கனவு நல்லது வேண்டும்
அன்றொரு நாள் காலையில் நான் எழுந்து கொள்ள தாமதமாகியது. எழுந்தவுடன் உடலெல்லாம் மிகவும் அசதியாக இருந்தது. நன்றாகத் தூங்கிய உணர்வே இல்லை. யோசித்துப் பார்த்தால் எனக்கு வந்த கனவு நினைவுக்கு வந்தது. ஒரு பெரிய பேருந்தை வாடகைக்கு எடுத்து நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து சுற்றுலா செல்வதும், அங்கு சுற்றுவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுமாக நிஜமாகவே ஊருக்கு போய் வந்த களைப்பு. என் கனவை பற்றி என் வீட்டினருக்குக் கூறியபோது என் பெரியமகள், "அம்மா! எனக்கு என்ன கனவு தெரியுமா? நாம கோயிலுக்கு போகலாம்னு வீட்டு வாசலுக்கு வர்ரோம் வாசல்லயே நிறைய பேர் பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கலோட என்கிட்ட வந்து, 'இந்தாங்க இந்தாங்க!' வாங்கிக்கோங்க ன்னு குடுக்கிறாங்களாம். வாங்கி சாப்பிட்டுட்டே இருக்கோமாம். வரிசையா வந்துகிட்டே இருக்காங்களாம்" என்றாள்.
என் கணவருக்கு வழக்கமாகக் கனவுகளே வராது என்பார். அதிசயமாக அன்று அவருக்கும் கனவு வந்திருக்கிறது. அவரது கனவில் அவர் கடற்கரைக்கு போயிருக்கிறார், மீனவர்கள் கடலுக்குள் இறங்கத் தயாராக இருந்திருக்கிறார்கள். 'எவ்வளவு தூரம் போவீங்க? எப்ப வருவீங்க?' என்று இவர் ஆர்வமாகக் கேட்க, 'நீங்களும் வாங்களேன்' என்று அழைக்கிறார்கள். இல்லை பரவாயில்லை என்று இவர் மறுக்க, கையைப் பிடித்து, 'சும்மா வாங்க!' என்று பாசத்துடன் படகை நோக்கி இழுக்கிறார்களாம். அதற்குள் அலைபேசி அடிக்கவே கனவு கலைந்துவிட்டது என்றார்.
என் சிறிய மகள் மட்டும் தான் பாக்கி. அவளிடம் கேட்டதில் "எனக்கு இன்னிக்கி கனவு வரல, நேத்து என்ன வந்துச்சுன்னா கூரியர்ல ஒரு பார்சல் வருது.. அதைத் திறந்து பாத்தா நிறைய நாய்க்குட்டி வரிசையா வெளிய வருது. நான் அதெல்லாம் பிடிக்கப் பார்க்கிறேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசைக்கு ஓடுது. நானும் பின்னாலேயே மாத்தி மாத்தி ஓடுறேன். அதுக்குள்ள நீங்க என்னை எழுப்பிட்டீங்கம்மா" என்றாள். ஒரே வீட்டில் இருக்கும் நான்கு பேரின் நான்கு விதக் கனவுகளுக்கு என்ன காரணம்? ஒன்றாக விழித்து, ஒரே சம்பவங்களைப் பார்த்து, ஒரே அறையில் உறங்கினாலும் கனவுகள் ஒரே மாதிரி வருவதில்லை. ஏன்?
இப்படிக் கனவுகளைப் பற்றி அந்தக் காலத்திலேயே நிறைய ஆய்வுகள் செய்து 'இன்டர்பிரேட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு. அதன்பின் எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தாலும் ஆழ் மனதின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது தான் கனவு என்ற விஷயம் மட்டும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சிலருக்கு அடிக்கடி ஒரே மாதிரி கனவு வருவதுண்டு. உங்களுக்கு உயரத்திலிருந்து விழுவது மாதிரி கனவு வருகிறதா? அப்படி என்றால் ஏதோ ஒருவித பாதுகாப்பின்மை உங்கள் வாழ்வில் இருக்கிறது, அதை நினைத்து பயப்படாதீர்கள் என்று அர்த்தம். கழுத்தை நெறிக்கும் உங்கள் பணியில் இருந்து ஒரு பிரேக் எடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு பேயோ பூதமோ உங்களைத் துரத்துவது போலவும் நீங்கள் ஓடுவது போலவும் கனவு வருகிறதா? ஒரு குறிப்பிட்ட பிரச்சனை உங்களைத் துரத்துவதாக அர்த்தம். அந்தப் பிரச்சினையை பார்த்து ஓடுவதை விட திரும்பி நின்று அதை எதிர்த்து விடுங்கள் என்று கனவு நமக்கு சுட்டிக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஏதோ முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவதாகக் கனவு வருகிறதா? நீங்கள் தொலைத்தது உங்கள் பொழுதுபோக்காக இருக்கலாம். உங்கள் ஆழ்மனதின் மகிழ்ச்சியாக இருக்கலாம். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது, அதைத் தேடுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
தனியாகக் காட்டில் மாட்டிக் கொள்வது போல, வழி தெரியாமல் திண்டாடுவது போல கனவு வந்தால் தனிமை உணர்வு உங்களை பாதிப்பதாகவும், ஏதோ ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடி அலைகிறீர்கள் என்றும் பொருள்.
இப்போது சில ஜாலி கனவுகள்.. ஒரு சினிமா நட்சத்திரத்துடனோ, புகழ்பெற்ற தலைவருடனோ பொது இடங்களில் விழாக்களுக்கு செல்வது போல் சிலருக்கு கனவு வருமாம். அப்படி இருந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள் என்று அர்த்தமாம். சமீபத்தில் ஒரு மேடை பேச்சிலோ, பள்ளி நாடகத்திலோ சிறப்பாகச் செயலாற்றி இருந்தால்கூட அப்படி ஒரு நல்ல எண்ணம் தோன்றும் என்கிறார்கள்.
தெருவில் எல்லாரும் நடந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் மட்டும் பறக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்விலும் நீங்கள் நிஜமாக பறந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை ஒரு தலைவராகப் பார்க்கலாம் அல்லது உங்கள் பெற்றோர் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதன் அறிகுறியாக இந்தக் கனவு வந்திருக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தில் சிறுநீர் கழிக்கும் அவசியம் ஏற்படும் போது, கனவில் நடக்கும் சம்பவங்களிலும் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் வரும். அதேபோல பசியுடன் உறங்கிவிட்டால் ஹோட்டல்களைத் தேடிப் போவது போல, ஃப்ரிட்ஜுக்குள் உணவுப் பொருட்களைத் தேடுவது போலக் கனவுகள் வரலாம்.
பல அறிவியல் அறிஞர்கள் தங்கள் தலையைக் குழப்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்குக் கனவில் தீர்வு கிடைத்துள்ளதாக கூறியிருக்கின்றனர். சில எழுத்தாளர்களுக்குப் புதிய கதைக்கரு கனவில் தோன்றி இருக்கிறதாம். ஒரு சிலருக்கு முழு கதையுமே கனவில் வந்ததாகக் கூறுகின்றனர். ஒரு நாள் வந்த கனவின் தொடர்ச்சி மறுநாளும் சிலருக்கு வருகிறதாம்.
தினமும் ஒரு கனவு வந்தது; அதில் ஒரு பெண் வந்தாள், அவளைத் தேடிப் போனேன் என்றும் முன்ஜென்ம நினைவுகள் கனவில் வந்தன என்றும் சொல்லும் கதைகளும், சினிமாக்களும் ஏராளம். பாட்டி கனவில் வந்தாள், கடவுள் கனவில் வந்து சொன்னதை நான் நிறைவேற்றினேன், கனவில் வந்த இடத்தில் தோண்டினேன், சாமி சிலை கிடைத்தது போன்ற நிகழ்ச்சிகளை நிறையக் கேட்டிருக்கிறோம்.
மொத்தத்தில் கனவுகளையும் மனிதனையும் பிரித்துப் பார்க்க முடியாது. சொல்லப்போனால் மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்குமே கனவு வரும். சும்மா தூங்கிக்கொண்டிருக்கும் நாய் திடீரென எழுந்து சுற்று முற்றும் பார்த்து குரைத்து விட்டு மீண்டும் தூங்கி விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? உறக்கத்தில் நாய்க்கு ஏதோ கனவு வந்ததால் அப்படி நடந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நாம் தூங்கும் நேரத்தை ஸ்லோ வேவ் ஸ்லீப், ரெம் ஸ்லீப் என்ற இரண்டு விதமான தூக்கங்கள் ஆக்கிரமிக்கின்றன. கனவுகள் எல்லாம் தூக்கத்தின் ஒரு பகுதியான ரெம் ஸ்லீப் (REM- rapid eye movement) என்னும் பகுதியில் வருகின்றன. பாலூட்டிகள் அனைத்திற்குமே ரெம் ஸ்லீப் உண்டு. அதனால் அவை அனைத்துமே கனவு காணும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சரி இப்போது, மீண்டும் எங்கள் குடும்பத்தினருக்கு அன்று வந்த கனவுகளைப் பற்றி... அன்றைய தினம் காலையில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்திருந்தார். நாங்களெல்லாம் குழுவாகச் சேர்ந்துகொண்டு அடிக்கடி சுற்றுலா செல்வோம். கொரோனா சமயம் என்பதால் கடந்த ஒரு வருடமாகப் போகமுடியவில்லை. காலையில் வந்திருந்தவர் விடைபெற்றுச் செல்லும்போது ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தார், "சீக்கிரமா ஒரு டூர் பிளான் போடுங்க" என்று. அப்போது நான் பதிலுக்கு, "முதல்ல நம்ம ஊர் கோயிலுக்கு போயிட்டு வருவோம்" என்று கூறியிருந்தேன்.
அந்த சம்பவம் முடிந்து அன்றைய தினத்தில் வேறு ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்ட பிறகும் அந்த நிகழ்ச்சி நம் அடிமனதின் ஆழத்திலுள்ள ஆசை என்பதால் அது தான் இப்படி விதவிதமாகக் கனவுகளைக் கிளப்பியிருக்கிறது. வழக்கமாக சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் எனக்கு ஏற்பாடுகளைப் பற்றியும், கடற்கரை மீன்கள் மீது அலாதிப் பிரியமுள்ள என் கணவருக்குக் கடற்கரைக்குப் போவது போலவும், கோவில் என்று நான் கூறிய ஒரு வார்த்தையால் உணவிலும் சமையலிலும் விருப்பமுள்ள என் மூத்த மகளுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போலவும் கனவு வந்திருக்கிறது. 'ஒரு குட்டி நாய் வளர்ப்புக்கு இருக்கிறது. அதைக் கொண்டுவந்து தரட்டுமா?' என்று ஒரு நண்பர் சில நாட்கள் முன் கேட்டிருந்தார். அந்த ஆசை தான் என் இளைய மகளுக்கு முந்தைய தினம் கூரியர் கனவாக வந்திருக்கிறது.
கனவுகள் வருவதும், வந்த கனவுகள் நினைவுக்கு வருவதும் ஆழ்ந்த உறக்கத்தை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள் என்பதன் அறிகுறி. அந்த ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். நமக்குத் தோன்றும் கனவில் ஐந்து சதவீதம் மட்டுமே நமக்கு நினைவிருக்கிறது. கனவில் வரும் சம்பவங்களை நினைத்து பயப்படத் தேவையில்லை. அது தோன்றிய விதத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.
இப்போது சில கேள்விகள்:
* பிறந்த குழந்தைக்குக் கனவு வருமா?
*பிறவியிலேயே கண் தெரியாதவர்களுக்கு எப்படிக் கனவுகள் தோன்றும்?
*கனவுகளில் வண்ணங்கள் வருகிறதா இல்லையா?
சுவாரசியமான இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப்பாருங்கள். கனவுகளைப் போலவே பதிலும் சுவாரசியமாக இருக்கும்.
அன்றொரு நாள் காலையில் நான் எழுந்து கொள்ள தாமதமாகியது. எழுந்தவுடன் உடலெல்லாம் மிகவும் அசதியாக இருந்தது. நன்றாகத் தூங்கிய உணர்வே இல்லை. யோசித்துப் பார்த்தால் எனக்கு வந்த கனவு நினைவுக்கு வந்தது. ஒரு பெரிய பேருந்தை வாடகைக்கு எடுத்து நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து சுற்றுலா செல்வதும், அங்கு சுற்றுவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுமாக நிஜமாகவே ஊருக்கு போய் வந்த களைப்பு. என் கனவை பற்றி என் வீட்டினருக்குக் கூறியபோது என் பெரியமகள், "அம்மா! எனக்கு என்ன கனவு தெரியுமா? நாம கோயிலுக்கு போகலாம்னு வீட்டு வாசலுக்கு வர்ரோம் வாசல்லயே நிறைய பேர் பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கலோட என்கிட்ட வந்து, 'இந்தாங்க இந்தாங்க!' வாங்கிக்கோங்க ன்னு குடுக்கிறாங்களாம். வாங்கி சாப்பிட்டுட்டே இருக்கோமாம். வரிசையா வந்துகிட்டே இருக்காங்களாம்" என்றாள்.
என் கணவருக்கு வழக்கமாகக் கனவுகளே வராது என்பார். அதிசயமாக அன்று அவருக்கும் கனவு வந்திருக்கிறது. அவரது கனவில் அவர் கடற்கரைக்கு போயிருக்கிறார், மீனவர்கள் கடலுக்குள் இறங்கத் தயாராக இருந்திருக்கிறார்கள். 'எவ்வளவு தூரம் போவீங்க? எப்ப வருவீங்க?' என்று இவர் ஆர்வமாகக் கேட்க, 'நீங்களும் வாங்களேன்' என்று அழைக்கிறார்கள். இல்லை பரவாயில்லை என்று இவர் மறுக்க, கையைப் பிடித்து, 'சும்மா வாங்க!' என்று பாசத்துடன் படகை நோக்கி இழுக்கிறார்களாம். அதற்குள் அலைபேசி அடிக்கவே கனவு கலைந்துவிட்டது என்றார்.
என் சிறிய மகள் மட்டும் தான் பாக்கி. அவளிடம் கேட்டதில் "எனக்கு இன்னிக்கி கனவு வரல, நேத்து என்ன வந்துச்சுன்னா கூரியர்ல ஒரு பார்சல் வருது.. அதைத் திறந்து பாத்தா நிறைய நாய்க்குட்டி வரிசையா வெளிய வருது. நான் அதெல்லாம் பிடிக்கப் பார்க்கிறேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசைக்கு ஓடுது. நானும் பின்னாலேயே மாத்தி மாத்தி ஓடுறேன். அதுக்குள்ள நீங்க என்னை எழுப்பிட்டீங்கம்மா" என்றாள். ஒரே வீட்டில் இருக்கும் நான்கு பேரின் நான்கு விதக் கனவுகளுக்கு என்ன காரணம்? ஒன்றாக விழித்து, ஒரே சம்பவங்களைப் பார்த்து, ஒரே அறையில் உறங்கினாலும் கனவுகள் ஒரே மாதிரி வருவதில்லை. ஏன்?
இப்படிக் கனவுகளைப் பற்றி அந்தக் காலத்திலேயே நிறைய ஆய்வுகள் செய்து 'இன்டர்பிரேட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு. அதன்பின் எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தாலும் ஆழ் மனதின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது தான் கனவு என்ற விஷயம் மட்டும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சிலருக்கு அடிக்கடி ஒரே மாதிரி கனவு வருவதுண்டு. உங்களுக்கு உயரத்திலிருந்து விழுவது மாதிரி கனவு வருகிறதா? அப்படி என்றால் ஏதோ ஒருவித பாதுகாப்பின்மை உங்கள் வாழ்வில் இருக்கிறது, அதை நினைத்து பயப்படாதீர்கள் என்று அர்த்தம். கழுத்தை நெறிக்கும் உங்கள் பணியில் இருந்து ஒரு பிரேக் எடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு பேயோ பூதமோ உங்களைத் துரத்துவது போலவும் நீங்கள் ஓடுவது போலவும் கனவு வருகிறதா? ஒரு குறிப்பிட்ட பிரச்சனை உங்களைத் துரத்துவதாக அர்த்தம். அந்தப் பிரச்சினையை பார்த்து ஓடுவதை விட திரும்பி நின்று அதை எதிர்த்து விடுங்கள் என்று கனவு நமக்கு சுட்டிக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஏதோ முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவதாகக் கனவு வருகிறதா? நீங்கள் தொலைத்தது உங்கள் பொழுதுபோக்காக இருக்கலாம். உங்கள் ஆழ்மனதின் மகிழ்ச்சியாக இருக்கலாம். அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது, அதைத் தேடுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
தனியாகக் காட்டில் மாட்டிக் கொள்வது போல, வழி தெரியாமல் திண்டாடுவது போல கனவு வந்தால் தனிமை உணர்வு உங்களை பாதிப்பதாகவும், ஏதோ ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடி அலைகிறீர்கள் என்றும் பொருள்.
இப்போது சில ஜாலி கனவுகள்.. ஒரு சினிமா நட்சத்திரத்துடனோ, புகழ்பெற்ற தலைவருடனோ பொது இடங்களில் விழாக்களுக்கு செல்வது போல் சிலருக்கு கனவு வருமாம். அப்படி இருந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள் என்று அர்த்தமாம். சமீபத்தில் ஒரு மேடை பேச்சிலோ, பள்ளி நாடகத்திலோ சிறப்பாகச் செயலாற்றி இருந்தால்கூட அப்படி ஒரு நல்ல எண்ணம் தோன்றும் என்கிறார்கள்.
தெருவில் எல்லாரும் நடந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் மட்டும் பறக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்விலும் நீங்கள் நிஜமாக பறந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை ஒரு தலைவராகப் பார்க்கலாம் அல்லது உங்கள் பெற்றோர் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதன் அறிகுறியாக இந்தக் கனவு வந்திருக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தில் சிறுநீர் கழிக்கும் அவசியம் ஏற்படும் போது, கனவில் நடக்கும் சம்பவங்களிலும் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் வரும். அதேபோல பசியுடன் உறங்கிவிட்டால் ஹோட்டல்களைத் தேடிப் போவது போல, ஃப்ரிட்ஜுக்குள் உணவுப் பொருட்களைத் தேடுவது போலக் கனவுகள் வரலாம்.
பல அறிவியல் அறிஞர்கள் தங்கள் தலையைக் குழப்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்குக் கனவில் தீர்வு கிடைத்துள்ளதாக கூறியிருக்கின்றனர். சில எழுத்தாளர்களுக்குப் புதிய கதைக்கரு கனவில் தோன்றி இருக்கிறதாம். ஒரு சிலருக்கு முழு கதையுமே கனவில் வந்ததாகக் கூறுகின்றனர். ஒரு நாள் வந்த கனவின் தொடர்ச்சி மறுநாளும் சிலருக்கு வருகிறதாம்.
தினமும் ஒரு கனவு வந்தது; அதில் ஒரு பெண் வந்தாள், அவளைத் தேடிப் போனேன் என்றும் முன்ஜென்ம நினைவுகள் கனவில் வந்தன என்றும் சொல்லும் கதைகளும், சினிமாக்களும் ஏராளம். பாட்டி கனவில் வந்தாள், கடவுள் கனவில் வந்து சொன்னதை நான் நிறைவேற்றினேன், கனவில் வந்த இடத்தில் தோண்டினேன், சாமி சிலை கிடைத்தது போன்ற நிகழ்ச்சிகளை நிறையக் கேட்டிருக்கிறோம்.
மொத்தத்தில் கனவுகளையும் மனிதனையும் பிரித்துப் பார்க்க முடியாது. சொல்லப்போனால் மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்குமே கனவு வரும். சும்மா தூங்கிக்கொண்டிருக்கும் நாய் திடீரென எழுந்து சுற்று முற்றும் பார்த்து குரைத்து விட்டு மீண்டும் தூங்கி விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? உறக்கத்தில் நாய்க்கு ஏதோ கனவு வந்ததால் அப்படி நடந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நாம் தூங்கும் நேரத்தை ஸ்லோ வேவ் ஸ்லீப், ரெம் ஸ்லீப் என்ற இரண்டு விதமான தூக்கங்கள் ஆக்கிரமிக்கின்றன. கனவுகள் எல்லாம் தூக்கத்தின் ஒரு பகுதியான ரெம் ஸ்லீப் (REM- rapid eye movement) என்னும் பகுதியில் வருகின்றன. பாலூட்டிகள் அனைத்திற்குமே ரெம் ஸ்லீப் உண்டு. அதனால் அவை அனைத்துமே கனவு காணும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சரி இப்போது, மீண்டும் எங்கள் குடும்பத்தினருக்கு அன்று வந்த கனவுகளைப் பற்றி... அன்றைய தினம் காலையில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்திருந்தார். நாங்களெல்லாம் குழுவாகச் சேர்ந்துகொண்டு அடிக்கடி சுற்றுலா செல்வோம். கொரோனா சமயம் என்பதால் கடந்த ஒரு வருடமாகப் போகமுடியவில்லை. காலையில் வந்திருந்தவர் விடைபெற்றுச் செல்லும்போது ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தார், "சீக்கிரமா ஒரு டூர் பிளான் போடுங்க" என்று. அப்போது நான் பதிலுக்கு, "முதல்ல நம்ம ஊர் கோயிலுக்கு போயிட்டு வருவோம்" என்று கூறியிருந்தேன்.
அந்த சம்பவம் முடிந்து அன்றைய தினத்தில் வேறு ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்ட பிறகும் அந்த நிகழ்ச்சி நம் அடிமனதின் ஆழத்திலுள்ள ஆசை என்பதால் அது தான் இப்படி விதவிதமாகக் கனவுகளைக் கிளப்பியிருக்கிறது. வழக்கமாக சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் எனக்கு ஏற்பாடுகளைப் பற்றியும், கடற்கரை மீன்கள் மீது அலாதிப் பிரியமுள்ள என் கணவருக்குக் கடற்கரைக்குப் போவது போலவும், கோவில் என்று நான் கூறிய ஒரு வார்த்தையால் உணவிலும் சமையலிலும் விருப்பமுள்ள என் மூத்த மகளுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போலவும் கனவு வந்திருக்கிறது. 'ஒரு குட்டி நாய் வளர்ப்புக்கு இருக்கிறது. அதைக் கொண்டுவந்து தரட்டுமா?' என்று ஒரு நண்பர் சில நாட்கள் முன் கேட்டிருந்தார். அந்த ஆசை தான் என் இளைய மகளுக்கு முந்தைய தினம் கூரியர் கனவாக வந்திருக்கிறது.
கனவுகள் வருவதும், வந்த கனவுகள் நினைவுக்கு வருவதும் ஆழ்ந்த உறக்கத்தை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள் என்பதன் அறிகுறி. அந்த ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். நமக்குத் தோன்றும் கனவில் ஐந்து சதவீதம் மட்டுமே நமக்கு நினைவிருக்கிறது. கனவில் வரும் சம்பவங்களை நினைத்து பயப்படத் தேவையில்லை. அது தோன்றிய விதத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.
இப்போது சில கேள்விகள்:
* பிறந்த குழந்தைக்குக் கனவு வருமா?
*பிறவியிலேயே கண் தெரியாதவர்களுக்கு எப்படிக் கனவுகள் தோன்றும்?
*கனவுகளில் வண்ணங்கள் வருகிறதா இல்லையா?
சுவாரசியமான இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப்பாருங்கள். கனவுகளைப் போலவே பதிலும் சுவாரசியமாக இருக்கும்.
Author: siteadmin
Article Title: கனவு நல்லது வேண்டும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கனவு நல்லது வேண்டும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.