ன? ஏதோ கேள்விப்பட்ட பெயராயிற்றே இது என்ற யோசனையுடன் நண்பர் வீட்டுக்குச் செல்லும் சாட்டத்வைட்டை சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நண்பர் வரவேற்கிறார். அவருடைய கால்களில் ஒன்றில் சிவப்பு நிறச் செருப்பும், ஒன்றில் பச்சை நிறச் செருப்பும் அணிந்திருப்பதைப் பார்த்து, "இன்னும் மாறலையா நீ?" என்று நண்பரிடம் சிரிப்புடன் கேட்கிறார் சாட்டத்வைட்.
"என்ன செய்ய? எனக்கு ரெண்டும் ஒண்ணாத் தானே தெரியுது?" என்கிறார் நண்பர் புன்னகையுடன். அதன் பின் தொடர்ந்த தேனீர் விருந்தில் நண்பரின் பேரன்களுடன் நெகிழ்ச்சியான அறிமுகம் நடக்கிறது. தனது பிரியத்துக்குரிய லில்லியைப் பற்றி சாட்டத்வைட் நினைவு கூர்கிறார். அந்த விருந்தில் பெரில் மிகவும் பரபரப்பாக இருக்கிறாள். அப்போது அவளது கைபட்டு தவறுதலாக டிமோத்தி டீ அருந்திக் கொண்டிருந்த சிவப்பு நிறப் பீங்கான் கோப்பை உடைகிறது. அதற்குப் பதிலாக ஒரு நீலநிற கோப்பையை கொண்டு வந்து வைக்கிறாள் பெரில். அதை எடுத்து டிமோத்தி அருந்தப் போக, விருந்துக்கு வந்திருந்த அவர்களது ஒன்றுவிட்ட சகோதரி டிமோத்தியிடம், "மறுபடியும் மாத்தி எடுத்துட்டியா? சிவப்பு கப் தானே உன்னோடது? ப்ளூ கப்பை எடுத்திருக்க?" என்கிறாள். "எனக்கு ரெண்டுமே ஒண்ணாத் தான் தெரியுது" என்கிறான் டிமோத்தி. 'டால்டனிஸம்' என்று திரு.க்வின் கூறியது ஏன் என்று சட்டென்று புலப்படுகிறது சாட்டத்வைட்டிற்கு. 'டால்டனிஸம்' என்பது நிறக்குருடை அல்லவா குறிக்கிறது?
"நிறுத்து! குடிக்காதே! அதில் விஷம் கலந்திருக்கிறது" என்று டிமோத்தியைத் தடுத்து அந்தக் கோப்பையை வாங்குகிறார். இதைக் கேட்டவுடன் பதட்டமடையும் பெரில் சட்டென்று வெளியேறி மறைந்து விடுகிறாள். வீட்டினர் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, சாத்தர்வைட் விளக்குகிறார்.
தாத்தாவுக்கு இருக்கும் நிறக்குருடு லில்லியின் மரபணுக்கள் வழியாக அவளது மகனுக்கு வருவதுதான் அறிவியல் ரீதியாக சாத்தியம். எனவே டிமோத்தி தான் லில்லியடைய உண்மையான மகன். இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் போது பெரில் எளிதாக அடையாளங்களை மாற்றி மற்றவர்களுக்குக் கூறியிருக்கிறாள். சிறுவயது முதலே இந்தத் திட்டம் அவளுக்கு இருந்திருக்கிறது. கணவர் ராணுவத்தில் இருந்ததால் இதை செயல்படுத்துவது அவளுக்கு எளிதாகிவிட்டது. எப்படியாவது லில்லியின் மகனைக் கொன்றுவிட்டால், தான்பெற்ற மகனுக்கு தாத்தாவின் பேரன் என்ற போர்வையில் சொத்துக்கள் கிடைக்கும் என்று திட்டமிட்டு முதலிலேயே குழந்தைகளை மாற்றியிருக்கிறாள் என்கிறார் அவர். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சகோதரர்கள் போல வளர்ந்த ரோலண்டும் டிமோத்தியும் தங்கள் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்துகின்றனர். லில்லியின் ஆன்மா அரூபமாக நின்று தனக்கு நன்றி கூறுவதாக சாட்டத்வைட் உணர்கிறார்.
ஒரு அறிவியல் உண்மையைத் தெரிந்து வைத்திருந்ததால் குற்றத்தைத் தடுத்த கதை இது.
நிஜ வாழ்க்கையில் நிறங்கள் தெரியாவிட்டால் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே... என்கிறீர்களா? உண்மையில் நிறங்கள் தெரியாதவருக்கு அதைத்தவிர பார்வையில் வேறு எந்தவிதக் குறைவும் இருக்காது. ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒரு முறை நான் வேறு ஒரு இளைஞருக்கு நிறக்குருடு தொடர்பான பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். "எனக்கு இவர் சொல்ற எதுவுமே தெரியலையே டாக்டர்?" என்று அவர் கேட்க, அப்போது தான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய ஜாக்கெட்டின் நிறம் சேலைக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தது. "எப்பவுமே இப்படி மேட்சிங் எடுக்கிறதுல பிரச்சனை வருமா?" என்று நான் கேட்டதற்கு, "ஆமா! நான் எப்ப பிளவுஸ் துணி எடுத்தாலும், எல்லாரும் என்ன? இப்படி எடுத்திருக்கன்னு கேப்பாங்க" என்றார். அது தவிர அவருக்கு வேறு எந்தக் குறைபாடும் இல்லை. தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே அதற்கு எதேச்சையாகத் தான் தெரிய வந்திருக்கிறது.
ஆனால் சில வேலைகளுக்கு நிறக்குருடு பிரச்சனை உள்ளவர்கள் தகுதியானவர்கள் அல்ல. காவல்துறை, ராணுவம், ஓட்டுநர், விமானி போன்ற பணிகள் தான் அவை. சிவப்பு, பச்சை நிறக்குருடால் சிக்னலில் உள்ள வண்ணங்களில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஒரு பெரிய கலவரம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். விஷமிகளைக் கண்டுபிடித்து துப்பாக்கியில் சுடுவதற்கு வாக்கி டாக்கி மூலம் உத்தரவு வருகிறது. 'பச்சை சட்டைக்காரனைச் சுடு!' என்று உத்தரவு வர, நிறங்களை சரியாக பிரித்தறிய முடியாத ஒருவர் காவலராக இருந்தால் என்ன நடக்கும்? பச்சை சட்டைக்கு பதில் நீலச் சட்டைக்காரனைச் சுட்டு விடுவார். ஒரு உயிர் அனாவசியமாகப் போய்விடும்.
சமீபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வந்தார். வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் வருடாந்திர கண் பரிசோதனையில் அவருக்கு நிறக்குருடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைபாடு அவருக்கு பிறவியிலேயே இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு தான் அதிகம். வேலைக்குச் சேரும் போது சரியாகப் பார்க்கப்படாமலோ அல்லது 'சரிக்கட்டப்பட்டோ' போயிருக்கலாம். இதுவரை சிக்னல் உள்ள பகுதிகளில் அவர் அதிகம் வண்டி ஓட்டியதில்லை. கிராமப்புறங்களில் தான் பஸ் ஓட்டியிருக்கிறார். அதனால் பிரச்சினை எதுவும் இதுவரை வரவில்லை. கண்டுபிடித்த பின் அதே வேலையைத் தொடர்வது நல்லதல்ல. எனவே அவருக்கு அலுவலகப் பணிகள் வழங்குவதற்கான ஏற்பாடு நடக்கிறது. நம்மில் ஒருவருக்கும் நிறக்குருடு இருக்கலாம். இதுபோன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன் முறையாகப் பரிசோதனை செய்தால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாமே!
Author: siteadmin
Article Title: நாம் காணும் உலகங்கள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நாம் காணும் உலகங்கள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.