• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 3

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு 3

சீஃப் டாக்டர் மல்ஹோத்ரா சற்று உரத்த குரலில் "கேன் யு ஹியர் மீ நௌ...உத்ரா ஒர்க்ஸ் ஃபார் அவர் ஹாஸ்பிடல் ஹு இஸ் ஆல்சோ ப்ரம் டவுட் சவுத் ஆப் இண்டியா..."

"ஷி இஸ் எ ஆர்த்தோ கோல்ட் மெடலிஸ்ட்..வெரி கைண்ட், டேடிகேடட்..அண்ட் ஹம்பிள்.." என உத்ரா புகழ் பாட..

"ஹவ் லாங் ஹேட் பீன் ஷி ஒர்க்ஸ் தேர்"...என கவுதம் சந்தேகமாக கேட்க..

"பாஸ்ட் த்ரீ இயர்ஸ்" என்ற மல்ஹோத்ராவின் பதிலை கேட்டு மேலும் சில விவரங்களை கேட்டு விட்டு "தேங்க்யூ டாக்டர்..தேங்க்ஸ் ஃபார் தி க்ளாரிப்பிகேஷன்..ஈகர் ட்டூ மீட் யூ சூன்.."

"வி வில் பீ தேர் இன் ப்யூ ஹவர்ஸ்..கைண்ட்லி டோண்ட் கன்வே உத்ரா தட் வி ஆர் கம்மிங்...ப்ளீஸ் கீப் இட் அஸ் சீக்ரட்...இட் மஸ்ட் பீ எ சர்ப்ரைஸ் ட்டூ ஹர்...வில் சீ யு தேர்..பை டாக்டர்" என்றதும் அவரும் பதிலுக்கு "சேம் ஹியர்..ஈகர்லி லுக்கிங் பார்வேர்ட் ட்டூ மீட் யூ கைஸ்..ஷுர்..வில் மெயின்டையின் தி சீக்ரட்..பை" என சொல்லி சிரித்தபடி போனை வைத்தார்.

பக்கத்தில் குழப்பமாக பார்த்தபடி இருந்த ஸ்வேதாவை பார்த்த கவுதம் "டாக்டர் மல்ஹோத்ராக்கு யார் சொன்னாங்களாம் தெரியுமா...தி க்ரேட் உத்ரா" என நக்கலாக சொன்னதை கேட்டு ஸ்வேதா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

"என்னது...உத்ராவா...அவ எப்டி அங்க போனா கவுதம்..நமக்கு தெரிஞ்ச எடத்துல எல்லாம் தேடினோமே...கிடைக்கலையே..இவ எப்டி அங்க போயிருப்பா" என வேக வேகமாக கேட்க..

"நிதானம்... நிதானமா..கேளு..
ஸ்வே..வேகன்ஸி பாத்து அப்ளை பண்ணி போயிருக்கா..யாரோ அவளோட சீனியர் தான் சொன்னாங்களாம்..இவ்ளோ பெஸ்ட் டாக்டரை அங்க அனுப்பினத்துக்கு அந்த சீனியர்க்கு தேங்க்ஸ்னு வேற மல்ஹோத்ரா சொன்னார்.."

"யார் அந்த சீனியர்..யார் சொல்லி அவ போனானு நமக்கு தெரியல பாரு.." என வருத்தமாக சொன்னான்.

உடனே ப்ளைட் டிக்கெட் பார்க்க..மோசமான வானிலையால் ஷில்லாங்க் போகும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு தெரிய...அவர்கள் இருவருக்கும் கொல்கத்தாவுக்கு போக டிக்கெட் புக் செய்த கவுதம் நேரத்தை பார்க்க இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பினால் தான் ப்ளைட் பிடிக்க சரியாக இருக்கும் என உணர்ந்து ஸ்வேதாவை பேக் செய்து ரெடியாக சொல்லி விட்டு தன் அம்மா ப்ரபாவிடம் போய் " மா...மனுக்கு ஏதோ சின்ன ஆக்ஸிடெண்ட்டாம்..ஷில்லாங்க் இருக்கானாம்..அதனால நானும் ஸ்வேதாவும் போய் பாத்து அவனை இங்க அழைச்சிட்டு வரோம்..நாங்க வரவரைக்கும் குழந்தைகளை பாத்துக்கோ மா.." என சொன்னதும்..

"என்னடா..சொல்ற...திடீர்னு என்னாச்சு..அங்க ஏன் அவன் போனான்...உனக்கு எப்டி தெரியும்..யார் சொன்னாங்க.."என பதறிபடி விசாரிக்க..

அவரை சமாதானம் செய்தவன் "அந்த ஹாஸ்பிடல் டாக்டர் தான் போன் பண்ணார்..அவன் ஏன் போனான்னு தெரியல...நாங்க போய் பாத்தா தான் தெரியும் மா.."

"உன்னால தனியா இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கணும்னா கஷ்டம்..ரெண்டு பேரும் பண்ற வால்தனத்தை சமாளிக்க முடியாது.. ஸ்வேதா கிட்ட சொல்லி அத்தை வர சொல்றேன்..நாங்க வர வரைக்கும் அவங்களும் உன் கூட இருக்கட்டும்.. " என சொல்லி ஸ்வேதாவை அழைத்து அவளுடைய அம்மாவை வர சொல்லி போன் பண்ண சொன்னான்.

அடுத்த அரை மணி நேரத்தில் இருவருமாக கிளம்பி ஏர்போர்ட் போனதும்..கொல்கத்தாவில் இருக்கும் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்தவன்..அவரிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்க..அவரும் உடனே தன்னுடைய பெரிய காரை டிரைவரோடு அவர்களோடு அனுப்பி வைப்பதாக அவனுக்கு உறுதியான பதில் சொன்னார்.

ப்ளைட் கிளம்பியதும் கவுதமின் அருகில் உட்கார்ந்த ஸ்வேதா "நாம பாக்க சின்ன பொண்ணா இருந்த மான்குட்டி மாதிரி இருந்த உத்ரா...என்ன ஆச்சு யாருக்கும் தெரியாம போய் தனியா வாழறா..அந்த அளவுக்கு பெரிய மனுஷியா ஆகிட்டால்ல." என வருத்தப்பட..

ஸ்வே...வருத்தப்படாத...அவ கிட்ட பேசினா தான்.. தெரியும்...ஏற்கனவே ஒரு வாரமா நீ பயங்கர பிசியா இருந்த...அங்க போய் ரெஸ்ட் எடுக்க முடியுமானு தெரியாது...ஸோ..இந்த ஜர்னி டைம்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு அமைதியா தூங்கு" என்றதும்..

"இல்ல...கவுதம்.. எனக்கு எவ்ளோ கோவம் வருது தெரியுமா..எதுவும் நம்ம கிட்ட எல்லாம் சொல்லாத அளவுக்கு அப்டி என்ன நாம அவளுக்கு பண்ணோம்"என மனம் தாளாமல் தொடர்ந்து பேசியபடி இருந்தவளை பார்த்தவன் ...

"ஸ்வே..நான் ஏற்கனவே உன்னை தூங்க சொல்லிட்டேன்னு நெனக்கறேன்.." என கண்டிப்புடன் சொன்னதை கேட்ட ஸ்வேதா..அடுத்தது அவன் சொன்னதை கேட்காது போனால் வாரக்கணக்கில் பேசாமல் இருப்பான் என்பதை அனுபவத்தில் உணர்ந்து இருந்ததால் அமைதியாக தூங்க ஆரம்பித்தாள்.

அவள் தூங்க முயல்வதை பார்த்தவன் தானும் கண்களை மூடி தன்னை சில நிமிடங்கள் நிதானித்து கொண்டவன் பின்னர் அவனும் தூங்கி போனான்.

கொல்கத்தாவில் ப்ளைட் தரையிறங்கும் நேரம் ஏர்ஹோஸ்டஸ் எழுப்பி எழுந்த ஸ்வேதா மெல்ல கவுதமையை தட்டி எழுப்பி சில நிமிடங்கள் தங்களை நிதானித்து கொண்டு..ப்ளைட் தரையிறங்கியதும் மெதுவாக இறங்கினார்கள்.

அப்போதே மணி இரவு ஒன்பதை நெருங்கவே..ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கு ஏற்கனவே அவனுடைய நண்பர் தன்னுடைய காரை அனுப்பியதால் காத்திருந்த காரில் ஏறி இருவருமாக அவருடைய வீட்டுக்கு சென்றனர்.

அங்கு சென்றவர்களை வாசலிலேயே தன் குடும்பத்தோடு வந்து வரவேற்ற கவுதமின் நண்பர் அவர்களை உள்ளே அழைத்து சென்று தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் தங்களை ரெப்ரெஷ் செய்து வந்ததும் உடனே ஷில்லாங்க் கிளம்ப வேண்டும் என சொன்ன ஸ்வேதாவிடம்... பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ட்ராவல் செய்வது வேண்டாம்.. அதுவும் வேறு மாநிலம் வேறு போக வேண்டும்..மறுநாள் அதிகாலை கிளம்பும் படி அந்த நண்பர் சொல்லவே அவர் சொன்னதை புரிந்து அதற்கு சம்மதித்தாள் ஸ்வேதா.

இரவு டின்னரை விரைவாக முடித்த ஸ்வேதாவும் கவுதமும் ..

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்பதால் நண்பர் குடும்பத்தினரிடம் அப்போதே விடை பெற்று தூங்க சென்றார்கள்.



மறுநாள் அதிகாலை அவர்கள் ரெடியாகி வெளியே வந்ததும் நண்பர் குடும்பமே எழுந்திருந்தது. அவர்கள் அனைவரும் வாசலில் வந்து வழியனுப்ப..கவுதமை தனியாக அழைத்த நண்பர் "நீங்க கேட்ட மாதிரி ஹிந்தி, காசி ரெண்டுமே முகர்ஜிக்கு தெரியும்.. அங்க லோக்கல்ல பேசறதுக்கு அவரை விட்டுடுங்க..அவர் நல்லா மேனேஜ் பண்ணுவார்..."

"நல்லபடியா போயிட்டு வாங்க..உங்க ப்ரதர்-இன்-லா எதுவும் பிரச்சினை இல்லாமல் நல்லபடியா இருப்பார்..

கவலைப்படாதீங்க....ஆல் த பெஸ்ட்.." என நல்ல வார்த்தைகளாக சொல்லி அவனை உற்சாகப்படுத்த..

அவனும் மிக சந்தோஷமாக அவரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து காரில் ஏறி கையசைக்க கார் கிளம்பியது. (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom