• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 35

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-35

உத்ராவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்தவர்..சில நிமிடங்களில் தன்னை நிதானித்து கொண்டு "ஏய்..எதுக்கு டி போனவ திரும்ப வந்த..ஏற்கனவே எங்களுக்கு நீ செஞ்ச அவமானம் போதாதா..இன்னும் அதிகமாக்க..வந்துட்டியா.."

"நீ திடீர்னு ஓடி போனியே..போனவ அப்படியே போக வேண்டியது தானே..ஏன் திரும்பி வந்து எங்களை இன்னும் கேவலப்படுத்தனும்னு எண்ணத்தோட வந்தியா.."

"ஊர்ல ஆளுங்க எல்லாம் நீ தனியா போனியா..இல்ல யாரோடயாவது ஓடி போனியானு..இங்க எங்க ஒவ்வொருத்தரையும் கேள்வியா கேட்டு அசிங்கப்படுத்தினாங்களே..இப்ப நீ திரும்ப வந்திருக்கியே..இனி என்ன நடக்குமோ.."

"எங்களை விடு.. இதோ..இருக்கானே..என் பிள்ளை..அவன் கூட வேலை செய்யறவங்க எல்லாம் அவனை எவ்ளோ அசிங்கப்படுத்தினாங்கனு தெரியுமா..உனக்கு எதுக்கு அதெல்லாம்.."

"ஆனா ஒண்ணு டி..நீ போயிட்டனு தெரிஞ்சு இந்த குடும்பமே நிலை குலைஞ்சிருக்க..

"உன்னை பெத்த குடும்பம் மட்டும் வெள்ளையும் சொள்ளையுமா திரிஞ்சிட்டு..ஊர்ல நடக்கிற விசேஷத்துக்கு எல்லாம் சந்தோஷமா போயிட்டு தான் இருக்காங்க.."

"உன் அருமை பெரியப்பாவும் கொஞ்சம் கூட கவலையே இல்லாம..வருஷத்துக்கு ரெண்டு சொத்து வாங்கி குவிச்சிட்டே இருக்காரு..உங்க யாருக்குமே..குற்ற உணர்ச்சியே கிடையாதா.."என கத்தி விட்டு அவளை இன்னும் திட்ட ஆரம்பித்தார்.

"மா..தயவு செய்து இதை நிறுத்தறியா..உத்ரா இனிமே இங்க தான் இருக்க போறா..அதனால நீ பேச வேண்டியது எல்லாம் பொறுமையா பேசு.."

"நேத்து பூரா ஒரு கேஸ் விஷயமா அலைஞ்சதுல..கொஞ்சம் நேரம் கூட தூங்கல..நீ சத்தம் போடாம இருந்தா தான் என்னால தூங்க முடியும்.."என ஒரே நிமிடத்தில் திலகவதியை அடக்கியவன் உத்ரா ஹர்ஷாவோடு தங்களது அறைக்கு போய் அவர்களை உட்கார சொல்லி விட்டு, மீரா குடுத்து விட்டிருந்த சத்து மாவு கஞ்சியை உத்ரா குடுக்க, அதை நிமிடத்தில் குடித்து விட்டு தூங்கி போனான்.

அவனின் தூக்கத்தை கலைக்காமல் சற்று நேரம் ஹர்ஷாவோடு விளையாடிவள்...அவனுக்கு உணவு ஊட்டும் நேரம் வரவே..அவனை தூக்கி கொண்டு கீழே வந்தவள் நேராக கிச்சனுக்கு போக..

அங்கிருந்த தர்ஷினி உத்ராவை பார்த்து "அண்ணி... ஹர்ஷா இட்லி சாப்பிடுவானா..இல்ல தோசை செய்யவா.."என கேட்க..

"அவனுக்கு தர்ஷு அத்தை போல..இட்லி தான் ரொம்ப பிடிக்கும்...கூடவே கார சட்னியும்.." என சொல்லி சிரிக்க..

"இதோ..சூடா..இட்லி இருக்கு..சட்னியும் செஞ்சாச்சு....அவனை என் கிட்ட குடுங்க..என் செல்ல மருமகனுக்கு நான் தான் ஊட்டுவேன்.." என இட்லியை தட்டில் வைத்து ஹர்ஷாவுக்கு ஊட்ட..அவனும் அமைதியாக அவள் குடுத்த ரெண்டு இட்லிகளோடு பூஸ்ட்டும் குடிக்க..அங்கிருந்த முரளி அவனை கைகளில் வாங்கி கொண்டு "நான் இவனை பாத்துக்கறேன்.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க.." என சொல்லி வாசலுக்கு அழைத்து போய் விளையாட்டு காட்ட ஆரம்பிக்க..அவனுடைய சிரிப்பால் வீடே பிரகாசமாகி விட்டது.

"இந்த பயலுக்கு இருக்கிற அழும்பு இருக்கே....தர்ஷீ...தினமும் ஒரு இட்லிக்கே என்னை அரை மணி நேரம் போராட வெப்பான்..இன்னிக்கு அத்தை ஊட்டவே ஒழுங்கா சாப்பிட்டான்.. பாத்தியா.." என குறையோடு சொல்ல...

"ம்ம்ம்..எல்லாம் சாப்பிடற மாதிரி இருந்திருந்தா..என் புள்ள சாப்பிட்டிருப்பான்..உனக்கு சுடு தண்ணி கூட வெக்க தெரியாது..இதுல நீ இட்லி செஞ்சா..அவன் பாவம் தானே.." என சொல்லியபடி அங்கு வந்த சத்யாவை பார்த்தவள்..

அவன் சொன்னதையே கவனிக்காதது போல உத்ரா "என்னாச்சு..மதியம் வரைக்கும் தூங்க போறேன்னு சொல்லிட்டு சீக்கிரமே எழுந்திட்டீங்க.." என கேட்க...

"ஆமா..உத்ரா..சொன்னேன் தான்..ஆனா ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு..நான் உடனே கிளம்பணும்..எனக்கு ரொம்ப பசிக்குது.. சாப்பிட ஏதாவது இருக்கா.." என சத்யா அவளுக்கு பதில் சொல்ல..அதற்குள் அவனை பார்த்தவள்..

"வா அண்ணா.. இந்தா இட்லி.. சாப்பிடு.."என தட்டில் வைத்து தர்ஷினி குடுக்க..அவசரமாக சாப்பிட்டதும் எப்போதும் போல அவனுக்கு சூடான சுக்கு காஃபியையும் தந்து விட்டு தர்ஷினியும், உத்ராவும், சாப்பிட ஆரம்பித்தார்கள்.

வேகமாக சாப்பிட்டு கிளம்பியவன் வெளியே வந்து ஹர்ஷாவுக்கு முத்தமிட்டு விட்டு அப்பாவிடம் தான் ஒரு அவசர வேலையாக போய் வருவதாக சொல்லி கொண்டு கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் வீடே அமைதியாக இருக்க..தர்ஷினியும் உத்ராவுமாக சேர்ந்து சத்யாவுக்கு பிடித்த மாதிரி மதிய சமையலை முடித்து விட்டு வந்து உட்கார்ந்து கொள்ளவும்..திலகவதி தன்னறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

வெளியே ஹர்ஷாவோடு விளையாடி கொண்டு இருந்த முரளியை கவனிக்காமல் ஹாலில் உட்கார்ந்து இருந்த உத்ராவை பார்த்ததும் மறுபடியும் ஆவேசம் வந்ததை போல.."ஏன் டி உன் மனசுல என்ன நினைச்சிருக்க..என் பையனை தான் உன் பக்கம் வளைச்சுக்கிட்ட..இப்ப பொண்ணு..என் புருஷன்னு வீடே உன் பக்கமா நிக்குதே..அப்படி என்ன சொக்கு பொடி போட்ட நீ" என கத்த தொடங்கினார்.

அவள் எந்த பதிலும் சொல்லாமல் போக..தொடர்ந்து அவளை வாய்க்கு வந்தபடி திட்டியபடியே இருந்தார்..

"அடடா..ஏன் அத்தை..எதுக்கு இவ்ளோ கத்தல்..ஏன் இந்த டென்ஷன்.. நாளைக்கே உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது வந்தா..ஓடி போனவங்களா பாக்க போறாங்க..நான் தானே பாக்கணும்..அதனால எனக்காக கொஞ்சம் அமைதியா இருங்க.." என ஆர்ப்பாட்டமாக சொல்லியபடி வந்தனா உள்ளே வந்தாள்..

"ஹேய்..நீ எப்டி இங்க வந்த..எதுக்கு வந்த..இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு இருக்காங்களா.. இல்ல செத்து போயிட்டாங்களானு பாத்து சந்தோஷப்பட வந்தியா.."

"அதான்..போயிட்டல்ல..இனி எந்த முகத்தோட இங்க திரும்பி வந்த...அத்தையை அழ வெக்க..தான் வந்தியா.."

"பாவம்..எங்கத்தை.. உன்னால வந்த அவமானத்தை தாங்க முடியாம வேதனைல இளைஞ்சு துரும்பா போயிட்டாங்க.." என்றதுமே திலகவதி..

"சரியா..சொன்னே கண்ணு..எல்லாம் மன வேதனை தான்.. நீ மட்டும் அப்பப்ப வந்து எனக்கு ஆறுதலா இல்லாம இருந்திருந்தா.."

"நான் செத்த இடத்துல புல்லு முளைச்சு போயிருக்கும்.. நீ தான் எங்க குடும்பத்தோட குலவிளக்கு.." என அவளின் பெருமை பாட..அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த வந்தனா..

"இங்க பாரு..நல்ல குடும்பத்தை சேந்தவளா இருந்திருந்தா..போனவ..உங்கம்மா மாதிரி அப்டியே போயிருக்கணும்..எதுக்கு திரும்பி வந்து இவங்க எல்லாரையும் அசிங்கப்படுத்தணும்..எங்கத்தை அவமானப்படறதை பாக்கறதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோஷம்.." என குத்தி காட்டியவள்..

"ஆமா.... உனக்கு எப்டி குழந்தை பிறந்திருக்கும்..அதுக்கு வாய்ப்பே இல்லையே.." என சொல்லி யோசித்தபடி இருந்தவளிடம்..சூழ்நிலை மறந்த திலகவதி "அதானே..நான் தான் குழந்தை பிறக்காம இருக்க நீ குடுத்த வேரை அரைச்சு அவளோட சாப்பாட்டுல கலந்துட்டு இருந்தேனே..அப்பறம் எப்டி குழந்தை பிறந்திருக்கும்.."

"ஏய்..ஒழுங்கா உண்மையை சொல்லு டி..இது யாரோட குழந்தை.." என அவளை திலகவதியும் மிரட்ட....

அங்கிருந்த முரளி, தர்ஷினியை பற்றி கூட யோசிக்காமல், உத்ராவை பற்றி பேசியும் உத்ரா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க..அவர்களின் திடீர் அமைதியை பற்றி கூட கணக்கில் கொள்ளாமல், கோபத்தில் தான் உத்ராவுக்கு செய்ததை எல்லாம் வரிசைபடுத்தி சொல்ல ஆரம்பித்தார்.

"ஆமாம் மாமா கையில ஒரு குழந்தை இருக்கே..அது யாரோட குழந்தை...பாக்க சத்யா மாதிரியும் இல்ல..உன்னை மாதிரியும் இல்ல..வித்தியாசமா இருக்கே.." என சந்தேகத்தோடு கேட்ட வந்தனாவுக்கு பதிலாக.....

"அவன் என் பையன் தான்ங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல..உங்களுக்கு எப்டி இந்த சந்தேகம் வந்ததுனு நான் தெரிஞ்சிக்கலாமா.." என சத்யாவின் குரலை கேட்டவள் சட்டென்று தன் குரலை மென்மையாக மாற்றி கொண்டு "இல்ல அவனுக்கு உங்க யாரோட ஜாடையும் இல்லையே..அதனால தான் நான் விளையாட்டா உத்ரா கிட்ட கேட்டுட்டு இருந்தேன்.." என கொஞ்சலாக சொன்னாள்..

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..வந்தனா குழந்தைகளுக்கு நம்ம வீட்டு பெரியவங்க ஏழு தலைமுறையோட ஜாடை வருமாம்..இது விஞ்ஞானபூர்வமான உண்மைங்க.." என நக்கலாக சொல்லி முடித்தான்.

அவனை பார்த்த அதிர்ச்சியில் திலகவதி பயத்தில் வேர்த்து வழிய நடுங்க ஆரம்பித்தார்(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 35
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom