• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 29

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-29

உத்ரா எடுத்து வந்த காஃபியை யாரும் சட்டை செய்யாமல் தங்களுக்குள்ளேயே பேசியபடி இருந்ததை பார்த்து "என்னாச்சு..மொதல்ல காஃபியை எடுத்து குடிங்க.." என வீட்டு ஆளாக உபசரிக்க

அவளை சந்தேகமாக பார்த்த திலகவதி "இதுல என்ன கலந்திருக்க..விஷமா..

ஏற்கனவே என் பையன் உன்னை பத்தி அன்னிக்கு சொன்னானே..உன் கையால சாப்பிடறது விஷம் சாப்பிடற மாதிரினு கத்தினானே.." என தீர்மானமாக அவளை குற்றம் சாட்டி பேசினார்.

"உங்க பையன் என்னை ஏதோ கோவத்துல சொன்னார்...சரி..அது இப்ப எதுக்கு எல்லார் எதிர்க்கயும் சொல்றீங்க அத்தை.." என புரியாமல் கேட்ட உத்ராவை பார்த்த வந்தனா..

"ஒரு வேளை நீ எங்க எல்லாரும் விஷத்தை குடுத்துட்டு அந்த போட்டோல இருக்கறவன் கூட போயிட்டா.."என மறுபடியும் ஆரம்பிக்க..

அதில் கடுப்பானவள் "இங்க பாருங்க வந்தனா..இது எங்க குடும்ப விஷயம். உங்க மரியாதையை காப்பாத்திக்க வேணுமானா..தயவு செய்து நீங்க இதை பற்றி பேசாதீங்க.."என எச்சரிக்க..

அதில் பொங்கிய வந்தனாவின் அம்மா "நல்லா இருக்கு..திலகா..உன் மருமக பேசறது..எப்டி..எப்டி நாங்க தலையிட கூடாதா..

அது உங்க விஷயம் உங்களுக்குள்ள இருக்கிறவரைக்கும் தான்.."

"எப்ப உன் மாமியார் உன் கிட்ட பேச பயந்துக்கிட்டு எங்களை இதை பத்தி சொல்லி உன் கிட்ட பேச சொல்லி வரவழிச்சாங்களோ...

அப்பவே இது பொது விஷயம்..இதுல நாங்க எல்லாரும் பேசலாம்.." என தங்களது நிலையை விட்டு குடுக்காமல் பேச..

"இரு..இரு..இப்பவே உன் புருஷன் கிட்ட இதை சொல்வோம்..அவன் என்ன முடிவு எடுக்கறானோ..அதை நீ ஏத்துக்கறீயா.."என விடாமல் பேசிய திலகவதியை எரிச்சலாக பார்த்த உத்ரா "சரி..போன் பண்ணுங்க..அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்.." என தைரியமாக சொன்னவள் மனதில் சத்யாவின் போன் எப்டியும் ஸ்விட்ச் ஆஃப்பாக தான் இருக்கும்.. அதற்கு பின் இவர்களின் முகபாவனைகளை தெரிந்து கொள்ளவோம் என ஆவலாக அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

"மா..வந்தனா..என் போன் சரியில்ல..கொஞ்சம் உன் போன்ல போன் பண்ணு டா.." என பாசமாக அவளிடம் சொல்ல..

அவளும் "தோ..அத்தை.." என சொல்லி தன்னுடைய போனை எடுத்து சத்யாவுக்கு போன் செய்தாள்.

ரிங் போனபடி இருந்து கடைசியில் கட் ஆக போகும் நேரத்தில் போனை எடுத்த சத்யா.."ஹலோ..சத்யா ஹியர்.." என சொல்ல..

உடனே வந்தனா "சத்யா..நான் வந்தனா பேசறேன்..இங்க ஒரு பிரச்சனை.." என ஆரம்பித்தவள்..

"ஹலோ...ஹலோ..பேசறது கேக்குதா..அடடா..சிக்னல் சரியில்ல..நான் வெளில போய் பேசறேன்.." என சொல்லி வெளியே போய் சில நிமிடங்கள் பேசி விட்டு மறுபடியும் உள்ளே வந்து "நான் இப்ப ஸ்பீக்கர்ல போடறேன்.. நீங்களே எல்லாம் சொல்லுங்க சத்யா.."என சொல்லி...

"புருஷனுக்கு தெரியாம அவரு ஊர்ல இல்லாம இருக்கறப்ப தப்பா நடந்துக்கிட்ட..பொம்பளையை என்ன செய்யலாம்.. சொல்லுங்க.." என தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அப்பாவியாக கேட்க..

அவனும் அவளின் தந்திரத்தை தெரியாது "அந்த பொண்ணு எல்லாம் வாழவே லாயக்கில்லாத ஆளு..எதுக்கு உயிரோட இருந்து எல்லாரோட மானத்தையும் வாங்கணும்.." என பதில் சொல்ல..

தான் எதிர்பார்த்த பதில் இன்னும் வராததால் மறுபடியும் வந்தனா "நீங்க இருந்திங்கனா என்ன செஞ்சிருப்பீங்க.." என தன்னுடைய அப்பாவி வேஷத்தை தொடர..

"நான் அங்க இருந்தா அவளை அடிக்கற அடில அவளே கதறிட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிடுவா..

நடத்தை சரியில்லாதவ குடும்பத்துல இருந்தா..அப்பறம் வீட்டுல இருக்கிற ஆளுங்களுக்கு சமூகத்துல என்ன மதிப்பு இருக்கும்.." என தன் நிலையை சொல்ல..

"சரிங்க..சத்யா..ரொம்ப தேங்க்ஸ்..நான் வெச்சுடறேன்.." என சொல்லி உத்ராவை வெற்றி பார்வை பார்த்தாள்.

அதுவரை சத்யாவின் மேல் இருந்த அளவில்லாத நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் காண..அதை அவர்களின் எதிரில் காண்பிக்காமல் வேகமாக தங்களறைக்கு போய் கதவடைத்து சத்யாவை அழைத்தாள்.

உத்ராவிடமிருந்து வந்த போனை பார்த்து ஆச்சர்யத்தால் சத்யா "ஹாய்..டாக்டரம்மா..என்ன அதிசயம்..இதுவரைக்கும் நானா போன் பண்ணாம நீங்க எனக்கு போனே பண்ண மாட்டீங்க..என்ன திடீர்னு எங்களை மாதிரி எளிய ஆளுங்களுக்கு போன் பண்ணி உங்களோட இரக்கத்தை காட்டறீங்க.."என சந்தோஷமாக குரல் தர..

அதற்கு பதில் தராமல் உத்ரா "சத்யா.. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேப்பேன்..அதுக்கு சரியா பதில் சொல்லணும்..."என பீடிகையோடு கேட்க..

"கேளு..என் டாக்டரம்மா...எத்தனையோ பேரு என்னை வித விதமா கேள்வியா கேக்கறாங்க..அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்றேன்..உனக்கு சொல்ல மாட்டேனா..சொல்லு.." என உற்சாகமாக சொல்ல..

"உங்க போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கும்னு சொன்னீங்களே..இப்ப எப்டி ஆன்ல இருக்கு.." என தன் சந்தேகத்தை கேட்க..

தான் மறுநாள் மதியம் ஊருக்கு திரும்பி வரப்போவதை அவளிடம் சொல்லாமல் சர்ப்ரைஸாக வந்து நிற்க போவதை சொல்லாமல் "அதுவா...அது நாங்க இப்ப வெளிய வந்திருக்கோம்..சரி..நீ என்ன கேக்கணும்னு போன் பண்ணே.."என அவளுக்கு பதிலும் சொல்லி கேள்வியும் கேட்க..

அதில் சுதாரித்தவள் "வந்தனா உங்க கிட்ட பேசினாங்களே..அதை நீங்க ஒத்துக்கறீங்களா.." என மொட்டையாக கேட்க..

ஒரு நிமிடம் யோசித்தவன் "ஓஓஓ..வந்தனா பேசினதா..எனக்கு அவங்க சொன்னது மறந்தே போச்சு..நீ கேட்டதும் தான் நியாபகம் வருது...

"அவங்க கிட்ட சொன்ன மாதிரி குடும்ப பெண்கள் தடம் மாறினா..அதுக்கு பிறகு அந்த குடும்பத்துல இருந்து அவங்களை அசிங்கம் பண்ண கூடாது.."

"இது எல்லாருக்கும் பொதுவானது உத்ரா..என்னை பொருத்தவரை..உனக்கே தெரியும் என் குணம்..

"என்னால இந்த ஒழுக்கமில்லாத செயலை ஒத்துக்கவே முடியாது.. அவங்களை தலை முழுகறது தான் சரியா இருக்கும்..."என சொல்லி முடித்தவன்..

"அது..சரி..உனக்கு எப்டி இது தெரிஞ்சது...ஓஓ..அவங்க நம்ம வீட்டுலேந்து தானே பேசினாங்க..

சரி..அடுத்தவங்க விஷயம் நமக்கு எதுக்கு சொல்லு.

போலீஸ்காரனுக்கு போன் பண்ணி விசாரணை பண்ற தைரியம் அவன் பொண்டாட்டிக்கு புதுசா அதிகமா இருக்கே...யார் குடுத்த தைரியம் இது.. சரியில்லையே..." என அவளை கலாய்க்க ஆரம்பித்தான்..

ஏற்கனவே அன்று நடந்த விஷயங்களால் மன உளைச்சலில் இருந்தவள் சத்யாவின் கேலி பேச்சை புரிந்து கொள்ள முடியாமல்

"ஸாரி சத்யா.. எனக்கு தலை வலிக்குது. நான் போனை வெச்சுடவா.." என்று சொல்ல..

"என்னாச்சு டி..திடீர் தலைவலி..சரியா சாப்பிடலையா..போ..நல்லா சாப்பிட்டு தூங்கு..தலைவலி சரியா போயிடும்..நான் போனை வெக்கறேன்.. பை டி.."என சொல்லி போனை வைத்தான்.

அதுவரை தன்னை அடக்கி கொண்டு இருந்தவள் ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் அழுது கரைந்தவளுக்கு கவுதம் நினைவுக்கு வர..வேகமாக அவனுக்கு போன் செய்ய எடுத்தவளுக்கு அப்போது தான் கவுதம், ஸ்வேதா இன்னும் அவன் கூட படித்த சில டாக்டர்கள் ஒன்றாக சேர்ந்து திருநெல்வேலி யில் இருந்து நாகர்கோவில் போகும் வழியில் சில கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த போயிருப்பது நினைவுக்கு வந்து மறுபடியும் அவளை சோர்வடைய வைத்தது.

தன்னியல்பாக அபிமன்யுவுக்கு அழைக்க..போனை எடுத்த அவனோ உத்ராவிடம் உற்சாகமாக பேச ஆரம்பித்தான்

"உத்ரா..உத்ரா..நாங்க எல்லாம் இப்ப என்னோட ஸ்கூல்ல படிச்ச அர்ஜீன் கல்யாணத்துக்கு தூத்துக்குடிக்கு போறோம்..எல்லாரும் இருக்காங்க..ஒரே ஃபன்னா இருக்கு டி.."என கத்த..

எதுவும் பதில் சொல்லாமல் "சரி மனு..நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா.." என்பதை மட்டும் சொல்லி போனை வைத்தாள்.

அங்கிருந்த கொண்டாட்டத்தில் உத்ரா எதற்கு போன் செய்திருப்பாள் என்பதை யோசிக்க மறந்து அபிமன்யுவும் தன் நண்பர்களோடு ஐக்கியமானான்.

எல்லா நிலையிலும் மனம் வெறுத்து போய்..தனக்கு இந்த நேரத்தில் ஆதரவாக யாரும் அருகில் இல்லையே என கழிவிரக்கத்தால் அழுதுகொண்டே சற்று நேரம் எதை பற்றியும் யோசிக்காமல் படுத்திருந்தவளுக்கு எதுவோ தோன்ற தன் போனை எடுத்து மெயில் செக் செய்ய..

அவளுடைய சீனியர் வினித்ரா சொல்லி போனில் இன்டர்வியுவுக்கு பதில் அளித்திருந்த ஷில்லாங்க் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் இருந்து அவளை உடனே வந்து வேலையில் சேருமாறு எதிர்பாராத பதில் வந்திருக்க..அதில் தன்னை தேற்றி கொண்டு வேகமாக ஒரு ஹோல்ட் ஆனிலும், பேக் பேக்கிலும் தன்னுடைய சர்டிபிகேட்ஸ், துணிகளை நிறைத்து வைத்து விட்டு சத்யாவுக்கு ஒரு கடிதம் எழுதி தங்களது கப்போர்டில் அவளுடைய விருப்பமான ப்ளூ ஷர்ட்டுக்கு கீழே வைத்தாள்.

கோயமுத்தூரில் இருந்து கொல்கத்தா போக ஃப்ளைட் டிக்கெட் பார்க்க அன்றிரவே டிக்கட் இருக்க..அதை பார்த்து வினித்ராவுக்கு போன் செய்து தான் அங்கு வர போவதாக சொல்லி தங்குவதற்கு இடம் பற்றி கேட்க..வினித்ராவும் தான் தங்கி இருந்த வீட்டையே உத்ரா தங்குவதற்கும், அங்கு சமையல் வேலை செய்த சோனுவையே உத்ராவுக்கு சமையல் செய்ய ஏற்பாடு செய்து அவளை ஏர்போர்டில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்கும் சோனுவின் மகனை ஏற்பாடு செய்து அவளிடம் எல்லாவற்றையும் விரிவாக எடுத்துரைத்தாள்.

உத்ராவும் உடனே ப்ளைட் டிக்கெட் புக் செய்தவள் யாரும் சொல்லாமல் அன்றிரவே வீட்டை விட்டு கிளம்பி போனாள்.(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 29
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom