Dhakai
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 67
ஐந்து மாதங்களுக்குப் பிறகு..
"வாட் த ஹெல்! இது தான் நீங்க வேலை செய்ற லட்சணமா?" அந்த மகிழுந்து நிறுவனத்தின் வரவேற்பறையில் நின்று வரவேற்பாளினியிடம் கோபமாய்க் கத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி.
பணியாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அந்நேரத்தில் அங்கிருந்த அனைவரும் சட்டெனச் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தனர்.
அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பவும் தான், தான் பொதுவெளியில் கத்தியிருப்பதையே உணர்ந்த சுந்தரலட்சுமியின் முகம் சுருங்கிப் போனது.
அந்நேரம் சுந்தரலட்சுமியின் மேலதிகாரி அங்கு வந்தவராய், "கைஸ் சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். ப்ளீஸ் கேரி ஆன்" என்று புன்னகையுடன் அங்கிருந்தவர்களிடம் உரைத்தவாறு சுந்தரலட்சுமியை நோக்கி வந்தவர்,
"என்னாச்சு லட்சுமி?" எனக் கேட்டார்.
"நாளைக்குக் கஸ்டமர் டெலிவரி இருக்கு சார்! இன்னும் ரிஜிஸ்டிரேஷனுக்கு எடுத்துட்டுப் போகாம வச்சிருக்காங்க. அந்த டிபார்ட்மெண்ட் பெர்சன்கிட்ட சொல்ல மறந்துட்டாங்களாம்" என்று சின்னக் குரலில் அவள் உரைக்கவும்,
கேள்வியாய் புருவத்தை உயர்த்தியவாறு அவளை நோக்கியவராய், "இதை விடப் பெரிய விஷயத்தை எல்லாம் கூலா ஹேண்டில் செஞ்சிருக்கீங்களே லட்சுமி. இந்தச் சின்ன விஷயத்துக்காகவா இவ்வளோ சத்தம் போட்டீங்க" என்று ஆச்சரியப் பாவனையில் வினவினார்.
அவர் அவ்வாறு கேட்டது அவளைக் குற்றயுணர்வுக்குள்ளாக, "சாரி சார்" தலையைத் தாழ்த்தியவளாய் உரைத்தாள்.
"இட்ஸ் ஓகே!" என்றவர் இதனைச் சரி செய்யும் வழியை வரவேற்பாளினியிடம் உரைத்து விட்டு அங்கிருந்து அகன்ற நொடி, தனது அறைக்குச் சென்று தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டாள் சுந்தரலட்சுமி.
தனது எட்டு வருடப் பணி வாழ்வில் இப்படி அவள் பொதுவெளியில் கத்தியதே இல்லை. இன்று தன்னை மீறி தான் செய்த செயலின் விளைவை எண்ணிக் குறுகியவளாய் அமர்ந்திருந்தவளின் எதிரில் வந்து அமர்ந்தாள் அவளின் அலுவலகத் தோழி காவியா.
"என்னாச்சு லட்சுமி? உனக்குக் கல்யாணம் ஆனதுலருந்து நீ நீயா இல்ல. ஏதாவது சொதப்பிட்டே இருக்க! எதையுமே கூலா ஹேண்டில் செய்ற லட்சுமி எங்கே போய்ட்டா! வீட்டுல எதுவும் பிரச்சனையா?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் தன்னைக் குறித்துச் சிந்தித்தவளுக்கு, 'நான் இப்படிலாம் நடந்துக்கிற ஆளு இல்லையே' அப்பொழுது தான் தனது இயல்பைத் தொலைத்து விட்டு இருப்பதே புரிந்தது.
ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிலைப்படுத்தியவளாய், "நத்திங் காவியா! ஐம் ஃபைன் நௌ" என்றவள் சொன்னதும்,
"நீ என்கிட்ட சொல்லலைனாலும் பரவாயில்லை லட்சுமி. ஆனா யார்கிட்டயாவது மனசு விட்டு பேசிடு. இல்லனா இப்படி மனசுக்குள்ளயே அமிழ்த்தி வைக்கிறது உன்னை டிப்ரெஸ் ஆக்கி ஒரு நாள் உன்னை மீறி இப்ப நீ பேசின மாதிரி வெடிக்க வச்சிடும். டேக் கேர்" என்று விட்டு வெளியே சென்றாள்.
'நான் யார்கிட்ட பேசனுமோ அவரே என் பேச்சைக் காது கொடுத்து கேட்காம போகும் போது நான் யார்க்கிட்ட போய்ப் பேசுறது' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் சுழலும் நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடியவளின் இரு விழியின் ஓரமாய்க் கசிந்தது கண்ணீர்.
கோவில் சுற்றுலாவாகத் தேனிலவைக் கொண்டாடி விட்டு வந்த பிறகு நடந்தவைகள் அனைத்தும் நினைவுகளாய் உருண்டோடின.
ஒரு வாரம் கோவில் யாத்திரைச் சென்று விட்டு வந்த பிறகு, அடுத்து வந்த வாரத்தில், அவளே திட்டமிட்டு ஊட்டிக்கு தேனிலவுக்கு அவனை அழைத்துச் சென்றிருந்தாள்.
ஊட்டியில் கழித்த நாள்கள் எல்லாம் வாழ்வின் பொக்கிஷத் தருணங்களாய் இப்பொழுது நினைக்கும் போதும் உள்ளம் பூரித்து உடல் சிலிர்த்தது அவளுக்கு.
அவனருகில் இருந்தாலே சந்தோஷித்து மகிழும் உள்ளத்தின் வெளிபாட்டில், அவனுடன் இருந்தால் எப்பிரச்சினையையும் எளிதில் கடந்து விடலாம் என்று திடமாய் நம்பினாள் சுந்தரலட்சுமி.
இது வரை எவரிடமும் தன்னை விட்டுக் கொடுக்காது, தனக்காகப் பரிந்து பேசும் கணவன், இனியும் அப்படித் தான் இருப்பான் என்று நம்பினாள். ஆனால் நிதர்சனத்தில் அவை சாத்தியம் இல்லையே!
தேனிலவை முடித்து விட்டு இரவு சென்னைக்கு வந்தவர்கள் உறங்கி விட்டனர்.
மறுநாள் காலை இருவருமே அவரவரது பணிக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் செந்திலின் அன்னை மீனா, "எதுக்கு இப்படி ஊர் ஊராச் சுத்திக் காசைக் கரியாக்கிட்டு இருக்க நீ? வாயைக் கட்டி வயித்தைக் கட்டி நாம காசு சேர்த்து வச்சதுலாம் மறந்து போச்சா உனக்கு? அப்படித் தானே இந்த வீட்டைக் கட்டினோம். இப்படிச் செலவழிச்சிட்டு இருந்தா நாளைப்பின்ன பொறக்குற பிள்ளைக்குக் கடன் வாங்கிட்டு இருப்பியா? பொண்டாட்டி வந்ததும் தலை கால் புரியாம ஆடிட்டு இருக்கடா" என்று கோபமாய்ச் செந்திலைக் கேட்டதில் சுந்தரலட்சுமிக்குச் சங்கடமாகிப் போக அவனைக் காப்பாறுவதாய் எண்ணி, "இப்ப ஊட்டிக்குப் போனது முழுக்க என் செலவு தான் அத்தை. அவர் செலவு செய்யலை" என்று விட்டாள்.
இவர்கள் இருவரும் தேனிலவு சென்றிருந்த பொழுது அவ்வப்போது மீனா வீட்டிற்கு வந்து காஞ்சனா போட்டிருந்த தூபமெல்லாம் அவரின் மூளைக்குள் சுழன்றிருக்க,
"புருஷன் கூட வாழ ஆரம்பிச்ச பிறகும் என் காசு அவன் காசுனு இப்படிப் பிரிச்சி பேசுறியே! நல்லாவா இருக்கு. நாளைப்பின்ன எப்பவாவது என் பிள்ளைக்கு வியாபாரம் நஷ்டமாகிக் காசு வராம போனா அவனை என்னவெல்லாம் பேசுவியோ! இப்படிப்பட்ட பொண்டாட்டியைக் கட்டனும்னு அவன் தலைல எழுதிருக்கு" என்று தலையில் அடித்துக் கொண்டவராய் புலம்பியவாறு அவர் சோஃபாவில் அமர்ந்து விட,
பல்லைக் கடித்தவாறு, "ம்மாஆஆ வாயை மூடிட்டு இருக்கியா? காலைலயே ஆரம்பிக்காத" என்றான் செந்தில்.
"ஆமாடா பொண்டாட்டி வந்ததும் அம்மா பேசுறதுலாம் உனக்குப் பாவக்காயா தான் இருக்கும்" என்று அவர் மூக்கு சிந்தவும்,
'அய்யய்யோ அந்தக் காஞ்சனா அம்மாவை விட டேஞ்சரெஸ் ஆளா இருக்காங்களே என் மாமியாரு! இவங்ககிட்ட எப்படிக் குப்பைக் கொட்ட போறேனு தெரியலையே' என்று மனத்திற்குள் அலறியவளாய் தனது அறைக்குள் சென்றிருந்தாள் சுந்தரலட்சுமி.
'மாமியார் எப்படிப் பேசினாலும் உன் கணவன் உனக்குத் தானே சப்போர்ட் செய்றான். அது போதுமே' என்று மனசாட்சி எடுத்துக் கொடுக்கவும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அறையிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முன்பு வந்து நின்ற செந்தில், "நாம ஊட்டி போறதுக்கு நீ செஞ்ச செலவுக்குலாம் நான் காசு கொடுத்துடுறேன்" என்றான்.
அவன் முகத்தில் கோபத்தின் சாயல்!
கண்களை அகல விரித்துத் திகைப்புடன் அவனைப் பார்த்தவளாய், "ஏன் உங்களுக்காக நான் செலவு செய்யக் கூடாதா?" எனக் கேட்டாள்.
"இப்ப கூட என் காசு உங்க காசுனு ஏன் பிரிச்சிப் பார்க்கிறீங்கனு கேட்கத் தோணலைல உனக்கு!" என்றான் அவன்.
"நான் பிரிச்சி பார்க்கலையே" என்றவளை முறைத்தவனாய்,
"உங்களுக்கு நான் செலவு செய்யக் கூடாதானா என்ன அர்த்தம்? நீ சம்பாதிக்கிறதை உன் காசா பார்க்கிற அதை நம்ம காசா பார்க்கலைனு அர்த்தமாகுது தானே" என்றான்.
"நீங்க சம்பாதிக்கிறதை நீங்க தானே கைல வச்சி செலவு செய்றீங்க! அதை உங்க காசுனு தானே நீங்க சொல்லிக்கிறீங்க! அதே மாதிரி நான் சொல்றதுல என்ன தப்பு? ஆனா அதுக்காக என் காசுனுலாம் நான் அதை நினைக்கலை செந்தில். நான் சம்பாதிக்கிறது எனக்காக மட்டும் இல்லயே நம்ம குடும்பத்துக்கும் சேர்த்து தானே" என்றாள்.
"நான் உன் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலை சுந்தரி. அதுக்காக உன் சம்பளத்தை நீ அனாவசியமாகச் செலவு செய்யும் போது அதைக் கேட்டுக் கண்டிக்கிற பொறுப்பு எனக்கும் என் அம்மாவுக்கும் இருக்கு. அம்மாவை எதிர்த்துப் பேசாத சுந்தரி! அது எனக்குப் பிடிக்காது" என்றவனாய் சென்று விட,
'ஹனிமூன் செலவு அனாவசிய செலவா? சரி தான்! அவரோட அம்மா சொன்னதும் இவரும் யோசிக்காம வந்து பொங்கிட்டுப் போறாரே! இவர் எப்டி எப்பவும் எனக்குச் சப்போர்ட்டா இருப்பாரு' தனக்குத் தானே புலம்பியவளாய் அலுவலகத்திற்குக் கிளம்பியவள் தனக்கான உணவைக் கட்டச் சமையலறைக்குள் சென்றாள்.
காலை உணவாக மீனா சமைத்திருந்த பொங்கல் தான் அங்கே இருந்தது. மதியத்திற்கு என்று எதுவும் சமைக்கப்படாமல் இருக்க, "அத்தை லன்ச் எதுவும் செய்யலையா?" என முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தவரை நோக்கிக் கேட்டாள்.
"நான் என்ன உனக்கு வேலைக்காரியா?" வெடுக்கெனக் கேட்டிருந்தார் மீனா.
அவரின் பேச்சில் அதிர்ந்தவளாய், "அய்யோ அத்தை! நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை?" என்றவள் விளக்கம் கொடுக்க முற்பட,
"என்னை உட்கார வச்சி சமைச்சிப் போடுற மருமகளா வருவானு நினைச்சேன்" என்றவர், "உனக்கு லன்ச்க்கு சாப்பாடு வேணும்னா நீதான் சீக்கிரம் எழுந்திரிச்சி உனக்குச் சமைச்சிக்கனும். நான் எப்பவும் காலை டிபன் தான் செய்வேன். மதியம் செந்திலு வீட்டுல வந்து சாப்பிட்டுப்பான். இப்ப புதுசா நீ வந்து காலைலயே எனக்குச் சோறு ஆக்கி கொடுங்கனு கேட்டீனா அதெல்லாம் என்னால முடியாது. உனக்கு வேணும்னா நீயே செஞ்சிக்கோ" என்று விட்டார்.
ஒரு மாதிரி அவமான உணர்வில் கலங்கிய கண்களைச் சரி செய்தவளாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், "சரிங்க அத்தை" என்று அன்று காலை உணவை உண்ணாமலே சென்று விட்டாள்.
அன்று அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, தாயிற்கு அழைத்துக் காலை நடந்ததைக் கவலையுடன் உரைக்க, "நீ தானடி உன் மாமியாருக்குச் சமைச்சி போடனும். அவங்களைப் போய்ச் சமைச்சி வச்சிட்டீங்களானு கேட்டீனா அவங்க அப்படித் தான் கேட்பாங்க" என்று மகளையே குறைக் கூறினார்.
"கல்யாணத்துக்கு முன்னாடி நான் செந்தில்கிட்ட பேசும் போது சமையல்லாம் அம்மா பார்த்துப்பாங்க. நீ கூட மாட உதவினா போதும்னு சொன்னாருமா. அதனால் தான் அவங்க செஞ்சி வச்சிருப்பாங்கனு கேட்டேன்" என்றாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி தனக்கு வர்ற பொண்டாட்டியை இம்ப்ரஸ் செய்றேன்னு வாய்க்கு வந்ததை எல்லாம் இந்த ஆம்பிளைங்க பேசி வைப்பாங்கடி. அதை எல்லாம் நம்பிட்டு அப்படியே தான் உன் புருஷன் இருப்பாருனு நினைச்சிட்டு இருக்காத லட்சுமி. இனிமேல் தான் அவருடைய உண்மையான குணம் உனக்குத் தெரிய வரும். கல்யாணம்ங்கிறதே புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தான். அவரைப் புரிஞ்சிக்கிட்டு விட்டுக் கொடுத்து வாழ முயற்சி பண்ணு லட்சுமி" என்றார்.
தாய் தனக்கே அறிவுரைக் கூறியதில் கடுப்பானவளாய், "உன்கிட்ட போய்ச் சொன்னேன் பார்த்தியா?" என்று திட்ட,
"நீயே யோசிச்சு பாரு லட்சுமி. பல வருஷமா சமைக்கிறவங்களுக்கு யாராவது சமைச்சிக் கொடுத்தா நல்லா இருக்குமேனு தோணும் தானே" என்று மகளுக்கு எடுத்துக் கூறி சமாதானப்படுத்தியவராய், "ஆமா நீ காலைல சாப்பிட்டியா?" என்றவர் கேட்டதும்,
பொலபொலவெனக் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி விட்டது.
அன்றைய நிகழ்வை சிந்தித்திருந்தவளின் கண்களில் இப்பொழுதும் தன்னை மீறி கண்ணீர் பொங்க, நிமிர்ந்து அமர்ந்தவளாய் கைப்பேசியில் அன்னை செல்வராணிக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றதும், "என்னடி சாப்பிட்டியா?" என்று தான் கேட்டார்.
அன்று மகளின் கலங்கிய குரலில் இவரின் வயிறும் கலங்கிவிட, அன்றிலிருந்து தினமும் மகளுக்கு ஒரு நேரமாவது அழைப்புவிடுத்து சாப்பிட்டு விட்டாளா என்று கேட்டு விடுவார்.
"ஹ்ம்ம் சாப்பிட்டேன்மா" என்றவள், "நான் நம்ம வீட்டுக்கு வரவா மா?" எனக் கேட்டாள்.
"வரனும்னு தோணுச்சுனா வர வேண்டியது தானே! இதுக்கு ஏன் கேள்வி கேட்டுட்டு இருக்க?" எனக் கேட்டார்.
"புருஷனோட தான் நம்ம வீட்டுக்கு வரனும்னு நீ தானே ரூல்ஸ் போட்ட" என்றவள் சொன்னதும்,
"அப்ப உன் புருஷன் இல்லாம வரப் போறியா? எதுவும் பிரச்சினையா லட்சுமி?" கவலையும் பதட்டமுமாய்க் கேட்டிருந்தார்.
"அதெல்லாம் இல்லமா. நம்ம வீட்டுக்கு வரனும்னு தோணுச்சு. அதான்" என்றவள் சொன்னதும் நிம்மதி மூச்சு விட்டவராய், "சரி நைட்டுக்கு உனக்கு என்ன சமைச்சி வைக்கட்டும்" என்றவர் கேட்டதும்,
இவளின் இதழ்கள் புன்னகைக்க, "அம்மானா அம்மா தான்! இப்ப மட்டும் நீ என் முன்னாடி நின்னுட்டு இருந்தீனா, அப்படியே உன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்திருப்பேன்" என்றவளாய் தனக்கு வேண்டிய உணவைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளின் உள்ளம் சற்றுச் சமன்பட்டிருந்தது.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து அப்படியே பிறந்த வீட்டிற்குச் சென்ற சுந்தரலட்சுமி, அங்கு முகப்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து தலையைப் பின்னே சாய்த்துக் கண் மூடியவளாய், "ஹப்பாடா! எவ்ளோ ரிலாக்ஸ்ஸிங்கா இருக்கு தெரியுமா மா! இப்ப தான்மா எனக்கு உரிமையான என்னோட வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு. அங்கே போனாலே ஏதோ கெஸ்ட் ஹவுஸ்ல நான் பேயிங் கெஸ்ட்டா தங்குற உணர்வு தான் வரும்" என்றவாறு கண்களைத் திறந்து தாயைப் பார்க்க, 'என்ன பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்காளோ தெரியலையே' என்று கலவரத்துடன் மகளைப் பார்த்திருந்தார் செல்வராணி.
"வாட் த ஹெல்! இது தான் நீங்க வேலை செய்ற லட்சணமா?" அந்த மகிழுந்து நிறுவனத்தின் வரவேற்பறையில் நின்று வரவேற்பாளினியிடம் கோபமாய்க் கத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி.
பணியாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அந்நேரத்தில் அங்கிருந்த அனைவரும் சட்டெனச் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தனர்.
அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பவும் தான், தான் பொதுவெளியில் கத்தியிருப்பதையே உணர்ந்த சுந்தரலட்சுமியின் முகம் சுருங்கிப் போனது.
அந்நேரம் சுந்தரலட்சுமியின் மேலதிகாரி அங்கு வந்தவராய், "கைஸ் சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். ப்ளீஸ் கேரி ஆன்" என்று புன்னகையுடன் அங்கிருந்தவர்களிடம் உரைத்தவாறு சுந்தரலட்சுமியை நோக்கி வந்தவர்,
"என்னாச்சு லட்சுமி?" எனக் கேட்டார்.
"நாளைக்குக் கஸ்டமர் டெலிவரி இருக்கு சார்! இன்னும் ரிஜிஸ்டிரேஷனுக்கு எடுத்துட்டுப் போகாம வச்சிருக்காங்க. அந்த டிபார்ட்மெண்ட் பெர்சன்கிட்ட சொல்ல மறந்துட்டாங்களாம்" என்று சின்னக் குரலில் அவள் உரைக்கவும்,
கேள்வியாய் புருவத்தை உயர்த்தியவாறு அவளை நோக்கியவராய், "இதை விடப் பெரிய விஷயத்தை எல்லாம் கூலா ஹேண்டில் செஞ்சிருக்கீங்களே லட்சுமி. இந்தச் சின்ன விஷயத்துக்காகவா இவ்வளோ சத்தம் போட்டீங்க" என்று ஆச்சரியப் பாவனையில் வினவினார்.
அவர் அவ்வாறு கேட்டது அவளைக் குற்றயுணர்வுக்குள்ளாக, "சாரி சார்" தலையைத் தாழ்த்தியவளாய் உரைத்தாள்.
"இட்ஸ் ஓகே!" என்றவர் இதனைச் சரி செய்யும் வழியை வரவேற்பாளினியிடம் உரைத்து விட்டு அங்கிருந்து அகன்ற நொடி, தனது அறைக்குச் சென்று தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டாள் சுந்தரலட்சுமி.
தனது எட்டு வருடப் பணி வாழ்வில் இப்படி அவள் பொதுவெளியில் கத்தியதே இல்லை. இன்று தன்னை மீறி தான் செய்த செயலின் விளைவை எண்ணிக் குறுகியவளாய் அமர்ந்திருந்தவளின் எதிரில் வந்து அமர்ந்தாள் அவளின் அலுவலகத் தோழி காவியா.
"என்னாச்சு லட்சுமி? உனக்குக் கல்யாணம் ஆனதுலருந்து நீ நீயா இல்ல. ஏதாவது சொதப்பிட்டே இருக்க! எதையுமே கூலா ஹேண்டில் செய்ற லட்சுமி எங்கே போய்ட்டா! வீட்டுல எதுவும் பிரச்சனையா?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் தன்னைக் குறித்துச் சிந்தித்தவளுக்கு, 'நான் இப்படிலாம் நடந்துக்கிற ஆளு இல்லையே' அப்பொழுது தான் தனது இயல்பைத் தொலைத்து விட்டு இருப்பதே புரிந்தது.
ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிலைப்படுத்தியவளாய், "நத்திங் காவியா! ஐம் ஃபைன் நௌ" என்றவள் சொன்னதும்,
"நீ என்கிட்ட சொல்லலைனாலும் பரவாயில்லை லட்சுமி. ஆனா யார்கிட்டயாவது மனசு விட்டு பேசிடு. இல்லனா இப்படி மனசுக்குள்ளயே அமிழ்த்தி வைக்கிறது உன்னை டிப்ரெஸ் ஆக்கி ஒரு நாள் உன்னை மீறி இப்ப நீ பேசின மாதிரி வெடிக்க வச்சிடும். டேக் கேர்" என்று விட்டு வெளியே சென்றாள்.
'நான் யார்கிட்ட பேசனுமோ அவரே என் பேச்சைக் காது கொடுத்து கேட்காம போகும் போது நான் யார்க்கிட்ட போய்ப் பேசுறது' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் சுழலும் நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடியவளின் இரு விழியின் ஓரமாய்க் கசிந்தது கண்ணீர்.
கோவில் சுற்றுலாவாகத் தேனிலவைக் கொண்டாடி விட்டு வந்த பிறகு நடந்தவைகள் அனைத்தும் நினைவுகளாய் உருண்டோடின.
ஒரு வாரம் கோவில் யாத்திரைச் சென்று விட்டு வந்த பிறகு, அடுத்து வந்த வாரத்தில், அவளே திட்டமிட்டு ஊட்டிக்கு தேனிலவுக்கு அவனை அழைத்துச் சென்றிருந்தாள்.
ஊட்டியில் கழித்த நாள்கள் எல்லாம் வாழ்வின் பொக்கிஷத் தருணங்களாய் இப்பொழுது நினைக்கும் போதும் உள்ளம் பூரித்து உடல் சிலிர்த்தது அவளுக்கு.
அவனருகில் இருந்தாலே சந்தோஷித்து மகிழும் உள்ளத்தின் வெளிபாட்டில், அவனுடன் இருந்தால் எப்பிரச்சினையையும் எளிதில் கடந்து விடலாம் என்று திடமாய் நம்பினாள் சுந்தரலட்சுமி.
இது வரை எவரிடமும் தன்னை விட்டுக் கொடுக்காது, தனக்காகப் பரிந்து பேசும் கணவன், இனியும் அப்படித் தான் இருப்பான் என்று நம்பினாள். ஆனால் நிதர்சனத்தில் அவை சாத்தியம் இல்லையே!
தேனிலவை முடித்து விட்டு இரவு சென்னைக்கு வந்தவர்கள் உறங்கி விட்டனர்.
மறுநாள் காலை இருவருமே அவரவரது பணிக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் செந்திலின் அன்னை மீனா, "எதுக்கு இப்படி ஊர் ஊராச் சுத்திக் காசைக் கரியாக்கிட்டு இருக்க நீ? வாயைக் கட்டி வயித்தைக் கட்டி நாம காசு சேர்த்து வச்சதுலாம் மறந்து போச்சா உனக்கு? அப்படித் தானே இந்த வீட்டைக் கட்டினோம். இப்படிச் செலவழிச்சிட்டு இருந்தா நாளைப்பின்ன பொறக்குற பிள்ளைக்குக் கடன் வாங்கிட்டு இருப்பியா? பொண்டாட்டி வந்ததும் தலை கால் புரியாம ஆடிட்டு இருக்கடா" என்று கோபமாய்ச் செந்திலைக் கேட்டதில் சுந்தரலட்சுமிக்குச் சங்கடமாகிப் போக அவனைக் காப்பாறுவதாய் எண்ணி, "இப்ப ஊட்டிக்குப் போனது முழுக்க என் செலவு தான் அத்தை. அவர் செலவு செய்யலை" என்று விட்டாள்.
இவர்கள் இருவரும் தேனிலவு சென்றிருந்த பொழுது அவ்வப்போது மீனா வீட்டிற்கு வந்து காஞ்சனா போட்டிருந்த தூபமெல்லாம் அவரின் மூளைக்குள் சுழன்றிருக்க,
"புருஷன் கூட வாழ ஆரம்பிச்ச பிறகும் என் காசு அவன் காசுனு இப்படிப் பிரிச்சி பேசுறியே! நல்லாவா இருக்கு. நாளைப்பின்ன எப்பவாவது என் பிள்ளைக்கு வியாபாரம் நஷ்டமாகிக் காசு வராம போனா அவனை என்னவெல்லாம் பேசுவியோ! இப்படிப்பட்ட பொண்டாட்டியைக் கட்டனும்னு அவன் தலைல எழுதிருக்கு" என்று தலையில் அடித்துக் கொண்டவராய் புலம்பியவாறு அவர் சோஃபாவில் அமர்ந்து விட,
பல்லைக் கடித்தவாறு, "ம்மாஆஆ வாயை மூடிட்டு இருக்கியா? காலைலயே ஆரம்பிக்காத" என்றான் செந்தில்.
"ஆமாடா பொண்டாட்டி வந்ததும் அம்மா பேசுறதுலாம் உனக்குப் பாவக்காயா தான் இருக்கும்" என்று அவர் மூக்கு சிந்தவும்,
'அய்யய்யோ அந்தக் காஞ்சனா அம்மாவை விட டேஞ்சரெஸ் ஆளா இருக்காங்களே என் மாமியாரு! இவங்ககிட்ட எப்படிக் குப்பைக் கொட்ட போறேனு தெரியலையே' என்று மனத்திற்குள் அலறியவளாய் தனது அறைக்குள் சென்றிருந்தாள் சுந்தரலட்சுமி.
'மாமியார் எப்படிப் பேசினாலும் உன் கணவன் உனக்குத் தானே சப்போர்ட் செய்றான். அது போதுமே' என்று மனசாட்சி எடுத்துக் கொடுக்கவும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அறையிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முன்பு வந்து நின்ற செந்தில், "நாம ஊட்டி போறதுக்கு நீ செஞ்ச செலவுக்குலாம் நான் காசு கொடுத்துடுறேன்" என்றான்.
அவன் முகத்தில் கோபத்தின் சாயல்!
கண்களை அகல விரித்துத் திகைப்புடன் அவனைப் பார்த்தவளாய், "ஏன் உங்களுக்காக நான் செலவு செய்யக் கூடாதா?" எனக் கேட்டாள்.
"இப்ப கூட என் காசு உங்க காசுனு ஏன் பிரிச்சிப் பார்க்கிறீங்கனு கேட்கத் தோணலைல உனக்கு!" என்றான் அவன்.
"நான் பிரிச்சி பார்க்கலையே" என்றவளை முறைத்தவனாய்,
"உங்களுக்கு நான் செலவு செய்யக் கூடாதானா என்ன அர்த்தம்? நீ சம்பாதிக்கிறதை உன் காசா பார்க்கிற அதை நம்ம காசா பார்க்கலைனு அர்த்தமாகுது தானே" என்றான்.
"நீங்க சம்பாதிக்கிறதை நீங்க தானே கைல வச்சி செலவு செய்றீங்க! அதை உங்க காசுனு தானே நீங்க சொல்லிக்கிறீங்க! அதே மாதிரி நான் சொல்றதுல என்ன தப்பு? ஆனா அதுக்காக என் காசுனுலாம் நான் அதை நினைக்கலை செந்தில். நான் சம்பாதிக்கிறது எனக்காக மட்டும் இல்லயே நம்ம குடும்பத்துக்கும் சேர்த்து தானே" என்றாள்.
"நான் உன் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலை சுந்தரி. அதுக்காக உன் சம்பளத்தை நீ அனாவசியமாகச் செலவு செய்யும் போது அதைக் கேட்டுக் கண்டிக்கிற பொறுப்பு எனக்கும் என் அம்மாவுக்கும் இருக்கு. அம்மாவை எதிர்த்துப் பேசாத சுந்தரி! அது எனக்குப் பிடிக்காது" என்றவனாய் சென்று விட,
'ஹனிமூன் செலவு அனாவசிய செலவா? சரி தான்! அவரோட அம்மா சொன்னதும் இவரும் யோசிக்காம வந்து பொங்கிட்டுப் போறாரே! இவர் எப்டி எப்பவும் எனக்குச் சப்போர்ட்டா இருப்பாரு' தனக்குத் தானே புலம்பியவளாய் அலுவலகத்திற்குக் கிளம்பியவள் தனக்கான உணவைக் கட்டச் சமையலறைக்குள் சென்றாள்.
காலை உணவாக மீனா சமைத்திருந்த பொங்கல் தான் அங்கே இருந்தது. மதியத்திற்கு என்று எதுவும் சமைக்கப்படாமல் இருக்க, "அத்தை லன்ச் எதுவும் செய்யலையா?" என முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தவரை நோக்கிக் கேட்டாள்.
"நான் என்ன உனக்கு வேலைக்காரியா?" வெடுக்கெனக் கேட்டிருந்தார் மீனா.
அவரின் பேச்சில் அதிர்ந்தவளாய், "அய்யோ அத்தை! நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை?" என்றவள் விளக்கம் கொடுக்க முற்பட,
"என்னை உட்கார வச்சி சமைச்சிப் போடுற மருமகளா வருவானு நினைச்சேன்" என்றவர், "உனக்கு லன்ச்க்கு சாப்பாடு வேணும்னா நீதான் சீக்கிரம் எழுந்திரிச்சி உனக்குச் சமைச்சிக்கனும். நான் எப்பவும் காலை டிபன் தான் செய்வேன். மதியம் செந்திலு வீட்டுல வந்து சாப்பிட்டுப்பான். இப்ப புதுசா நீ வந்து காலைலயே எனக்குச் சோறு ஆக்கி கொடுங்கனு கேட்டீனா அதெல்லாம் என்னால முடியாது. உனக்கு வேணும்னா நீயே செஞ்சிக்கோ" என்று விட்டார்.
ஒரு மாதிரி அவமான உணர்வில் கலங்கிய கண்களைச் சரி செய்தவளாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், "சரிங்க அத்தை" என்று அன்று காலை உணவை உண்ணாமலே சென்று விட்டாள்.
அன்று அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, தாயிற்கு அழைத்துக் காலை நடந்ததைக் கவலையுடன் உரைக்க, "நீ தானடி உன் மாமியாருக்குச் சமைச்சி போடனும். அவங்களைப் போய்ச் சமைச்சி வச்சிட்டீங்களானு கேட்டீனா அவங்க அப்படித் தான் கேட்பாங்க" என்று மகளையே குறைக் கூறினார்.
"கல்யாணத்துக்கு முன்னாடி நான் செந்தில்கிட்ட பேசும் போது சமையல்லாம் அம்மா பார்த்துப்பாங்க. நீ கூட மாட உதவினா போதும்னு சொன்னாருமா. அதனால் தான் அவங்க செஞ்சி வச்சிருப்பாங்கனு கேட்டேன்" என்றாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி தனக்கு வர்ற பொண்டாட்டியை இம்ப்ரஸ் செய்றேன்னு வாய்க்கு வந்ததை எல்லாம் இந்த ஆம்பிளைங்க பேசி வைப்பாங்கடி. அதை எல்லாம் நம்பிட்டு அப்படியே தான் உன் புருஷன் இருப்பாருனு நினைச்சிட்டு இருக்காத லட்சுமி. இனிமேல் தான் அவருடைய உண்மையான குணம் உனக்குத் தெரிய வரும். கல்யாணம்ங்கிறதே புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தான். அவரைப் புரிஞ்சிக்கிட்டு விட்டுக் கொடுத்து வாழ முயற்சி பண்ணு லட்சுமி" என்றார்.
தாய் தனக்கே அறிவுரைக் கூறியதில் கடுப்பானவளாய், "உன்கிட்ட போய்ச் சொன்னேன் பார்த்தியா?" என்று திட்ட,
"நீயே யோசிச்சு பாரு லட்சுமி. பல வருஷமா சமைக்கிறவங்களுக்கு யாராவது சமைச்சிக் கொடுத்தா நல்லா இருக்குமேனு தோணும் தானே" என்று மகளுக்கு எடுத்துக் கூறி சமாதானப்படுத்தியவராய், "ஆமா நீ காலைல சாப்பிட்டியா?" என்றவர் கேட்டதும்,
பொலபொலவெனக் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி விட்டது.
அன்றைய நிகழ்வை சிந்தித்திருந்தவளின் கண்களில் இப்பொழுதும் தன்னை மீறி கண்ணீர் பொங்க, நிமிர்ந்து அமர்ந்தவளாய் கைப்பேசியில் அன்னை செல்வராணிக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றதும், "என்னடி சாப்பிட்டியா?" என்று தான் கேட்டார்.
அன்று மகளின் கலங்கிய குரலில் இவரின் வயிறும் கலங்கிவிட, அன்றிலிருந்து தினமும் மகளுக்கு ஒரு நேரமாவது அழைப்புவிடுத்து சாப்பிட்டு விட்டாளா என்று கேட்டு விடுவார்.
"ஹ்ம்ம் சாப்பிட்டேன்மா" என்றவள், "நான் நம்ம வீட்டுக்கு வரவா மா?" எனக் கேட்டாள்.
"வரனும்னு தோணுச்சுனா வர வேண்டியது தானே! இதுக்கு ஏன் கேள்வி கேட்டுட்டு இருக்க?" எனக் கேட்டார்.
"புருஷனோட தான் நம்ம வீட்டுக்கு வரனும்னு நீ தானே ரூல்ஸ் போட்ட" என்றவள் சொன்னதும்,
"அப்ப உன் புருஷன் இல்லாம வரப் போறியா? எதுவும் பிரச்சினையா லட்சுமி?" கவலையும் பதட்டமுமாய்க் கேட்டிருந்தார்.
"அதெல்லாம் இல்லமா. நம்ம வீட்டுக்கு வரனும்னு தோணுச்சு. அதான்" என்றவள் சொன்னதும் நிம்மதி மூச்சு விட்டவராய், "சரி நைட்டுக்கு உனக்கு என்ன சமைச்சி வைக்கட்டும்" என்றவர் கேட்டதும்,
இவளின் இதழ்கள் புன்னகைக்க, "அம்மானா அம்மா தான்! இப்ப மட்டும் நீ என் முன்னாடி நின்னுட்டு இருந்தீனா, அப்படியே உன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்திருப்பேன்" என்றவளாய் தனக்கு வேண்டிய உணவைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளின் உள்ளம் சற்றுச் சமன்பட்டிருந்தது.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து அப்படியே பிறந்த வீட்டிற்குச் சென்ற சுந்தரலட்சுமி, அங்கு முகப்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து தலையைப் பின்னே சாய்த்துக் கண் மூடியவளாய், "ஹப்பாடா! எவ்ளோ ரிலாக்ஸ்ஸிங்கா இருக்கு தெரியுமா மா! இப்ப தான்மா எனக்கு உரிமையான என்னோட வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு. அங்கே போனாலே ஏதோ கெஸ்ட் ஹவுஸ்ல நான் பேயிங் கெஸ்ட்டா தங்குற உணர்வு தான் வரும்" என்றவாறு கண்களைத் திறந்து தாயைப் பார்க்க, 'என்ன பிரச்சினை பண்ணிட்டு வந்திருக்காளோ தெரியலையே' என்று கலவரத்துடன் மகளைப் பார்த்திருந்தார் செல்வராணி.
Last edited:
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உனதன்பின் கதகதப்பில் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.