• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 31

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-31

ஹாஸ்பிடலில் அபிமன்யுவிடம் காலையில் வருவதாக சொல்லி விட்டு கிளம்பிய கவுதம் உத்ராவிடம் "நாங்க இங்க பக்கத்துல ரூம் எடுத்திருக்கோம்..அங்க தங்கிட்டு காலைல வரோம்.."என சொல்லி கிளம்ப..

"நான் இருக்கிற வீடு பெருசு..நீங்களும் ஹோட்டல் காலி பண்ணிட்டு வந்து வீட்டுலயே தங்கிக்கங்க.." என உத்ரா விடாமல் சொல்ல..

"உத்ரா..இனி இங்க தான் ரெண்டு வாரம் இருக்கணும்..அதால நாங்க நாளைக்கு அங்க வந்துடறோம்.. ஏற்கனவே இன்னிக்கு ஸ்டே பண்ண ஹோட்டல்ல ரூம் ரெண்ட் வேற பே பண்ணியாச்சு... நாளைக்கு நாங்க வெகேட் பண்ணிட்டு வந்திடறோம்.." என பதில் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

சத்யாவோடு எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தாள் உத்ரா. அவர்களுக்கு இடையே தெருவில் இருந்த மௌனமே நிறைந்து மன நிறைவாக இருந்தது.

வீட்டுக்கு போனதும் வாசலில் உட்கார்ந்து இருந்த சோனு உத்ராவோடு ஒருவர் வருவதை முதலில் யோசனையோடு பார்த்தவள்..அதன் பின் சந்தோஷமாக சத்யாவை வரவேற்று வேகமாக வீட்டுக்கு உள்ளே போய் அவர்களின் பழங்குடி வழக்கப்படி கைகளில் ஏதோ ஒரு வேரை எடுத்து வந்து சத்யாவை சுற்றி வீட்டுக்கு வெளியே போட்டு தீ மூட்டினாள்.

சத்யாவை வீட்டுக்கு உள்ளே போனதுமே வேகமாக ஓடி வந்த குழந்தை அவன் கால்களை கட்டி கொண்டு "அப்பா...அப்பா..ம்ம்.." என தன்னை தூக்கி கொள்ள சொல்ல..

அவனுக்கு குழந்தை தன்னை அப்பா என அழைத்ததிலேயே..மகிழ்ந்து போய் அவனை தூக்கி முகம் எங்கும் முத்தமிட்டு சுற்றி இறக்கி விட்டான்.

அங்கிருந்த சோஃபாவில் அவன் உட்கார்ந்த போதும் அவனை விட்டு நகராத பிள்ளையை தன் மடியில் உட்கார வைத்து கொண்டவன்..மெல்ல பேர் கேட்க.."அதுவும் மழலையில் "அர்ஷா.." என்றது..

தன்னை நோக்கி பேர் கேட்ட சத்யாவையும் உத்ராவையும் மாறி மாறி பார்த்து விட்டு மறுபடியும் "த்யா..த்ரா.." என பேரை சொல்ல..அதை கேட்டு மதிழ்ந்தவன் மறுபடியும் அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

எதுவோ தடுக்க..தங்களுக்குள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தவர்கள் குழந்தையிடம் மட்டும் பேசி கொண்டு இருந்தனர்.

அதற்குள் சோனு சத்யா வந்ததை கொண்டாட..மேகாலயாவின் ஸ்வீட்டான புக்-லேனை(நம் அதிரசம் போல) செய்து வந்து சுட சுட ஒரு தட்டில் கொண்டு வந்து தர..அதை பார்த்து சத்யா ஆச்சர்யத்தோடு வாங்கி சாப்பிட்டான்.

அதுவரை பேசாமல் இருந்த உத்ரா "ஸாரி சத்யா..நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புனு இப்ப தான் புரியுது.." என பேச ஆரம்பிக்க..

"ப்ளீஸ் உத்ரா..இப்ப எனக்கு எதுவும் பேசற..கேக்கற மனநிலை இல்ல..ஒரு வாரமா உன்னை கண்டுபிடிக்கறத்துக்காக சரியா சாப்பிடாம..தூங்காம அலைஞ்சதுல ரொம்ப டயர்டா இருக்கு..

சாப்பிட எதாவது கிடைச்சா..போதும்..சாப்பிட்டு நிம்மதியா தூங்கிணும்.." என தன் தற்போதைய நிலையை சொன்னான்.

வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவளை சோனுவின் சமையல் வாசனை இழுக்க..போய் திறந்து பார்த்தவளுக்கு எல்லாமே சத்யாவின் விருப்பமான உணவான இருக்க..அவனை குளிக்க சொல்ல சில நிமிடங்களில் குளித்து விட்டு வந்தவனை அழைத்து தட்டில் பரிமாற..சாப்பிட்டு விட்டு தூங்க போனவனை தொடர்ந்த குழந்தை அவனோடு தான் தூங்குவேன் என அடம்பிடிக்க.."அப்பா..டயர்டா இருக்காங்க..கண்ணா...நீ நாளைக்கு அவரோட தூங்கலாம்...இன்னிக்கு அம்மா கிட்ட வா.." என உத்ராவின் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் பலனளிக்காமல் ஹர்ஷாவும் சத்யா பக்கத்தில் படுத்து கொள்ள.."பரவால்ல..உத்ரா..குழந்தை என் கூடவே தூங்கட்டும்.." என சொல்லி தன்னோடு படுக்க வைத்து கொண்டான்.

படுத்ததில் இருந்து விளையாட்டு சத்தமும் சிரிப்பு சத்தமும் கேட்டபடி இருந்த ரூமில் சில நிமிடங்களில் ஓசை அடங்கி போக.. மெல்ல வந்து பார்த்த உத்ரா சத்யாவின் நெஞ்சின் மேல் படுத்து தூங்கி கொண்டு இருந்த ஹர்ஷாவையும் அவனை அணைத்தபடி தூங்கி போன சத்யாவையும் பார்த்தவள் சத்யாவின் மேல் தூங்கி இருந்த ஹர்ஷாவை அவன் பக்கத்தில் கிடத்தி விட்டு தானும் அமைதியாக போய் தூங்க ஆரம்பித்தாள். பல வருடங்களாக சரியாக தூங்காதவள்..இன்று கிடைத்த மனநிறைவில் சில நிமிடங்களில் தூங்கி போனாள்.

மறுநாள் காலை சத்யாவின் மேல் தன் பிஞ்சு கைகளையும் கால்களையும் போட்டு தன்னை மறந்து தூங்கி கொண்டு இருந்த ஹார்ஷாவின் அழகில் மயங்கி அவன் அருகில் போய்..காற்றில் கலைந்திருந்த அவன் முடியை மெல்ல சீராக்கி அவனையே மகிழ்வோடு பார்த்தபடி இருந்தாள்.

"தூங்கற குழந்தைங்களை சும்மா பாத்துட்டே இருக்காதே அம்மணி..ஏதாவது திருஷ்டி ஆகிட போகுது.." என கண்களை திறக்காமல் சத்யா பேச..

"அவன் குழந்தை...கூட உங்களை யார் குழந்தை லிஸ்ட்ல சேத்தாங்க போலீஸ்கார்....இத்தனை நேரம் நீங்க தூங்கற மாதிரி நடிச்சிட்டு தான் இருக்கீங்களா.." என உத்ரா அவனை முறைப்பது போல பார்க்க..

"வேணாம் டி..காலைல கண் முழிக்கும் போது உன் முட்டைக்கண்ணை வெச்சு முழிக்காதே..பார்க்கவே எனக்கு பயமா இருக்குங்கம்மணி.." என அவனும் பயப்படுவது போல நடித்தான்.

அதற்குள் பேச்சுக்குரல் கேட்டு எழுந்த ஹர்ஷா சத்யாவை இறுக்கி கட்டி கொண்டு முத்தமிட்டான். அவன் மேல் ஏறி விளையாட ஆரம்பித்த அவர்களின் நெருக்கத்தை உத்ரா பொறாமையோடு பார்த்தபடி இருந்தாள்.

குழந்தையோடு விளையாடி கொண்டு இருந்தாலும் உத்ராவின் நடவடிக்கைகளை உள்ளுர சிரிப்போடு பார்த்தவன் "உங்கம்மா டர்ட்டியா இருக்காடா...நீ..வா..கண்ணா..நாம போய் பிரஷ் செஞ்சுட்டு குளிச்சிட்டு ப்ரெஷ்ஷா வரலாம்.." என சொல்லி அவனை தன் தோளில் ஏந்தி போனவனை இன்னும் கோபமாக முறைத்தாள்.

அவர்கள் சிரித்து, விளையாடி குளித்து விட்டு வரும் வரை அங்கேயே இருந்தவளை பார்த்த சத்யா "என்னங்கம்மணி..இங்கேயே நிக்கறீங்க..போங்க..போய் எங்களுக்கு சாப்பிட ரெடி பண்ணுங்க.."என மேலும் அவளை வெறுப்பேற்றி விட்டு..

"எப்டி டி..இந்த குழந்தையை கொஞ்சினாலே தாங்க முடியாதவ..இத்தனை வருஷம் என்னை பாக்காம இருந்த...உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல.." என போகிற போக்கில் அவளிடம் சொல்லி விட்டு வெளியே போனான்.

வெளியே கவுதம், ஸ்வேதா வந்து அமர்ந்திருக்க..குழந்தைக்கு அவர்களை காட்டி யார் என கேட்க..அவனும் சரியாக "மாமா..த்தை.."என சொன்னான்.

அதில் மகிழ்ந்த கவுதம் சத்யாவிடம் "எந்தங்கச்சியை பாத்தில்ல..எப்டி குழந்தைக்கு உறவுகளை சொல்லி இருக்கா..பாரு.." என காலையில் ஆரம்பித்தவனை "போதும் டா..கேட்டு கேட்டு புளிச்சு போன உங்க குடும்ப பெருமை.."

"காலைலயே ஆரம்பிக்காத..எங்க மேல இரக்கம் காட்டு தம்பி.." என சிரித்தபடி அவனை வாரியவனிடம் ஸ்வேதா ஹைபை குடுக்க..கவுதம்க்கு என்ன செய்வது என்றே தெரியாது போனது.

சற்று நேரத்தில் சாப்பிட்டு விட்டு உத்ரா, ஸ்வேதா, கவுதம் மூவரும் ஹாஸ்பிடல்க்கு கிளம்ப..தனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருப்பதால் அதை முடித்து விட்டு ஹாஸ்பிடல்க்கு வருவதாக சொல்லி சத்யா அவர்களை அனுப்பி விட்டு டாக்டர் மல்ஹோத்ராவுக்கு அழைத்தான்.

அவர் சத்யாவை உடனே அவருடைய வீட்டுக்கு வர சொல்ல..அங்கு போன அவனுக்கு ராஜ உபசாரம் நடந்தது. அவரின் மனைவி ரசகுல்லா, கொஞ்சம் மிக்சர், பாதாம்..முந்திரி சேர்த்து வீட்டில் தயார் செய்த குக்கீஸ், இஞ்சி ஏலக்காய் சேர்த்த டீ என சாப்பிட குடுத்தபடி இருந்தார்.

"போதும் எனக்கு சாப்பிட வயித்துல இடமில்லை" என சொன்ன சத்யாவுக்கு மல்ஹோத்ரா..

"எங்களுக்கு ரெண்டு பையன்க தான்.. அவங்களும் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க.."

"என்னிக்கு உத்ராவை பார்த்தாளோ..அன்னிக்குலேந்து அவ உத்ராவை தன் பொண்ணா நெனச்சு தான் பழகுவா..அவளை தடுக்காதீங்க..

"அவளோட ரொம்ப நாள் ஆசை இது..மாப்பிளை வீட்டு வந்தா அவரையை மனம் குளிர கவனிக்கணும்னு சொல்லிட்டே இருப்பா..இன்னிக்கு தான் அது நிறைவேறி இருக்கு.." என சொல்லி தன் கண்களை துடைத்து கொண்டார்.

அதன்பின் அவரை வரவழித்து தங்கள் அருகில் உட்கார சொல்லி அவர் உட்கார்ந்ததும் சத்யா அவர்களிடம் சில விஷயங்களை மனம் விட்டு பேசி..தான் எடுத்திருக்கும் முடிவுகளை சொல்லி அதற்கு அவர்களின் ஆதரவை கேட்டான்.

அவர்களும் வெகு சந்தோஷமாக அவனுக்கு துணை நிற்பதாக சொல்லி அவனை வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 31
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom