Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 71
சுயம்பு-33
கார் வந்த சத்தம் கேட்ட வாசலுக்கு வந்த வருண் வேகமாக ஓடி வந்து உத்ராவிடம் இருந்து குழந்தையை வாங்கி கொள்ள ஏற்கனவே ஆலம் கரைத்து வைத்ததை எடுத்து மீரா எடுக்க..அனைவரும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே நுழைந்த உத்ராவை வேகமாக தாத்தாவின் அறைக்கு அழைத்து போன மீரா "பாரு..உத்ரா..நீ போன பிறகு கீழே விழுந்தவர்..தான்.. இன்னும் எழுந்து உக்காரல..எங்களால ஆன வரைக்கும் நாங்க எல்லா விதமான ட்ரீட்மென்ட்டும் குடுத்தாச்சு.."
"அவருக்கு தேவை மன நிம்மதி தான்னு எல்லா டாக்டர்களும் சொல்லிட்டாங்க.அவரோட மனநிம்மதியே நீ தான்னு இருக்கறப்ப எப்டி சரியாகும் சொல்லு.." என குற்றம் சாட்டினாள்.
மெல்ல தாத்தாவின் அருகில் போய் உட்கார்ந்து அவரை பார்க்க..எவ்வளவு கம்பீரமாக நடமாடியவர்..தற்போது வெறும் எலும்பு கூடாக இருப்பதை கண்டு வேதனையோடு அவர் கைகளை பிடித்து கொண்டாள்.
தன்னை தொட்டதில் மெல்ல கண் திறந்து பார்த்தவர் உத்ராவை கண்டதும் வேதனையாக "மாப்பிள்ளையோட எதாவது பிரச்சனை இருந்தா நீ வர்றத்துக்கு இந்த வீடு உனக்காக இருக்குனு ஒரு நம்பிக்கையை நாங்க உனக்கு குடுக்கலையோனு நெனக்கும் போது எனக்கு ஏன் வாழணும்னு தோணிடுச்சு.."
"ஏன் எங்க யாருக்கும் சொல்லாம போனே...
இத்தனை நாளா எங்க இருந்தே..
எல்லாரையும் விடு..போகறத்துக்கு முன்னால இந்த கிழவன் உனக்காக தானே இருக்கான்னு கூட உனக்கு தோணலையா..
என் கிட்ட உன் பிரச்சினை சொல்ல கூட நான் உனக்கு உரிமை குடுக்கலையா.. சொல்லு..."
"இத்தனை நாளா போற உசிரை பிடிச்சு வெச்சிட்டு இருந்தேன்.. இனி நான் நிம்மதியா போய் சேந்துடுவேன்.." என சொல்லி முடித்தார்.
அவர் சொன்னதை கேட்டு அழுத உத்ரா "அப்டி எல்லாம் இல்ல தாத்தா...நான் உங்களை போய் அப்டி நெனப்பேனா..சொல்லுங்க.."
"அன்னிக்கு இருந்த பிரச்சினைல எனக்கு எதுவும் தோணலேங்கற தான் உண்மை...யாரையும் அவமானம் செய்யணும்னு எண்ணம் எனக்கில்ல..தாத்தா.." என சொல்லி கொண்டு இருக்கும் போதே ஹர்ஷாவை கையில் தூக்கி வந்த வருண் "தாத்தா..மொதல்ல..உங்க கொள்ளு பேரனை பாருங்க..அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் பாருங்க.." என பெருமையாக பேசியபடி ஹர்ஷாவை அவரிடம் காண்பித்தான்.
குழந்தை பார்த்ததும் தன் பக்கத்தில் கொண்டு வர சொன்ன தாத்தாவிடம் குழந்தை அழைத்து கொண்டு போனவன் உத்ராவிடம் "வந்ததும் நேரா இங்க வந்துட்டல்ல...பின்பக்கம் தோட்டத்துல அப்பாவும், சித்தப்பாவும் உன்னை பாக்க காத்துட்டு இருக்காங்க பாரு...போ.." என சொல்லி அவளை அனுப்பி விட்டு தாத்தாவின் பக்கத்தில் குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு அவனுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.
வேகமாக தோட்டத்துக்கு வந்தவளை பார்த்த அவளுடைய அப்பா "அடடா..உத்ரா..வா கண்ணு..எப்படி இருக்க..எங்களை எல்லாம் பாக்காம உன்னால் இத்தனை நாள் எப்டி இருக்க முடிஞ்சது.." என பாசமாக அழைத்து மனக்குறையோடு விசாரித்தார்.
"நான் நல்லா இருக்கேன்..நீங்க எல்லாம் எப்டி இருக்கீங்க பா.." என அவளும் பதிலுக்கு விசாரித்தபடி அவர் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
சில நிமிடங்கள் சுற்றி பார்த்து விட்டு பெரியப்பாவிடம் "நான் வந்து ரொம்ப நேரமாச்சே.. பெரியம்மா எங்க காணோம்..வெளில எங்காவது போயிருக்காங்களா.." என மெல்ல கேட்க..
அவள் பெரியப்பா வெகு தயக்கத்தோடு "ஏன் கண்ணு..அவளை நீ விசாரிக்கற..உனக்கு அவ செஞ்ச அக்கிரமம் எல்லாத்தையும் மறந்து அவளை போய் கேட்கறீயே.."
"அவளை ஆரம்பத்துலேந்து உங்க பாட்டி வீட்டுல கண்டிச்சு வளர்க்கல..அங்க செல்லம் குடுத்து..அவளோட பிடிவாதம்..ரொம்ப அதிகமாகி..அதையே இங்கயும் செஞ்சா.."
"அவ ஆர்ப்பாட்டத்தை எல்லாம் பெரிய மனசோட..ஏதோ..என் தம்பி அனுசரிச்சு போனதால குடும்ப மானம் போகாம கௌரவமா இருக்க முடிஞ்சது..அவ உங்கம்மாக்கும் உனக்கும் செஞ்ச அட்டூழியம் ஒண்ணா ரெண்டா.."
"எல்லாத்தையும் பொறுத்துக்கிட்ட என்னால..அவளால தான் என் செல்லம்..வீட்டை விட்டு போனானு தெரிஞ்சதுக்கு பிறகு என்னால பொறுத்துக்க முடியல...அதனால அவளை நம்ம கிராமத்து வீட்டுல குடி வெச்சிட்டேன்.." என்றதும்
"அவங்க தான் காரணம்னு உங்களுக்கு எப்டி தெரிஞ்சது..பெரியப்பா.." என அதிர்ச்சி பொங்க கேட்டவளை பார்த்து
"நீ கிளம்பி போய் சில மாசம் வரைக்கும் தெரியாது...ஒரு நாள் நாங்க யாரும் வீட்டுல இல்லேனு நெனச்சு அவ போன்ல கான்பிரன்ஸ் கால்ல உங்க மாமியார், அந்த குடி கெடுத்தவ இருக்காளே..வந்தனா, அவளோட அம்மா எல்லா கிட்டயும் பேசிட்டு இருந்தா.."
"அன்னிக்கு நம்ம ரைஸ் மில்லுல இருந்த பெரிய தண்ணி தொட்டி ஏதோ பெரிய கோளாறு வந்து உடைஞ்சு தண்ணி எல்லாம் பக்கத்து காட்டுக்கு பாய ஆரம்பிச்சிடுச்சு..
அவங்க வந்து சொல்லவே..நான் தண்ணி தொட்டி சரி செய்யறவரோட நம்பரை தேட...அது என் போன்ல இல்ல..அங்கிருந்த டைரிலயும் இல்ல..."
"மஹாவை கேட்டா..அப்பாவோட டைரில தான் அவரோட நம்பர் இருக்கும் அண்ணானு சொல்லவே நான் வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன்...வீட்டுக்கு வரவே தான் உங்க பெரியம்மாவோட பெருமை எல்லாம் தெரிஞ்சது ."
"உங்க மாமியாருக்கு உன்னை பிடிக்காது..நீ மாப்ளையை கல்யாணம் பண்ணது..அங்க இருக்கிறத்துக்கு எல்லாம் திட்டிட்டே இருந்தாங்க...அதனால அவ உங்க மாமியாருக்கு உத்ராவுக்கு சொத்து ஒண்ணும் கிடையாது... அவ என்னிக்கு பராரி தான்.. அவளை விரட்டி விட்டுட்டு அதே இடத்துக்கு வந்தனாவை கொண்டு வாங்க..அவளுக்கு இருக்கிற சொத்துக்கு அளவே இல்லை..எல்லாம் உங்க பையனுக்கு தான் வரும்னு ஆசை காமிச்சு..அவங்க இவ வார்த்தைகளை நம்பி உன்னை விரட்டி விட்டுட்டாங்கனு சந்தோஷமா பேசி சிரிச்சுட்டு இருந்தா.."
அதை கேட்டதும் என் ரத்தமே கொதிச்சு போய்..அமைதியா அவ பக்கத்துல போய் நின்னேன்..நம்ம வீட்டுல இருக்கிற ரத்னானு நெனச்சு அவளுக்கு ஜுஸ் போட்டு எடுத்துட்டு வர சொல்லி அதிகாரமா சொல்லிட்டு திரும்பி பார்க்க...என்னை பார்த்து பேயறைஞ்சா மாதிரி ஆகிட்டா.."
"அவளோட பொறாமை எந்தளவுக்கு இருக்குனு தெரிஞ்ச பிறகு அவளை இனியும் இந்த வீட்டுல வெச்சிக்கறது ஆபத்துனு புரிஞ்சு நான் அவளை வேகமாக வீட்டுலேந்து இழுத்துட்டு போய், கார்ல ஏத்திட்டு, அந்த அவசரத்துலயும் போன் செஞ்சு ஆளுங்களை வர சொல்லி தொட்டியை சரி செய்ய சொல்லிட்டு...
அவளை நேரா நம்ம கிராமத்து வீட்டுல கொண்டு விட்டுட்டு இனி எந்த காலத்துக்கு எங்க யாரையும் பாக்க கூட நினைக்காதேனு கோவமா திட்டினேன்..
அவ நான் நினைக்க மாட்டேன்..நீங்க நினைக்காம இருந்தா போதும்னு ரொம்ப அலட்சியப்படுத்தவே...ச்சீ நீயும் ஒரு பொம்பளையா..இனி உன் கிட்ட பேசினா அது எங்க குடும்பத்துக்கு நான் செய்யற துரோகம்னு சொல்லிட்டு நான் அங்கேயிருந்து கிளம்பி வந்துட்டேன்..." என வேதனையோடு சொல்லி முடித்தார்.
"அப்ப பெரியம்மா தனியாவா இருக்காங்க..பாவம் அவங்க.." என உருக
"இங்க பாரு..அவளுக்காக நீ வருத்தப்படாத..அது விஷ செடி..வீட்டுல இருக்கிற பூச்செடியோட சேத்தா..
பூச்செடியும் விஷமா ஆகிடும்..அவ கிளம்பி போன பிறகு ரத்னா சொல்லி தான் அவ மீராவை கொடுமைப்படுத்தறதே தெரிய வந்தது.."
"ஏற்கனவே உன்னை தொலைச்சது தான் எங்கப்பாவை படுக்கையில் தள்ளிடுச்சு..
இனி எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாதுனு தான் அவளை கொண்டு விட்டுட்டேன்.."
அதோட வீட்டுல எல்லார் கிட்டயும் அவ செஞ்ச அக்கிரமம் எல்லாத்தையும் சொல்லி அவளோட யாரும் எந்த தொடர்பும் வெச்சுக்க கூடாதுனு சொல்லிட்டேன்..அதை எல்லாரும் அப்படியே காப்பாத்திட்டு வர்றாங்க..இதோட ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.."
"அவ மேல அதிக பாசம் வெச்சிருந்த வருண் அவளை பத்தி பேச கூட விரும்பல...
வர்ஷாக்கு ஏற்கனவே ஆகாது..அதனால எல்லாருக்கும் அவ தொடர்பே விட்டு போச்சு"
என சொல்லி முடித்தவர்..நம்ம கதை இருக்கவே இருக்கு.. நீ வந்துது இருந்தே எங்க கூடவே இருக்க..போ..போய் மாப்ளையும் குழந்தையையும் கவனி.." என அவளை அனுப்பி வைத்தார்.
அவள் உள்ளே போனதும் மீரா "குழந்தை சாப்பிட்டு தூங்கிட்டான்..சத்யாவுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்..
திரும்பி வர சாயந்திரம் ஆகுமாம்..அதனால அவருக்காக காத்திருக்காம உன்னை சாப்பிட சொன்னார்.. வா நாம சாப்பிடலாம்.." என அழைத்து போக..இருவருமாக மூன்று வருட கதைகளை பேசியபடி நிதானமாக சாப்பிட்டு முடித்தனர்.(தொடரும்
கார் வந்த சத்தம் கேட்ட வாசலுக்கு வந்த வருண் வேகமாக ஓடி வந்து உத்ராவிடம் இருந்து குழந்தையை வாங்கி கொள்ள ஏற்கனவே ஆலம் கரைத்து வைத்ததை எடுத்து மீரா எடுக்க..அனைவரும் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே நுழைந்த உத்ராவை வேகமாக தாத்தாவின் அறைக்கு அழைத்து போன மீரா "பாரு..உத்ரா..நீ போன பிறகு கீழே விழுந்தவர்..தான்.. இன்னும் எழுந்து உக்காரல..எங்களால ஆன வரைக்கும் நாங்க எல்லா விதமான ட்ரீட்மென்ட்டும் குடுத்தாச்சு.."
"அவருக்கு தேவை மன நிம்மதி தான்னு எல்லா டாக்டர்களும் சொல்லிட்டாங்க.அவரோட மனநிம்மதியே நீ தான்னு இருக்கறப்ப எப்டி சரியாகும் சொல்லு.." என குற்றம் சாட்டினாள்.
மெல்ல தாத்தாவின் அருகில் போய் உட்கார்ந்து அவரை பார்க்க..எவ்வளவு கம்பீரமாக நடமாடியவர்..தற்போது வெறும் எலும்பு கூடாக இருப்பதை கண்டு வேதனையோடு அவர் கைகளை பிடித்து கொண்டாள்.
தன்னை தொட்டதில் மெல்ல கண் திறந்து பார்த்தவர் உத்ராவை கண்டதும் வேதனையாக "மாப்பிள்ளையோட எதாவது பிரச்சனை இருந்தா நீ வர்றத்துக்கு இந்த வீடு உனக்காக இருக்குனு ஒரு நம்பிக்கையை நாங்க உனக்கு குடுக்கலையோனு நெனக்கும் போது எனக்கு ஏன் வாழணும்னு தோணிடுச்சு.."
"ஏன் எங்க யாருக்கும் சொல்லாம போனே...
இத்தனை நாளா எங்க இருந்தே..
எல்லாரையும் விடு..போகறத்துக்கு முன்னால இந்த கிழவன் உனக்காக தானே இருக்கான்னு கூட உனக்கு தோணலையா..
என் கிட்ட உன் பிரச்சினை சொல்ல கூட நான் உனக்கு உரிமை குடுக்கலையா.. சொல்லு..."
"இத்தனை நாளா போற உசிரை பிடிச்சு வெச்சிட்டு இருந்தேன்.. இனி நான் நிம்மதியா போய் சேந்துடுவேன்.." என சொல்லி முடித்தார்.
அவர் சொன்னதை கேட்டு அழுத உத்ரா "அப்டி எல்லாம் இல்ல தாத்தா...நான் உங்களை போய் அப்டி நெனப்பேனா..சொல்லுங்க.."
"அன்னிக்கு இருந்த பிரச்சினைல எனக்கு எதுவும் தோணலேங்கற தான் உண்மை...யாரையும் அவமானம் செய்யணும்னு எண்ணம் எனக்கில்ல..தாத்தா.." என சொல்லி கொண்டு இருக்கும் போதே ஹர்ஷாவை கையில் தூக்கி வந்த வருண் "தாத்தா..மொதல்ல..உங்க கொள்ளு பேரனை பாருங்க..அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் பாருங்க.." என பெருமையாக பேசியபடி ஹர்ஷாவை அவரிடம் காண்பித்தான்.
குழந்தை பார்த்ததும் தன் பக்கத்தில் கொண்டு வர சொன்ன தாத்தாவிடம் குழந்தை அழைத்து கொண்டு போனவன் உத்ராவிடம் "வந்ததும் நேரா இங்க வந்துட்டல்ல...பின்பக்கம் தோட்டத்துல அப்பாவும், சித்தப்பாவும் உன்னை பாக்க காத்துட்டு இருக்காங்க பாரு...போ.." என சொல்லி அவளை அனுப்பி விட்டு தாத்தாவின் பக்கத்தில் குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு அவனுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.
வேகமாக தோட்டத்துக்கு வந்தவளை பார்த்த அவளுடைய அப்பா "அடடா..உத்ரா..வா கண்ணு..எப்படி இருக்க..எங்களை எல்லாம் பாக்காம உன்னால் இத்தனை நாள் எப்டி இருக்க முடிஞ்சது.." என பாசமாக அழைத்து மனக்குறையோடு விசாரித்தார்.
"நான் நல்லா இருக்கேன்..நீங்க எல்லாம் எப்டி இருக்கீங்க பா.." என அவளும் பதிலுக்கு விசாரித்தபடி அவர் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
சில நிமிடங்கள் சுற்றி பார்த்து விட்டு பெரியப்பாவிடம் "நான் வந்து ரொம்ப நேரமாச்சே.. பெரியம்மா எங்க காணோம்..வெளில எங்காவது போயிருக்காங்களா.." என மெல்ல கேட்க..
அவள் பெரியப்பா வெகு தயக்கத்தோடு "ஏன் கண்ணு..அவளை நீ விசாரிக்கற..உனக்கு அவ செஞ்ச அக்கிரமம் எல்லாத்தையும் மறந்து அவளை போய் கேட்கறீயே.."
"அவளை ஆரம்பத்துலேந்து உங்க பாட்டி வீட்டுல கண்டிச்சு வளர்க்கல..அங்க செல்லம் குடுத்து..அவளோட பிடிவாதம்..ரொம்ப அதிகமாகி..அதையே இங்கயும் செஞ்சா.."
"அவ ஆர்ப்பாட்டத்தை எல்லாம் பெரிய மனசோட..ஏதோ..என் தம்பி அனுசரிச்சு போனதால குடும்ப மானம் போகாம கௌரவமா இருக்க முடிஞ்சது..அவ உங்கம்மாக்கும் உனக்கும் செஞ்ச அட்டூழியம் ஒண்ணா ரெண்டா.."
"எல்லாத்தையும் பொறுத்துக்கிட்ட என்னால..அவளால தான் என் செல்லம்..வீட்டை விட்டு போனானு தெரிஞ்சதுக்கு பிறகு என்னால பொறுத்துக்க முடியல...அதனால அவளை நம்ம கிராமத்து வீட்டுல குடி வெச்சிட்டேன்.." என்றதும்
"அவங்க தான் காரணம்னு உங்களுக்கு எப்டி தெரிஞ்சது..பெரியப்பா.." என அதிர்ச்சி பொங்க கேட்டவளை பார்த்து
"நீ கிளம்பி போய் சில மாசம் வரைக்கும் தெரியாது...ஒரு நாள் நாங்க யாரும் வீட்டுல இல்லேனு நெனச்சு அவ போன்ல கான்பிரன்ஸ் கால்ல உங்க மாமியார், அந்த குடி கெடுத்தவ இருக்காளே..வந்தனா, அவளோட அம்மா எல்லா கிட்டயும் பேசிட்டு இருந்தா.."
"அன்னிக்கு நம்ம ரைஸ் மில்லுல இருந்த பெரிய தண்ணி தொட்டி ஏதோ பெரிய கோளாறு வந்து உடைஞ்சு தண்ணி எல்லாம் பக்கத்து காட்டுக்கு பாய ஆரம்பிச்சிடுச்சு..
அவங்க வந்து சொல்லவே..நான் தண்ணி தொட்டி சரி செய்யறவரோட நம்பரை தேட...அது என் போன்ல இல்ல..அங்கிருந்த டைரிலயும் இல்ல..."
"மஹாவை கேட்டா..அப்பாவோட டைரில தான் அவரோட நம்பர் இருக்கும் அண்ணானு சொல்லவே நான் வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன்...வீட்டுக்கு வரவே தான் உங்க பெரியம்மாவோட பெருமை எல்லாம் தெரிஞ்சது ."
"உங்க மாமியாருக்கு உன்னை பிடிக்காது..நீ மாப்ளையை கல்யாணம் பண்ணது..அங்க இருக்கிறத்துக்கு எல்லாம் திட்டிட்டே இருந்தாங்க...அதனால அவ உங்க மாமியாருக்கு உத்ராவுக்கு சொத்து ஒண்ணும் கிடையாது... அவ என்னிக்கு பராரி தான்.. அவளை விரட்டி விட்டுட்டு அதே இடத்துக்கு வந்தனாவை கொண்டு வாங்க..அவளுக்கு இருக்கிற சொத்துக்கு அளவே இல்லை..எல்லாம் உங்க பையனுக்கு தான் வரும்னு ஆசை காமிச்சு..அவங்க இவ வார்த்தைகளை நம்பி உன்னை விரட்டி விட்டுட்டாங்கனு சந்தோஷமா பேசி சிரிச்சுட்டு இருந்தா.."
அதை கேட்டதும் என் ரத்தமே கொதிச்சு போய்..அமைதியா அவ பக்கத்துல போய் நின்னேன்..நம்ம வீட்டுல இருக்கிற ரத்னானு நெனச்சு அவளுக்கு ஜுஸ் போட்டு எடுத்துட்டு வர சொல்லி அதிகாரமா சொல்லிட்டு திரும்பி பார்க்க...என்னை பார்த்து பேயறைஞ்சா மாதிரி ஆகிட்டா.."
"அவளோட பொறாமை எந்தளவுக்கு இருக்குனு தெரிஞ்ச பிறகு அவளை இனியும் இந்த வீட்டுல வெச்சிக்கறது ஆபத்துனு புரிஞ்சு நான் அவளை வேகமாக வீட்டுலேந்து இழுத்துட்டு போய், கார்ல ஏத்திட்டு, அந்த அவசரத்துலயும் போன் செஞ்சு ஆளுங்களை வர சொல்லி தொட்டியை சரி செய்ய சொல்லிட்டு...
அவளை நேரா நம்ம கிராமத்து வீட்டுல கொண்டு விட்டுட்டு இனி எந்த காலத்துக்கு எங்க யாரையும் பாக்க கூட நினைக்காதேனு கோவமா திட்டினேன்..
அவ நான் நினைக்க மாட்டேன்..நீங்க நினைக்காம இருந்தா போதும்னு ரொம்ப அலட்சியப்படுத்தவே...ச்சீ நீயும் ஒரு பொம்பளையா..இனி உன் கிட்ட பேசினா அது எங்க குடும்பத்துக்கு நான் செய்யற துரோகம்னு சொல்லிட்டு நான் அங்கேயிருந்து கிளம்பி வந்துட்டேன்..." என வேதனையோடு சொல்லி முடித்தார்.
"அப்ப பெரியம்மா தனியாவா இருக்காங்க..பாவம் அவங்க.." என உருக
"இங்க பாரு..அவளுக்காக நீ வருத்தப்படாத..அது விஷ செடி..வீட்டுல இருக்கிற பூச்செடியோட சேத்தா..
பூச்செடியும் விஷமா ஆகிடும்..அவ கிளம்பி போன பிறகு ரத்னா சொல்லி தான் அவ மீராவை கொடுமைப்படுத்தறதே தெரிய வந்தது.."
"ஏற்கனவே உன்னை தொலைச்சது தான் எங்கப்பாவை படுக்கையில் தள்ளிடுச்சு..
இனி எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாதுனு தான் அவளை கொண்டு விட்டுட்டேன்.."
அதோட வீட்டுல எல்லார் கிட்டயும் அவ செஞ்ச அக்கிரமம் எல்லாத்தையும் சொல்லி அவளோட யாரும் எந்த தொடர்பும் வெச்சுக்க கூடாதுனு சொல்லிட்டேன்..அதை எல்லாரும் அப்படியே காப்பாத்திட்டு வர்றாங்க..இதோட ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.."
"அவ மேல அதிக பாசம் வெச்சிருந்த வருண் அவளை பத்தி பேச கூட விரும்பல...
வர்ஷாக்கு ஏற்கனவே ஆகாது..அதனால எல்லாருக்கும் அவ தொடர்பே விட்டு போச்சு"
என சொல்லி முடித்தவர்..நம்ம கதை இருக்கவே இருக்கு.. நீ வந்துது இருந்தே எங்க கூடவே இருக்க..போ..போய் மாப்ளையும் குழந்தையையும் கவனி.." என அவளை அனுப்பி வைத்தார்.
அவள் உள்ளே போனதும் மீரா "குழந்தை சாப்பிட்டு தூங்கிட்டான்..சத்யாவுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்..
திரும்பி வர சாயந்திரம் ஆகுமாம்..அதனால அவருக்காக காத்திருக்காம உன்னை சாப்பிட சொன்னார்.. வா நாம சாப்பிடலாம்.." என அழைத்து போக..இருவருமாக மூன்று வருட கதைகளை பேசியபடி நிதானமாக சாப்பிட்டு முடித்தனர்.(தொடரும்
Author: Subha Balaji
Article Title: சுயம்பு 33
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சுயம்பு 33
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.