கோதை தினமும் விழித்திருக்கும் நேரமெல்லாம் புலம்பினாள்.அவளால் தான் பெற்று வளர்த்த சாதுப் பிள்ளை இதுபோலவெல்லாம் மாறக்கூடும் என்று நம்ப முடியவில்லை. அதோடு இத்தனை வருஷங்களாக நாக்கில் தேனை தடவிக்கொண்டு மன்னி..மன்னி என்று அழைத்துக்கொண்டு,பெண்ணுக்கு ஒரு வாரம் பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் கூட இங்கே ரங்கவிலாசத்திற்கு வந்து தங்கிவிட்டு செல்லும் நாத்தனார், மாமி என்று பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்த மாலதி ,இருவரது நிறமும் இப்போது வெகுவாக மாறிப்போனதே!
இவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து தானே சொந்தத்தில் பெண் எடுத்தால் உறவு நன்றாக செல்லும் என்று சுந்தரத்திற்கு பார்த்ததே.அசலில் பார்த்திருந்தால் கூட என்னோடு நன்றாக பழகும் பெண் வாய்த்திருக்குமே! என்று மனைவி புலம்புவதை ஒரு கையாலாகாத தனத்தோடு கேட்டுக்கொண்டார் திருவேங்கடம்.இந்த திருமணத்தை முன்னெடுத்த பெருமை அவரை சேரும்.
சொந்தத்தில் வேண்டாம் என்ற மனைவியையும் மகனையும் ,உறவு விட்டுப்போகக் கூடாது என்றெல்லாம் ஏதேதோ காரணங்களை அடுக்கி உணர்வுப் பூர்வமாக அவர்களிடம் பேசி சம்மதிக்க செய்திருந்தார். இப்போது மனைவியின் புலம்பல்களை கேட்க குற்ற உணர்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
வெளியிடத்திலிருந்து நாட்டுப்பெண் வந்திருந்து இதுபோல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் ஒருவேளை ஜீரணம் செய்து கஷாயம் குடித்திருக்க வாய்ப்புண்டு..
பெற்றவர்களின் மனநிலையிலிருந்து யோசிக்கும்பொழுது சரியாகத்தான் இருக்கிறது
மாலதிக்காக பல்கலைக்கழகத்தில் படிக்க பணம் கட்டிவிட்டு அமைதியாக இருந்த சுந்தரிடம் மீண்டும் முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக்கொண்டு வந்து நின்றாள் மாலதி. சுந்தருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
வார்த்தைககளால் அதை சொல்லவும் செய்தான்."மாலு, ஏற்கனவே ரெண்டரை வருஷம் ஈஸியா போயாச்சு. நம்மளுக்குள்ள செக்ஸ் தவிர வேறே ஒண்ணும் பெரிசா சொல்லிக்கிறா மாதிரி இல்ல. இப்போ குழந்தை பெத்துப்போம் . என்னோட அப்பாம்மா, அத்தை அத்திம்பேர்னு குழந்தை வளர்க்க ஹெல்ப் பண்ணுவா. மூணு வருஷம் இடைவெளி விடு. இன்னமும் நாம சொந்த வீட்டுக்காக நா கடன் கட்டிண்டு இருக்கேன். நீ படிக்கணும்னு சொன்னதால நா எதுவும் கேக்கல. இப்போ கேக்கறேன்.வேலையை தேடிண்டு கொஞ்சம் பைனான்சியல் சப்போர்ட் நீ பண்ணனும்.
இத்தனை சுந்தர் பேசி அவள் கேட்டதில்லை. பெரும்பாலும் புன்னகை மன்னன் தான். அவளிடம் கோவப்பட்டு கத்தியது கூட கிடையாது. கணவன் பேசியதை கேட்டவளுக்கு லேசாக தலை வலித்தது. அடுக்களைக்குள் புகுந்தவள் இரண்டு கப்புகளில் கப்பச்சினோ சகிதமாக படுக்கையறைக்குள் நுழைந்தாள். அங்கே சுந்தரம் தனது அலுவலக மடிக்கணினியில் ஆழ்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவன் அதிகநேரம் வேலை செய்வது போல மாலதிக்கு தோன்றியது.சுந்தரம் ஒன்றும் சொல்லாமலே காபி கோப்பையை வாங்கிக்கொண்டான்.
அதற்குப்பிறகு இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. மாலதிக்கு வெகுவாக போர் அடித்தது.மாலை நேரம் வாசலில் போய் அங்கே அவர்கள் வீட்டுவாசலில் இருக்கும் பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டாள். கணவன் காலையில் தன்னிடம் பேசிய விஷயங்களை மீண்டும் தனக்குள் அசை போட்டாள். கணவனிடம் இப்போதெல்லாம் நிறைய மாற்றங்களை கண்டிருந்தாள் மாலதி. நிஜமா..அல்லது பார்க்கும் கண்களின் குற்றமா என்று அவளுக்கு புரியவில்லை.
வெகுமாதங்கள் கழித்து ஏனோ மாமியார் - மாமனார் நினைவுகள் எழவே அவர்களுக்கு அழைத்து பேசினாள். மாமனார் கோவிலுக்கு சென்றிருந்தார்.மாமி தான் பேசினாள். வெறும் சம்பிரதாய விசாரிப்புகள். அதோடு முடிந்தது. மாலதியின் பெற்றவர்கள் வெகுகாலமாக குழந்தை பிறப்பு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மாமி அதைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பது மாலதிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவள் தான் அவர்களுடன் என்னால் ஒட்டவே முடியாது என்றாள் கணவனிடம். இப்போது அவர்கள் சரியாக பேசவில்லை என்று சொன்னால் கணவனிடம் பதில் என்னவாக இருக்கக் கூடும்?
பழகிய பனியும், உடல் நடுங்கும் குளிரும் அவளை வீட்டுக்குள் செல்ல தள்ளியது. வீட்டுக்குள் சென்றவள் கனப்பை போட்டுவிட்டு அறைக்குள் சென்று பார்த்தாள்.இன்னமும் சுந்தரம் மடிக்கணினியில் அதே த்யான நிலையில்தான் இருந்தான். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. இன்னொரு படுக்கையறையில் இருக்கும் தனது மடிக்கணினியை தேடி சென்றாள். வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்திருந்தாள்.
கணவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இதற்கு மேலும் சுந்தரம் பொறுமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதோடு இந்த நாட்டுக்கு வருவதற்கு காரணங்களை எளிதாக சொல்லிவிடலாம். பணம்,அதன் மூலமாக கிடைக்கும் இன்ன பிற வசதிகள் , சுதந்திரமான வாழ்க்கை முறை. யாரும் யாரின் விஷயத்திலும் தலையிட்டு கருத்தெல்லாம் சொல்லி அறுக்க மாட்டார்கள். படித்துவிட்டு ஏதேதோ சொல்லி வேலைக்கு செல்வதை தள்ளிபோடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவளுக்கு இப்போது தோன்றியது.எவ்வளவு காலம்தான் பணத்திற்க்காக கணவனின் முகம் பார்த்து நிற்பது என்றெல்லாம் தனக்குள் தீவிரமாக யோசித்து மாலதி வேலைக்கு செல்ல முடிவெடுத்திருந்தாள்.
வேலைக்கு விண்ணப்பம் செய்து அடுத்த வாரத்திலேயே சில நேர்காணல்கள் வந்தது. அவற்றிற்க்காக தன்னை தயார் செய்துகொண்டாள். வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சம்பளமும் ஆரம்ப புள்ளியில் இருக்கும் அவளுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால் எந்த சுணக்கமும் இல்லாமல் வேலையை ஒத்துக்கொண்டாள். சுந்தரம் எதுவும் சொல்லவில்லை.அவள் வேலை அவள் விருப்பம் என்று அமைதியாகிவிட்டான்
பெண் அவள் வேலைக்கு செல்லத் தொடங்கி ஒரே வருஷத்தில் பணம் கொஞ்சம் சேர்த்து சென்னையில் தனது பெற்றவர்களுக்கு என மூன்று படுக்கை அறைகளுடன் ஒரு பிளாட் வாங்கிக்கொடுத்தாள். வீட்டுச்செலவுக்கென பாதியை ஏற்றுக்கொள்பவளுக்கு தான் சென்னை சென்றால் குடும்பத்துடன் நிம்மதியாக தங்கிக்கொள்ளவென விஸ்தாரமான இடம் நிச்சயம் தேவை பட்டது.ஏற்கனவே அவர்களுக்கு சென்னையில் இரட்டை படுக்கை அறைகளுடன் வீடு உண்டுதான்.ஆனாலும்,இவள் தன் பணத்தில் வாங்கிக் கொடுப்பது வேறு ஆயிற்றே! இவளது தங்கைக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவள் இப்போது பெங்களூருவில் இருப்பிடம். அடிக்கடி சென்னை வந்து செல்ல அவளது கணவரும், கணவனை பெற்றவர்களும் அவளை அனுமதிப்பது இல்லை. அதோடு அவளுக்கு அங்கேயே வேலை. ஆறு மாத குழந்தையும் உண்டு.பிரசவத்திற்கு கூட அவள் சென்னை வரவில்லை.
"எனக்கு அங்கே சென்னை கிளைமேட் ஒத்துக்கல ம்மா..எங்க மாமியாரே பார்த்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க "என்று முடித்துக்கொண்டாள். பெண்ணின் பெற்றவர்களும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. அமெரிக்கா சென்றுவருவது அவர்களுக்கு பிடித்தமாகிவிட்டது.
அதற்குப்பிறகுதான் மூத்தவள் மாலதியை 'சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள் 'என்று அரிக்கத் தொடங்கி இருந்தாள் மாலதியின் அம்மா.இதோ இப்போது வீடு வாங்கி கொடுத்தவுடன் வார்த்தைகள் மாறிவிட்டது. "நல்ல வேலைடி மாலு.ஒனக்கு ஒத்தாப்புல அமைஞ்சுடுத்து.நல்ல சம்பளம் வர வேளைக்கு அப்பம்மாக்காக யோசிச்சியே.நீ நன்னா இருப்படி "என்ற வாழ்த்தை தினமும் மாலதி பெற்றவளிடமிருந்து கேட்கிறாள்.
மாலதி அவள் பெற்றவர்களுக்கு வீடு வாங்கி கொடுத்ததில் சுந்தரம் மனம் வருத்தம் கொண்டது. "ச்சை.. நா இங்கே வந்து இவ்ளோ வருஷம் ஆறது. சீரங்கத்துல அப்பாம்மா இருக்கறது ஒரு சின்ன வீடு.சொந்த வீடுதானாலும் நானும் அவாளுக்கு புதுசா ஒன்னு வாங்கி தந்திருக்கணும். என்னமோ தோணவே இல்லையே ! என்று யோசித்தவன் அப்பாவுக்கு அழைத்து பேசினான். திருவேங்கடம் மறுத்து எதுவும் சொல்லவில்லை.சித்திர வீதியில் புதியதாக கட்ட ஆரம்பித்திருக்கும் அடுக்ககத்தில் மூன்று படுக்கை அறைகளுடன் ஒரு வீடு.அதுவே கோடியை நெருங்கியிருந்தது. என்றைக்கு இருந்தாலும் இதுபோன்ற முதலீடுகள் வேண்டும் என்பது அவர் எண்ணம்.இதோ அதோ என்று கோவில் அருகில் இருக்கும் வீடுகளின் விலை ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்தது போல இப்போது இல்லை. அவர் சிறுவயதாக இருந்த பொழுது இவ்வளவு நெருக்கடி இங்கே கிடையாது. விஸ்தாரமான வீடுகளும் வீதிகளும் உண்டு .இப்போது ஜனங்களுக்கு பக்தி அதிகமாகிவிட்டது போலும். நிறைய இங்கே வீடுகள் வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.
வீடு கட்டி முடித்தவுடன் நாற்பதாயிரம் வாடகைக்கு அந்த வீட்டை விட்டு பணத்தை மகனுக்கும் அவருக்குமான ஜாயிண்ட் அக்கவுண்டில் போட்டு விட்டார்.இத்தனை வருஷங்களாக கவனிக்காத மகன் .அவன் கையால் பணம் வாங்கி வாழ்வது ஏனோ அந்த தம்பதிக்கு பிடிக்கவில்லை. "ஏழை அர்ச்சகராக இருந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும்.நாளைக்கு நாட்டுப்பெண்ணோ,வேறு யாராவதோ ஏதாவது பேசினால் தாங்காது ன்னா என்றாள்" கோதை. மனைவி சொல்வது சரிதான் என்பது திருவேங்கடத்திற்கு.
அதற்க்கு தகுந்தாற்போல் மாலதி " இப்போ எதுக்கு சுந்தர் இவ்ளோ பணத்தை கொட்டி அவாளுக்கு வீடு வாங்கி இருக்கேள். ரெண்டு பேருக்கு அத்தனாம் பெரிய இடம் "என்று ஒரு பிடி பிடித்தாள்.
"நீ கூடத்தான் அத்தைக்கு வீடு வாங்கி கொடுத்தே .நா ஏதாவது உன்கிட்ட கேட்டேனா ? அவர் என்னோட அப்பா மட்டுமில்ல .ஒன்னோட தாய்மாமா.ஞாபகம் வச்சுண்ணடா ரொம்பவே நல்லது "என்றுவிட்டு அவ்விடம் நகர்ந்தான்.
சுந்தரம் மனதுக்குள், "அத்தான் ..பொத்தான் எல்லாம் இப்போ சுந்தரம் ஆயிடுத்து. அவ மனஸும் மாறிபோய்டுத்து" என்று கிண்டலடித்துக்கொண்டான்.
மாலதியின் அம்மாவோ,"போதோட குழந்தைய பெத்து வச்சுக்கோ மாலு. நானும் அப்பாவுமா ஒடம்புல சக்தி இருக்கும்போதே அதை வளர்த்து கொடுத்துடறோம்.இல்லன்னா நம்ம சுந்தரம் இன்னமும் பணத்தை ஊதாரிதனம் செய்வான் "என்று சொல்ல இப்போது மாலதி குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
இதுவரை வாரம் ஒரு இடத்திற்கு கணவனுடன் பயணம் ,அலுவலகம், நண்பர்கள் ,நாட்டிய வகுப்புகள் என்று இருந்து விட்டாள். இனியும் இப்படியே விட்டால் ஒருவேளை சுந்தரம் கையை விட்டு போகக்கூடும் என்று அறிவுரை சொன்னது மனது.
இவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து தானே சொந்தத்தில் பெண் எடுத்தால் உறவு நன்றாக செல்லும் என்று சுந்தரத்திற்கு பார்த்ததே.அசலில் பார்த்திருந்தால் கூட என்னோடு நன்றாக பழகும் பெண் வாய்த்திருக்குமே! என்று மனைவி புலம்புவதை ஒரு கையாலாகாத தனத்தோடு கேட்டுக்கொண்டார் திருவேங்கடம்.இந்த திருமணத்தை முன்னெடுத்த பெருமை அவரை சேரும்.
சொந்தத்தில் வேண்டாம் என்ற மனைவியையும் மகனையும் ,உறவு விட்டுப்போகக் கூடாது என்றெல்லாம் ஏதேதோ காரணங்களை அடுக்கி உணர்வுப் பூர்வமாக அவர்களிடம் பேசி சம்மதிக்க செய்திருந்தார். இப்போது மனைவியின் புலம்பல்களை கேட்க குற்ற உணர்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
வெளியிடத்திலிருந்து நாட்டுப்பெண் வந்திருந்து இதுபோல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் ஒருவேளை ஜீரணம் செய்து கஷாயம் குடித்திருக்க வாய்ப்புண்டு..
பெற்றவர்களின் மனநிலையிலிருந்து யோசிக்கும்பொழுது சரியாகத்தான் இருக்கிறது
மாலதிக்காக பல்கலைக்கழகத்தில் படிக்க பணம் கட்டிவிட்டு அமைதியாக இருந்த சுந்தரிடம் மீண்டும் முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக்கொண்டு வந்து நின்றாள் மாலதி. சுந்தருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
வார்த்தைககளால் அதை சொல்லவும் செய்தான்."மாலு, ஏற்கனவே ரெண்டரை வருஷம் ஈஸியா போயாச்சு. நம்மளுக்குள்ள செக்ஸ் தவிர வேறே ஒண்ணும் பெரிசா சொல்லிக்கிறா மாதிரி இல்ல. இப்போ குழந்தை பெத்துப்போம் . என்னோட அப்பாம்மா, அத்தை அத்திம்பேர்னு குழந்தை வளர்க்க ஹெல்ப் பண்ணுவா. மூணு வருஷம் இடைவெளி விடு. இன்னமும் நாம சொந்த வீட்டுக்காக நா கடன் கட்டிண்டு இருக்கேன். நீ படிக்கணும்னு சொன்னதால நா எதுவும் கேக்கல. இப்போ கேக்கறேன்.வேலையை தேடிண்டு கொஞ்சம் பைனான்சியல் சப்போர்ட் நீ பண்ணனும்.
இத்தனை சுந்தர் பேசி அவள் கேட்டதில்லை. பெரும்பாலும் புன்னகை மன்னன் தான். அவளிடம் கோவப்பட்டு கத்தியது கூட கிடையாது. கணவன் பேசியதை கேட்டவளுக்கு லேசாக தலை வலித்தது. அடுக்களைக்குள் புகுந்தவள் இரண்டு கப்புகளில் கப்பச்சினோ சகிதமாக படுக்கையறைக்குள் நுழைந்தாள். அங்கே சுந்தரம் தனது அலுவலக மடிக்கணினியில் ஆழ்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவன் அதிகநேரம் வேலை செய்வது போல மாலதிக்கு தோன்றியது.சுந்தரம் ஒன்றும் சொல்லாமலே காபி கோப்பையை வாங்கிக்கொண்டான்.
அதற்குப்பிறகு இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. மாலதிக்கு வெகுவாக போர் அடித்தது.மாலை நேரம் வாசலில் போய் அங்கே அவர்கள் வீட்டுவாசலில் இருக்கும் பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டாள். கணவன் காலையில் தன்னிடம் பேசிய விஷயங்களை மீண்டும் தனக்குள் அசை போட்டாள். கணவனிடம் இப்போதெல்லாம் நிறைய மாற்றங்களை கண்டிருந்தாள் மாலதி. நிஜமா..அல்லது பார்க்கும் கண்களின் குற்றமா என்று அவளுக்கு புரியவில்லை.
வெகுமாதங்கள் கழித்து ஏனோ மாமியார் - மாமனார் நினைவுகள் எழவே அவர்களுக்கு அழைத்து பேசினாள். மாமனார் கோவிலுக்கு சென்றிருந்தார்.மாமி தான் பேசினாள். வெறும் சம்பிரதாய விசாரிப்புகள். அதோடு முடிந்தது. மாலதியின் பெற்றவர்கள் வெகுகாலமாக குழந்தை பிறப்பு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மாமி அதைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பது மாலதிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவள் தான் அவர்களுடன் என்னால் ஒட்டவே முடியாது என்றாள் கணவனிடம். இப்போது அவர்கள் சரியாக பேசவில்லை என்று சொன்னால் கணவனிடம் பதில் என்னவாக இருக்கக் கூடும்?
பழகிய பனியும், உடல் நடுங்கும் குளிரும் அவளை வீட்டுக்குள் செல்ல தள்ளியது. வீட்டுக்குள் சென்றவள் கனப்பை போட்டுவிட்டு அறைக்குள் சென்று பார்த்தாள்.இன்னமும் சுந்தரம் மடிக்கணினியில் அதே த்யான நிலையில்தான் இருந்தான். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. இன்னொரு படுக்கையறையில் இருக்கும் தனது மடிக்கணினியை தேடி சென்றாள். வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்திருந்தாள்.
கணவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இதற்கு மேலும் சுந்தரம் பொறுமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதோடு இந்த நாட்டுக்கு வருவதற்கு காரணங்களை எளிதாக சொல்லிவிடலாம். பணம்,அதன் மூலமாக கிடைக்கும் இன்ன பிற வசதிகள் , சுதந்திரமான வாழ்க்கை முறை. யாரும் யாரின் விஷயத்திலும் தலையிட்டு கருத்தெல்லாம் சொல்லி அறுக்க மாட்டார்கள். படித்துவிட்டு ஏதேதோ சொல்லி வேலைக்கு செல்வதை தள்ளிபோடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவளுக்கு இப்போது தோன்றியது.எவ்வளவு காலம்தான் பணத்திற்க்காக கணவனின் முகம் பார்த்து நிற்பது என்றெல்லாம் தனக்குள் தீவிரமாக யோசித்து மாலதி வேலைக்கு செல்ல முடிவெடுத்திருந்தாள்.
வேலைக்கு விண்ணப்பம் செய்து அடுத்த வாரத்திலேயே சில நேர்காணல்கள் வந்தது. அவற்றிற்க்காக தன்னை தயார் செய்துகொண்டாள். வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சம்பளமும் ஆரம்ப புள்ளியில் இருக்கும் அவளுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால் எந்த சுணக்கமும் இல்லாமல் வேலையை ஒத்துக்கொண்டாள். சுந்தரம் எதுவும் சொல்லவில்லை.அவள் வேலை அவள் விருப்பம் என்று அமைதியாகிவிட்டான்
பெண் அவள் வேலைக்கு செல்லத் தொடங்கி ஒரே வருஷத்தில் பணம் கொஞ்சம் சேர்த்து சென்னையில் தனது பெற்றவர்களுக்கு என மூன்று படுக்கை அறைகளுடன் ஒரு பிளாட் வாங்கிக்கொடுத்தாள். வீட்டுச்செலவுக்கென பாதியை ஏற்றுக்கொள்பவளுக்கு தான் சென்னை சென்றால் குடும்பத்துடன் நிம்மதியாக தங்கிக்கொள்ளவென விஸ்தாரமான இடம் நிச்சயம் தேவை பட்டது.ஏற்கனவே அவர்களுக்கு சென்னையில் இரட்டை படுக்கை அறைகளுடன் வீடு உண்டுதான்.ஆனாலும்,இவள் தன் பணத்தில் வாங்கிக் கொடுப்பது வேறு ஆயிற்றே! இவளது தங்கைக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவள் இப்போது பெங்களூருவில் இருப்பிடம். அடிக்கடி சென்னை வந்து செல்ல அவளது கணவரும், கணவனை பெற்றவர்களும் அவளை அனுமதிப்பது இல்லை. அதோடு அவளுக்கு அங்கேயே வேலை. ஆறு மாத குழந்தையும் உண்டு.பிரசவத்திற்கு கூட அவள் சென்னை வரவில்லை.
"எனக்கு அங்கே சென்னை கிளைமேட் ஒத்துக்கல ம்மா..எங்க மாமியாரே பார்த்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க "என்று முடித்துக்கொண்டாள். பெண்ணின் பெற்றவர்களும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. அமெரிக்கா சென்றுவருவது அவர்களுக்கு பிடித்தமாகிவிட்டது.
அதற்குப்பிறகுதான் மூத்தவள் மாலதியை 'சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள் 'என்று அரிக்கத் தொடங்கி இருந்தாள் மாலதியின் அம்மா.இதோ இப்போது வீடு வாங்கி கொடுத்தவுடன் வார்த்தைகள் மாறிவிட்டது. "நல்ல வேலைடி மாலு.ஒனக்கு ஒத்தாப்புல அமைஞ்சுடுத்து.நல்ல சம்பளம் வர வேளைக்கு அப்பம்மாக்காக யோசிச்சியே.நீ நன்னா இருப்படி "என்ற வாழ்த்தை தினமும் மாலதி பெற்றவளிடமிருந்து கேட்கிறாள்.
மாலதி அவள் பெற்றவர்களுக்கு வீடு வாங்கி கொடுத்ததில் சுந்தரம் மனம் வருத்தம் கொண்டது. "ச்சை.. நா இங்கே வந்து இவ்ளோ வருஷம் ஆறது. சீரங்கத்துல அப்பாம்மா இருக்கறது ஒரு சின்ன வீடு.சொந்த வீடுதானாலும் நானும் அவாளுக்கு புதுசா ஒன்னு வாங்கி தந்திருக்கணும். என்னமோ தோணவே இல்லையே ! என்று யோசித்தவன் அப்பாவுக்கு அழைத்து பேசினான். திருவேங்கடம் மறுத்து எதுவும் சொல்லவில்லை.சித்திர வீதியில் புதியதாக கட்ட ஆரம்பித்திருக்கும் அடுக்ககத்தில் மூன்று படுக்கை அறைகளுடன் ஒரு வீடு.அதுவே கோடியை நெருங்கியிருந்தது. என்றைக்கு இருந்தாலும் இதுபோன்ற முதலீடுகள் வேண்டும் என்பது அவர் எண்ணம்.இதோ அதோ என்று கோவில் அருகில் இருக்கும் வீடுகளின் விலை ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்தது போல இப்போது இல்லை. அவர் சிறுவயதாக இருந்த பொழுது இவ்வளவு நெருக்கடி இங்கே கிடையாது. விஸ்தாரமான வீடுகளும் வீதிகளும் உண்டு .இப்போது ஜனங்களுக்கு பக்தி அதிகமாகிவிட்டது போலும். நிறைய இங்கே வீடுகள் வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.
வீடு கட்டி முடித்தவுடன் நாற்பதாயிரம் வாடகைக்கு அந்த வீட்டை விட்டு பணத்தை மகனுக்கும் அவருக்குமான ஜாயிண்ட் அக்கவுண்டில் போட்டு விட்டார்.இத்தனை வருஷங்களாக கவனிக்காத மகன் .அவன் கையால் பணம் வாங்கி வாழ்வது ஏனோ அந்த தம்பதிக்கு பிடிக்கவில்லை. "ஏழை அர்ச்சகராக இருந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும்.நாளைக்கு நாட்டுப்பெண்ணோ,வேறு யாராவதோ ஏதாவது பேசினால் தாங்காது ன்னா என்றாள்" கோதை. மனைவி சொல்வது சரிதான் என்பது திருவேங்கடத்திற்கு.
அதற்க்கு தகுந்தாற்போல் மாலதி " இப்போ எதுக்கு சுந்தர் இவ்ளோ பணத்தை கொட்டி அவாளுக்கு வீடு வாங்கி இருக்கேள். ரெண்டு பேருக்கு அத்தனாம் பெரிய இடம் "என்று ஒரு பிடி பிடித்தாள்.
"நீ கூடத்தான் அத்தைக்கு வீடு வாங்கி கொடுத்தே .நா ஏதாவது உன்கிட்ட கேட்டேனா ? அவர் என்னோட அப்பா மட்டுமில்ல .ஒன்னோட தாய்மாமா.ஞாபகம் வச்சுண்ணடா ரொம்பவே நல்லது "என்றுவிட்டு அவ்விடம் நகர்ந்தான்.
சுந்தரம் மனதுக்குள், "அத்தான் ..பொத்தான் எல்லாம் இப்போ சுந்தரம் ஆயிடுத்து. அவ மனஸும் மாறிபோய்டுத்து" என்று கிண்டலடித்துக்கொண்டான்.
மாலதியின் அம்மாவோ,"போதோட குழந்தைய பெத்து வச்சுக்கோ மாலு. நானும் அப்பாவுமா ஒடம்புல சக்தி இருக்கும்போதே அதை வளர்த்து கொடுத்துடறோம்.இல்லன்னா நம்ம சுந்தரம் இன்னமும் பணத்தை ஊதாரிதனம் செய்வான் "என்று சொல்ல இப்போது மாலதி குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
இதுவரை வாரம் ஒரு இடத்திற்கு கணவனுடன் பயணம் ,அலுவலகம், நண்பர்கள் ,நாட்டிய வகுப்புகள் என்று இருந்து விட்டாள். இனியும் இப்படியே விட்டால் ஒருவேளை சுந்தரம் கையை விட்டு போகக்கூடும் என்று அறிவுரை சொன்னது மனது.
Last edited:
Author: Paithani
Article Title: அரங்கம் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அரங்கம் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.