Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 71
சுயம்பு -32
டாக்டர் மல்ஹோத்ராவிடம் இருந்து விடை பெற்ற சத்யா நேராக ஹாஸ்பிடல் போய் அபிமன்யு சேர்த்திருந்த ரூம்க்கு போய் சேர்ந்தான். அபிமன்யுவை கவுதம் பிசியோதெரபிக்கு அழைத்து போயிருக்க, அங்கு தனியாக இருந்த உத்ரா, ஸ்வேதா இருவருக்கும் வெகு தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க..உள்ளே நுழையாமல் வெளியே நின்று கொண்டான்.
"ஏன்டி ..என்ன காரணத்தால நீ இந்த ஊருக்கு வந்தேனு நேத்து எங்க கிட்ட சொன்னது பொய்னு எனக்கு தெரியும்...நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யறேங்கறதும் தெரியும்..மரியாதையா உண்மை என்னனு சொல்லு.." என மிரட்ட
"இல்ல..ஸ்வேதா..அப்டி எதுவும் இல்ல..உனக்கு மட்டும் எப்டி இந்த விசித்திரமான எண்ணம் தோணுதுனு தெரியல.."
"ஏய்..உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் டி..நீ பேசிட்டே இருக்கும் போது..திடீர்னு நிறுத்திட்டு..அப்பறமா பேச ஆரம்பிச்சியே..
அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு..நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யற...நீயா சொன்னா உனக்கு நல்லது..
நான் சத்யா அண்ணா கிட்ட சொல்லி அவர் கண்டுபிடிச்சா..விஷயம் விவகாரமாகிடும்..தெரியுதா.." என மீண்டும் மிரட்ட..
"ப்ளீஸ் ஸ்வேதா..சத்யா கிட்ட எதுவும் சொல்ல கூடாது..எனக்கு ப்ராமிஸ் பண்ணா நான் சொல்றேன்.."
"சொல்லு..சொல்லு..நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.."
சில நிமிட தயக்கத்துக்கு பின் "அத்தைக்கு என்னை ஆரம்பத்துலேந்தே பிடிக்கல..
"சமயம் வர்றப்ப எல்லாம் என்னை திட்டிட்டு தான் இருப்பாங்க..மாமா இருந்தாங்கனா எனக்கு சப்போர்ட் இருக்காருனு அவர் இல்லாதப்ப தான் திட்டுவாங்க.."
"அவங்களுக்கு வந்தனாவை தன் மருமகளாக்கிக்கணும் ஆசை..நான் வந்து அதை கெடுத்திட்டேன்னு சொல்லி திட்டிட்டு இருந்தவங்க..."
"அன்னிக்கு.. நான் அந்த வீட்டை விட்டு போகணும்...சத்யாவை விட்டு..எங்க இருக்கேன்னு கூட அவர்க்கு தெரிய கூடாதுனு சொல்லி அமர்க்களம் பண்ண ஆரம்பிச்சாங்க.."
"நான் கிளம்பி கொஞ்ச நாள்ல பேசி சத்யா மனசை மாத்தி அவங்க வந்தனாவுக்கு கல்யாணம் செஞ்சுவேன்னு சொல்லி சொன்னதும்..எனக்கு மனசே கலங்கி போச்சு..."
"அவங்க குடும்பத்துக்கு அவமானம் தேடி தந்த நான் வீட்டை விட்டு போகலைனா அவங்க தன்னை எதாவது செஞ்சுக்கிட்டு அதுக்கு காரணம் நான்னு எழுதி வெச்சிடுவேன்னு சொல்லி மிரட்டவே..நான் பயந்து போயிட்டேன்..."
"இது நடக்கும் போதெல்லாம் மாலினி பெரியம்மா, வந்தனா, அவ அம்மா, அத்தையோட தங்கச்சி எல்லாருமே இருந்தாங்க..
"நடக்கறதை வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க.. ஆனா மாமா மட்டும் இல்ல..அவர் இருந்தா இவங்களே பேசவே விட்டிருக்க மாட்டாரு..
எப்பவும் இவங்க மாமா வீட்டுல இல்லாத போது தான் என்னை பேசி திட்டுவாங்க..கடைசியா மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க..."
"ஏற்கனவே எனக்கு அம்மா இல்ல...அதே கஷ்டம் அவங்களுக்கும் வர கூடாதுனு தான் மனசை கல்லாக்கிகிட்டு எதுவும் சொல்லாம அமைதியா வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.."
"இங்க வந்துட்டேன்..ஆனா என்னால சத்யாவை மறக்கவே முடியல..பகல் எல்லாம் வேலை செஞ்சு என்னை பிசியா பாத்துக்கிட்டாலும்..ராத்திரி நேரங்கள் தூக்கம் வராம அழுதுக்கிட்டே தான் இருப்பேன்.."
"அன்னிக்கு வந்தனா, பெரியம்மா எல்லாரும் என்னை பார்த்து நக்கலா சிரிச்சது இன்னும் நினைவிலே இருக்கு..." என சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்த சத்யாவை பார்த்து உத்ரா அதிர்ந்து எழுந்து நின்றாள்.
"ஓஹோ...இது தானா விஷயம்.. இதனால தான் எங்கம்மா அடிக்கடி வந்தனாவை பத்தி பேசிட்டே இருக்காங்களா..அவ ரொம்ப நல்லவ....அவளை கல்யாணம் பண்ணா குடும்பம் விளங்கிடும்.."
"அவங்க சொன்னாங்க...சரி..நான் ஒத்துப்பேன்னு எப்டி நீ நம்பின..இது தான் என்னை பத்தின உன் எண்ணமா..நான் எவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாலும் உடனே அலைஞ்சிக்கிட்டே போய் கல்யாணம் செஞ்சுப்பேன்னு நெனச்சிட்டல்ல.."
"அவங்க எது வேணுமானா சொல்லி இருக்கட்டும்..நான் தான் உன் புருஷன்.. ஊருக்கு போன நான் திரும்பி வராமயே போயிடுவேன்னு நெனச்சு நீயா முடிவெடுத்து கெளம்பி வந்தே..."
"எதுவா இருந்தாலும் நான் வர்ற வரைக்கும் அங்கேயே இருந்து நான் வந்த பிறகு பேசி இருந்தா...அப்பவே விஷயம் சரியாகி இருக்கும்.. "
"ச்சே.. உன்னை விரும்பி கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..
நீ இதுக்கு பதிலா என்னை தெருவுல நிக்க வெச்சு உன் செருப்பாலயே அடிச்சிருக்கலாம்..அப்பவாவது எனக்கு புத்தி வந்திருக்கும்.." என விரக்தியாக சொல்லி விட்டு தலையை பிடித்தபடி உட்கார்ந்து கொண்டான்.
"ப்ளீஸ் சத்யா..அப்படி எல்லாம் பேசாதீங்க..தப்பு என் மேல தான்.." என அழுகுரலில் உத்ரா சொன்னாள்.
ஏதோ யோசித்தபடி எழுந்தவன் வேகமாக வெளியே போய் தன் போனை எடுத்து சில நம்பர்களை அழைத்து பேசி விட்டு.. உள்ளே வந்தவன் இறுகிய குரலில் உத்ராவிடம்..
"இங்க பாரு..நாம இப்பவே ஊருக்கு கிளம்பறோம்..நாளைக்கு காலைல கோயமுத்தூர் போக..கொல்கத்தால ப்ளைட் பிடிக்கணும்.."
"உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம்..என்ன செய்வியோ..எனக்கு தெரியாது.."
"உனக்கும், பையனுக்கும் டிரஸ் பேக் பண்ணிட்டு ரெடியா இருக்க..புரியுதா..நான் வண்டிக்கு அரேன்ஜ் பண்றேன்.." என சொல்லி விட்டு வாசலை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டான்.
"இல்ல..சத்யா..உடனே கெளம்புனா..எப்டி..நான் ஹாஸ்பிடல்ல..லீவ் சொல்லணும்..
"சர்ஜரி செஞ்ச பேஷண்ட்ஸ்க்கு பேஷண்ட் ரிவியூ இருக்கு.." என தயங்கியவளை..
"எல்லாம் நான் பேசியாச்சு.. நீ அதிகம் பேசினா..அடுத்த அரை மணி நேரத்துல கிளம்பற மாதிரி இருக்கும்.. எப்டி வசதிங்க அம்மணி.." என கேட்க..
"வேணாம்.வேணாம்..நான் இப்பவே போய் பேக்கிங் ஆரம்பிக்கறேன்.." என சொல்லி வீட்டை நோக்கி வேகமாக போனாள்.
சத்யா உள்ளே வந்ததை பார்த்ததுமே ஸ்வேதா அங்கிருந்து நழுவி அபிமன்யுவுக்கு பிசியோதெரபி தரும் ஹாலுக்கு போய்விட்டாள். கவுதம்க்கு அழைத்து தாங்கள் உடனே கிளம்புவதாக சொல்லி விட்டு..தன் நண்பனிடம் பேசி கொல்கத்தா போக வண்டி அரேன்ஜ் செய்ய போவதாக சொன்னான்.
"உடனே தன் கொல்கத்தா நண்பரிடம் பேசிய கவுதம் தாங்கள் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வாரங்கள் அங்கேயே இருக்க வேண்டியது அவசியம் என்பதால் அவர்கள் வந்த வண்டியில் தன் தங்கை குடும்பம் மிக அவசரமாக ஊருக்கு போக வேண்டி இருப்பதால் அதில் திரும்பி அனுப்பலாமா என கேட்க..அவர் உற்சாகமாக தனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..அனுப்பி வையுங்கள்.. என அனுமதி வழங்கிவிட்டார்.
சத்யாவிடம் கவுதம் இந்த தகவல்களை சொல்லி வண்டி இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து டிரைவரிடம் அறிமுகம் செய்து வைத்து தாங்கள் அங்கே தங்க போவதாக சொல்லி இவர்களை அழைத்து போக சொன்னான்.
சத்யாவின் மிரட்டல் பலமாக வேலை செய்ய..அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு ட்ராலி, ஒரு பேக் பேக் குழந்தையை தூக்கி கொண்டு சோனுவோடு உத்ரா வர..அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
கவுதம், ஸ்வேதாவிடம் விடை பெற்று கொண்ட உத்ரா, அவர்களை ஹோட்டல் ரூம் காலி செய்து கொண்டு தான் இருக்கும் வீட்டில் தங்க கொள்ள சொல்லி விட்டு அதை ஏற்கனவே சோனுவிடம் சொல்லி விட்டதாக சொல்லி கிளம்பி, அபிமன்யுவிடம் போனில் பேசியபடி அவளும் காரில் ஏறி அமர்ந்தாள்.
காரில் ஏறியதில் இருந்தே ஹர்ஷாவின் மழலை மொழிகள், அவனுடைய குரல் மட்டுமே கேட்டு கொண்டு இருக்க.. அவன் தூங்கிய நேரத்தில் அதுவும் இல்லாமல் சத்யா உத்ரா இடையே எந்த பேச்சில்லாமல் அமைதியாக இருந்தது.
அன்றிரவு கொல்கத்தா சென்றடைந்து கவுதம் நண்பர் வீட்டில் தங்கி மறுநாள் கிளம்பி கோயமுத்தூர் சென்றடைந்தனர்.
கார் செல்லும் பாதையை பார்த்து இது தங்களது வீட்டுக்கு செல்லும் பாதை இல்லையே என யோசித்தபடி இருந்த உத்ரா வண்டி நின்ற அதிர்வில் நிமிர்ந்து பார்த்தாள்.
அது அவளுடைய தாத்தா வீடு என தெரிந்து சத்யாவை ஆச்சரியம் பொங்க பார்க்க.."வீடு வந்தாச்சு இறங்கற உத்தேசம் இருக்கா...அம்மணி" என கேட்ட சத்யாவை அதை ஆச்சர்யத்தோடு பார்த்தபடி குழந்தையை கைகளில் எடுத்து கொண்டு கீழே இறங்கி நின்றாள். (தொடரும்)
டாக்டர் மல்ஹோத்ராவிடம் இருந்து விடை பெற்ற சத்யா நேராக ஹாஸ்பிடல் போய் அபிமன்யு சேர்த்திருந்த ரூம்க்கு போய் சேர்ந்தான். அபிமன்யுவை கவுதம் பிசியோதெரபிக்கு அழைத்து போயிருக்க, அங்கு தனியாக இருந்த உத்ரா, ஸ்வேதா இருவருக்கும் வெகு தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க..உள்ளே நுழையாமல் வெளியே நின்று கொண்டான்.
"ஏன்டி ..என்ன காரணத்தால நீ இந்த ஊருக்கு வந்தேனு நேத்து எங்க கிட்ட சொன்னது பொய்னு எனக்கு தெரியும்...நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யறேங்கறதும் தெரியும்..மரியாதையா உண்மை என்னனு சொல்லு.." என மிரட்ட
"இல்ல..ஸ்வேதா..அப்டி எதுவும் இல்ல..உனக்கு மட்டும் எப்டி இந்த விசித்திரமான எண்ணம் தோணுதுனு தெரியல.."
"ஏய்..உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் டி..நீ பேசிட்டே இருக்கும் போது..திடீர்னு நிறுத்திட்டு..அப்பறமா பேச ஆரம்பிச்சியே..
அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு..நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யற...நீயா சொன்னா உனக்கு நல்லது..
நான் சத்யா அண்ணா கிட்ட சொல்லி அவர் கண்டுபிடிச்சா..விஷயம் விவகாரமாகிடும்..தெரியுதா.." என மீண்டும் மிரட்ட..
"ப்ளீஸ் ஸ்வேதா..சத்யா கிட்ட எதுவும் சொல்ல கூடாது..எனக்கு ப்ராமிஸ் பண்ணா நான் சொல்றேன்.."
"சொல்லு..சொல்லு..நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.."
சில நிமிட தயக்கத்துக்கு பின் "அத்தைக்கு என்னை ஆரம்பத்துலேந்தே பிடிக்கல..
"சமயம் வர்றப்ப எல்லாம் என்னை திட்டிட்டு தான் இருப்பாங்க..மாமா இருந்தாங்கனா எனக்கு சப்போர்ட் இருக்காருனு அவர் இல்லாதப்ப தான் திட்டுவாங்க.."
"அவங்களுக்கு வந்தனாவை தன் மருமகளாக்கிக்கணும் ஆசை..நான் வந்து அதை கெடுத்திட்டேன்னு சொல்லி திட்டிட்டு இருந்தவங்க..."
"அன்னிக்கு.. நான் அந்த வீட்டை விட்டு போகணும்...சத்யாவை விட்டு..எங்க இருக்கேன்னு கூட அவர்க்கு தெரிய கூடாதுனு சொல்லி அமர்க்களம் பண்ண ஆரம்பிச்சாங்க.."
"நான் கிளம்பி கொஞ்ச நாள்ல பேசி சத்யா மனசை மாத்தி அவங்க வந்தனாவுக்கு கல்யாணம் செஞ்சுவேன்னு சொல்லி சொன்னதும்..எனக்கு மனசே கலங்கி போச்சு..."
"அவங்க குடும்பத்துக்கு அவமானம் தேடி தந்த நான் வீட்டை விட்டு போகலைனா அவங்க தன்னை எதாவது செஞ்சுக்கிட்டு அதுக்கு காரணம் நான்னு எழுதி வெச்சிடுவேன்னு சொல்லி மிரட்டவே..நான் பயந்து போயிட்டேன்..."
"இது நடக்கும் போதெல்லாம் மாலினி பெரியம்மா, வந்தனா, அவ அம்மா, அத்தையோட தங்கச்சி எல்லாருமே இருந்தாங்க..
"நடக்கறதை வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க.. ஆனா மாமா மட்டும் இல்ல..அவர் இருந்தா இவங்களே பேசவே விட்டிருக்க மாட்டாரு..
எப்பவும் இவங்க மாமா வீட்டுல இல்லாத போது தான் என்னை பேசி திட்டுவாங்க..கடைசியா மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க..."
"ஏற்கனவே எனக்கு அம்மா இல்ல...அதே கஷ்டம் அவங்களுக்கும் வர கூடாதுனு தான் மனசை கல்லாக்கிகிட்டு எதுவும் சொல்லாம அமைதியா வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.."
"இங்க வந்துட்டேன்..ஆனா என்னால சத்யாவை மறக்கவே முடியல..பகல் எல்லாம் வேலை செஞ்சு என்னை பிசியா பாத்துக்கிட்டாலும்..ராத்திரி நேரங்கள் தூக்கம் வராம அழுதுக்கிட்டே தான் இருப்பேன்.."
"அன்னிக்கு வந்தனா, பெரியம்மா எல்லாரும் என்னை பார்த்து நக்கலா சிரிச்சது இன்னும் நினைவிலே இருக்கு..." என சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்த சத்யாவை பார்த்து உத்ரா அதிர்ந்து எழுந்து நின்றாள்.
"ஓஹோ...இது தானா விஷயம்.. இதனால தான் எங்கம்மா அடிக்கடி வந்தனாவை பத்தி பேசிட்டே இருக்காங்களா..அவ ரொம்ப நல்லவ....அவளை கல்யாணம் பண்ணா குடும்பம் விளங்கிடும்.."
"அவங்க சொன்னாங்க...சரி..நான் ஒத்துப்பேன்னு எப்டி நீ நம்பின..இது தான் என்னை பத்தின உன் எண்ணமா..நான் எவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாலும் உடனே அலைஞ்சிக்கிட்டே போய் கல்யாணம் செஞ்சுப்பேன்னு நெனச்சிட்டல்ல.."
"அவங்க எது வேணுமானா சொல்லி இருக்கட்டும்..நான் தான் உன் புருஷன்.. ஊருக்கு போன நான் திரும்பி வராமயே போயிடுவேன்னு நெனச்சு நீயா முடிவெடுத்து கெளம்பி வந்தே..."
"எதுவா இருந்தாலும் நான் வர்ற வரைக்கும் அங்கேயே இருந்து நான் வந்த பிறகு பேசி இருந்தா...அப்பவே விஷயம் சரியாகி இருக்கும்.. "
"ச்சே.. உன்னை விரும்பி கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..
நீ இதுக்கு பதிலா என்னை தெருவுல நிக்க வெச்சு உன் செருப்பாலயே அடிச்சிருக்கலாம்..அப்பவாவது எனக்கு புத்தி வந்திருக்கும்.." என விரக்தியாக சொல்லி விட்டு தலையை பிடித்தபடி உட்கார்ந்து கொண்டான்.
"ப்ளீஸ் சத்யா..அப்படி எல்லாம் பேசாதீங்க..தப்பு என் மேல தான்.." என அழுகுரலில் உத்ரா சொன்னாள்.
ஏதோ யோசித்தபடி எழுந்தவன் வேகமாக வெளியே போய் தன் போனை எடுத்து சில நம்பர்களை அழைத்து பேசி விட்டு.. உள்ளே வந்தவன் இறுகிய குரலில் உத்ராவிடம்..
"இங்க பாரு..நாம இப்பவே ஊருக்கு கிளம்பறோம்..நாளைக்கு காலைல கோயமுத்தூர் போக..கொல்கத்தால ப்ளைட் பிடிக்கணும்.."
"உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம்..என்ன செய்வியோ..எனக்கு தெரியாது.."
"உனக்கும், பையனுக்கும் டிரஸ் பேக் பண்ணிட்டு ரெடியா இருக்க..புரியுதா..நான் வண்டிக்கு அரேன்ஜ் பண்றேன்.." என சொல்லி விட்டு வாசலை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டான்.
"இல்ல..சத்யா..உடனே கெளம்புனா..எப்டி..நான் ஹாஸ்பிடல்ல..லீவ் சொல்லணும்..
"சர்ஜரி செஞ்ச பேஷண்ட்ஸ்க்கு பேஷண்ட் ரிவியூ இருக்கு.." என தயங்கியவளை..
"எல்லாம் நான் பேசியாச்சு.. நீ அதிகம் பேசினா..அடுத்த அரை மணி நேரத்துல கிளம்பற மாதிரி இருக்கும்.. எப்டி வசதிங்க அம்மணி.." என கேட்க..
"வேணாம்.வேணாம்..நான் இப்பவே போய் பேக்கிங் ஆரம்பிக்கறேன்.." என சொல்லி வீட்டை நோக்கி வேகமாக போனாள்.
சத்யா உள்ளே வந்ததை பார்த்ததுமே ஸ்வேதா அங்கிருந்து நழுவி அபிமன்யுவுக்கு பிசியோதெரபி தரும் ஹாலுக்கு போய்விட்டாள். கவுதம்க்கு அழைத்து தாங்கள் உடனே கிளம்புவதாக சொல்லி விட்டு..தன் நண்பனிடம் பேசி கொல்கத்தா போக வண்டி அரேன்ஜ் செய்ய போவதாக சொன்னான்.
"உடனே தன் கொல்கத்தா நண்பரிடம் பேசிய கவுதம் தாங்கள் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வாரங்கள் அங்கேயே இருக்க வேண்டியது அவசியம் என்பதால் அவர்கள் வந்த வண்டியில் தன் தங்கை குடும்பம் மிக அவசரமாக ஊருக்கு போக வேண்டி இருப்பதால் அதில் திரும்பி அனுப்பலாமா என கேட்க..அவர் உற்சாகமாக தனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..அனுப்பி வையுங்கள்.. என அனுமதி வழங்கிவிட்டார்.
சத்யாவிடம் கவுதம் இந்த தகவல்களை சொல்லி வண்டி இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து டிரைவரிடம் அறிமுகம் செய்து வைத்து தாங்கள் அங்கே தங்க போவதாக சொல்லி இவர்களை அழைத்து போக சொன்னான்.
சத்யாவின் மிரட்டல் பலமாக வேலை செய்ய..அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு ட்ராலி, ஒரு பேக் பேக் குழந்தையை தூக்கி கொண்டு சோனுவோடு உத்ரா வர..அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
கவுதம், ஸ்வேதாவிடம் விடை பெற்று கொண்ட உத்ரா, அவர்களை ஹோட்டல் ரூம் காலி செய்து கொண்டு தான் இருக்கும் வீட்டில் தங்க கொள்ள சொல்லி விட்டு அதை ஏற்கனவே சோனுவிடம் சொல்லி விட்டதாக சொல்லி கிளம்பி, அபிமன்யுவிடம் போனில் பேசியபடி அவளும் காரில் ஏறி அமர்ந்தாள்.
காரில் ஏறியதில் இருந்தே ஹர்ஷாவின் மழலை மொழிகள், அவனுடைய குரல் மட்டுமே கேட்டு கொண்டு இருக்க.. அவன் தூங்கிய நேரத்தில் அதுவும் இல்லாமல் சத்யா உத்ரா இடையே எந்த பேச்சில்லாமல் அமைதியாக இருந்தது.
அன்றிரவு கொல்கத்தா சென்றடைந்து கவுதம் நண்பர் வீட்டில் தங்கி மறுநாள் கிளம்பி கோயமுத்தூர் சென்றடைந்தனர்.
கார் செல்லும் பாதையை பார்த்து இது தங்களது வீட்டுக்கு செல்லும் பாதை இல்லையே என யோசித்தபடி இருந்த உத்ரா வண்டி நின்ற அதிர்வில் நிமிர்ந்து பார்த்தாள்.
அது அவளுடைய தாத்தா வீடு என தெரிந்து சத்யாவை ஆச்சரியம் பொங்க பார்க்க.."வீடு வந்தாச்சு இறங்கற உத்தேசம் இருக்கா...அம்மணி" என கேட்ட சத்யாவை அதை ஆச்சர்யத்தோடு பார்த்தபடி குழந்தையை கைகளில் எடுத்து கொண்டு கீழே இறங்கி நின்றாள். (தொடரும்)
Author: Subha Balaji
Article Title: சுயம்பு 32
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சுயம்பு 32
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.