'தடுத்தார்' பூமி ஆள்வார்!
இந்தக் கட்டுரையைப் பின்னொரு நாளில் தான் எழுதத் தீர்மானித்திருந்தேன். சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வினால் இப்பொழுதே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நிகழ்வு பற்றிக் கடைசியில்.. சுமார் 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ஒரு ஊரில் குழந்தை பிறந்த ஒன்பதாம் மாதம் போடக்கூடிய, மீசில்ஸ் என்ற நோய்க்கான தடுப்பூசி போடப்பட்ட ஆறு குழந்தைகள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்போது தடுப்பூசி குறித்த பெரும் அச்சம் நிலவியது. அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பில் ஏதோ குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டு அந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டது. அப்போது செவிலியர்கள் கிராமங்களுக்குச் சென்று புதன்கிழமை தோறும் தடுப்பூசி போடுவது வழக்கம். இந்த நிகழ்விற்குப் பின் அதுவும் நிறுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் வைத்து போடப்பட்டது. எந்த விதமான தடுப்பூசிகளைப் போடுவதற்குமே மக்கள் மிகவும் தயங்கினர். வாய்வழியாக கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கக் கூட அஞ்சினர். அந்த ஆண்டு நடந்த 'பல்ஸ் போலியோ' நிகழ்வில் பல வதந்திகள் பரப்பப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு சண்டையிட்ட சம்பவமும் நடந்தது.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தடுப்பூசியை பராமரிக்க வேண்டிய குளிர்பதன நிலை எந்தக் கட்டத்திலும் பாதிக்கப்படாமல், அந்தச் சங்கிலி (cold chain) கட்டமைக்கப்படுவது வழக்கம். மற்ற மருத்துவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடினாலும் கூட தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவது இன்றும் வழக்கம்.
குறிப்பிட்ட இந்த ஆறு குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் மக்களை, அது ஏதோ ஒரு இடத்தில் நடந்த சிறிய தவறு தான் மற்றபடி தடுப்பூசிகள் எல்லாம் அவசியமானவை, பாதுகாப்பானவை என்று நம்ப வைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. "எங்க குழந்தைக்கு எதுவும் ஆயிடுச்சின்னா நீங்க தருவீங்களா?' என்று நேரடியாகவே மக்கள் சண்டைக்கு வந்தனர்.
அந்த சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகுதான் அதற்கான காரணம் விசாரணையில் தெரியவந்தது. (செவிவழியாகத் தான்) மருந்தின் தயாரிப்பிலும் பராமரிப்பிலும் எந்தவித பிரச்சனையும் இல்லை, போடப்படும் முன் நிகழ்ந்த ஒரு சிறிய தவறு/ கவனப் பிசகு தான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி குறித்த மக்களின் அச்சம் மனதில் ஒரு ஓரமாக, நிரந்தரமாகத் தங்குவதற்கு இந்த சம்பவம் வழிவகுத்து விட்டது.
இப்போதும் இயற்கை ஆர்வலர்கள் பலர் 'என் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, இயல்பாகவே தடுப்பாற்றல் வளர்க்கிறேன்' என்று கூறுகின்றனர். வெகு சில மருத்துவர்களும் கூட அப்படிக் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்ன? தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா?
என்னிடம் கேட்டால் நிச்சயம் வேண்டும் என்பேன். இன்றைய சூழ்நிலையில் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கூறும் பெற்றோர்கள் தான் மருத்துவர்களிடையே அதிகம். அந்த அளவுக்கு தடுப்பூசிகளின் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய பெரியோர்களைக் கேட்டுப்பாருங்கள். தெருவுக்கு ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமாகி இருப்பார். கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களால் (vaccine preventable diseases) ஒரு வீட்டில் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் நான்கு அல்லது ஐந்து உயிரிழந்ததாகக் கூறுவார்கள். சின்னம்மை என்ற வியாதி மனித குலத்திற்கே பெரும் சவாலாக அமைந்தது. அதையும் தடுப்பூசியால் தான் நம்மால் வெல்ல முடிந்தது.
முன்பொரு காலத்தில் காச நோய் பாதித்தவர்களை மலைப்பகுதிகள் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமைப் படுத்தி விடுவார்கள். சென்னை என்றால் தாம்பரம் சானடோரியம், மதுரை என்றால் தோப்பூர், தென்மாவட்டங்கள் என்றால் கன்னியாகுமரி அருகிலுள்ள ஆசாரிப்பள்ளம் இந்த இடங்களில் வைத்திருப்பார்கள். எச்ஐவி எப்படி சமூக களங்கமாகக் (social stigma) கருதப்பட்டதோ அதேபோல் ஆசாரிபள்ளத்துக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தவர் என்றால் சமூகத்தில் ஒரு ஒதுக்கப்படும் நபராகவே பார்க்கப்பட்டார். தற்போதைய கூட்டு மருந்து சிகிச்சை மற்றும் பிறந்தவுடனேயே வழங்கப்படும் பிசிஜி தடுப்பூசி இவற்றால் காச நோயால் வரும் உச்சகட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க முடிந்தது.
பேறுகாலத்தில் ஜன்னி ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் பலபேர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ரணஜன்னி என்று கூறுவார்கள். வீட்டிலேயே பேறுகாலம் பார்ப்பது, கிடைத்த ஆயுதங்களை வைத்து தொப்புள்கொடியை வெட்டுவது, தொப்புள்கொடி வெட்டப்பட்ட இடங்களில் மண், சாணம் போன்றவற்றை வைப்பது இவற்றால் தாய்க்கும் சேய்க்கும் டெட்டனஸ் நோய்க்கிருமிகள் பாதித்து ரணஜன்னி மரணங்கள் அதிகம் நிகழ்ந்தன. கருவுற்றிருக்கும் நேரத்தில் இரண்டு முறை போடப்படும் டிடி ஊசியால் இதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டோம். தற்போது சேர்க்கப்பட்டுள்ள ரோட்டா வைரஸ் தடுப்பூசியால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு அதிகளவில் குறைந்துள்ளது.
'என் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியும் போடவில்லை. ஆனால் இதுவரை நீங்கள் குறிப்பிடும் எந்த நோயும் வரவில்லையே?' என்பவரா நீங்கள்? உங்கள் குழந்தை ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் குழு எதிர்ப்பு சக்தியால் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் எந்த நோய்களும் தாக்கவில்லை
ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன? ஒரு ஊரில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 28 பேருக்கு முறையாக எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன. 2 குழந்தைகளுக்குப் போடப்படவில்லை. 28 பேர் சரியாகப் போட்டு ஒரு நோய்க்கு எதிர்ப்பு சக்தியை தன்னுள் வைத்திருப்பதால் அந்த ஊருக்குள் வரும் கிருமி அழிந்துவிடுகிறது. மற்ற இரு குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பின்றி அந்த சங்கிலி அறுபடுகிறது. அதனால் அந்த இரண்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதும் முறையான தடுப்பூசியால் தான். என்ன ஒன்று, மற்றவர்கள் முறையாகப் போட்டுக் கொண்ட தடுப்பூசியால்..
இப்போது முதலில் சொன்ன சென்ற வார சம்பவத்திற்கு வருகிறேன். இருபது நாட்கள் முன்பு தெரு நாயால் கடிக்கப்பட்ட ஒன்பது வயதுக் குழந்தை ஒன்று.. கடிபட்ட ஒரு மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டிருந்தார்கள். நாய் கடித்தால் டிடி ஊசி, ஆன்டி ரேபிஸ் வாக்சின் எனப்படும் நாய் கடிக்கான தடுப்பூசி மற்றும் வெறிநாயாக இருந்தாலோ அல்லது பிளவுபட்ட காயமாக இருந்தால் கடிபட்ட இடத்தில் இம்முனோகுளோபுளின் என்று கூறப்படும் மிக வலிமையான ஊசி மூன்றும் செலுத்தப்படுகின்றன. இந்தக் குழந்தைக்கும் செலுத்தப்பட்டது. ஆனால் 20 நாட்கள் கழித்து திடீரென்று ஒருநாள் காய்ச்சல். வாயில் எச்சில் ஊறியது, உணவு உட்கொள்ள முடியவில்லை, கழுத்து தொங்கிப் போய், கால்கள் பின்னிக் கொண்ட நிலையும் ஏற்பட்டது. நாய் கடித்த சிறிது நாட்கள் கழித்து தண்ணீரை மறுப்பது (Hydrophobia) இருந்தால் அது ரேபீஸ் எனப்படும் மோசமான வெறிநாய்க்கடி நோய் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தக் குழந்தையும் மருத்துவமனைக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் மோசமாகி, உயிரிழந்தது. ரேபீஸ் என்ற நோய் மனிதனுக்கு வந்தால் 100 சதம் குணப்படுத்த முடியாது. இறப்பு நிச்சயம். Man is a dead end host என்பார்கள். பொதுவாக தடுப்பூசி போட்டால் காப்பாற்றமுடியும். இந்த குழந்தைக்கு கடிபட்டு ஒரு மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டிருந்தாலும் காப்பாற்ற முடியவில்லை. ஏன்? கடிபட்ட இடம் அப்படி. காதுக்கு பின்புறம் கடிபட்டிருந்தது. மூளைக்கு வெகு அருகில் என்பதால் ரத்த நாளங்கள் வழியே நேரடியாக மூளைக்கு மிக விரைவில் கிருமித்தொற்று நிகழ்ந்திருக்க வேண்டும். அதன்பின் போட்ட தடுப்பூசி பயனற்றுப் போயிருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் நான் பார்க்கும் ரேபீஸ் நோயாளி என்பதால் அன்று மிகவும் துயரமாக உணர்ந்தேன். இப்போது வீட்டு நாயோ தற்பொழுது தான் பிறந்த குட்டி நாயோ கடித்தால் கூட உடனடியாக வந்து தடுப்பூசி போட்டு விடும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. இதனால் எத்தனை எத்தனை ரேபீஸ் மரணங்களைத் தடுத்திருக்கிறோம் என்பது பெரும் ஆறுதல். தெருநாய்களுக்கும் நகராட்சி மூலமாக முறையாக தடுப்பூசி போடப்படுகிறது. இருந்தாலும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் பார்ப்போரிடம் வலியுறுத்த வேண்டும் என்ற கருத்தை ஆழமாக என்னுள் பதிய வைத்துச் சென்றது இந்த சென்றவாரச் சம்பவம்.
இந்தக் கட்டுரையைப் பின்னொரு நாளில் தான் எழுதத் தீர்மானித்திருந்தேன். சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வினால் இப்பொழுதே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நிகழ்வு பற்றிக் கடைசியில்.. சுமார் 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ஒரு ஊரில் குழந்தை பிறந்த ஒன்பதாம் மாதம் போடக்கூடிய, மீசில்ஸ் என்ற நோய்க்கான தடுப்பூசி போடப்பட்ட ஆறு குழந்தைகள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்போது தடுப்பூசி குறித்த பெரும் அச்சம் நிலவியது. அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பில் ஏதோ குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டு அந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டது. அப்போது செவிலியர்கள் கிராமங்களுக்குச் சென்று புதன்கிழமை தோறும் தடுப்பூசி போடுவது வழக்கம். இந்த நிகழ்விற்குப் பின் அதுவும் நிறுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் வைத்து போடப்பட்டது. எந்த விதமான தடுப்பூசிகளைப் போடுவதற்குமே மக்கள் மிகவும் தயங்கினர். வாய்வழியாக கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கக் கூட அஞ்சினர். அந்த ஆண்டு நடந்த 'பல்ஸ் போலியோ' நிகழ்வில் பல வதந்திகள் பரப்பப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு சண்டையிட்ட சம்பவமும் நடந்தது.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தடுப்பூசியை பராமரிக்க வேண்டிய குளிர்பதன நிலை எந்தக் கட்டத்திலும் பாதிக்கப்படாமல், அந்தச் சங்கிலி (cold chain) கட்டமைக்கப்படுவது வழக்கம். மற்ற மருத்துவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடினாலும் கூட தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவது இன்றும் வழக்கம்.
குறிப்பிட்ட இந்த ஆறு குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்த காலகட்டத்தில் மக்களை, அது ஏதோ ஒரு இடத்தில் நடந்த சிறிய தவறு தான் மற்றபடி தடுப்பூசிகள் எல்லாம் அவசியமானவை, பாதுகாப்பானவை என்று நம்ப வைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. "எங்க குழந்தைக்கு எதுவும் ஆயிடுச்சின்னா நீங்க தருவீங்களா?' என்று நேரடியாகவே மக்கள் சண்டைக்கு வந்தனர்.
அந்த சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகுதான் அதற்கான காரணம் விசாரணையில் தெரியவந்தது. (செவிவழியாகத் தான்) மருந்தின் தயாரிப்பிலும் பராமரிப்பிலும் எந்தவித பிரச்சனையும் இல்லை, போடப்படும் முன் நிகழ்ந்த ஒரு சிறிய தவறு/ கவனப் பிசகு தான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி குறித்த மக்களின் அச்சம் மனதில் ஒரு ஓரமாக, நிரந்தரமாகத் தங்குவதற்கு இந்த சம்பவம் வழிவகுத்து விட்டது.
இப்போதும் இயற்கை ஆர்வலர்கள் பலர் 'என் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, இயல்பாகவே தடுப்பாற்றல் வளர்க்கிறேன்' என்று கூறுகின்றனர். வெகு சில மருத்துவர்களும் கூட அப்படிக் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்ன? தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா?
என்னிடம் கேட்டால் நிச்சயம் வேண்டும் என்பேன். இன்றைய சூழ்நிலையில் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கூறும் பெற்றோர்கள் தான் மருத்துவர்களிடையே அதிகம். அந்த அளவுக்கு தடுப்பூசிகளின் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய பெரியோர்களைக் கேட்டுப்பாருங்கள். தெருவுக்கு ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமாகி இருப்பார். கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களால் (vaccine preventable diseases) ஒரு வீட்டில் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் நான்கு அல்லது ஐந்து உயிரிழந்ததாகக் கூறுவார்கள். சின்னம்மை என்ற வியாதி மனித குலத்திற்கே பெரும் சவாலாக அமைந்தது. அதையும் தடுப்பூசியால் தான் நம்மால் வெல்ல முடிந்தது.
முன்பொரு காலத்தில் காச நோய் பாதித்தவர்களை மலைப்பகுதிகள் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமைப் படுத்தி விடுவார்கள். சென்னை என்றால் தாம்பரம் சானடோரியம், மதுரை என்றால் தோப்பூர், தென்மாவட்டங்கள் என்றால் கன்னியாகுமரி அருகிலுள்ள ஆசாரிப்பள்ளம் இந்த இடங்களில் வைத்திருப்பார்கள். எச்ஐவி எப்படி சமூக களங்கமாகக் (social stigma) கருதப்பட்டதோ அதேபோல் ஆசாரிபள்ளத்துக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தவர் என்றால் சமூகத்தில் ஒரு ஒதுக்கப்படும் நபராகவே பார்க்கப்பட்டார். தற்போதைய கூட்டு மருந்து சிகிச்சை மற்றும் பிறந்தவுடனேயே வழங்கப்படும் பிசிஜி தடுப்பூசி இவற்றால் காச நோயால் வரும் உச்சகட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க முடிந்தது.
பேறுகாலத்தில் ஜன்னி ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் பலபேர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ரணஜன்னி என்று கூறுவார்கள். வீட்டிலேயே பேறுகாலம் பார்ப்பது, கிடைத்த ஆயுதங்களை வைத்து தொப்புள்கொடியை வெட்டுவது, தொப்புள்கொடி வெட்டப்பட்ட இடங்களில் மண், சாணம் போன்றவற்றை வைப்பது இவற்றால் தாய்க்கும் சேய்க்கும் டெட்டனஸ் நோய்க்கிருமிகள் பாதித்து ரணஜன்னி மரணங்கள் அதிகம் நிகழ்ந்தன. கருவுற்றிருக்கும் நேரத்தில் இரண்டு முறை போடப்படும் டிடி ஊசியால் இதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டோம். தற்போது சேர்க்கப்பட்டுள்ள ரோட்டா வைரஸ் தடுப்பூசியால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு அதிகளவில் குறைந்துள்ளது.
'என் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியும் போடவில்லை. ஆனால் இதுவரை நீங்கள் குறிப்பிடும் எந்த நோயும் வரவில்லையே?' என்பவரா நீங்கள்? உங்கள் குழந்தை ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் குழு எதிர்ப்பு சக்தியால் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் எந்த நோய்களும் தாக்கவில்லை
ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன? ஒரு ஊரில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 28 பேருக்கு முறையாக எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன. 2 குழந்தைகளுக்குப் போடப்படவில்லை. 28 பேர் சரியாகப் போட்டு ஒரு நோய்க்கு எதிர்ப்பு சக்தியை தன்னுள் வைத்திருப்பதால் அந்த ஊருக்குள் வரும் கிருமி அழிந்துவிடுகிறது. மற்ற இரு குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பின்றி அந்த சங்கிலி அறுபடுகிறது. அதனால் அந்த இரண்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதும் முறையான தடுப்பூசியால் தான். என்ன ஒன்று, மற்றவர்கள் முறையாகப் போட்டுக் கொண்ட தடுப்பூசியால்..
இப்போது முதலில் சொன்ன சென்ற வார சம்பவத்திற்கு வருகிறேன். இருபது நாட்கள் முன்பு தெரு நாயால் கடிக்கப்பட்ட ஒன்பது வயதுக் குழந்தை ஒன்று.. கடிபட்ட ஒரு மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டிருந்தார்கள். நாய் கடித்தால் டிடி ஊசி, ஆன்டி ரேபிஸ் வாக்சின் எனப்படும் நாய் கடிக்கான தடுப்பூசி மற்றும் வெறிநாயாக இருந்தாலோ அல்லது பிளவுபட்ட காயமாக இருந்தால் கடிபட்ட இடத்தில் இம்முனோகுளோபுளின் என்று கூறப்படும் மிக வலிமையான ஊசி மூன்றும் செலுத்தப்படுகின்றன. இந்தக் குழந்தைக்கும் செலுத்தப்பட்டது. ஆனால் 20 நாட்கள் கழித்து திடீரென்று ஒருநாள் காய்ச்சல். வாயில் எச்சில் ஊறியது, உணவு உட்கொள்ள முடியவில்லை, கழுத்து தொங்கிப் போய், கால்கள் பின்னிக் கொண்ட நிலையும் ஏற்பட்டது. நாய் கடித்த சிறிது நாட்கள் கழித்து தண்ணீரை மறுப்பது (Hydrophobia) இருந்தால் அது ரேபீஸ் எனப்படும் மோசமான வெறிநாய்க்கடி நோய் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தக் குழந்தையும் மருத்துவமனைக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் மோசமாகி, உயிரிழந்தது. ரேபீஸ் என்ற நோய் மனிதனுக்கு வந்தால் 100 சதம் குணப்படுத்த முடியாது. இறப்பு நிச்சயம். Man is a dead end host என்பார்கள். பொதுவாக தடுப்பூசி போட்டால் காப்பாற்றமுடியும். இந்த குழந்தைக்கு கடிபட்டு ஒரு மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டிருந்தாலும் காப்பாற்ற முடியவில்லை. ஏன்? கடிபட்ட இடம் அப்படி. காதுக்கு பின்புறம் கடிபட்டிருந்தது. மூளைக்கு வெகு அருகில் என்பதால் ரத்த நாளங்கள் வழியே நேரடியாக மூளைக்கு மிக விரைவில் கிருமித்தொற்று நிகழ்ந்திருக்க வேண்டும். அதன்பின் போட்ட தடுப்பூசி பயனற்றுப் போயிருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் நான் பார்க்கும் ரேபீஸ் நோயாளி என்பதால் அன்று மிகவும் துயரமாக உணர்ந்தேன். இப்போது வீட்டு நாயோ தற்பொழுது தான் பிறந்த குட்டி நாயோ கடித்தால் கூட உடனடியாக வந்து தடுப்பூசி போட்டு விடும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. இதனால் எத்தனை எத்தனை ரேபீஸ் மரணங்களைத் தடுத்திருக்கிறோம் என்பது பெரும் ஆறுதல். தெருநாய்களுக்கும் நகராட்சி மூலமாக முறையாக தடுப்பூசி போடப்படுகிறது. இருந்தாலும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் பார்ப்போரிடம் வலியுறுத்த வேண்டும் என்ற கருத்தை ஆழமாக என்னுள் பதிய வைத்துச் சென்றது இந்த சென்றவாரச் சம்பவம்.
Author: SudhaSri
Article Title: 'தடுத்தார்' பூமி ஆள்வார்!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 'தடுத்தார்' பூமி ஆள்வார்!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.