ஐயையோ பாஸிட்டிவ்வா?
ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்தால் அதை 'பாசிட்டிவ்' என்று குறிப்பது வழக்கம். சில பணியாளர்கள் பேச்சு வழக்கில் என்ன வியாதி என்று குறிப்பிடாமல் மொட்டையாக 'பாசிட்டிவ்' என்பார்கள்.
முன்பெல்லாம் பாசிட்டிவ் என்ற பேச்சு காதில் விழுந்தால், "ஐயோ! எச்ஐவி பாசிட்டிவ்வா!" என்று அருகில் இருப்பவர் அதிர்ச்சியடைவார். கடந்த வருடத்தில் பாஸிட்டிவ் என்ற வார்த்தை பெரும்பாலும் கொரோனா தொற்றைக் குறித்தது. கடந்த ஒரு மாதமாக கோவிட்டிற்கு நிகராக, டெங்கு பாஸிட்டிவ்வும் பயமுறுத்தி வருகிறது. இப்படி சமூக, பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வியாதிகளாக வந்து மக்களை பயமுறுத்துவது உலக இயல்பு.
எப்போதும் ஒரு ஊரில் தங்கியிருந்து அவ்வப்போது ஒன்றிரண்டு பேரைப் பாதிப்பதின் மூலம் முகம் காட்டி வரும் நோய்களை 'என்டமிக்' (endemic disease) என்போம். உதாரணம், மலேரியா.
சென்னை போன்ற குறிப்பிட்ட ஊர்களில் ஆண்டு முழுவதும் ஆங்காங்கே சில நோயாளிகள் மலேரியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை வருவார்கள்.
திடீரென பாதிக்கத் துவங்கி அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் நோய்களை எபிடமிக் (epidemic diseases) என்பார்கள்.
உதாரணமாக காலரா, பிளேக் போன்றவை. மிகவும் வீரியம் உள்ளதாக இருந்து, உலகின் பல கண்டங்களிலும் வேகமாகப் பரவும் நோய்களை 'பேன்டமிக்' (pandemic disease) என்பார்கள். கொரோனா போல..
நோயின் நிகழ்வு இப்படிப் பெருவாரியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் வியாதிகளை ஸ்போராடிக் (sporadic) என்பார்கள்.
இப்போது பல ஊர்களிலும் டெங்கு 'என்டமிக்' அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. அந்த இடங்களில் வருடம் முழவதுமே டெங்குக் கிருமி பாதிப்பு இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். நாம் அனைவரும் அறிந்தது போல டெங்குக் காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுவது. ஆனால் அதைப் பரப்புவது ஏடிஸ் என்ற கொசு.
இந்தக் கொசு சுத்தமான தண்ணீரில் தான் பெருகும் என்பது நாம் அறிந்ததே. மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் பயனற்ற பொருட்கள் தண்ணீர் தேங்குவது தான் டெங்கு பரவலுக்கான காரணமாக பல ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கிறது. அதனால் தொடர்மழைக் காலங்களில், வீடு, அலுவலகங்களைச் சுற்றிலும் நீர் தேங்கும் வாய்ப்புள்ள பொருட்களை அகற்றுங்கள் என்று அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கும். நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் வீடுகளில் சோதனை செய்து உரல், தொட்டி போன்றவற்றை மூடுவதையும், பயனற்றுக் கிடப்பதைக் கவிழ்த்து வைப்பதையும், கொசு வராமல் இருக்க மருந்து தெளிப்பதையும் பார்த்திருக்கிறோம்.
சமீப ஆண்டுகளாக மழை இல்லாத நேரங்களிலும் டெங்கு நோய் அதிகம் காணப்படுகின்றது. அதற்குக் காரணமாகக் குடிநீர் விநியோகம் கூறப்பட்டது. பல ஊர்களில் 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் உள்ளாட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே தேவைக்காக மக்கள் தண்ணீரைக் குடங்களிலும் ட்ரம்களிலும் அதிக நாட்கள் சேமித்து வைக்கிறார்கள், அந்த நீரில் கொசு உற்பத்தி நடக்கிறது என்பது கண்டறியப்பட்டது. அதனால் தினமும் குடிநீர் வழங்கினால் இந்தப் பிரச்சனை வராது என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்க, அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
தினமும் குடிநீர் விநியோகித்தால் எப்படி டெங்கு கொசு குறையும் என்ற கேள்வி எழுகிறதா? எந்தக் கொசுவாக இருந்தாலும் அதன் இனப்பெருக்கக் காலம் சராசரியாக ஒரு வார காலம். இந்த ஞாயிறன்று கொசு தண்ணீரில் முட்டையிட்டால் இரண்டு முதல் மூன்று நாட்களில் அந்த முட்டையில் இருந்து கொசுப்புழு (larva) வெளியே வரும். அதிலிருந்து மூன்று நாட்களில், அடுத்த ஞாயிறுக்குள் அந்தப் புழு கொசுவாக மாறி வெளியே பறந்து விடும்.
இந்தக் கொசுக்கள் டெங்கு பாதித்த மனிதரைக் கடித்து விட்டு, பின் இன்னொரு ஆரோக்கியமான நபரைக் கடிக்கும்போது கிருமிப் பரவல் ஏற்படுகிறது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் அவ்வளவாக டெங்கு நோய் கிடையாது. திடீரென நிறைய காய்ச்சல் நோயாளிகள் தோன்றி, சில உயிரிழப்புகளும் ஏற்பட, 'மர்மக்காய்ச்சல் பரவுகிறது' என்று பேசப்பட்டு பின் அது டெங்கு நோய் என்று கண்டுப்பட்டது. நெருக்கடியான ஊர்களில் கொத்துக்கொத்தாக நோயாளிகள் உருவாகி டெங்குக்காகவே சிறப்பு வார்டுகளை மருத்துவமனைகள் தோறும் உருவாக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த 'எப்பிடமிக்'கின் போது பலர் தட்டணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் தான் கொண்டுவரப்பட்டனர்.
தட்டணுக்கள் எண்ணிக்கை நாற்பதாயிரத்துக்குக் கீழே போகும்பொழுது உடலில் ரத்தக் கசிவுகள் ஏற்படும். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபர் திடீர் ரத்தப் போக்கினால் உயிரிழப்பதும் நடக்கும். 'நன்றாக இருக்கிறீர்கள், இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போகலாம்' என்று சொல்லப்பட்ட ஒரு பெண்மணி மாதவிடாய் ஏற்பட்டு விட, இயற்கை ரத்தக்கசிவின் அளவு அதிகரித்து மொத்த ரத்தமும் வெளியேறி உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
எல்லா வைரஸ் தொற்றுக்களையும் போலவே டெங்கிலும் காய்ச்சல், உடல் அசதி, லேசான சளி இருக்கும். சிலருக்கு இந்த முதல் நிலையோடு காய்ச்சல் குணமடைந்து விடும். (Dengue fever).
இப்படிப்பட்டவர்களுக்கு தனக்கு வந்து விட்டுப் போனது டெங்கு என்பதே தெரிந்திருக்காது.
இரண்டாம் முறை தொற்று ஏற்படும் போதோ, அல்லது ஒருவிதமான அழற்சியாலோ இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். அதனால் சிறு ரத்த நாளங்களில் இருந்து உடலுக்குள் நீர்க் கசிவு ஏற்படும் (capillary leakage).
அதிக நீர்ச்சத்து குறைபாட்டால் நோயாளியின் முக்கிய உறுப்புக்களுக்கு ஊட்டமில்லா நிலை ஏற்படும் (dengue shock syndrome).
டெங்குவின் அடுத்த மூன்றாம் நிலை இரத்தப்போக்கை உருவாக்கக்கூடியது. (Dengue hemorrhagic syndrome) தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படுவதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படலாம்.
டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறு குழந்தைகளே. பொதுவாக எந்தக் காய்ச்சல் வந்தாலும் குழந்தைகள் சரியாக உணவு உட்கொள்ள மாட்டார்கள். சோர்வாக படுத்திருப்பதால் நீர் அருந்துவதும் குறைந்துவிடும். டெங்குவால் இரத்த நாளங்களில் இருந்த நீர் கசியும் நிலையுடன், உணவு உட்கொள்ளாததால் ஏற்படும் நீர்ச் சத்து குறைந்த நிலையும் சேர்ந்துகொள்ள விரைவில் குழந்தை 'ஷாக்' என்ற நிலைக்குப் போய்விடும். இந்த நிலை ஏற்படும் நேரம், அதாவது நான்காவது அல்லது ஐந்தாவது நாள் பெரும்பாலும் காய்ச்சல் குறைந்திருக்கும். அதனால் குழந்தை வெறுமனே சோர்வாக மட்டும் படுத்திருப்பதாக பெற்றோர் எண்ணிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
சென்ற மாதத்தில் ஒரு நாள், காய்ச்சல் தான் நின்று விட்டதே என்று வெறும் கைவைத்தியத்தோடு நிறுத்தி விட்ட ஒரு பெற்றோர், திடீரென்று ஆறாம் நாள் குழந்தை பேச்சு மூச்சற்று கிடப்பதைக் கவனித்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும்முன் நிலை கைமீறிப் போயிருந்தது.
இன்னும் தமிழக கிராமப்புறங்களில் தொக்கம் எடுத்தல், சீர் தட்டுதல் போன்ற மோசமான பழக்கங்கள் நிலவி வருகின்றன. குழந்தை சாப்பிடவில்லையா, வாந்தி எடுக்கிறதா எதையாவது விழுங்கியிருக்கலாம் என்று அனுமானித்து சில ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கூட்டிப் போகிறார்கள். அவர் வயிற்றைத் தட்டுவது, தலைகீழாகப் பிடித்து முதுகில் அடிப்பது, குழந்தையின் வாய்க்குள் ஒரு குழலை நுழைத்துக் கொண்டு மறு முனையில் வாய்வைத்து உறிஞ்சுவது போன்ற சில நாடகத்தனமான வேலைகளைச் செய்து காசு வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார். ஏற்கனவே நொந்து போயிருந்த குழந்தையின் உடல் இந்த வன்முறையைத் தாக்குப் பிடிக்காமல் உயிரையே விட்டு விடுவதும் நடந்திருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு ஆறு வயதுக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது. அதன் பின் வயிற்று வலியுடன் வாந்தியும் இருந்திருக்கிறது. வயிறு சற்று உப்பினாற் போல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள் என்று சீர் தட்டுவதற்கென்றே பெயர் போன ஒரு ஊருக்குக் குழந்தையைக் கூட்டி போயிருக்கிறார்கள். அப்படி சீர் தட்டி முரட்டுத்தனமாக ஏதோ செய்ததில் குழந்தை திடீரென உயிரிழந்து போக, நிலைமை கலவரமாகி அதன்பின் போலீஸ் மூலம் குழந்தையின் உடல் பிணக்கூறாய்வுக்காக எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆய்வின் போது டெங்கு நோய்க்கான அத்தனை அறிகுறிகளும் அந்தப் பிஞ்சு உடலுக்குள் இருந்தன. சோர்வடையத் துவங்கிய நிலையிலேயே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம். அனுதினமும் நவீன மருத்துவத்தை நம்பி வரும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள்ளாக பூரணநலம் பெற்று வீடு திரும்புகிறார்கள். பல நோய்களைப் போலவே அறிதலும் புரிதலும் மட்டுமே டெங்குவைக் கடந்துபோக அவசியம். அறிந்து கொள்வோம், இதுவும் கடந்து போகும் என்று தெரிந்து கொள்வோம்..
*டெங்குக் கொசு எப்படி இருக்கும்?
*கொசுக்களில் வேறு என்னென்ன வகைகள் நம் நாட்டில் இருக்கின்றன? அவற்றால் என்னென்ன பாதிப்புகள் நிகழக்கூடும்?
*கொசுக்களை எ
ப்படி ஒழிக்கலாம்?
அடுத்த வாரம் பேசுவோம்...
ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்தால் அதை 'பாசிட்டிவ்' என்று குறிப்பது வழக்கம். சில பணியாளர்கள் பேச்சு வழக்கில் என்ன வியாதி என்று குறிப்பிடாமல் மொட்டையாக 'பாசிட்டிவ்' என்பார்கள்.
முன்பெல்லாம் பாசிட்டிவ் என்ற பேச்சு காதில் விழுந்தால், "ஐயோ! எச்ஐவி பாசிட்டிவ்வா!" என்று அருகில் இருப்பவர் அதிர்ச்சியடைவார். கடந்த வருடத்தில் பாஸிட்டிவ் என்ற வார்த்தை பெரும்பாலும் கொரோனா தொற்றைக் குறித்தது. கடந்த ஒரு மாதமாக கோவிட்டிற்கு நிகராக, டெங்கு பாஸிட்டிவ்வும் பயமுறுத்தி வருகிறது. இப்படி சமூக, பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வியாதிகளாக வந்து மக்களை பயமுறுத்துவது உலக இயல்பு.
எப்போதும் ஒரு ஊரில் தங்கியிருந்து அவ்வப்போது ஒன்றிரண்டு பேரைப் பாதிப்பதின் மூலம் முகம் காட்டி வரும் நோய்களை 'என்டமிக்' (endemic disease) என்போம். உதாரணம், மலேரியா.
சென்னை போன்ற குறிப்பிட்ட ஊர்களில் ஆண்டு முழுவதும் ஆங்காங்கே சில நோயாளிகள் மலேரியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை வருவார்கள்.
திடீரென பாதிக்கத் துவங்கி அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் நோய்களை எபிடமிக் (epidemic diseases) என்பார்கள்.
உதாரணமாக காலரா, பிளேக் போன்றவை. மிகவும் வீரியம் உள்ளதாக இருந்து, உலகின் பல கண்டங்களிலும் வேகமாகப் பரவும் நோய்களை 'பேன்டமிக்' (pandemic disease) என்பார்கள். கொரோனா போல..
நோயின் நிகழ்வு இப்படிப் பெருவாரியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் வியாதிகளை ஸ்போராடிக் (sporadic) என்பார்கள்.
இப்போது பல ஊர்களிலும் டெங்கு 'என்டமிக்' அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. அந்த இடங்களில் வருடம் முழவதுமே டெங்குக் கிருமி பாதிப்பு இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். நாம் அனைவரும் அறிந்தது போல டெங்குக் காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுவது. ஆனால் அதைப் பரப்புவது ஏடிஸ் என்ற கொசு.
இந்தக் கொசு சுத்தமான தண்ணீரில் தான் பெருகும் என்பது நாம் அறிந்ததே. மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் பயனற்ற பொருட்கள் தண்ணீர் தேங்குவது தான் டெங்கு பரவலுக்கான காரணமாக பல ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கிறது. அதனால் தொடர்மழைக் காலங்களில், வீடு, அலுவலகங்களைச் சுற்றிலும் நீர் தேங்கும் வாய்ப்புள்ள பொருட்களை அகற்றுங்கள் என்று அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கும். நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் வீடுகளில் சோதனை செய்து உரல், தொட்டி போன்றவற்றை மூடுவதையும், பயனற்றுக் கிடப்பதைக் கவிழ்த்து வைப்பதையும், கொசு வராமல் இருக்க மருந்து தெளிப்பதையும் பார்த்திருக்கிறோம்.
சமீப ஆண்டுகளாக மழை இல்லாத நேரங்களிலும் டெங்கு நோய் அதிகம் காணப்படுகின்றது. அதற்குக் காரணமாகக் குடிநீர் விநியோகம் கூறப்பட்டது. பல ஊர்களில் 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் உள்ளாட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே தேவைக்காக மக்கள் தண்ணீரைக் குடங்களிலும் ட்ரம்களிலும் அதிக நாட்கள் சேமித்து வைக்கிறார்கள், அந்த நீரில் கொசு உற்பத்தி நடக்கிறது என்பது கண்டறியப்பட்டது. அதனால் தினமும் குடிநீர் வழங்கினால் இந்தப் பிரச்சனை வராது என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்க, அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
தினமும் குடிநீர் விநியோகித்தால் எப்படி டெங்கு கொசு குறையும் என்ற கேள்வி எழுகிறதா? எந்தக் கொசுவாக இருந்தாலும் அதன் இனப்பெருக்கக் காலம் சராசரியாக ஒரு வார காலம். இந்த ஞாயிறன்று கொசு தண்ணீரில் முட்டையிட்டால் இரண்டு முதல் மூன்று நாட்களில் அந்த முட்டையில் இருந்து கொசுப்புழு (larva) வெளியே வரும். அதிலிருந்து மூன்று நாட்களில், அடுத்த ஞாயிறுக்குள் அந்தப் புழு கொசுவாக மாறி வெளியே பறந்து விடும்.
இந்தக் கொசுக்கள் டெங்கு பாதித்த மனிதரைக் கடித்து விட்டு, பின் இன்னொரு ஆரோக்கியமான நபரைக் கடிக்கும்போது கிருமிப் பரவல் ஏற்படுகிறது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் அவ்வளவாக டெங்கு நோய் கிடையாது. திடீரென நிறைய காய்ச்சல் நோயாளிகள் தோன்றி, சில உயிரிழப்புகளும் ஏற்பட, 'மர்மக்காய்ச்சல் பரவுகிறது' என்று பேசப்பட்டு பின் அது டெங்கு நோய் என்று கண்டுப்பட்டது. நெருக்கடியான ஊர்களில் கொத்துக்கொத்தாக நோயாளிகள் உருவாகி டெங்குக்காகவே சிறப்பு வார்டுகளை மருத்துவமனைகள் தோறும் உருவாக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த 'எப்பிடமிக்'கின் போது பலர் தட்டணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் தான் கொண்டுவரப்பட்டனர்.
தட்டணுக்கள் எண்ணிக்கை நாற்பதாயிரத்துக்குக் கீழே போகும்பொழுது உடலில் ரத்தக் கசிவுகள் ஏற்படும். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபர் திடீர் ரத்தப் போக்கினால் உயிரிழப்பதும் நடக்கும். 'நன்றாக இருக்கிறீர்கள், இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போகலாம்' என்று சொல்லப்பட்ட ஒரு பெண்மணி மாதவிடாய் ஏற்பட்டு விட, இயற்கை ரத்தக்கசிவின் அளவு அதிகரித்து மொத்த ரத்தமும் வெளியேறி உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
எல்லா வைரஸ் தொற்றுக்களையும் போலவே டெங்கிலும் காய்ச்சல், உடல் அசதி, லேசான சளி இருக்கும். சிலருக்கு இந்த முதல் நிலையோடு காய்ச்சல் குணமடைந்து விடும். (Dengue fever).
இப்படிப்பட்டவர்களுக்கு தனக்கு வந்து விட்டுப் போனது டெங்கு என்பதே தெரிந்திருக்காது.
இரண்டாம் முறை தொற்று ஏற்படும் போதோ, அல்லது ஒருவிதமான அழற்சியாலோ இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். அதனால் சிறு ரத்த நாளங்களில் இருந்து உடலுக்குள் நீர்க் கசிவு ஏற்படும் (capillary leakage).
அதிக நீர்ச்சத்து குறைபாட்டால் நோயாளியின் முக்கிய உறுப்புக்களுக்கு ஊட்டமில்லா நிலை ஏற்படும் (dengue shock syndrome).
டெங்குவின் அடுத்த மூன்றாம் நிலை இரத்தப்போக்கை உருவாக்கக்கூடியது. (Dengue hemorrhagic syndrome) தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படுவதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படலாம்.
டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறு குழந்தைகளே. பொதுவாக எந்தக் காய்ச்சல் வந்தாலும் குழந்தைகள் சரியாக உணவு உட்கொள்ள மாட்டார்கள். சோர்வாக படுத்திருப்பதால் நீர் அருந்துவதும் குறைந்துவிடும். டெங்குவால் இரத்த நாளங்களில் இருந்த நீர் கசியும் நிலையுடன், உணவு உட்கொள்ளாததால் ஏற்படும் நீர்ச் சத்து குறைந்த நிலையும் சேர்ந்துகொள்ள விரைவில் குழந்தை 'ஷாக்' என்ற நிலைக்குப் போய்விடும். இந்த நிலை ஏற்படும் நேரம், அதாவது நான்காவது அல்லது ஐந்தாவது நாள் பெரும்பாலும் காய்ச்சல் குறைந்திருக்கும். அதனால் குழந்தை வெறுமனே சோர்வாக மட்டும் படுத்திருப்பதாக பெற்றோர் எண்ணிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
சென்ற மாதத்தில் ஒரு நாள், காய்ச்சல் தான் நின்று விட்டதே என்று வெறும் கைவைத்தியத்தோடு நிறுத்தி விட்ட ஒரு பெற்றோர், திடீரென்று ஆறாம் நாள் குழந்தை பேச்சு மூச்சற்று கிடப்பதைக் கவனித்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும்முன் நிலை கைமீறிப் போயிருந்தது.
இன்னும் தமிழக கிராமப்புறங்களில் தொக்கம் எடுத்தல், சீர் தட்டுதல் போன்ற மோசமான பழக்கங்கள் நிலவி வருகின்றன. குழந்தை சாப்பிடவில்லையா, வாந்தி எடுக்கிறதா எதையாவது விழுங்கியிருக்கலாம் என்று அனுமானித்து சில ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கூட்டிப் போகிறார்கள். அவர் வயிற்றைத் தட்டுவது, தலைகீழாகப் பிடித்து முதுகில் அடிப்பது, குழந்தையின் வாய்க்குள் ஒரு குழலை நுழைத்துக் கொண்டு மறு முனையில் வாய்வைத்து உறிஞ்சுவது போன்ற சில நாடகத்தனமான வேலைகளைச் செய்து காசு வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார். ஏற்கனவே நொந்து போயிருந்த குழந்தையின் உடல் இந்த வன்முறையைத் தாக்குப் பிடிக்காமல் உயிரையே விட்டு விடுவதும் நடந்திருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு ஆறு வயதுக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது. அதன் பின் வயிற்று வலியுடன் வாந்தியும் இருந்திருக்கிறது. வயிறு சற்று உப்பினாற் போல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள் என்று சீர் தட்டுவதற்கென்றே பெயர் போன ஒரு ஊருக்குக் குழந்தையைக் கூட்டி போயிருக்கிறார்கள். அப்படி சீர் தட்டி முரட்டுத்தனமாக ஏதோ செய்ததில் குழந்தை திடீரென உயிரிழந்து போக, நிலைமை கலவரமாகி அதன்பின் போலீஸ் மூலம் குழந்தையின் உடல் பிணக்கூறாய்வுக்காக எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆய்வின் போது டெங்கு நோய்க்கான அத்தனை அறிகுறிகளும் அந்தப் பிஞ்சு உடலுக்குள் இருந்தன. சோர்வடையத் துவங்கிய நிலையிலேயே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம். அனுதினமும் நவீன மருத்துவத்தை நம்பி வரும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள்ளாக பூரணநலம் பெற்று வீடு திரும்புகிறார்கள். பல நோய்களைப் போலவே அறிதலும் புரிதலும் மட்டுமே டெங்குவைக் கடந்துபோக அவசியம். அறிந்து கொள்வோம், இதுவும் கடந்து போகும் என்று தெரிந்து கொள்வோம்..
*டெங்குக் கொசு எப்படி இருக்கும்?
*கொசுக்களில் வேறு என்னென்ன வகைகள் நம் நாட்டில் இருக்கின்றன? அவற்றால் என்னென்ன பாதிப்புகள் நிகழக்கூடும்?
*கொசுக்களை எ
ப்படி ஒழிக்கலாம்?
அடுத்த வாரம் பேசுவோம்...
Author: SudhaSri
Article Title: டெங்கு -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: டெங்கு -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.